Originally Posted by
gopal,s.
எனக்கு மற்றொரு புரியாத புதிர் டி.எம்.எஸ் ,சுசிலாவை புத்திசாலிதனமாக தவிர்த்த (அவர்களுக்கு மாற்றே இது வரை அமையாதது வேறு விஷயம்)இளைய ராஜா ,அதே தலைமுறை சேர்ந்த இரண்டாம் நிலை பாடகி ஜானகியை அளவுக்கு மீறி பயன் படுத்தியது.
ஜானகி,தன்னுடைய மாற்று குரல் வளத்தால், நல்ல இரண்டாம் நிலை பாடகியாக (இவர் தகுதி அவ்வளவே)சில நல்ல பாடல்களை தந்ததை மறுக்க முடியாது.(1960-1970)
ஆனால் 80 களில் இவர் குரலை கேட்கும் போது ,ஒரு அறுபது வயது ஆண் கஷ்டப்பட்டு இளம் பெண் குரலில் மிமிக்ரி செய்வது போல கூச வைக்கும். நமக்கே தெரிந்த உண்மை இளையராஜாவிற்கு தெரியாமல் போனது ஏனோ? அப்போது சுஜாதா,சித்ரா இருவரும் உச்சத்தில்தானே இருந்தார்கள்?இவர்களை நிறைய பயன் படுத்தி இருந்தால்,ராஜாவின் உயரம் தொட்ட பாடல்களின் உயரமும்,இனிமையும் இன்னும் கூடி இருக்குமே?அப்படி என்ன ஜானகி பித்து?
இன்று ,நான் ஜானகியின் நல்ல முறையில் பாட பட்டதாக கருதும் காற்றில் எந்தன் கீதம், ஸ்ரேயா குரலில் கேட்கும் போதுதான் ,இழப்பின் வலி இன்னும் அதிகமாகிறது.
ஜானகி ,ராஜாவின் மைனஸ் ஆகவே அமைந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.