" வெள்ளிக்கிண்ணம் வாங்கி வைத்து, சுமந்து வந்த கைகளை சுகமாக முத்தமிட்டு, வாணியின் 'வழுவழு' கன்னத்தில் அதைவிட வழுவழுப்பான தன் இதழ்கள் பதித்து, முத்துப் புன்னகையை அவ்விடத்தில் படரவிட்டு, அந்த காந்தக் கண்களாலேயே காதலியின் கண்களை சுட்டிக் காட்டி, அப்படியே மலர்த் தோரணங்கள் அலங்கரித்த கட்டிலுக்குக் வைரச் சிலையை மெதுவாகக் கொண்டு சென்று, அமர வைத்து, அவள் எதிரே கீழ் அமர்ந்து கை பிடித்தவளின் கையை நுனியிலிருந்து மேல்வரை உதடுகள் விரித்து, தொட்டுக் கலந்து, கழுத்தில் முகம் புதைத்து 'இதுதான் சுகம்' என்று அங்கு சொர்க்கத்தைக் காணும் சுகக் கணவன். பார்ப்பவர்களை பரவசப்படுத்தும், கண்ணியக் காதலை வெளிப்படுத்தும் கண்கவர் அழகன்."
====
வாசு , பாடலை விட உங்கள் வர்ணனை மிகவும் பிரமாதம் . ஒவ்வொரு எழுத்துக்களும் உங்கள் ஈடுப்பாட்டை எடுத்துச்சொல்லும் . இந்த பாடலை பிடிக்காதர்வர்கள் என்று யாருமே இருக்க முடியாது - இந்த பாடலை கலரில் நினைத்துப்பார்த்தால் விடை " மயக்கமென்ன , இந்த மௌனமென்ன !" என்ற பாடாலாகத்தான் இருக்க முடியும் . அழகான காதல் மிகவும் மென்மையாக சொல்லப்பட்டிருக்கின்றது . இவ்வளவு முறைதான் இந்த பாடலை கேட்கவேண்டும் , படத்தைப்பார்க்க வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு இருந்தால் , அதை உடைத்தெரியக்கூடிய பாடல் , படம் .
அடுத்ததை தெரிந்துக்கொள்ளும் ஆவல் அதிகமாகின்றது .......