Originally Posted by Shakthiprabha
April 24th
________
உபநிஷத் கூறும் விளக்கம் உண்டு. உலகில் அன்பு செலுத்துபவனுள்ளும் "தன்னுடைய" என்ற அஹங்காரமும், எண்ணமும், இருப்பதே அன்புக்கு அடிப்படை.
ஒரு தாய் "இவன் என்னுடையவன், என் இரத்த்தில் ஜனித்தவன், என்னில் பாதி" என்று பிள்ளைகளிடம் அன்புற்றிருக்கிறாள்.
கணவன் மனைவியிடம், இவள் எனக்கு இல்லற சுகம் தருகிறாள். எனக்கு பிள்ளை பெற்று, என் தேவைகளை கவனிக்கிறாள் என்று அன்புற்றிருக்கிறான்.
மனைவி கணவனிடம் இவனால் எனக்கு பாதுகாப்பு, இருக்க இடம், உடை, உணவு எனக்கு இடுகிறான் என்று அன்புற்றிருக்கிறாள்.
இவை இல்லாமலேயே இன்னொரு ஜீவனிடம் "எனக்காக" என்ற எதிர்பார்ப்பு இன்றி அன்பு செலுத்தபடுவது மிகவும் அரிது.
ஆகவே, love has its selfish motive- மறுக்க முடியாத உண்மை.
(வளரும்)