http://i66.tinypic.com/2cdu68w.jpg
இந்த புகைப்படம் கோவை திரு. துரைசாமி (பொறியாளர்) அவர்களின் இல்லத்தில்
நடைபெற்ற புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் எடுக்கப்பட்டது .
Printable View
http://i66.tinypic.com/2cdu68w.jpg
இந்த புகைப்படம் கோவை திரு. துரைசாமி (பொறியாளர்) அவர்களின் இல்லத்தில்
நடைபெற்ற புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் எடுக்கப்பட்டது .
http://i63.tinypic.com/2pzd25g.jpg
மதுரை சென்ட்ரல் சினிமாவில் நேற்று (27/05/2016) முதல் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "குடியிருந்த கோயில் " தினசரி 4
காட்சிகளில் வெளியாகி வெற்றி நடை போடுகிறது .
முதல் நாள் வசூல் சுமார் ரூ.17,500/-'
18 மாத இடைவெளியில் (கடந்த முறை -2015 பொங்கல் வெளியீடு ) மதுரையில்
வெளியாகியுள்ளது மட்டுமின்றி , அடிக்கடி , இடைவிடாமல் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு ஆகும் திரைப்படம். கடந்த வாரம் சன் லைப்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது .
நாளை (29/05/2016) மாலை சிறப்பு காட்சியில் ரசிகர்கள் / பக்தர்களுக்கு, அண்ணா தி.மு.க.வின் தேர்தல் வெற்றியை கொண்டாடும் பொருட்டு , அனைவருக்கும்,
முட்டை பிரியாணி வழங்கப்பட உள்ளதாக மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
தகவல் அளித்துள்ளார்.
நாளை (29/05/2016) ஞாயிறு இரவு 7 மணிக்கு புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அசத்திய " எங்க வீட்டு பிள்ளை " மீண்டும் சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது
http://i63.tinypic.com/2v0ldo2.jpg
திருக்குறள் வழி வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்
குறள்.1003 பாடம்.3
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை
ஆம் நம் தலைவர் தான் உழைத்து சம்பாதித்த பணத்தை எல்லாம் தன்னை நம்பி வருபவர்களுக்கு கொடுத்தவர்
வீடு கடை என வாடகைக்கு இருந்த வர்களுக்கு அதை அவர்கள் பெயருக்கே எழுதிக்கொடுத்த உத்தமர்
ஊனமுற்றோர் பள்ளிக்கூடம் தொடங்கினார்
கண் இல்லாதவர்களுக்கு ஒளியாய்
உடலில் குறை உள்ளவர்களுக்கு நம்பிக்'கை'யாய்
மனநலம் குன்றியவர்களுக்கு தெய்வமாய்
வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்
தமிழக மக்களுக்கு தன்னால் இயன்ற நன்மைகளை செய்து அவர்கள் இதயத்தில் தனக்கென
ஒரு இடம் பிடித்தர் எம்.ஜி.ஆர்
அவர் செய்த சேவையை இன்னும்
மறக்காமல் தமிழ் மக்கள் போற்றி புகழ் பாடுவதே சிறப்பு
வாழ்க தமிழ் வாழ்க எம்.ஜி.ஆர் நாமம்
courtesy maramayogi manohar in fb