http://i66.tinypic.com/2z81bgl.jpg
Printable View
வேலூர் குறள் அரங்கில் கடந்த 08/02/19 முதல் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் " நினைத்ததை முடிப்பவன் :"
தினசரி 4 காட்சிகளாக வெற்றி நடை போடுகிறது.
http://i64.tinypic.com/59woi0.jpg
தகவல் உதவி : எம்.ஜி.ஆர். பக்தர் திரு.ராமமூர்த்தி, வேலூர் .
நுகர்வோர் பறக்கும் படை மாத இதழ் -பிப்ரவரி 2019
http://i66.tinypic.com/33vzv45.jpg
For the last 20 years, politics in the state of Tamil Nadu has been dominated by film personalities The political party Dravida Munnetra Kazhagam the D M. K, came to power when a screen writer. Conjeevaram Natarajan Annadurai, ousted the ruling Indian National Congress Party. After his death in 1969. Annadurat, who was idolized, was succeeded as Chief Minister of the state by another screen writer. Muthuvel Karunanidhi He held pow er until last January. The chief instrument of his downfall was Tamil film star Ramachandran (known by his initials, M.G.R), leader of an opposition party the Anna D.M. K. The two men, formerly political allies, fell out because Karunanidlu tried to make his son into a film rival to MGR. In his campaign against Karunanidhi, M G R. attracted crowds of more than a million to his political rallies.
Even by India's bizarre move standards, M G R's popularity is extraordinary In Madras, the months preceding the monsoon are hot, humid and oppressive, and few people stir out of their homes or offices in the afternoon The only places with activity are movie houses M G R 's latest film, “Idhayakani [Fruit of the Heart, or The Dearly Beloved],” continues to draw crowds at all hours Though a placard at the entrance announces, in English and Tamil, “House Full.” there are long queues of men, women and children separated by wiremesh partitions, waiting patiently to buy tickets for later shows They are served with aerated waters and iced buttermilk by members of M G R fan. clubs
Inside, the air is heavy with the smell of urine and sweat. The lights go out. The name of MGR flashes across the screen Viewers chant it loudly and clap their hands. The film opens with a close‐up of ‘il G R in his fuzzy cap, dark glasses and snow‐white shirt He folds his hands, bows and greets his audience “Vanaktram ” Viewers join their hands and respond “Vanakkam “ Two men run up to the screen and wave a platter of smoking incense as they would to their gods in the temple M G R tears open his shirt The face of his political forerunner, Annadurai. appears to be imprinted on his chest Annadurai tells the audience that M G R is his dearly beloved M G R replies that the feeling is mutual After this protestation of affection, which has no bearing on anything, begins the story —or stories
M G R is owner of a large estate He lectures his workers on the necessity of hard work. Then M G R becomes a police officer engaged in breaking up a gang of foreign smugglers He heats the lot single‐handed Next M G R. becomes a lover. He ravishes a buxom Punjabi wench (the chaste image of the southern Indian woman remains unsullied). M G R. becomes a suave man of the world speaking a kind of English When the heroine says, “You are stupid?” M G R retorts, “You are nonsense” The crowd roars, “You are nonsense”
In the smugglers’ den, M G R asks, “Shall we talk business’ The leader of the gang replies, “Business next Dance first” Now we have a long dance sequence with scantily clad fat‐bottomed girls gyrating to music that is neither Indian nor Western but a mixture of both So it goes on The excited, noisy crowd that entered the hall three hours ago leases utterly subdued, silent, but hugging its dreams as a miser would guard his gold....... 1976 NewYork Times.......... Thanks ...
சென்னை பாலாஜியில் இன்று முதல் (15/2/19) கலைவேந்தன் /கலைச்சுடர் எம்.ஜி.ஆர். இருவேடங்களில் நடித்த "நாளை நமதே " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i63.tinypic.com/2cpyo91.jpg
இன்று முதல் (15/2/19) கோவை ராயலில் என்றும் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். நடித்த "பாக்தாத் திருடன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/2h4dp8o.jpg
தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி.ராஜா .
தனது வாழ்நாளில் எந்த ஒரு தருணத்திலும் நமது தலைவர் உணர்ச்சி வசப்பட்டவர் அல்ல !! அவர் அழுது நாம் பார்த்தது இல்லை !! அதை நாம் விரும்பவும் மாட்டோம் !! அப்படிப்பட்ட உன்னத தலைவரும் உணர்ச்சி வயப்பட்டு அழுத வரலாறு உண்டு !! 1) பேரறிஞர் அண்ணா மறைவின் பொழுது 2) அமெரிக்க ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை முடித்து முதல்வராக மீண்டும் மறுபிறவி எடுத்து தாயகம் திரும்பும் தலைவருக்கு விண்ணதிர கோஷங்கள் எழுப்பி வாழ்த்துக்கள் எழுப்ப படுகிறது !! கடலலை போல் மக்கள் வெள்ளத்தை கண்ட தலைவர் !! இந்த மக்களை மீண்டும் சந்திக்கிறோம் என்று உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் சிந்திய கட்சியை தான் கீழே காண்கிறீர்கள் !! இந்த படத்தை நம்மால் சாதரணமாக காண சகிக்கவில்லை !! அப்படிப்பட்ட படத்தை சில நண்பர்கள் பலரின் சாவுகளுக்கும் தலைவர் அழுவதை போல சித்தரித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தும்போது !! உண்மையான தம்பிகளின் இதயங்கள் இரத்த கண்ணீர் வடிக்கின்றன !! தயவுசெய்து இதுபோன்ற தவறுகளை எதிர்காலத்தில் செய்யவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் !! நண்பர்களே !! (4-02-1985 மக்களை பார்த்து உணர்ச்சி வசப்பட்ட நிலையில் ) புகைப்படம்... Thanks wa.,
என்றென்றும் திரையுலக வசூல் சக்ரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும் வசூல் காவியங்கள் சென்னை- பாலாஜி dts தினசரி 4 காட்சிகள் "நாளை நமதே" 1975 ம் ஆண்டு வெளிவந்து இடைவிடாமல் கடந்த 44 ஆண்டுகளாக வெற்றி நடை காண்கிறார், கோவை - ராயல் dts தினசரி 4 காட்சிகள் 1960 ம் வருடம் வெளியாகி இடைவெளி இல்லாமல் மறு வெளியீடுகள் கண்டு அள்ள, அள்ள அருமையான வசூலை தந்து கொண்டேயிருக்கும் "பாக்தாத் திருடன்" ............. இது போன்ற பெரும் பான்மையான பழைய பொக்கிஷங்கள் வேறு யாருக்கும் அமையுமா?!... இந்த கருத்து எத்தகைய காழ்ப்புணர்ச்சியும் இன்றி சாதாரண ரசிகர்கள் பார்வையில் பதிவதே...
ஒவ்வொரு தடவையும் "பாக்தாத் திருடன்" காவியம் காணும்போதும் நான் குறிப்பிடுந் இந்த காட்சியில் அரங்கமே சும்மா அதிரும்..." என்னது, பொது மக்கள் பேராதரவு தான் வேறு யாருக்கும் இல்லாத அளவுக்கு உங்களுக்கு இருக்கிறதே".....👍 👌 👌
மேற்காணும் சரித்திர, சகாப்த, சிரஞ்சீவிதுவ வசனம் பழம் பெரும் நடிகை mn. ராஜம் அவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., ஐ நோக்கி சொல்லும்போது...
புரட்சித்தலைவரின் பக்தர், முன்னாள் சென்னை மாநகராட்சி மேயர், அண்ணன் சைதையார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடன் சிறப்புடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
பாஸ்கரன்,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை.......... Thanks wa.,
நமது நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்துள்ள இந்திய இராணுவ வீரர்கள் அனைவருக்கும் நமது கண்ணீர் அஞ்சலியை செலுத்திக் கொள்வோம்.
பாஸ்கரன்,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை...... Courtesy : whatsapp friends...
அள்ளிகொடுப்பதிலும் நம் தலைவர் எண்ணம்.நான் பிறந்த கிராமத்துக்கு பக்கம் ஸ்ரீவைகுண்டம் ஊர்.அங்கு ஜவகர் என்று ஒரு திரையரங்கம். முதலாளி பெயர் ஜாவாகர்ஷா.அவரும் தீவிர எம்ஜியார் பக்தர்.அரங்கம் வாசலில் வெள்ளை வேட்டி சட்டையோடு அன்று திரையிடப்பட்டு இருந்த மாட்டுக்கார வேலன் படம் மறுவேளியீடு எங்களை புன்சிரிப்போடு வரவேர்ப்பார். முதலாளி நலமா என்று விசாரிக்க வா உன்னிடம் ஒரு தலைவர் விஷயம் கூறவேண்டும் என்றார்.சரி என்று செல்ல அவருடன் இருந்த மறைந்த ஸ்ரீவை பாலன் எம்ஜியார் மன்ற தோழன் முன்னால் அவர் சொன்ன சம்பவம்.எனக்கு தெரிந்த ஒரு நம் தலைவர் ரசிகர் மகள் திருமண ஏற்பாடுகள் செய்து இருந்தார்.பணம் பத்துமா என்று தெரியவில்லை என்று கவலைப்பட்டார்.உடனே நான் ஒரு வேலையாக சென்னைக்கு செல்கிறேன்.வா நாம் தோட்டத்துக்கு போய் எம்ஜியார் அவர்களை பார்க்கலாம் என்று சொல்லி கிளம்பிவந்து வாத்தியார் வீடு வந்து சேர வழக்கம் போல இல்லம் பரபரப்பு. உடற் பயிற்சி முடித்து இதயதெய்வம் வர கோரிக்கை வைக்கப்படுகின்றது.நீங்கள் காலை உணவு உண்டு இங்கே இருங்கள் வருகிறேன் என்று சொல்லி வாத்தியார் குளித்து முடித்து அன்று பூத்த மலர் போல வருகிறார்.காத்து இருந்த அனைவருக்கும் பதில் சொல்லி இடையில் எங்களை அழைக்க ஒரு நிமிடம் இருங்கள் அண்ணன் வரட்டும் என்று சொல்ல சக்கிரபாணி அண்ணன் வருகிறார்.தலைவர் மேசையின் மேல் இருந்த கவரை எடுத்து அண்ணன் கையில் கொடுத்து உதவி கேட்ட மன்ற தோழரிடம் கொடுக்க வைக்கிறார்.வாழ்த்துக்கள் என்று சொல்லி உடனே கிளம்புகிறார்.நானும் அவரும் மகிழ்வுடன் வெளியே வந்து கவர் பிரித்து பார்த்த போது 30000 பணம் இருந்தது.அன்று அது பெரிய தொகை.உடனே கூட வந்தவரிடம் நான் புறப்படுகிறேன் நீங்கள் பத்திரமாக பணம் கொண்டு ஊர் செல்லுங்கள் நான் என் தொழில் வேலை முடித்து நாளை ஊர் சொல்லுகிறேன் என்று விடைபெற்று கிளம்பிவிடுகிறார்.மாலை தலைவர் பணிகள் முடித்து திரும்பும் போது திருமண உதவி பெற்றவர் மீண்டும் வாசலில் இருப்பதை பார்த்த வாத்தியார் கோவம் கொண்டு அவனை கூப்பிட்டு வா என்று கோபமாக சொல்ல அள்ளிக்கொண்டு போய் தலைவர் முன்னால் அந்த நண்பர் நிறுத்தப்பட உனக்கு உதவி செய்துவிட்டேன் ஏன் ஊருக்கு போகவில்லை பணம் பத்தவில்லையா என்று கோபமாக கேட்க அவரோ இல்லை தலைவரே நான் உங்கள் கையால் அந்த கவரை வாங்க வேண்டும் என்று நினைத்தேன் நீங்கள்அண்ணன் கையால் கொடுத்து விட என்மனம் ஒப்பவில்லை இந்த கவரை உங்கள் கையால் தாருங்கள் என்று நீட்டுகிறார். உடனே பொன்மனம் முகம் மாறி தம்பி மற்ற உதவிகளை நான்செய்வேன்.திருமண உதவிகளை மட்டும் என் அண்ணன் கையால் கொடுக்க சொல்லுவேன்.ஏன் என்றால் எனக்கு திருமணம் முடிந்தாலும் குழந்தை பாக்கியம் இல்லை .அது போல நிலைமை உன் குடும்பத்துக்கு வரக்கூடாது.என் அண்ணன் குழந்தைகள் கண்டு வாழ்பவர் அதனால் தான் அவர் கையால் குடுக்கவைத்தேன் என்று சொல்லி கண் கலங்கினார் நம் தலைவன்.உடனே உதவியை பெற்ற அந்த மன்ற தோழன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி அழ உடனே ஒரு வாகனம் ஏற்பாடு செய்து தலைவர் அவரை பஸ் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைக்கிறார்.இந்த நிகழ்வை அவர் சொன்னவுடன் படம் பார்க்கும் எண்ணம் மறந்த நாங்கள் கொடுப்பதிலும் நேர்மை கொண்ட அவரது எண்ணமே அன்று முதல் இன்று இந்த பதிவு வரை நிலை கொண்டு நிற்கிறது.எங்கள் தலைவா உங்கள் புகழ் காக்க கோடிக்கணக்கில் உங்கள் பக்தர்கள் நாங்கள் உள்ளோம்.என்றும் நீங்கள் எங்க வீட்டு பிள்ளை.இதைப்போன்ற உண்மை நிகழ்வுகள் விளம்பரத்துக்கு அல்ல எப்படிப்பட்ட எண்ணம் கொண்ட நல்லவர் பின்னால் நாம் பயணிக்கிறோம் என்று எங்களோடு வரும் இளைய சமுதாயத்தின் பார்வைக்கு.நல்லவர் லட்சியம் வெல்வது வென்றது நிச்சியம் நன்றி தொடரும்.... Thanks fb.,
1957ல் ஒரு முக்கியமானவரிடம் மக்கள் திலகம் அவர்கள் சொன்ன விஷயம்
மக்கள் திலகம் அவர்களிடம் உங்களுடைய முன்னேற்றத்திற்கு வழிகாட்டி உங்களுக்கு அறிவுரைகளை சொன்னது யார், யார், என்பதை தயவுடன் சொல்லுங்கள் என்று ஒரு முக்கியமானவர் கேட்டார். உடனே திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் சற்றும் யோசிக்காமல் அந்த விஷயத்தை சொன்னார் சுருக்கமாக.
1. எனது தாயுடைய அறிவுரைகள், கண்டிப்பான வளர்ப்பும் தான்.
2. அடுத்து நான் நாடக கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த பிறகு எனக்கு நாடகத்தில் நடிக்க சொல்லி தந்த வாத்தியார்.
3. கம்பெனி முதலாளி
4. நடனம், சண்டை பயிற்சிகள் சொல்லிக் கொடுத்தவரும் எனக்கு நல்ல முறையில் மிகவும் கண்டிப்பான விதத்தில் சொல்லிக் கொடுத்தார்கள். நானும் அவர்களுடைய கண்டிப்பு, அடி, இவைகளையெல்லாம் சமாளித்து கொண்டு எல்லாவற்றிலும் கண்ணும் கருத்துமாக கற்றுக்கொண்டேன். எல்லாவற்றிலும் நல்ல பையன் சுறுசுறுப்பானவன் நல்ல அறிவுள்ளவன் என்று அவர்களால் புகழப்பட்டேன். நாடகத்தில் நடித்து கொண்டு இருக்கும் போது கூட திரை மறைவில் நின்று கொண்டு பிரம்பால் அடிப்பார்கள் அதை எல்லாம் அன்றைக்கு சமாளித்ததால் தான் சினிமாவில் நல்லா நடிக்க முடிந்தது என்றார் மக்கள் திலகம். அன்றைக்கு குருவாக இருந்தவர்கள் மதுரை பாய்ஸ் கம்பெனி முதலாளி சச்சிதானந்தம் பிள்ளை அவர்களும், ஆசிரியர் கிருஷ்ணசாமி அவர்களும் திரு. கந்தசாமி, காளி. என். ரத்தினம் அவர்களும் சண்டைப் பயிற்சியாளர் இவர்கள் தான் இதற்கு மேல், பி.யு. சின்னப்பா, கிட்டப்பா, எம்.கே. ராதா இவர்களை விட தன் உடன் பிறந்த தம்பிபோல் பாவித்து என் மனம் கவலைபடாத அளவிற்கு குடும்ப விஷயத்திலிருந்து அதாவது குடும்ப விஷயத்தை பற்றி கூட அறிவுரைகளை சொல்லக்கூடியவர் திரு. என்.எஸ்.கே அவர்கள் தான்.எனக்கு மனதில் சஞ்சலம் ஏற்பட்ட போதெல்லாம் அவரிடம் போய்விடுவேன். அவரிடம் ஒரு மணி நேரம் பேசிக்கிட்டு இருந்தால் போதும், அவர் ஒரு காலகட்டத்தில் வெள்ளைக்கார ஆட்சியில் ஜெயிலுக்கு போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதாவது என்.எஸ்.கே. தியாகராஜபாகவதர் இவர்கள் மீது ஒரு பத்திரிகை ஆசிரியர் கொலை சம்பந்தமாக 1944ல் ஜெயிலில் போட்டு விட்டார்கள். அது சமயம் நான் மிக மிக வேதனை அடைந்தேன். பிறகு, அவர்கள் ஜெயில் தண்டனை, முடிந்து விடுதலை ஆகி 1947க்க வீட்டுக்கு வந்த பிறகு, எல்லோரையும் பார்த்து நடந்த சம்பவத்தை பற்றி ஆறுதல் செய்திகள் சொன்னேன். பிறகு, என்.எஸ்.கே. அவர்களுக்கு என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்து கொண்டு இருந்தேன். அவர் கேட்காமலேயே நானும் அந்த சமயம் கொஞ்சம் வசதி உள்ளவன் ஆகிவிட்டேன். அப்படி நான் செய்யும் உதவிகளை நினைத்து மிகவும் சந்தோஷப்படுவார்கள். கடவுள் தான் ராமச்சந்திரன் உருவத்தில் வந்து இருக்கிறாரோ என்று கலைவாணர் நினைப்பாராம். இதை என்னிடம் சொல்லுவார்கள்....... Thanks wa Friends...
இன்று மாலை 6 மணியளவில், இறைவன் எம். ஜி. ஆர். ஆலயத்தில் ,ராணுவ வீரர்கள் மரணத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு, இறைவன் எம்.ஜி.ஆர் ஆலயத்தின், வாசலில் இதய வீணை படம் திரையிடப்படுகிறது. அனைவரும் வந்து கலந்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்🙏🙏🙏🙏🙏...... Thanks wa share...
இன்று நமது இனிய தலைவர் MGR அவர்களின் AIADMK ஆட்சியை DISMISS செய்த நாள்.
17/2/1980........ Thanks wa.... இந்த 17-02-1980 என்ற நாள் சாதாரணமானது அல்ல!!! ஏன்??? தமிழ்நாடு வாக்காளர்களையும், இந்திய நாட்டு வாக்காளர்களையும் உலகமெங்கும் வியந்து பார்க்க வித்திட்ட நாள்... சட்டமன்றதிற்கு ஒரு கட்சி ஆட்சியையும், பாராளுமன்றதிற்கு ஒரு வேறு ஒரு கட்சி ஆட்சியும் என பிரித்து பகுத்தறிந்து வாக்குகளை வழங்கி நமது பொது மக்கள் எல்லோரையும் சமயோசிதமாக சிந்திக்க தெரிந்தவர்கள் உலக மக்களை உணர வைக்க புரட்சி தலைவர் பிள்ளையார் சுழி போட விதைக்கபட்ட திருநாள்... சரியாக 3, 4 மாதங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் புறப்பட்டு மீண்டும் அகிலமே அமர்களப்பட மக்கள் அளித்த மாண்பை உண்டாக்கினார் மக்கள் திலகம்.........
தினமணி -17/2/19
http://i66.tinypic.com/2zirnys.jpg
http://i67.tinypic.com/20f98xl.jpg
கோவை ராயலில் தற்போது வெற்றி நடை போடுகிறது .நண்பர்களுடன் சனியன்று
(16/2/19) காலை காட்சி பார்த்து ரசித்தேன். சென்னையில் பல வருடங்களுக்கு முன்பு திரையில் பார்த்தது .தற்போது மீண்டும் பார்க்கும்போது மகிழ்ச்சி. விறுவிறுப்பான கதையமைப்பு, சுறுசுறுப்பான சண்டை காட்சிகள், பாலையா , .டி .ஆர்.ராமச்சந்திரன் நகைச்சுவை கலகலப்பு .அசோகனுக்கு முதல் படம் .இசை அமைப்பாளர் கோவிந்தராஜூலு . விஸ்வநாதன் -ராமமூர்த்தி, அல்லது கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தால் பாடல்கள் நன்றாக ஹிட் ஆகியிருக்கும். ஏனோ சுமார் ரகம்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு அரேபிய மற்றும் இஸ்லாமிய உடைகள் கன கச்சிதமாக பொருந்தியது. வைஜயந்தி மாலா மக்கள் திலகத்துடன் நடித்த ஒரே படம் ..பழைய பிரிண்ட் ஆக இருந்தாலும் பரவாயில்லை. ரசிக்கும்படி இருந்தது
http://i68.tinypic.com/15dmkh1.jpg
http://i68.tinypic.com/ay3erk.jpg
பொதுமக்களின் ஆதரவுதான் எவருக்கும் இல்லாத அளவில் உங்களுக்கு இருக்கிறதே .உங்களால் நிச்சயமாக முடியும்.என்று எம்.என்.ராஜம் பேசும்போது
அரங்கம் அதிரும் அளவில் பலத்த கைதட்டல் .இப்படி பல இடங்களில் புரட்சி தலைவருக்கு பொருத்தமான வசனங்கள் பேசும் இடங்களில் நல்ல ஆரவாரம் ,
கைதட்டல்கள். அந்தக்கால வசனங்கள் இந்தக் காலத்திற்கும் பொருந்துவது போல
உள்ளதாக பக்தர்கள் பேசிக்கொண்டனர் .