-
கிருஷ்ணா
பாடியவர் தொடங்கி ஒரு பாடலை எடுத்துக் கொண்டால் அத்தனை பேரையும் உடனே நினைவு கூர்ந்து விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் நீங்கள், வாசு கார்த்திக், கோபால் முரளி சாரி வினோத் என அனைத்து நண்பர்களுக்கு முன்னால் என் பங்கு மிகச் சிறியதே. பகலிலே வேறு அலுவலிருப்பதாலும் மாலை வேளைகளில் இணைய இணைப்பு கிடைக்காத காரணத்தாலும் பெரும்பான்மையான நேரங்களில் என்னால் இங்கு பங்கு கொள்ள இயலவில்லை. ஒரு நாளைக்கு பத்து பக்கம் கூட தாண்டும் அளவிற்கு இங்கே வேகமான பதிவுகள் அதே சமயமே ஏராளமான தகவல்கள் என களை கட்டி விட்டது இத்திரி.
தங்களனைவர்க்கும் பாராட்டுக்கள்.
கீழே இடம் பெறும் பாடலை நாம் அனைவரும் அறிந்திருப்போம். மிகச் சிலரே வெளியான காலத்தில் படத்தைப் பார்த்திருப்போம். ஆரம்ப கால எஸ்பிபியின் மயக்கும் கானங்களில்ல இப்பாடலுக்கு நிச்சயம் இடம் உண்டு. கத்திரி வெயில் முடிந்தும் வெயில் கொளுத்தும் இந்த நேரத்தில் இப்பாடல் பொருத்தமாக இருக்குமோ..
http://youtu.be/O6EDO0BgD9s
-
காலை வணக்கம் 18/6/2014
டியர் கோபால் சார்
பாகேஸ்வரியில்
குலேபகவலியில் "மயக்கும் மாலை பொழுதே நீ போ "
பெண்புத்தி முன் புத்தி "கொலுசே கொலுசே இசை பாடு கொலுசே "
(ராகவேந்தர் கூட இந்த பாடலை பற்றி எழுதி இருந்தார் என்று நினவு )
சேர்த்து கொள்ளலாமா
நிலவே நீ என்னிடம் நெருங்காதே பாடல் பற்றி ஒரு சிறு சம்பவம் நினைவிற்கு வருகிறது
8 வருடங்களுக்கு முன் திரு பி பி ஸ்ரீநிவாஸ் அவர்களின் மகன் ஒருவர்
திருப்பதி தேவஸ்தானம் financial controller ஆக இருந்தார். அப்போது அடிகடி எங்கள் ஆபீஸ்க்கு விஜயம் செய்யுவர். அவர் ஒரு நாள் திரு
பி பி ஸ்ரீநிவாஸ் அவர்களிடம் எங்களை எல்லாம் அழைத்து சென்று (வூட்லண்ட்ஸ் டிரைவ் இன் மூடபட்டதால் ராயபேட்டை வூட்லண்ட்ஸ் )
அறிமுகம் செய்து வைத்தார் .
அப்போது இந்த "நிலவே என்னிடம் நெருங்காதே " பாடலை பற்றி discussion வந்த போது அதை PBS பாடி காட்டினர்.
அதிலும் இறுதியில் "நிலவே என்னிடம் நெருங்காதே ..." என்று பாடிவிட்டு "நீ" என்று அழுத்தமாக சொல்லி
"இருக்கும் இடத்தில நான் இல்லை " . என்று முடித்தார் .
சம்திங் marvellous
நீங்கள் ரசித்ததை நானும் ரசித்தேன்
பிறகு அவர் தமிழ் மொழியை சிறப்பித்து கூறிய ஒரு தகவல்
சிறிய என்பதற்கு பெரிய ற போடுவதும்
பெரிய என்பதற்கு சிறிய ர போடுவதும்
என்னே தமிழ் அன்னையின் சிறப்பு .
இதை அவர் base வாய்ஸ் இல் கூறியது என்னும் நினைவில் உண்டு
-
இன்றைக்கு நினைத்துக் கொண்ட பாடல்..
பொன் என்பேன் சிறு பூ என்பேன்
காணும் கண் என்பேன் வேறு என் என்பேன்
என் என்பேன் கலை ஏடென்பேன்
கண்கள் நான் என்றால் பார்வை நீ என்பேன்
கொத்து மலரெடுத்து முத்துச் சரம் தொடுத்து
சிட்டு முகம் பார்த்தே சிரித்திருப்பேன்
தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம்
கண்டு கண்டு நானும் களித்திருப்பேன்
உன்னை நானறிவேன் என்னை நீ அறிவாய்
நம்மை நாமறிவோம் வேறுயார் அறிவார்
சின்னச் சின்னப் பறவை அன்னை அவள் மடியில்
தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன்..
கண்ணை மெல்ல மறைத்து உன்னைக் கையில் கொடுத்து
காலமெல்லாம் நான் அழைத்திருப்பேன்..
உன்னை நினைத்திருப்பேன் என்னை மறந்திருப்பேன்
கண்ணில் கலந்திருப்பேன் நெஞ்சில் நிறைந்திருப்பேன்..
ஜானகியம்மா வின் ஸ்வீட் வாய்ஸ் பிபிஎஸ் ஸின் மென்மைக் குரல்.. எப்போதுமே மெய்மறக்க வைக்கும் கேட்கும் போது..
முதன் முதல் பார்த்தது தேவியில் ரீரன் வந்த போது.. போட்ட ஒருவாரமும் ஹவுஸ் ஃபுல்.. அப்படி என்ன இருக்கிறது என ஒரு செவ்வாய்க் கிழமை போய்ப் பார்த்து பாடல்கள் எஸ்விஎஸ் நடிப்பால் நெகிழ்ந்தது நினைவில்..
-
ஹாய் கிருஷ்ணா சார் .. மார்னிங்க்.. நிலவே என்னிடம் நெருங்காதே யும் என்னைக் கவர்ந்த பாடல்க்ளில் ஒன்று.. பிபிஎஸ் ரொம்ப்பப் பிடிக்கும்.. பாட்டெழுதட்டும் பருவம், எங்கேயோ பார்த்த முகம்...ம்ம்ம்
-
டியர் ராகவேந்தர் சார்,
'ராணி யார் குழந்தை' 1972 பொங்கல் ரிலீஸ். இதோடு அந்தப்பொங்கலுக்கு வந்த படங்கள் கங்கா, அகத்தியர், கண்ணா நலமா.
மறுநாள் மாட்டுப்பொங்கலன்று மாலைக்காட்சி பாரத்தில் 'அகத்தியர்'. மறுநாள் காணும் பொங்கலன்று ஸ்ரீகிருஷ்ணாவில் கே.பி.யின் 'கண்ணா நலமா'. இரண்டிலுமே பாடல்கள் அனைத்தும் சூப்பர். (அகஸ்தியா 'ராஜா'வை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருந்தது).
அகத்தியரில் குன்னக்குடி கலக்கியிருந்தார். அனைத்துப்பாடல்களுமே அட்டகாசம். 'கண்ணா நலமா'வில் மெல்லிசை மன்னர் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.
'நான் கேட்டேன் அவன் தந்தான் தாலாட்டும் தாயானேன்'
'பட்டத்து ராஜாவுக்கு எட்டு வயசு, பக்கத்து மந்திரிக்கோ புத்தி பெருசு'. பாடலும் நன்றாயிருந்த போதிலும் அதிகம் கவர்ந்தது 'பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம் அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்' பாடல்தான். கே.பி.யின் முத்திரைப் படங்களில் ஒன்று.
'கங்கா' வில் பாடலை எல்லாம் எதிர்பார்த்துப் போகவில்லை. கர்ணன் வழக்கம்போல ராஜ்கோகிலாவை வெள்ளை உடையில் தண்ணீரில் நனைத்துக் காட்டுவதாகச் சொன்னார்கள். போய்ப்பார்த்தோம், கர்ணன் ஏமாற்றவில்லை...
-
வாசு சார்
மகரந்தம் 1981
"நீ இன்றி நானோ " பாடலை பற்றி நேற்று இரவு எனது சகோதரர்
(திரு வைத்யநாதன் இப்போது muscat ஓமனில் இருக்கிறார்
சின்னகண்ணன் சார் கூட muscat இல் தான் இருபதாக சொல்லி இருந்தார் )
நிற்க
அவர் இடம் இந்த பாடலை பற்றி பேசி கொண்டு இருந்தேன்
அப்போது அவர் தன்னுடைய மெமரி கார்டு இல் இருந்து எடுத்து விட்டது
என்னை எப்போதும் கிண்டுஸ் என்று செல்லமாக அழைப்பர்
"கிண்டுஸ் மறந்து விட்டாயா இந்த படத்தை
நானும் நீயும் இந்த படத்தை நெல்லை பூர்ணகலவில் பார்த்து விட்டு
இந்த பாட்டுக்கு படத்தில் ஸ்டெப்ஸ்ஊ (கமல் சலங்கை ஒலியில் சொல்வது போல் ) சரி இல்லை
நம்ம டான்ஸ் மாஸ்டர் இருந்தால் எப்படி இருக்கும் தெரியுமா
என்று கூறி விட்டு தோளை குலுக்கி கொண்டு உடம்பை லேசாக குறுக்கி கொண்டு இருவரும் ஆடினோமே "
என்று கூறியவுடன் என் வீட்டில் daughters இருவரும் சிரிப்பு மனைவியோ கேட்க வேண்டுமா
செம டான்ஸ் (உடான்ஸ் இல்லை ) நேற்று இரவில்
ஏனிந்தக் கோபம்
இதிலென்ன லாபம்
(இந்த வார்த்தைகளை கோபகார .....க்கு அர்பணிக்க வேண்டுகிறேன் )
பாடாத ராகம்
போடாத தாளம்
(நம் டீம் எல்லோரும் சேர்ந்து ஒரு கெட் டு கெதர் போட்டு இந்த பாடலில் டான்ஸ் ஆடினால் சூப்பர் ஆக இருக்கும் என்ன நான் சொல்றது )
-
சின்ன கண்ணன் சார்
போலீஸ் காரன் மகளை நினவு படுத்தி விட்டீர்கள்
"ஆண்டு ஒன்று போனால் வயது ஒன்று போகும் அதற்கு முன்னாலே வா "
"அழகுடன் இளமை தொடர்ந்து வாராது" ஜானகியின் (கோபால் சார் கோபபட போகிறார் ) ஜிலிபி ஜீரா வாய்ஸ்
"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் " வழகமான ஸ்ரீநிவாஸ்
"கண்ணிலே நீர் எதற்கு " சீர்காழி வித் ஜானகி
"பொறந்தாலும் ஆம்பளைய பொறக கூடாது " சந்திரபாபு வித் ராட்சசி
svs பிழ்ஞ்சு எடுத்து இருப்பாரு
-
கார்த்திக் சார்
ராணி யார் குழந்தை
on a ஹாட் summer morning எ கேர்ள் வெண்ட் வாக்கிங்
சூப்பர் பாலா நக்கல்
அதிலும் "ஐயையோ வாட் கேன் i டூ shall மீ வாட் டு டூ
i am mad டாக்டர் " என்று எல்லோருக்கும் இங்கிலீஷ் பாடம் நடத்துவரே
-
கார்த்திக் சார்
பாலாவின் குறும்பு நக்கல் நையாண்டி குசும்பு இத்யாதி இத்யாதி எல்லாம் சேர்ந்து கொப்பளிக்கும்
on எ ஹாட் summer morning
ஆபீஸ் இல இருக்க முடியல
ஐயையோ
what shall I do tell me what to do
அம்மம்மோ
what shall I do I am mad after you
கொகற்கொக்கோ kO kO kO
கொகற்கொக்கோ kO kO kO kO kO
மாடி வீட்டு பொண்ணு ஒரு ஜோடி தேடும் கண்ணு
ஆடி ஆடி நடக்கும் பொது அதிருதடி மண்ணு
மீண்டும்
ஐயையோ
what shall I do tell me what to do
அம்மம்மோ
what shall I do I am mad after you
கொகற்கொக்கோ kO kO kO
கொகற்கொக்கோ kO kO kO kO kO
கோடி வீட்டு பாமா நான் ஒண்டிக்கட்டை தாம்மா
உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு முடிச்சு போடலாமா
கவிஞர் வழங்கிய தேவரின் இன்னிசை வேந்தர்களின் பொப்பிசை பாடல் இது
"சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே " சிலோன் மனோஹரின் பாடல் போன்றது
-
கார்த்தி சார்
கண்ணா நலமா 1972 நெல்லை ராயல் pongal ரிலீஸ்
இன்று காலையில் நான் குளிக்கும் போது நினைத்து கொண்ட பாடல் சார்
உண்மை
"சாலமன் வந்தான் இடை வாளை எடுத்தான் வாளை ஓங்கினான்
வாளை ஓங்கினான் " "மன்னா " என்று tms ஒரு ஓங்கார குரல் எழுப்புவாரே
மறக்க முடியுமா