Inthis songs performance by all three very very naural fine
Inthis songs performance by all three very very naural fine
வாசு,
எனக்கு மிக மிகப் பிடித்த அந்த நெஞ்சிருக்கும் வரை போஸிற்கு கோடானு கோடி நன்றிகள்!
அன்புடன்
மிக்க நன்றி வாசு சார்.
எங்கள் தங்க ராஜா(1973 )
வசந்த மாளிகைக்கு பிறகு தெலுங்கு தயாரிப்பாளர்களின் பிரிய நடிகர் ஆனதுடன் ,இரு மடங்கு ஊதியம், மொத்த தேதிகள் இத்யாதிகளுடன் தயாரிக்க பட்ட தெலுங்கு தழுவல் படம். ராஜேந்திர பிரசாத் இயக்கம் ,தயாரிப்பு. (மற்றவை- உத்தமன், பட்டாகத்தி பைரவன்).நான் பெங்களுருவில் தொலைந்து போக இருந்த த்ரில் அனுபவத்தை எழுதி விட்டேன்.
கதை ஜன ரஞ்சகமாக பொழுபோக்கு நிறைந்த suspense அம்சம் கொண்டது. தனது குடும்பத்தை நிர்மூலமாக்கிய வில்லனை டாக்டர் கதாநாயகன்,அவர் மகளை காதலித்து பழி வாங்கும் கதைதான் என்றாலும், பட்டாகத்தி பைரவன் கதாபாத்திரம் படத்தை உச்சத்தில் நிறுத்தி, அந்த வருடத்திய அதிக பட்ச வசூல் சாதனை நிகழ்த்திய சிவாஜி படம் ஆனது. மஞ்சுளா ஜோடியாக வெளிவந்த முதல் படம்.(அறிமுகம்-மன்னவன் வந்தானடி)
படம் வழக்கமான துவக்கம்,பிறகு டாக்டர் கதாபாத்திரத்தின் நற்பண்புகள்(ஏழைகள் ,உதவி இத்யாதி), கல்லூரி மோதல் ,tease பாட்டு, காதல் , என்று என்னடா கொஞ்சம் தொய்கிறதே என்று பார்த்தால், பட்டாகத்தி பைரவன் அறிமுகம். சூயங் கம் மென்று கொண்டு, தோசைகல் கூலிங் க்ளாச்சுடன்,பைக்கில் அறிமுகம். பாரில் கலாட்டா. வில்லன் உடன் அறிமுகம். அவன் பெண்ணை தட்ட கூடாத இடத்தில் தட்டி கலாட்டா.மாடி வரை ஸ்போர்ட்ஸ் கார் ,சகுந்தலாவுடன் கொட்டம், போலீசுடன் நக்கல், பிறகு கொஞ்சம் சீறியேஸ் ஆக கற்பாம் மானமாம் பாடல் என விரிந்து ,எதிர்பாராத முடிவுடன் முடியும். NT அவருடைய அதிரடி பாணியில் (உத்தம புத்திரன் விக்ரம், நவராத்திரி DSP ) வெளுத்து வாங்கி பின்னியிருப்பார். அட்டகாச சிரிப்பு, restless ஆன திமிர் நடை,அகந்தையாய் ஈர்ப்புடன் வசன உச்சரிப்பு, துரு துருப்பு , rowdiyish handsome தோற்றத்தில்(ஒல்லியாக) ரசிகர்களை பைத்தியம் ஆக்கி இருப்பார். இந்த படத்தில் முத்தங்கள் நூறு பாட்டை பார்த்தவர்கள், ரஜினி ஸ்டைல்,நடை, நடனம் எங்கிருந்து உற்பத்தியானது என உணர்வார்கள்.
பாடல் மாமா மகாதேவன் பின்னியிருப்பார். இரவுக்கும் பகலுக்கும் அழகான ஓட்ட நடை பாடல்.(மற்றது விடிவெள்ளியின் கொடுத்து பார்),கல்யாண ஆசை ,சம்ப்ஹோ,கற்பாம்,முத்தங்கள், கோடியில்(ஆண்டவனே ஒளி விளக்கு பாணி) என நல்ல ஹிட் பாடல்கள்.
படம் நடு நடுவில் தொய்ந்தாலும் , மொத்தத்தில் விறுவிறுப்பாய் போவதே தெரியாமல் போகும்.
எதற்காக இல்லாவிட்டாலும் பட்டாகத்தி பைரவனுக்காக நூறு முறை பார்க்கலாம்.(ஏனென்றால் அவர் ஒரு முறை நடித்து விட்டதை மற்றவர்கள் நூறு முறை நடித்து பெயர் வங்கி விட்டார்கள்)
அன்புள்ள திரு. ராகவேந்தர், திரு. முரளி, திரு. வாசுதேவன், திரு. கார்த்திக், திரு. கோபால் மற்றும் திரு. சசி,
என்னுடைய "நெஞ்சிருக்கும் எங்களுக்கு" படப் பாடல் ஆய்வைப் படித்து பாராட்டி ஊக்குவித்ததற்கு மிக்க நன்றி.
திரு. ராகவேந்தர்:- எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்ததற்கும், உடனே, அந்தப் பாடலை பதிவிட்டதற்கும் மிக்க நன்றி.
திரு. முரளி:- இந்தப் பாடல் கவிஞர் வாலி இயற்றினாரா அல்லது கவியரசுவா என்று முதலில் இருந்தே ஒரு சந்தேகம் இருந்தது. என்சைக்ளோபீடியவான உங்களிடம் வேறொரு சந்தேகத்தை நிவர்த்தி பண்ணுவதற்கு தொடர்பு கொண்ட நான், இந்த சந்தேகத்தை நிவர்த்தி பண்ணாமல் விட்டு விட்டேன். உடனே, அந்தத் தவறை சரி செய்து விட்டேன். சரியான நேரத்தில் தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றிகள். என்ன செய்வது, எனக்கும் பல விவரங்கள் (மற்ற மொழிகள் உட்பட) தெரிந்திருந்தும், சில விவரங்களில் இன்னமும் நெடுந்தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டபடி, "நல்லவன் எனக்கு நானே நல்லவன்" பாடலும் "நெஞ்சிருக்கும் எங்களுக்கு" பாடலும் பெரும்பாலும் உடல் மொழியை சுற்றியே பின்னப் பட்டிருக்கும். இந்த ஒரு விஷயம் தான் நாடக நடிப்புக்கும் சினிமா நடிப்புக்கும் வித்தியாசத்தை - நடிகர்களிடமிருந்து - வர வேண்டியிருக்கும் மிக முக்கியமான வித்தியாசம். இந்த வித்தியாசத்தை முதலில் அதுவும் பரிபூரணமாகக் காட்டிய நடிகர், நடிகர் திலகம் என்பது துவக்கத்திலிருந்தே தெரியும். இருப்பினும், இந்தப் பாடல்களும் அந்தக் கட்டுரையும், நடிகர் திலகத்தின் வித்தியாசமான முயற்சியையே பெரிதும் எடுத்துக் கொள்கிறது.
திரு. வாசு:- பாராட்டியதோடு நிற்காமல், உடனடியாக அந்தப் பாடலின் விடியோவையும் பதிந்ததற்கு மிக்க நன்றி. அதோடு நிற்காமல், "நெஞ்சிருக்கும் வரை" படத்தின், புகழ் பெற்ற நடிகர் திலகத்தின் போஸின் நிழற்படத்தையும் பதிந்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி விட்டீர்கள். மிக்க நன்றி. நடிகர் திலகத்தின் படம் ஒவ்வொன்றையும், அது இன்ன படம் என்று அவருடைய கெட்டப் மற்றும் சில போஸ்களை வைத்தே எளிதாகக் கண்டு பிடித்து விடலாம் - ஒரே சிகை அலங்காரம் மற்றும் கிருதாவாக இருந்தாலும் (செல்வம் முதல் என் தம்பி/லக்ஷ்மி கல்யாணம் வரை) - விக்குடன் இருந்தாலும் - குறிப்பிட்ட போசை வைத்து (உதாரணத்திற்கு செல்வத்தில் க்ளோசப் சைட் போஸ்:- முத்து முத்தாக வியர்வைத் துளிகள்; என் தம்பி:- கத்தியுடன் நிற்கும் போஸ் - இப்படிப் பல படங்கள்). இந்த வரிசையில், நெஞ்சிருக்கும் வரை என்றாலே ஒவ்வொரு ரசிகனுக்கும் நினைவு வருவது நீங்கள் பதிந்த போஸ் தானே! முதலில் பார்த்த போது, அந்தப் போஸுக்கு தியேட்டர் அதிர்ந்தது இன்னும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றது!!
திரு. கார்த்திக்:- இந்தக் கட்டுரை, நடிகர் திலகத்தின் நடிப்பை மட்டுமே ஆராய்வதால், பங்களித்த மற்ற கலைஞர்களின் பங்களிப்பைப் பெரிய அளவில் தொடுவதில்லை. ஒரே ஒரு வாக்கியத்தில் மற்ற கலைஞர்களைப் பற்றிக் குறிப்பிட்ட போது, மெல்லிசை மன்னரின் பங்களிப்பை முதலில் சுட்டிக்காட்டத் தவறி விட்டேன். பின்னர், மறுபடியும், படித்த போது, தவறை உணர்ந்து திருத்தி விட்டேன். மற்றபடி, எனக்கும், ஆதர்ச இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் தான். என்னைப் பொறுத்த வரை, திரை இசைப் பாடல்களுக்கு (குறிப்பாக, தமிழில்) டியூனுக்கு இலக்கணம் வகுத்தவர் அவர் தான் என்பேன். சினிமா பாடல்கள் 1961-க்கு முன்பு வரை, ஒன்று சாஸ்த்ரிய அடிப்படையிலோ இல்லை நாட்டுப் பாடல்களின் (folk) அடிப்படையிலோ தான் இருந்து வந்தன. பாவ மன்னிப்பு படத்திற்குப் பின்னர் தான் சினிமா பாடல்கள் வேறு ஒரு பாட்டையில் பயணிக்க ஆரம்பித்தது. அதாவது, கொஞ்சம் சாஸ்த்ரிய சங்கீதம், கொஞ்சம் மேலை நாட்டு சங்கீதம் சேர்ந்த கலவையாக. எப்படி இன்றைய கர்னாடக சங்கீதக் கச்சேரிகள் பின்பற்றுகின்ற முறையை, மறைந்த அரியக்குடி அவர்கள் முதலில் வகுத்தாரோ, சினிமாவில், இன்றைய சங்கீதத்தின் அடிப்படையை மெல்லிசை மன்னர் அவர்கள் தான் (மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி) முதலில் வகுத்தார். அந்த அடிப்படையில் தான், இன்று வரை, தமிழ் சினிமா பாடல்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதை ஏற்கனவே ஒரு முறை எழுதியிருக்கிறேன்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புள்ள வாசுதேவன் சார்,
எங்கள் தங்க ராஜாவின் சண்டைக்காட்சி பதிவு வெகு அருமை. சற்றே கருமையான முகம், வித்தியாசமான விக், வழக்கத்துக்கு மாறாக பெரிய கூலிங் கிளாஸ், சற்று காடியான வண்ணத்தில் உடை என அசத்தியிருப்பார் தலைவர். இம்மாதிரி சண்டைக்காட்சிகள் அம்சமாக எடுபட்டதற்கு பெரிய மூலதனமாக அமைந்தது அந்த அட்டகாசமான ஸ்லிம் உடல்வாகு. தச்சோளி அம்பு மலையாளப்பட ஷூட்டிங்கில் அடிபட்டு ஓய்வெடுத்ததிலிருந்து அவரது உடல்வாகு மீண்டும் 1960 முதல் 65 வரையான கட்டத்தை நோக்கித்திரும்பி விட்டது.
கோபால் சார் சொன்னதுபோல, படம் துவங்கி சிறிது நேரம் இரண்டு சிறுவர்கள், மேஜர், சௌகார் என்று ஓடத்துவங்கியபோது, 'என்னப்பா இது இருதுருவம் போலல்லவா இருக்கிறது?' என்ற முணுமுணுப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இருந்தாலும் ஸ்டில்களில் பட்டாக்கத்தியாரின் போஸ்களைப் பார்த்திருந்ததால் அவரது தரிசனத்துக்காக மனம் ஏங்கிக்கொண்டிருந்தது. அதனால் மஞ்சுளாவின் 'சாமியிலும் சாமியிது' பாடலெல்லாம் பொறுமையை ரொம்பவே சோதித்தது உண்மை. பாடலை தெலுங்கு மெட்டில் வேறு போட்டிருப்பார் கே.வி.எம். அவர் பண்ணிய இன்னொரு மிஸ்டேக், எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருக்க வேண்டிய 'முத்தங்கள் நூறு' பாடலை சுசீலாவுக்குக் கொடுத்தது.
நீங்கள் தந்திருக்கும் சண்டைக்காட்சி அட்டகாசமாக உள்ளது. வெறும் சண்டையாக இல்லாமல் அதில் ஸ்டைலையும் கலந்து தந்திருப்பதுதான் இதில் சிறப்பு. ஏ.டி.வெங்கடேசன் அமைத்த சிறந்த சண்டைக்காட்சிகளில் இதுவும் ஒன்று எனலாம். (சண்டைக்காட்சி வரிசையில், தங்கள் பதிவின்போது அந்தந்த படங்களின் சண்டைப்பயிற்சியாளரின் பெயரை படத்தின் ஒரிஜினல் டைட்டில் கார்டோடு சேர்த்து பதிவிடும் தங்கள் பாணி மிக மிக போற்றுதலுக்குரியது).
ஒருபக்கம் நடிகர்திலகத்தின் திரை நாயகியர் வரிசை ஆய்வு, இன்னொருபக்கம் சண்டைக்காட்சிகள் பற்றிய ஆய்வு, மறுபக்கம் படங்களின் ஸ்டில்கள், வேறொருபக்கம் பார்த்தசாரதி அவர்களின் பாடல் ஆய்வுகள், ராகவேந்தர் சாரின் ஸ்பெஷல் பதிவுகள் என திரி கனஜோராகச் செல்கிறது. பம்மலார் அவர்கள் விடுமுறை முடிந்து எப்போது திரும்புவார்?. அவர் பதிவுகளைக்காண மனம் ஏங்குகிறது.
'எங்கள் தங்க பைரவன்' சண்டைக்காட்சியைப் பதிவிட்டு திரியில் சுறுசுறுப்பு ஏற்றியமைக்கு மிக்க நன்றி. பாராட்டுக்கள்.
As written by Mr.Partha sarathy,
(Quote)
திரு. கார்த்திக்:- இந்தக் கட்டுரை, நடிகர் திலகத்தின் நடிப்பை மட்டுமே ஆராய்வதால், பங்களித்த மற்ற கலைஞர்களின் பங்களிப்பைப் பெரிய அளவில் தொடுவதில்லை. ஒரே ஒரு வாக்கியத்தில் மற்ற கலைஞர்களைப் பற்றிக் குறிப்பிட்ட போது, மெல்லிசை மன்னரின் பங்களிப்பை முதலில் சுட்டிக்காட்டத் தவறி விட்டேன். பின்னர், மறுபடியும், படித்த போது, தவறை உணர்ந்து திருத்தி விட்டேன். மற்றபடி, எனக்கும், ஆதர்ச இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் தான். என்னைப் பொறுத்த வரை, திரை இசைப் பாடல்களுக்கு (குறிப்பாக, தமிழில்) டியூனுக்கு இலக்கணம் வகுத்தவர் அவர் தான் என்பேன். சினிமா பாடல்கள் 1961-க்கு முன்பு வரை, ஒன்று சாஸ்த்ரிய அடிப்படையிலோ இல்லை நாட்டுப் பாடல்களின் (folk) அடிப்படையிலோ தான் இருந்து வந்தன. பாவ மன்னிப்பு படத்திற்குப் பின்னர் தான் சினிமா பாடல்கள் வேறு ஒரு பாட்டையில் பயணிக்க ஆரம்பித்தது. அதாவது, கொஞ்சம் சாஸ்த்ரிய சங்கீதம், கொஞ்சம் மேலை நாட்டு சங்கீதம் சேர்ந்த கலவையாக. எப்படி இன்றைய கர்னாடக சங்கீதக் கச்சேரிகள் பின்பற்றுகின்ற முறையை, மறைந்த அரியக்குடி அவர்கள் முதலில் வகுத்தாரோ, சினிமாவில், இன்றைய சங்கீதத்தின் அடிப்படையை மெல்லிசை மன்னர் அவர்கள் தான் (மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி) முதலில் வகுத்தார். அந்த அடிப்படையில் தான், இன்று வரை, தமிழ் சினிமா பாடல்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதை ஏற்கனவே ஒரு முறை எழுதியிருக்கிறேன்.
Unquote
சாரதி சார்,
நீங்கள் தகுதிக்கு மீறியே விஸ்வநாதன்-ராமமூர்த்திக்கு கிரெடிட் கொடுக்கிறீர்கள். அவர்கள் trend -setter என்பது தவறான தகவல்.1952 இல் சுப்பராமன் மறைவுக்கு பிறகு ஒன்று சேர்ந்த விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஜோடி உருப்படியாக 52 - 60 இல் தந்த படங்கள் புதையல்,பதிபக்தி, சிவகங்கை சீமை,பாகபிரிவினை, மன்னாதி மன்னன்,மாலையிட்ட மங்கை ஆகியவை மட்டுமே. நீங்கள் சொன்ன trend -setter பட்டத்துக்கு தகுதியானவர்கள் சுப்பராமன்,ஜி.,ராமநாதன், ஏ.எம்.ராஜா,மகாதேவன் ஆகியோரே.இவர்கள்தான் சரியான விகிதத்தில் கர்நாடகம்,ஹிந்துஸ்தானி,வெஸ்டேர்ன்,folk கலந்து தமிழ் பட மெல்லிசையை தூக்கி பிடித்த நால்- வேந்தர்கள்.(trend -setters )
ஆனால், 60 களில்,மெல்லிசை மன்னர்கள் ,வடக்கில் சங்கர்-ஜெய்கிஷன்,நவஷாத்,நய்யார்,பர்மன்,,சலீல் சௌதரி,மதன் மோகன்,லட்சுமி-பியாரி இவர்கள் அத்தனை பேருடைய சாதனையையும் மிஞ்சி, அத்தனை variety கொடுத்தனர். பீம்சிங்,ஸ்ரீதர், சங்கர்,பந்துலு,ராமண்ணா, கோபாலக்ருஷ்ணன்,வேலுமணி ,சிவாஜி படங்களில் இசை ராஜ்ஜியம் தான். இதே காலகட்டத்தில் மாமா மகாதேவன் சாதனையும் அளப்பரியது.
ஆனாலும், 60 இல் இருந்து 65 வரை வருடம் நான்கு படங்கள் சராசரியாக கொடுத்து தங்கள் ஜோடியை ஆதரித்த சிவாஜியிடம், தனியாக வந்த பிறகு ,விஸ்வநாதன் நன்றி பாராட்டினாரா என்பது கேள்வி குறியே.தனியாக வந்த பிறகு விஸ்வநாதன் திறமை அந்த அளவு ஜொலிக்கவும் இல்லை.
ஆஹா! ஆரம்பிச்சிட்டாருய்யா...ஆரம்பிச்சிட்டாருய்யா.. . 'மெல்லிசை மன்னர்' திரி நண்பர்கள் கண்களுக்குப் படாமல் ஏதாவது செய்ங்கப்பா...
அப்டியா?!Quote:
தனியாக வந்த பிறகு விஸ்வநாதன் திறமை அந்த அளவு ஜொலிக்கவும் இல்லை
ஒரு அழகான உரையாடலை தொடங்கியுள்ளீர்கள். தங்களுடன் உடன் படுகிறேன். Grandeaur என்று பார்த்தால் சிவந்த மண்தான் அவர் உச்சம். உயர்ந்த மனிதனை நான் தேர்ந்தெடுத்தது classical touch (பால் போலவே,வெள்ளி கிண்ணம் தான் ) Experimental genre (அந்த நாள்) ஆகியவற்றுக்குத்தான்.
அவர்கள் பிரிந்தபின் balancing of archestra , அதிசய ராகங்கள்(உள்ளத்தில் -சக்ரவாகம் தொடங்கி,சரசாங்கியில் தொடரும்) ,ரெகார்டிங் ஸ்டாண்டர்ட்ஸ் பாதிக்க பட்டது உண்மை. ராம மூர்த்தி அவர்களுக்கு வியாபார திறமை அற்றதாலும்,தங்க சுரங்கம் எதிர் பார்த்த வெற்றியை பெறாததாலும் ஒதுக்க பட்டார்.
விஸ்வநாதன் தனியே வந்த பின் சில நல்ல படங்களை (sivaji) 1975 வரை கொடுத்துள்ளார். நீலவானம்(ஓஹோஹோ ஓடும் ,ஓஹ் லிட்டில் flower ),மோட்டார் சுந்தரம் பிள்ளை(காத்திருந்த), Thangai(Sugam,Iniyadhu),நெஞ்சிருக்கும் வரை(அனைத்தும்),இரு மலர்கள்(மாதவி,மன்னிக்க, அன்னமிட்ட),ஊட்டி வரை உறவு(அனைத்தும்),உயர்ந்த மனிதன் (அனைத்தும்),அன்பளிப்பு(தேரு வந்தது,வள்ளிமலை), சிவந்த மண்(அனைத்தும்),எங்க மாமா(என்னங்க,சொர்க்கம்,எல்லோரும்),ராமன் எத்தனை ராமனடி(சித்திரை மாதம், நிலவு வந்து),சொர்க்கம்(பொன்மகள்,muthaaraththil),எங் கிருந ்தோ வந்தாள்(ஒரே பாடல்,சிரிப்பில்),பாதுகாப்பு(ஆற்றுக்கு),இரு துருவம்(தேரு பார்க்க),தங்கைக்காக(அங்க முத்து),Praptham (Allsongs)சுமதி என் சுந்தரி(அனைத்தும்), பாபு(வரதப்பா), ஞான ஒளி(மண மேடை),பட்டிக்காடா பட்டணமா(என்னடி,கேட்டுக்கோடி),தர்மம் எங்கே(பள்ளியறைக்குள்),தவ புதல்வன்(நானொரு,இசை கேட்டால்),பொன்னூஞ்சல்(ஆகாய, நல்ல காரியம்),கவுரவம்(யமுனா,அதிசய),ராஜபார்ட் ரங்கதுரை(அம்மம்மா,மதன),
சிவகாமியின் செல்வன்(இனியவளே,மேளதாளம்),தாய்(எங்க மாமனுக்கும்),அவன்தான் மனிதன்(ஊஞ்சலுக்கு,அன்பு நடமாடும்,ஆட்டுவித்தால்)மன்னவன் வந்தானடி(காதல் ராஜ்ஜியம்),அன்பே ஆருயிரே(மல்லிகை முல்லை),வைர நெஞ்சம்(நீராட),டாக்டர் சிவா(மலரே,கன்னங்கருத்த),பாட்டும் பரதமும்(மான் தோரண,கற்பனைக்கு), சித்ரா பவுர்ணமி (வந்தாலும்).
ரோஜாவின் ராஜா(ஜனகனின் மகளை)
அன்புள்ள கோபால் சார்,
இது நடிகர்திலகத்தின் புகழ்பாடும் திரி என்பதால் இங்கு இசையமைப்பாளர்களைப்பற்றிய விவாதம் தேவையில்லையென்றாலும் நீங்கள் துவக்கிய விவாததத்துக்கு ஒரு சிறு விளக்க்மேனும் தந்து முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். நீங்கள்தான் அளவுக்கு அதிகமாக கே.வி.மகாதேவன் மாமாவுக்கு கிரெடிட் கொடுக்கிறீர்கள். அவரது சாதனைகளனைத்தும் புராணப்படங்களில்தான். சமூகப்படங்களில் அவரது வெற்றியென்பது காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதைதான். அடிமைப்பெண், மாட்டுக்கார வேலன், வசந்தமாளிகை வெற்றிகள் அப்படித்தான்.
விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஜோடி பிரிந்தபின், யாரால் அந்த ஜோடி முன்பு ஸ்திரம் பெற்றிருந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியானது. பிரிந்தபின் மெல்லிசை மன்னர் வருடத்துக்கு 20 படங்கள் கொடுக்க, ராமமூர்த்தியோ தனியாக மொத்தமே 26 படங்களைத்தான் கொடுத்துள்ளார். பிரிந்தபின் தனியாக நின்ற மெல்லிசை மன்னரைக்கூட மாமாவால் வீழ்த்த முடியவில்லை. அதிலும் கே.வி.எம். அறுபதுகளின் துவக்கத்தில் சின்னப்பா தேவர் படங்களுக்கு இசையமைத்த படங்களில், படத்தின் டைட்டிலை மாற்றிவிட்டால் எந்தப்பாடல் எந்தப்படம் என்று புரியாது அந்த அளவுக்கு வெரைட்டி இல்லாமல் ஒரே மாதிரியாக அடித்துத் தள்ளினார்.
தனியே பிரிந்த பின் மெல்லிசை மன்னர் கொடுத்த ஊட்டிவரை உறவு, இருமலர்கள், அன்பே வா, ரகசிய போலீஸ், குடியிருந்த கோயில், உயர்ந்த மனிதன், செல்வமகள், சிவந்த மண், நம்நாடு, சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், எங்கள் தங்கம், காவியத்தலைவி (எழுபதுகளில் வந்த அனைத்து சிவாஜி, எம்.ஜி.ஆர். படப்பாடல்களும்) அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மனமத லீலை, நினைத்தாலே இனிக்கும் உள்பட ஏராளமான பாடல்களைக்கேட்டபின்னும், "த்னியே வந்தபின் எம்.எஸ்.வி. ஜொலிக்கவில்லை" என்று நீங்கள் சொல்லியிருப்பதை இந்த ஆண்டின் சிறந்த ஜோக்காக எடுத்துக்கொள்கிறேன்.
மேற்கொண்டு விவாதிப்பதென்றால் மெல்லிசை மன்னர் திரிக்குப் போகலாம். இங்கே விவாதித்து நடிகர்திலகத்துக்கு நாம் இடைஞ்சல் தர வேண்டாம்.
விஸ்வநாதன் சார் தனியாக இசையமைத்த மற்ற படங்கள் (எனது பிடித்தம்)-1965 -1975 .
கலங்கரை விளக்கம்(அனைத்தும் ),அன்பே வா(அனைத்தும் ),நாடோடி(அனைத்தும்),ரகசிய போலீஸ்(அனைத்தும்),குடியிருந்த கோவில்(அனைத்தும்),சந்திரோதயம்(அனைத்தும்),பறக் கும் பாவை(அனைத்தும்)காவல் காரன்(நினைத்தேன் வந்தாய்),செல்வ மகள்(அனைத்தும்),நிமிர்ந்து நில்(அனைத்தும்),குடியிருந்த கோவில்(அனைத்தும்), கண்ணன் என் காதலன்(பாடுவோர்,மின்மினியை),நான் ஆணையிட்டால்(கொடுக்க கொடுக்க),ஒளி விளக்கு( நாங்க புதுசா,நான் கண்ட,மாம்பழ),நம் நாடு(ஆடை முழுதும்),காவிய தலைவி(அனைத்தும்),குமரி கோட்டம்(நாம் ஒருவரை,எங்கே அவள்),உலகம் சுற்றும் வாலிபன்(அவள் ஒரு,நிலவு ஒரு),அவளுக்கு என்று ஓர் மனம்(அனைத்தும்),எங்கள் தங்கம்(நான் அளவோடு,தங்க பதக்கத்தின்),தேடி வந்த மாப்பிள்ளை(நாலு பக்கம்,சொர்கத்தை),உரிமை குரல்(அனைத்தும்).அபூர்வ ராகங்கள்(அனைத்தும்)
ராமமூர்த்தி சார் தனியாக எனது பிடித்தம்.
தேன் மழை(கல்யாண, விழியால்,என்னடி ),நான்(அனைத்தும்),மறக்க முடியுமா(அனைத்தும்),தங்க சுரங்கம்(அனைத்தும்),எங்களுக்கும் காதல் வரும்(கள்ள பார்வை).காதல் ஜோதி(சாட்டை, உன்மேலே),மெட்ராஸ் டு பாண்டிசேரி (என்ன என்ன, ஹாய் கன்னியர்க்கு ,பயணம்),மூன்றெழுத்து(காதலன் வந்தான், ஆடு)
டியர் கோபால் சார்,
நான் பொதுவாக, சர்ச்சைக்குரிய விஷயங்களைத் தொடுவதில்லை. (மனதில் பட்டதை சொல்வதானாலும் கூட!). சரி பரவாயில்லை.
நான் மெல்லிசை மன்னர்கள் 1961-க்குப் பிறகு தான் trend setters என்று சொல்லியிருக்கிறேன். ஒருவன் துவக்கத்திலிருந்தே மேதாவியாயிருப்பான் என்பது நடிகர் திலகம் போன்ற 50 கோடியில் ஒருத்தருக்குத்தான் சாத்தியம். (ஏன் அவரே கூட, அவரை மெல்ல மெருகேற்றிக் கொண்டு தான் வந்திருக்கிறார் கால மாற்றத்துக்கும் இயைந்து!) எல்லோரும் மெல்ல மெல்ல அனுவபத்தின் மூலம் அறிவுத்தெளிவு பெற்று கொஞ்ச காலம் கழித்து, அவர்களுடைய அனுபவம் மற்றும் உள்ளார்ந்த அறிவு மூலம் மேதாவிகளாகின்றனர், அதற்கேற்ற மனமிருந்தால்! அதே போல், மெல்லிசை மன்னர்களும், 1953 - "பணம்" படத்திற்குப் பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து தான் "பாவ மன்னிப்பு" படத்தின் மூலம் புதிய இசை வடிவத்தைக் கொண்டு வந்தனர். இந்த இசை வடிவம் தான், இன்றும் வேறு வேறு பரிமாணங்களில் கையாளப் படுகின்றது. இந்த இசை வடிவம் தான் முக்கியம்.
இரட்டையர்களாயிருந்த வரை, அவர்களிடமிருந்து வந்த இசைக்கும், பிரிந்த பின் வந்த இசைக்கும், தரத்தில் இறக்கம் இருந்தது எல்லோரும் ஒப்புக் கொண்டு விட்ட விஷயம் தான். ஆனால், இருவரில், யார் பெரியவர் என்பது மறுபடியும் சர்ச்சைக்குரிய விஷயம் தான். இதை நான் தொட விரும்பவில்லை. எங்கோ கொண்டு விட்டு விடும். சில விஷயங்களில், என்ன நடந்தது என்பது மிகச் சரியாக ஆதாரபூர்வமாகத் தெரியாத போது, அதைப் பற்றி சொல்ல நான்(ம்) யார்? இருப்பினும், மெல்லிசை மன்னர் அவரிடமிருந்த நிறைய திறமைகளின் மூலம், அவருடைய இடத்தை சற்றேறக்குறைய தக்க வைத்துக் கொண்டார். இதற்காக, ராமமூர்த்தி அவர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. அதிர்ஷ்ட தேவதை அவர் பக்கம் முகம் காட்டாது போயிருக்கலாம்.
இதன் மூலம், மேதை ஜி. ராமனாதனையோ, திரை இசைத்திலகத்தையோ யாரும் குறைத்து மதிப்பிட முடியாது, நான் உட்பட!
என்னாலும் வருட வாரியாக, பாடல் வாரியாக, பக்கம் பக்கமாக வாதிட முடியும். இருப்பினும், இது ஒரு பெரிய, நீண்ட வருடங்கள் பிடிக்கும் ஒரு டாப்பிக் என்பதாலும், அனாவசிய சர்ச்சைகளுக்கு வழி வகுக்கும் என்பதாலும், இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்.
(என்னடா இது, திரு. கார்த்திக் அவர்களின் ஆதங்கத்தைப் போக்கலாம் என்று பார்த்தால், ஒரு சர்ச்சையில் வந்து மாட்டிக் கொண்டோமே!),
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அக்டோபர் 2011 'இதயக்கனி சினிமா ஸ்பெஷல்' மாத இதழில் அட்டகாச புகைப்படங்களுடன் வந்த, இலங்கை வானொலியின் அன்பு அறிவிப்பாளரும், நடிகர் திலகத்தின் இனிய நண்பருமான B.H.அப்துல் ஹமீத் அவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றி அளித்த அற்புதக் கட்டுரை.
http://www.bhabdulhameed.com/images/sivaji.jpg
முன் அட்டைப்படம்
http://i1087.photobucket.com/albums/...t%20-2/7-1.jpg
http://i1087.photobucket.com/albums/...t%20-2/4-2.jpg
http://i1087.photobucket.com/albums/...t%20-2/3-3.jpg
http://i1087.photobucket.com/albums/...t%20-2/2-5.jpg
http://i1087.photobucket.com/albums/...t%20-2/1-6.jpg
பின் அட்டைப்படம்
http://i1087.photobucket.com/albums/...t%20-2/5-2.jpg
இணைப்பு: B.H.அப்துல் ஹமீத் அவர்கள் நடிகர் திலகத்தை இலங்கையில் வானொலிக்காக கண்ட பேட்டி.
http://i1087.photobucket.com/albums/...g?t=1350021026
http://www.youtube.com/watch?feature...&v=Xi-dILr69Ww
http://www.youtube.com/watch?v=c8xZ1n3eLxI&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
It is totally a wrong perception to conclude that Viswanathan lacked his talent since he splited from Ramamurthy. There are plenty of examples to proof that, and everybody knows that. Even with Ramamurthy, he was the main creator of all the successful 60's movie songs, Ramamurthy was the main violinist, I hear. He probably helped MSV with tunes and the orchestra but not the main composer. As for KVM, he was very good in religious movies (mind you MSV marvelled in that too. e.g: Karnan) but not for movies like 'Engal Thanga Raja' etc. Hearing some songs form that movie, couldnt help me thinking, it should have been MSV composing for that sort of situations. The songs would have been much more youthfull and melodious with westernized rythms.
கிடைத்தற்கரிய பொக்கிஷம் .... நம் பொதிகை தொலைக் காட்சியில் வெள்ளி தோறும் இரவு 7.05 மணிக்கு ஒளிபரப்பாகும் கனவுலக பிரம்மாக்கள் தொடரில் தற்போது நடிகர் திலகம் ஒரு பல்கலைக் கழகம் ஒளிபரப்பாகிறது. இது தொடரும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
http://i872.photobucket.com/albums/a...ps780ec2cd.jpg
பொதிகைக்கு நன்றி.
அன்புடன்
இந்த மக்களின் ரசனையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. திருப்பித் திருப்பி சில படங்களைத் தாண்டி அந்த வட்டத்தைத் தாண்டி வருவேனா என்கிறார்கள். மிகவும் பிரபலமான படங்களைக் காட்டிலும் இன்னும் சிறப்பான நடிப்பை பல படங்களில் நடிகர் திலகம் வெளிப் படுத்தி இருப்பார். அவற்றையெல்லாம் வெளிக் கொணர்ந்து அடுத்த தலைமுறைக்கு அவருடைய நடிப்பின் பல பரிணாமங்களைக் காட்ட வேண்டியது ரசிகர்களாகிய நமது கடமை. அந்த வரிசையில் அதிகம் பிரபலமாகாத ஒரு படத்தின் பாடலை இங்கே நாம் பகிர்ந்து கொள்வோமா. படம் பிரபலமாகவில்லை என்று சொல்வதைக் காட்டிலும் சந்தடி சாக்கில் வந்து சென்று விட்ட படம் என்று வேண்டுமானால் சொல்லலாம். காரணம் வெற்றிக் கூட்டணியின் கடைசி படம். பீம்சிங் நடிகர் திலகம் கூட்டணியில் வெளிவந்த படம். சன்பீம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த பாதுகாப்பு அருமையான படம். மற்ற பீம்சிங் படங்களுக்கு எந்த விதத்திலும் சற்றும் குறையாத படம். விறுவிறுப்பு சற்றே குறைந்த காரணத்தால் எடுபடவில்லை எனலாம்.
இந்தப் படத்தைப் பற்றிப் பின் ஒரு சந்தர்ப்பத்தில் விரிவாக அலசுவோம். இப்போது இதில் நடிகர் திலகத்திற்கு அமைந்த அட்டகாசமான பாடல். பாடகர் திலகம் சௌந்தர்ராஜன் குரலில் திரை இசைச் சக்கரவர்த்தி விஸ்வநாதன் இசையில் கவியரசரின் வரிகளுக்கு உயிரூட்டுகிறார் நடிகர் திலகம்.
சோலோ பாடலான இதில் என்ன பெரிசாக செய்யப் போகிறார் என நினைப்பதற்கு இடம் தராமல் இதிலும் நுணுக்கமான விஷயங்களைப் புகுத்தி இருப்பார் நடிகர் திலகம். வெவ்வேறு தோற்றங்களில் வரும் போது அந்தப் பாத்திரங்களின் குணாதிசயங்களை வெளிப்படுத்தி இருப்பது மிகச் சிறப்பு. கோட் சூட் அணிந்து பணக்கார வாலிபனாக வரும் போது அந்தக் காலத்தில் அந்த வாலிபனுக்கே உரிய பணத்திமிரும் அவனுக்கே இயல்பாக சற்றே இருக்கும் ஜாக்கிரதை உணர்வையும் ஒரு சேர உணர்த்தி இருப்பார். ஒரு மண்டபத்தின் மேல் அவர் நிற்க ஜெயலலிதா கீழே இறங்கி சுற்றி வந்து மேலே ஏறி திரும்ப மண்டபத்திற்கு வரும் காட்சியில் ஜாக்கிரதை உணர்வோடு ஒரு கை அந்த மண்டபத்தின் தூணைப் பிடித்திருக்க மற்றொரு கை ஜெயலலிதாவின் கையைப் பிடித்திருக்க அதனை அவர் பற்றியவாறு சுற்றி வருவார். அதே போல் கச்சை கட்டி வரும் காட்சியில் அவர் வேகமாக படி யிறங்க நம்மவர் மிகவும் நிதானமாக நளினமாக இறங்குவது, அதே போல் படகில் லூங்கி கட்டி வரும் போது, அதிலும் ஒரு நாகரீகத்தை வெளிப் படுத்தி கடலோரமாக நிதானமாக இருவரும் நடந்து வருவர். இந்த நளினத்தை அவர் கடைப் பிடிக்கக் காரணம் அந்தப் பாடலில் மெல்லிசை மன்னர் புகுத்தியிருக்கும் அதே பாவனைதான். டி.எம்.எஸ். குரலிலும் அந்த மென்மை, நளினம் இவையெல்லாம் பிரதிபலிக்க இவர்களை நாம் தூக்கி சாப்பிட வேண்டும் காட்சியை நிறுத்த வேண்டும் என்கிற தொழில் பக்தியை இந்த பாடலிலும் காட்டி யிருப்பார்.
இத்தனைக்கும் இது ஒரு கனவுப் பாடல் என்பது குறிப்பிடத் தக்கது. கனவுப் பாடல் தானே என்று இஷ்டத்திற்கு பாத்திரத்திற்குப் பொருந்தாத உடைகளை அணிந்து பார்ப்பவர்களை பயமுறுத்தும் கண்றாவி கலரையெல்லாம் உடுத்தாமல் அவர் நடித்திருப்பது அவருடைய நடிப்பின் ஆழத்தை உணர்த்துவதாகும்.
அதிகமாக எழுதி விட்டோனோ. பாடலைப் பார்ப்போமே..
http://www.youtube.com/watch?v=0u1IWqlXR9A&feature=share&list=UUHZ9TIXjkl cLpnIKC2q3h3A
Can anyone provide me pammalar/esvee/barrister mobile numbers please?
[quote=raghavendra;966397]இந்த மக்களின் ரசனையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. திருப்பித் திருப்பி சில படங்களைத் தாண்டி அந்த வட்டத்தைத் தாண்டி வருவேனா என்கிறார்கள். மிகவும் பிரபலமான படங்களைக் காட்டிலும் இன்னும் சிறப்பான நடிப்பை பல படங்களில் நடிகர் திலகம் வெளிப் படுத்தி இருப்பார். அவற்றையெல்லாம் வெளிக் கொணர்ந்து அடுத்த தலைமுறைக்கு அவருடைய நடிப்பின் பல பரிணாமங்களைக் காட்ட வேண்டியது ரசிகர்களாகிய நமது கடமை. அந்த வரிசையில் அதிகம் பிரபலமாகாத ஒரு படத்தின் பாடலை இங்கே நாம் பகிர்ந்து கொள்வோமா. படம் பிரபலமாகவில்லை என்று சொல்வதைக் காட்டிலும் சந்தடி சாக்கில் வந்து சென்று விட்ட படம் என்று வேண்டுமானால் சொல்லலாம். காரணம் வெற்றிக் கூட்டணியின் கடைசி படம். பீம்சிங் நடிகர் திலகம் கூட்டணியில் வெளிவந்த படம். சன்பீம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த பாதுகாப்பு அருமையான படம். மற்ற பீம்சிங் படங்களுக்கு எந்த விதத்திலும் சற்றும் குறையாத படம். விறுவிறுப்பு சற்றே குறைந்த காரணத்தால் எடுபடவில்லை எனலாம்.
இந்தப் படத்தைப் பற்றிப் பின் ஒரு சந்தர்ப்பத்தில் விரிவாக அலசுவோம். இப்போது இதில் நடிகர் திலகத்திற்கு அமைந்த அட்டகாசமான பாடல். பாடகர் திலகம் சௌந்தர்ராஜன் குரலில் திரை இசைச் சக்கரவர்த்தி விஸ்வநாதன் இசையில் கவியரசரின் வரிகளுக்கு உயிரூட்டுகிறார் நடிகர் திலகம்.
சோலோ பாடலான இதில் என்ன பெரிசாக செய்யப் போகிறார் என நினைப்பதற்கு இடம் தராமல் இதிலும் நுணுக்கமான விஷயங்களைப் புகுத்தி இருப்பார் நடிகர் திலகம். வெவ்வேறு தோற்றங்களில் வரும் போது அந்தப் பாத்திரங்களின் குணாதிசயங்களை வெளிப்படுத்தி இருப்பது மிகச் சிறப்பு. கோட் சூட் அணிந்து பணக்கார வாலிபனாக வரும் போது அந்தக் காலத்தில் அந்த வாலிபனுக்கே உரிய பணத்திமிரும் அவனுக்கே இயல்பாக சற்றே இருக்கும் ஜாக்கிரதை உணர்வையும் ஒரு சேர உணர்த்தி இருப்பார். ஒரு மண்டபத்தின் மேல் அவர் நிற்க ஜெயலலிதா கீழே இறங்கி சுற்றி வந்து மேலே ஏறி திரும்ப மண்டபத்திற்கு வரும் காட்சியில் ஜாக்கிரதை உணர்வோடு ஒரு கை அந்த மண்டபத்தின் தூணைப் பிடித்திருக்க மற்றொரு கை ஜெயலலிதாவின் கையைப் பிடித்திருக்க அதனை அவர் பற்றியவாறு சுற்றி வருவார். அதே போல் கச்சை கட்டி வரும் காட்சியில் அவர் வேகமாக படி யிறங்க நம்மவர் மிகவும் நிதானமாக நளினமாக இறங்குவது, அதே போல் படகில் லூங்கி கட்டி வரும் போது, அதிலும் ஒரு நாகரீகத்தை வெளிப் படுத்தி கடலோரமாக நிதானமாக இருவரும் நடந்து வருவர். இந்த நளினத்தை அவர் கடைப் பிடிக்கக் காரணம் அந்தப் பாடலில் மெல்லிசை மன்னர் புகுத்தியிருக்கும் அதே பாவனைதான். டி.எம்.எஸ். குரலிலும் அந்த மென்மை, நளினம் இவையெல்லாம் பிரதிபலிக்க இவர்களை நாம் தூக்கி சாப்பிட வேண்டும் காட்சியை நிறுத்த வேண்டும் என்கிற தொழில் பக்தியை இந்த பாடலிலும் காட்டி யிருப்பார்.
இத்தனைக்கும் இது ஒரு கனவுப் பாடல் என்பது குறிப்பிடத் தக்கது. கனவுப் பாடல் தானே என்று இஷ்டத்திற்கு பாத்திரத்திற்குப் பொருந்தாத உடைகளை அணிந்து பார்ப்பவர்களை பயமுறுத்தும் கண்றாவி கலரையெல்லாம் உடுத்தாமல் அவர் நடித்திருப்பது அவருடைய நடிப்பின் ஆழத்தை உணர்த்துவதாகும்.
அதிகமாக எழுதி விட்டோனோ. பாடலைப் பார்ப்போமே..
அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,
நடிகர் திலகத்தின் அற்புதமான, நளினமான நடிப்பைத் தாங்கிய "பாதுகாப்பு" படப் பாடலைப் பதிந்ததற்கு நன்றி.
என்னைப் பொறுத்த வரை, என்னுடைய பாடல் ஆய்வுக் கட்டுரையின் இரண்டாவது பகுதியில், நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பைத் தாங்கி வந்த பாடல்களை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதாவது, நடிகர் திலகத்தின் புதிய முதல் முயற்சி மற்றும் வித்தியாசமான முயற்சிகள். முதல் பாடல் ஆய்வுக் கட்டுரை "நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவிப் பாடல்கள்" - இதில், இடம் பெற்ற பத்து பாடல்களும், நடிகர் திலகம் மட்டுமின்றி, மற்ற எல்லா கலைஞர்களின் கூட்டு முயற்சியால் வெற்றி பெற்று, இன்றும் மக்களை ஆகர்ஷிக்கும், பேசப்படும் பாடல்கள்.
இந்த இரண்டாவது பகுதியில், இது வரை, 6 பாடல்களைப் பற்றி எழுதி விட்டேன். "சக்கப் போடு போடு ராஜா", "கா...கா...கா", "சுந்தரி சௌந்தரி", "பனி படர்ந்த மலையின் மேலே" என்று 4 பாடல்களைக் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னர் எழுதி, அண்மையில் மீண்டும் தொடர்ந்து எழுதி, "நல்லவன் எனக்கு நானே நல்லவன்" மற்றும் "நெஞ்சிருக்கும் எங்களுக்கு" பாடல்களையும் எழுதி இருக்கிறேன்.
இனி மேலும், இது போன்ற வித்தியாசமான முயற்சிகளையும், எல்லோரும் அறிந்த அவரது படைப்புகளையும், என்னுடைய பார்வையிலிருந்து எழுதுவேன். அதன் நோக்கமே, எல்லோரையும் போல நடிகர் திலகத்தின் திறமைகளையும், பங்களிப்பையும் இன்றைய இளம் தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்வது மட்டுமின்றி, ஆத்மத் திருப்திக்காகவும் தான்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
டியர் சாரதி,
தங்களுடைய அன்பான பாராட்டுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.
நிச்சயம் முழுக்க முழுக்க வரவேற்கத் தக்கதே. தங்களுக்கு கிடைத்துள்ள பாராட்டுக்களே இதனைப் பறை சாற்றும், அடியேன் உள்பட. நான் ஏற்கெனவே சொன்னது போல் தங்களிடமிருந்து தொடர்ந்தும் அடிக்கடியும் இது போல் பதிவுகளை எதிர்பார்க்கும் நமது அன்பர்களில் நானும் ஒருவன். தொடருங்கள்.Quote:
இனி மேலும், இது போன்ற வித்தியாசமான முயற்சிகளையும், எல்லோரும் அறிந்த அவரது படைப்புகளையும், என்னுடைய பார்வையிலிருந்து எழுதுவேன். அதன் நோக்கமே, எல்லோரையும் போல நடிகர் திலகத்தின் திறமைகளையும், பங்களிப்பையும் இன்றைய இளம் தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்வது மட்டுமின்றி, ஆத்மத் திருப்திக்காகவும் தான்.
அன்புடன்
Hi,
Saw Enn Thambi last night again, NT looked so lean, superb favourite scenes, NT reading book(White Pyjama), Sattai scene, Sword fight,many stills are always circulating in Sivaji books
Also Thalaivar rajini in Chandramukhi would have same style which NT did while sword fight
Vasu sir,
In your action episode pl include this sword fight, its superb, comes around 7 minutes
After a very long time
Thangaikaga movie is running in Delite theatre , 2 shows daily
Dear Ragulram,
As said earlier, please go through the previous parts of NT thread. Mr. Vasu Sir has already posted the fight scene in reference from En Thambi in NT Thread Part 10 on June 30, 2012.
for your reference the video is given here again:Quote:
நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைகாட்சிகள் (வீடியோ தொடர்) 3.
படம்:வெளிவந்த ஆண்டு: 1968
தயாரிப்பு: சுஜாதா சினி ஆர்ட்ஸ்.
நடிகர் திலகம் மோதும் வில்லன்: கே.பாலாஜி
இயக்கம்: ஏ.சி.திருலோகசந்தர்.
'என் தம்பி' திரைக்காவியத்தில் இடம் பெற்ற அனைவரையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த கத்திச் சண்டை. நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் திலகத்தின் அனல் பறக்கும் கத்தி வீச்சு. அதுவும் படு ஸ்டைலாக. தம்பி வேண்டுமென்றே சண்டைக்கு அழைத்தவுடன் மறுத்து ஒதுங்குவதும், பின்னர் தம்பியின் கொலை வெறியை எண்ணி தற்காப்பின் பொருட்டு கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஸ்திரப் படுத்திக் கொண்டு பின்னர் புகுந்து விளையாடுவதும் வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாது.
கத்திச் சண்டை தொடங்கும் போது அந்த கோட்டை படு ஸ்டைலாக கழற்றும் லாவகம்...(இந்த இடத்தில் பின்னணி இசையில் கொடி நாட்டிப் பின்னிஎடுத்திருப்பார் எம்.எஸ்.வி).
கத்தியை எடுத்து முத்தம் கொடுப்பது போன்ற பாவனயில் நிற்கும் அந்த standing pose...
முதலில் தன் தம்பி மூர்க்கத்தனமாகத் தன்னைத் தாக்கத் தொடங்கி தன்னை கொலை செய்யுமளவிற்கு போய் விட்டவுடன் அதிர்ந்து, அடுத்த கணமே தம்பியாவது... மண்ணாவது...என்று தன் பாதுகாப்புக்காக அவனைத் தள்ளி விட்டு விட்டு புருவங்களை ஏற்றி படுஅலட்சியமாக அவனை எதிர்கொள்ளும் விதம்...
பின் சிரித்துக் கொண்டே தம்பியின் வாள் வீச்சை எதிர்கொண்டு, அவனைத் தவிடுபொடியாக்கி, தம்பியின் கத்தியும் தன் கைக்கு வந்தவுடன் அந்தக் கத்தியைத் தீட்டுவது போல தன் கத்தியில் ஒரு உரசு உரசி, கத்தியை அவனிடம் தூக்கிப் போடும் லாவகம்.
விஷம் தோய்ந்த கத்தியை அவன் தன்னைக் கொல்லப் பயன்படுத்தியுள்ளான் என தெரிந்து, அதிர்வுற்று, தம்பியிடம், "விஸ்வம், நீ மாறவே மாட்டியாடா?...என்று வேதனைப்பட்டு திரும்புவது.
என்று நடிகர் திலகத்தின் ஸ்டைல் சாம்ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கும் அற்புத சண்டைக்காட்சி.
ஒரு இடம் கூட 'டூப்'போடாமல் தலைவர் அசத்திய கத்திச்சண்டை.
கத்தியை எடுத்து நடிகர் திலகம் ஸ்டைலாக நிற்கையில் தியேட்டர்களில் விண்ணைப் பிளந்த ஆரவாரத்தையும்,கரகோஷத்தையும் தட்டிச் சென்ற, நடிகர் திலகம் ரசிகர்களால் வாழ்நாள் முழுதும் மறக்க இயலாத (மற்ற ரசிகர்களையும் வியக்க வைத்த) சூப்பர் சண்டைக்காட்சியாயிற்றே! ஏன்! நடிகர் திலகமே ரசித்து மகிழ்ந்த பெருமையைப் பெற்ற சண்டைக் காட்சியாயிற்றே!
முதன்முறையாக இணையத்தில் உங்களுக்காக
http://www.youtube.com/watch?v=YJfmdyg2Eco&feature=share&list=UUzu2kbRXnm wh4-gNJWeCCdg
PAmmalar sir
here is manidhanum deivamagalam for you
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=RGr56osYmVA
Dear Rajesh,
Thank you for the movie link of MANIDANUM DEIVAMAGALAM
இன்றைய தேதியிட்டு [14.10.2012] வெளிவந்துள்ள தினத்தந்தி நாளிதழில் சினிமா கேள்வி பதில் பகுதியில் இடம் பெற்றுள்ள கேள்வி-பதில் ஒன்று-
Quote:
குருவியாரே, சிவாஜி கணேசனின் பழைய படங்கள் மீண்டும் 'ரவுண்டு' கட்டுகிறதே... அதற்கு என்ன காரணம்? (எம்.வாசுகி, புதுக்கோட்டை-2)
காலத்தால் அழிக்க முடியாத கதையம்சத்தையும், நடிப்பாற்றலையும் தவிர, வேறு எந்த காரணமும் இல்லை!
இன்றைய 'தினத்தந்தி'
தொடர்ந்து வெற்றிநடை போடுகிறது
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/th.jpg
வாசு சார், திருவிளையாடல் விளம்பர நிழற்படம் தினத்தந்தியின் கூற்றை வலுப்படுத்துவது போல் சிறப்பாக அளித்து விட்டீர்கள். சூப்பர்...
அன்புடன்
ராகவேந்திரன்
17-10-2012 'குமுதம்' இதழில் 'முக்தா' ஸ்ரீனிவாசன் அவர்களின் நினைவலைகள்.
http://i1087.photobucket.com/albums/...g?t=1350218137
http://i1087.photobucket.com/albums/...t%20-2/1-7.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் வாசு சார்,
வரும் போதே அசத்தறீங்க... அபூர்வமான படம் .. அபூர்வமான சந்திப்பு ... அகலாத நினைவுகள் ...
நன்றி சார்.
அன்புடன்
ராகவேந்திரன்
sarankumarnm.blogspot.com has developed an anroid application on Nadigar Thilagam. The download link is given below:
https://docs.google.com/open?id=0B8n...2lmUlIwNlU1QkE
I request our friends who are well versed in android apps to give their opinion so that we can use and inform others.
டியர் ராகவேந்திரன் சார்,
ரொம்ப ரொம்ப நன்றிகள் சார். சும்மா 'பாதுகாப்பு' காவியத்தின் 'ஒருநாள் நினைத்த காரியம் நடக்கும்' சூப்பர் பாடலை பதிவு செய்து நெஞ்சில் நீங்கா இடத்தைப் பெற்று விட்டீர்கள். ஒவ்வொரு வரிக்கும் தலைவருடைய அட்டகாசமான ஸ்டைல் நடிப்பும், உடை அலங்காரங்களும் , தாங்கள் கூறியுள்ளது போல பணக்கார தோரணையில் வரும் அந்த காட்சியில் சற்றே ஜாக்கிரதையான உணர்வுகளும் வெளிப்பட... வர்ணிக்க வார்த்தைகள் ஏது?
மிக மிக அபூர்வமான பாடலை தரவேற்றி இங்கு பதித்தமைக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் சார்.
100% ragul.Quote:
Also Thalaivar rajini in Chandramukhi would have same style which NT did while sword fight
ராகுல்,
தலைவர் ரஜினி என்று குறிபிட்டுள்ளீர்கள். புரியவில்லை.
Dear Raghavendra Sir,
To install this application one needs an Android smart-phone or an Android Tablet with newer versions of Android (probably a version from v2.2 to v4.0). Users have to connect their smart-phone or the tablet to Internet through GPRS connection using the Sim card, or using Wi-fi connection available with the phone. Using Opera or other browser available with the phone, browse to the specified site given by you, download the SivajiGanesan.apk file to the external memory card (default 2GB card) of the smart-phone. One who cannot connect their phone/tablet using the above methods can still connect it to their pc/laptop which in turn is connected to internet and using pc browser one can download to the application to phone/tablet's memory card. Double clicking the application within the phone/tablet shall install the application.Once the application is installed, user can access the same using application icon.
If the developer Mr.SaranKumar has published the application in android market/play store, users can access the playstore site https://play.google.com/store
search for the application and get it installed instead of downloading the application to external memory card.
I will install the application and give my feed-back soon. Snap-shots of the application are available from the site given by you: http://sarankumarnm.blogspot.in/2012...plication.html
Dear Kalnayak,
Thank you so much for the prompt response. I am happy you are installing it. I am eagerly awaiting your feedback on the same.
இன்று 14.10.2012 ஞாயிறு மாலைக் காட்சி திருவிளையாடல் சென்னை பேபி ஆல்பர்ட் திரையரங்கம் விழாக் கோலம் பூண்டு ரசிகர்கள் அமர்க்களப் படுத்தி விட்டதாக முரளி சார் தகவல் தந்துள்ளார். அரங்கு நிறைவு house full கண்டது மட்டுமின்றி ரசிகர்களின் அளப்பரை திரையரங்க ஊழியர்களிடையே ஆவலையும் உண்டு பண்ணியுள்ளது. அவர்களின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது. அநேகமாக முரளி சார் விரிவான பதிவிடுவார் என எதிர்பார்ப்போம்.