கைக்குள் இருப்பதைக் காக்க இயலாக்கால்
பைக்குள் பொருள்வேண்டல் ஏன்?
Quote:
Death toll in Pakistan blasts climbs to 115 people http://www.theglobeandmail.com/news/...rticle7172728/
Printable View
கைக்குள் இருப்பதைக் காக்க இயலாக்கால்
பைக்குள் பொருள்வேண்டல் ஏன்?
Quote:
Death toll in Pakistan blasts climbs to 115 people http://www.theglobeandmail.com/news/...rticle7172728/
ஒற்றைக்கால் பேயொன் றுளதாமே பள்ளிக்குள்
வெற்றுரையென் றெண்ணாதீர் வீணாக -- உற்றுப்பார்த்
தீரோ அதுகாண்பீர் தீரவே சிந்தித்து
வேறோசொல் வீரும் கருத்து.
The quote has been abridged to save space.Quote:
GHOST PICTURE OF KANDY SCHOOL GIRL CAPTURED ON CAMERAS:
http://i1125.photobucket.com/albums/...io/page-33.jpg
Gossip Lanka News [English Edition]: INCIDENTS AFTER RAIN
A ghost picture of a Kandy School girl who had one leg amputated after an accident captured on cameras
A few weeks back, June 30th to be precise a hall of a famous Kandy High school had been taken as the venue to hold a passing out parade of nurses. Usually there are two or three halls of High schools in Kandy ................................ts about the entire story could be read from see online edition:
These lines were lost whilst editing but now reconstructed.
வானிற் பதிந்தபடி வந்த நிலாமகளும்
தானும் கடலனைக் காதலித்தாள் --- ஏனோ
ஒருமை கடைப்பிடித் தொப்ப ஒழுகாமல்
இருமை இறைகொண் டனள்.
Note:
நிலாமகட்கு யார் பதி (கணவன்) என்றால், அவள் பதிந்திருக்கும் வானமே பதி. ஆகவே வானிற் பதிந்தபடி எனப்பட்டது. கடலன் = கடல். ஆண்பாலில் கூறப்பட்டது. ஒருமை கடைப்பிடித்தல் = ஒரே காதலனோ கணவனோ உடைய நிலை. இருமை நெறியாவது இரு கணவர்களோ (காதலர்களோ) உள்ள நிலை. (bigamous state).
polygamy - பல்கணவம்
இறை என்பது இறைவனையும் கணவனையும் குறிக்கும் சொல். இங்கு கணவனைக் குறிப்பது.
மீண்டு வந்ததைக் கண்டு மீண்டுவந்தேன்..!
வாழ்த்துக்கள் சொன்னேனே வாலண்டைன் டேயன்று
கால்கட்டில் மாட்டிய காரிகைக்கு – பால்கலந்த
தேன்வண்ணம் மாறியே தேவியவள் வெட்கத்தில்
பூண்டாள் பொய்க்கோபம் தான்..
மனித உரிமைகள் மாய்விலாக் கோளில்
இனிது மகிழ்பொங்க ஏயும்---கனிவுநாள்
என்றென் றிருந்தேங்கும் ஏதென்ப(து) இல்லாகி
நன்று பிறந்தால் நலம்.
பெண்கள் உரிமைகள் பேணலுற் றிப்புவியில்
கண்களாய்ப் போற்றுபொற் காலமொன்று --- பண்களிலே
பாடல்மட் டின்றித்தான் பட்டிதொட்டி யாவினிலும்
கூடிவர ஆடிடுவம் கூத்து.
உங்கள் தேவிக்கு நீங்கள் காதலர்தின வாழ்த்துச் சொல்வது இயல்பானது. "நன்றி" என்று சொல்வதே அதற்கு இயல்பான பதில். ஏன் பொய்க்கோபம் வருகிறது? பொருத்தமாக இல்லை. உண்மையான கோபமும் வரக் காரணமில்லை..... தீண்டியதும் சுட்டதே தீ" என்பதை மாற்றிக் குழப்பத்தில் போய்க்கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது.
சி.க அவர்களே, மறுமுயற்சி செய்யுங்கள்.