G.V.Prakash Kumar @gvprakash 1h1 hour ago #pencil @maninmani @ErosNowSouth #sridivya audio and teaser from feb 19 ... Excited ! pic.twitter.com/GwbSPZcf1P
https://pbs.twimg.com/media/B9otdB7CMAApsc-.jpg
Printable View
Vasanta Balan on his fb page
ஒரு சினிமா இயக்குனராக நான் செய்த அபத்தங்கள்
1.ஒரு படத்தில் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆனாலே படம் ஓடிவிடும் என்று நம்பியது
2.திருப்பதிக்கு மொட்டை போடுவதாக வேண்டிக்கொண்டால் படம் ஓடிவிடும் என்று நம்புவது
3.படத்தின் கதை புது கதைக்களமாக இருந்தாலே படம் ஓடிவிடும் எனறு நம்புவது
4.நமக்கு சுக்ரதிசை ஓடுகிறது அதனால் படம் ஓடிவிடும் என்று நம்புவது
5.ரகுமான் இசையமைத்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
6.கஜ்முர் தர்காவுக்கு போய் வேண்டிக்கொண்டாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
7.ராமசந்திர மிஷன் மாஸ்டர் அனுகிரகம் கிடைத்துவிட்டாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
8.இசைவெளியீட்டு விழாவில் அனைவரும் படம் ஓடும் என்று கூறுகின்றனர் என்று நம்புவது
9.படம் பார்த்துவிட்டு ஜெயமோகன் u will win என்று குறுஞ்செய்தி அனுப்பினாலே படம் ஓடிவிடும் எனறு நம்புவது
10.என் மழலை மாறா குழந்தை அப்பா உங்க படம் ஹிட் என்று சொன்னவுடனே படம் ஓடிவிடும் என்று நம்புவது
11.உதவி இயக்குனர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு சார் அப்போகலிப்டோ எடுத்து விட்டீர்கள் என்று சொன்னவுடனே படம் ஓடிவிடும் என்று நம்புவது
12.முதல் இரண்டு படங்கள் ஓடிவிட்டதாலே அடுத்த படம் ஓடிவிடும் என்று நம்புவது
13.கையில் மந்திரித்த பச்சை கயிறு கட்டிக்கொண்டாலே திருஷ்டி போய் படம் ஓடிவிடும் என்று நம்புவது
14.ன் என்று முடியும் என்ற வார்த்தையில் தலைப்பு வைத்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
15.படம் பரபரவென்று ஓடுகிறது இதனால் படம் ஓடிவிடும் என்று நம்புவது
16.படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் காட்சிகளை ரசிப்பதை வைத்து கொண்டே படம் ஓடிவிடும் என்று நம்புவது
17.சபரிமலைக்கு மாலை போட்டாலே படம் ஓடிவிடும என்று நம்புவது
18.தோரணமலை முருகன் கோவிலில் படப்பிடிப்பு எடுத்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
19.ப்ரிவியு படம் பார்த்தவர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
20.சென்சார் அதிகாரிகள் பாராட்டியதற்காக படம் ஓடிவிடும் என்று நம்புவது
இப்படி நிறைய நம்பிக்கைகள் திரையுலகம் முழுக்க சுழன்று வருகின்றன,
ஆனால் வெற்றி மட்டும் யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு மாய கனி
:lol: on VasanthaBalan
சினிமா விகடன் @CinemaVikatan 40m40 minutes ago 1,40,000 க்கும் மேலே பார்வையாளர்களைத் தாண்டிய “இவனுக்கு தண்ணில கண்டம்” டீஸர் காண: http://bit.ly/179XU8o #rajendran pic.twitter.com/AFkXltTDKO
https://pbs.twimg.com/media/B-MN90aCIAAAY1f.jpg
- Retweets 8
- Favorites
Possibly this year v can c
Kamal-3 movies
Vijay-2 m
Ajith-2 m including YA
Surya-2 m
Vikram-3 m including I
Dhanush,simbu,vj sethupathy,Siva karthikeyan -3 movies each....surely will be a good year of Tamil cinema in terms of box office
90's get together
Attachment 4008
’காஞ்சனா 2’ ஆக மாறியது ’முனி3’!- VIKATAN
ராகவ லாரன்ஸ் இயக்கத்தில் ராகவ லாரன்ஸ், டாப்சி பண்ணு நடித்து வரும் படம் ‘முனி’. பேய் படத்தை காமெடி கலந்து கொடுத்த ஒரு டிரெண்ட் செட்டர் படம் என்றே இந்த படத்தை கூறலாம்.
இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து அடுத்து ‘காஞ்சனா’ என்ற மெகா ஹிட் படத்தைக் கொடுத்தார் லாரன்ஸ். தற்போது அடுத்த கட்டமாக ‘முனி 3’ படத்தை இயக்கி வருகிறார்.
http://cinema.vikatan.com/uploaded/M...0-1024x681.jpg
‘முனி’ படம் முதல் படம் எனினும், ‘காஞ்சனா’ படமே கமர்ஷியல் அளவில் ஹிட்டடித்தது. இந்நிலையில் தற்போது உருவாகிவரும் ‘முனி3’ படத்தின் தலைப்பை ‘காஞ்சனா 2’ என பெயர் மாற்றியுள்ளார்.
படம் கோடைகால சிறப்பாக திரைக்கு வரவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Now a days Tamil movies getting released in record number of screens in overseas..I think in future 75% of the movie's budget covered by overseas,ker,kar and satellite rights.... Order of the countries (collection wise)for Tamil movies
1.Malaysia
2.uae-gcc
3.Singapore
4.srilanka
5.US
6.UK
7.Canada followed by France, aus/nz
For rajni,kamal,Shankar movies US comes above singapore
மெய்சிலிர்த்துப்போன அமிதாப் பச்சன்!
இன்று அமிதாப் பச்சன் , மற்றும் தென்னிந்தியாவின் முக்கிய நடிகர்கள் இணைந்து ஒரு விளம்பரத்திற்காக படப்பிடிப்பு நடந்துள்ளது.
இதற்காக அமிதாப் பச்சன், பிரபு, விக்ரம் பிரபு, நாகார்ஜுன், சிவா ராஜ்குமார், மற்றும் மஞ்சு வாரியர் என அனைவரும் வேட்டி மற்றும் மஞ்சு வாரியர் பட்டு சேலை என புகைப்படம் இணையங்களில் சுற்றி வருகிறது. இந்நிலையில் அமிதாப் தன் ட்விட்டர் பக்கத்தில் தனது சந்தோஷ தருணங்களை பகிர்ந்துள்ளார்.
http://cinema.vikatan.com/uploaded/1...39807931_n.jpg
எனது சிறுவயது காலத்தில் எனது ஐகான்களாக விளங்கிய பெரிய பெரிய நடிகர்களின் மகன்களுடன் காலையிலேயே இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியான தருணம். என அவர் ட்வீட் செய்ய அதை ரீட்வீட் செய்த விக்ரம் பிரபு தனது வணக்கங்களையும், மகிழ்ச்சியையும் ஸ்மைலி சிம்பள்களாக ட்வீட் செய்துள்ளார்.
நார்வே தமிழ் திரைப்பட விழா விருது பட்டியல்- VIKATAN
நார்வே நாட்டில் ஆண்டுதோறும் அனைத்துலகத் திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. 2014ம் ஆண்டுக்கான விருதுக்கு தமிழிலிருந்து 14 படங்கள் போட்டியில் இணைந்துள்ளன.
நார்வே தமிழ் திரைப்பட விழாவில் (NTFF) பல்வேறு பிரிவுகளில் “ காவியத் தலைவன்” திரைப்படம் அதிக விருதுகளை அள்ளியது. மேலும் சிறந்த படமாக ராஜூ முருகன் இயக்கத்தில் வெளிவந்த “குக்கூ” தேர்வாகியுள்ளது.
http://cinema.vikatan.com/uploaded/kavi_1.jpg
வாழ்நாள் சாதனையாளர் விருது மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாலுமகேந்திரா நினைவு விருதினை, “கதை திரைக்கதை வசனம் இயக்கம்” படத்திற்காக பார்த்திபன் பெறுகிறார். இதன் விருது வழங்கும் விழா நார்வேயின் ஆஸ்லோ நகரில் ஏப்ரல் 26ல் நடைபெறவுள்ளது.
விருது பெற்ற தமிழ் படங்கள் பட்டியல் இதோ,
சிறந்த படம் : குக்கூ
சிறந்த இயக்குனர்: வசந்தபாலன் (காவியதலைவன்)
சிறந்த நடிகர் : சித்தார்த் (காவிய தலைவன்)
சிறந்த நடிகை: வேதிகா (காவிய தலைவன்)
சிறந்த இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் (குக்கூ - ஜிகர்தண்டா)
சிறந்த தயாரிப்பு - ராமானுஜம் (கேம்பர் சினிமா)
சிறந்த வசனகர்த்தா : யுகபாரதி (குக்கூ)
குணச்சித்திர நடிகர் : பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)
துணை நடிகர் : நாசர் (காவிய தலைவன்)
துணை நடிகை : குயிலி (காவியத் தலைவன்)
சிறந்த ஒளிப்பதிவு : வெற்றிவேல் மகேந்திரன் (கயல்)
சிறந்த பாடகர் : ஹரிசரண் (காவிய தலைவன்)
சிறந்த பாடகி : வைக்கம் விஜயலெட்சுமி (புதிய உலகை - என்னமோ ஏதோ)
சிறந்த எடிட்டிங் : விவேக் ஹர்ஷன் (ஜிகர்தண்டா)
சமுக சேவை விருது : இயக்குனர் கவுரவ் (சிகரம் தொடு)
வாழ்நாள் சாதனையாளர் விருது : இயக்குனர் கே.பாலசந்தர்
கலைச் சிகரம் விருது : சிவகுமார்
ஸ்பெஷல் ஜூரி விருது : நடிகர் வின்செண்ட் (கயல்)
பாலுமகேந்திரா நினைவு விருது : இயக்குநர் பார்த்திபன் (கதை திரைக்கதை வசனம் இயக்கம்
மீண்டும் ஏப்ரல் 2 -க்கு மாறிய கொம்பன் ரிலீஸ்
கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன், கோவை சரளா நடிப்பில் முத்தையா இயக்கியிருக்கும் கொம்பன் ஏப்ரல் 2 வெளியாகும் என அறிவித்திருந்தனர்.
ஏப்ரல் 2 சகாப்தம், நண்பேன்டா படங்கள் வெளியாவதாலும், ஏப்ரல் 10 கமலின் உத்தம வில்லன் வெளிவரும் என்பதாலும் கொம்பன் வெளியீட்டை முன்னதாக - மார்ச் 27 -ஆம் தேதிக்கு மாற்றினர்.
தற்போது மீண்டும் ஏப்ரல் 2 -ஆம் தேதிக்கு கொம்பனின் வெளியீட்டை மாற்றி வைத்துள்ளது, படத்தை தயாரித்திருக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.
கடைசி நேரத்தில் மீண்டும் ரிலீஸ் தேதி மாறுவதற்கு வாய்ப்புள்ளது.
மக்கள் தலைவர், வசூல் சக்கரவர்த்தி நடிகர்திலகத்தின் டிஜிட்டல் மிரட்டல் மீண்டும்.
20.03.2015 வெள்ளி அன்று டிஜிட்டல் ஹீரோ மக்கள் தலைவர் சிவாஜி அவர்கள் கர்ஜித்த வீரபாண்டிய கட்டபொம்மன் டிரைலர் வெளியீட்டு விழா.
—
https://scontent-sin.xx.fbcdn.net/hp...92&oe=557B8267
https://scontent-sin.xx.fbcdn.net/hp...17&oe=55B7D8F8
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...a3e75828bd01ce
GVM.. always forecast lot of projects.......
கௌதமம்மேனன்-விஷால், சர்ப்ரைஸ் காம்பினேஷன்!
‘என்னை அறிந்தால்’க்காக ஏற்கெனவே பாதியில் விட்ட சிம்பு படத்தை ‘அச்சம் என்பது மடமையடா’ என பெயரிட்டு படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறார் கௌதம்மேனன். இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களையும் இறுதி செய்து விட்டார்.
அதில் விக்ரம் & சமந்தா காம்பினேஷனில் படம் இயக்குவது அனைவரும் அறிந்ததே. அதைத் தொடர்ந்து அவர் விஷாலை இயக்குவதுதான் ஷாக் சர்ப்ரைஸ். சுமோக்கள் பறக்க, பனை மரங்கள் சாய, ‘நானும் மதுரைக்காரன்தாண்டா’ என மரண மாஸ் ஆக்ரோஷம் காட்டும் விஷாலும்...
மயிலிறகாக வருடும் மான்டேஜ் பாடல் ஸ்பெஷல் கௌதம்மேனனும் இணையும் படத்தில் என்ன ஸ்பெஷல் என்ற எதிர்பாப்பு இப்போதே எகிறி அடிக்கிறது. ஒருவேளை விஷால் இதில், ‘நானும் மெட்ராஸ்காரன்தாண்டா’ என வசனம் பேசுவாரோ?
kaட்டபொம்மன் கன்னத்தில் அறைந்து சொல்லும் உண்மை - வைரமுத்து பேச்சு
சிவாஜி கணேசன் நடித்து, பி.ஆர்.பந்துலு டைரக்டு செய்து 1959-ம் வருடம் வெளிவந்த வரலாற்று சிறப்பு மிகுந்த படம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்.’ 56 வருடங்களுக்குப்பின் இந்த படம் ‘சினிமாஸ்கோப்’பில் புதிய தொழில்நுட்பங்களுடன் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதன் ‘டிரைலர்’ வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.
இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசியதாவது்-
‘‘வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற வரலாற்று கலைப்படத்தின் பெருமையை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நிகழ்கால திரையுலகம் குறித்த தகவல் அறிவு வாய்த்திருக்க வேண்டும். இன்று வெள்ளிக்கிழமை வெளியாகும் ஒரு திரைப்படம் மூன்றாம் காட்சியில் நிலைத்திருந்தால், ஆஹா என்கிறார்கள். சனி, ஞாயிறு நீடித்தால், அபாரம் என்கிறார்கள். திங்கட்கிழமையும் மாற்றப்படாமல் இருந்தால், வெற்றிப்படம் என்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு திரைச்சூழலில் ஒரு படம், 56 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தொழில்நுட்பத்தோடு தமிழர் வீட்டு கதவுகளை மீண்டும் தட்டுகிறதென்றால், வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழையும், சிவாஜி கணேசனின் பெருமையையும் உணர்ந்து கொள்ளலாம்.
தமிழ் திரை வரலாற்றின் நெடுங்கணக்கில் எத்தனையோ கதாநாயகர்கள் வந்து போயிருக்கிறார்கள். ஆனால், ஆண்மையை ஆர்ப்பரிக்கும் தமிழ் குரல் சிவாஜி கணேசனைப்போல் வேறு எவருக்கும் வாய்த்ததில்லை. அவரை, ‘சிம்மக்குரலோன்’ என்று அழைத்தார்கள். சிங்கத்தின் கர்ஜனைக்கு கூட ஒரே தொனிதான் உண்டு. ஆனால், நூறு குரலில் பேசிய சிம்மம், சிவாஜி கணேசன்.
மறைந்த பிறகும் ஒளியாக, ஒலியாக, உருவமாக, அசைவாக வாழ்ந்து கொண்டே இருப்பதால் நடிகர்கள் சாகா வரம் பெற்றவர்கள். பொதுவாக நடிகர்கள் ஒப்பனையை அணிந்து கொண்டு நடிப்பார்கள். ஆனால், சிவாஜியோ ஒப்பனையை அணிந்து கொண்ட பிறகு பாத்திரத்துக்குள் புகுந்து கொண்டு நடித்தவர்.
இந்த வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவில் இளைய நடிகர்களுக்கும், இந்தியாவுக்கும் ஒரு சேதி இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட்டுப் பார்ப்பதற்கு இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும்? என்ற கேள்வியை வீரபாண்டிய கட்டபொம்மன் எழுப்புகிறது.
அன்னிய முதலீடுகள் எந்த நாளும் இந்தியாவுக்கு ஆபத்து என்பதைத்தான் கட்டபொம்மன் வரலாறு நமக்கு போதிக்கிறது. இன்னொரு சுதந்திர போருக்கு இந்தியா தள்ளப்பட்டு விடக்கூடாது. இதைத்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் நிகழ்காலத்தின் கன்னத்தில் அறைந்து சொல்கிறான்.’’
இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.
விழாவில் நடிகர்கள் சிவகுமார், ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, பட அதிபர் சித்ராலட்சுமணன், ராஜ் டி.வி. ராஜேந்திரன், டாக்டர் கமலா செல்வராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்
Courtesy :Webdunia Tamil
62 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப் படம் 'குற்றம் கடிதல்'! - VIKATAN
62 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தமிழ் திரைப்பட உலகின்
அறிமுக இயக்குநர் பிரம்மாவின் 'குற்றம் கடிதல்', சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது. 'ஜிகர்தண்டா' திரைப்படத்தில் நடித்த பாபி சிம்ஹா உறுதுணை நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா.முத்துக்குமார் பெறுகிறார். 'சைவம்' படத்துக்கு பாடல் எழுதியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. 'ஜிகர்தண்டா' எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது.
http://img.vikatan.com/news/2015/03/...uthu0224_1.jpg
சிறந்த குழந்தைகளுக்கான படமாக, தமிழ்த் திரைப்படமான 'காக்கா முட்டை' தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உன்னி கிருஷ்ணன் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன் சிறந்த பாடகிக்கான விருது பெற்றுள்ளார். இவர் 'சைவம்' படத்தில் அழகே அழகு பாடலைப் பாடினார்.
சினிமா குறித்த சிறந்த எழுத்துக்கான விருது (பிரைட் ஆஃப் தமிழ் சினிமா) ஜி.தனஞ்செயனுக்கு வழங்கப்படுகிறது.
முக்கிய விருதுகளை வென்றுள்ள குற்றம் கடிதல் மற்றும் காக்கா முட்டை ஆகிய திரைப்படங்கள் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத போதிலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் கவனத்தை ஈர்த்து தற்போது தேசிய விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கன்னட படமான 'நான் அவனல்ல அவளு'வில் நடித்த விஜய், சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுகிறார். 'குயின்' படத்தில் நடித்த கங்கனா ரணவத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ப்ரியங்கா சோப்ரா நடித்த 'மேரிகோம்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. மராத்திய மொழி திரைப்படம் 'கோர்ட்' சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது
ஒரு காவிய சோகம்
62 -வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுப் பட்டியலைப் பார்த்தவர்களுக்கு சின்ன அதிர்ச்சி. காவியத் தலைவனுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த பல விருதுகளை ஹைதர் படம் தட்டிச் சென்றுள்ளது. ஒரு ஆறுதல் விருதுகூடவா காவியத்தலைவனுக்கு கிடைக்கவில்லை?
விசாரித்தால் விவகாரம் வேறு மாதிரி உள்ளது.
காவியத் தலைவனை விருதுப் போட்டிக்கு அனுப்பவேயில்லையாம். ஏன்? சரித்திரம் படைக்கப் போறேன் என்று வசந்தபாலன் எடுத்த காவியத்தலைவன், தயாரிப்பாளர் சசிகாந்தின் 25 கோடிகளை காபந்து பண்ணிவிட்டது. 25 கோடிகளில் சில கோடிகள்தான் திரும்பக் கிடைத்தது. இதில் விருதுக்கு வேறு அனுப்பி இன்னும் சில லட்சங்களை இழக்க வேண்டுமா என்று பாராமுகமாக இருந்துவிட்டாராம் சசிகாந்த்.
இரண்டு விருது கிடைத்திருந்தாவது, தரமான படம்தான், அது மக்களுக்குதான் பிடிக்கலை என்று வசந்தபாலன் ஆறுதல்பட்டிருப்பார்.
கொம்பன் படத்துக்கு சிக்கல்... தடை கேட்டு மனு... ’குட்டிபுலி’ முத்தையா இயக்கத்தில் கார்த்தி , லட்சுமி மேனன் , ராஜ்கிரண், கோவை சரளா மற்றும் தம்பி ராமையா நடிப்பில் ஏப்ரல் 2ம் தேதி வெளியாக உள்ள படம் ‘கொம்பன்’. கிராமத்து மாமன் , மருமகன் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம்.
ஏற்கனவே படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் என அனைத்தும் வெளியாகி படத்தின் ரிலீஸ் பணிகள் நடந்துவருகின்றன. இந்நிலையில் படத்திற்கு தடை கேட்டு முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.அந்த மனுவில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது,
’கொம்பன்’ படம் முதுகுளத்தூர் கலவர சம்பவத்தை பின்னனியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தியாகி பேரையூர் வேலுச்சாமி நாடாரை கலங்கப்படுத்தும் காட்சிகள் இருப்பதாகவும் தெரிகிறது. படத்தின் பெயரான ‘கொம்பன்’ என்ற தலைப்பே சண்டையைத் துண்டுவதாக இருக்கிறது . கடந்த ஆறு மாதங்களாக தமிழகத்தில் சாதி கலவரங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்த படம் வெளியானால் மேலும் இந்த கலவரங்கள் அதிகரிக்கும். என கூறி படத்திற்கு தடை கேட்டு முதல்வரிடம் மனு கொடுத்துள்ளார் தமிழ் நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ்.
Hope கார்த்தி Luck changes....
கார்த்தி படத்தில் ஸ்ருதிக்கு பதில் தமன்னா
கார்த்தி, நாகார்ஜுன் நடிக்கும் தமிழ், தெலுங்கு இரு மொழிப் படத்திலிருந்து ஸ்ருதி விலகியதால் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது அல்லவா? அந்தப் படத்தில் ஸ்ருதிக்குப் பதில் தமன்னாவை நடிக்க வைப்பது என தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்தத் தகவலை உறுதி செய்த தமன்னா தரப்பு, கால்ஷீட் பிரச்சனைகள் இருப்பதால் இதுவரை படத்தில் நடிப்பது குறித்து முடிவு செய்யவில்லை என கூறியது.
இந்த இரு மொழிப்படம், பிரெஞ்சில் வெளியான இன்டச்சபிள்ஸின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
வில்லனாக மிஷ்கின், ஹீரோவாக ராம் ! - vikatan
தன் படங்களில் திகில் காட்டும் இயக்குனர் மிஷ்கின் வில்லன் அவதாரம் எடுக்கவுள்ளார். இயக்குநர் ராம் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார்.
'பிசாசு' படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சரத்குமார் நடிக்கும் புதிய படத்தின் பணிகளை வேகமாக நடத்தி வருகிறாராம் இயக்குநர் மிஷ்கின். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறதாம். இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.
மேலும் இவரிடம் இணை இயக்குநராக இருந்த ஜி.ஆர். அதித்யா இயக்கவிருக்கும் படத்தையும் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறாராம் மிஷ்கின்.
இப்படத்தின் நாயகனாக இயக்குநர் ராம், நாயகியாக ப்ரியாமணி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்களாம். கதை, தயாரிப்பு மட்டுமின்றி இப்படத்தின் வில்லனாகவும் நடிக்கிறாராம் இயக்குநர் மிஷ்கின்.
`கொம்பன்` திரைப்படத்தில் பிரச்னைக்குரிய வசனங்கள்: அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு! - vikatan
கார்த்தி நடித்த கொம்பன் திரைப்படத்தில் பிரச்னைக்குரிய வசனங்கள் இருக்கிறதா என்று உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் உட்பட 10 பேர் கொண்ட குழுவினர், படத்தை பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொம்பன் திரைப்படம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘கொம்பன்’ திரைப்படம் ஏப். 2 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் ஒரு சம்பவத்தை வைத்து இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் கதாநாயகன் ஒரு சமூகத்தை சேர்ந்தவராகவும், வில்லன் மற்றொரு சமூகத்தை சேர்ந்தவராகவும் காட்டப்பட்டுள்ளது. வேறு இரு சமூகங்களுக்கு எதிரான வசனங்கள், காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்தப் படம் வெளியானால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.
‘கொம்பன்’ படத்துக்கு இதுவரை மண்டல தணிக்கை குழு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. படத்தை மத்திய தணிக்கை குழுவுக்கு மண்டல தணிக்கை குழு அனுப்பியுள்ளது. மத்திய குழுவானது தணிக்கை வாரியத்தின் சீராய்வு குழுவுக்கு படத்தை அனுப்பியது. கொம்பன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கூடாது, படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகள், வசனங்களை நீக்க உத்தரவிட வேண்டும். அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் பீட்டர் ரமேஷ்குமார், பாஸ்கர் மதுரம் ஆகியோர் வாதிடும்போது, இப்படத்துக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றார்.
கொம்பன் திரைப்பட தயாரிப்பாளர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விடுதலை வாதிடும்போது, ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவரிடம் நிலவும் மோதல் குறித்த படம்தான் கொம்பன். மனுதாரர்கள் கூறுவது போன்ற ஆட்சேபகரமான வசனங்கள், காட்சிகள் எதுவும் கொம்பன் படத்தின் இல்லை என்றார். மத்திய அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றார்.
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவர், மனுதாரர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி, அவர் தரப்பு வழக்கறிஞர்கள் 3 பேர், தயாரிப்பாளர், அவரது தரப்பு வழக்கறிஞர்கள் 3 பேர் ஆகியோர் சென்னையில் இன்று கொம்பன் படத்தை பார்க்க வேண்டும். பின்னர், பேக்ஸில் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இன்று மாலை தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
WINNER MOVIE PRODUCER.
மறுபடியும் படம் தயாரிப்பேன்!” - Vikatan
சமீபத்தில் வெளியான ‘கள்ளப்படம்’ படத்தில் ஒருகாலத்தில் சினிமா தயாரிப்பாளராக இருந்து, இப்போது தெருவில் திரிந்து கொண்டிருப்பவராக நடித்தவரின் பெயர் ராமச்சந்திரன். படத்தைப்போலவே நிஜத்திலும் ‘வின்னர்’ என்ற ஹிட் படத்தைத் தயாரித்து, பிறகு பணத்திற்கு வழி இல்லாமல் ஹோட்டலில் வேலை பார்த்தவர். சில பல முயற்சிகளுக்குப் பிறகு இப்போது நடிகர் ஆகிவிட்டவர், “மீண்டும் தயாரிப்பாளரும் ஆகப்போகிறேன்” என்கிறார் உற்சாகமாக.
“80கள்ல எங்க ஊர் தூத்துக்குடிப் பக்கம் நடந்த கமல், பாரதிராஜா சாரோட படங்களின் ஷூட்டிங்கைப் பார்க்குறதுல எங்களுக்கு அவ்வளவு ஆர்வம். கொஞ்சம் விபரம் தெரிஞ்ச வயசுல எங்க ஏரியா கமல் ரசிகர் மன்றத்துக்குத் தலைவர் ஆனேன். அப்பவே சினிமா மேல ஆசை வந்துச்சு. அப்புறம் சென்னைக்கு வந்து சம்பாதிச்சு, ஏற்கெனவே இருந்த சொத்து, நிலத்தை வித்து ஒரு சினிமா எடுக்கணும்னு ஆசைப்பட்டு ஆரம்பிச்சதுதான் ‘வின்னர்’ படம். 2 கோடி பட்ஜெட்ல முடிச்சிருக்கவேண்டியது.
சில பிரச்னைகளால நாலு கோடியை நெருங்கிடுச்சு. ஆனா, அப்போதைய நிலவரப்படி அந்த படத்துக்கு மதிப்பு ரெண்டு கோடிதான்னு வினியோகஸ்தர்கள் கையை விரிச்சுட்டாங்க. என்ன பண்றது? சினிமாவுல இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்சுதான் வர்றோம். அப்புறம் யாரைக் குத்தம் சொல்லி என்ன பண்ண? இப்பவும் டி.வி.யில் ‘வின்னர்’ படக் காட்சிகள் போட்டா, ரசிகர்கள் விழுந்து சிரிச்சுப் பார்க்கிறாங்க. ஆனா, எங்க வீட்டுல மட்டும் அந்தப் படம் போட்டா டிவியை ஆஃப் பண்ணிட்டு எந்திருச்சுப் போயிடுவாங்க!” - ஃப்ளாஷ்பேக்குடன் ஆரம்பித்துத் தொடர்ந்தார் ராமச்சந்திரன்.
“அப்புறம் நண்பரோட ஹோட்டல்ல ரிசப்ஷனிஸ்ட்டா வேலைக்குச் சேர்ந்துட்டேன். அந்தக் கஷ்டகாலத்துல எனக்கு உதவியா இருந்தது தயாரிப்பாளர் சங்கத்துல இருந்த நண்பர்களும், என் சொந்தக்காரங்களும்தான். படத்துக்காக பலபேர்கிட்ட கடன் வாங்கியிருந்தாலும், எல்லோரும் ‘இவன் எப்படியாவது ஜெயிச்சிடு வான்’னு நம்பிக்கை வெச்சிருந்தாங்க. தவிர, எனக்கும் சினிமாவை விட்டுட்டு வேற தொழில் பார்க்கணும்னு தோணலை. அதனால, எந்த சினிமாவுல முதலாளியா இருந்தேனோ, அதே சினிமாவுல தொழிலாளியா வாழ்க் கையை ஆரம்பிக்கலாம்னு என் புகைப்படங்களை எடுத்துக்கிட்டு நடிக்க வாய்ப்பு தேடிக் கிளம்பிட் டேன். தயாரிப்பாளரா இருந்தப்போ இருந்த அத்தனை நண்பர்களும் எனக்கு உதவி பண்ணத் தயாரா இருந்தாங்க.
‘அரும்பு மீசை குறும்புப் பார்வை’ படத்துல நடிகரா அறிமுகமானேன். சின்னச் சின்ன கேரக்டர்களா இருந்தாலும் 70 படங்க ளுக்கும் மேல நடிச்சுட்டேன். நான் தயாரிப்பாளரா இருந்தவன்ங்கிறதால எந்த ஒரு தயாரிப்பாளர்கிட்ட சம்பளம் வாங்கும்போதும் ‘இவர் போட்ட பணம் கிடைச்சுடணும்’னு வேண்டிக்குவேன். ஏன்னா, தயாரிப்பாளார்களோட நிலைமை அப்படி!’’ என்று விரக்தியாகப் பேசிக்கொண்டிருந்தவர், சட்டென உற்சாக மூடுக்கு மாறுகிறார்.
“நான் பேசுறதைக் கேட்டா ‘இனிமே நான் தயாரிப்பு பக்கமே தலை வெச்சுப் படுக்க மாட்டேன்’னு நினைச்சிருப்பீங்களே? அதான் இல்லை. நடிப்பு தவிர, சைடு கேப்புல ரியல் எஸ்டேட் பிசினஸும் பண்ணிக்கிட்டு இருக்கேன். முன்னெல்லாம் படத் தயாரிப்புல இருந்த சூட்சமம் தெரியாமப் போச்சு. இப்ப அப்படி இல்லை. இதுதான் படம் தயாரிக்கிறதுக்கு சரியான நேரம்னு நினைக்கிறேன். ஆனா, படத்துக்குப் பூஜை போடுறதுல இருந்து ரிலீஸ் பண்றவரைக்கும் நம்ம கையில தேவையான பணத்தை வெச்சுக்கிட்டுதான் படம் தயாரிக்கணும்னு பார்க்கிறேன். அதுக்கான நேரம் கண்டிப்பா வரும். மீண்டும் நான் தயாரிப்பாளரா ஒரு ரவுண்டு வருவேன். ஏன்னா, முதல் படம் பண்ணப்போ ‘சினிமாவைவிட ஒரு மோசமான தொழில் உலகத்துல கிடையாது’னு தோணுச்சு. இப்போ ‘சினிமாவைவிட ஒரு நல்ல தொழில் உலகத்துல எதுவுமே கிடையாது’னு தோணுது!’’ செமத்தியான பன்ச் டயலாக்குடன் முடிக்கிறார் ராமச்சந்திரன்.
'அகில இந்திய புரட்சிதளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம்' - விஷால் அறிவிப்பு..- Vikatan
சினிமாவில் நுழைந்து 10 ஆண்டுகள் நிறைவை ஒட்டி விஷால் தனது ரசிகர் மன்றங்களை ரசிகர் நற்பனி இயக்கங்களாக மாற்றியுள்ளார். இது குறித்த கூட்டம் நேற்று நடைபெற்றது.
அதில் பேசிய விஷால் கூறும் போது " நான் சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. எப்படியோ காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த10 ஆண்டுகளில் எனக்கு எவ்வளவோ அனுபவங்கள் பாடங்கள் கிடைத்தன.
திரும்பிப் பார்த்த போது எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. நான் இந்த அளவுக்கு வருவதற்கு, ஆதரவு கொடுத்த ரசிகர்களும் காரணம். ஆனால் அவர்களுக்கும் எனக்கும் இடைவெளி வந்த மாதிரி உணர்ந்தேன்.
உண்மையைச் சொன்னால் வெட்கத்தை விட்டுச் சொன்னால் என் மாவட்ட நிர்வாகிகள் யாரென்றே எனக்குத் தெரியவில்லை.இந்த இடைவெளி தவிர என்தரப்பிலும் மன்றச் செயல் பாடுகளிலும் பல குறைகள் தென்பட்டன.
அது மட்டுமல்ல என்னை அதிர்ச்சியும் வருத்தமும் அடைய வைத்த ஒரு சம்பவம் நடந்தது. அவர் ஒரு மாவட்ட நிர்வாகி. என்னை சந்திக்க முயன்றிருக்கிறார் தகவல் தொடர்பில் பிரச்சினை முடியவில்லை. சந்திக்க முடியாமலேயே போயிருக்கிறார். பிறகுதான் எனக்குத் தெரிந்தது. அவர் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை உதவி கேட்டு வந்திருக்கிறார். மறுபடியும் சந்தித்த போது சொன்னார் அம்மா போய்ட்டாங்க என்று.. அம்மா போனதுதான் மிச்சம். ஆனாலும் நான் உங்களுக்காக வந்திருக்கிறேன். என்றார் இது நடந்தது 2009ல் அது என்னை காயப்படுத்தி பாதித்து விட்டது. மிகவும் வருத்தப்பட்டேன். எதனால் இப்படி ஆனது. தகவல்தொடர்பு இடைவெளி நம் அணுகு முறையில் எங்கோ தவறு இருக்கிறது என்று புரிந்து கொண்டேன். மாவட்ட நிர்வாகிகளைக் கூட எனக்குச் சரியாக அடையாளம் தெரியவில்லையே என வருந்தினேன்.
அதன்பிறகு யோசித்தேன். நாம் சில மாற்றங்கள் செய்யவேண்டும் என்று முடிவு செய்தேன். நிர்வாகிகளை மாற்றினேன். தலைவராக புதியவராக ஜெயசீலன் என்பவரை நியமித்துள்ளேன்.என் ரசிகர் மன்றம். இனி 'அகில இந்திய புரட்சிதளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம்' என்று மாற்றப்படுகிறது. வேகம், விவேகம், விடாமுயற்சி இதன் கொள்கைகள்..
பெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். முதலில் மனதில் தோன்றிய விஷயம் இது. பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாததால் கூட பெண் பிள்ளைகள் பள்ளிக்குப் போவதில்லை என்று தெரிகிறது. அப்படிப்பட்ட வசதிகள் செய்து தருவது ஒரு திட்டம்
நன்றாகப் படிக்கும் மாணவிகள் கல்லூரிக்குச் சென்று படிக்க உதவுவது இப்படி பல திட்டங்கள் இருக்கின்றன. போகப்போக படிப்படியாக இது விரிவடையும்
இப்படி உதவி கேட்டு வருகிறவர்களுக்கு தேவை உள்ளவர்களுக்கு நாம் செய்கிற உதவி போக வேண்டும்.இதில் தகவல் தொடர்பு சிக்கல் வரக்கூடாது.
அதனால் 32 மாவட்டங்களுக்கும் தனித்தனி நிர்வாகிகள். தங்கள் பகுதியில் இப்படி தேவைப்படுவோரை தேர்ந்தெடுத்து எங்களுக்கு தருவார்கள். தகுதியறிந்து உதவ நான் தயார்.
இது நாள் வரை நான் தனியாகவும் ரசிகர்கள் ஒரு பக்கம் தனியாகவும் செய்துவந்த நல்ல காரியங்களை இனி இணைந்து முழு சக்தியுடன் செய்ய இருக்கிறோம்.முறைப்படுத்தல் அவசியம் எனப்பட்டது. இனியும் சுதாரிக்கவில்லை என்றால் நன்றாக இருக்காது என்று முடிவு செய்தேன். எனவே இந்த மாற்றங்களை செய்தேன். இதற்காக தனி இணையதளம் தொடங்கியுள்ளேன்.
இது முழுக்க சமூக நற்பணி சார்ந்தது இதில் அரசியல் ஈடுபாடோ, நோக்கமோ எதுவுமில்லை. கேரளா, பெங்களூரிலும் இம்மன்றங்கள் செயல்படும்.மாதாமாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ரசிகர்களை சந்தித்துப் புகைப்படம் எடுக்க ஒதுக்குவேன்.
”’நாயகன்’ படத்திற்கு பிறகு நான் பிரம்மித்த படம் இது” - பாரதிராஜா புகழாரம்
’ஜிகர்தண்டா’ படத்திற்காக தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா தற்போது கோலிவுட்டின் செல்லப்பிள்ளை ஆகி வருகிறார். இந்நிலையில் இன்னொரு சிறப்பாக ஏப்ரல் 10ம் தேதி சிம்ஹா நடிப்பில் வெளியாக உள்ள ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படம் தமிழ் சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த இயக்குநர்களுக்கு திரையிடப்பட்டுள்ளது.
மருதுபாண்டியன் இயக்கத்தில் , காரியம்பட்டி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சென்னை உங்களை அன்புடன்’ வரவேற்கிறது. பாபி சிம்ஹா, பிரபஞ்சன், சரண்யா, லிங்கா ஆகியோர் நடித்துள்ள இப்படம் சென்னைக்கு கனவுகளோடு வரும் இளைஞர்களின் வாழ்வை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இப்படம் பாரதிராஜா, ’அரண்யகாண்டம்’ இயக்குநர் தியாகராஜா குமாரராஜா, மற்றும் ‘பாலாஜி மோகன்’ உள்ளிட்டொருக்கு திரையிடப்பட்டுள்ளது. படத்தை பார்த்த மூவரும் வெகுவாக பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். மேலும் பாபி சிம்ஹாவிற்கும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
பாராதிராஜா ‘ நாயகன் படத்திற்கு பிறகு என்னை பிரம்மிப்பில் ஆழ்த்திய படம்’ எனவும், தியாகராஜா குமாரராஜா ‘ எந்த ஒரு சினிமாத்தனமும் இல்லாத படம்’ எனவும், மேலும் பாலாஜி மோகன் ‘ உலகத் தரம் வாய்ந்த ஒரு படம் பார்த்த உணர்வை இப்படம் எனக்கு கொடுத்தது’ என புகழ்ந்துள்ளனர். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். படம் வருகிற வெள்ளிக்கிழமை ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது.
கிருஷ்ணசாமி மீது நஷ்ட ஈடு வழக்கு - கொம்பன் டீம் அதிரடி! - vikatan
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'கொம்பன்'.இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்தது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.‘கொம்பன்’ படத்தில் குறிப்பிட்ட ஜாதியை அவதூறாக சித்தரித்துள்ளதாகவும், மேலும் இதனால் ஜாதி கலவரம் வரலாம் எனவும் ‘புதிய தமிழகம்’ கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். பல எதிர்ப்புகளை மீறி இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்த வழக்கு நடந்த வேளையில் படம் ஏப்ரல் 1ம் தேதி காலயில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, மாலை தான் வெளியானது. இந்நிலையில் ’கொம்பன்’ படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடந்தது.அதில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, “இந்தப் படத்துக்கு தடை கேட்ட கிருஷ்ணசாமி வெறும் அம்புதான். இதன் பின்னணியில் அரசியல் உள்ளது. இந்த பிரச்னையால் 120 திரைகள் குறைவகாகவே கிடைதத்து.
படத்துக்கு இப்போது நல்ல வரவேற்பு இருப்பதால் வரும் இன்று(புதன்கிழமை) முதல் திரையரங்குகளை மேலும் அதிகரிக்க இருக்கிறோம். அதுமட்டுமன்றி, கிருஷ்ணசாமியின் எதிர்ப்பால் வெளிநாட்டுக்கும் சரியான நேரத்தில் படத்தை அனுப்ப முடியாது பண இழப்பை சந்தித்திருக்கிறோம். இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டுதான் அவரிடம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பாபி சிம்ஹா மீது இயக்குநர் பரபரப்பு புகார்! - vikatan
சமீபத்தில் சிறந்த துணை நடிகருக்காக ‘ஜிகர்தண்டா’ படத்திற்காக தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா மீது ’சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தின் இயக்குநர் மருது பாண்டியன் திடீர் புகார் தெரிவித்துள்ளார்.
புகார் குறித்து அவர் கூறியதாவது:
‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற படத்தில் பாபி சிம்ஹாவை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தேன். இதுதான் அவர் நாயகனாக அறிமுகமான முதல் படம். 67 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். 30 நாட்களுக்கு மேல் நடித்து கொடுத்தார். ஆரம்பத்தில் நன்றாக ஒத்துழைப்பு அளித்தார்.
ஆனால் ஜிகர்தண்டா படம் ஹிட்டானதும் அவர் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. ஐந்து நாட்கள் நடிக்க வேண்டிய காட்சிகள் பாக்கி இருந்தது. அவற்றை முடித்து கொடுக்கும்படி மறுத்துவிட்டார்.
இப்போது என் நிலைமை வேறு. ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தின் கணக்கு வழக்குகளை என்னிடம் ஒப்படையுங்கள். அந்த படத்துக்கான வசூலில் பாதியை எனக்கு தருவதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். அப்போதுதான் நடிப்பேன் என்று நிபந்தனை விதித்தார்.
பல மாதங்கள் காத்திருந்தோம். விஜய்சேதுபதி மூலம் சமரசமும் பேசினோம். ஆனால் நடிக்க வரவில்லை. டப்பிங் பேசவும் மறுத்து விட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானோம். அவர் நடிக்காமல் விட்ட சீன்களை வேறு ஒருவரை நடிக்க வைத்து முடித்துவிட்டோம். வருகிற 10–ந்தேதி படம் ரிலீசாகிறது.
இதை குறும்படம் என்று பாபி சிம்ஹா கூறி இருப்பது தவறு. 2 மணி நேரம் 15 நிமிடம் படம் வந்துள்ளது. அவரிடம் கதை சொன்னபோதே 115 சீன்கள் விளக்கினேன்.
திரைப்பட துறையில் சாதிக்க துடிக்கும் மூன்று இளைஞர்கள் பற்றிய கதையே இப்படம். இந்த படத்தை பார்த்து டைரக்டர் பாரதிராஜா ‘நாயகன்’ படத்துக்கு பிறகு நான் பார்த்து வியந்த படம் என பாராட்டினார்.
டைரக்டர்கள் ராம், தியாகராஜன், குமார ராஜா, பாலாஜி, தரணிதரன் போன்றோரும் பாராட்டு தெரிவித்தனர். ஏ.டி.எம். புரொடக்ஷன்ஸ் மதுராஜ் இந்த படத்தை வாங்கி ரிலீஸ் செய்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
த்ரிஷா -வருண்மணியன் இடையே என்னதான் ஆச்சு? - Vikatan
ஜனவரி 23ம் தேதி பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது த்ரிஷா வருண்மணியன் நிச்சயதார்த்தம். கடந்த வருட இறுதி முதலே கிசுகிசுக்களில் சிக்கிய இருவரும் இதற்கு முற்றுப்புள்ளி வைத்து நிச்சயதார்த்த அறிவிப்பை வெளியிட்டனர்.
தற்போது புதிய செய்தியாக இருவருக்கும் இடையில் மனஸ்தாபங்கள் உருவாகியுள்ளன எனவும், எனவே தான் வருண்மணியன் , திரு, ஜெய் இணைந்துள்ள புதிய படத்தில் த்ரிஷா நடிக்க இருந்து பின் டாப்சி நடிப்பார் என அறிவிக்கப்பட்டது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
திருமணம் விரைவில் என அறிவித்தாலும் கூட த்ரிஷா தொடர்ச்சியாக பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு, நடிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில் வருண்மணியன் வீட்டு இல்ல விழா ஒன்றிலும் த்ரிஷா கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.. எனவே இருவருக்கும் இடையில் மனஸ்தாபங்கள் உருவாகி உள்ளது என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.. இதனால், த்ரிஷா-வருண்மணியன் திருமணம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்விகள் திரையுலக வட்டாரங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து, சம்மந்தப்பட்ட இருவரும் விளக்கம் அளித்தால்தான் குழப்பங்களுக்கு விடை கிடைக்கும்.
Tollywood seems to be STRICT...
பஞ்சாயத்து முடிந்தது - நாளை முதல் ஆந்திராவை கலக்கயிருக்கும் காஞ்சனா பேய்
லாரன்ஸ் நடித்துள்ள காஞ்சனா 2 தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்புகிறது. இந்தப் படத்தை தெலுங்கில் வெளியிட லாரன்ஸ் எடுத்த முயற்சிகள் பலனளிக்க ஆரம்பித்துள்ளது. ஆம், நாளை காஞ்சனா 2, கங்கா என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகிறது.
லாரன்ஸ் கடைசியாக இயக்கிய ரிபெல் படம், பட்ஜெட்டை தாண்டியதால் பல கோடிகள் லாரன்ஸ் ரிபெல் தயாரிப்பாளருக்கு தர வேண்டும் என ஆந்திரா தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட்டது. அந்த பஞ்சாயத்து இன்னும் முடியாமலிருந்ததால் காஞ்சனா 2 வெளியான அன்று அதன் தெலுங்குப் பதிப்பான கங்கா ஆந்திராவில் வெளியாகவில்லை.
தமிழில் படம் ஹிட்டானதால் கங்காவை திரையிட ஆந்திரா விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழகத்தைப் போல் ஆந்திராவையும் காஞ்சனா பேய் கலக்கும் என்பது நிச்சயம்.
திருமணமான ஒரே ஆண்டில் விவாகரத்து கேட்கும் ரம்யா!(TV anchor)
திருமணமாகி ஒரே ஆண்டுக்குள் கணவரிடமிருந்து விவாகரத்து கேட்கிறாராம் விஜய் டிவி விஜேயும் நடிகையுமான ரம்யா.ரம்யாவுக்கும் அபராஜீத் என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. இவரது திருமணத்துக்கும் சரி, திருமண வரவேற்புக்கும் சரி, மொத்த கோலிவுட்டே திரண்டது என்றால் மிகையல்ல. இளம் நடிகர்கள் மொத்த பேரும் ஆஜர். ரஜினி, கமல் போன்ற பெருந்தலைகள் தவிர, மொத்த பேரும் ஆஜர். அந்த அளவு திரையுலகத் தொடர்புகள் மிகுந்தவர் ரம்யா.திருமணமான பிறகு, குடும்பப் பாங்கினியாக செயல்பட மறுத்துவிட்டாராம் ரம்யா. திருமணத்துக்கு முன்பு எப்படி மாலை நேர விருந்துகள், நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்தாரோ, அதே போலத்தான் திருமணத்துக்குப் பிறகும் இருந்துள்ளார்.இது ஆச்சாரமான அபராஜித் குடும்பத்துக்குப் பிடிக்கவில்லையாம். இந்த நிலையில் நடிப்பிலும் குதித்தார் ரம்யா. தோழிப் பாத்திரம் என்றாலும் கவனிக்கும்படியான ஒரு வேடத்தில் ஓ காதல் கண்மணியில் நடித்தார். இப்போது அவருக்கும் வாய்ப்புகள் குவிகின்றனவாம்.எனவே திருமண வாழ்க்கைக்கு குட்பை சொல்லிவிட்ட ரம்யா, உடனடியாக விவாகரத்துக்கு ஏற்பாடு செய்யும்படி கணவரிடம் கூறிவிட்டு, அம்மா வீட்டுக்கு வந்துவிட்டாராம்!சீக்கிரமே குடும்ப நல நீதிமன்றப் படிகளில் ஏறலாம் இந்த ஜோடி என்கிறார்கள்
செப்டம்பரில் திருமணம் - முஸ்லீமாக மாறுவதில்லை என விஜயலட்சுமி முடிவு
இயக்குனர் அகத்தியனின் மகளும், நடிகையுமான விஜயலட்சுமி உதவி இயக்குனர் பெரோஸ் முகமதுவை காதலித்து வருகிறார். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து வரும் செப்டம்பரில் திருமணம் செய்ய உள்ளனர்.
முஸ்லீம் ஒருவரை திருமணம் செய்தால் மணமகளும் முஸ்லீமாக மதம் மாறுவதுதான் வழக்கம். ஆனால், திருமணத்துக்குப் பிறகு இஸ்லாம் மதத்துக்கு மாறப் போவதில்லை என விஜயலட்சுமி கூறினார். இந்த விஷயத்தில் நாங்கள் இருவரும் தெளிவாக இருக்கிறேnம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நடிப்புக்கு முழுக்குப் போட்ட விஜயலட்சுமி படத்தயாரிப்பில் கவனம் செலுத்தயிருக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் படம் ஜுனில் ஆரம்பமாகிறது.
எல்லாப் படங்களுக்கும் சிக்கல்? கடும் அதிர்ச்சியில் முருகதாஸ்? VIKATAN
விக்ரம் நடிக்க விஜய்மில்டன் இயக்கும் பத்துஎண்றதுக்குள்ள படம் திட்டமிட்டபடி முடியாமல் இழுத்துக்கொண்டிருக்கிறது. முருகதாஸ் தயாரிக்கும் இந்தப்படம் தொடங்கியபோது நன்றாகத்தான் தொடங்கியிருக்கிறது. சிக்கிம் போய்ப் படப்பிடிப்பு நடத்திவிட்டு வந்தார்கள். அதன்பின்னர் கோவையில் படப்பிடிப்பு நடத்தியபோது திட்டமிட்டதைவிட இரண்டு மடங்குக்கு மேல் செலவாகிவிட்டதாம்.
இதனால் படத்தை அப்படியே போட்டுவைத்துவிட்டாராம் முருகதாஸ். சுமார் ஐந்துமாதங்கள் அப்படியே கிடந்திருக்கிறது. அதன்பின் நிறையப் பேச்சுவார்த்தைகள் சமரசங்கள் ஆகியன நடந்து மறுபடி படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார்கள். நேபாளம் போய் அடுத்தகட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்திருக்கிறார்களாம். இதற்கடுத்து பல்கேரியா போய்ப் பத்துநாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்பது படக்குழுவினரின் திட்டம். ஆனால் தயாரிப்பாளர் தரப்பிலோ பல்கேரியா போய் வருவதற்கெல்லாம் பணமில்லை. எனவே இந்தியாவுக்குள் எங்கேயாவது போய்ப் படப்பிடிப்பு நடத்துங்கள் அல்லது தமிழ்நாட்டுக்குள்ளேயே எங்காவது படப்பிடிப்பு நடத்தினால் இன்னும் சந்தோசம் என்று சொல்லிவிட்டார்களாம். இதனால் விக்ரம் மற்றும் இயக்குநர் விஜய்மில்டன் ஆகியோர் முருகதாஸ் மீது கடும் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.
முருகதாஸ் தயாரிப்பில் தயாராகும் இன்னொரு படம் ரங்கூன். இந்தப்படமும் ஏகப்பட்ட சிக்கலில் இருக்கிறதாம். இந்தப்படத்தின் பட்ஜெட்டும் திட்டமிட்டதைவிட அதிகமாகிவிட்டது என்று தயாரிப்புத்தரப்பு சொல்லிக்கொண்டிருக்கிறதாம். அந்தப்படத்துக்காகப் பர்மா போனஇடத்தில் ஏகப்பட்ட சிக்கல்கள் நடந்துவிட்டனவாம். படத்தின் இயக்குநர் செய்த குளறுபடிகளும் அதிகம் என்று சொல்கிறார்கள். சரியான திட்டமிடாமல் நிறையச் செலவை இழுத்துவிட்டுவிட்டாராம் இயக்குநர். இதனால் அந்தப்படத்தின் படப்பிடிப்பும் தாமதமாகிக்கொண்டேயிருக்கிறதாம்.
இவ்விரண்டு படங்களுக்கும் முருகதாஸூக்குப் பக்கபலமாக இருக்கும் பெரியநிறுவனம், இப்போது முருகதாஸ் மீது வருத்தத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது, பெரியஇயக்குநர் சொன்னபடி செய்வார் என்று நம்பி ஒப்படைத்தால் இவ்வளவு சிக்கல்கள் வருகிறதே என்று அவர்கள் வருத்தப்படுகிறார்களாம்.
இதுமட்டுமின்றி, வலியவன் படத்தைத் தயாரித்த நிறுவனம் முருகதாஸின் பொறுப்பில் ஒருபடத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்ததாம். வலியவன் படத்தின் படுதோல்வி மட்டுமின்றி முருகதாஸின் பொறுப்பில் எற்கெனவே இருக்கும் படங்களின் நிலையைப் பார்த்து படத்தைத் தொடங்கவே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. தொடர்ந்து தான் கைவைக்கும் எல்லாப்படங்களும் சிக்கலுக்கு ஆளாகி வருவதால் முருகதாஸ் கடும் வேதனையில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
மைனா நாயகன் விதார்த்துக்கு டும் டும் டும்
மைனா, ஜன்னல் ஓரம், வீரம், காடு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விதார்த். இவருக்கும் பழனியை சேர்ந்த வக்கீல் சிவானந்தம் என்பரின் மகள் காயத்திரி தேவிக்கும் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். நேற்று முன்தினம் பழனியில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
ஜூன் 11ம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெறவிருக்கிறது. தொடர்ந்து ஜூன் 17ல் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்த முடிவுசெய்துள்ளனர். பெற்றோரின் ஏற்பாட்டிலேயே திருமணம் நடைபெறுகிறது.
2001ம் ஆண்டிலேயே சினிமாவில் அடியெடுத்துவைத்தவர் வித்தார்த். மின்னலே படத்தில் துணைநடிகராக அறிமுகமானவர். தொடர்ந்து சண்டகோழி, கொக்கி, லீ, திருவண்ணாமலை, குருவி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
த்ரிஷா - வருண் பிரிந்தது ஏன்?: மனம் திறக்கும் த்ரிஷா அம்மா!- vikatan
த்ரிஷா - வருண்மணியன் திருமணம் நின்று போனது உண்மையா? இல்லையா? என்பது குறித்த மின்னல்வேகச் செய்திகள் மீடியாவில் வந்த வண்ணம் இருக்கிறது.
இதுபற்றி இதுவரை த்ரிஷா வீட்டிலோ, வருண் வீட்டிலோ யாரும் வாய் திறக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் திருமணம் குறித்து த்ரிஷாவின் அம்மா உமா, நம்மிடம் மனம் திறந்தார்.
"த்ரிஷாவின் கல்யாணம் சம்மந்தமா அவங்க அவங்க மனசுக்கு என்னவெல்லாம் தோணுதோ, அப்படி இஷ்டத்துக்கு எழுதிக்கிட்டு வர்றாங்க. இது ஒரு சென்சிட்டிவ்வான விஷயம். அதனாலதான் இதுவரைக்கும் வாய் திறக்காம இருந்தேன்.
பத்திரிகையில எல்லாம் 'த்ரிஷா திருமணத்துக்கு பிறகு நடிக்கறது வருணுக்கும், அவரது குடும்பத்துக்கும் பிடிக்கவில்லை. அதனால் கல்யாணத்தை நிறுத்தி விட்டார்கள்' என்று தங்களுக்கு தோணுறதை எல்லாம் எழுதறாங்க. துளிகூட அதில் உண்மை இல்லை.
த்ரிஷா சினிமாவுல நடிக்கிறார்னு தெரிஞ்சுதான் பொண்ணு பார்க்க வந்தாங்க. புதுசாவா சினிமாவுல த்ரிஷா நடிக்கிறார். ஏற்கெனவே ஏகப்பட்ட படத்துல நடிச்சவர்னு தெரிந்துதானே நிச்சயம் செய்தாங்க. கல்யாணத்துக்கு அப்புறமும் நடிக்கலாம்னு த்ரிஷாவை, வருண் என்கரேஜ் செய்து கொண்டு இருந்தார் அதுதான் நிஜம். அதுமட்டுமில்ல, த்ரிஷா சினிமாவுல நடிக்கறது அவங்க குடும்பத்தோட பெருமையாத்தான் நினைச்சாங்க.
நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகும்கூட நிறைய புதுப்படத்துக்கு த்ரிஷா தேதி கொடுத்து இருக்கிறது வருண் ஃபேமிலிக்கு நல்லாவே தெரியும். கல்யாணத்துக்கு பிறகு த்ரிஷா நடிக்கக்கூடாதுன்னு வருண் குடும்பத்தார் சொல்லி இருந்தாங்கன்னா நாங்க புதுப்படத்தை கமிட் செய்தே இருக்க மாட்டோம்.
நானும், த்ரிஷாவும் சம்மந்தப்பட்ட விஷயம்னா, யார்கிட்டேயும் ஒபீனியன் கேட்க வேண்டியது இல்லை. எல்லாத்தையும் ஓப்பனா பேசிடுவேன். த்ரிஷா கல்யாணம் நின்னுபோன விஷயத்துல பெரியவங்க பலபேர் சம்மந்தப்பட்டு இருக்காங்க. அதுமட்டுமில்லே, இன்னும் நிறையபேர் இதுல இன்வால்வ் ஆகி இருக்காங்க. அவங்க எல்லார் மேலேயும் எனக்கு நல்ல மரியாதை இருக்கு. அதனால் எல்லாத்தையும் வாய் திறந்து பேச முடியது, பேசறது நாகரீகம் கிடையாது. நாங்க ஏதாவது வாய் திறந்து பேசப்போயி, அதைப்பத்தி வேற மாதிரி திரிச்சு எழுதிடுவாங்க. அதனால அந்த பெரியவங்களோட மனசு காயப்படுறதுக்கு நாங்க காரணமா இருக்க விரும்பலை.
ஒத்துவராத விஷயங்களை காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டு வாழறது எந்த விதத்துல நியாயம்? சில விஷயங்கள் சரிப்பட்டு வரலைன்னா பிரிந்து விடுவது பெட்டர். அதுக்கான காரண காரியங்களை ஆராய்ந்து பார்த்துக் கொண்டே இருந்தால் மனக்குழப்பம்தான் வரும். எல்லாருக்கும் அவங்க அவங்களுக்குன்னு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு. அதைத் தேடிப் போக வேண்டியதுதான்.
இப்போ த்ரிஷாவோட கவனம் எல்லாம் புதுசா தேதி கொடுத்து இருக்குற படங்களின் மேலதான். அடுத்து கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அதுக்கப்புறம் செல்வராகவன் டைரக்*ஷன்ல ஒப்பந்தமாகி இருக்குறார்'' என்றார்.
இணையத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் பிச்சைக்கார கெட்டப்.. அதிர்ச்சியில் படக்குழு!
’ரஜினிமுருகன்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வித்யாசமான கெட்டப் இணையத்தில் வெளியாகியதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் “ரஜினிமுருகன்” இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக்கில் ரஜினி கெட்டப்பில் சிவகார்த்திகேயன் தோன்றினார். இதனைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீடு மற்றும் படம் வெளீயீடு தேதிகளை படக்குழுவினர் அறிவித்தனர்.
ஜூன் 7ம் தேதி இசை வெளியிடும், ஜுலை 17 ரம்ஜான் விடுமுறை நாளில் படம் வெளியிடப்படும் என்றும் அறிவித்தனர். சிவகார்த்திகேயன் , கீர்த்தி சுரேஷ், சூரி நடிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் வித்யாசமாக அடையாளம் தெரியாத அளவிற்கு பிச்சைக்காரன் கெட்டப்பில் ஒரு காட்சியில் நடித்துள்ளாராம். அந்த கெட்டப்பை படக்குழு மிக ரகசியமாகவும் வைத்திருந்தனர்.
இப்போது யாரோ அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் இவ்வளவு ரகசியமாக வைத்திருந்த இந்த புகைப்படம் எப்படி வெளியானது என குழப்பத்தில் உள்ளனராம். மேலும் அந்த புகைப்படம் இது சிவகார்த்திகேயன் தானா என்னும் அளவிற்கு அடையாளம் தெரியாமல் அமைந்துள்ளது
அஜித்துடன் ராஜா, விக்ரமுடன் காதல் சடுகுடு, விஜயகாந்துடன் ராஜ்யம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரியங்கா திரிவேதி. பிரபல கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்துகொண்டார். அதன் பின் சினிமாவிற்கே முழுக்கு போட்ட பிரியங்கா மீண்டும் கன்னட மொழி திரைப்படத்தில் நடிக்கிறார்.
கன்னடத்தின் பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான தினேஷ்பாபு இயக்கும் படத்தில் பிரியங்கா நடிக்கிறார். கதாநாயகியை மையப்படுத்திய கதாப்பாத்திரம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டாராம். அதுமட்டுமில்லாமல் படத்தின் பெயரும் பிரியங்கா தான்.
மேலும் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். படப்பிடிப்பு முடியும் நிலையில் இருக்கிறதாம். விரைவில் திரையில் எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாளத்தில் ஹவ் ஓல்ட் ஆர்யூ படத்தின் மூலம் மஞ்சுவாரியரும், தமிழில் 36 வயதினிலே படத்தின் மூலம் ஜோதிகாவும் ரி எண்டிரி கொடுத்தது போல கன்னடத்தில் உபேந்திராவின் உதவியுடன் களம் இறங்குகிறார் பிரியங்கா.
ஜிகிர்தண்டா இந்தி ரீமேக் - தயாரிப்பாளர் மீது கார்த்திக் சுப்பாராஜ் புகார்
Widgets Magazine
ஜிகிர்தண்டா படம் தயாரிப்பில் இருந்தபோதே அதன் தயாரிப்பாளர் கதிரேசனுக்கும், இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜுக்கும் முட்டிக் கொண்டது. படத்தின் வெளியீட்டை வேண்டுமென்றே தாமதப்படுத்தி, படத்தை சரியாக விளம்பரப்படுத்தாமல் கார்த்திக் சுப்பாராஜ் மற்றும் படத்தில் பங்காற்றிய அனைவரின் உழைப்பையும் அவமதித்தார் கதிரேசன்.
ஜிகிர்தண்டாவின் இந்தி ரீமேக் உரிமை சஜித் நடியட்வாலாவுக்கு பெரும் தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. ஒரு படத்தின் ரீமேக் உரிமை விற்கப்படும்போது கதை எழுதிய இயக்குனருக்கு 40 சதவீத பணம் தரப்பட வேண்டும். கதிரேசன் ரீமேக் உரிமையை சஜித் நடியட்வாலாவுக்கு விற்றதை கார்த்திக் சுப்பாராஜிடம் தெரிவிக்கவில்லை. முறைப்படி அவரது பங்கும் வந்து சேரவில்லை.
கதிரேசன் மீது இயக்குனர்கள் சங்கத்தில் கார்த்திக் சுப்பாராஜ் புகார் தெரிவித்துள்ளார். விரைவில் பஞ்சாயத்து நடக்க உள்ளது.
http://img.vikatan.com/album/2015/05...umb/105283.jpg http://img.vikatan.com/album/2015/05...umb/105284.jpg http://img.vikatan.com/album/2015/05...umb/105285.jpg http://img.vikatan.com/album/2015/05...umb/105289.jpg http://img.vikatan.com/album/2015/05...umb/105296.jpg http://img.vikatan.com/album/2015/05...umb/105297.jpg http://img.vikatan.com/album/2015/05...umb/105300.jpg http://img.vikatan.com/album/2015/05...umb/105301.jpg http://img.vikatan.com/album/2015/05...umb/105302.jpg
Boom time for Kollywood overseas
SREEDHAR PILLAI
One needs to understand the potential of Tamil films abroad.
Last year, Rajinikanth’s Lingaa fetched Rs. 21 crore, the highest ever for a Tamil film in the overseas markets. And in the first five months of 2015, four films have done extraordinary business – Shankar’s I, Mani Ratnam’s O Kadhal Kanmani, Raghava Lawrence’s Kanchana-2, and Ajith’s Yennai Arindhaal. Kamal Haasan’s Uttama Villain and Jyotika’s 36 Vayadhinile have also performed well in the US market.
O Kadhal Kanmani, whose overseas rights were sold for Rs. 2 crore, grossed approximately $714, 000 (Rs. 4.42 crore ) from the US market alone. OKK is one of the biggest hits of all time in the USA, as its acquisition price was very low compared to its business. It came after Mani Ratnam’s previous film Kadal, a flop, which had grossed only $80, 000.
The overseas rights of Raghava Lawrence’s Kanchana-2, went for a paltry Rs. 1 crore but the film is reported to have done business in the range of Rs. 7 crore to Rs. 8 crore. The film did best in Tamil cinema’s traditional overseas markets of Malaysia, Singapore and Europe.
Among Indian films, Tamil films have the second biggest market overseas in all foreign countries except the US, where Telugu cinema occupies the number-two position. Tamil cinema does business equivalent to one-fourth or - in some countries – one-third of Bollywood films. Kollywood’s key markets remain the traditional ones – Malaysia, Singapore and Sri Lanka, where Tamil films have been screened in theatres from the 1960s. 60 to 65 per cent of the total overseas business of Tamil cinema comes from this area.
Later, with the Eelam wars and migration from Sri Lanka, the UK-Europe, Canada, and now Australia territories also became big. The 90s Gulf boom helped Tamil cinema create a new market, hitherto a Hindi cinema citadel. Kollywood and Tollywood discovered the potential of the North American market during the last decade, as many Tamil and Telugu-speaking techies in the IT sector migrated from TN and Andhra to the US. Today, three individual players operating out of Chennai and the London-based veteran K. Karunamoorthy (owner of Ayngaran International) control the overseas business of Tamil cinema.
A leading overseas distributor of Tamil films said: “The foreign market for Tamil films is very star-driven. It is only the big stars like Rajinikanth, Kamal Haasan, Vijay, Ajith and Suriya or directors like Shankar and Mani Ratnam who have an overseas market. Among the younger lot, the emerging stars are Dhanush and Sivakarthikeyan. There is an ocean of difference between what works in each country. Mass content like Kanchana-2 works best in Malaysia, Singapore and Gulf, while class movies do better in US and UK, as proved by O Kadhal Kanmani.”
Ram Muthu, the Managing Director of Atmus Entertainment, a leading US-based distributor of Tamil films, says: “The USA market is becoming bigger by the year and can do $1.5 million — $2 million business. But that kind of business happens only for Rajinikanth films. USA audiences like Rajinikanth films the most, followed by films from Shankar, Mani Ratnam and Kamal Hassan. Kamal’s Uttama Villain, a failure in India, did $585,000 in the US market. These four people can bring more than $500,000 in revenue. The highest for Vijay, Ajith and Suriya were all under $400,000. Now, Vijay has Kaththi at $620,000, Ajith has Yennai Arindhaal at $515,000 and Surya might do the magic with next week’s big release Masss.”
Ram Muthu added: “Among the new-generation actors, Dhanush has recently crossed the $100,000 mark with two of his latest films, Velai Illa Pattathari ($220,000) and Anegan ($135,000). All the others are grossing under $100,000. Sivakarthikeyan’s Kaaki Sattai was able to do $75,000. The other heroes do not sell as well and are below $20,000 and may not recover their VPF (virtual print fees) and publicity cost. There are exceptions like Karthik Subbaraj’s Jigarthanda which did $185,000 and the Arya-Nayantara starrer Raja Rani which grossed $200,000.
Wide overseas releases have also helped the industry. In 2005, Rajinikanth’s Chandramukhi was released in 75 odd locations in foreign countries. Today, Suriya’s Masss is going to release in nearly 600-plus overseas locations. The opening weekend and the paid premieres on Thursday evening and night help to garner huge numbers. Ticket pricing is also market-driven unlike in TN, where it is government-controlled.
The rise of the overseas market is also attributed to the growth of social media (Twitter and Facebook) and a large number of Tamil-cinema-specific sites. The 24x7 coverage of Kollywood has caught the eye of the new generation. Dilani Rabindran, a Toronto-born youngster, became crazy about Tamil films hearing Rajinikanth and Kamal Haasan stories from her parents who immigrated to Canada in the 80s from Batticaloa, Sri Lanka. Today Dilani, an MBA graduate, works for the Toronto International Film Festival (TIFF) as a full-time Financial Analyst, and as a film tracker who helps choose South Asian movies for the festival. She also writes for a popular website.
Dilani says: “I too love to be there for first-day shows of Rajinikanth, Vijay and Ajith films — cheering along with everyone. 60 to 70 per cent of Toronto Tamil audiences reserve their attention for big-hero films, but there is a large artistic Tamil community here of burgeoning actors, writers and filmmakers who are very interested in all types of movies. Some of my favourite Tamil films of the past year have been non-big-hero films, like Mysskin’s Pisasu; which is why I wish we had a better distribution set-up here, so such films could be guaranteed a widespread theatrical release in North America as well.”
Trade analysts in Chennai say that in three years’ time, 40 to 50 per cent of the theatrical revenue of Tamil films is going to come from the overseas markets. The local market remains stagnant due to the government-controlled cap on ticket rates. Ticket prices in Tamil Nadu have not been increased for the last eight years. A leading exporter of Tamil films concludes: “The market for Tamil films is growing. But producers and stars should not kill the goose that lays the golden egg by asking for ridiculous prices. Releases should be planned well in advance, and prints should be delivered to overseas distributors a week in advance.”
Currently, the hottest films for which a bidding war is going on in the international market are Vijay's Puli, Ajith's next (tentatively called Thala 56) and Suriya's 24.
http://www.thehindu.com/features/cin...cle7238858.ece
EROS enters small budget...
சூர்யா, ரஜினி என மாஸ் நடிகர்களின் படங்களை பிரமாண்டமாக தயாரித்தும், விநியோகித்தும் பிரமாண்டமாக தோற்றுக் கொண்டிருந்த ஈராஸ் நிறுவனம் அதிரடி முடிவை எடுத்துள்ளது.
தற்போது அதை செயல்படுத்தியும் இருக்கிறது. சிறியதே அழகு - அதுதான் இப்போது இந்த நிறுவனத்தின் தாரக மந்திரம்.
ஈராஸ் அடுத்து தயாரிக்கும் இரு படங்களும் குறைந்த பட்ஜெட்டில் தயாராகின்றன. நடிப்பதும் சின்ன நடிகர்களே.
ஈராஸின் புதிய படம் ஒன்றுக்கு, எங்கிட்ட மோதாதே என பெயர் வைத்துள்ளனர். நட்டி நட்ராஜ் இதில் நடிக்கிறார். ராமு செல்லப்பா என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இன்னொரு படம், பேரை தேடிய நாள்கள். அசோக் செல்வன் இதன் நாயகன். இயக்கம் அறிமுகமான ஆபிரகாம் பிரபு.
படங்களின் நடிகர் மற்றும் இயக்குனர்களின் பின்னணியைப் பார்த்தால் ஈராஸ் படமா இல்லை திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்டின் படமா என்று சந்தேகம் எழும். பெரிய நடிகர்களை வைத்து பெரிதாக பல்பு வாங்குவதற்கு, சிறியது எவ்வளவோ அழகு.
தயாரிப்பாளர் மீது கார்த்திக் சுப்பாராஜ் வழக்கு - ஜிகிர்தண்டா ரீமேக் உரிமையை விற்க நீதிமன்றம் தடை
ஜிகிர்தண்டா படத்துக்கு தணிக்கைக்குழு யுஏ சான்றிதழ் தந்த போதே அதன் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜுக்கும், தயாரிப்பாளர் கதிரேசனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. யு சான்றிதழ் கிடைக்க சில காட்சிகளை நீக்கும்படி தணிக்கைக்குழு கூறியது. தயாரிப்பாளரும் கார்த்திக் சுப்பாராஜை நிர்ப்பந்தித்தார். ஆனால், அவர் அதற்கு பணியவில்லை. படம் யுஏ சான்றிதழுடனே வெளியானது.
இந்தப் பிரச்சனையை மனதில் வைத்து பட வெளியீட்டை கதிரேசன் வேண்டுமென்றே தள்ளி வைத்தார். கார்த்திக் சுப்பாராஜ் உள்பட யாருக்கும் பட வெளியீடு எந்த நாள் என்பதை தெரிவிக்கவில்லை. படத்தின் ஐம்பதாவது நாளுக்கு சின்ன விளம்பரம்கூட அவர் தரவில்லை.
இந்நிலையில் படத்தின் இந்தி ரீமேக்கை சஜித் நடியட்வாலாவுக்கு கதிரேசன் விற்க முன்வந்தார். கார்த்திக் சுப்பாராஜுக்கு தெரியாமலே இந்த முயற்சியும் நடந்தது. இதனை அறிந்த கார்த்திக் சுப்பாராஜ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ரீமேக் உரிமையை விற்க தடை வாங்கியுள்ளார். அது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.
எஸ்.கதிரேசனுடன் நான் செய்துகொண்ட ஒப்பந்தப்படி இந்தி, மொழிமாற்று உரிமத்தில் 40 சதவீதம் எனக்கு தர வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் சமீபத்தில், எஸ்.கதிரேசன் எனக்கு தெரியாமல் இந்த திரைப்படத்தின் உரிமையை விற்க முயல்வதாக அறிந்தேன். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தில் இந்த பிரச்னையை பதிவு செய்தேன். பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக பிரச்சனையை நாலு சுவற்றுக்குள் முடிக்கலாம் என கூற, பலமுறை பேச்சுவார்த்தை நடந்தது. ஆயினும் எஸ்.கதிரேசன் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழையாமல் போகவே சுமூகமான பேச்சுவார்த்தை நடக்கவில்லை.
எனவே இயக்குனர் சங்கத்தின் ஆலோசனையோடு வேறு வழியில்லாமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தேன். சென்னை உயர் நீதிமன்றம் இப்போது படத்தின் மொழிமாற்று உரிமத்தை விற்பதற்கு ஜூன் 11-ம் தேதி வரை தடை விதித்துள்ளது. தயாரிப்பாளருக்கும் இத்தடை உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தரப்பு பதிலையும் நீதிபதி கோரியுள்ளார்.