http://youtu.be/6p-lcvAlBYs
Printable View
இனி ராகுல் ராமின் கைவண்ணத்தை ரசிப்போம்
-- Over to ராகுல் ராம் "
அன்புடன் ரவி
:smile::smokesmile:
As far as tamil cinema is concerned Karnan remains a phenomenon, a never before and never again experience! It is a movie with real grandeur and story content with an indelible superb performance from NT the real crowd puller who proved his legacy. The other movie now released is just a loose adaptation of Errol Flynn's Captain Blood. Those who have seen Captain Blood with the real swash buckling hero Flynn for his fastest ever sword fights, this movie will be just a time pass affair. One can now realize the reality situation that there is no hype or expectation with this movie on par with Karnan. Though they claim that more theatres have been booked (!), the movie certainly has fallen below the expectations and has lost its crowd pulling capacity in the present situations of the movie's unfitting story line to suit the tastes of younger generation, which Karnan did well as it has no time boundary for its story content and the inimitable acting style of the one and only one NT! truth is always bitter of one succumbs to one sided views!!! Kuppura vizhundhalum pencil meesaiyil mann ottavillai endru solbavargalai eppadi kanippadhu?! we are made proud by NT
இனிய நண்பர்களுக்கு சிறிய இடைவெளிக்கு பிறகு திரும்பவும் திரியில் கலந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.
அனைவரும் திரும்பவும் வந்ததில் வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி...!
எழுத்து செம்மல் கோபால் சார் அவர்களும், இளைய செம்மல் ஹைதராபாத் ரவி அவர்களும், வர்ணனை சக்ரவர்த்தி ராகுல்ராம் அவர்களும் திரியை மிகவும் பிரமாதமாக கொண்டுசென்றுகொண்டிருகின்றனர்.
இதுபோதாதென்று இளம் புயல் சிவா ஆதார அவதாரம் எடுத்து அவ்வப்போது ஆதார மாலை தொடுத்து அலங்கார அணிவகுப்பு நடத்துகிறார். வாழ்க வளர்க. !
தியாகம், வைரநெஞ்சம் மற்றும் எங்கள் தங்கராஜா வெற்றிபவனி மகிழ்ச்சியான குதூகலமான கும்தலக்க செய்தி !
உண்மை உணரும் நேரம்
ஒரு சந்தேகம். ஆங்கிலத்தில் weekend என்று சொன்னால் எனக்கு தெரிந்தவரை வெள்ளி சனி ஞாயிறுதானே? ஏன் கேட்கிறேன் என்றால் படம் வெளியானது 14th வெள்ளியன்று. Weekend என்று சொல்லப்படுவது 3 நாட்கள். 16th ஞாயிறு அன்று 3 நாட்கள் முடிவடைந்தது. மூன்று நாட்கள் வசூல் என்று ஒரு தொகை 13 லட்சம் பிளஸ் . அதற்கு அடுத்து, வாரத்தின் மொத்த வசூல் 26 லட்சம் என்று ஒரு வரி. இந்த தகவல் வெளியாவது 17-ந் தேதி. அதுவரை மொத்தம் ஓடியதே 3 நாட்கள்தான். அதற்கு 13 லட்சம் பிளஸ் என்று சொல்லியாகி விட்டது. பிறகு எங்கிருந்து 26 லட்சம் வந்தது? கீழே ஒரு disclaimer. இந்த வசூல் விவரங்கள் தியேட்டர் உரிமையாளர்களோ அல்லது விநியோகஸ்தர்களோ கொடுக்கவில்லை. இங்கே குறிப்பிட்டிருப்பது ஒரு உத்தேச கணக்கே என்றும் எழுதியிருக்கிறது. படத்தின் வெற்றி தோல்வி பற்றி நாம் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் இப்படி அடிப்படையிலே பிழையான ஒரு செய்தியை ஆதாரமாக வைத்து நமது திரி நண்பர்களை சவாலுக்கு அழைப்பது போன்ற தொனியில் மீண்டும் பதிவிடுவது வேதனைக்குரிய போக்கு.
மற்றொரு உண்மை. Inox மயிலாப்பூர் மற்றும் விருகம்பாக்கம் Fame National போன்ற multiplex-களில் முதன் முதலாக வெளியான பழைய திரைப்படம் நடிகர் திலகத்தின் பாச மலர்.
அன்புடன்
பார்த்ததில் பிடித்தது 17
1963 ல் வெளி வந்த அறிவாளி படத்தை பற்றி தான் இந்த பதிவு , இந்த படத்தை பற்றி பார்க்கும் முன் திரு ரவி அவர்களின் பங்களிப்புக்கு மிகவும் நன்றி தெரிவித்து ஆரம்பிக்கிறேன்
இந்த படம் திரு MGR அவர்கள் நடிக்க இருந்தது . இந்த படம் 1953 ல் ஷூட்டிங் தொடங்கப்பட்டு பல பிரச்சனைகளுக்கு பிறகு 1963 ல் தான் வெளி வந்தது . 9 வருடம் கழித்து வந்தாலும் படம் நல்ல வெற்றி தான்
கதை :
ஆளவந்தான் படித்த பட்டதாரி , படிப்பை , ஆஸ்தியை வைத்து மக்களுக்கு அதுவும் குறிப்பாக விவசாயிகளுக்கு நல்லது செய்ய நினைக்கிறார் , படித்த நபர்களை தன் கூட வைத்து கொண்டு காந்தி கிராமம் என்ற பெயரில் இந்த நல்ல காரியத்தை செய்து வருகிறார்
இது ஜமிந்தார் சிங்கம் (ராமதாஸ்) மற்றும் அவர் agent நல்லமுத்து நாயகர் (பாலய்யா) இருவருக்கும் பிடிக்கவில்லை
தண்டபாணி பிள்ளை (சாரங்கபாணி) பெரிய பணக்காரர் , அவர் தன் மகளுக்கு கல்யாணம் செய்து நினைக்கிறார் , ஆனால் அவர் திமிர் பிடித்த மகளுக்கு கல்யாணம் எப்படி நடக்கும் ? , அவர் வரதக்ஷணையாக 60 acre நிலமும் , 1 லட்சம் பணமும் தருவதாக சொல்லுகிறார் , இந்த விஷயம் தன் நண்பர் குமார் மூலமாக அறிந்து கொளுகிறார் ஆளவந்தான் .இந்த பணத்தால் ஏழை விவசாயிகளுக்கு உதவ முடியும் என்று எண்ணி அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்.
குமார் மனோரமாவின் (பானுமதி) தங்கை இந்தியாவை ( சரோஜா ) காதலிக்கிறார் .
ஆளவந்தான் மனோரமா கல்யாணமும் , குமார்- இந்தியா கல்யாணமும் இனிதே நடக்கிறது , ஆளவந்தான் மனோரமா இருவரும் வாழ்கையை அரம்பிகிரார்கள் , மனோரம்மவிடம் எதை செய்யாதே என்று சொன்னாலும் அதை தான் முதலில் செய்வார் , இதை அறிந்து கொண்டு சாமர்த்தியமாக மனோரமாவை திருத்துகிறார்
தன் கனவு திட்டத்துக்கு ஜமிந்தார் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் ஆளவந்தான் அவரை சந்திக்கிறார் , தன் கூட படித்த மோகினி (ஜெமினி சந்திரா ) தான் ஜமிந்தார் அவர்களின் வருங்கால மனைவி தான் என்றதால் இந்த பிரச்சனை எளிதில் முடிந்து விடுகிறது . ஜமிந்தார் மற்றும் ஆளவந்தான் இருவரும் சேர்ந்து கூட்டுறவு விவசாய பண்ணை ஆரம்பிக்கும் அளவுக்கு நண்பர்கள் ஆகிவிடுகிறார்கள்
இதை பொறுக்காமல் நல்லமுத்து அவர் வேலைகாரர் கந்தசாமி மூலமாக ஆளவந்தான் மோகினி இருவருக்கும் தப்பான உறவு இருபதாக கதை கட்ட , அதை மனோரமா அலட்சியம் செய்கிறார் , ஆனால் ஜமிந்தார் ஆளவந்தான் அவர்களை தாக்க , மக்கள்
ஜமிந்தார் க்கு ஒன்று சேர்ந்து விடுகிறார்கள் , முத்துவேல் (ஜமிந்தார் மகன் ) , மற்றும் மனோரமா இருவரும் உண்மையை வெளியே கொண்டுவர , ஜமிந்தார் திருந்த
சுபம்
படத்தை பற்றி :
ஒரு திமிர் பிடித்த பெண்ணை அடக்கி ஆளுவது தான் கதை. Taming of the Shrew தான் இந்த மாதிரி கதை கருவுக்கு அடிப்படை
படத்தின் பெயர் போடும் போதே background காட்சியில் விவசாயம் சார்ந்த விஷயங்களை பார்க்க முடிகிறது , சொல்ல வந்த விஷியத்தை முதல் காட்சியில் சொல்லி விடுகிறார் இயக்குனர் A. T. கிருஷ்ணஸ்வாமி . படத்தின் பெயர் போட்டு முடிந்த உடன் சிவாஜி சாரின் தரிசனம் தான் , படத்தின் பெயர் போட்டு முடிந்த உடன் ஹீரோ வந்து , வணக்கம் போடும் வரைக்கும் ஹீரோ முகம் தெரிந்தால் சந்தோசம் படும் ரசிகர்களின் நானும் ஒருவன்
பல வருடங்கள் படம் எடுக்க பட்ட தாள் நடிகர் திலகத்தின் தோற்றத்தில் வித்தியாசங்கள் நன்றாக தெரிகிறது , முதல் காட்சியில் சற்று குண்டாக இருக்கிறார் , முதல் காட்சியிலே விவசாய தொழில் சார்ந்த பிரச்சனைகளையும் , அதில் படித்தவர்களின் பங்கும் , பணகரனின் அதிகம் ,அதை எதிர்கொள்ளும் பொது சந்திக்கும் practical difficuties பத்தியும் நன்றாக சொல்லுகிறார்
ஒரு ஹீரோ அதுவும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஹீரோ இது போன்ற விஷியங்களை சொல்லும் பொது அதின் வீச்சு மிகவும் அதிகமாக இருக்கும் .
தன் நண்பர் ராமசந்திரன் உடன் பேசும் பொது அவர் பேசும் ஸ்டைல் , cigarette பிடிக்கும் ஸ்டைல் அனைத்தும் பிரமாதமாக இருக்கும் , அதுவும் அந்த காட்சியில் அவர் வெள்ளை சட்டை , கருப்பு pant அணிந்து கொண்டு நடிகர் திலகத்தின் சுர்ருட்டை முடியுடன் இருக்கும் காட்சி எழுதும் போதும் கண்ணுக்குள்ளே இருக்கிறது
ராமசந்திரன் தனக்கு தெரிந்த பெண்ணை பற்றி சொல்லி அவளை கல்யாணம் செய்வதால் வரும் பணத்தை பற்றியும் , அந்த பெண்ணை பற்றியும் சொல்ல சிவாஜி சார் சொல்லும் வசனம் டாப் : சகல விஷயங்களை தெரிந்த பெண்ணுக்கு கொஞ்சம் சண்டி தனம் இருக்கும் என்று சொல்லும் பேச்சு - எதையும் positive ஆக பார்க்கும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது
ராமசந்திரன் அந்த பெண் எப்படி சொன்னால் என்ன பேசுவே , அப்படி சொன்னால் என்ன பேசுவே என்று கேட்க அதற்கு நம்மவர் தூய தமிழில் பதில் சொல்ல மீண்டும் திருவிளையாடல் தரமி நினனிவு வந்தது
திருவிளையாடல் பிறகு தான் வந்தாலும் , அதன் வீச்சு மிகவும் அதிகம் அதனால் தான்
அடுத்த காட்சியில் சிவாஜி தன்னை தன் வருங்கால மாமனாரிடம் அறிமுகம் படுத்தி கொள்ளும் காட்சியிலும் நம்மவரின் மொழி புலமை , நன்றாக இருக்கிறது (எனக்கு மிகவும் பிடித்த காட்சிகளில் இதுவும் ஒன்று )
முதல் சந்திப்பில் டாமல் டுமில் தான் இதை எதிர்பார்த்தது தானே என்றது போன்று ஒரு சிரிப்பு நம்மவரிடம் .
கல்யாணம் செய்து கொள்ளும் பொது நம்மவர் கோமாளி போல் உடை
அணிந்து , கொண்டு வரும் காட்சி சிரிப்பை வர வைக்கிறது , தன் புத்தி சதுர்யதினால் பானுமதியை வழிக்கு கொண்டு வர செய்யும் காட்சிகள் சபாஷ்
அந்த காலத்திலேயே பதிவு திருமணம் காட்சி - நியூ கான்செப்ட்
அடுத்த காட்சியில் கோட் சூட் அணிந்து கொண்டு வாழிய நீளுழி நடன நிகழ்ச்சியை பார்க்கும் பொது , இவரா அவர் என்று நினைக்க தோன்றுகிறது
இவரால் மட்டும் எப்படி கூடு விட்டு கூடு பாய முடிகிறது , அதுவும் அவர் பானுமதியை பார்க்கும் பொது , இனிமே தான் இருக்கு உன்னக்கு என்று பார்ப்பது போல் ஒரு பார்வை
அதே போல் அவர் செய்யும் சேஷ்டைகள் சிரிப்பை வர வைக்கிறது , அதுவும் தண்ணியை தட்டி விடும் காட்சியும் , பானுமதி பாடும் பொது , இவர் அதற்கு சம்பந்தமே இல்லாமல் சுருதி சேராமல் படும் பொது சிரிப்பை அடக்க கஷ்டம் தான், பின் இருவரும் சமாதானம் ஆகி சத்யம் செய்து கொள்ளும் பொது சில வருடங்கள் முன்பு வந்த ரமணி vs ரமணி சீரியல் தான் நினைவுக்கு வந்தது
பின் ராமதாஸ் உடன் பேசும் காட்சியில் தான் எத்தனை எதார்த்தம் , ராமதாஸ் அவர்களும் எதார்த்த நடிப்பை கொடுத்து இருப்பார்
இருவரும் சேர்ந்து விட்டார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறது
அதே போல் அடி பட்ட உடன் ராமதாஸ் அவர்களை மக்களிடம் இருந்து காப்பாத்தனும் அது தான் நல்ல தளவைர்க்கு அழகு என்று சொல்லும் வசனம் நச்சு .
பானுமதி - excellent performer எப்போதும் , திமிர் பிடித்த கதாநாயகி என்றால் இவர் நன்றாக ஸ்கோர் செய்வார் , படத்தி ல் சிவாஜியின் இளமைக்கு மத்தியில் இவர் தோற்ற்றம் சற்று முதிர்ச்சி . பிற்காலத்தில் வந்த மன்னன் விஜயசாந்தி கதாபாத்திரத்துக்கு இது தான் base . ராமசந்தரன் guitar வசிக்க இவர் வசிக்க கத்துக்க வரும் காட்சியில் , அவர் பேசும் வசனம் இவரின் குணத்துக்கு ஒரு எடுத்துகாட்டு. பின் திருந்தி புருஷன்க்கு ஆலோசனை சொல்லும் காட்சியிலும் , தன் புருஷன் வேறு ஒரு பெண்ணுடன் affair வைத்து இருபதாக வரும் செய்தியை அவர் handle செய்யும் விதமும் சபாஷ் போடா வைக்கிறது .
பாடல்களும் பாடி இருக்கிறார் ,
பாலய்யா :
இவர் தான் வில்லன் silent killer , இந்த மாதிரி பாத்திரங்களை அவர் handle செய்யும் விதமே அலாதி தான் , கொஞ்சம் நகைச்சுவை , கொஞ்சம் வில்லத்தனம் , கொஞ்சம் பயந்த சுபாவம் என்று கலக்கி இருக்கிறார்
தங்கவேலு :
படத்தின் attraction தங்கல்வேலு , முத்துலட்சுமி நகைச்சுவை தான் .
தங்கவேலு பாலையா வின் மகன் , தந்தை உடன் அவர் பேசும் வசனம் நல்ல நய்யாண்டி , குப்பை எரிவதை குடிசை எறிவதாக எண்ணி தங்கவேலு செய்யும் சேஷ்டையில் தொடங்கிறது இவர் நகைச்சுவை ராஜ்ஜியம்
தன்னை பார்க்க வரும் தன் நண்பர் வரவதாக அறிந்து , தன் மனைவியை அதற்கு தயார் செய்யும் காட்சி , அதை அரை குறையாக புரிந்து கொண்டு பவுடர் உடன் வந்து மானத்தை வாங்குவதும் , switch என்று சொல்ல முயற்சிக்கும் காட்சியும் , file கேட்க முத்துலட்சுமி பயல்(பையன்) குபிடுவதும், hard ஆக இருக்கு என்று தங்கவேலு சொல்ல , ஆடு எங்கே இருக்கு என்று கேட்பதும் , பின் தூங்கி , முன்னாடி எழுந்துக்கணும் என்று தங்கவேலு சொல்ல , அதை முத்துலட்சுமி அவர்கள் interept பண்ணும் பொது , தங்கவேலு வெறுத்து போய் கையை கட்டி நிற்பதும் என்று ஒரு ராஜாங்கமே நடத்தி இருக்கிறார்கள் இருவரும் . un adulterated காமெடி என்றால் இது தான்
படத்தின் முக்கிய பாத்திரமாகவும் தங்கவேலு அவர்கள் நன்றாக நடித்து இருக்கிறார்
நடிகர் திலகம் பானுமதி அவர்களை டீசே செய்யும் கண்ணாலே கல்லாமல் வந்தேனே என்ற பாடலும் அதில் நாமவர் அணிந்து இருக்கும் மோதிரமும் சூப்பர் . அதை தொடர்ந்து அவரை என் இப்படி திமிர் பிடித்த பெண்ணை கல்யாணம் செய்து சமாளிப்பிர்கள் என்று கேட்கும் பொது நடிகர் திலகத்தின் பாடலும் படத்தை நன்றாக நகர்த்துகிறது
"அறிவுக்கு விருந்தாகும் பாடல் நல்ல கருத்து உள்ள பாடல்
மொத்தத்தில் நல்ல படம்
இது நான் சின்ன வயசில் DD தொலைகாட்சியில் ஒரு சண்டே அன்று பார்த்த படம்
Thanks GOld star for nice pics
காலத்தை வென்ற காதல் நாயகன் அழகாபுரி சின்ன ஜமீன் ஆனந்த் நாஞ்சில் நகரில் நேற்று முதல் தன் காதல் ராஜ்யத்தை மீண்டும் நிறுவ வந்திருக்கிறார். நாகர்கோவில் ராஜாஸ் திரையரங்கில் (முன்னாட்களில் சுவாமி என்ற பெயரில் இயங்கி வந்தது) நேற்று 18.03.2014 முதல் தினசரி 4 காட்சிகளாக வசந்த மாளிகை வெற்றி நடை போட்டு வருகிறது. தகவலுக்கு நன்றி திரு ராமஜெயம்.
ராகவேந்தர் சார் மீண்டும் நமது மெயின் திரியில் பதிவிட வந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்க கூடிய செய்தி. அவரது பதிவுகளின் quantity 5000 என்றால் அவரது பதிவுகளின் quality 50000 பிளஸ் என்றே கூறுவேன். எங்கள் ஊர்காரர் சின்ன கண்ணனின் மீள் வரவும் மகிழ்ச்சியளிக்கிறது.வாசுவும் விரைவில் வருவார்.
சதீஷ்,
நடிகர் திலகத்தின் தெலுங்கு பட விளம்பரங்கள் [அனேகமாக பெரும்பாலானவை மொழி மாற்றப் படங்கள் என்றே தோன்றுகிறது] அமர்களமாக இருக்கின்றன. மொழி தெரியாத நமக்கே அவை என்னென்ன படங்கள் என்பது தெரிகிறது. நமது பாலா [எங்கே அவரை ஆளையே காணோம்?] வந்தாரென்றால் அனைத்து படங்களையும் தெலுங்கு பெயர்களோடு சொல்லி விடுவார்.
தம்பி ராகுல்ராம் ராகவேந்தர் சார் சொன்னது போல் அதிகம் விவாதிக்கப்படாத படங்களை தேடி பிடித்து அவற்றை அலசுவது பாராட்டுக்குரிய ஒன்று. நண்பர் ரவியும் சேர்ந்து கை கொடுக்கும் போது அது மேலும் சுவையை கூட்டுகிறது. அனைவரும் சேர்ந்து திரியை மேன் மேலும் உயர்ந்த level-ல் கொண்டு செல்வது மகிழ்ச்சியான செய்தி.
அன்புடன்
ரவி,ராகுல் ராம், சதீஷ் மூவரும் அழகாக அறிவாளி பற்றி இங்கு விருந்து படைத்திருக்கிறீர்கள்..நன்றி..
முரளி சார் சொன்னது போல சதீஷ் - உங்களுடைய தெலுங்குப் பட போஸ்டர்கள் அருமை.. என்னபடம் என்று யோசிப்பது கொஞ்சம் த்ரில்லாக இருந்தது.. நன்றி..
அறிவாளியில் பானுமதியைத் திருமணம் செய்து கொண்ட பிறகு என நினைக்கிறேன்.. ந.தியும் பானுமதியும் பூங்காவில் அமர்ந்திருப்பார்கள் ... ஏதோ பேசிக்கொள்வார்கள்..புறாக்கள் பறக்கும்.. அழகான காட்சி அது..கல்யாணத்துக்கு முன்னால் சட் சட்டென்று மாறுபடும் முகபாவம் கொண்ட பானுமதி க.விற்குபின் சாந்த ஸ்வருபியாக - சஜெஷன் தான் சொல்கிறேன் என்று சொல்லி - மென்மையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ந.தியும் சண்டைக்கோழியென இருக்கும் பானுமதியிடம் ச்ரிக்குச் சமமாக சண்டையிடும் போதும் சரி, கல்யாணத்துக்கப்புறம் அவள் ந்ல்ல பெண் தான் என்று டிஆர் ராமச்சந்திரனிட்மோ தங்க வேலிடமோ சொல்லும் போதும் சரி அழகாக நடித்திருப்பார்..ம்ம் அசை போட வைத்ததற்கு மறுபடியும் நன்றி
முரளி - ட்யொபொக்ஷொ dictionary யில் week end என்பதற்கு - திங்கள் , செவ்வாய் ,புதன் என்று அர்த்தம் ( Ref page 46 , para 34 )
ஜெயா டிவி AO வை பற்றி ஒரு சிறப்பு நிகழ்ச்சி தங்களது டிவி யில் வெளி பரப்பி உள்ளார்கள் - தொகுத்து பேசுபவர் ஒரு பெண் - அவர் சொல்கிறார் - B R பந்தலு தொடர்ச்சியாக தோல்வி படங்களே கொடுத்துவந்தாராம் - அதை கண்டு கலங்கி MT தானே முன் வந்து இந்த படத்தை நடித்து கொடுத்தாராம்
ஆயிரத்தில் ஒரு பொய் சொன்னால் பராவாயில்லை - ஆயிரமும் பொய்யாக இருந்தால் ??????
B R பந்தலு அப்படியே உண்மையில் சொல்லி இருந்தால் அவருக்கு நரகத்தில் கூட இடம் கிடைத்திருக்காது - அவரை அடையாளம் காட்டிய படங்கள் சில :
1. வீர பாண்டிய கட்டபொம்மன் - அவரை உலக அளவில் கொண்டு சென்று நிறுத்தியது
2. கர்ணன் - B R பந்துலுவை குபேரனாக்கியது அன்றும் இன்றும்
3. பலே பாண்டியா - அவருக்கு நகைச்சுவை உணர்வும் உண்டு என்று உணர்த்திய படம் - வசூலில் முன் நின்றது
4. முரடன் முத்து - போட்ட முதலுக்கும் மேல் லாபம் கொடுத்த படம்
5. கப்பலோட்டிய தமிழன் - தமிழக மக்களுக்கு தேச பக்தி சுத்தமாக கிடையாது என்று நிரூபித்த படம் - இந்த படத்தின் மூலம் B R பந்துலு அழியாத புகழை சம்பாதித்தார் - படம் மீண்டும் மீண்டும் வெளி வந்து பணத்தை குவித்தது
எதை வைத்து இப்படி ஒரு அண்ட பொய்யை சொல்கிறார்கள் ? உண்மையை , முரளி நீங்கள் அதிகமாக உறங்க விடுகிறீர்கள் - அது எழுந்து வரும் போது கர்ஜிக்க தெரியாமல் மியாவ் மியாவ் என்றே கத்துகின்றது - படத்தில் நம் சிங்கத்திற்கு தயிர் சாதம் போட்ட படங்கள் ஏராளம் - அந்த பழக்க தோஷமோ என்னவோ நாம் இன்னும் தயிர் சாதத்தை தான் அமைதியாக சாப்பிட்டு கொண்டு இருகின்றோம் - பொய் சொல்பவர்கள் உண்மை விளம்பிகளாக திரிந்து கொண்டு இருக்கிண்டார்கள் - ஜெயா டிவி "தயியா தக்கா" என்று குதிக்க நம் பொறுமையும் ஒரு காரணமே !!!
அன்புடன் ரவி
பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அளித்த ரவி, முரளி, சின்னக் கண்ணன் மற்றும் நண்பர்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
மறு வெளியீட்டில் நம் மன்னர் நிகழ்த்தும் சாதனைகள் ஏராளம். அவற்றை விவரிக்கத் தேவைப்படும் பக்கங்களோ தாராளம். நம்முடைய விவாதங்களுக்கிடையில் இவை இடம் பெறுவதனால் விவாதமும் பாதிக்கப் படுகிறது. இந்த சாதனைகளும் கவனத்தை தேவைப்படும் அளவிற்கு ஈர்க்கப் பட முடியவில்லை.
எனவே மறு வெளியீட்டில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் நிகழ்த்தும் சாதனைகள், பெறும் வெற்றியைப் பற்றிய தகவல்கள் போன்றவற்றைத் தனித்திரியில் நாம் பகிர்ந்து கொண்டால் இங்கே படங்களைப் பற்றிய அலசல்கள் முழுமையாக கவனத்திற்கு வழி கிடைக்கும்.
மறு வெளியீட்டிலும் மன்னரின் சாதனை என்ற தலைப்பில் புதியதாக தொடங்கப் பட்ட திரியில் இனி ரீரிலீஸ் திரைப்படங்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்வோமே.
பொய் உலா வரும் நேரம்
முரளி உங்கள் தலைப்பை சற்றே மாற்றி எழுதிள்ளேன்
நீங்கள் சொல்ல வருவது புரிகின்றது - அவர்களுடைய ஓவ்வொரு கருத்துக்களுக்கும் நாம் react பண்ண முடியாது , கூடாது . அப்படி செய்தால் அவர்கள் கருத்துக்கள் மதிப்புக்குரியவை என்று ஆகிவிடும் - கண்டுகொள்ளாமல் விட்டு விடுவோம் - அங்கே சொல்பவர்கள் சொல்லட்டும் அது ஆணவ கருத்து - இங்கே நாம் இடும் பதிவுகள் ஆனந்த கருத்து - sorry இதை படிப்பவர்கள் ஒரு உதாரணத்திற்கும் எங்கள் தலைவர் பாட்டை த் தானே உபயோக படுத்துகிண்டீர்கள் என்று சொல்லலாம் - அதனால் நம் தலைவர் பாட்டையே உதாரணத்திற்கு எடுத்து கொள்கின்றேன் - உலகம் ஆயிரம் சொல்லட்டுமே - நீ தான் உனக்கு நீதிபதி - மனிதன் எதையோ பேசட்டுமே , உன் மனதை பார்த்துக்க நல்லபடி ---------
அப்படி முடியவில்லை முரளி - அவர்கள் தங்கள் தலைவரை எப்படி வேண்டுமானாலும் புகழ்ந்து கொள்ளட்டும் - நமக்கு கவலை இல்லை - ஆனால் மறை முகமாக நம் தலைவரை இழுப்பதுதான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை - நல்லவர்களாகவே இருப்பது எவ்வளவு கடினமான செயல் என்று புரிகின்றது - நீங்கள் போட்ட லக்ஷ்மண் கோடு (Lakshman Rekha) நமக்கு என்றும் இருக்கும் பண்பாட்டை மீற அனுமதி தருவதில்லை - அந்த வரம்பரைக்குள் தான் என் இந்த குமறலை வெளிபடுத்துகின்றேன்
Jaya TV யின் AO சிறப்பு நிகழ்ச்சியில் ஒருவர் சொல்கிறார் - இயற்கை நடிப்பு என்றால் இந்த படத்தை பார்த்துதான் எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டுமாம் !
இதை கூட விட்டு விடலாம் - தின இதழ் தன் கட்டுரையில் சொல்கின்றது - MT யினால் நஷ்டப்பட்ட தயாரிப்பாளர்கள் யாருமே இல்லையாம் - அவர் தோல்வி படங்களே தந்தது இல்லையாம் - அப்படி இருந்தாலும் அவைகளை விரல் விட்டு எண்ணி விடலாமாம் - அந்த விரல் விட்டு எண்ணிய படங்களும் தயாரிபாளர்களுக்கு நஷ்ட்டத்தை கொடுத்ததில்லையாம் - அதனால் தான் எல்லா தயாரிப்பாளர்களும் அவர் பின்னாடி ஓடினார்களாம் -----
1957 இல் இருந்து 1980 வரை ஒரு வருடத்திற்கு குறைந்தது 10 படங்கள் - எல்லாமே சரித்திரம் படைத்தவைகள் - எவ்வளவு படம் - அதுவும் ஒரே நடிகரை நம்பி - அந்த தயாரிப்பாளர்கள் எல்லாம் பணத்தை பார்க்காதவர்களா ? பணம் சேர்காதவர்களா ? திரும்பி திரும்பி NT இடம் ஓடாதவர்களா ?
செய்திகளை போடுங்கள் - பத்திரிக்கை தருமபடி அதில் பல பொய்கள் இருக்கலாம் - ஆனால் கொஞ்சமாவது உண்மையும் இருக்கட்டுமே - உங்கள் பத்திரிக்கை கண்டிப்பாக விலை போகும் - கவலை படாதீர்கள் - உண்மை உறங்கலாம் ஆனால் அது மடிவதில்லை - செய்த பாவங்களை போல மீண்டும் மீண்டும் வெளி வரும் - அப்பொழுது அதன் வெப்பத்தை யாருமே தாங்கிக்கொள்ள முடியாது
அன்புடன் ரவி
B,R. Bandhulu got his recognition, fame and distinctions only due to NT movie classics. Of course, due to some misunderstandings at that time he became a camp maari and went to the otherside. If he claimed that he could not mint money with NT movies, it is amazing that how he could have minted money with aayirathil oruvan which could not touch the line of silver jubilee compared to VPKB? theriyamal pulivaal pidiththa Bandhulu mellavum mudiyamal sollavum mudiyamal puzhngikkondirundhiruppar. Because he has not given any silver jubilee hit with the other actor after whom he ran for the rest of his life. while Karnan has returned his glories in its unbeatable rerun, AO has miserably failed to pull crowds to theatres. Of course, they may resort to ammaa theatre screenings with vilayilla tickets or tax free to boost its run?! who knows! appadiyavathu indha kalaththukku ovvaatha padaththai oatta mudindhal saridhan. poiyana seithihalai veliiyidum indha madhiri dhina idhazhgal ippodu mugaththai enge vaithtukkollappogirargal? History now records that AO in its rerun attempt is a miserable failure compared to the himalayan victory of Karnan!
திரு முரளி சார்,
நடிகர்திலகம் படத்திறப்பு விழா தொடர்பாக நீங்கள் கேள்விப்பட்டது உண்மை ஆனால் அது நடப்பது பெங்களூரில் .ஆம் வருகிற 22-3-14 சனிக்கிழமையன்று பெங்களூர் அல்சூரில் உள்ள தமிழ்சங்கத்தில் நடிகர்திலகத்தின் திரு உருவப்படம் திறக்கப்பட உள்ளது . திறந்து வைப்பவர் சௌகார்ஜானகி அவர்கள் .திரு ராம்குமார் மற்றும் திரு ஆர்.சுந்தரராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள் இது தொடர்பாக சிவாஜி அறக்கட்டளை தலைவர் திரு மா.நடராஜ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ளது