Deleted-
Printable View
Deleted-
கார்த்திக் சார்,
வாழ்த்துக்கள். எங்களுக்கு inspiration ஆக அமைந்த நீங்கள் இந்த மாதிரி ஏனோ தானோ என்றா லேண்ட்மார்க் பதிவை இடுவது? நம் திரியில் முத்திரை பதிவாகியிருக்க வேண்டாமா?
ஞான ஒளி(தொடர்ச்சி)
இந்த படம் வெளிவரும் போது நடிகர்திலகம் மாநகரம்,நகரம்,பேரூர்,சிற்றூர்,கிராமம்,குக்கிர ாமம் அனைத்திலும் முடிசூடா மன்னன். வசூல் சக்கர வர்த்தி. சூப்பர் ஸ்டார். அதனால் இரும்பு திரை, தெய்வ பிறவி காலம் போல doing justice to the role என்று சென்று விட முடியாது. ஒரு பாத்திரத்தை உள்வாங்கி,அதன் செயல்பாடுகள் தன்மைகளை நிர்ணயித்து ,வெளியீட்டு முறையில் பாத்திரத்தின் தன்மையும் வேறு படாமல் scene stealing ,scene capturing gestures ,ஸ்டைல்,எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சில antics எல்லாவற்றையும் கலந்து கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வசீகரித்து ஈர்த்தே ஆக வேண்டும்.படம் classic வகை என்றால் அந்த class maintain பண்ண பட்டே ஆக வேண்டும். இந்த ரசவாதம் ஞான ஒளியில் நிகழ்ந்தது.
இடைவேளைக்கு பிறகு திரைக்கதை cat -mouse cold war ,ரசிகர்களை கட்டி வைத்து,அந்த பாத்திர தன்மைகள் நீர்க்காமலும் பார்த்து கொண்ட அதிசயமும் நிகழ்ந்தது.
நடிகர்திலகம் அழகு, ஈர்ப்பு,ஆண்மை,கம்பீரம்,காந்த பார்வையுடன் கச்சிதமான உடலமைப்பு கொண்டு ரசிகர்களை கட்டி போட்ட காலகட்டம். இந்த படத்தில் இளைஞனாக half pant ,ஒரு கண்ணிழந்த நடுத்தர வயது, முதிய வயது கனவான் அனைத்து தோற்றங்களிலும் அவ்வளவு வசீகரம் இந்த திராவிட மன்மதனிடம். இப்போது கூட ராகவேந்தர் போட்ட படங்களை கிட்டத்தட்ட அரை மணி வைத்த கண் வாங்காமல் ரசித்தேன்.உலகிலேயே மிக சிறந்த ஆண்மகனாக ஒரு தமிழன் இருந்ததில் எனக்கு பெருமையே.
நடிகர்திலகத்தின் பிரத்யேக திறமைகளை கொண்டு வரும் படி அமைந்த படங்களுள் ஒன்று ஞான ஒளி. உதாரணம் மனைவி இறந்த செய்தி தெரியாமல் அவர் சவ பெட்டி செய்வதில் மும்முரமாக , பாதிரி படிப்படியாக ஏழு கேள்விகளில் முழு விஷயம் விளங்கும் படி செய்வார்.முதல் நிலை சந்தோசம் (குழந்தை பிறந்ததில்),இரண்டாவது குறை(தான் அருகில் இல்லாதது),மூன்றாவது மனைவியின் உடல் நிலை பற்றி சிறிய சந்தேகம், நான்காவது ஏதோ நடந்து விட்டதோ என்ற குழப்பம், ஐந்தாவதில் பாதிரி ஏதோ மறைக்கிறார் என்ற ஐயம் கலந்த வருத்தம், ஆறாவது நிலை நடந்ததை ஜீரணித்து உள்வாங்கும் பிரமையான நிலை, ஏழாவது துக்கத்தை உணர்ந்து கலங்கும் துடிக்கும் நிலை .இவையில் மற்ற நடிகர்களால் முதல், இறுதி ஆகியவற்றுக்குத்தான் முகபாவம் காட்டியிருக்க முடியுமே தவிர படி படியாக குறுகிய தொடர்ச்சியான கால நிலையில் ஏழு வித துரித மாற்ற பாவங்கள்!!!! குறித்து கொள்ளுங்கள்- கடவுள் தானே பூமிக்கு வந்து முயன்றாலும் முடியாது.
அந்தோணியின் rawness அந்த காதல் காட்சிகளிலேயே பளிச்சிடும். முதலிரவில் explicit ஆக திரும்பி நிற்க சொல்லி ரசிப்பது அந்த பாத்திரத்தின் ஆதார குணங்களுடன் இணைந்த காம வெளியீடு.சிறு சிறு வெளியீடுகளில் பின்னுவார். ராணியை திட்டி கொண்டே தொடர்ந்து வரும் போது,சர்ச்சுக்கு வருபவர் ஒருவருக்கு மிகையான சால்ஜாப்பு சலாம் போடுவதை சொல்லலாம்.
நான் பார்த்த உக்கிர ஆக்ரோஷ காட்சிகளில் காவல் தெய்வத்திற்கு அடுத்து இந்த படம்தான். கட்டு படுத்த படும் போது எட்றா என்று பாய யத்தனிப்புடன், கடைசியில் எதையும் ஏற்க முடியாத இயலாமையில் வாழைகளை வெட்டி சாய்க்கும் உக்கிரத்திற்கு இணையானதை இந்திய திரை கண்டதில்லை.
பாதிரி இறந்து கிடக்கும் வேளையிலும் , தப்பி போக முயலும் தன்னிடம் நண்பன் துப்பாக்கி நீட்டும் போது, நான்தான் குண்டை எடுத்துட்டேனே என்று குதூகல மனநிலையில் பேசும் கட்டம் இந்த பாத்திரத்தின் idiosynchrasy மனநிலையும் காட்டி ரசிகர்களையும் வசீகரிக்க முடியும் என்பதற்கு உதாரணம். தன்னிடம் இவ்வளவு உரிமையும் அக்கறையும் மிகுந்த நண்பனுக்கு ,தான் தப்பி சென்று இழைத்த துரோகத்தை பற்றிய சிறு மனசாட்சி தொந்தரவு கூட இன்றி, தன்னை திரும்ப பிடிக்க அலைவதில்,இறந்து விட்டதை நினைத்த மகளை உயிரோடு கண்டும் பேச முடியாத நிலைக்கு தன்னிரக்கம் கொண்டு, முடிந்தால் பிடித்து பார் என்ற சவாலை விட்டு சிறு சிறு தற்காலிக வெற்றிகளையும் explicit ஆகவே மகிழ்ந்து ரசிப்பார்.
இந்த மனநிலை நான் முன்னர் குறிப்பிட்ட mixed maturity கொண்ட idiosynchrasy வகை பட்டது.நடிகர்திலகம் நண்பனின் சந்திப்பு காட்சிகளில் ரசிகர்களை குதிக்க வைப்பார். சாத்துக்குடி பிழியும் காட்சியில் ,திடீரென்று எதிர்பாராமல் கண்ணாடியை உருவுவதில்,கணநேர கோபம் கலந்த ஆச்சர்யத்தை மீறி ,ஒரு விளையாட்டு தனத்துடன் தனது பார்வை திறனை வெளிபடுத்துவதாகட்டும்,ரேகைக்காக டம்ளர் மறைக்கும் நண்பனுடன் அதை குத்தி கையுறையை கழற்றும் காட்சிகள் பாத்திர தன்மை கெடாமல் சுவாரஸ்யம் கூட்டுவதற்கு உதாரணங்கள். லாரென்ஸ் தன்னை வெளியேற விடாமல் trap பண்ணி விட அவர் பேசும் monologue ஒரு வேதனை கூடிய விரக்தி,மிஞ்சி நிற்கும் சவடால் தன்மை, ஒரு uneasy sensation (நம்பிக்கை குலைவு), அத்தனையும் வெளிப்படும் உரத்து. ஆனால் அதனிடையிலும் அந்த பாத்திரம் அத்தனை தீவிரத்தின் நடுவிலும் சொல்லும் நல்ல வேளை பாதர் நீங்க இப்ப உயிரோட இல்லை .....
மகள் தேடி வந்த பரபரப்பில் மேரி என்று excite ஆகி தன்னிலை உணர்ந்து சாதாரணமாய் மேரி என்று மாற்றும் தன்மை,தன் மகளிடம் அடைந்த ஏமாற்றத்தை சொல்லி,அவளை குத்தி விட்டோமோ என்று ஆறுதல் படுத்தும் இடம், அவசர அவசரமாய் இருப்பதையெல்லாம் அள்ளி எடுத்து fridge கதவை உதைத்து சாத்தும் இன்ப அலைவு,தன்னுடைய பேத்திககாவது எல்லாம் சிறப்பாக செய்ய விழையும் தொண்டை அடைக்க கமரும் வசன வெளிப்பாடு,வேண்டாம்மா வயசாயிடுச்சு என்ற இனியும் ஓடி அலைய முடியாத விரக்தி வெளிப்பாடு என்று மகளை சந்திக்கும் கட்டத்தில் நடிகர்திலகம் விஸ்வரூபம் எடுப்பார்.
இந்த படத்தை பற்றி இன்னும் எவ்வளவோ எழுத கைகள் துடித்து கொண்டே உள்ளது. பிறகு ஒரு நாள் ஒவ்வொரு கணம்,காட்சியையும் விளக்கி எழுதுவேன் என்று உறுதி தந்து இப்போது விடை பெறுகிறேன்.
அருமை மிக மிக அருமையான விவரிப்பு மீண்டும் ஞானஒளி படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல். நன்றி கோபால் சார். எப்படித்தான் நுணுக்கமாக அலச முடிகிறதோ? வியப்பில் இருக்கிறேன்.
கார்த்திக் சார்
2000 பதிவுகள் கடந்த தங்களுக்கு என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். மென்மேலும் பல சாதனைகளை இது போல் தாங்கள் புரிய வேண்டும்.
http://i1146.photobucket.com/albums/...ps82e1ca2e.jpg
கோபால்,
ஞான ஒளி அந்தோனி அருண் கதாப்பாத்திரங்கள் பற்றிய ஒரு அலசலை மனோதத்துவ பின்புலத்தில் அமைத்து தொடக்கம் முதல் இறுதி வரை அது எப்படி manifest ஆகிறது என்பதை நீங்கள் விவரித்த விதம் மிக அற்புதமாகவே அமைந்திருகிறது. இந்த திரியின் வலிமையான பதிவாளராக உருவெடுத்துள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள். வாசு மிக மிக ஆனந்தம் அடைந்திருப்பார் என நினைக்கிறேன்.
அடுத்து ராஜநீதி படைக்கப் போகும் மூக்கையாவை வரவேற்க காத்திருக்கிறோம்.
அன்புடன்
2000 ஆவது பதிவைக் கடந்திருக்கும் திரு.கார்த்திக் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கார்த்திக் சார்,
முன்னூறு பதிவை தாண்ட விட மாட்டேன்கிறார்கள். 2000 கண்ட உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
எனது 2000 பதிவுக்கு வாழ்த்துக்களை அள்ளி வழங்கிய அன்புச்சகோதரர்கள் கோபால் சார், ராகவேந்தர் சார், வினோத் சார், ராமஜெயம் சார், சந்திரசேகர் சார் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.
அருமையான டிசைன் வடிவமைத்த ராகவேந்தர் சார், வினோத் சார் ஆகியோருக்கு மிக்க நன்றி. உண்மையில் வினோத் அவர்களின் வாழ்த்துக்களை காணும்வரை இது என் நினைவுக்கே வரவில்லை. அதனால்தான் சிறப்புப்பதிவு எதையும் இடவில்லை. (அப்படியே இட்டிருந்தாலும், அது கோபால் சாரின் 'ஞான ஒளி' சுனாமியில் அடித்துச்செல்லப் பட்டிருக்கும். மனிதர் என்னமாய் எழுதுகிறார்...!!!!!!!!!!!) .
எல்லோரும் மிகக்குறுகிய காலத்தில் பல ஆயிரம் பதிவுகளை சர்வ சாதாரணமாக கடந்து செல்லும்போது, 2005-ல் திரியில் நுழைந்த நான் இப்போதுதான் 2000-த்தை தொட்டிருப்பது எந்த சிறப்பும் இல்லாத ஒன்று என்றே கருதுகிறேன்.
இந்த தருணத்தில் திரு. சிலோன் மனோகர் தெரிவித்த கருத்துதான் என் நினைவுக்கு வருகிறது. ஒருமுறை மேடையொன்றில், நிகழ்ச்சித்தொகுப்பாளர் ஒருவர் சிலோன் மனோகரிடம் அவருக்கு புகழைத்தந்த 'சுராங்கனி', 'சின்னமாமியே' பாடல்களை பாடுமாறு கேட்டபோது, மனோகர் "எல்லா பாடகர்களும் 40 ஆயிரம், 50 ஆயிரம் பாடல்கள் பாடியிருக்க, நீ 40 ஆண்டுகளாக நாலே பாடல்களை வைத்துக்கொண்டு வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிராயே என்று கேட்பது போலுள்ளது" என்று பதிலளித்தார். என் நிலையும் இப்போது அதுதான்.
வாழ்த்திய இதயங்களுக்கு நன்றி....
அன்புள்ள கல்நாயக் சார்,
என் நன்றிப்பதிவை இட்ட பிறகுதான் தங்கள் வாழ்த்துப் பதிவை கண்ணுற்றேன். மிக்க நன்றி.
நண்பர்களுக்கு....
இம்மாதிரி குறிப்பிட்ட எண்ணிக்கையை தொட்டதற்காக பதியப்படும் வாழ்த்துக்களை Moderators முன்னொருமுறை கண்டனம் செய்திருப்பதால் மற்றவர்கள் தவிர்க்க வேண்டுகிறேன்....
அன்புள்ள கோபால் சார்,
ஞானஒளி திரைக்காவியம் பற்றி ஒவ்வொரு முறையும் வாசுதேவன் அவர்களும் முரளி அவர்களும் எழுவதைப் படித்த பின்னர் ஞானஒளி படத்தை நான் பார்ப்பது வழக்கம். காரணம் ஒவ்வொரு முறை புதிய கண்ணோட்டத்தோடு பார்க்கும்போது அதுவரை பார்த்திராத, அறிந்திராத, உணர்ந்திராத விஷயங்கள் தென்படும்.
ஏனென்றால் ஞானஒளி ஒரு ஆராய்ச்சிப் புதையல்.
இப்போது உங்கள் ஆய்வைப் படித்தபின், இன்று இரவு ஞானஒளியை பார்க்கும்போது நிச்சயம் வேறொரு கோணத்தில் அப்படத்தைப் பார்க்கப்போகிறேன் (பார்க்கப்போகிறோம், என் மனைவியையும் சேர்த்து, அவளுக்கு மிகவும் பிடித்த திரைப்படம், தெய்வ மகனை அடுத்து).
தங்கள் அற்புத ஆராய்ச்சிக் கட்டுரையை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. தங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்காகவேனும் நான் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆகியே தீரவேண்டும்.....
கோபால் சார்!
என்னவென்று சொல்ல! என் அபிமான 'ஞான ஒளி' பற்றி எழுதி என் நாடி நரம்புகளை முறுக்கேற்றி விட்டீர்கள். பொதுவாகவே ஆய்வுகளில் பின்னி எடுப்பீர்கள். ஆனால் இதை எனக்காக இன்னும் ஸ்பெஷலாய் வடிவமைத்து விட்டீர்கள். வீட்டில் நிறைய வேலைப் பளு. அத்தனையையும் விட்டு விட்டு ஒளிக்காக ஓடி வந்து விட்டேன். தங்கள் அற்புத ஆய்வு, பாத்திரங்களை அலசிய தன்மை, குறிப்பாக நம் ஆண்டவரின் அட்டகாசங்களை அழகாய் தொகுத்து ஒளிக்கு மேலும் ஒளி சேர்த்ததற்கு நன்றி! முரளி சார் சொன்னது போல பெருமகிழ்ச்சி எனக்கு.
என் வாழ்க்கையிலேயே மிக அதிக சந்தோஷமும், மிக அதிக சோகமும் ஒரு சேர அனுபவிக்கும் ஒரே காவியம் எனக்கு 'ஞான ஒளி' மட்டுமே. அதிக சந்தோஷம் அடைவது தலைவரை அணு அணுவைப் பார்த்து பார்த்து ரசிக்கும்போது. அதிக துக்கம் ஏற்படுவது இந்த பாழாய்ப் போன, வாழ்வில் சந்தோஷமே அறியாத பாவப்பட்ட என் ஆண்டனியையும், அருணையும் பார்க்கும் போது. எவ்வளவோ அதிசயப் படங்கள் இருந்தாலும் என் வரைக்கும் ஒளியின் ஓரம் கூட ஒரு படமும் வரமுடியாது. மறுபடியும் சொல்கிறேன். என் வரைக்கும். இனி என் பங்குக்கு கொஞ்சம்.
அனைத்து நண்பர்களுக்கும் என் வணக்கங்கள்.
அருணும் அந்தோணியும் எங்கள் சகோதரரை அன்புச் சங்கிலியால் இழுத்து வந்து விட்டார்கள். இருவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி.
வாசு சார், தொடருங்கள்... தங்கள் பங்களிப்பை...
சமீபத்தில் சில நாட்களுக்கு முன்னர் நடிகர் திலகத்தின் காலத்தை வென்ற காவியமாம் வசந்த மாளிகை திருப்பூரில் திரையிடப் பட்டு மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளதாகவும், ஒரு நாள் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு காட்சி நடைபெற்றதாகவும் அந்த வேளையிலும் அரங்கு நிறைவு கண்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. திருப்பூர் வட்டார நண்பர்கள் இங்கு இருந்தால் இச்செய்தியினை உறுதிப் படுத்திக் கொள்ளலாம்.
தமிழகத்தின் பிரபலமான நாளிதழ் ஒன்றில் நடிகர் திலகத்தைப் பற்றிய தொடர் ஒன்று வாரா வாரம் வெளிவர உள்ளது. விவரங்கள் மிக விரைவில்.
என் தெய்வம் வழங்கிய
'ஞான ஒளி'
http://i1098.photobucket.com/albums/...naOli00001.jpg
முக்காலமும் உணர்ந்த ஞான நடிகரின் 'ஞான ஒளியை' கதையை மூன்று பகுதிகளாகப் பிரிப்போம். மூன்றும் வெவ்வேறு பரிணாமங்களைக் கொண்டவை. மூன்று பகுதிகளிலும் ஏகபோகச் சக்கரவர்த்தி நம் அன்பு நாயகர்தான். "அவனன்றி ஓர் அணுவும் அசையாது" என்பார்கள். அது உண்மையோ பொய்யோ! ஆனால் ஆண்டனி இன்றி வாசுதேவன் உயிர் அசையாது. அருணின்றி அவன் அக, புற வாழ்க்கை இனிக்காது. இப்போது ஞாலத்துக்கே நடிப்பொளி வழங்கிய நாயகன் வாழ்ந்த 'ஞான ஒளி'யின் கதை. (இணையத்து இளைஞர்களுக்காகவும், என்னுடன் இணைந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்காகவும்)
முதல் பகுதியாக (அப்பாவி இளைஞன் ஆண்டனி)
http://i1087.photobucket.com/albums/..._000810601.jpg
http://i1087.photobucket.com/albums/..._001093592.jpg
ஆண்டனி என்ற அனாதை முரட்டு இளைஞன் "பூண்டி' என்ற கிராமத்து மாதா கோவிலில் மணியடித்து, சவப்பெட்டி செய்தல், கல்லறை வெட்டுதல் போன்ற சிறு தொழில்கள் செய்து, தன்னை எடுத்து வளர்த்த பாதிரியாரின் மேல் கொண்ட கண்மூடித்தனமான அன்பு வெறியை வெளிப்படுத்தி, விளையாட்டுப் பிள்ளையாய் கவலை இன்னதென்று அறியாமல் சிறு சிறு அடிதடி கேஸ்களில் (நியாயமான விஷயங்களுக்காக) சிக்கி, பாதிரியாரால் அடிக்கடி ஜாமீன் எடுக்கப்பட்டு, தன் குணத்தையொத்த ஒரு பெண்ணை அவளை சீண்டியபடியே காதலித்து, பாதிரியாரின் ஆசியால் அவளை மணமும் புரிந்து, இனிமையான இல்லற வாழ்க்கையில் அவளும் கர்ப்பமுற்று, ஒரு அழகான பெண் குழந்தையை இவனுக்குத் தந்து, பிரசவத்தின் போதே அந்தப் பேதை உயிர் துறக்க, அனாதையான ஆண்டனி எப்படி அவளால் சொந்தம் ஏற்பட்டு குடும்பம், சொந்தம் என்று ஆனானோ அவளே போய்விட்ட பிறகு மீண்டும் அனாதையாகி அவள் பெற்றுத் தந்த செல்வத்தைப் பாதுகாக்க தந்தை என்ற ஸ்தானத்திற்கு சொந்தக்காரனாகிறான். இப்போது அவன் அனாதை இல்லை.
இரண்டாவது பகுதியாக (பாசமுள்ள முரட்டுத் தந்தை)
http://i1087.photobucket.com/albums/..._001226725.jpg
http://i1087.photobucket.com/albums/..._001829744.jpg
தன்னுடைய கிராமத்தில் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, அனாதை விடுதி கட்ட வேண்டும் என்ற இயலாமை ஆசையிலே வாழும் பாதிரியார். அதற்காகவே அருமை மகளை அரும்பாடுபட்டு படிக்க வைக்கும் ஆண்டனி. பாதிரியாரால் வளர்க்கப்பட்ட இன்னொரு அனாதை சிறுவன் சிறு வயது ஆண்டனியின் நெருங்கிய நண்பன் லாரன்ஸ்... இப்போது படித்து வளர்ந்து அதே ஊரிலேயே இன்ஸ்பெக்டர். நண்பர்கள் இருவரும் நீள் பிரிவிற்குப் பின் சந்தித்து அடயாளம் கண்டு, பழைய நட்பை நினைவு கூர்ந்து, மீண்டும் நெருங்கிய நட்பு கொள்கிறார்கள்..
படிப்பின் போது கயவன் ஒருவனை காதலித்து லீவில் ஊருக்கு திரும்பும் மகள் மேரி ஒரு இடிமழை இரவில் சொந்த ஊரிலேயே அவனிடம் சோரம் போகிறாள். மகளைக் காட்ட நண்பன் லாரன்ஸை ஆசையுடன் தன் வீட்டுக்கு அழைத்து வரும் ஆண்டனி மகள் நாசமாவதை நேரே கண்டு விடுகிறான். கொதிப்பும், ஆங்காரமும், அதிகோபமும் அடைகிறான். பொங்கு கடலாய்க் கொந்தளிக்கிறான். லாரன்ஸ் நண்பனின் கோபத்தைக் கட்டுப் படுத்தி. மேரிக்கு அங்கேயே அவள் காதலனுடன் மோதிரம் மாற்றி மணமுடித்து வைக்கிறான். தன் வாழ்க்கையையே ஒரு வினாடியில் வெட்டிச் சாய்த்த மகளின் செய்கையில் கொந்தளித்து தன்னுடைய தோட்டத்து வாழைகளை வெட்டி சாய்த்து வெறிதீர்க்க முயன்று தோற்கிறான் ஆண்டனி.
http://i1087.photobucket.com/albums/..._003018598.jpg
பாதிரிக்கு விஷயம் போக, முறைப்படி இருவருக்கும் கல்யாணம் செய்து வைப்பதுதான் ஒரே வழி என்று சொல்ல, மான, அவமானத்திற்கு பயந்து, மேரி காதலித்த பையனை தேடிச் செல்லும் ஆண்டனி அவன் ஒரு நயவஞ்சகன்... பெண்களை ஏமாற்றும் காமாந்தகன் என்று தெரிந்து கொள்கிறான். இருந்தாலும் அவனைத் தேடிக் கண்டு பிடித்து தன் மகளுக்கு வாழ்வு தரச் சொல்லி மன்றாடுகிறான். அவன் காலைப் பிடித்துக் கதறுகிறான். ஆனால் அந்த நயவஞ்சகனோ கல்யாணத்துக்கு மறுத்துவிடுவதோடு மட்டுமல்லாமல் மேரியைப் பற்றி அவதூறாகவும் பேசிவிடுகிறான்.
அவனால் வெகுவாக அவமானப் படுத்தப்பட்ட போதும், மகளுக்காகப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஆண்டனி ஒரு கட்டத்தில் கோபம் எல்லை மீற, ஆத்திரத்தில் அவனை முரட்டுத்தனமாக ஒரே ஒரு அடி அடித்து விட, ஆண்டனியின் இரும்புக்கை தாக்குதலில் பந்து போலத் துள்ளி விழுந்து உயிரை விடுகிறான் மேரியின் காதலன். இது அறியாத ஆண்டனி அவனை தூக்கிக் கொண்டு பாதிரியிடம் சேர்க்கிறான். பிறகுதான் தெரிகிறது மாப்பிள்ளையாய் வர இருந்தவன் மாமனாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவரம்.
போலீஸ் நண்பன் தன் கடமையை செய்கிறான். யாருமே இல்லாமல் கற்பிழந்து ஆதரவற்று அனாதையாக நிற்கிறாள் மேரி. சிறைவாசத்தில் ஆயுள்தண்டனையில் ஆண்டனி. எதுவும் செய்ய முடியாத நிலையில் பாதிரியார். சிறையில் இருக்கும் ஆண்டனிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி... மகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு விட்டாள் என்று. மீண்டும் அனாதையாகிறான் ஆண்டனி.
பாதிரியாருக்கு அதிக வயதாகி விட்டது. மரண வாசலை நெருங்கும் நேரம். தன் அன்பு ஆண்டனியைப் பார்க்க ஆசை. இன்ஸ்பெக்டர் லாரன்ஸிடம் தெரிவிக்கிறார். பாதிரியாரின் இறுதி ஆசை என்பதால் லாரன்ஸும் தன் சொந்தப் பொறுப்பில் சிறையிலிருந்து பரோலில் ஆண்டனியை பாதிரியாரிடம் அழைத்து வருகிறான். இரு தூய்மை உள்ளங்களும் உண்மையான அன்பின் உணர்வுகளின் சங்கமத்தால், உணர்ச்சிப் பெருக்கால் போராடுகின்றன. தன் ஆசைகள் எதுவுமே நிறைவேறாமல் தன் உயிர் பிரியப் போவதை எண்ணி பாதிரியார் கண்ணீர் விட, அதையே தன் மகள் மூலம் நிறைவேற்றுவதாய் வாக்குக் கொடுத்திருந்த ஆண்டனி அது பலிக்காமல் போனதை எண்ணி வேதனையுறுகிறான்.
தான் ஜெபம் செய்யும் புனிதமான மெழுகுவர்த்தியை ஆண்டனியிடம் தந்து ஆண்டனியை லாரன்சிடம் ஒப்படைத்து அவனை மனிதனாக்கும்படி கூறி பாதிரியார் கண் மூடுகிறார். ஊருக்கெல்லாம் சவப்பெட்டி செய்த ஆண்டனி தன் தெய்வத்திற்கான ஈமச் சடங்குகள் செய்ய லாரன்ஸிடம் பெர்மிஷன் கேட்க அவனோ மறுக்கிறான். வழக்கம் போல கோபமுறும் ஆண்டனி லாரன்ஸை அடித்துப் போட்டு விட்டு பாதிரியாரின் கனவுகளை நனவாக்குவதற்காகவே அங்கிருந்து தப்பித்து விடுகிறான்.
இனி மூன்றாவது பகுதி (பரிதாபத்துக்குரிய கில்லாடி மில்லியனர் அருண்)
http://i1087.photobucket.com/albums/..._005384921.jpg
தப்பித்த ஆண்டனி வெளிநாடு சென்று மிகப் பெரிய பணக்காரனாகி நீண்ட இடைவெளிக்குப் பின் தன் சொந்த கிராமத்துக்கு வருகிறான். இப்போது அவன் ஆண்டனி அல்ல. மில்லியனர் அருண். பாதிரியாரின் கனவுகளை நனவாக்கவே அருண் தன் சொந்த மண்ணுக்கே திரும்புகிறார். ஆனால் அவர்தான் ஆண்டனி என்று ஒரு பயலுக்கும் தெரியாது. அருணுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி. இறந்து விட்டதாக சொல்லப்பட்ட மகள் ஒரு ஏழை ஆசிரியையாக இப்போது அவர் கண் முன்னாலேயே உயிரோடு. தன்னையே நம்ப முடியவில்லை. மகளுக்கே தந்தையை அடையாளம் காண முடியாத அளவுக்கு அருணின் தோற்றம். மாற்றம். மகளிடமே தன்னைத் தெரியப்படுத்திக் கொள்ள முடியாத துர்ப்பாக்கிய சூழ்நிலையில், கண்கொத்திப் பாம்பாக லாரன்ஸ் அலைய, எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே அடிமனதில் அழுகிறான் ஆண்டனி. மகளுக்கே மகள் வேறு. பேத்தி. மறுபடியும் சொந்த பந்தங்கள். தான் கடவுளாக நேசித்த பாதிரியாரின் ஆசைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற ஆரம்பிக்கிறார் அருண். ஊராரின் உன்னத அன்புக்கும் பாத்திரமாகிறார் அவர்களுக்கு தான் பழைய ஆண்டனி என்பது தெரியாமலேயே அல்லது காட்டிக் கொள்ளாமலேயே.
இதன் நடுவில் வஞ்சம் வைத்த புலியாக வாழ்நாள் சபதமெடுக்கிறான் லாரன்ஸ். ஆண்டனியால் தன் பதவிக்கும், தனக்கும் ஏற்பட்ட களங்கத்தை, இழுக்கை சரி செய்யத் துடிக்கிறான். வேண்டுமென்றே நண்பனைத் தப்பிக்க வைத்தவன் என்ற இழிசொல்லை இல்லாமல் செய்ய இரை தேடும் சிங்கமாக மீண்டும் அந்த ஊருக்கே மாற்றலாகி வருகிறான். மீண்டும் நண்பர்கள் சந்திக்கின்றனர். ஆனால் நண்பர்களாக அல்ல. எதிரிகளாக.
http://i1087.photobucket.com/albums/..._006614065.jpg
அருண்தான் ஆண்டனி என்பதை பல சந்தர்ப்பங்களில் உணர்ந்து, தெரிந்து கொண்ட லாரன்ஸ் அதை நிரூபிக்க ஆதாரம் இல்லாமல் தவிக்கிறான். ஆண்டனியோ வித்தகனுக்கு வித்தகனாக எந்த ஆதாரத்தையும் விட்டு விடாமல், தன் மகள் மீதான அதீத பாசத்தையும் மறைத்துக் கொண்டு, லாரன்ஸ் தரும் சித்திரவதை தொல்லைகளையும் தாங்கிக் கொண்டு, ஒவ்வொரு முறையும் லாரன்ஸ் விரிக்கும் வலைக்குள் சிக்காமல் குள்ள நரியாக அவனிடமிருந்து தப்பித்துக் கொண்டே இருக்கிறான்.
மேரியின் மகள் லாரன்ஸின் மகனைக் காதலிக்க, கல்யாணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணப் பத்திரிக்கையை மேரி அருணிடம் கொடுக்கப் போகும் சந்தர்ப்பத்தில் தன் மகளிடமே பரிதாபமாக தன்னை அவள் தந்தை ஆண்டனிதான் இந்த அருண் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறான் ஆண்டனி. ஆடிப் போகிறாள் மகள். இத்தனை நாள் பிரிந்திருந்த மொத்தப் பாசத்தையும் அவள் மீது அந்தக் கண நேரத்தில் கொட்டுகிறான் ஆண்டனி. அப்பாவைப் பார்த்த சந்தோஷத்தை விட அப்பாவின் எதிர்காலம்... அதை நிர்ணயிக்கப் போகும் லாரன்ஸ்... இவைதான் மேரி நெஞ்சில் இப்போது அதிகம் நிழலாடுகின்றன. பேத்தியின் கல்யாணத்தை ஜாம் ஜாமென்று நடத்தப் போவதாகக் மேரியிடம் கூறுகிறார் அருண். ஆனால் மேரி தடுத்து விடுகிறாள். தன் தந்தையை பிடிப்பதையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டுள்ள தன் வருங்கால சம்பந்தி இன்ஸ்பெக்டர் லாரன்ஸிடம் தன் தந்தை மாட்டாமல் இருக்க வேண்டுமானால் வெளி உலகத்திற்கு தங்களது தந்தை மகள் உறவு தெரியக் கூடாது என்று ஆண்டனியிடம் இறைஞ்சுகிறாள் மேரி. அதுமட்டுமல்ல தந்தையை திரும்ப வெளிநாட்டுக்கே சென்று விடும்படியும் வேண்டுகிறாள். அனலிடை புழுவாக துடிக்கிறார் அருண். மகள், பேத்தி பாசம் ஒருபுறம்.... தன்னை வேட்டையாடவே அவதாரம் எடுத்திருக்கும் லாரன்ஸ் ஒரு புறம்... பாதிரியாரின் கனவுகள் ஒருபுறம்.
சித்ரவதை சிறகுகளுக்குள் சிக்கி, உள்ளுக்குள் உடைந்து, ஊமையாய் அழுது, துன்பங்களில் துவள்கிறார் ஆண்டனி இல்லை இல்லை அருண்.
அருணை ஆண்டனி என்று நிரூபிக்க எந்த வழியிலும் வெற்றி அடைய முடியாத லாரன்ஸ் இறுதியாக ஒரு வழியைத் தேர்ந்தெடுக்கிறான். அதைத் தன் மகனின் (அருணின் பேத்தியின்) கல்யாணத்தின் போது பயன்படுத்திக் கொள்கிறான். கல்யாணத்தை நடத்திக் கொடுக்க வரும் அருண் முன்னாலேயே தன் சம்பந்தியான மேரியின் கடந்தகால வாழ்க்கையைக் கூறி அவள் நடத்தை கெட்டவள் என்று ஊரார் முன் அவளை வேண்டுமென்றே அவமானப் படுத்துகிறான் லாரன்ஸ். (அப்போதுதான் அருண் மகள் மேல் உள்ள பாசத்தால் தன்னை ஆண்டனி என்று நிச்சயம் அடையாளம் காட்டிவிடுவான் என்ற நம்பிக்கை கொண்டு) அவளுடைய கணவன் யார் என்று கேலி பேசுகிறான் தான் அவளுக்கு செய்து வைத்த கல்யாணத்தை மறைத்தே. மேரியின் மகளுக்கான தகப்பன் யார் என்று சொற்சவுக்கால் அடிக்கிறான். உண்மையை மேரி உரைத்தால்தான் இந்தக் கல்யாணம் நடக்கும் என்றும் பயமுறுத்துகிறான்.
http://i1087.photobucket.com/albums/..._008754287.jpg
தன் அருமை மகள் தன் கண் முன்னாலேயே லாரான்ஸால் ஊரார் முன் அவமானப்படுவதை சகிக்க முடியாத அருண் தன் நிலை இழக்கிறான். வெறி கொண்ட வேங்கையாகிறான். மேரிக்கு லாரன்ஸ்தான் மோதிரம் மூலம் திருமணம் செய்து வைத்தான் என்று தன்னையறியாமல் உண்மையை உடைக்கிறான். பழைய ஆண்டனியின் முரட்டுக் குணத்தைக் காட்டி, உச்ச கோபத்தில் லாரன்ஸை பாதிரியார் தந்த மெழுவர்த்திக் கேண்டிலால் அடிக்கக் கை ஓங்கி தன்னை அடையாளம் காட்டி விடுகிறான். அதைத்தான் லாரன்ஸும் எதிர்பார்த்தான். அவன் நினைத்தபடியே நடந்து விட்டது. பல வழிகளில் முயன்றும் அருணை ஆண்டனி என்று அடையாளம் காட்ட முடியாமல் தோல்வியுற்று துவளும் லாரன்ஸ் பாசம் என்ற தூண்டிலுக்குதான் ஆண்டனி மாட்டுவான் என்பதை வகையாகப் பயன் படுத்திக் கொண்டு அதில் வெற்றியும் அடைகிறான். அருணை அவர் வாயாலேயே ஆண்டனி என்று அனைவர் முனனால் சொல்ல வைக்கிறான்.
அருண் தான் தான் ஆண்டனி என்று அனைவர் முன்னும் ஒத்துக் கொண்ட பிறகு தன் முறையற்ற செயலுக்காக அவனிடம் மன்னிப்பு கோருகிறான் லாரன்ஸ். அவனைப் பிடிக்க வேறு வழி தெரியாததால்தான் தான் மேரியை அவமானப்படுத்த நேர்ந்தது என்றும் வருத்தப்படுகிறான். மேரி நல்லவள்தான் என்று ஊரார் முன் நிஜத்தை எடுத்துரைக்கிறான். தான்தான் மேரிக்கு கல்யாணம் செய்து வைத்தவன் என்ற உண்மையையும் கூறுகிறான். ஆண்டனி சாந்தமடைகிறான்.
தந்தை மாட்டக் கூடாது என்று நினைத்த மகளுக்கு ஏமாற்றமே!
பாதிரியாரின் ஆசைகளை நிறைவேற்றி விட்ட திருப்தி, மகளின் மானம் நண்பனால் சீண்டப்பட்டு பின் அவனாலேயே காக்கப்பட்ட கண்ணியம், பேத்தியின் கல்யாணம் என்ற சந்தோஷங்களில் மனம் லேசாக, முழு திருப்தியோடு தன்னை ஆண்டனி என்ற பழைய கைதியாக லாரன்ஸ் வசம் சந்தோஷமாக ஒப்படைக்கிறான் அருண் சிறைக் கதவுகளை எதிர்நோக்கியபடி.
'ஒளி' உலகுள்ளவரை வீசிக் கொண்டே இருக்கும்.
ஆண்டனி அனைவரையும் ஆட்டுவித்துக் கொண்டே இருப்பான்
அருண் அனுதினமும் அவரை நினைக்கச் செய்து கொண்டு தான் இருப்பார்.
இந்த விதி மாற்ற முடியாதது.
இனி....
'ஞான ஒளி' யில்
'நம் ஆண்டவனின் அரசாட்சி'
விரைவில் தொடரும்.
ஒளித் தாக்குதலில் சிக்குண்டு, சிதறிக் கிடக்கும்
வாசுதேவன்..
i am the new visitor of this forum. I am very happy to join this. I am the deep fan of Great actor sivaji sir. I ready this and really enjoyed like anything. Your presentation is very good. Thanks for your information about only actor sivaji's Gnana oli story.
Regards
C.Ramachandran
Trichy
'ஞான ஒளி'
http://i1098.photobucket.com/albums/...naOli00001.jpg
முக்காலமும் உணர்ந்த ஞான நடிகரின் 'ஞான ஒளியை' கதையை மூன்று பகுதிகளாகப் பிரிப்போம். மூன்றும் வெவ்வேறு பரிணாமங்களைக் கொண்டவை. மூன்று பகுதிகளிலும் ஏகபோகச் சக்கரவர்த்தி நம் அன்பு நாயகர்தான். "அவனன்றி ஓர் அணுவும் அசையாது" என்பார்கள். அது உண்மையோ பொய்யோ! ஆனால் ஆண்டனி இன்றி வாசுதேவன் உயிர் அசையாது. அருணின்றி அவன் அக, புற வாழ்க்கை இனிக்காது. இப்போது ஞாலத்துக்கே நடிப்பொளி வழங்கிய நாயகன் வாழ்ந்த 'ஞான ஒளி'யின் கதை. (இணையத்து இளைஞர்களுக்காகவும், என்னுடன் இணைந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்காகவும்)
முதல் பகுதியாக (அப்பாவி இளைஞன் ஆண்டனி)
http://i1087.photobucket.com/albums/..._000810601.jpg
http://i1087.photobucket.com/albums/..._001093592.jpg
ஆண்டனி என்ற அனாதை முரட்டு இளைஞன் "பூண்டி' என்ற கிராமத்து மாதா கோவிலில் மணியடித்து, சவப்பெட்டி செய்தல், கல்லறை வெட்டுதல் போன்ற சிறு தொழில்கள் செய்து, தன்னை எடுத்து வளர்த்த பாதிரியாரின் மேல் கொண்ட கண்மூடித்தனமான அன்பு வெறியை வெளிப்படுத்தி, விளையாட்டுப் பிள்ளையாய் கவலை இன்னதென்று அறியாமல் சிறு சிறு அடிதடி கேஸ்களில் (நியாயமான விஷயங்களுக்காக) சிக்கி, பாதிரியாரால் அடிக்கடி ஜாமீன் எடுக்கப்பட்டு, தன் குணத்தையொத்த ஒரு பெண்ணை அவளை சீண்டியபடியே காதலித்து, பாதிரியாரின் ஆசியால் அவளை மணமும் புரிந்து, இனிமையான இல்லற வாழ்க்கையில் அவளும் கர்ப்பமுற்று, ஒரு அழகான பெண் குழந்தையை இவனுக்குத் தந்து, பிரசவத்தின் போதே அந்தப் பேதை உயிர் துறக்க, அனாதையான ஆண்டனி எப்படி அவளால் சொந்தம் ஏற்பட்டு குடும்பம், சொந்தம் என்று ஆனானோ அவளே போய்விட்ட பிறகு மீண்டும் அனாதையாகி அவள் பெற்றுத் தந்த செல்வத்தைப் பாதுகாக்க தந்தை என்ற ஸ்தானத்திற்கு சொந்தக்காரனாகிறான். இப்போது அவன் அனாதை இல்லை.
இரண்டாவது பகுதியாக (பாசமுள்ள முரட்டுத் தந்தை)
http://i1087.photobucket.com/albums/..._001226725.jpg
http://i1087.photobucket.com/albums/..._001829744.jpg
தன்னுடைய கிராமத்தில் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, அனாதை விடுதி கட்ட வேண்டும் என்ற இயலாமை ஆசையிலே வாழும் பாதிரியார். அதற்காகவே அருமை மகளை அரும்பாடுபட்டு படிக்க வைக்கும் ஆண்டனி. பாதிரியாரால் வளர்க்கப்பட்ட இன்னொரு அனாதை சிறுவன் சிறு வயது ஆண்டனியின் நெருங்கிய நண்பன் லாரன்ஸ்... இப்போது படித்து வளர்ந்து அதே ஊரிலேயே இன்ஸ்பெக்டர். நண்பர்கள் இருவரும் நீள் பிரிவிற்குப் பின் சந்தித்து அடயாளம் கண்டு, பழைய நட்பை நினைவு கூர்ந்து, மீண்டும் நெருங்கிய நட்பு கொள்கிறார்கள்..
படிப்பின் போது கயவன் ஒருவனை காதலித்து லீவில் ஊருக்கு திரும்பும் மகள் மேரி ஒரு இடிமழை இரவில் சொந்த ஊரிலேயே அவனிடம் சோரம் போகிறாள். மகளைக் காட்ட நண்பன் லாரன்ஸை ஆசையுடன் தன் வீட்டுக்கு அழைத்து வரும் ஆண்டனி மகள் நாசமாவதை நேரே கண்டு விடுகிறான். கொதிப்பும், ஆங்காரமும், அதிகோபமும் அடைகிறான். பொங்கு கடலாய்க் கொந்தளிக்கிறான். லாரன்ஸ் நண்பனின் கோபத்தைக் கட்டுப் படுத்தி. மேரிக்கு அங்கேயே அவள் காதலனுடன் மோதிரம் மாற்றி மணமுடித்து வைக்கிறான். தன் வாழ்க்கையையே ஒரு வினாடியில் வெட்டிச் சாய்த்த மகளின் செய்கையில் கொந்தளித்து தன்னுடைய தோட்டத்து வாழைகளை வெட்டி சாய்த்து வெறிதீர்க்க முயன்று தோற்கிறான் ஆண்டனி.
http://i1087.photobucket.com/albums/..._003018598.jpg
பாதிரிக்கு விஷயம் போக, முறைப்படி இருவருக்கும் கல்யாணம் செய்து வைப்பதுதான் ஒரே வழி என்று சொல்ல, மான, அவமானத்திற்கு பயந்து, மேரி காதலித்த பையனை தேடிச் செல்லும் ஆண்டனி அவன் ஒரு நயவஞ்சகன்... பெண்களை ஏமாற்றும் காமாந்தகன் என்று தெரிந்து கொள்கிறான். இருந்தாலும் அவனைத் தேடிக் கண்டு பிடித்து தன் மகளுக்கு வாழ்வு தரச் சொல்லி மன்றாடுகிறான். அவன் காலைப் பிடித்துக் கதறுகிறான். ஆனால் அந்த நயவஞ்சகனோ கல்யாணத்துக்கு மறுத்துவிடுவதோடு மட்டுமல்லாமல் மேரியைப் பற்றி அவதூறாகவும் பேசிவிடுகிறான்.
அவனால் வெகுவாக அவமானப் படுத்தப்பட்ட போதும், மகளுக்காகப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஆண்டனி ஒரு கட்டத்தில் கோபம் எல்லை மீற, ஆத்திரத்தில் அவனை முரட்டுத்தனமாக ஒரே ஒரு அடி அடித்து விட, ஆண்டனியின் இரும்புக்கை தாக்குதலில் பந்து போலத் துள்ளி விழுந்து உயிரை விடுகிறான் மேரியின் காதலன். இது அறியாத ஆண்டனி அவனை தூக்கிக் கொண்டு பாதிரியிடம் சேர்க்கிறான். பிறகுதான் தெரிகிறது மாப்பிள்ளையாய் வர இருந்தவன் மாமனாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவரம்.
போலீஸ் நண்பன் தன் கடமையை செய்கிறான். யாருமே இல்லாமல் கற்பிழந்து ஆதரவற்று அனாதையாக நிற்கிறாள் மேரி. சிறைவாசத்தில் ஆயுள்தண்டனையில் ஆண்டனி. எதுவும் செய்ய முடியாத நிலையில் பாதிரியார். சிறையில் இருக்கும் ஆண்டனிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி... மகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு விட்டாள் என்று. மீண்டும் அனாதையாகிறான் ஆண்டனி.
பாதிரியாருக்கு அதிக வயதாகி விட்டது. மரண வாசலை நெருங்கும் நேரம். தன் அன்பு ஆண்டனியைப் பார்க்க ஆசை. இன்ஸ்பெக்டர் லாரன்ஸிடம் தெரிவிக்கிறார். பாதிரியாரின் இறுதி ஆசை என்பதால் லாரன்ஸும் தன் சொந்தப் பொறுப்பில் சிறையிலிருந்து பரோலில் ஆண்டனியை பாதிரியாரிடம் அழைத்து வருகிறான். இரு தூய்மை உள்ளங்களும் உண்மையான அன்பின் உணர்வுகளின் சங்கமத்தால், உணர்ச்சிப் பெருக்கால் போராடுகின்றன. தன் ஆசைகள் எதுவுமே நிறைவேறாமல் தன் உயிர் பிரியப் போவதை எண்ணி பாதிரியார் கண்ணீர் விட, அதையே தன் மகள் மூலம் நிறைவேற்றுவதாய் வாக்குக் கொடுத்திருந்த ஆண்டனி அது பலிக்காமல் போனதை எண்ணி வேதனையுறுகிறான்.
தான் ஜெபம் செய்யும் புனிதமான மெழுகுவர்த்தியை ஆண்டனியிடம் தந்து ஆண்டனியை லாரன்சிடம் ஒப்படைத்து அவனை மனிதனாக்கும்படி கூறி பாதிரியார் கண் மூடுகிறார். ஊருக்கெல்லாம் சவப்பெட்டி செய்த ஆண்டனி தன் தெய்வத்திற்கான ஈமச் சடங்குகள் செய்ய லாரன்ஸிடம் பெர்மிஷன் கேட்க அவனோ மறுக்கிறான். வழக்கம் போல கோபமுறும் ஆண்டனி லாரன்ஸை அடித்துப் போட்டு விட்டு பாதிரியாரின் கனவுகளை நனவாக்குவதற்காகவே அங்கிருந்து தப்பித்து விடுகிறான்.
இனி மூன்றாவது பகுதி (பரிதாபத்துக்குரிய கில்லாடி மில்லியனர் அருண்)
http://i1087.photobucket.com/albums/..._005384921.jpg
தப்பித்த ஆண்டனி வெளிநாடு சென்று மிகப் பெரிய பணக்காரனாகி நீண்ட இடைவெளிக்குப் பின் தன் சொந்த கிராமத்துக்கு வருகிறான். இப்போது அவன் ஆண்டனி அல்ல. மில்லியனர் அருண். பாதிரியாரின் கனவுகளை நனவாக்கவே அருண் தன் சொந்த மண்ணுக்கே திரும்புகிறார். ஆனால் அவர்தான் ஆண்டனி என்று ஒரு பயலுக்கும் தெரியாது. அருணுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி. இறந்து விட்டதாக சொல்லப்பட்ட மகள் ஒரு ஏழை ஆசிரியையாக இப்போது அவர் கண் முன்னாலேயே உயிரோடு. தன்னையே நம்ப முடியவில்லை. மகளுக்கே தந்தையை அடையாளம் காண முடியாத அளவுக்கு அருணின் தோற்றம். மாற்றம். மகளிடமே தன்னைத் தெரியப்படுத்திக் கொள்ள முடியாத துர்ப்பாக்கிய சூழ்நிலையில், கண்கொத்திப் பாம்பாக லாரன்ஸ் அலைய, எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே அடிமனதில் அழுகிறான் ஆண்டனி. மகளுக்கே மகள் வேறு. பேத்தி. மறுபடியும் சொந்த பந்தங்கள். தான் கடவுளாக நேசித்த பாதிரியாரின் ஆசைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற ஆரம்பிக்கிறார் அருண். ஊராரின் உன்னத அன்புக்கும் பாத்திரமாகிறார் அவர்களுக்கு தான் பழைய ஆண்டனி என்பது தெரியாமலேயே அல்லது காட்டிக் கொள்ளாமலேயே.
இதன் நடுவில் வஞ்சம் வைத்த புலியாக வாழ்நாள் சபதமெடுக்கிறான் லாரன்ஸ். ஆண்டனியால் தன் பதவிக்கும், தனக்கும் ஏற்பட்ட களங்கத்தை, இழுக்கை சரி செய்யத் துடிக்கிறான். வேண்டுமென்றே நண்பனைத் தப்பிக்க வைத்தவன் என்ற இழிசொல்லை இல்லாமல் செய்ய இரை தேடும் சிங்கமாக மீண்டும் அந்த ஊருக்கே மாற்றலாகி வருகிறான். மீண்டும் நண்பர்கள் சந்திக்கின்றனர். ஆனால் நண்பர்களாக அல்ல. எதிரிகளாக.
http://i1087.photobucket.com/albums/..._006614065.jpg
அருண்தான் ஆண்டனி என்பதை பல சந்தர்ப்பங்களில் உணர்ந்து, தெரிந்து கொண்ட லாரன்ஸ் அதை நிரூபிக்க ஆதாரம் இல்லாமல் தவிக்கிறான். ஆண்டனியோ வித்தகனுக்கு வித்தகனாக எந்த ஆதாரத்தையும் விட்டு விடாமல், தன் மகள் மீதான அதீத பாசத்தையும் மறைத்துக் கொண்டு, லாரன்ஸ் தரும் சித்திரவதை தொல்லைகளையும் தாங்கிக் கொண்டு, ஒவ்வொரு முறையும் லாரன்ஸ் விரிக்கும் வலைக்குள் சிக்காமல் குள்ள நரியாக அவனிடமிருந்து தப்பித்துக் கொண்டே இருக்கிறான்.
மேரியின் மகள் லாரன்ஸின் மகனைக் காதலிக்க, கல்யாணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணப் பத்திரிக்கையை மேரி அருணிடம் கொடுக்கப் போகும் சந்தர்ப்பத்தில் தன் மகளிடமே பரிதாபமாக தன்னை அவள் தந்தை ஆண்டனிதான் இந்த அருண் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறான் ஆண்டனி. ஆடிப் போகிறாள் மகள். இத்தனை நாள் பிரிந்திருந்த மொத்தப் பாசத்தையும் அவள் மீது அந்தக் கண நேரத்தில் கொட்டுகிறான் ஆண்டனி. அப்பாவைப் பார்த்த சந்தோஷத்தை விட அப்பாவின் எதிர்காலம்... அதை நிர்ணயிக்கப் போகும் லாரன்ஸ்... இவைதான் மேரி நெஞ்சில் இப்போது அதிகம் நிழலாடுகின்றன. பேத்தியின் கல்யாணத்தை ஜாம் ஜாமென்று நடத்தப் போவதாகக் மேரியிடம் கூறுகிறார் அருண். ஆனால் மேரி தடுத்து விடுகிறாள். தன் தந்தையை பிடிப்பதையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டுள்ள தன் வருங்கால சம்பந்தி இன்ஸ்பெக்டர் லாரன்ஸிடம் தன் தந்தை மாட்டாமல் இருக்க வேண்டுமானால் வெளி உலகத்திற்கு தங்களது தந்தை மகள் உறவு தெரியக் கூடாது என்று ஆண்டனியிடம் இறைஞ்சுகிறாள் மேரி. அதுமட்டுமல்ல தந்தையை திரும்ப வெளிநாட்டுக்கே சென்று விடும்படியும் வேண்டுகிறாள். அனலிடை புழுவாக துடிக்கிறார் அருண். மகள், பேத்தி பாசம் ஒருபுறம்.... தன்னை வேட்டையாடவே அவதாரம் எடுத்திருக்கும் லாரன்ஸ் ஒரு புறம்... பாதிரியாரின் கனவுகள் ஒருபுறம்.
சித்ரவதை சிறகுகளுக்குள் சிக்கி, உள்ளுக்குள் உடைந்து, ஊமையாய் அழுது, துன்பங்களில் துவள்கிறார் ஆண்டனி இல்லை இல்லை அருண்.
அருணை ஆண்டனி என்று நிரூபிக்க எந்த வழியிலும் வெற்றி அடைய முடியாத லாரன்ஸ் இறுதியாக ஒரு வழியைத் தேர்ந்தெடுக்கிறான். அதைத் தன் மகனின் (அருணின் பேத்தியின்) கல்யாணத்தின் போது பயன்படுத்திக் கொள்கிறான். கல்யாணத்தை நடத்திக் கொடுக்க வரும் அருண் முன்னாலேயே தன் சம்பந்தியான மேரியின் கடந்தகால வாழ்க்கையைக் கூறி அவள் நடத்தை கெட்டவள் என்று ஊரார் முன் அவளை வேண்டுமென்றே அவமானப் படுத்துகிறான் லாரன்ஸ். (அப்போதுதான் அருண் மகள் மேல் உள்ள பாசத்தால் தன்னை ஆண்டனி என்று நிச்சயம் அடையாளம் காட்டிவிடுவான் என்ற நம்பிக்கை கொண்டு) அவளுடைய கணவன் யார் என்று கேலி பேசுகிறான் தான் அவளுக்கு செய்து வைத்த கல்யாணத்தை மறைத்தே. மேரியின் மகளுக்கான தகப்பன் யார் என்று சொற்சவுக்கால் அடிக்கிறான். உண்மையை மேரி உரைத்தால்தான் இந்தக் கல்யாணம் நடக்கும் என்றும் பயமுறுத்துகிறான்.
http://i1087.photobucket.com/albums/..._008754287.jpg
தன் அருமை மகள் தன் கண் முன்னாலேயே லாரான்ஸால் ஊரார் முன் அவமானப்படுவதை சகிக்க முடியாத அருண் தன் நிலை இழக்கிறான். வெறி கொண்ட வேங்கையாகிறான். மேரிக்கு லாரன்ஸ்தான் மோதிரம் மூலம் திருமணம் செய்து வைத்தான் என்று தன்னையறியாமல் உண்மையை உடைக்கிறான். பழைய ஆண்டனியின் முரட்டுக் குணத்தைக் காட்டி, உச்ச கோபத்தில் லாரன்ஸை பாதிரியார் தந்த மெழுவர்த்திக் கேண்டிலால் அடிக்கக் கை ஓங்கி தன்னை அடையாளம் காட்டி விடுகிறான். அதைத்தான் லாரன்ஸும் எதிர்பார்த்தான். அவன் நினைத்தபடியே நடந்து விட்டது. பல வழிகளில் முயன்றும் அருணை ஆண்டனி என்று அடையாளம் காட்ட முடியாமல் தோல்வியுற்று துவளும் லாரன்ஸ் பாசம் என்ற தூண்டிலுக்குதான் ஆண்டனி மாட்டுவான் என்பதை வகையாகப் பயன் படுத்திக் கொண்டு அதில் வெற்றியும் அடைகிறான். அருணை அவர் வாயாலேயே ஆண்டனி என்று அனைவர் முனனால் சொல்ல வைக்கிறான்.
அருண் தான் தான் ஆண்டனி என்று அனைவர் முன்னும் ஒத்துக் கொண்ட பிறகு தன் முறையற்ற செயலுக்காக அவனிடம் மன்னிப்பு கோருகிறான் லாரன்ஸ். அவனைப் பிடிக்க வேறு வழி தெரியாததால்தான் தான் மேரியை அவமானப்படுத்த நேர்ந்தது என்றும் வருத்தப்படுகிறான். மேரி நல்லவள்தான் என்று ஊரார் முன் நிஜத்தை எடுத்துரைக்கிறான். தான்தான் மேரிக்கு கல்யாணம் செய்து வைத்தவன் என்ற உண்மையையும் கூறுகிறான். ஆண்டனி சாந்தமடைகிறான்.
தந்தை மாட்டக் கூடாது என்று நினைத்த மகளுக்கு ஏமாற்றமே!
பாதிரியாரின் ஆசைகளை நிறைவேற்றி விட்ட திருப்தி, மகளின் மானம் நண்பனால் சீண்டப்பட்டு பின் அவனாலேயே காக்கப்பட்ட கண்ணியம், பேத்தியின் கல்யாணம் என்ற சந்தோஷங்களில் மனம் லேசாக, முழு திருப்தியோடு தன்னை ஆண்டனி என்ற பழைய கைதியாக லாரன்ஸ் வசம் சந்தோஷமாக ஒப்படைக்கிறான் அருண் சிறைக் கதவுகளை எதிர்நோக்கியபடி.
'ஒளி' உலகுள்ளவரை வீசிக் கொண்டே இருக்கும்.
ஆண்டனி அனைவரையும் ஆட்டுவித்துக் கொண்டே இருப்பான்
அருண் அனுதினமும் அவரை நினைக்கச் செய்து கொண்டு தான் இருப்பார்.
இந்த விதி மாற்ற முடியாதது.
இனி....
'ஞான ஒளி' யில்
'நம் ஆண்டவனின் அரசாட்சி'
விரைவில் தொடரும்.
ஒளித் தாக்குதலில் சிக்குண்டு, சிதறிக் கிடக்கும்
வாசுதேவன்..[/QUOTE]
Thank you for your information sir. We are eagerly awaiting for the issue about our only actor sivaji
Regards
C.Ramachandran, Trichy
[attach=conAttachment 2545fig]2544[/attach]
மீள் வருகைக்கும் ஞானஒளி பதிவிற்கும் நன்றி வாசு சார். படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் நடிகர் திலகத்தின் ஒவ்வொரு சின்ன சின்ன அசைவில் கூட அவர் கவிதை வடித்திருப்பதை உணர முடிகிறது. அண்மையில் பார்த்த போது மிகவும் ரசித்த ஒரு அசைவை நீங்கள் புகைப்படமாகவே அளித்து விட்டீர்கள்.
அருண் வீட்டிக்கு வரும் லாரன்ஸ். Mr. அருண் எங்கே என்று கேட்கும் லாரன்ஸிடம் அவர் இப்போதுதான் சாப்பிட போனார் என்று பதில் சொல்லும் வேலைக்காரன், அடாடா ஒரு விருந்து சாப்பாட்டை மிஸ் பண்ணிட்டேனே என போலியாக அங்கலாய்க்கும் லாரன்ஸ். எங்க எஜமானுக்கு விருந்து சாப்பாடே கஞ்சிதான் என கூறும் வேலைக்காரனிடம் பழக்க தோஷம் என நக்கலடிக்கும் லாரன்ஸ். அதிலிருந்து ஆரம்பிக்கும் இரண்டு பேரின் indirect மோதல். லாரன்ஸ் ரேடியோவை வைப்பது, அந்த நாள் ஞாபகம் பாடல் ஒலிப்பது, அந்நேரம் நடிகர் திலகம் மாடியில் நின்று மேஜரையே பார்ப்பது என தூள் கிளப்பும். அடுத்து சாத்துக்குடி பிழியும் ஷாட், மேஜரின் பொடி வைத்த கமன்ட், அப்படி எழுதிக் கொண்டே போகலாம். நான் சொன்ன புகைப்படத்திற்கு வந்து விடுகிறேன்.
அருண்தான் ஆண்டனியா என்பதை கண்டுபிடிக்க அருண் அணிந்திருக்கும் கூலிங் கிளாசை is it Ray Ban? என்று கேட்டுக் கொண்டே லாரன்ஸ் கழட்டி விட, அருணின் இரண்டு கண்களும் நன்றாகவே இருக்க, உங்க இடது கண் என்று இழுக்கும் மேஜரிடம், இடது கண்ணுக்கு என்ன நல்லாதானே இருக்கு என்றவாறு ஒரு கையால் வலது கண்ணை மூடிக் கொண்டு முதலில் டையை தொட்டு "You are wearing a black tie, பின் கையைப் பிடித்து -- ரிஸ்ட் வாட்ச் and the time is 4'o clock என்று சொல்லி விட்டு சோபாவின் பின் புறம் சென்று அதன் முதுகு புறத்தில் இடது கையை ஊன்றி, முகத்தின் இடது பக்கத்தை மட்டும் பக்கவாட்டில் காமிராவிற்கு காட்டிக் கொண்டே " இன்ஸ்பெக்டர், நம்ம அறிவுக்கு சரின்னு படற விஷயங்களை சில நேரங்களிலே நம்மாலே practical -a நிரூபிக்க முடியறதில்லை இல்லையா" என்று ஒரு மந்தகாச புன்னைகையுடன் கேட்கும் அந்த ஷாட்டை புகைப்படமாக்கி இங்கே பதிவு செய்ததற்கு மனமார்ந்த நன்றி.
ஒரு பக்கவாட்டு profile போஸிலேயே இவ்வளவு ஜால விதை காட்ட யாரால் முடியும்?
அன்புடன்
நடிகர் திலகத்தின் திரிக்கு புதிய வரவாக வந்திருக்கும் திருச்சி ராமச்சந்திரன் அவர்களே நல்ல இடம் நீங்கள் வந்த இடம் என கூறி மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். இனி திருச்சி மாநகரில் நடிகர் திலகத்தின் முந்தைய சாதனைகள் மற்றும் தற்போது வெளியாகும் மறு வெளியிடுகளின் தகவல்களை அளிப்பீர்கள் என நம்புகிறோம்.
அன்புடன்
ஜோ,
பாச மலர் பற்றிய பதிவை வெகு விரைவில் பதிவிடுகிறேன்
வாசு சார்,
தாங்களே ஒப்பு கொண்டாலும் ,ராகவேந்தர் சார் தங்களை வரவழைத்தது நானில்லை ,அந்தோனியும்,அருணும்தான் என்பதை பட்ட வர்தனம் ஆக்கி விட்டார். எப்படியாவது அற்புதமான கதையொன்றை சொல்லி திரும்பி வந்ததற்கு எல்லையற்ற மகிழ்ச்சி. இப்போதுதான் திரிக்கு உயிர் வந்தது போல் உள்ளது.
திரு ராமச்சந்திரன் அவர்களே ,வருக வருக என்று வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
ராகவேந்தர் சார், நீங்கள் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் முன்னிட்டு பிசி என்று அறிகிறோம்.உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.
முரளி- திருக்குறள் போல அழகான பதிவு.
கார்த்திக் சார்,ஆர்.நம்பி சார் ,கல்நாயக்,பரணி ஆகியோருக்கு நன்றிகள்.
அவர் வருவார் வரவேண்டும் என எதிர்பார்த்து ஞான ஒளி சாக்கில் 1972ஐ ஆரம்பித்து, அருணையும் அந்தோணியையும் அழைத்துக் கொண்டு நெய்வேலி போய் அவர்களிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்து தரதரவென இழுத்து வரச் செய்தது யாராம்?Quote:
வாசு சார்,
தாங்களே ஒப்பு கொண்டாலும் ,ராகவேந்தர் சார் தங்களை வரவழைத்தது நானில்லை ,அந்தோனியும்,அருணும்தான் என்பதை பட்ட வர்தனம் ஆக்கி விட்டார். எப்படியாவது அற்புதமான கதையொன்றை சொல்லி திரும்பி வந்ததற்கு எல்லையற்ற மகிழ்ச்சி. இப்போதுதான் திரிக்கு உயிர் வந்தது போல் உள்ளது.
தொடர்ந்து கிட்டத்தட்ட தினமும் என் பெயரில் பதிவுகள் வருகிறதே... அதையெல்லாம் நான் போடவில்லையா... அய்யய்யோ.. யாரய்யா என் பெயரில் பதிவுகள் இடுவது... கண்டு பிடித்துச் சொல்லுங்களேன் ... புண்ணியமாய்ப் போகும் ... பொறுப்பை ஒப்படைத்து விட்டு அக்கடா என்று நடிகர் திலகத்தின் படங்களைப் பார்த்துக் கொண்டு பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கலாமே...Quote:
ராகவேந்தர் சார், நீங்கள் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் முன்னிட்டு பிசி என்று அறிகிறோம்.உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.
நடிகர் திலகத்தின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் 2013
திருச்சி மாவட்ட சிவாஜி மக்கள் நல இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள நடிகர் திலகம் பிறந்த நாள் நிகழ்ச்சியைப் பற்றிய ஓர் அறிவிப்பு
http://i1146.photobucket.com/albums/...ps37c76484.jpg
அனுப்பிய திரு அண்ணாதுரை அவர்களுக்கு நன்றி.
நடிகர்திலகமும் success என்ற வார்த்தையும் உடன் பிறந்தவை. தொட்டதெல்லாம் வெற்றி என்பதுடன், தன்னுடைய நண்பர் பெயரை முன்மொழிந்து, தயாரிப்பாளரை நண்பரிடம் அனுப்பி வைத்த படமும் அந்த நண்பருக்கு திருப்பத்தை அளித்ததே திரைப்பட வாழ்வில்? தொட்டதெல்லாம் துலங்க வைத்து , படவுலகில் எல்லா வருடங்களும் அவருடைய வெற்றி வருடங்களே.
1972 நான் எடுத்தது ,அவருடைய திரையுலக வாழ்வின் சரியான நடு வருடம்.(1952-1999). அவருடைய நடிப்பின் variety அனைத்தும் கொண்ட வருடம். ராஜாவில் jamesbond ,ஞான ஒளியில் படு heavy சீரியஸ் ரோல்,பட்டிக்காடா பட்டணமா ஒரு கிராமத்து ஜாலி கலந்த குணசித்திரம், தவப் புதல்வன் பாதி குருடனாகும் பாடகன், வசந்த மாளிகை play boy &lover boy , நீதியில் தன்னால் பாதிக்க பட்ட குடும்பத்திற்கு பலன் தேடி தரும் ,அன்பு வேண்டி நிற்கும் லாரி டிரைவர்.
நான் 1972 தேர்ந்தெடுத்த காரணம் இந்த variety மட்டுமே. மற்ற படி எல்லா வருடங்களுமே நமக்கு சொந்தமான வெற்றி வருடங்களே.
Gopal Sir,
Even makers could not have thought in the angle of your character analysis of NT in ஞான ஒளி
Busy last week , so only today logged on to find ஞான ஒளி all the way
superb sir
Congrats to Karthik sir for 2000 posts
http://i1087.photobucket.com/albums/..._008754287.jpg
ஞான ஒளி - இந்த ஆய்வை பார்ததுமுதல் ஞான ஒளி திரையில் இப்போது வந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ண அலைகள் என் மனதில் எழுகிறது ..!
எப்படி இருக்கும் நண்பர்களே ?
gopal sir.
what ever it is ,the selection of 1972 year very very apt choice. gana oli write-up a memorable POKKISAM for us and future generations.
We are grateful to Mr Gopal Sir by bringing Mr Neyveliar to
post about Mr Antony & Mr Arun.
Now, we expect regular post from Mr Neyveliar.
ஒரு பாடல் காதலர்களின் காதல் ஆழத்தையும், அவர்கள் இணைவு நாடும் விழைவையும் , காம புயலால் அலைக்கழிக்க படும் மனதின் வன்மையையும், இன்பத்தை நாடி எதிர்பார்ப்பில் துடிக்கும் இரு உள்ளங்களையும் , ஒருசேர மெலடி மூலம் இணைக்க முடியுமா? கண்ணதாசன்- கே.வீ.எம்., TMS ,சுசீலா ,சிவாஜி-தேவிகா இணைவில் சாதித்தனர். முன்போ பின்போ இந்த வகை fusion நிகழவே இல்லை. என்னை மன அமைதியுடன் ,காம தீயில் வேக வைக்கும் இந்த அதிசய பாடல் "மடி மீது தலை வைத்து".
தேவிகா ஆசையுடன், எதிர்பார்ப்பு கலந்து காம விழைவு பார்வையை ,அழைப்புடன் கலந்து வீசி சிவாஜியின் முகத்தை வருட , அவர் அழைப்புக்கு முகமன் கூறி அந்த வருடலில் தோய இந்த காட்சி துவக்கம்.ஒரு போகன் வில்லா பூக்கள் சொரியும் மரத்தடியில் இருவரும் தழுவி ,தேவிகா உருண்டு சிவாஜியின் மனத்தை உருட்ட ,சேவல் குரலை கூவாதே என்ற செல்ல ஆணையிடுவார் கார்த்திக் சாரின் அண்ணி.
ஒரு இதமான ஓடல். துரத்தல் இன்ப விளையாட்டு.மணலில் ஒரு மூலையில் இருந்து இன்னொன்று ,பிறகு துவங்கிய இடத்திற்கு சென்று காதலனை வீழ்த்தியே விடுவார். தேவிகா ,சிவாஜியின் மார்பில் முகம் புதைக்கும் அழகே அழகு.(நீல வானம்,பலே பாண்டியா உதாரணங்கள்)பிறகு காதல் உள்ளங்கள் இணைவு,தேவிகாவின் நிறைவான அழைப்பு பார்வை, சிவாஜியின் வேட்கை நிறைந்த இதமான இன்ப பார்வை.கடைசியில் காட்ட படும் கலந்த காலடி சுவடுகள்
ஒரு erotic 1000வாலா வெடித்து நம் மனதை படார் படார் என துடிக்க வைக்கும், அந்த பாடல் இறுதி வரை தன் அமைதியை இழக்காது.
கடவுளே, எங்களை இப்படி இன்ப துடிப்பில் ஆழ்த்தவே இவர்களை படைத்து, எங்களையும் படைத்தாயோ??
திரு.ராமச்சந்திரன் அவர்களே
வருக!.
திரு.வாசுதேவன் அவர்களே
எவ்வளவோ சிரமங்கள், பணிகள் இருந்தாலும், கோபால் சாரின் ஞான ஒளி பதிவைக் கண்டவுடன் எழுச்சிபெற்று பதிவினை அளித்துள்ளீர்களே, அதுதான் நடிகர்திலகத்தின் வசீகரம், ஈர்ப்பு. ஞான ஒளி பதிவுடன் தங்களுடைய மீள் வருகைக்கு நன்றி.