காலந்தானே அருமருந்து
காயங்கள் அதில் ஆறுது
கவலைகள் பல மறக்குது
கண்ணீர் சுவடும் மறையுது
Printable View
காலந்தானே அருமருந்து
காயங்கள் அதில் ஆறுது
கவலைகள் பல மறக்குது
கண்ணீர் சுவடும் மறையுது
மறையுது சூரியன் மறைத்தது கண்ணன்
மன்னவன் சயத்ரதன் சிரங்கொய்து நீக்க:
மாறியது இருண்மதி தோன்றியது நிறைமதி
மறை பட்டர் மேல் மன்னன் சினம் போக்க :
அறிவது ஒன்று அது ஆண்டவன் அருள்
அவனியில் தேவை போல அழிக்க காக்க
காக்க வைத்து சோதிப்பது காதலி மட்டுமா
காலம் வராமல் விதை வெடித்து முளைக்குமா
கருதான் வளர ஐயிரண்டு திங்கள் குறையுமா
கச்சிதமான கணக்குடைத்து இயற்கையம்மா
இயற்கையம்மா புரண்டால்
இடுப்புவலியில் துடித்தால்
இமயமலையதில் பிளந்தால்
இடரிது ஜனனமா மரணமா
மரணமா இப்படியுமென மனம் கடந்து துடிக்குது
மரித்து போனது பல எண்ணங்கள் மண்ணுக்கடியில்
தோண்டி எடுப்பதில் தோள்கள்பல ஒன்றாய் சேருது
வேண்டி வணங்குது கைகள்பல சீற்றம் வேண்டாமென
செவிசாய்க்குமா இனியாவது இயற்கை என்றில்லாமல்
புவிசார் அறிவியலை மேம்படுத்தி வருமுன் காப்போம்
காப்போம் மௌனம்
அறியாமை மறைக்க
இறுக்கம் குறைக்க
கலகம் தவிர்க்க
மனசாட்சி உறைக்க
உணர்வோம் நிதானம்
நிதானம் தடுமாற வைக்கும் குடிபோதையால்
நித்தமும் குறையத் தொடங்கும் ஆரோக்கியம்
விட்டில்பூச்சியாய் அழித்துக் கொள்ளும் மனோபாவம்
வீடுவாசல் சுற்றம் நட்புவட்டம் விட்டுவிலகும்
மது விற்கும்தொழிலே அரசின் வருவாய்க்கு அடிநாதம்
மண்வளம் மிகுந்தும் மனிதவளம் சுருங்கும் வினோதம்
வினோதம் ஆச்சர்யம் அதிசயம்
அபூர்வமல்ல அந்த அனுபவம்
வறுமையில் வாடுபவன் தான்
வழங்குவான் பங்கு பசியில்
வாடும் இன்னொரு உயிர்க்கு
நலிந்தவன் கை கொடுப்பான்
நடக்க முயலும் நொண்டிக்கு
வங்கியிருப்பு வசிக்க வீடு
வருமானம் தரும் அலுவலகம்
பட்டம் பதவி அந்தஸ்து ஏதும்
இல்லாதவன் கட்டாந்தரையில்
படுத்ததும் உறங்கிவிடுவான்
படுத்ததும் உறங்கிடுவான்
புண்ணியவான் ! உடனே எழும்
பாழாய் போன குறட்டை சத்தம்
பாழும் மனைவிக்கோ சிவராத்திரி
பாவமும் புண்ணியமும்
பக்கத்து பக்கத்தில் ! இதில்
பாவம் யாருக்கு?
புண்ணியம் எவருக்கு ?
https://encrypted-tbn0.gstatic.com/i...Zr6TTeB4e35AeQ
எவருக்குத் தெரியும்
அடுத்த அத்தியாயம்
தெரிந்தாலேது சுவாரசியம்
இது தலைவிதிசார் விசயம்
இலவங்காய் பழுக்காது
கிளிக்கு அது புரியாது
ஆறறிவு மனிதனுக்கு
புரியும் இயற்கை கணக்கு
இயற்கை கணக்கு
புரிந்திருந்தால்
இன்னல் புரிவானோ
சுழர்ச்சி சங்கிலியை
சுக்கு நூறாய்
உடைப்பானோ
வேதியல் என்ற
பெயரால் மண்ணை
மலடாக்குவானோ
விஞ்ஞானம் என்று
விரும்பிய பாலினம்
பெறுவானோ!!!!
-
கிறுக்கன்
பெறுவானோ பேரின்பம் மனிதன்
பேருபெற்று வாழும் லௌகீகத்தில்
சந்தேகம் கேட்டான் சத்குருவிடம்
சாமானியனாய் ஒருவன் ஆவலுடன்
நித்தமும் நித்திரை கெட்டு
நிஜார்கூட நிலையாய் நிற்காத
பேஜாரான அன்றாட வாழ்க்கையில்
பேரின்பம் உனக்கொரு கேடாயென்றார்
பேரின்பம் உனக்கொரு கேடாயென்றார்
பெரும் ஆத்திரத்துடன் பிரயாணிகள்
பிரம்மானந்த நிலையில் ஓட்டுனர்
பாட்டிலில் பாதி குடித்த மதுபானம்
படங்களுடன் செய்தி சொகுசு பஸ்
பயணத்தின் நடுவில் நடுநிசியில்
பரலோகம் செல்லும் அவசரமில்லா
பாமரர்க்கே இது போல் சோதனை
சோதனையாய்த் தான் வந்துவிட்டாள் எதிரே
என்னவள் அருகில்
கூடவே சின்னவன்..
சும்மா இருக்காமல் என்னைப் பார்த்து “ஹாய்”
என்னவள் கண்களில் முதலில்
ஆச்சர்யக் குறி பின் கேள்விக் குறி..
நான் இவர் ரெண்டுபேரும் ஃப்ரண்ட்ஸ்
காலேஜில்
நீங்கள் அழகாயிருக்கீங்க..
பேதை என்னவள் க்ளீன்போல்ட்
உங்களைப் பார்த்ததில்லையே..
நானிருப்பது மியாமி
என்னவருக்கு அங்கு வேலை..
என்பக்கம் விழி வரவேயில்லை..
சின்னவன் கண்கள் மட்டும் குறுகுறு..
நெத்திலபொட்டு ஆண்ட்டி
அங்க்கிள் இஸ் நோமோர்.வித் மி.டா
குட்டியாய்ச் சோகம்..
அதற்குள் செல் அடிக்க
சாரி..
என்னைப்பார்த்து மென்சிரித்து
சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்கலாம் பை..
வேகமாக அவள் செல்ல
நாங்கள் பழகியவை எல்லாம் கரைந்தாற்போலபிரமை
சின்னவன்கத்தினான்
ஆண்ட்டி பொய்சொல்றாங்கம்மா..
என்னடா..
அவங்க ஃபோன்ல ஸ்க்ரீன்சேவர்
அப்பா ஃபோட்டோ பார்த்தேன்..எதுக்கும்மா...
கொஞ்சம் மெலிய சந்தோஷம் பரவினாலும்
எதிர்கொள்ள ஆரம்பித்தேன் பூகம்பத்தை...
பூகம்பத்தை அடைத்து வைத்தாள்
பூமித்தாய் பத்திரமாய் வயிற்றுக்குள்
பொல்லாத பொருமல் அவளுக்குள்
பொங்குவதெப்போ மனம் பதறுதப்பா
தப்பா தான் போகுமுன்னு
எப்போதும் நீ ஆரம்பிச்சா
தப்பா தான் அது போகுமுன்னு
எப்போதும் நீ புரிஞ்சுக்க
கண்ணும் கருத்தும் இருந்தாத்தான்
கூடும் உன் வேல
ஒன்னிருந்து ஒன்னில்லனா அது
ஒத்த தண்டவாளம் போல
ஓடாது தொடர் வண்டி
எப்போதும் அது மேல.
-
கிறுக்கன்
அது மேல எனக்கு ஒரு இது
அடக்க முடியாம கட்டிகிட்டேன்
ஆசையே துன்பத்திற்கு காரணமாம்
அது பொய் – இன்னிக்கும்
அவளில்லாமல் நானில்லை
அதுவே மெய்
https://encrypted-tbn2.gstatic.com/i...SH45BnrLK-k8-w
மெய் மெலியும் மறையாது பொய்
பெருக்கும் ஆனால் பிழைக்காது.
-
கிறுக்கன்
பிழைக்காது என மருத்துவர் கைவிட்ட
பெரியப்பாவைப் பார்த்து
ஆறுதல் தைரியம் சொல்லி
வீட்டிற்கு வந்த அப்பாவிற்கு
ஹார்ட் அட்டாக்
இரு தினங்களில் போயும் விட்டார்..
பெரியப்பாவோ பிழைத்தெழுந்து
வாழ்ந்தது இன்னுமிருபது வருடம்..
மரித்த தகவல் சமீபத்தில் தான் வந்தது..
ம்ம்
காலத்தின் கணக்கு
புரிவதில்லை எப்பொழுதும்
எப்பொழுதும் நமக்கெல்லாம் நல்ல பொழுதே
எழுவதில்லை பஞ்சாங்கத்தின் தேவையே
எப்படி நாளும் நட்சத்திரமும் நடத்துமாம்
எமகண்டமும் ராகும் கேதும் தடுக்குமாம்
எண்ணிய காரியம் ஒன்றே முக்கியமாம்
எந்த தாமதமும் குளிகையும் வேணாமாம்
வேணாமாம் அவளுக்கு
எனக்குத் தாப்பா..
என்றாள் சின்னவள்..
நா எங்க சொன்னேன் எனக்கே தாப்பா
இது பெரியவள்..
ஏற்கெனவே பாதி சின்னவளிடம் கொடுத்தாயிற்று
இதென்ன குழப்பம்..
சரி என ரெண்டு பேருக்கும் கொடுக்காமல்
வாயில் போடுவது போல் பாவனை செய்து
ஒளித்தால்...
ச்சீ வாடி நாம போலாம்
அப்பா மோசம்..
நா அம்மாகிட்ட சொல்லி
உனக்கு வாங்கித் தர்றேன்..
அதானே போப்பா
நான் சொன்னேன்லடி அப்பா எப்போதுமே ஏமாத்துவார்னு..
இந்தா பெரியவளே எடுத்துக்கோ
ம்ஹூம்
சின்னவளே..
போப்பா பெரிசு மறுபடி வாங்கு
நாங்க பண்ணிக்குவோம் ஷேர் இல்லடி...
அடிப்பாவி...
அடிப்பாவி நானொரு அப்பாவி
அழகான ஒப்பனை பார்த்தேன்
கண்ணில் இட்ட மையில் மையல்
கமகம மல்லிகை சூடினாள் தையல்
இனிய மாலைபொழுதென கனவில்
நானிருக்க விரைந்தாய் தோழியுடன்
தோழியுடன் கைகோர்த்து நடக்கும்
மழைப்பருவநாட்கள் மறக்கமுடியாதவை
செம்மலர்கள் பூத்துக்குலுங்கும் மரக்கிளையை
ஆசைதீர நான் பிடித்துக்குலுக்க
அவளுக்கென்றே அதுவரை காத்திருந்ததுபோல
மழைத்துளிகள் ஒவ்வொன்றும் மகிழ்ச்சியோடு நீராட்ட
நிலைகுலைந்து ஒன்ன என சிணுங்கிக்கொண்டே
அடுத்து வரப்போகும் மரக்கிளைக்காக
ஆவலுடன் நடைபோடும்
அவளின் அழகை என் சொல்ல!
சொல்ல நினைப்பதை சொல்வாய்
வெல்லும் சொல் இன்மை அறிந்தே
சொல்லும் சூடான கனலும் ஒன்றே
எறியும் முன் எரித்திடும் கையை
எடுக்கும் முன் எச்சரிக்கை நன்றே
அழகான ஆண்பெண் ஆடையைப் போல
ஆர்வம் தூண்டி அளவாய் பேசு
ஆவேசம் தவிர் ! ஆபாசம் தவிர் !
https://encrypted-tbn3.gstatic.com/i...1qOmTZa6qGg1cQ
தவிர் அலங்காரத்தை
ஆசை வார்த்தையை
அன்பான பார்வையை
இதமான பணிவிடையை
கூனியின் துர்போதனை
கேட்டாள் கைகேயி
கேட்டாள் இரு வரம்
கெட்டாள் அமங்கலி
விட்டதில்லை விதி
விரைந்தோடும் நதி
நதிக்கரையில் உடை கழட்டி
அழுக்குதீர அடித்துதுவைத்து நீராடி
வெயில்காய உலர்த்திவிட்டு உடுத்தி
நகர்வலம் புறப்பட்டான் நாடோடி
இயற்கையிருக்கு எண்சான் மேலுக்கு
வயிருதான் வாடி வத்தியிருக்கு
யாதும் ஊரே யாரும் கேளீர்
யாதும் ஊரே யாரும் கேளீர்
யதார்த்தமிந்த தீர்க்கரிசனம்
கண்டம் கடக்கும் குடும்பம்
அண்டை வீடு அமெரிக்கா
அரபு நாடு அள்ளித்தரும்
கருப்பு பழுப்பு வெள்ளை
கலந்து போகுது உறவில்
வெளிநாட்டு மாப்பிள்ளை
வேற்று மொழி போற்றிட
ஒற்றுமை கண்டதுலகம்
மதங்கள் மறந்துபோகுது
மனங்கள் விரிந்து மலருது
மலருது அங்கே மணக்குது காதல்
மனதில் விரும்பியவளை
மணமுடிக்கையில் : மட்டுமின்றி
மணந்தவளை மனதில் விரும்பினால்
மலரும் அங்கும் மாசற்ற காதல் !
https://encrypted-tbn0.gstatic.com/i...YTH0kfg-k_7SkQ
மலரும் ஒரு முக்கியமான பேசுபொருள்
மாளாத காதல் சொல்லும் சங்கத்தில்
ஊடல் கூடல் கருணை கோபம் தாபம்
உவமை உருவகங்களாய் பாடல்களில்
மகரந்தச் சேர்க்கைக்கு மட்டும்தானா அவை
மௌனமாய் பூமி நமக்களிக்கும் ரகசியம்
http://dbmlag.info/wp-content/upload...wallpapers.jpg
ரகசியம் சொல்றேன்ப்பா வாவேன்..
சின்னவள்
பள்ளிச் சீருடையில்
ஸ்கூல்பை தண்ணீர்பாட்டில் சகிதம்
பஸ்ஸிற்காகக் காத்திருக்கையில்
சொல்ல
தலை குனிந்து அவளுக்குக் காது கொடுத்தால்
பிஞ்சு இதழ்கள் காதில் உரச்
அந்த உணர்வில்
பேசியது எதுவும் விழாமல் சொக்க
பஸ் வந்துவிட
சட்டென நிமிர்ந்து பை டாடி
நான் சொன்ன சீக்ரட் ஞாபகம் வச்சுக்கோ
டாட்டா காட்டி
வீடு வந்து
ஆபீஸ் சென்று மறுபடி வீடு வந்தும்
இதே நினைவு
ஒரு நேர்க்கோட்டில்..
என்ன ரகசியம் குட்டி சொன்னது..என..
கனகாரியமாய்
ஹோம்வொர்க் செய்துகொண்டிருந்தவளை
தனியா வா எனச் சொல்லி
ஹே இவளே
என்னப்பா
காலைல சீக்ரட் சொன்னியே
அது என்ன..
ஒரு புரியாத விழி
கொஞ்சம் கோப முறை....
“போப்பா...மறந்து போச்..!”
மறந்து போச் சங்கடமான சமையல்
பறந்து போச் செக்கு மாட்டு அலுவல்
நெருங்கிவிட்டது பறக்கும் காலம்
இரு பக்கமும் பொங்கும் ஆர்வம்
ஆர்வம் வாழ்க்கையின் அவசியம்
ஆயிரம் தோல்வி கண்டபின்னும்
அயராமல் அதனை படியாக்கி
அரிய சாதனை செய்தவர் ஆயிரம்
அரைகுறைக்கும் ஆக்கல் வீரனுக்கும்
அகழி அடிப்படையில் ஆர்வம் தானே !
அது இருந்தால் போதுமே – தன்னால்
ஆற்றலும் வெற்றியும் வந்து சேருமே!
https://encrypted-tbn1.gstatic.com/i...H_9Lu9e_GNGi8Q
சேருமே ஞானச்செருக்கும்
வருமே மனத்தெளிவும்
பிறக்குமே புது யுகமும்
நிமிர்ந்து நட பெண்ணே
பெண்ணே
வரம்கேள் தருகிறேன் என்றேன்
அடுத்த ஜென்மத்திலும்
பெண்ணாகவே பிறக்கணும் என்றாய்
ஒவ்வொரு ஜென்மமும்
உன்னை இதுபோல நான்
பின்தொடர்ந்து வருவது தெரியுமா உனக்கு
பெண்ணாகவே இருப்பதில்
அப்படியென்ன பெருமை என்றேன்
ஒருமுறை நீயும் பெண்ணாய் பிற
உணர்வாய் என்றாய்
என்றாயே அன்று எதிர்கொள்வேன் எதையும்
இறப்பையும் தாங்கும் இதயம் எனக்கு என்று
என்னாயிற்று இன்று இப்போது வா நேரமாயிற்று
இழுத்துச்சென்றனர் போலீஸ் தர தரவென்று
அழுதான் ஓவென்று தொழுதான் தூக்குக் கைதி
என்னால் முடியாது முடியவே முடியாது
என்றுமே முடியாது என்றான் கைதி
ஆர்பாட்டம்! அமர்க்களம் ! ஐயகோ !
https://encrypted-tbn1.gstatic.com/i...cJrsoIrTRdPv8z
என்னை விட்டு விடுங்கள்! வேண்டினான்
அதெல்லாம் முடியாது - விதி என்றனர்
அவனது மனைவியை பார்க்க அவளது
அறுவையை கேட்க ! அது பார்வை நேரம் !
/ * எங்கோ படித்த ஜோக்/
நேரம் காட்ட எத்தனை உதவி
கடிகாரம் நாட்காட்டி என்பன
எதையும் நாடாமல் இருக்க
அவற்றில் நாட்டமில்லாமலிருக்க
ஒரு பருவம் வரும் பொழுது
அதுதான் உண்மையில் மகிழ்வு
மகிழ்வை மனதார ஒரு முப்பது வருடம்
முட்ட முட்ட அனுபவித்தோம் இருவரும்
மோதியது விதி ஆனது எங்கள் மணம்
மகிழ்ச்சி எங்கே ? அப்புறம் அது காணோம் !
https://encrypted-tbn2.gstatic.com/i...ykxyNV4q6zFMUQ
காணோம் என்று தேடாதீர்
பயணம் பல மணி நேரம்
பார்த்துப் பேச பல கதை
இப்பக்கம் பார்க்க தாமதம்
தவிர்க்க முடியாததொன்றே
தொந்தரவின்றி மகிழ்வீரே
மகிழ்வீரே அகம்குளிர
மன்றத்தின் தீர்ப்பு நற்செய்தியறிந்து
உணர்வீரே ஒருசேர
ஊழலுக்கு உய்வுண்டா தென்பதை
புகழ்வீரே எக்காலமும்
தாமதமாய் வந்தாலும் தரம்தாழா நீதியை
நீதியை தேடும் நியாயவான்களே- இந்த
சேதியை கேளுங்கள் செப்புவது உண்மை
சுட்டவனை தூக்கில் போடும் சட்டம்
சுட்டவனுக்கும் சொர்க்கம் காட்டும்
சுட்ட அப்பளம் சூடான பிசி பேளாவுடன்!
https://encrypted-tbn3.gstatic.com/i...e9AYkOs2ZVg9OA