//நான் பாடல்களில் கேட்பது இனிமை ப்ளஸ் லிரிக்ஸ் மட்டுமே..இன்னின்னார் எனப்பார்ப்பதில்லை//
??????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Printable View
//நான் பாடல்களில் கேட்பது இனிமை ப்ளஸ் லிரிக்ஸ் மட்டுமே..இன்னின்னார் எனப்பார்ப்பதில்லை//
??????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Courtesy: Tamil Hindu
‘பாசம்’ படத்தில் எம்.ஜி.ஆர். | படம் உதவி: ஞானம்
இயற்கைக் காட்சிகளை ரசிக்காதவர் யார் இருக்க முடியும்? ஆனால் இவை நம்முள் ஏற்படுத்தும் உணர்வுகள் ஒரே மாதிரியானவை அல்ல. வனத்திலும் நிலத்திலும் வாய்க்கால் ஓரத்திலும் பயணிக்கும் தருணங்களில் இயற்கைக் காட்சிகள் தரும் உணர்வை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்தும் இரண்டு பாடல்களைப் பார்ப்போம்.
எனக்கென எதுவும் இல்லை, எல்லாம் பொது என்கிறது இந்திப் பாடல். இயற்கையின் அழகெல்லாம் எனக்காகவே படைக்கப்பட்டுள்ளன என்கிறது தமிழ்ப் பாடல். இரண்டுமே இயற்கையை வெவ்வேறு விதமாக ஆராதிக்கின்றன.
இந்திப் பாடல்
படம்: பரிச்சய் (அறிமுகம்). பாடலாசிரியர்: குல்ஜார்; பாடியவர்: கிஷோர் குமார்; இசை: ஆர்.டி. பர்மன்.
பாடல்:
முசாஃபிர் ஹூம் யாரோன்
ந கர் ஹை ந டிக்கானா
முஜே சல்த்தே ஜானா ஹை
பஸ் சல்த்தே ஜானா
ஏக் ராஹ் ருக் கயீ தோ அவுர் ஜுட் கயீ
மே முடா தோ ராஹ் சாத் சாத் முட் கயீ
…
பொருள்:
நான் ஒரு வழிப்போக்கன் - நண்பனே
வீடு, இருப்பிடம் எதுவும் எனக்கில்லை
சென்றுகொண்டிருப்பதே என் பணி - ஓரிடம்
நின்றுகொண்டிருக்காமல். எப்பொழுதும்
பயணித்துவந்த பாதை ஒன்று பாதியில்
நின்று போய் பயணம் நின்றது - உடன்
வேறு திசையில் திரும்பிய என்னுடன்
திரும்பியது என்னுடைய பயணப் பாதையும்
(ஏனெனில்) என் இருப்பிடம் இருப்பது
இறக்கை கட்டிவிடும் காற்றில் அல்லவா
பகல் இங்கே தடுத்து பக்கம் அமர்த்தினால்
இரவு அங்கே சைகையால் எனை அழைக்கும்
காலையும் மாலையும் என் கவின் தோழர்கள்.
நான் ஒரு வழிப்போக்கன் -நண்பனே
வீடு, இருப்பிடம் எதுவும் எனக்கில்லை
சென்றுகொண்டிருப்பதே என் பணி.
தமிழ்ப் பாடல்
படம்: பாசம்; இசை: விஸ்வனாதன், ராமமூர்த்தி;
பாடல்: கண்ணதாசன்; பாடியவர்: டி.எம்.சௌந்தர்ராஜன்.
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நான் அறிவேன்
என்னை அவனே தான் அறிவான்
தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்
எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்
??????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!// கேள்விக்குறியும் ஆச்சர்யக் குறியும் ஜாஸ்தியாக இருக்கிறதே..:) சரி சரி பார்ப்பது பிக்சரைசேஷன்.. ரொம்பப்பார்க்க மாட்டேன் பாடற்து யார்னு..சிலசமயங்களில்.. அது சரி 70 களின் பாலா 80களின் பாலாவும் பிடிக்குமே..
சரி சரி..(வீக்லி பர்சேசஸ்க்கு வெளில நிலா உலா போனோமா இப்பத்தான் வந்தோம்..ஹப்ப்ப்பா.. பெருமூச்..:)
காலீல போடலையோன்னோ இப்ப போடறேன்..காதல் காதல்காதல் சாங்க்..இது பாக்கறச்சேல்லாம் எனக்கு ஸ்கூல் நினைவு வரும்.. ஸ்கூல் டேஸ்ல நான்போட்ட ட்ராயர் டைப்பில் சிம் போட்டிருப்பாங்க! :) not kodu.. plain ...
https://youtu.be/9CxCZg9_IE0
எஸ்.வாசுதேவன் இரண்டுமே அழகியபாடல்கள்.
//எனக்கென எதுவும் இல்லை, எல்லாம் பொது என்கிறது இந்திப் பாடல். இயற்கையின் அழகெல்லாம் எனக்காகவே படைக்கப்பட்டுள்ளன என்கிறது தமிழ்ப் பாடல். இரண்டுமே இயற்கையை வெவ்வேறு விதமாக ஆராதிக்கின்றன// (ஹப்பாடா.. கொஞ்சம் கீழிறங்கி அழகா ஒருவரி இருவரி கோட்ஸ் லாம் எழுதறீங்க அழகா.. நன்றி.. இன்னும் எழுதுங்கள்)
. என்ன கிஷோர் ஜஸ்ட்லைக் தட் தத்துவம்.. உலகம்பிறந்தது எனக்காக பாஸிட்டிவ் அப்ரோச்..
கிஷோர் பாட் கொஞ்சம் என் ஸ்டைலில் எழுதிப் பார்க்கட்டுமா..
ஆற்றில் செல்லும் சிற்றலையாய்
…அலைந்தே திரியும் என்வாழ்க்கை
பாட்டில் சொல்ல விழைகின்றேன்
…பாதம் போக்கில் செல்கின்றேன்
வாட்டும் உளமோ எனக்கில்லை
…வரட்டும் எதுவும் எனவிருப்பேன்
காற்றாய் பூமி வானத்தில்
…கனிவாய் நடுவில் வாழ்கின்றேன்..
//முசாஃபிர் ஹூம் யாரோன்
ந கர் ஹை ந டிக்கானா
முஜே சல்த்தே ஜானா ஹை
பஸ் சல்த்தே ஜானா
ஏக் ராஹ் ருக் கயீ தோ அவுர் ஜுட் கயீ
மே முடா தோ ராஹ் சாத் சாத் முட் கயீ//
https://youtu.be/_nCi5kwD1Y8
**
ம.தியின் துள்ளல் கலந்த ஓட்டம் ..துள்ளும் இசை துள்ளும் வரிகள்..
துள்ளிடும் தென்றலும் விரைந்து சென்று
…தூறலைக் காற்றில் கலந்து நிற்கும்
எள்ளிடும் சிரிப்பாய்ப் பூக்கள் மெல்ல
….எண்ணமும் வண்ணமாய்க் காட்டு மங்கே
அள்ளிடும் வனப்பை இயற்கை அன்னை
..என்றுமே இருப்பில் வைத்து நிற்பாள்
கள்ளமாய்ச் சிரிக்கும் விதியின் செய்கை
..கணமெதும் அறியாள் அவளு மன்றோ…
இயற்கை அன்னையை வணங்குதலில் ஆரம்பித்து சொந்த அன்னையை வணங்குதற்போல இருக்கும் பாடல் வரிகள்.. பட் முழுக்க யோசித்தால் இயற்கையைத் தான் சொல்கிறது எனப் படுகிறது.. படம் நான் பார்த்ததில்லை..
https://youtu.be/Wu_2npFoJWg
இன்னும் இன்னும் எழுதுங்கள் எஸ்.வாசுதேவன் ஸார்… :)
Thanks for your compliments Mr CK. I am just reproducing the article which appeared in the Tamil Hindu and it will be a
huge task to write like you. I will try to do it when I have the necessary facility.
Regards
கொஞ்சம் போரடிக்கறா மாதிரி இருக்கே..
என்ன பண்ணலாம்..
கார் ஓட்டக் கத்துக்கலாம்..
கன்னியரின் கடைக்கண்பார்வை பட்டாலே வாலிபர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்.. எங்கோ படிச்சது..
அதுவே இள நங்கை ஒருத்தி க்ளட்ச் கியர் நு கத்துக் கொடுத்தால்..ஆஹா நன்னாவே ஓட்டலாம்..காரை..( எனச் சொன்னாலும் கொஞ்சம்கான்ஸண்ட்ரேஷன் கிடைப்பது கஷ்டம்) என ஆன்றோர்கள் சொல்வார்கள்..!
*
இது clutch
இது ? gear
இது என்ன ?
accelerator
ஒஹொ !
இது ? brake
clutchசை மிதிச்சி gearய் மாத்தி
acceleratorரை கொடுக்கனும்
steeringகை பிடிச்சி
hornனை அமுக்கி
பாதையை பாத்து போகணும்
சமயத்தில் brakeகையும் போடனும்
ஹாஹா அப்பிடியா ok
புதுசு இது புதுசு
அழகென்னும் பரிசு கிடைத்தது புதுசு
அடிக்கடி மனசு துடிக்கிற வயசு
இளசு இது இளசு இளசு இது இளசு
பருவத்தில் இளசு பதினெட்டு வயசு
இதயங்கள் சிறிசு எண்ணங்கள் பெரிசு
இளசு இது இளசு
சத்தமிட்டு சத்தமிட்டு வண்டு வந்து பறக்கும்
முத்தமிட்டு முத்தமிட்டு வண்ணமலர் மயங்கும்
கொவ்வை நிற செவ்விதழை கொஞ்சுகின்ற போது
முக்கனியும் சக்கரையும் தித்திப்பது ஏது
நெஞ்சமொரு பஞ்சு மெத்தை கண்ணிரண்டும் விளக்கு
பிஞ்சு நடை அஞ்சிவரும் வஞ்சிமகள் எனக்கு
இன்றுமுதல் அன்பு மயில் உன்னருகில் இருப்பாள்
அந்திபகல் எப்போதும் கையணைத்து நடப்பாள் (அடிப்பாவி நம்பிக்கை இல்லையா .. கார் ஓட்டத் தான் கத்துக்கிட்டேனே)
https://youtu.be/hrUyqHBqMH8
அதை ஏன் கேக்கறியள்.. மத்யானம் வெயிலா.. ஷாப்பிங்க் போனோமா பின்ன என்னவாக்கும் ஆச்சு. வீட் வர்றதுக்குமுன்னாடி காமத் ஹோட்டல் நார்த் இண்டியன்.. சப்பாத்தி நோ ரைஸ் தால், ghadi கடி, ஆலு சப்ஜி, பனீர் சப்ஜி என ஒரு கட்டுக் கட்டிட்டு வீட்டுக்கு வந்தும் தூக்கம் வந்திட்டில்லா..
ஏனோ தெரியலை.. இந்தவெய்யில் ஒத்துக்கறதில்லை எனக்கு அதுவும் 9 மன் த்ஸ் வெயில் என்று பழகிபலகாலம் ஆனாலும் இந்தவருடம் கொஞ்சம் கஷ்டமாய்த் தான் இருக்கிறது.. ஸோ என்னதான் வயிறு நிரம்ப ஒருகட்டு கட்டினாலும்.. ஹை.. கட்டு..
இந்தக்கட்டு இருக்கிறதே நிறைய அர்த்தங்கள்..
கட்டு – கட்டுக்கோப்பான நல்லவிதமான
கட்டு – அணை
கயிற்றினால் கட்டு – கயிற்றினால் பிணை..
கட்டு – ஃபுல்லா சாப்பிட்டேன் ( பிற்கால பேச்சு வழக்கு)
கட்டு – வெட்டி விடு என ஆங்கிலத்தில் டைரக்டர் சொல்வார்!
கட்டு – கன் ஸ்ட்ரக்ட் என்ற அர்த்ததிலும் வரும்
கட்டி – என்றாலும் அணை தான்.
ஆனால் கட்டி என்றால் ஸாலிடான பொருள் என்று ஆகிவிடும்
ஹிந்தியில் கட்டி என்றால் கா என்று அர்த்தம்..என் கேர்ள் ஃப்ரண்ட் சின்னவயதில் கட்டி விட்டுச் சென்றவள் தான் இன்று வரை காணேன்..விக் விக் விக்.
ம்ம் என்னெல்லாம் பாட்டு இருக்கு..
*
கட்டான கட்டழகுக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணும் ஒரு கண்ணா..
*
கட்டித் தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டித் தட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா
*
காளை வயது கட்டான சைசு களங்கமில்லா மனசு
*
கட்டோடு குழலாட ஆட
*
கட்டழகுப் பாப்பா கண்ணுக்கு
கள்ளத்தனம் ஏனோ பெண்ணுக்கு
*
கட்டழகில் நிறைய உண்டு..பாடல்கள்..
நீ கட்டும் சேலை மடிப்பிலே நான் மயங்கிப் போனேனே
உன் கட்டழகு மீசையிலே கிறங்கிப் போனேனே
.
கட்டழகுத்தங்கமகள் திரு நாளாம்..
*
தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ
*
கட்டழகு மேனியைப்பார் பொட்டும் பூவுமா
*
கட்டழகுப் பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்டமிடம் அத்தனையும் இன்பமின்றித் துன்பமில்லை
*
ஆக பார்க்கப் போவது..
*
கட்டுக்குலையாத மங்கை வண்ணம்
கட்டித்தங்கம்
விட்டுப்பிரியாமல் கொஞ்சும் நெஞ்சம்
சொர்க்கம் சொர்க்கம்
பத்துப்பதினாறு முத்தம் முத்தம்
தொட்டுத்தரும் பாவை பட்டுக்கன்னம்
கட்டுக்குலையாத மங்கை வண்ணம்
விட்டுப்பிரியாமல் கொஞ்சும் நெஞ்சம்
*
(ஏன்னாக்க இதுல கட்டியும் இருக்கு கட்டும் இருக்கே )
https://youtu.be/8K5G9cPjf8c
*
விட்டுப்போன கட்டு சொல்வீங்க தானே.. :)
*
ம.தியோட இந்தப்பாட்டு ப் பிடிக்கும்..
கட்டழகே கட்டுக் கோப்பான அழகுன்னு அர்த்தம்..இங்கே கட்டான கட்டழகுன்னா.. கட்டுக்கோப்பான கட்டழகு..
கட்டான கட்டழகுக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணும் ஒரு கண்ணா
https://youtu.be/sA-BIvBMey8
*
கட்டு---புதினாக்கட்டு, கீரைக் கட்டு, கொத்தமல்லிக் கட்டு, புல்லுக்கட்டு.
(கட்டு என்ன விலை?)
கட்டு கட்டா ரூவா நோட்டு
கட்டு கட்டா திருநீறு
உடற்கட்டு
கட்டுமஸ்தான உடல்
கட்டி---வெல்லக்கட்டி
வாயைக் கட்டி வயித்தைக் கட்டி அப்புறம் வயித்துல கட்டி, மூளையிலே கட்டி, சலவைக் கட்டி
களிமண் கட்டி
கட்டிளங்காளை
நீர் யோசிங்காணும். எங்களையும் ஏன்?........ :)
இப்பவே கண்ணக் 'கட்டு'தே
இந்தாங்க சி.க,
நீங்க போட்ட பாட்டையெல்லாம் கட்டும் பாட்டு.:) உங்களுக்கேத்த 'கட்டு' பாட்டு. 'கட்டு'ப்பாடோட கேளுங்க. பாருங்க.:)
'கட்டு மெல்லக் கட்டு..
தொட்டுக் கட்டத்தான் கட்டழகு சிட்டு'
லட்டு மாதிரி பந்து போடுகிறீரே!:) ராட்சஸியாச்சே! விட்ருவோமா?:)
https://youtu.be/2C8PvdZlm_o