Quote:
இந்தக்கால காதலின் whats app/upகளா(லா)ன செல்போன், பைக், Selfie.....எதுவில்லாமல் பயணத்திற்கு சைக்கிளையும், பேச்சுப் பரிவர்த்தனைக்கு டெலிபோனையும் நம்பியிருந்த காலகட்டத்தில் வளர்ந்த காதல்! sms வசதியின்மையால் சரோஜாதேவி கல்லூரிக்குப் புறப்படும்போது அம்மாவிடம்
சத்தமாக ஜெமினிக்கு புரியும் சங்கேத பாஷையாக 'அம்மா....நான் காலேஜுக்கு போறேன்....போறேன்' என்று உணர்த்துவார். தன்னிடம் பல்சர் மாதிரி
பைக்கெல்லாம் இல்லாததால் காதல் மன்னரும் சைக்கிளிலேயே வெக்கு வெக்கு என்று சரோஜாவை தொடர்ந்து கைக்கடிகாரத்தை ஸ்டைலாக நீட்டி
ஏன் லேட்டு என்று கேட்பதாக 'வாடிக்கை மறந்ததும் ஏனோ'என்று சங்கேதமாக பாட்டை ஆரம்பித்து...காதலின் மேன்மையை வெளிப்படுத்தும் இப்பாடல் எக்காலத்திலும் நினைவசையில் இனிமையே!