April 29th (பகுதி 1)
_________________
உமாவின் வாதங்களுக்கு அஷோக் செவி சாய்க்கிறான்.
பதிலொன்றும் சிக்காததால், "சரி" என்று ஒப்புக்கொள்கிறான்.Quote:
உனக்கு கல்லூரி படிப்பு தேவைப்பட்டதா ?
இல்லை.
சூட்டும் கோட்டும் பூணூல் விழாவின் பின்பு யாருக்காக போட்டுக்கொண்டாய் ?
மௌனம்.
இன்றைக்கு மருத்துவரிடம் செல்ல ஏன் மறுக்கிறாய். உன் பெற்றோருக்காக செய்யக்கூடாதா? யாருக்காக/எதற்காக பயம்?
பயம் இல்லை.
பின் ஏன் செல்ல மறுக்கிறாய்?மற்றோரும் உன்னைப் பற்றி தெரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு அல்லவா?
இதையறிந்த பாகவதர் "வினாச காலே விபரீத புத்தி" என வருத்தப்படுகிறார். அதாவது ஒருவனுக்கு கேடு காலம் நெருங்கும் போது புத்தி அதற்கேற்றாற் போல் புரளும். சீதா லக்ஷ்மியின் அவதாரம். அவளுக்கு பொன்மானைக் கண்டு மயக்கம் ஏன் வரவேண்டும். இராமனோ பகவானின் ஸ்வருபம். அவருக்கு தெரியாதா "பொன்மான் என்பதே படைப்பின் அபத்தம்" என்று. எதைத் துரத்திக் கொண்டு ஓடினார்? அதுதான் விதி. வல்லது. கேடு நேரிடவேண்டிய நேரத்தில் புத்தி மழுங்கிப் போகிறது என்பதற்கு அவதாரங்களே சாட்சி. பின் நாமெல்லாம் எம்மாத்திரம்!
மார்கபந்து என்ற மருத்துவரிடம் அஷோக் பரிசீலனைக்கு செல்கிறான். மருத்துவரிடம் செல்வதற்கு முன் சட்டென பொறிதட்டி "Power of NOW" என்ற புத்தகத்தை எடுத்துச் செல்கிறான்.
( பி.கு: 29th april பகுதியை இரண்டாக பிரித்திருக்கிறேன். மருத்துவரிடம் அஷோக் உரையாடுவதை தனியான சிறு பகுதியாய் எழுத நினைத்ததால் இரு பகுதிகள் )
( அடுத்து பகுதி 2 )