:lol: Count me in. Me? Jambavan? Too much, madam :DQuote:
Originally Posted by rangan_08
Same same here. :DQuote:
Originally Posted by rangan_08
Printable View
:lol: Count me in. Me? Jambavan? Too much, madam :DQuote:
Originally Posted by rangan_08
Same same here. :DQuote:
Originally Posted by rangan_08
என்ன பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுறீங்க ..பரவாயில்லை .. அதை சிரமேற்கொண்டு மொழி பெயர்த்தது நமது முரளி சார் என சுட்டிக்காட்ட மட்டுமே அதை குறிப்பிட்டேன் 8-)Quote:
Originally Posted by kaveri kannan
ஆகா ..நான் மறுப்பு சொல்லாததால் நான் ‘ஜாம்பவான்’ என ஏற்றுக்கொண்டதாக அர்த்தமா ? NEVER :lol:Quote:
Originally Posted by groucho070
சகோதரி சாரதாவின் பெயரும் மற்றும் முரளி, ஜோ, மோகன், செந்தில், ராகேஷ், பாலா, உள்ளிட்ட அனைவருமே இத்திரியின் ஜாம்பவான்கள் என்பது கண்கூடு. இவ்வரிசையில் காவேரி தந்த கலைச் செல்வனாக கண்ணனும் சேர்ந்து விட்டார். தங்கள் பதிவுகளையெல்லாம் பார்த்து ரசிக்கும் ரசிகனாக அடியென் உள்ளேன் என்பதே உண்மை.Quote:
Originally Posted by saradhaa_sn
பாராட்டுக்கள்.
பம்மலார் திரையரங்கு சாதனைகளை மட்டுமே ஒரு புத்தகமாக வெளியிட்டால் குறைந்தது 500 பக்கங்களாவது தேவைப்படும்.
ராகவேந்திரன்
மேடம்,என்ன வெச்சு காமெடி கீமெடி பன்னலியே?......Quote:
Originally Posted by saradhaa_sn
தங்கள் அன்புக்கு நன்றி.
டியர் பம்மலார்,
நாஞ்சில் நகரமாம் நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்கில் அண்ணன் நடிகர்திலகத்தின் திரைப்பட சாதனை விவரங்கள் அட்டகாசமானதொரு தொகுப்பு. வழக்கம்போல இந்தத்தொகுப்பிலும் தங்களின் அபார உழைப்பும், சிரத்தையும் தெரிகிறது. பட்டியலைப்பார்க்கும்போது, ஞானஒளி துவங்கி பெரும்பாலான படங்கள் (ஒரே நாளில், அல்லது சிறிய இடைவெளிகளில் வெளியானவை தவிர்த்து) அத்திரையரங்கிலேயே வெளியானதாகத்தெரிகிறது.
நாஞ்சில் நகரம் எப்போதுமே அரசியலில் பெருந்தலைவரின் கோட்டையாகவும், கலையுலகில் நடிகர்திலகத்தின் கொத்தளமாகவும் திகழ்ந்தது (திகழ்வது) கண்கூடு.
தென்கோடியில் துவங்கியுள்ளீர்கள். திருத்தணி வரை தொடரட்டும் உங்கள் திரையரங்க வெற்றி உலா.
வசந்த் தொலைக்காட்சியில் வாரம்தோறும் ஒளிபரப்பாகிவரும் 'சிங்கத்தமிழன் சிவாஜி' நிகழ்ச்சியில் நேற்றைய (07.04.2010) எபிசோடில் கலந்துகொண்டு, தன் சித்தப்பாவான நடிகர்திலகத்துடன், தன்னுடைய அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டவர் நடிகர்திலகத்தின் அண்ணன் திரு சூரக்கோட்டை தங்கவேலு மன்றாயர் மகன் (சிவாஜி மனோ என்கிற) மனோகர். (சிவாஜி புரொடக்ஷன்ஸ் படங்களின் டைட்டிலில் 'தயாரிப்பு: சாந்தி நாராயணசாமி, டி.மனோகர்' என்று இடம்பெறுமே, அவர்தான்). இதோ அவருடைய வார்த்தைகளிலேயே.....
"நடிகர்திலகம் எனது சித்தப்பாவாக இருந்தாலும் அவரை நான் 'அப்பா' என்றுதான் அழைப்பது வழக்கம். என்னுடைய கல்லூரிப்படிப்பை முடித்ததிலிருந்து நான் அவருடனேயே அவருடைய நிழலாக எங்கும் சென்று வருவேன். அது படப்பிடிப்பாக இருந்தாலும் அரசியல் நிகழ்ச்சியாக இருந்தாலும் நான்தான் அவருடன் போவேன். படப்பிடிப்புக்குப்போனால் அவருடைய ஷூட்டிங் முடியும்வரை இருந்து அழைத்து வருவேன்.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்த இந்தி நடிகை நர்கீஸ் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் இறந்துவிட்டதால், மீதமுள்ள நான்காண்டுகளுக்கு அப்பாவை அந்தப்பதவியில் பிரதமர் இந்திராகாந்தி நியமித்தார். அப்போது பதவியேற்புவிழாவுக்கு நானும் கமலாம்மாவும் தான் சென்றிருந்தோம். அதன்பிறகு அப்பா ஒவ்வொருமுறை டெல்லி செல்லும்போதும் நான்தான் உடன் சென்று வந்தேன். வழக்கமாக எம்.பி.க்களுக்கு அவர்களுக்கான குவாட்டர்ஸில்தான் இடம் ஒதுக்குவார்கள். ஆனால் இந்திரா காந்தி அவர்கள் அப்பாவுக்கு ஒரு அமைச்சருக்கு உரிய அந்தஸ்தோடு தனி 'வில்லா' (பங்களா) ஒதுக்கும்படி உத்தரவிட்டார். அப்பா மீது இந்திரா காந்தி அவர்கள் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். அப்பா என்ன சொன்னாலும் சிரித்துக்கொண்டே கேட்பார். சில சமயங்களில் அப்பா சொல்வதை நான் அவர்களுக்கு மொழிபெயர்த்துச்சொல்வேன். அப்போது தேவையில்லாதவற்றை எடிட் செய்து சொல்வேன். 'நான் சொன்னதை அப்படியே சொல்லுடா' என்பார் அப்பா.
திரு சஞ்சய்காந்தி இறந்தபோது அப்பா (எம்.பி.ஆகும் முன்பு) வெளியூரில் ஷூட்டிங்கில் இருந்தார். அதனால் உட்னடியாக டெல்லி போகமுடியவில்லை. பின்னர் சிலநாட்களிலேயே கலைஞரின் 'மாடிவீட்டு ஏழை' படப்பிடிப்புக்காக காஷ்மீர் செல்லும் வழியில், மற்றவர்களையெல்லாம் காஷ்மீர் அனுப்பிவிட்டு, அப்பா, கமலாம்மா, நான் நாங்கள் மூவரும் மட்டும் டெல்லி சென்று இந்திரா அவர்களைச் சந்தித்தோம். அப்பாவைக்கண்டதும் இந்திரா அம்மையார் கண்ணீர் விட்டு அழுதார். அவர்களுக்கு ஆறுதல் சொல்லமுடியாமல் அப்பாவும் கமலம்மாவும் சேர்ந்து அழுதனர். மனது கேட்காமல் நான் வெளியே வந்துவிட்டேன். சிறிது நேரம் கழித்து அவர்கள் மூவரும் வெளியில் வர, இந்திரா அம்மையாரிடம் விடைபெற்று நாங்கள் காஷ்மீர் சென்றோம்.
இந்திரா காந்தி அம்மா திடீரென சுடப்பட்டு இறந்தபோதும் அப்பா ஊட்டியில் படப்பிடிப்பில் இருந்தார். செய்தியறிந்தவுடன் சென்னை திரும்பி, உடனடியாக டெல்லி சென்றோம். டெல்லி சென்றதும் திரு ஆர். வெங்கட்ராமன் அவர்களுக்கு போன் செய்து உடனடியாக இந்திரா அவர்களுக்கு இறுதிமரியாதை செலுத்தவேண்டும் என்று சொன்னபோது, 'இந்திரா அவர்களின் உடலை இன்னும் தீன்மூர்த்தி பவனுக்கு கொண்டுவரவில்லை. வந்ததும் நீங்க வாங்க' என்றார். பின்னர் உடல் தீன்மூர்த்திபவனுக்கு கொண்டுவரப்பட்ட செய்தி கிடைத்ததும் விரைந்தோம். உள்ளே நுழைய முடியாத அளவுக்கு கூட்டம். உள்ளே போக முடியாமல் திணறினோம். பாதுகாப்புக்காக ராணுவம் நின்றிருந்தது. அதில் ஒரு ராணுவ அதிகாரி தமிழ்நாட்டுக்காரர். அப்பாவைப்பார்த்ததும் எங்களை தனியே அழைத்துச்சென்று எல்லோரும் வெளியே வரும் வழியாக உள்ளே அழைத்துச்சென்றார். இந்திரா காந்தி அம்மையாரின் உடலைப்பார்த்து அப்பா கதறியழுதார்.
அதுவரை ராஜீவ்காந்திக்கும் அப்பாவுக்கும் அவ்வளவு பழக்கம் கிடையாது. ஓரிருமுறை பார்த்ததுதான். இதனிடையே 1984 தேர்தல் வந்தபோது, அப்பா காங்கிரஸில் தனது மன்ற ஆதரவாளர்களுக்கு இத்தனை எம்.பி.சீட், இத்தனை எம்.எல்.ஏ. சீட் கேட்டிருந்தார். ஆனால் அவர் கேட்டதில் ஒரு சீட் கூட ஒதுக்கப்படவில்லை. அவர் ஐதராபாத்தில் இருந்தபோது, சென்னையிலிருந்து ஒருவர் (பெயர் சொல்ல விரும்பவில்லை) அப்பாவுக்கு போன் செய்து, "ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கிக்கொடுக்க முடியவில்லை, நீயெல்லாம் ஏன்யா கட்சியில் இருக்கே?" என்று கேட்க அப்பா மனம் உடைந்துபோனார். உடனே என்னிடம் தொடர்பு கொண்டு, 'கட்சிக்காரங்க இப்படி பேசுறாங்கடா. கட்சியில் எனக்கு மதிப்பில்லை. செத்துடலாம் போல இருக்குடா' என்று வருத்தப்பட்டார். உடனடியாக அவரை சென்னைக்கு வரச்சொன்னோம். வந்ததும் டெல்லியில் வெங்கட்ராமன் அவர்களுடன் தொடர்பு கொண்டோம். அவர் 'ராஜீவ்காந்தியிடம் பேசலாம், உடனே டெல்லி வாங்க' என்றார். (இத்தனைக்கும் அவர் தனக்காக ஒருசீட் கூட கேட்கவில்லை). அன்று மாலை விமானத்தில் டெல்லிபோகிறோம் என்று தெரிந்து கட்சிக்காரர்கள் சிலர், 'சிவாஜி டெல்லி வரமாட்டார்' என்ற செய்தியை டெல்லியில் பரப்பினார்கள் (!!!!!!!!!!!!). அதைக்கேட்க வெங்கட்ராமன் மீண்டும் எங்களை போனில் தொடர்புகொண்டு கேட்க, நாங்கள் வந்துகொண்டேயிருக்கிறோம் என்று சொன்னோம். ராஜசேகரனும் அப்போது உடன் வந்தார். ராஜீவிடம் பேசியபோது, அப்பா தன் ஆதரவாளர்களூக்கு சீட் கேட்டிருந்த விஷயமே ராஜீவ்காந்தி காதுக்கு எட்டாமல் தமிழ்நாட்டுத்தலைவர்களால் மறைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது (???). பின்னர் ராஜீவ், அப்பா கேட்டிருந்தபடியே தருவதாக உறுதியளித்தார். பின்னர் சென்னை திரும்பினோம். அப்பா சீட் கேட்டிருந்தவர்களில் பலர் அத்தேர்தலில் வெற்றியடைந்தனர்.
நடிகர்சங்க விழாவுக்காக நாடகம் போட முடிவு செய்தபோது, அப்பா 'சாம்ராட் அசோகன்' நாடகம் போட்டார். அதற்கான வசனத்தை தஞ்சைவாணன் எழுதினார். தோட்டத்தில் அதற்கான ஒத்திகை பார்த்தபோது, நாற்காலியில் அமர்ந்துகொண்டு, தஞ்சைவாணனிடம் வசனத்தைப்படிக்குமாறு சொன்னார். அப்போது எஸ்.ஏ.கண்ணனும் உடனிருந்தார். படித்துக்கொண்டிருக்கும்போது பாதியில் அப்பா கண்ணை மூடிக்கொண்டு உறங்குவதுபோல் இருந்தார். வசனம் முடிந்ததும் அவரை தட்டி எழுப்பிவிட்டோம். மீண்டும் ஒருமுறை படிக்கச்சொன்னார். அப்போதும் பாதியில் உறங்குவது போல கண்ணைமூடினார். நான் சங்கடத்துடன் இருவரையும் பார்த்தேன். தஞ்சைவாணன் தொடர்ந்து படித்து முடித்தார். மீண்டும் அப்பாவைத் தட்டி எழுப்பினோம். 'முடிஞ்சிருச்சா?' என்றவர், தஞ்சைவாணனிடம், 'சரி இப்போ வசனத்தைச் சொல்றேன். சரியா இருக்கான்னு பாரு' என்றவர் அத்தனை பக்க வசனத்தையும் ஒரு எழுத்துவிடாமல், ஏற்ற இறக்கங்களுடன் பேசி எங்களை அசரவைத்துவிட்டார்".
அடுத்த வாரமும் தொடர்வதாக சொல்லி திரு. மனோகர் விடைபெற்றார்.
1984 தேர்தலில் நடிகர்திலகத்தின் ஆதரவாளர்களுக்கு சீட் ஒதுக்கப்படாதது குறித்து சிலஆண்டுகளுக்கு முன்பே நான் (சாரதா) குறிப்பிட்டிருந்தேன் (நமது திரியின் இரண்டாம் பாகத்தில் என்று நினைக்கிறேன்). பார்த்திராதவர்களுக்காக, அதில் ஒரு பகுதி மட்டும் கீழே.....
//இந்திரா அம்மையார் மறைந்தபிறகு நடந்த 1984 தேர்தலில், சிவாஜி மன்றத்தினர் தேர்தலில் சீட் கொடுக்கப்படாமல் ஒதுக்கப்பட்டதற்கு காரணமே, நடிகர் திலகத்துக்கும் காங்கிரஸுக்கும் இருந்த நீண்டகால உறவை பற்றி ராஜீவுக்கு தெரியாததே.
தமிழ்நாட்டில் காங்கிரஸின் மிகப்பெரிய தொண்டர் படையாக விளங்கிய சிவாஜி மன்றத்தினர், 1984 தேர்தலில் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டனர். சிவாஜிமன்றத்தினர் பற்றி தெரிந்திருந்த பெருந்தலைவரும், இந்திரா அம்மையாரும் இயற்கை எய்தியதால் அவர்களின் அருமை ராஜீவுக்கு தெரியவில்லை. வெகுண்டெழுந்த சிவாஜி மன்றத்தினர், தலைவர் தளபதி சண்முகம் தலைமையில் கூடி முடிவெடுத்து தமிழ்நாடு முழுக்க 99 போட்டி வேட்பாளர்களை அறிவித்தனர். சிலர் வேட்பு மனுவும் தாக்கல் செய்து விட்டனர். புரசை குமரன், அப்பன்ராஜ், செங்காளியப்பன், ராஜசேகரன், அடைக்கலராஜ், மாரிசாமி, பொன்.தங்கராஜ், சந்திரசேகரன், புவனேஸ்வரி ஆனந்த் போன்றோர் அதில் அடக்கம்.
பதறிப்போன மூப்பனார், டெல்லியுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி சொல்ல, சிவாஜி மன்றத்தினருக்கு சீட் ஒதுக்கப்பட்டது. சென்னை வண்ணாரப்பேட்டையில் ராஜசேகரன், திருச்சி எம்.பி.தொகுதிக்கு அடைக்கலராஜ் உள்பட பலர் கட்சியால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்..//
Ana thalaivar katchi arambicha po, adikalaraj mudalanor vara villaiQuote:
Originally Posted by saradhaa_sn
Moopanaraiye Maduari yil thalaivar than introduce panninar.
nandri marandavarkar
நடிகர் திலகம் எனும் மாபெரும் மனித உள்ளத்தின் பெருந்தன்மையால் பல துரோகங்கள் மன்னிக்கப்பட்டும் மறக்கப்பட்டும் விட்டன. திரைத்துறையாகட்டும், பொது வாழ்விலாகட்டும், அரசியலிலாகட்டும், அவருக்கு துரோகம் செய்தவர்கள் அதற்குரிய பலனை அனுபவித்துத் தான் இருக்கிறார்கள், ஏதேனும் வகையில். குறிப்பாக அரசியலில் அவர் தோற்றதாக வரலாறில்லை. அவர் தேர்தலில் தான் தோல்வி கண்டாரே தவிர அரசியலிலோ பொது வாழ்விலோ அல்ல. அவர் தேர்தலில் களமிறங்கி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியும் அவருடைய ரசிகர்களே பெரும்பாலும் அவருடைய தொண்டர்களாகவும் இருப்பதால் அவருடைய செல்வாக்கு சற்றும் குறையவில்லை. அதை சோதிக்கும் தருணம் அதற்குப் பிறகு கிடைக்காததால் அவருடைய பலம் யாருக்கும் தெரியவில்லை. அவருக்கு எதற்கு அரசியல் என்று சொல்லியே எதிரிகளும் துரோகிகளும் பிரச்சாரம் செய்தார்களே தவிர, அவருடைய ரசிகர்கள் இன்றும் அவரைத்தான் தலைவராகக் கொண்டுள்ளனர். இது காலத்தால் அழியாத பாசப் பிணைப்பு.Quote:
Originally Posted by sankara70
ராகவேந்திரன்
நடிகர் திலகம் எனும் மாபெரும் மனித உள்ளத்தின் பெருந்தன்மையால் பல துரோகங்கள் மன்னிக்கப்பட்டும் மறக்கப்பட்டும் விட்டன. திரைத்துறையாகட்டும், பொது வாழ்விலாகட்டும், அரசியலிலாகட்டும், அவருக்கு துரோகம் செய்தவர்கள் அதற்குரிய பலனை அனுபவித்துத் தான் இருக்கிறார்கள், ஏதேனும் வகையில். குறிப்பாக அரசியலில் அவர் தோற்றதாக வரலாறில்லை. அவர் தேர்தலில் தான் தோல்வி கண்டாரே தவிர அரசியலிலோ பொது வாழ்விலோ அல்ல. அவர் தேர்தலில் களமிறங்கி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியும் அவருடைய ரசிகர்களே பெரும்பாலும் அவருடைய தொண்டர்களாகவும் இருப்பதால் அவருடைய செல்வாக்கு சற்றும் குறையவில்லை. அதை சோதிக்கும் தருணம் அதற்குப் பிறகு கிடைக்காததால் அவருடைய பலம் யாருக்கும் தெரியவில்லை. அவருக்கு எதற்கு அரசியல் என்று சொல்லியே எதிரிகளும் துரோகிகளும் பிரச்சாரம் செய்தார்களே தவிர, அவருடைய ரசிகர்கள் இன்றும் அவரைத்தான் தலைவராகக் கொண்டுள்ளனர். இது காலத்தால் அழியாத பாசப் பிணைப்பு.
உண்மை! எவராலும் மறுக்க முடியாதது.