விக்கிரமாதித்தன் ஆல்பம்
http://i62.tinypic.com/29bjxq1.jpg
Printable View
விக்கிரமாதித்தன் ஆல்பம்
http://i62.tinypic.com/29bjxq1.jpg
இந்த வார பாக்யா இதழில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின், "பணத்தோட்டம் "
திரைப்படக் கதையை பிரசுரம் செய்துள்ளனர்
http://i61.tinypic.com/2ro1gyr.jpg
http://i58.tinypic.com/2pt53cm.jpg
http://i57.tinypic.com/21e3vab.jpg
http://i58.tinypic.com/2agqhxg.jpg
http://i62.tinypic.com/2ezjqrc.jpg
மறக்க முடியாத ''மார்ச் 1977''
மக்கள் திலகத்தின் அரசியல் பயணத்தில் திண்டுக்கல் -1973 கோவை மேற்கு இடை தேர்தல்கள் -1974 புதுவை சட்டமன்ற தேர்தல் 1974 தொடர் வெற்றிகளுக்கு பிறகு 1977 நாடாளுமன்ற தேர்தல் மிகவும் பரபரப்பாக எதிர் பார்க்கப்பட்டது .அதிமுகவுடன் முதல் முறையாக இந்திரா காங் கூட்டணிவைத்தது . மதுரையில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் புரட்சித்தலைவரும் அன்றைய பாரத பிரதமர்
திருமதி இந்திரா காந்தியும் ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரம் செய்தார்கள் .
தமிழ் நாட்டில் அதிமுக 18 பாராளுமன்ற தொகுதிகளையும் புதுவை நாடாளுமன்ற தொகுதியையும்கைப்பற்றியது .மக்கள் திலகத்தின் கூட்டணி வியூகம் , சூறாவளி பிரச்சாரம், ரசிகர்கள் தொண்டர்கள் தீவிர பிரச்சாரம் ,மக்களின் பேராதரவு கிடைத்தது மாபெரும் வெற்றி .
பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் ''நவரத்தினம் '' திரைப்படம் திரைக்கு வந்தது .மக்கள் திலகத்தின் பிரமாண்ட அரசியல் வெற்றி இந்திய அரசியலில் பர பரப்பாக பேசப்பட்டது .
மறக்க முடியாத ''மார்ச் 1961 ''
மக்கள் திலகத்தின் கலை பயணத்தில் திருப்பு முனை தந்த படம் ''திருடாதே ''நாடோடி மன்னன் படத்திற்கு பின் மக்கள் திலகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி படம் .திருடாதே -என்று அறிவுரை கூறி சமூக சிந்தனை படமாக வந்து வசூலில் மாபெரும் வெற்றிகண்ட படம் .மக்கள் திலகத்தின் அபார நடிப்பு , சிறந்த உரையாடல்கள் , இனிய பாடல்கள் புதுமையானசண்டை காட்சிகள் படத்திற்கு மாபெரும் சிறப்பாகும் .1961ல் வந்த சிறந்த படங்களில் திருடாதே படமும் இடம் பெற்றுள்ளது .
மறக்க முடியாத '' மார்ச் 1971''
தமிழக சட்டசபை தேர்தல் 1971 மார்ச் மாதம் நடந்தது .மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழகமெங்கும்திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து மாபெரும் வெற்றி வாகை சூடினார் .மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் - மன்றங்கள் முழு ஒத்துழைப்பு தந்து வெற்றிக்கு பாடுபட்டார்கள் .தேர்தல் நேரத்தில் மக்கள் திலகத்தின் ''குமரிகோட்டம் '' 6 வது வாரமாக தென்னகமெங்கும்வெற்றிகரமாக ஓடிகொண்டிருந்தது .
மறக்க முடியத ''மார்ச் 1967''
மக்கள் திலகம் குண்டடி பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று கொண்ட நிழற் படம் தமிழகம்முழுவதும் ஒட்டப்பட்டு பிரச்சாரம் செய்தர்கள் .மக்களின் பேராதரவு ,திமுக இயக்கத்தை 6.3.1967ஆட்சியில்அமர்த்தியது . மருத்துவ மனையில் இருந்து கொண்டே மக்கள் திலகம் அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டார் .
இனிய நண்பர்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை . அன்னையும் அண்ணலும் - தலைப்பில் பதிவிட்ட திரு கலைவேந்தனின் கருத்துக்கள் பாராட்டுக்குரியவை . திரு வினோத் அவர்களின் மறக்க முடியாத மார்ச் - பதிவுகள் கடந்த கால நினைவுகளை அசை போட வைக்கிறது . திரு முத்தையனின் ஸ்டில்ஸ் அணிவகுப்பு அமர்க்களம் .
திரு லோகநாதனின் தின இதழ் கட்டுரை பதிவுகள் சூப்பர் . திரு செல்வகுமாரின் அபூர்வ நிழற் படங்கள் எல்லாமே புதுமையாக இருந்தது . திரு தெனாலி ராஜன் அவர்கள் உடல் நலன் பூர்ண குணமடைந்து இருப்பார் என்று நம்புகிறேன் .
திரு. வினோத் சார்,
நண்பர் ஆர்.கே.எஸ்.சிடம் நீண்ட நாட்களாக ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால், அவர் வரவே மாட்டேன் என்கிறார். ஒருவேளை நான் என்ன கேள்வி கேட்பேனோ என்று பயப்படுகிறாரா? என்று தெரியவில்லை.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
மக்கள்திலகம் மேன்மைமிகு இத்திரியினில் பங்கு கொள்ளும் எல்லா தோழர்களும் பதியும் அருமையான நிழற்படங்கள், தகவல்கள், ஆவணங்கள் அனைத்தும் அட்டகாசம்... கடந்த 22-02-2015 தினமலர் -திருச்சி, வேலூர் பதிப்பு - வாரமலர் இணைப்பில் " திருப்பு முனை தந்த பாடல்கள் " தொடரில் என்றேண்டும் வெற்றி முகம் காணும் மகத்தான காவியமாம் " ஒளிவிளக்கு "- காவிய பாடலான "ஆண்டவனே உன் பாதங்களை " - பாடல் விவரங்கள் நன்று... ஆனால் கட்டுரையில் ஒளிவிளக்கு திரைப்படம் சூப்பர் ஹிட் அளவுக்கு இல்லை......என கட்டுரையாளர் எழுதியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது...திரையுலக வாழ்வில் ஒரு நடிகரின் 100 - வது திரைப்படம் வெளியான அன்று முதல் மறு, மறு, மறு,இன்றைய வெளியீடுகள் வரையில்லும் தொடர்ந்து சூப்பர் ஹிட் - ஆக நடைபெறுவதை கூட தெரிந்து கொள்ளாமல் ஒரு கட்டுரையாளர் எழதுவதை தினமலர் - நிர்வாகம் கவனிக்காதது முற்றிலும் தவறு...
முகராசி படபூஜையின்போது எடுக்கப்பட்ட நமது திரியில் இதுவரை இடம் பெறாத மிகவும் அரிய புகைப்படத்தை பதிவிட்ட பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. இடது ஓரமாக படத்தில் நடிக்காத நடிகர் பி.எஸ்.வீரப்பா அவர்களும் உள்ளார்.
தலைவர் பற்றி பத்திரிகைகளில் வெளியாகும் அற்புதமான செய்திகளை பதிவிடும் திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும். துக்ளக் இதழில் வெளியான திமுக மூத்த தலைவர் திரு.துரைமுருகனின் பேட்டி அற்புதம். திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தாலும் தலைவரை என் மனம் கவர்ந்தவர் என்று அவர் துணிச்சலாக கூறியிருப்பது பாராட்டுக்குரியது.
திரு. வினோத் சாரின் மார்ச் மாத நினைவலைகள் தொகுப்பு அருமையாக உள்ளது. நன்றி.
திரு.முத்தையன் அவர்களின் ஸ்டில்ஸ் அணிவகுப்பு அபாரம். நுணுக்கமான உணர்வுகளை தலைவர் வெளிப்படுத்தும் காட்சிகளை பதிவிடும் அவருக்கு நன்றிகள்.
திரு.கலிய பெருமாள் அவர்கள் பதிவிட்ட அன்பே வா படக் காட்சிகள் கண்களுக்கு விருந்து. நன்றி சார்.
திரு.வி.பி.சத்யா அவர்கள் பதிவிட்ட ரசிகர்களின் புதுமையான முயற்சி வீடியோ காட்சிகள் பிரமாதம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்தாலும் அற்புதமான வீடியோ காட்சிகளை பதிவிட்ட திரு.ரூப் குமார் அவர்களுக்கு நன்றி.
தலைவரின் அரிய புகைப்படங்களை பதிவிடும் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு பாராட்டுக்கள்.
திரு.சைலேஷ் பாசு சார், அன்னை தெரசாவும் தலைவரும் எந்த பத்திரிகையால் எந்த ஆண்டு சிறந்த குடிமகன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்ற விவரம் நினைவில் இல்லை. மன்னிக்கவும். திரு.குமார் சார், திரு.எஸ்.வி. சார், திரு.செல்வகுமார் சார் போன்றோருக்கு இது குறித்து தெரிந்தால் விவரங்கள் பதிவிடுமாறு கோருகிறேன்.
திரு. சுஹராம் அவர்கள் இதேபோன்று அடிக்கடி பங்கேற்க வேண்டும். நல்ல கருத்தை கூறியுள்ளீர்கள். நன்றி.
திரு.ஜெய்சங்கர் சார் அவர்களும் நேரம் கிடைக்கும்போது பங்கேற்க வேண்டும் என்று தாழ்மையுடன் கோருகிறேன்.
எனது பதிவுகளை பாராட்டிய நல்லிதயங்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
ஊருக்கு உழைப்பவன்
http://i60.tinypic.com/2z9cehi.jpg
இந்தக் கட்டுரையை இணையதளத்தில் இருந்து எடுத்து பதிவு செய்துள்ளேன். இக்கட்டுரையை எழுதியவர் தலைவரின் கார் டிரைவராகவும் பின்னர், தலைவர் நினைவு இல்லத்தில் கண்காணிப்பாளராகவும் பணியாற்றிய அமரர் திரு.முத்து அவர்கள்.
--------------------------
வள்ளல் எம்.ஜி.ஆருடன் இணைந்த தொப்பியும் கண்ணாடியும்
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் 1968 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட படம் "அடிமைப்பெண்" இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் "25 நாட்கள்" நடந்தது. மிகப் பிரமாண்டமான ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் பல இடங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.
அந்த சமயம் ராஜஸ்தான் முதலமைச்சராக இருந்த மோகன்லால் சுகாதியா, மக்கள் திலகம் அவர்களையும், ஜானகி அம்மா அவர்களையும் அழைத்து, தன் மாளிகையில் அருமையான விருந்து கொடுத்தார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் விருந்தைச் சாப்பிட்டு விட்டு, விடை பெறும் போது, முதல்வர் சுகாதியா அவர்கள் மக்கள் திலகத்திற்குப் பரிசாக, ஒரு தொப்பியை, ஒரு சிறிய பெட்டிக்குள் வைத்துக் கொடுத்தார். அதை பெற்றுக் கொண்ட மக்கள் திலகம் அவர்கள். உடனே இது என்ன பரிசு? என்று கேட்டார். அதற்கு முதல்வர் அவர்கள் பெட்டியை திறந்து பாருங்கள் என்றதும், பெட்டியைத்திறந்து பார்த்த மக்கள் திலகத்திற்கு ஆச்சரியமாக இருந்தது.
அதற்குள் இருந்த தொப்பியை பார்த்தார் உடனே அந்த தொப்பியை எடுத்து புரட்டிப் புரட்டிப் பார்த்தார். அடுத்த நிமிடம் சுகாதியாவிடமே கொடுத்து, என் தலையில் நீங்களே வைத்து விடுங்கள் என்றதும், உடனே தொப்பியை தலையில் வைத்துவிட்டு, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களிடம் இப்பொழுது நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்றதும் மக்கள் திலகம் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி ஆகிவிட்டது.
முதல்வருக்கு நன்றி கூறிவிட்டு, புறப்பட்டார். காரில் போய்க் கொண்டு இருக்கும்போது ஜானகி அம்மாவிடம், என்ன ஜானு, தொப்பி எனக்கு நன்றாக உள்ளதா என்று கேட்டதும், ஜானகி அம்மையார் உங்கள் தலையில் இந்தத் தொப்பியை வைத்தவர் ஒரு நாட்டு முதல் அமைச்சர் அவரே உங்கள் அழகை புகழ்ந்துள்ளார் இதற்கு மேல் நான் வேறு சொல்ல வேண்டுமா, சரி இப்போது, நீங்கள் பாக்கெட்டில் வைத்து இருக்கும் கருப்பு கண்ணாடியை எடுத்து போட்டுக் கொள்ளுங்கள் இன்னும் மிக அழகாக இருப்பீர்கள் என்றதும், உடனே கண்ணாடியை எடுத்து போட்டுக் கொண்டார். அப்பொழுது ஜானகி அம்மா மிகப் பெருமையுடன் அழகுக்கு மேல் அழகு, அதோடு ஒரு அந்தஸ்து இருக்கிறதுங்க, இனிமேல், நீங்கள் எங்கே சென்றாலும், இப்படியே செல்லுங்கள் அனைவரும் ஆச்சரியப்படுவார்கள்.
சரி ஓ.கே. தேங்க்ஸ் என்றார் மக்கள் திலகம். அதே போல் அடுத்த நாள் காலையில், வேட்டி, ஜிப்பா, கண்ணாடி தொப்பியுடன் சென்றார். "அடிமைப்பெண்" படப்பிடிப்பிற்கு புதிய இடம் பார்ப்பதற்காக செல்லும் போது அங்கே டைரக்டர் கே. சங்கர், கேமராமேன் ராமமூர்த்தி புகைப்பட நிபுணர் ஸ்டில்ஸ் நாகராஜராவ், அலுவலக நிர்வாகி ஆர்.எம். வீரப்பன் ஆகிய நால்வருக்கும் ஒரே ஆச்சரியம் என்ன இப்படி திடீரென்று தொப்பி வெச்சுக்கிட்டீங்க என்று டைரக்டர் சங்கர் கேட்க, கல கல வென்று சிரித்த மக்கள் திலகம் எப்படி இருக்கு என்று கேட்க ஆஹா! மிகவும் பிரமாதமா இருக்கிறது. இதையே நீங்கள் தொடர்ந்து கடைப்படித்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நால்வரும் கூறினர்.
தொப்பி அணிவதற்கு முன்பு, மக்கள் திலகம் அவர்கள். கறுப்புக் கண்ணாடி மட்டும் அணிந்து செல்லும் வழக்கம் இருந்தது. பின்பு கருப்புக் கண்ணாடியோடு, தொப்பியும் அணிந்து மக்கள் திலகம் இருப்பதைக் காண்பவர்கள். அவர் அழகு கூடியது கண்டு, சொக்கிப் போனார்கள். நம் மக்கள் திலகம் அவர்கள் தொப்பி அணிந்து பல கோணங்களில் புகைப்படம் எடுத்துப் பார்த்தார். நன்றாகவே இருந்தது ஆகவே, அவர்கள் நால்வரும் கூறியது உண்மை என்பதை அறிந்த மக்கள் திலகம் அவர்கள் தொடர்ந்து தொப்பி அணிந்து வெளியே செல்ல, அதுவே அவருடைய கட்டாய வழக்கமாகிவிட்டது.
மக்கள் திலகத்தின் நெருங்கிய நண்பர்களும், அரசியல் தலைவர்களும், தொப்பி ஏன் அணிய ஆரம்பித்தீர்கள் என்று அவர்கள் கேட்க, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு விளக்கம் சொல்வது வழக்கமாகி விட்டது தொப்பியும் பழையதாகிவிட்டது. எனவே, தனக்கு உடை தைக்கும் எம்.ஜி.நாயுடு அவர்களிடம் தொப்பி பழையதாகிவிட்டது. புதிய தொப்பி செய்ய வேண்டும் என்று கூற, திருவல்லிக்கேணி ஜாம்பஜாரில் உள்ள தொப்பி தைக்கும் பாய் ஒருவரை அழைத்து வந்தார் நாயுடு அவர்கள்.
"சத்யா ஸ்டுடியோ"வில் இருந்த மக்கள் திலகம் அவர்களிடம், படப்பிடிப்பில் தொப்பி செய்யும் அந்த முஸ்லீம் நண்பரை அறிமுகம் செய்து வைக்க, மக்கள் திலகம் அவர்கள் அருகில் இருந்த உதவியாளரிடம் மேக் அப் அறையில் இருக்கும் பழைய தொப்பியை எடுத்து வரச்சொல்ல, வந்ததும் மக்கள் திலகம் அவர்கள் தொப்பியை பாயிடம் காட்டி இதுபோலவே நிறம், அமைப்பு இருக்கனும் ஆட்டு முடியில் செய்ய வேண்டும். கொஞ்சம் கூட மாற்றம் இருக்கக்கூடாது இந்தத் தொப்பியை எனக்குத்தான் செய்கிறீர்கள் என்று தயவு செய்து யாருக்கும் தெரிவிக்கக்கூடாது இது மிக முக்கியம் என கூறிவிட்டு உடனே தனது உதவியாளரான சபாபதியை அழைத்து இவருக்குத் தொப்பி செய்வதற்கு முன்பணம் கொடுத்து அனுப்பு என்றார்.
பிறகு தொப்பி செய்ய வந்தவரைப் பார்த்து, அய்யா நான் சொன்னதெல்லாம் புரிந்ததா, தொப்பி நல்லா இருக்கனும் என்றதும். அது வரை பேசாமல் நின்று கொண்டிருந்த தொப்பி செய்பவர், கனவில் இருந்து விழித்தவர் போல் மக்கள் திலகத்திடம் பேச ஆரம்பித்தார். அய்யா நீங்கள் சொல்வது எல்லாம் எனக்குக் கேட்டது. ஆனால், புரியவில்லை நாம் பேசுவது மக்கள் திலகத்திடம் தானா, என்ற ஆச்சர்யத்தில் சிந்தனையில் மகிழ்ச்சியில் நின்றதால். எனவே ஐயா இன்னொரு முறை சொல்லிவிடுங்கள் என்றதும் மக்கள் திலகத்திற்கு சிரிப்பு, உடனே, மக்கள் திலகம் அவர்கள் அவர் அருகே சென்று, தோளில் கையைப் போட்டு முன்பு தான் சொன்னதை மறுபடியும் கூறினார்.
தொப்பிக்காரர் எதுவுமே பேசாமல் தன் வாயை மூடிக்கொண்டு தலையை மட்டும் அசைத்தார். மக்கள் திலகம் சொல்லி முடித்ததும், மக்கள் திலகத்தின் காலைத் தொட்டு வணங்கினார். முன் பணத்தினை வாங்க மறுத்துவிட்டார். நீங்கள் வாங்கித்தான் ஆகவேண்டும் இல்லையெனில் மக்கள் திலகம் கோபித்துக் கொள்வார் என்று கூறியதும், உதவியாளர் சபாபதியிடமிருந்து 500 ரூபாயை வாங்கிக் கொண்டு எம்.ஜி.நாயுடுவிடமும், உதவியாளர் சபாபதியிடமும், அண்ணே என் வாழ்நாளில் அல்லாவையே பார்த்த உணர்வு இருந்தது. என் மேல் கையைப் போட்டு, மக்கள் திலகம் பேசியபோது எனக்குள் வீர உணர்வும், உற்சாகமும் ஏற்பட்டது. புரட்சித்தலைவரைச் சந்தித்த இந்த நாள் என் வாழ்வில் பொன்நாள். நான் தொப்பியோடு வருகிறேன் என்று சொல்லிச் சென்றார்.
அதே போல், அடுத்த ஒரு வாரத்தில், மூன்று தொப்பிகளைச் செய்து எடுத்துக் கொண்டு, சத்யா ஸ்டுடியோவிற்கு வந்தார். படப்பிடிப்பில் இருந்த மக்கள் திலகத்திடம், தொப்பி தயாராகிவிட்டது என்றதும் சரி தொப்பியை "மேக்அப்" அறைக்குச் சென்று வைத்துவிட்டு, பாய் அவர்களை அங்கேயே இருக்கச் சொல்லுங்கள். மதிய சாப்பாடு நேரத்தில் வந்து தொப்பியைப் பார்க்கிறேன் என்றார். அதன்படி மதியம் 2 மணிக்கு படப்பிடிப்பு முடிந்து லுங்கி பனியனுடன் சாப்பிட அமர்ந்தார். அவருடன் டைரக்டர், கேமராமேன் மற்றும் இரண்டு வி.ஐ.பி.க்களுடன் தொப்பி செய்து வந்த பாய் (அவர்தான் தொப்பி கடை ஓனரும் கூட) அவர்களையும் சாப்பிட அழைத்தார் மக்கள் திலகம்.
தொப்பிக்காரரோ, நான் மக்கள் திலகம் அவர்களுடன் சாப்பிடுவதா என்று கூறி சாப்பிட வர மறுத்தார். நானும், சபாபதியும் பாயிடம் அண்ணே நீங்க பயப்படற மாதிரி மக்கள் திலகம் அவர்கள் இல்லை அவருக்கு எல்லோரும் சமம். மேலும் அவர்தங்களைத் தனக்குச் சமமாக நினைக்கும் போது, வர மறுப்பது சரி இல்லை வாங்க போகலாம் என்றதும் வேறு வழி இல்லாமல் பாய் தயங்கியபடி சாப்பிட வந்தார். அவரைப் பார்த்ததும் மக்கள் திலகம், வாங்க வாங்க முதலில் சாப்பிடுவோம். பிறகு, தொப்பியைப் பார்க்கலாம் என்றார்.
பாய் வரும் வரை மக்கள் திலகமும் மற்றவர்களும் சாப்பிடாமல் காத்திருந்ததைப் பார்த்ததும் பாய் ஆச்சரியப்பட்டுப் போனார். அன்று மட்டன் பிரியாணி, சாப்பாடு, கறி குழம்பு, கறி வறுவல், கோலா உருண்டை, முட்டை இது தவிர கூட்டு, பொறியல், கீரை ரசம், தயிர், வாழை இலையில் இத்தனை வகைகளும் பரிமாறப்பட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். இதைப் பார்த்தும் அருகில் சாப்பிட்டு வெளியே வந்த பாய் எங்களிடம் இன்றைக்கு என்ன விசேஷம் என்று கேட்டார்.
அதற்கு நாங்கள் அண்ணே இன்றைக்கு ஒன்றும் விசேஷம் இல்லைண்ணே மக்கள் திலகத்திற்கு சாப்பாடு தினமும் இப்படித்தான் இருக்கும் என்றதும் பாய்க்கு ஒரே ஆச்சர்யம். பெருமூச்சு விட்டார் பாய் பிறகு, மக்கள் திலகம் ஒவ்வொரு தொப்பியையும் தன் தலையில் வைத்துப் பார்க்க, மூன்று தொப்பியுமே மக்கள் திலகத்திற்குப் பொருத்தமாக இருந்ததைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷப்பட்டார் மக்கள் திலகம், பாயிடம் தொப்பி ரொம்ப நல்லா இருக்கிறது. அதே போல் இனிமேல் எனக்குத் செய்யும் தொப்பிகள் இருக்கனும். அது இருக்கட்டும் இந்த மூன்று தொப்பிக்களுக்கும் எவ்வளவு பணம் என்று மக்கள் திலகம் கேட்க பாய் 500 ரூபாய் என்றார்.
மக்கள் திலகம் அவர்கள் பத்து நூறு ரூபாய் நோட்டுக்களை மடித்து, பாய் கையில்திணித்து, பாய்க் கையைப் பிடித்து பாய் இதைச் சந்தோஷமாய் வாங்கிட்டுப் போங்க என்று பாய்க்கு விடை கொடுத்தார். பாய் மக்கள் திலகம் தந்த பணத்தை எண்ணிப் பார்க்காமல், தன் பையில் வைத்துக் கொண்டே வெளியில் வந்தார்.
------------
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
மதுரை சென்ட்ரல் சினிமாவில் திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்களின்
பெரிய இடத்துப் பெண் -திரைப்படம் வெளியாகி வெற்றி முரசு கொட்டியது.
கடந்த வார வசூல் ரூ.88,000/-. இடைவெளி இன்றி பலமுறை திரையிடப்பட்டும் மீண்டும் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. செய்தி, புகைப்படங்கள் அனுப்பி உதவிய
திரு. எஸ். குமார் அவர்களுக்கு நன்றி.
http://i62.tinypic.com/k9h0fk.jpg
ஆர். லோகநாதன்.
புகைபடத்தில் திரு. எஸ். குமார், திரு. எஸ்.கே. போஸ்., திரு.மர்மயோகி மனோகர் ,
திரு. மாரியப்பன் மற்றும் பலர்.
http://i60.tinypic.com/24vtd3o.jpg