-
தனியார் டிவிக்களில் நடிக பேரரசர்*எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*ஒளிபரப்பான*விவரம் 08/08/20* முதல் 15/08/20* வரை*
----------------------------------------------------------------------------------------------------------------
08/08/20* - சன்* லைப்* *- காலை 11 மணி* *- விவசாயி*
* * * * * * * * * சன் லைஃப் - மாலை 4 மணி* - என் தங்கை*
09/08/20* - சன்* லைஃப் - காலை 11 மணி - அன்னமிட்டகை*
* * * * * * * * *மெகா 24* * - பிற்பகல் 2.30 மணி* - விவசாயி*
10/08/20 -மெகா 24- அதிகாலை 2 மணி - தாய் சொல்லை தட்டாதே*
* * * * * *- முரசு டிவி - மதியம் 12 மணி / இரவு 7 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * * வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - சங்கே முழங்கு*
* * * * * * * சன்* லைஃப்* - மாலை 4 மணி - நீதிக்கு தலை வணங்கு*
* * * * * * * பூட்டோ டிவி - இரவு 8.30 மணி -அன்பே வா*
11/08/20-* சன் லைஃப்* - காலை 11 மணி - எங்க வீட்டு பிள்ளை*
* * * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி - தாய்க்கு தலைமகன்*
12/08/20 -சன் லைஃப்* - மாலை 4 மணி - நவரத்தினம்*
* * * * * * * *மீனாட்சி டிவி -இரவு 7 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * *தமிழ் மீடியா டிவி - இரவு 8 மணி - பட்டிக்காட்டு பொன்னையா*
13/08/20 சன் லைஃப் - காலை 11 மணி - நல்ல நேரம்*
* * * * * * * புதுயுகம் டிவி - இரவு 7 மணி - பெற்றால்தான் பிள்ளையா*
14/08/20- மெகா 24 -. பிற்பகல் 2.30 மணி - தனிப்பிறவி*
* * * * * * * *மீனாட்சி டிவி - இரவு 7 மணி -நல்ல நேரம்*
* * * * * * * *எம்.எம்.டிவி - இரவு 8 மணி* - ரிக் ஷாக் காரன்*
15/08/20 -சன்* லைஃப்* - காலை 11 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * *முரசு டிவி* - மதியம் 12 மணி / இரவு 7 மணி - நீதிக்கு பின் பாசம்*
*
-
அரசியல் உலகை*போல தமிழ் சினிமா உலகிலும் இன்று கட்சி*போட்டிகள்* மிக வேகமாக வளர்ந்து வருகின்றன* பல நடிகர்களுக்கு கட்சிகள் இருந்த*போதிலும்*இரண்டு கட்சிகள்தான் முக்கியமானவை . எம்.ஜி.ஆர். கட்சி ஒன்று , மற்றொன்று சிவாஜி*கணேசன் கட்சி .
அரசியல் கட்சி*ஆதரவாளர்களின் ஆரவாரங்களை விட இந்த சினிமா*கட்சி*ஆதரவாளர்களின் ஆரவாரம் மிக மிக அதிகம் . இவர்களெல்லாரும் இளைஞர்களாய்* இருப்பதே*இதற்கு காரணம்*.
யாருடைய* படம் அதிகநாள் ஓடுகிறது என்பன*போன்ற விஷயங்களை*எல்லாம்*இந்த இளைஞர்கள் மிகுந்த* அக்கறையோடு விவாதிக்கிறார்கள் .* தங்கள் கட்சி*நடிகர்தான் அதிகம் சம்பாதிக்கிறார் .என்பதும் பெருமைக்குரிய ஒரு விஷயமாக இருக்கிறது .**
தமிழ் சினிமா*உலகில்*இன்று தனது* நடிப்பு கூலியாக*பெருந்தொகை*பணத்தை*பெறுபவர் எம்.ஜி.ஆர். தான் , இவருக்கு*அடுத்தபடியாக இருப்பவரே சிவாஜிகணேசன் .* சிவாஜிகணேசன் வாங்குகிற தொகையைவிட* ஏழு, எட்டு மடங்கு அதிக தொகை வாங்குகிறார்* எம்.ஜி.ஆர். .*
-
கேள்வி*: நன்கொடை மிக அதிகமாக கொடுத்திருப்பவர் எம்.ஜி.ஆரா, சிவாஜி*கணேசனா*
பதில் : பிள்ளைக்குட்டிக்காரன் என்று தன்னை*சொல்லிவரும் சிவாஜி*கணேசனை விட* எம்.ஜி.ஆர். பல மடங்கு உதவி செய்தும், நன்கொடை கொடுத்ததும் வருகிறார் .*
கேள்வி*: நடிகர்களில் கோடை வள்ளல் இப்போது யார் ?
பதில் : சந்தேகமில்லாமல் எம்.ஜி.ஆர். தான் .* ஒவ்வொரு நடிகரும்*பல பெரிய**வீடுகள்* கட்டிக்* கொள்ளும் இந்த நேரத்தில் தனக்கென்று புது வீடு* கூட*கட்டி கொள்ளாமல் இருக்கிறாரே எம்.ஜி.ஆர்.*
கேள்வி*; இப்போது நடிக்கும் நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்*யார் ?
பதில் : எம்.ஜி.ஆர். மட்டுமே .* அவர் நடிக்கின்ற*படத்திற்கு*தென்னிந்தியாவில்*அதிக தொகை கொடுக்கிறார்கள் .* சமீபத்தில் வெளிவந்த*பாக்தாத் திருடன் , மன்னாதி மன்னன்* படங்களில் இரண்டரை*லட்ச,ம்* வாங்கினார் . இதுமேலும்*கூடும்*வாய்ப்பு உள்ளது .
-
"உலகம் சுற்றும் வாலிபன்" .........
___________________
இசை மேதை எம் எஸ் வி அய்யா அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன்
மக்கள் திலகம் எம் ஜி ஆர் வீட்டிற்கு பயணம்
ஆவலுடன் எதிர் கொண்ட எம் ஜி ஆர் பிறரை உண்ணவைத்து மகிழும் இயல்பு கொண்ட அவர் எம் எஸ் வி அவர்களை உபசரிக்கிறார்
எம் எஸ் வி அவர்கள் தான் கையோடு கொண்டு வந்த அக்காலத்தில் விலை உயர்ந்த Panasonic stereo set ஒன்றை எம் ஜி ஆரின் எதிரில்வைக்கிறார்
ரிகாடிங் முடிந்த உலகம் சுற்றும் வாலிபன் பாடல் கேசட்டை அதில் இயக்கச் செய்கிறார்.
பொறுமையுடன் கேட்ட மக்கள் திலகத்தின் முகத்தை கவனிக்கிறார்
எம் எஸ் வி
அவர் முகத்தில் எந்த சலனமும் இல்லை எம் எஸ் வி முகத்தில் ஏமாற்றத்தின் சாயல்
எம் ஜி ஆர் அவர்கள் தன் உதவியுள்ளாரிடம் அந்த Delphi set கொண்டு வரச்செய்து
அதில் இந்த கேசட்டை சுழலவிட்டு கவனமாக கேட்கிறார்
எம் ஜி ஆர் முகத்தில் திருப்தியை கண்ட எம் எஸ் வியின் முகத்தில் நிம்மதி படர்ந்தது
உடன் அவர் புருவங்களில் கேள்விக் குறியை கண்டு கொண்ட எம் ஜி ஆர் ஏழ்மையில் உள்ள என் கடைக்கோடி ரசிகனால் இது போன்ற விலையுயர்ந்த செட்டை வாங்க முடியாது
இது போன்ற மிகவும் விலை குறைந்த செட்களில் தான்பாடலை கேட்க முடியும் இதில் பாடலின் தன்மை குறைகிறதா என்று கணிக்கத்தான் இதில் பாடலை கேட்டேன் என்று விளக்கி தன் திருப்தியையும் விளங்கச் செய்தார்
நாடி ஜோசியம்
நாடி வைத்தியம்
கேட்டறிந்துள்ளேன் ஆனால் இந்த மனிதர்
ரசிகர்களின் நாடி பிடித்து அவர்களின் உணர்வுகளை துல்லியமாக கண்க்கிட்டதை அறிந்து
வியந்தபடி எம் எஸ் வி அவர்கள் அங்கிருந்து நகரந்தார் ..........
-
வெல்ல முடியாத*
சாதனைகளை வென்றவர்*...
தான் பொன்மனச்செம்மல்*
எம்.ஜி.ஆர் அவர்கள்.*
மக்கள் திலகம்*
வென்ற சாதனைகளை...
மாற்று நடிகர் வென்றதாக சரித்திரம் இல்லை...*
போட்டி என்றால் வெளி தியேட்டரில்*
வைத்து உமது படமா.....*
மக்கள் திலகத்தின் படமா.....
அதிக வசூல் பெற்றது என்பதை கணக்கெடுத்தால்*
சாந்தியை தவிர வேறு எங்கும் இந்நடிகரின் படங்கள் யாவும் தோல்வியைத் தான் தழுவி இருக்கும்.
வெற்றியின் சின்னம் எம்.ஜி.ஆர்! வசூலின் சின்னம் எம்.ஜி.ஆர் !
சாதனைகளின் சின்னம்*
எம்.ஜி.ஆர் !
நிரந்தர திரைப்படங்களின் சின்னம் எம்.ஜி.ஆர் !
தொடர் வெளியீடுகளின்*
சங்கமம் எம்.ஜி.ஆர் !
காலம் கடந்தும் சாதனை*
செய்வது எம்.ஜி.ஆர்!*
என்றும் எம்.ஜி.ஆர்*
திரையிலும் எம்.ஜி.ஆர்!*
வெள்ளித்திரையிலும்*
மக்கள் உள்ளத்திலும் சின்னத்திரையிலும்*
வாழும் ஒரே சின்னம்*
எம்.ஜி.ஆர்.
நூறு திரைப்படங்களில்*
ஒரே கருத்தை விதைத்த*
கோமான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் !
அவரே சிறந்த நடிகர்!*
தமிழகத்தை ஆண்ட முதல்வர்!*
மறைந்தும் மறையாமல் மக்களுடன் மக்களாக*
மனதில் வாழும்*
முதல்வர்* எம்.ஜி.ஆர்.!
மாமனிதர் எம்.ஜி.ஆர் !.
தொடரும் ............
-
எவரும் நெருங்க முடியாத வெற்றியாகும.
மக்கள் திலகத்தின் வெற்றி என்பது ஒரு வயலில் இருந்து இன்னொரு வயலுக்கு தண்ணீரை இறைத்து அடுத்தடுத்து வயல்களில் தண்ணீரை தேக்கிவைத்து பயிர்களை வளர விட்டு அறுவடை செய்வது போல் தான்.. மக்கள் திலகத்தின் திரைப்படங்களும் ஒரே ஏரியாவில் பல திரையரங்குகளில் மீண்டும் மீண்டும் திரையிடப்பட்டு*
வாரம் வாரம் ஒடி ஒடி...
மாதக்கணக்கில் ஒடி.......
ஆண்டு தோறும் ஒடி.....
பல ஆண்டுகள் கடந்தும் ஒடி....
பல திரையரங்குகள்*
கடந்தும்....*
பல வெற்றிகளை,*
படத்தின் வசூலை கொண்டும் இன்று வரை முதலிடத்தை*
தக்க வைத்துக் கொண்டு வருகிறது.
திரை உலக வரலாற்றில் மக்கள் திலகத்தின் பழைய திரைப்படங்களை கடந்த 50 ஆண்டு காலமாக வெற்றிநடை போட்டு வருகிறது.*
புரட்சிநடிகரின்* புதிய திரைப்படங்கள் வந்த நேரத்திலும்..... ஏற்கனவே அவர் நடித்த திரைப்படங்கள் வசூலைப் பெற்று வந்தது.*
அந்த சாதனை 1954 ஆம் ஆண்டு முதல் இன்று 2019 வரை .....
இன்னும் வெள்ளித்திரையில் வளர்ந்து வருகிறது ....
தொடர்ந்து திரையிடப்படுகிறது என்றால்,.......*
திரை உலக வரலாற்றில்*
மக்கள் திலகத்தின் காவியமே முதன்மை சாதனையாக..... சிகரமாக விளங்குகிறது..........
-
முதல் வெளியீட்டில் பல நடிகர்களின் கலர் படங்கள் ஆனாலும் சரி.....
*கருப்பு-வெள்ளை படங்கள் ஆனாலும் சரி*
முதல் வெளியீட்டில் 100 நாட்கள்*
175 நாட்கள் ஒடிய திரைப்படங்களின்**
முதல் வெளியீட்டை மற்றும் வைத்துக்கொண்டு*
ஆடும் ஆட்டம் மொத்தமாக* அடங்கிப் போய் விடுகிறது தொடர்ந்து வந்ததுமில்லை... தமிழகத்தில் திரையிட்ட வரலாறுமில்லை...
அப்படியே வந்தாலும்*
ஒரு சில படங்கள்.....
மற்ற நடிகர்களின் 100நாள்*
175 நாள் படங்களான பாவமன்னிப்பு, பாசமலர் கட்டபொம்மன்,*
பாகப்பிரிவினை
படிக்காத மேதை
கைகொடுத்த தெய்வம்
நவராத்திரி*
ப. பட்டணமா போன்ற
படங்கள் எல்லாம் பின்னாளில் எந்த ஒரு சாதனையையும்**
தமிழக திரையரங்குகளில் செய்தது கிடையாது. ஆனால் மக்கள் திலகத்தின் சாதாரண திரைப்படங்கள் கூட பின்னாளில் எத்தனையோ வெளியீடுகளை கணக்கிட முடியாத திரையரங்குகளில் வெளிவந்து பல விநியோகஸ்தர்களையும், திரையரங்கு உரிமையாளர்களையும்*
வாழ வைத்துள்ளது.
மக்கள் திலகத்தின் சாதாரண கருப்பு-வெள்ளை படங்களான நாடோடி , தனிப்பிறவி சந்திரோதயம், அன்னமிட்டகை*
ஒரு தாய் மக்கள், விவசாயி அரசகட்டளை, புதியபூமி
கணவன் போன்ற பல* திரைப்படங்கள் எல்லாம் பல வெளியீடுகளில் வெளிவந்து வெற்றிநடை போட்டு வசூலை*
வாரி கொடுத்துள்ளது..........
-
"எம்.ஜி.ஆர். அவர்களின் மூத்த சகோதரர் பெரியவர் சக்கரபாணி.
தம்பியை கலைத் துறைக்குத் தயார் செய்தவர்.
அ.தி.மு.க. துவங்கிய காலத்தில் அவரும் பல பொதுக் கூட்டங்களுக்குச் சென்றார்.
அ.தி.மு.க.விற்கு அரசியல் திருப்பு முனை ஏற்படுத்தியது திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல்தான். அதன் பிரச்சாரப் பணியிலும் பங்கு பெற்றார்.
மறைந்த பாலகுருவா ரெட்டியாரும், பரமனும்தான் அவரைப் பொதுக் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
தற்போது சென்னை லாயிட்ஸ் சாலையில் செயல்படும் அ.தி.மு.கழகத் தலைமைக் கட்டிடம் வி.என். ஜானகிக்குச் சொந்தம். அதனைக் கழகத்திற்காக எம்.ஜி.ஆர். எழுதி வாங்கினார்.
அந்தக் கட்டிடத்தின் பின் பகுதியில்தான் ஆரம் பத்தில் அண்ணா நாளேட்டின் அலுவலகமும் அச்சகமும் செயல்பட்டன.
அந்தக் கட்டிடத்திலிருந்து சில கட்டிடங்கள் தள்ளி எம்.ஜி. சக்கரபாணியின் இல்லம்.
ஒரு நாள் அவருடைய பணியாளர் வந்தார். அய்யா அழைக்கிறார் என்றார். 'அண்ணா’ அலுவலகத்திலிருந்து சென்றோம். தமது அருகிலிருந்தவர்களைப் பெரியவர் போகச் சொன்னார். எதிரே நாற்காலியில் அமரச் சொன்னார்.
'தம்பியிடம் நீங்கள் பேசவேண்டும்'
'ஏன்? உங்கள் மீது உங்கள் தம்பி மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். நீங்களே பேசலாமே?' என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.
'இந்த விஷயத்தை நான் பேச முடியாது. நீங்கள்தான் பேசவேண்டும்' என்றார்.
'சரி' என்றேன்..
சுற்றும் முற்றும் பார்த்தார். சற்று குரலை இறக்கி,
'என்னை கழகப் பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கச் சொல்லுங்கள்' என்றார்.
அப்போதைக்கு அவருடைய கோரிக்கை நியாயமானதாகத்தான் தெரிந்தது. தம்பியிடம் அண்ணன் இமாலய வரம் கேட்டு விட்டாரா?
சரி என கூறிவிட்டு விடைபெற்றேன். அறை வாசல்வரை வந்தார்.
'சோலை, தம்பி நல்ல மூடில் இருக்கும்போது பார்த்துப் பேசுங்கள்' என்றார். ஒரு வெண்கலச் சிரிப்பு.
கழகத்தில் அவர் மாநில அளவில் ஒரு பதவி கேட்கவில்லை.
செயலாளர் பதவி கேட்கவில்லை.
கழகத்தை மண்டலங்களாகப் பிரிக்கச் சொல்லவில்லை. அதில் தன்னை ஒரு மண்டலத்திற்கு அதிபதியாக நியமிக்கச் சொல்லவில்லை.
ஐநூறுக்கு மேற்பட்டோர் இடம் பெறும் மாநிலப் பொதுக்குழுவில் தன்னையும் ஒரு உறுப்பினராக நியமிக்கச் சொன்னார்.
அடுத்த சில தினங்களில் ஆற்காடு சாலை அலுவலகத்தில் எம்.ஜி.ஆரை சந்தித்தோம். உற்சாகத்தின் உச்சத்தில் இருந்தார். உரையாடலுக்கு நடுவே,
'பெரியவர் அழைத்தார்' என்றோம்.
'என்ன?'
'அவருக்கு ஒரு பெரிய ஆசை'
'என்ன?'
சற்றுத் தயங்கினேன். துணிச்சலை வரவழைத்துக்கொண்டு..
'அவரும் கழகப் பணி செய்ய விரும்புகிறார். அதற்கு அங்கீகாரமாக பொதுக்குழு உறுப்பினர் பதவி மீது அவருக்கு ஆர்வம்' என்றேன்.
அவரது பொன்மேனியில் நூறு மைல் வேக ரத்த ஓட்டம். முகம் சிவந்தது.
'இல்லை. அதாவது… வந்து…' என்று இழுத்தேன். அதற்கு மேல் நா அசையவில்லை. சத்தியாக்கிரகம் செய்தது.
'சும்மா இருக்கமாட்டீர்களா?' -கோபத்தோடு கேட்டார்.
நமக்கு சப்தநாடியும் தந்தி அடித்து அடங்கிவிட்டது.
எம்.ஜி.ஆருக்கு இயற்கை அளித்தது கொடுத்துச் சிவந்த கரங்கள். உண்மை.
ஆனால் உடன்பிறந்த அண்ணனை கழகப் பொதுக்குழுவில் ஒரு உறுப்பினராகக் கூட நியமிக்க மறுத்துவிட்டார்.
அண்ணனுக்குக் கனவில் பூத்த மலரும் கருகிப் போய்விட்டது.
'துரைக்கு ஒரு தகவல் சொல்லியிருக்கிறேன். கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.' என்றார் எம்ஜிஆர்.
நான் விடைபெறும்போது எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னார்.
துரை அ.தி.மு.கவின் தலைமைக் கழக நிர்வாகி. எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய விசுவாசி.
துரையும் நாமும் ஒரே கட்டிடத்தில் வெவ்வேறு பிரிவில் பணி செய்து கொண்டிருந்தோம்.
அடுத்த நாள் எம்மை துரையே அழைத்தார்.
"தலைவர் தங்களிடம் தனியாக ஒரு தகவல் சொல்லச் சொன்னார்' என்றார்.
ஏறிட்டுப் பார்த்தோம்.
'இனிமேல் பெரியவரை யாரும் பொதுக்கூட்டத்திற்கு அழைத்தால் அவருக்கு உடல்நிலை சரியில்லை' என்று தலைவர் சொல்லச் சொன்னார்.
'இது தங்களுக்கு மட்டும் தெரிந்த தகவலாக இருக்க வேண்டும் என்றும் தலைவர் சொல்லச் சொன்னார்' என்றார் துரை.
அடுத்த சில தினங்களில் எம்.ஜி.ஆர். அழைத்தார். நீண்ட கலந்துரையாடல். விடை பெறும்போது அவர் சொன்னார்.
'சோலை… நான் அரசியலில் இருக்கும்போது அவரும் இருக்க வேண்டுமா? உலகம் என்ன சொல்லும்? அண்ணனும் தம்பியும் சேர்ந்து கூத்தடிக்கிறார்கள் என்று சொல்லமாட்டார்களா?' என்றார்.
மெய்சிலிர்த்துப் போனோம். அவர் அரசியலில் அடியெடுத்து வைத்த பின்னர் மிகுந்த எச்சரிக்கையாக இருந்தார்.
அரசியல் சதுரங்கத்தில் நாம் ஒரு காய் நகர்த்தினால் எதிரி எப்படி காய் நகர்த்துவார் என்பதனை அவர் சிந்தித்தே ஒவ்வொரு முடிவையும் எடுத்தார்.
'அண்ணா விரும்பியிருந்தால் தனது வளர்ப்பு மகனை அரசியலில் அறிமுகம் செய்திருக்க முடியாதா? அந்தப் பையன்கள் உழைத்து முன்னேறுவது வேறு. திணிப்பது வேறு' என்று விளக்கம் தந்தார்.
அவரது துணைவியார் வி.என்.ஜானகி அரசியலிலிருந்து வெகுதூரம் விலகியே இருந்தார். நிர்வாகத்தில் தலையிட்டார், பரிந்துரை செய்தார் என்ற குற்றச் சாட்டே எழுந்ததில்லை.
அதே சமயத்தில் மதிக்கத் தெரிந்த இன்னொரு எம்.ஜி.ஆரையும் பார்த்தோம். அவர் முதல்வராகப் பதவியேற்றார். அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து அண்ணன் சக்கரபாணியிடம் ஆசிர்வாதம் வாங்க அனைத்து அமைச்சர்களுடன் வந்தார்!"
-எழுத்தாளர் சோலை.........
-
#தனித்துவம்
தமிழக சரித்திரத்தில் அழிக்க முடியாத ஒரு சக்தியாக பொன்மனச்செம்மல் இருந்துவருகிறார் என்பதை யாரும் மறுக்க இயலாது. அன்னாரின் புகழை மறைத்து ஒருவரும் ஆட்சிபீடம் ஏறிவிடவும் முடியாது. எங்களின் இதயதெய்வம் அவர்.
அவர் பூத உடல் நீத்து முப்பது
ஆண்டுகளுக்குப் பின்னும், இன்றும் தமிழகத்திலுள்ள குக்கிராமம் முதல் மாநகரம் வரைஎல்லாப் பகுதிகளிலும் தனக்கென ஒரு வாக்கு வங்கியை அவர் இன்னமும் தக்க வைத்துக்
கொண்டிருப்பது என்பது மிகப்பெரிய ஆச்சரியம்.
இரட்டைஇலைச் சின்னத்தில் நில்லாது வேறு எந்தச்சின்னத்தில் போட்டியிட்டாலும் தோற்பது உறுதி என்பதை நேற்று பிறந்த குழந்தை கூட அறியும்.
மூத்தவர்களுக்கு மரியாதை தருபவர். இது நமக்கு அரிச்சுவடி பாடமாகும்.
வேறு எந்த நடிகருக்கும்
இல்லாத அளவுக்கு, இன்னும் அவரது திரைப்படங்கள், பல நூறு தடவைகள்
திரையிடப்பட்ட பின்னும், ரசிகர்களின் ஆதரவைப் பெறுகின்றன என்றால் அதற்கு என்ன காரணம் என்பது விளக்கவே முடியாத புதிராகத்தான் இருக்கிறது.
நடிகனாக, அரசியல்வாதியாக எம்.ஜி.ஆர். தன்னை அடையாளம் காட்டிக் கொண்டதைவிட
ஒரு சமுதாய சிந்தனாவாதியாக, மனிதாபிமானமுள்ள மனிதனாக, தனிமனித நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் என்பதுதான் அவரது தனிச்சிறப்பு. "கலைவாணர்' என்.எஸ். கிருஷ்ணனின் அடிச்சுவட்டில், சமுதாயசிந்தனையுடன் தனது கலைப்பயணத்தையும், #மனித #நேயத்துடன் #தனது #தனிமனித
#வாழ்க்கையையும் #அமைத்துக் #கொண்டவர் #என்பதுதான் #எம்ஜிஆரின் #தனித்துவம்!
#பொன்மனச்செம்மலின் இன்னொரு பெருமைக்குரிய, சமுதாயத்துக்கு வழிகாட்டும் #அற்புதப்பண்பு எது என்று கேட்டால், #தெய்வத்தைக் #காணமுடியாத #மனிதப்பிறவிகளுக்கு #வாழும் #தெய்வமாகப் #பெற்றதாயையே #சுட்டிக்காட்டி, #ஏற்று
#வணங்கி, #அதன்மூலம் #மற்றவர்களையும் #தாயை #வணங்கிப் #போற்றவைத்தது எனலாம்...
அப்பேர்ப்பட்ட தெய்வத்தின் பக்தர்கள் நாம் என்பதில் பெருமை கொள்வோம்...............
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி* 28/07/20 அன்று அளித்த தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------------
பல்வேறு* *சமூக வலை தளங்களில் இன்றைக்கும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் பாடுவது குறித்து ,பரவலாக பேசப்பட்டு வருகிறது குறிப்பாக அவரது திரைப்பட பாடல்கள், திரைப்படங்களில் அவர்* தோன்றும் முக்கிய காட்சிகள்* ஆகிய* ஒவ்வொன்றும்* ஒரு பாடத்திட்டம் போல* மக்களுக்கு படிப்பினை,மற்றும் போதனைகள் தருவதாக உள்ளன என்று விளக்கிக் கொண்டே இருக்கிறார்கள் .இப்படிப்பட்ட விளக்கங்களோடு அவரது வாழ்க்கை எப்படி நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கின்றது என்று ரசித்து, ரசித்து, பலரும் தகவல்களை* இந்த சகாப்தம் நிகழ்ச்சிக்கு**பரிமாறிக் கொள்கிறார்கள் . தொடர்ந்து எம்.ஜி.ஆர். அவர்களின் தேசிய பயணம் எப்படி இருந்தது என்பதை இந்த அத்தியாயத்தில் பார்ப்போம் .
ராணுவத்தில் சேருவது என்று ஒரு கட்டத்தில் முடிவு எடுத்து இருந்தார் . அதற்காக உடல் கட்டு மஸ்தானாக இருக்க ,உடற்பயிற்சி அவசியம் என்று கருதி தினசரி செய்து வந்தார் .ராணுவத்தில் சேர்வதற்காக எல்லாவிதமான பயிற்சிகளையும் முறையாக கையாண்டார் .* ஆங்கிலம் கற்று கொள்ள தனி ஆசிரியர் வைத்திருந்தார் .ஏனென்றால் ஒருவேளை சினிமா உலகம் தனக்கு போதிய ஆதரவு தரவில்லை என்று ஒரு நிலை வந்தால் , ராணுவம் கை கொடுக்கும். அதன் மூலம் குடும்பத்திற்கு வருமானம் கிடைக்கும் . உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம், தேசப்பற்று,நாட்டுப்பற்றுடன் ஒரு பணியில் ஈடுபட்ட திருப்தி ஏற்படும் என்று நினைத்து ,குடும்பத்தினருக்கு கூட தெரியாமல் ரகசியமாக ராணுவத்தில் சேருவதுஎன்ற நோக்கத்தில் பல பயிற்சிகளை எடுத்துக் கொண்டு* அதற்கான உகந்த நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தார் .
தேசிய அரசியலில் , தேசப்பற்றில் எந்த அளவிற்கு நாட்டம் வைத்திருந்தார் என்றால் நாலணா ( 25 பைசா ) விற்கு காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு உறுப்பினர் படிவம் வாங்கி , பூர்த்தி செய்து, கையொப்பம் இட்டு கட்சியில் சேர்ந்தார் .* காந்தீயத்தின் மீது இருந்த மிகுந்த ஈடுபாடே இதற்கு காரணம் .மகாத்மா காந்தி அவர்கள் ஒருமுறை காரைக்குடிக்கு விஜயம் செய்தார் .அவரது வருகையை அறிந்த எம்.ஜி.ஆர். ,அவரை தரிசிப்பதே தனது பாக்கியம் என கருதி ,ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தின் மத்தியில் கூட்டத்தோடு கூட்டமாய் சென்று தரிசித்தார் . அந்த அளவிற்கு காந்தியின் மீது அளவற்ற மரியாதை, பற்றுதல் , நேசம் ஆகியன இருந்தன . அதனால்தான் அவரது பூஜை அறையில் தன் தாயாருக்கு அருகில் காந்தியின் படத்தையும்* வைத்து வழிபட்டு*உள்ளார் என்பதை பல மேடைகளில் எம்.ஜி.ஆர். பேசியுள்ளார் . அந்த காலம் முதல் தன்* இறுதி கால படங்கள் வரையில் பாடல் காட்சியிலோ, அல்லது வேறு ஏதாவது வசன காட்சியிலோ* தவறாமல் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம் பெறுவதை வழிவழியாக கடைபிடித்து வந்தார் எம்.ஜி.ஆர். தனது தேசப்பற்றை*விளக்கும் வகையில் நம் நாடு திரைப்படத்தில் , வாங்கய்யா வாத்தியாரய்யா பாடலில் தியாகிகளான தலைவர்களாலே சுதந்திரம் என்பதை அடைந்தோமே*ஒரு சிலர் மட்டும் அனுபவிக்காமல் பலருக்கும் பயன்பட செய்தோமே*என்று பாடி உணர்த்தியிருப்பார் .
தேசத்தின் சுதந்திரம், விடுதலை வேட்கையை பற்றி பல படங்களில் காட்சிகளில் நடித்து தன் பற்றுதலை தெரிவித்து இருப்பார் . தான் கடைசியாக நடித்த மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தில் தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை, தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம் ,ஒற்றுமையால் பகைவரை ஓடவைப்போம் , உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம் என்று உணர்ச்சி பொங்க பாடி அசத்தியிருப்பார் .* வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்*பல படங்களில், பல காட்சிகளில் , தேசபக்திக்கும், தேச பற்றுதலுக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் காட்சிகள் அமையும்படி பார்த்துக் கொண்டார் .*ஒருமுறை முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் ,சீனாவிற்கு எதிராக போர் தொடுக்கும் நிலையில் நாட்டில் நிதி பற்றாக்குறை உள்ளதாகவம்,*தாராள மனப்பான்மை உள்ளவர்கள் தங்களால் இயன்ற அளவில் நிதி தருமாறு*கேட்டு கொண்டவுடன் , மனிதநேய மிக்க முதல் மனிதனாக 1962ல்* ரூ.75,000/-நிதி தருவதாகவும் , முதல் தவணையாக ரூ.25,000/- க்கான காசோலையை*அன்றைய தமிழக முதல்வர் காமராஜ் அவர்களிடம் அளித்தார்* எம்.ஜி.ஆர்.*என்பது நாடறிந்த உண்மை. அந்த அளவிற்கு தேசப்பற்று மிக்கவராக திகழ்ந்தார்
சினிமா*வாய்ப்புக்காக ஒவ்வொரு ஸ்டுடியோவிற்கும் தேடி அலைந்த காலத்தில்*கதர்*வேட்டியும்* கதர்* ஜிப்பாவும்* உள்**பனியனும், இடுப்பில்*ஒரு பெல்ட்டும் ,கழுத்தில்*ருத்திராட்ச மாலையும்*அணிந்திருப்பார் . இதுதான்*அப்போதைய எம்.ஜி.ஆரின்*அடையாளம் .* சினிமாவில் சுமார்*15 படங்களில் சிறு*வேடங்கள்*துணை வேடங்கள்* ஏற்று நடித்தும்*, ஒரு அங்கீகாரம் , ஒரு நிலையான இடம்*இல்லாமல் தவிக்கும் நிலையிலும் அவரது*தாயார் திருமண*ஏற்பாடுகளை துரிதமாக செய்து வந்தார் .* கேரளாவில் ஒரு ஊரில்*பெண் பார்த்து நிச்சயம் செய்துவிட்டு*எம்.ஜி.ஆரை*அவசியம் உடனே வர வேண்டும் என்று அன்பு கட்டளை*இடுகிறார் .* இது ஒரு காந்தீய*திருமணம் . காரணம்*எம்.ஜி.ஆர். ஒரு நிபந்தனையுடன் கலந்து கொள்கிறார் . அதாவது நான் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணியமாட்டேன் . கதர் வேட்டியும்*, கதர் சட்டை அணிந்துதான் வருவேன் .*நம் குடும்பத்தினரில் தாய், அண்ணன் சக்கரபாணி, அண்ணியார் ,உறவினரில் மாமா ஒருவர்** தவிர வேறு யாரும்*பங்கேற்க கூடாது .திருமணம் மிக எளிமையாக நடக்க வேண்டி விரும்பினார் .அதே*போல கதர் வேட்டி* கதர்* சட்டை* அணிந்துதான் திருமணத்தில் பங்கேற்றார் . இதன் மூலம் காந்தீயத்தின் மீதும், தேசத்தின்*மீதும்*எவ்வளவு பற்றுடன் எம்.ஜி.ஆர். இருந்துள்ளார் என்பதை*நாம் அறிந்து கொள்ளலாம் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில்*பார்க்கலாம்*
நிகழ்ச்சியில் ஒலித்த*பாடல்கள்*/ காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.தாயகத்தின் சுதந்திரமே* - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்*
2.கல்லூரி மாணவிகளுடன் எம்.ஜி.ஆர்.**பேசும்*காட்சி*-பல்லாண்டு வாழ்க*
3.புத்தன்*இயேசு, காந்தி*பிறந்தது*- சந்திரோதயம்*
4.வாங்கய்யா* வாத்தியாரய்யா* - நம் நாடு*
5.அதோ அந்த பறவை போல வாழவேண்டும்*-ஆயிரத்தில் ஒருவன்*
6.தாயில்லாமல் நானில்லை* - அடிமைப்பெண்**
*.*