https://i.postimg.cc/vBJ8c4qR/b9319b...aa614c201e.jpg
Printable View
https://i.postimg.cc/hGL3JrLb/IMG-4075.jpg
Thanks to Mr.Asokan - Neyveli (face book)
https://i.postimg.cc/63LxcJD8/IMG-4077.jpg
நமது போற்றுதற்குரிய
தலைவர்
தமது இல்லத்தரசியோடு
தூத்துக்குடி- சத்யா DTS.,திரையரங்கம் புதியபொலிவுடன் நாளை ஆரம்பம் ...ஆரம்பமே அசத்தல்... புரட்சித்தலைவரின் "நினைத்ததை முடிப்பவன் ", தூள் கிளப்புகின்றார் தகவல் ... நெல்லை ராஜா .. நன்றி ...மதுரை.எஸ் குமார்... Thanks ..........
1984 அக்டோபரில், எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அவர் குணம் அடைய தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடந்தன.
அப்போது “ஒளிவிளக்கு” படத்தில் வாலி எழுதியிருந்த “இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ திருவிளக்கு! தலைவா, உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு” என்ற பாடல்தான் பிரார்த்தனை கீதமாக ஒலிபரப்பப்பட்டது.
எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது, மிகுந்த மனச்சுமையோடு அவரைப் பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்குச் சென்றிருக்கிறார் கவிஞர் வாலி. திருமதி ஜானகி அம்மாளும், சத்தியவாணிமுத்து அம்மையாரும் கண் கலங்க நின்று கொண்டிருக்க, ஆறுதல் சொன்னார் கவிஞர்.
“உங்கள் ஒளிவிளக்கு படத்து பாடலைத்தான், நாடே பாடி உங்கள் அண்ணனுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறது. அந்த பிரார்த்தனையின் பலனாகத்தான், அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். இனிமேல் அவருக்கு ஆபத்து இலலை” என்று திருமதி ஜானகி அம்மையார் கண்கள் பனிக்க வாலியிடம் கூறினாராம்.
“என் பாட்டுடைத் தலைவனுக்கு என் பாட்டே பிரார்த்தனை கீதமாக ஆனது குறித்து, நான் அளவில்லாத ஆனந்தம் அடைந்தேன். இருந்தாலும், அம்மா! இது வாலி பாக்கியம் அல்ல; உங்கள் தாலி பாக்கியம்” என்று சமயோசிதமாக பதில் கூறினாராம் நம் கவிஞர்............ Thanks.........
"வீர மாமுகம் தெரியுதே, அதில் வெற்றி புன்னகை புரியுதே" காலா காலமாக "சீரஞ்சிவித்துவம் "பெற்ற "தீர்க்க தரிசனம்" ... நம் காவியதலைவர் நமக்களித்த வெற்றி கொடை... "இரட்டை இலை" இரட்டை மஹா வெற்றி...
https://i.postimg.cc/MHZ4jR0p/IMG-4086.jpg
🌱🌱🌱🌱பொன்மனச்செம்மல்🌱🌱🌱🌱
https://youtu.be/Xyp_IBF9-CI............ Thanks.........
புரட்சித்தலைவர் அவர்களின் தம்பிமார்களுக்கு வணக்கம். நேற்று வெளிவந்துள்ள இரண்டு சட்டசபை இடைத்தேர்தல் முடிவின் வெற்றி நம் அனைவருக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. இம்மாதிரியான பல வெற்றிகளை பெறுவதற்கு, விதை விதைத்து உருவாக்கிய நம் புரட்சித்தலைவர் அவர்களை வணங்கி ஆசி பெறுவோம்.
பாஸ்கரன்,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை............. Thanks.........
ஒரு தலைவன் எப்படி உருவாக வேண்டும்... என காட்டிய ஒரே தலைவன் எம். ஜி .ஆர்.,
தன் உழைப்பால் உயர்ந்தார் எம் ஜி ஆர்
தான் ஈட்டியதை ஈந்து மகிழ்ந்தார்
மக்களோடு மக்கள் ஆனார் மக்களின் அன்பின் உச்சம் கண்டார்...
எம் ஜி ஆரை குறித்து ஒரு பிரபல மலையாள நாளிதழ் இப்படி குறிப்பிட்டது
மகாத்மா காந்திஜீ க்கு கூட சென்று அடைய முடியாத மக்களின் அடிமனம் சென்று அவர்களின் முழு அன்பையும் எம் ஜி ஆரால் பெற முடிந்தது என்று
வாழ்க எம் .ஜி. ஆர்., புகழ்........... Thanks.........
ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்...,
“இனி தமிழகத்தில் அண்ணா திமுக என்ற ஒரு கட்சியே இருக்க போவது இல்லை” என்று திமுகவினர் மட்டுமல்ல, அதிமுகவின் அதி தீவரமான தொண்டர்கள் கூட நம்பிக்கை இழந்து கவலை கொள்ள தொடங்கியதில் வியப்பு ஒன்றும் இல்லை அன்று.
ஒரே கட்சி சிதறு தேங்காய் போல நான்காக உடைந்து, இரட்டை இலை சின்னமும் இழந்து, மக்களிடம் செல்வாக்கும், நம்பிக்கையும் இழந்து, ஸ்டாலினிடம் மறைமுக பேரம் கண்ட தினகரனின் தினம் ஒரு ஆட்டங்களினால் இருந்த சொச்சகொச்ச நம்பிக்கையும் மக்களிடம் இழந்து, கடலில் பெரும் அலைகளுக்கு இடையே தத்தளிக்கும் ஒரு கப்பல் போல, அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து, கிட்டத்தட்ட பூஜ்யம் என்ற நிலையை அடைந்த ஒரு ஆட்சியை, கட்சியயை...
அடடா...
என்ன ஒரு லாவகத்துடன்... என்ன ஒரு நிதானத்துடன்... என்ன ஒரு ராஜதந்திரத்துடன்.... காச்மூச் என்று மிரட்டி கொண்டிருந்த மத்திய அரசுடன் இருந்த உறவை.. நட்பாக்கி, பின், இறுக்கி..... எதிர் கட்சி எம்.எல்.ஏ க்களை கூட அனாசியமாக வளைத்து போட்டு, சிலரை இணைத்து, சிலரை வெளியே அனுப்பி, சிலரை ஆப் செய்து, சிலரை மண்ணை கவ்வ வைத்து, சிலருக்கு கிச்கிச் மூட்டி, சிலரை தலை கிறுகிறுங்க வைத்து, இதோ இன்று கவிழும்... நாளை கவிழும் என்று மிரட்டி கொண்டிருந்த எதிர்கட்சி தலைவரின் கனவில் மண்ணை அள்ளி தூவி.... மக்கள் திலகம் கண்ட மாபெரும் இயக்கம், செல்வி ஜெயலலிதாவினால் உச்சம் கொண்டு செல்லப்பட்ட நாட்டின் மிக பெரிய ஒரு இயக்கத்தின் மீது... மீண்டும் மக்களின் நம்பிக்கையை பெற வைத்து, எந்த வித சேதாரமும் இன்றி, இன்று கப்பலை பாதுகாப்புடன் கரையில் சேர்த்துள்ளார் முதல்வர் எடப்பாடி அவர்களும், துணை முதல்வர் அவர்களும். நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.... பாராட்டுக்கள்.. நன்றிகள்.
அண்ணா திமுக என்பது குடும்ப கட்சி அல்ல. இது தொண்டர்களின் இயக்கம். எம்.ஜி.ஆர். அவர்கள் கண்ட இயக்கம். செல்வி ஜெயலலிதா அவர்களின் இயக்கம் என்பதை மீண்டும் நிருபித்து உள்ளது. அண்ணா திமுக தொண்டர்களின் அசுரதனமான பணிகளுக்கும், அயராத முயற்சிக்கும் கிடைத்த வெற்றி இது. வெற்றிகள் தொடரட்டும்...... Thanks...
கருணாநிதியைக் கலங்கடித்த திண்டுக்கல் தேர்தலும்
தி.மு.கவை உறைய வைத்த உலகம் சுற்றும் வாலிபனும்
சட்டமன்றத்தில் அனல் பறந்துகொண்டிருந்தது. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்துள்ளது. ஆகவே, சபாநாயகர் அவைக்குத் தலைமை தாங்கக் கூடாது; துணை சபாநாயகரைக் கூப்பிடுங்கள் என்பது ஆளுங்கட்சியின் கோரிக்கை. அதற்கான அவசியமே இல்லை. விவாதத்துக்கு வேறொரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் நானே அவைக்குத் தலைமை தாங்குவேன் என்பது சபாநாயகர் மதியழகனின் வாதம். தமிழக சட்டமன்றம் இதற்குமுன்னால் சந்தித்திராத புதிய சர்ச்சை.
பலத்த சலசலப்புகள் எழுந்த சூழ்நிலையில் சபாநாயகர் நாற்காலிக்குக் கீழே புதிய நாற்காலி ஒன்று போடப்பட்டது. துணை சபாநாயகர் சீனிவாசன் வந்து அந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். ஆம், சபாநாயகருக்குப் போட்டியாக துணை சபாநாயகரைக் களத்தில் இறங்கியிருந்தார் கருணாநிதி. சபாநாயகரைக் கையில் வைத்துக்கொண்டு தனக்கு எதிராக எம்.ஜி.ஆர் தொடங்கிய யுத்தத்துக்குப் பதிலடி கொடுக்கக் கருணாநிதி தயாராகிவிட்டார் என்பது அந்த நடவடிக்கையில் அப்பட்டமாகத் தெரிந்தது. சட்டென்று சுதாரித்த எம்.ஜி.ஆர் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அமைச்சரவை மீது நாங்கள் கொடுத்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முதலில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சபாநாயகர் மதியழகனிடம் கோரினர். கோரிக்கை ஏற்கப்பட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசுங்கள் என்று எம்.ஜி.ஆரை அழைத்தார். உடனே எம்.ஜி.ஆர் பேசத் தொடங்கினார். ஆனால் அவருடைய பேச்சு எதுவும் வெளியே கேட்கவில்லை.
விஷயம் இதுதான். சபாநாயகர், எம்.ஜி.ஆர் இருவருடைய மைக்குகளுக்கும் இணைப்பு தரப்படவில்லை. துணை சபாநாயகர் மற்றும் ஆளுங்கட்சியினருக்கு மட்டுமே மைக் இணைப்புகள் தரப்பட்டிருந்தன. நுணுக்கமாகச் செயல்பட்டிருந்தனர் ஆளுங்கட்சியினர். இணைப்பு இல்லாததைப் பற்றி எம்.ஜி.ஆர் கவலைப்படவில்லை. தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.புதிய நாற்காலியில் அமர்ந்த துணை சபாநாயகர் சீனிவாசன் முதலில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். விவாதம் தொடங்கியது. உடனடியாகத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. திமுகவில் இருந்து எம்.ஜி.ஆருடன் சேர்ந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வெகுசொற்பம். மாறாக, திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையோ மிக அதிகம். தீர்மானம் வெகு எளிதாக நிறைவேறியது. சபாநாயகர் பதவியில் இருந்து மதியழகன் நீக்கப்பட்டதாக அறிவித்தார் துணை சபாநாயகர் சீனிவாசன்.
அந்த அறிவிப்பு வெளியானபோதும் சபாநாயகர் இருக்கையில் மதியழகனே இருந்தார். இன்னொரு பக்கம் இணைப்பு இல்லாத மைக்கில் பேசிக்கொண்டே இருந்தார் எம்.ஜி.ஆர். சட்டென்று சபை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துவிட்டு வெளியேறினார் சபாநாயகர். ஆனாலும் சபை தொடர்ந்து நடந்தது. உடனடியாக எம்.ஜி.ஆரும் அவருடைய ஆதரவு எம்.எல்.ஏக்களும் சபையைவிட்டு வெளியேறினர். அதன்பிறகு ஒரு மணி நேரத்துக்கு சபையை நடத்திவிட்டு சபையை ஒத்திவைத்தார் துணை சபாநாயகர் சீனிவாசன்.
ஒருவழியாக பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது என்றுதான் நினைத்தனர். ஆனால் கருணாநிதி அத்துடன் நிறுத்தவில்லை. அமைச்சரவை மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரத் தயாரானார். எம்.ஜி.ஆர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்குப் பதில் கொடுக்கவேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம். நம்பிக்கைத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அமைச்சரவைக்கு ஆதரவாக 172 வாக்குகள் விழுந்தன. எதிர்த்து விழுந்த வாக்குகள் பூஜ்ஜியம். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று தன்னுடைய பலத்தை உணர்த்தியிருந்தார் கருணாநிதி.
இடைத்தேர்தல். திண்டுக்கல் மக்களவை திமுக உறுப்பினர் ராஜாங்கம் மரணம் அடைந்திருந்தார். ஆகவே, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் வலிமையை எடை போட்டுப் பார்க்கும் தேர்தல் என்பது பொதுவான கருத்து. அதிலும், கட்சி பிளவுபட்டிருந்த சூழலில் அந்த இடைத் தேர்தல் முடிவைத் தனக்கான கௌரவ விஷயமாகப் பார்த்தார் கருணாநிதி. செல்வாக்கு மிக்க வேட்பாளரைக் களமிறக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காக அவர் களமிறக்கிய வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம். சுறுசுறுப்புக்குப் பஞ்சமில்லை. செல்வாக்குக்கும் குறைவில்லை. உற்சாகமாகக் களமிறங்கினர் திமுக தொண்டர்கள்.
புதிய கட்சியைத் தொடங்கிய சமயம் என்பதால் இடைத்தேர்தல் சரியான வெள்ளோட்டமாக இருக்கும் என்பது எம்.ஜி.ஆரின் கணிப்பு. மாயத்தேவர் என்ற வழக்கறிஞரை வேட்பாளராக்கினார். திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சிக்கும் நல்ல செல்வாக்கு இருந்தது. குறிப்பாக, காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரசுக்கு. அந்தக் கட்சியின் சார்பில் என்.எஸ்.வி. சித்தன் நிறுத்தப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சங்கரய்யாவை வேட்பாளராக்கியது. இந்திரா காங்கிரஸும் நின்றது. ஆனால் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு கொடுத்துவிட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.ஜி.ஆருக்கு ஆதரவாகத் தனது வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொண்டது.
கௌரவத்தைத் தக்கவைக்கும் முயற்சியில் கருணாநிதி இறங்கினார். புதிய கௌரவத்தை அடையும் நோக்கத்தில் எம்.ஜி.ஆர் களத்தில் இறங்கினார். அப்போது தேர்தலுக்குத் தொடர்பில்லாத புதிய பிரச்னை ஒன்று வந்தது. அது, எம்.ஜி.ஆரின் தயாரிப்பின் உருவாகியிருந்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம். திமுகவில் இருந்தபோது தொடங்கப்பட்ட படம். வெளியிடும் தருணத்தில் புதிய கட்சியைத் தொடங்கியிருந்தார் எம்.ஜி.ஆர்.
படத்துக்கான சுவரொட்டியைக்கூட ஒட்டமுடியாத சூழல். ஒட்டிய சுவரொட்டிகளை எல்லாம் திமுகவினர் கிழித்தெறிந்ததாகச் செய்திகள் பரவிக்கொண்டிருந்தன. இதன் பின்னணியில் இருப்பவர் திமுகவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான மதுரை எஸ். முத்து என்றனர் எம்.ஜி.ஆர் ரசிகர்கள். படம் திரையில் ஓடாது; ஓடினால் சேலை கட்டிக்கொள்கிறேன் என்று முத்து சவால் விட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின
பலத்த நெருக்கடிகளுக்கு மத்தியில் உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது. அரசியல் வாடையே வீசாத வகையில் எடுக்கப்பட்ட படம் அது. திடீரென உருவான அரசியல் பிரச்னைகளுக்கு ஆளாகியிருந்தது. எனினும், படம் பிரம்மாண்டமான வெற்றி. உண்மையில் அந்த வெற்றி திமுகவினரை அதிர்ச்சியடையச் செய்தது.
இடைத்தேர்தலில் சுமார் ஐந்து லட்சம் வாக்குகள் பதிவாகின. அதிமுகவின் மாயத்தேவர் 2,60,930 வாக்குகளைப் பெற்று அபாரவெற்றியைப் பெற்றிருந்தார். ஸ்தாபன காங்கிரஸின் என்.எஸ்.வி. சித்தன் 1,19,032 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மாறாக, திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம் 93,496 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தார். கருணாநிதியை அதிர்ச்சியில் உறையவைத்த தேர்தல் முடிவு இது. திண்டுக்கல் தோல்வி குறித்து பின்னாளில் கருணாநிதி இப்படித்தான் எழுதினார். ‘திமுகழகத்தின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த இடம் திண்டுக்கல். இந்தத் திண்டுக்கல்தான் கழகத்தின் பல்வேறு வெற்றிகளுக்கெல்லாம் தடைக்கல்லாகவும் இருந்தது.’........... Thanks.........
தீபாவளி மறுவெளியீடு*---------------------------------------
இன்று முதல் (25/10/19) சென்னை பாலாஜியில் புரட்சி நடிகர் /புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது*
இன்று முதல் (25/10/19) மதுரை சென்ட்ரலில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய " நாடோடி மன்னன் " தினசரி 4 காட்சிகளில் வசூல் சாதனை புரிய வருகை தந்துள்ளது .
கோவை பக்தர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி .------------------------------------------------------------------
சண்முகாவில் 25/10/19முதல்* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அகிலம் போற்றும் "ஆயிரத்தில் ஒருவன் "* டிஜிட்டல் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது*
டிலைட்டில்* 25/10/19 முதல் வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். நடித்த பிரம்மாண்ட வெற்றி படமான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .
தூத்துக்குடி சத்யாவில் 25/10/19 முதல் கொள்கை வேந்தன் / கலைவேந்தன் எம்.ஜி.ஆர். அசத்தலாக நடித்த டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 2 காட்சிகள் , சனி ஞாயிறு 3 காட்சிகள் நடைபெறுகிறது*
23/10/19 முதல் மதுரை திருப்பரங்குன்றம் லட்சுமியில் ' பொன்மன செம்மல் எம்.ஜி.ஆரின் "தர்மம் தலை காக்கும் " தினசரி 3 காட்சிகள் (3 நாட்கள் மட்டும் )நடைபெறுகிறது .
செய்தி திருத்தம்*-------------------------
25/10/19 முதல் சென்னை சரவணாவில் டி.டி.எஸ். அரங்கில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .சென்னை பாலாஜியில் அல்ல..
தினத்தந்தி வெள்ளிமலர் -25/10/19
என்றென்றும் கண்ணதாசன் .--------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மதுரை வீரன் படத்திற்கு 1956லும், மகாதேவி படத்திற்கு 1957லும் கவிஞர் கண்ணதாசன் வசனம் எழுதி இரண்டும் மாபெரும் வெற்றி பெற்றன .
இந்த வெற்றிகளை தொடர்ந்து கவிஞர் கண்ணதாசன் சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்கி மக்கள் திலகம் கதாநாயகனாக நடிக்க "ஊமையன் கோட்டை " என்கிற படத்தை தயாரிக்க முற்பட்டார் .
ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் பெரிய மேடை போடப்பட்டு , அறிஞர் அண்ணா தலைமையில் தொடக்க விழா நடைபெற்றது.* தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தின் தொடக்க விழா இப்படி நடைபெற்றது அதுவே முதல் தடவை .
ஊமையன் கோட்டை* படப்பிடிப்பு தொடங்கியது .* எம்.ஜி.ஆர். வேறு படங்களில் நடித்து கொண்டிருந்ததால்* அவர் இல்லாத காட்சிகள் முதலில் படமாக்கப்பட்டன .
மதுரை வீரன், மகாதேவி படங்களின் வசனங்கள், வெற்றிகள் பற்றி* கேள்விப்பட்டவர்கள் சினிமாவிலும், அரசியலிலும் உயரத்திற்கு போய்விடுவார்.அவரை வளர விடக்கூடாது என்று முடிவு செய்து , இடைப்பட்ட காலத்தில்*எம்.ஜி.ஆரிடம் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி அவர் மனதை கலைத்து விட்டார்கள் .
கண்ணதாசன் தன்னை பற்றி இப்படி பேசி இருப்பாரா என்று எம்.ஜி.ஆர். யோசிக்கக்கூட அவர்கள் விரும்பவில்லை .எம்.ஜி..ஆரும்,கண்ணதாசனும் அப்போது தி.மு.க. வில்தான் இருந்தார்கள் .இதன் காரணமாக ஊமையன் கோட்டை படம் கைவிடப்பட்டது .
கண்ணதாசன் மீது தப்பில்லை.* தன்னிடம் வேண்டுமென்றே தவறான தகவல்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன என்று பின்னாளில் எம்.ஜி.ஆர். உணர்ந்து கொண்டார் .* இருவரும் மனம் விட்டு பேசினார்கள். மீண்டும் எம்.ஜி.ஆர். கண்ணதாசன் கூட்டணியில் _நாடோடி மன்னன் , மன்னாதி மன்னன், ராணி சம்யுக்தா , ராஜா தேசிங்கு என வரிசையாக படங்கள் வெளிவந்தன .
குமுதம் வார இதழ்*
கே. ராஜேஷ், திருவள்ளூர்*
நீங்கள் அடிப்படையில் எம்.ஜி.ஆர். ரசிகராமே.?* இதுதான் தங்களை ஆக்ஷன்*படங்களில் நாட்டம் கொள்ள வைத்தது உண்மையா ?
பதில் :எம்.ஜி.ஆர். அவர்களின் டெக்னீகல் நாலெட்ஜ் மீது பெரிய வியப்பு உண்டு .ஜேம்ஸ் பாண்ட் படம் போன்ற உலகம் சுற்றும் வாலிபன், அண்டர் வாட்டரில்*அவள் ஒரு நவரச நாடகம், பாடல், ஸ்கெட்டிங்கில் கிளைமாக்ஸ் சண்டை, , நாடோடி மன்னனின் ஒரு தீவு தண்ணீரில் மூழ்குவது !. இதெல்லாம் பிரமிப்பான கற்பனைகள் .
தினகரன் வெள்ளிமலர் 25/10/19---------------------------------------------
old is gold
பந்துலு கட்சி மாறிய கதை .------------------------------------------
பி.ஆர். பந்துலு , சிவாஜி கணேசனின் ஆஸ்தான இயக்குனராக 1960களில்*தொடக்கத்தில் உருவெடுத்தார் .சிவாஜி கணேசனின் 100வது படத்தை தானே தயாரித்து, இயக்கி ,முரடன் முத்து என்கிற படத்தை வெளியிட முற்பட்டார் .
ஆனால் ஏ.பி.என்.நாகராஜன் தயாரிப்பில் , 100வது* படமாக நவராத்திரி படத்திற்கு சிவாஜி கணேசன் அந்தஸ்து அளித்தார் .
இதனால் ஏமாற்றத்திற்கு உள்ளான பந்துலு, தான் இதுவரை இயக்காத* எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்து ,* படம் தயாரிக்க விரும்பினார் .* *எம்.ஜி.ஆரும்* பச்சை கொடி காட்ட "ஆயிரத்தில் ஒருவன் " படத்தை பிரமாண்டமாக தயாரித்து பெரும் வெற்றி பெற்றார் . அதை தொடர்ந்து, நாடோடி, ரகசிய போலீஸ் 115, தேடி வந்த மாப்பிள்ளை ஆகிய படங்களை தயாரித்தார் .
தினகரன் -25/10/19
அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெற்ற வெற்றியை*எம்.ஜி.ஆர். - ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்கி மகிழ்கிறோம்*
முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும்*கூட்டாக வெளியிட்ட அறிக்கை .
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றிக்கு அயராது பாடுபட்ட அ. தி.மு.க. தொண்டர்கள், வாக்களித்த பொதுமக்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் திரு.ராமதாஸ், திரு.விஜயகாந்த், திரு.ஜி.கே.வாசன், திரு.சரத்குமார் ஆகியோருக்கும், கட்சி தொண்டர்களுக்கும், நன்றி தெரிவிப்பதோடு, இந்த வெற்றியை அ. தி.மு.க. தலைவர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவிற்கு காணிக்கை ஆக்குகிறேன் .என்று அறிக்கை வெளியிட்டனர் .
நன்றி திரு லோகநாதன் சார்.
சிவாஜி கணேசன் அவர்களுக்கும் பந்துலுவிற்குமான பிரிவுக்கு மேற்கண்ட பிரச்சனைதான் காரணம்.
இதை நாங்கள் பலமுறை சொல்லியிருக்கின்றோம் ஆனால் உங்கள் பக்கத்திலிருந்து எதிர்மறை கருத்தே பதிவிடப்பட்டது.
எங்கள் பக்கம் இருந்து சொல்லப்பட்ட உண்மை நிலவரத்தை தங்களது மேற்கண்ட பதிவின்மூலம் உறுதிப்படுத்தியமைக்கு
மிக்க நன்றி.(உண்மைகள் எப்பொழுதும் உறங்காது என்றோ ஒரு நாள் விழித்துக்கொள்ளும்)
தினகரன் நாளிதழில் நேற்று வந்த செய்தியில் ஒரு பக்கமாக தான் (எடிட்) பண்ணி எழுதியுள்ளனர். இதுவும் ஒரு காரணம் அவ்வளவே. மற்றபடி திரு பந்துலு தயாரித்து வெளியிட்டு நஷ்டப்பட்ட 1961 ம் வருடம் படம், பின்பு 1964 பொங்கலுக்கு வெளியிட்டு பெருத்த நஷ்டத்தை சந்தித்த படம் ( 100 நாள் கண்ட பின்பும் இழப்பை சரி செய்ய இயலாதலால்) அணி மாற நேரிட்டது. இது அந்த காலத்திலேயே திரைப்பட துறையினர் உட்பட சினிமா சம்பந்தப்பட்ட அனைவரும் அறிந்த செய்தியே...
" ஒருமுறை திருச்சிக்கு எம்.ஜி.ஆருடன் காரில் பயணிக்கிறேன். வழியில் ஒரு ரயில்வே கேட். கார் நிற்கிறது. எம்.ஜி.ஆர். வந்த செய்தியறிந்து பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் பறந்து வருகிறார்கள். அத்தனை பேரும் காரைச் சூழ்ந்து கொண்டு பாசத்தைக் கொட்ட… திக்குமுக்காடிப் போகிறார் எம்.ஜி.ஆர். ‘’எல்லாரும் நல்லா இருக்கீங்களா?’’ என்று அன்போடு விசாரிக்கிறார். பதிலுக்கு அந்த மக்களோ ‘’மகராசா…நீங்க நல்லா இருந்தாலே போதும், நாங்க நல்லா இருப்போம்’’ என்று அந்த உழைக்கும் மக்கள் கையெடுத்துக் கும்பிட்டுச் சொல்ல…அவர்கள் அத்தனை பேரின் கைகளைப் பற்றிக்கொண்டு நெகிழ்ந்து போகிறார் எம்.ஜி.ஆர்.
கார் நகர்கிறது. சில நிமிடங்கள் மௌனமாக வந்த எம்.ஜி.ஆர். உருகிப்போய் சொன்னார்: ‘’ நான் நல்லா இருந்தாலே தாங்களும் நல்லா இருப்போம்னு சொல்ற இந்த மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்!''
மக்கள் தன் மீது காட்டிய பாசத்தைப் போலவே, மக்கள் மீது அவர் காட்டிய அன்பையும் அக்கறையையும் நேரில் பார்த்தேன்.
அவரது ஆட்சியின்போது ஒருமுறை ராமேஸ்வரத்தில் கடுமையான புயல் மழை. குடியிருப்புப் பகுதிகளில் பலத்த சேதம். தகவல் கிடைத்ததும் உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார் எம்.ஜி.ஆர். அவருடன் நானும். சேறும் சகதியுமாக நீரோடிய வீதிகளில், கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தனர் மக்கள். அவர்களைப் பார்த்ததுமே காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். கொஞ்சம்கூட யோசிக்காமல் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க…பதறிப்போன மக்களோ ‘அய்யா, எங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்ல, உங்களப் பாத்ததே போதும், சகதியில நடக்காதீங்க’’ என்று தடுத்தும் கேளாமல், அவர்களது அருகில் போய் ஆறுதல் கூறினார். அதேஜோரில் மின்னல் வேகத்தில் நிவாரணப்பணிகளுக்கும் உத்தரவிட்டார்.
மக்களின் குறைகளை கோட்டையில் உட்கார்ந்து கேட்டவர் அல்ல…
தெருவுக்கே வந்து தீர்த்து வைத்தவர் எம்.ஜி.ஆர்.
முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் அவர் அமரராகும் வரை…அந்த 11 ஆண்டுகளில் 1 சென்ட் நிலமோ அல்லது வீடோ... இந்தத் தமிழ்நாட்டிலோ, வேறெந்த மாநிலத்திலோ அவர் வாங்கியது கிடையாது. அதேசமயம் திரையுலகில் இருந்தபோது தான் சம்பாதித்த சொத்துக்களை மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்து லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர்போல இடம் பிடித்தவர் வேறு யாரும் கிடையாது.
ஏனெனில் தான் சம்பாதித்த மாபெரும் சொத்து மக்கள் செல்வாக்கு என்பதைத்தான் அவர் மதித்தார், அதில் துளிகூட கீறல் விழாமல் கடைசிவரை காத்தார்.
இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்…எம்.ஜி.ஆருடன் காரில் செல்கிறேன். சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் ’’தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க’’ என்று கோஷமிடுகிறார்கள். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர். என்னிடம் ‘’எல்லாருமே எம்,ஜி,ஆர், வாழ்க’ன்னுதானே வாழ்த்தறாங்க. ஒருத்தர்கூட ‘முதலமைச்சர் வாழ்க’ன்னு சொல்லலை. ஏன் தெரியுமா?’’ என்று கேட்டார். ‘’ உங்க மூன்றெழுத்துப் பெயர்தான் அவங்களுக்கு மந்திரம் மாதிரி. அதனாலதான்’’ என்றேன்.
அதற்கு அவர் ‘’அதுமட்டுமல்ல, முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா அது பதவியை வாழ்த்தற மாதிரி, எம்.ஜி.ஆர். வாழ்கன்னு சொன்னாதான் அவங்களுக்கு என்னை வாழ்த்தற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதைத்தான் நான் பத்திரமா காப்பாத்தியாகணும்!’ என்றார்’. இறுதிவரை சொன்னது போலவே நின்றார்."
புரட்சி தலைவரின் அபிமானி! ............ Thanks.........
எல்லோருக்கும் இறைவன் ஆசிர்வாதம்... மக்கள் திலகம் நல்லாசியோடு இனிய " தீபாவளி" திருநாள் நல்வாழ்த்துக்கள்.........
சிவா அய்யா
எங்கள் திரிக்கு வந்து விளக்கம் சொன்னதுக்கு நன்றி. அதனால், மீண்டும் உண்மயை விளக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதுக்கும் நன்றி.
மிகப் பெரிய பொருள் செலவு செய்து எடுக்கப்பட்ட கர்ணன் படம் போதுமான லாபத்தை தரவில்லை. பந்துலு நஷ்டம் அடைந்தார். உங்கள் திரியிலியே கூட விநியோகஸ்தர்கள் பொய் கணக்கு காட்டி பந்துலுவை ஏமாற்றி விட்டார்கள் என்று பதிவு போட்டு இருக்கிறார்கள். உங்களுக்கும் நினைவு இருக்கும்.
எப்படியோ பந்துலுக்கு பணம் வரவில்லை. லாபம் கிடைக்கவில்லை.
உங்கள் திரியிலே ஏற்கனவே சொல்லப்பட்டபடி, விநியோகஸ்தர்களால் பந்துலு ஏமாற்றப்பட்டாரே என்னவோ எங்களுக்குத் தெரியாது. ஆனால், அவருக்கு லாபம் கிடைக்கவில்லை. இது உங்கள் திரியிலேயே ஏற்கெனவே ஒப்புக் கொள்ளபட்ட விசயம்.
நாங்களும், பந்துலு நஷ்டப்பட்டார். அதற்கு பின்னர், மக்கள் திலகத்தை வெச்சு ஆயிரத்தில் ஒருவன் படம் எடுத்து லாபம் பார்த்து நஷ்டத்தில் இருந்து மீண்டார் என்றுதான் கூறுகிறோம்.
மற்றபடி, பந்துலு உங்களை விட்டு பிரிவதற்கு கர்ணன் பட நஷ்டம்தான் காரணம் என்று நாங்கள் கூறவில்லை.
அப்படி அதனால் 2 பேரும் பிரிஞ்சிருந்தால் அப்புறம் முரடன் முத்து படத்தை எடுத்து இருப்பாரா?
இது கூட எங்களுக்குத் தெரியாதா.
நன்றி.
சிவா அய்யா,
உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள். மக்கள் திலகம் ரசிகரான உங்கள் அண்ணன் பெரிய அய்யாவுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
திரி நெரியாளர்கள், பதிவாளர்கள், பார்வையாளர்களுக்கும்
மக்கள் திலகத்தின் ரத்தத்தின் ரத்தங்களுக்கும்
தீபாவளி வாழ்த்துக்கள்.
நண்பர் திரு.சிவானந்தன் அவர்களுக்கு வணக்கம் .
எனது பதிவுகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்ததற்கு நன்றி.
தங்களின் விளக்கமும் உங்கள் சொந்த கருத்து. வாதிடவில்லை.. அதுபற்றி பலவிதமான கருத்துக்கள் நண்பர்கள் பதிவு செய்கின்றனர் .உண்மை நிலவரம் பந்துலுக்கே தெரியும். மேற்கொண்டு கருத்து சொல்ல விருப்பமில்லை .
தங்களின் நண்பர் , அகஸ்தியாவில் தரம் கெட்ட படங்களை தொடர்ந்து வெளியிட்டு* அரங்கின் புனிதமே கெட்டுவிட்டது . அதை* ராஜா சரி செய்வார் என்று தரம் தாழ்ந்து பதிவிடுவது சரியா .தரமான படங்கள் (தங்கள் நண்பரின் கூற்றுப்படி )ஒரு சில வெளியாகி தரம் இல்லாத வசூல் பெறுகிறது என்பது அவருக்கு தெரியுமா தரம் கெட்ட* படங்கள்தான் (நண்பர் கூற்றுப்படி ) தரமான வசூலை பெறுகின்றன .எனவேதான் விநியோகஸ்தரும்,அரங்க மேலாளரும் தொடர்ந்து எங்கள் தலைவரின் படங்களை அதிகம் வெளியிடுகிறார்கள். வெளியிடுவார்கள் .,
எங்கள் தலைவரின் வசனம் : எதிரி கூட சமமாக இல்லையென்றால் அலட்சியப்படுத்துகிறவன் நான் . அதுபோல நாங்கள் தங்களின் நண்பரின் வார்த்தைகளை அலட்சியம் செய்கிறோம் .*
மேலும் எங்க வீட்டு பிள்ளை 1965ல்* 7 அரங்குகளில் வெள்ளிவிழா சாதனையை*1979ல் தான் திரிசூலம் 8 அரங்குகளில் வெள்ளிவிழா கண்டு முறியடித்தது .11 அரங்குகள் என்பது தவறான செய்தி .
ஞான ஒளி - பிளாசா 104, பிராட்வெ 69, சயானி 69, கமலா 56, தமிழ் நாடு 20 நாட்கள் என்பது சரி. ஆனால் உங்கள் பதிவில் பிளாசா 104, பிராட்வெ 76, சயானி 76, கமலா 69 , தமிழ்நாடு 41 என்று பதிவு ஆகியுள்ளது.* நாடோடி மன்னன் பற்றி கருத்து கூறும் தாங்கள் இதற்கு என்ன பதில் தர போகிறீர்கள். உண்மை தகவலை பதிவிடுங்கள் என்று கேட்டு கொள்கிறேன் . நன்றி .
உங்களுக்கும் ,உங்கள் சகோதரர் திரு.சுதானந்தன் அவர்களுக்கும் எனது சார்பிலும், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பிலும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் .
*
நண்பர்கள் திரு.மஸ்தான் சாஹிப், திரு.சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்.*நீண்ட நாட்களுக்கு பிறகு திரியில் சந்திக்கிறேன்.*
இருவருமே தங்களின் தொடர்பு எண்ணை என்னிடமோ, அல்லது திரு.சுகாராம் அவர்களிடமோ தெரிவித்தால் விளக்கங்கள், சந்தேகங்கள் தீர்த்து கொள்ள ஏதுவாக இருக்கும் .
தங்களின் சுவாரஸ்யமான பதிவுகளை வரவேற்கிறேன்.*இருவருக்கும் , மற்றும் ஏனைய பதிவாளர்கள், பார்வையாளர்கள், நண்பர்கள், அன்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் .
எனது 27,000* பதிவுகளுக்கு நேரிலும், கைபேசியிலும் , வாட்ஸ் அப்பிலும் , மய்யத்திலும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து* நல்ல இதயங்களுக்கும்* இதயங்கனிந்த நன்றி .
திரையில் வீரம், நிஜத்திலும் , வீரம் அதுவே எம். ஜி. ஆர் .,.........
ராகவேந்திரா மண்டபம் கட்டிய போது ஒரு பெரும்புள்ளி இடைஞ்சலான போது நான் பல மேல்மட்டத்தையும் அணுகியும் நடக்கவில்லை கடைசியில் எம் ஜி ஆரிடம் போய் சொல்லி விட்டு சென்று பார்த்த போது பெரும் புள்ளி எம் ஜி ஆர் முன் கைகட்டி நிற்ப்பதை பார்த்தேன் அது தான் எம் ஜி ஆர் அவர் ஒரு தெய்வப்பிறவி இப்படி கூறியவர் ரஜினி காந்து
இறைவனிடம் முறையிட்டாலும் நிறைவேற்ற சிறு தாமதம் ஆகலாம் ஆனால் என் அன்பு தெய்வம் எம் ஜி ஆரிடம் முறையிட்டால் உடனே நடக்கும் இப்படி கூறியவர் சரோஜா தேவி
ஜெனநாயக நாட்டில் ஒரு மன்னனாக வாழ்ந்தவர் எம் ஜி ஆர் இப்படி கூறியவர் எம் என் நம்பியார்
எம் ஜி ஆரை வென்றவர் இல்லை
நினைத்ததை முடிப்பவர் எம் ஜி ஆர்
எந்த கொம்பனும் எம் ஜி ஆர் முன் தலை வணங்குவான்
எம் ஜி ஆர் நல்லவனுக்கு நல்லவனாக
கெட்டவனுக்கு அவன்வழியிலே நல்வழி காட்டிய மாவீரன்
வாழ்க எம் ஜி ஆர் புகழ்.......... Thanks.........
நமது தோழர்கள் மாற்று முகாம் நண்பருக்கு உண்மையான, நடந்த விடயங்களை பூசி மொழுகாமல் உள்ளதை தெரிய படுத்துவதில் எந்த தவறுமில்லை... அவர்களின் அபிமான நடிகரே 1970ம் வருடம் 140 படங்களில் நடித்து வெளியான பின் ரசிகர் மன்ற ஆல்பத்தில் கர்ணன் பட comment செய்யும்போது ' பிரமாண்ட தயாரிப்பு என்றாலும் எதையோ கோட்டை விட்டு விட்டோம்' என்று பதிவு போட்டதை சிலர் அறியாமல் இருக்கலாம்.. அதே ஆல்பத்தில் சிவந்த மண் பட பதிவில், 'அள்ளி அள்ளி தந்த மக்களுக்கு ஆனந்ததால் கண் சிவந்தது', என்றும் பதிவு செய்திருப்பார்.. அந்த தகவல் வேண்டுமானால் அந்த பட தயாரிப்பாளர் மூலமாக தவறாக கிடைத்திருக்க வாய்ப்புள்ளது.. ஏனெனில் மக்கள் திலகம் போன்று எல்லா விடயங்களிலும் அவர்கள் நடிகர் update கிடையாது என்பதும் பலரும் அறிந்ததே...... Thanks...
தினத் தந்தி ...
இது குறித்து நான் முன்பே பதிவு செய்துள்ளேன்.
ஊமையன் கோட்டை
நேற்று தினத் தந்தியில் "புரட்சித் தலைவர் கண்ணதாசன் கருத்துவேறுபாடு" படித்தேன். அதில் வந்த செய்தி உண்மையா இல்லையா என்பது எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்த உண்மையை/படித்ததை சொல்கிறேன் :
புரட்சித் தலைவர் அவர்களை "தானாக முன்வந்து நான் ஊமைத்துரை பாத்திரத்தில் நடிக்கிறேன்" என்றார். படத்துக்கு பைனான்ஸ்/ நிதி வேணுகங்கா பிலிம்ஸ் ...திரு. சிங்காரம் செட்டியார். மிகவும் கண்டிப்பானவர்.
படத்தின் இயக்குனர் இலங்கைவாசியும் பல சிங்கள படங்களை டைரக்ட் செய்த மஸ்தான். இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி - இரண்டு பாடல்கள் பதிவு செய்யப்பட்டன. நெப்ட்டுனே ஸ்டுடியோவில் சின்னமருது பெரிய மறுத்து தர்பார் செட் போடப்பட்ட 'சாந்துப் பொட்டு தளதளக்" ஷூட்ஜிங் நடைபெற்றது.........
இந்த காலத்தில் திரு. ரங்கசாமி அவர்கள்தான் புரட்சித் தலைவருக்கு மேக்கப் போடுவார். "விக்" செய்யும் விஷயமாக திரு. செட்டியார் அவர்களை அணுகினார். செட்டியார் அவர்கை மொன்று நாங்கள முறை சாக்குபோக்கு சொல்லி அலையவிட்டார். தலைவரிடம் ரங்கசாமி விவரத்தை சொன்னார். தொலைபேசியில் தலைவர் செட்டியாரிடம் பேசினார் .....இருவருக்கு பெரிய தகராறு.
செட்டியார் பைனான்ஸ் தர முடியாது என்று சொல்லிவிட்டார். ஊமையன் கோட்டை படம் நின்றுவிட்டது. "சிவகங்கை சீமை" படத்தில்
'சாந்துப் பொட்டு தளதளக்" என்று பாடலை பார்க்கலாம்.
புரட்சித் தலைவர் கவிஞரை அழைத்து சமாதானப்படுத்தி அடுத்த படம் பண்ணித்தருவதாக சொல்லி அனுப்பினார்.
ஆகா படம் நின்றதற்கு "பைனான்சியர்"/"விக்" தான் காரணம். இது எனக்கு தெரிந்த தகவல்.
நன்றி. ... Thanks mr.SB.,
மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றியும் மக்கள் திலகம் எம்ஜிஆரின் சாதனைகளை பற்றியும்
சமூக வலை தளங்கள் , முகநூல் , வாட்ஸ் ஆப் மற்றும் எம்ஜிஆர் குழுக்கள் போன்ற இணைய தளத்தில் பலரும் உண்மைக்கு மாறான செய்திகளையும் , தவறான தகவல்களையும் ,பதிவிட்டு வருகிறார்கள் . குறிப்பாக சரியாக படிக்காமல் மற்றவர்களுக்கும் அனுப்பி வைக்கிறார்கள் . இது வருந்தத்தக்கது .
அதே போல் நடிகர் சிவாஜி கணேசனின் சாதனை என்ற பெயரில் பொய்யான பல செய்திகளை பரப்பி வருகின்றனர் .
ஆதார பூர்வமாக பத்திரிகைகளில் வந்த விளம்பரம் ஒன்றுதான் நம்பக தன்மை கொண்டது .
நாடோடிமன்னன்
எங்க வீட்டுப்பிள்ளை
காவல்காரன்
அடிமைப்பெண்
நம்நாடு
மாட்டுக்காரவேலன்
ரிக்ஷக்காரன்
உலகம் சுற்றும் வாலிபன்
மேற்கண்ட எம்ஜிஆரின் படங்கள் வசூல் விபரத்தோடு விளம்பரங்கள் வந்தது . இதுதான் உண்மையான ஆதாரம் .
சென்னை நகரில் 10 லட்சம் வசூல் செய்த முதல் படம் 1965ல் "எங்க வீட்டுப்பிள்ளை "...
சென்னை நகரில் 1977 வரை வசூலில் முதலிடம் இருந்த படம் 1973ல் "உலகம் சுற்றும் வாலிபன் ."
தென்னிந்திய திரை உலகின் வசூல் மன்னன் , வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர் ., என்பதை உலகமறிந்தது .........
தென்னிந்திய திரை உலகின் அதிகம் சம்பளம் வாங்கியவர் எம்ஜிஆர் .
ஏராளமான மன்றங்கள் , ரசிகர்களை பெற்று இருந்தவர் எம்ஜிஆர் .
சாதனைகளின் சிகரத்தில் இருந்தவர் ...இருக்கிறவர் ,,இருக்கப்பபோகிறவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பதை அறிவோம் . நிஜத்திலும் அதற்கு தகுதியாகி முறையாக நிரூபித்து காட்டிய மஹான்...
தவறான பதிவுகளை யாருக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் .
தவறான பதிவுகளை புத்தகத்தில் அச்சிட வேண்டாம் .
சந்தேகம் இருப்பின் மூத்த எம்ஜிஆர் விசுவாசிகளிடம் பேசி பகிர்ந்து கொள்ளலாம்
எம்ஜிஆர் ரசிகர்களே
தவறான செய்திகளை ஆராய்ந்து பாராமல் பதிவிடுவதை நிறுத்தவும் .
எம்ஜிஆரின் நடிப்பின் ஆளுமைகளை உங்கள் பார்வையில் விரும்பிய காட்சிகளை அழகாக எழுதி பதிவிடவும் .......... Thanks.........
கலைப் பேரரசர் எம்ஜிஆர், அஷ்டாவதானி பானுமதி ராமகிருஷ்ணா, விஜயகுமாரி, எஸ்எஸ் ராஜேந்திரன், எம் ஆர் ராதா, முத்துகிருஷ்ணன், அசோகன், திருப்பதி சாமி, டி ஏ மதுரம், ஜி சகுந்தலா, மனோரமா, நளினி, மாலா, எஸ் ராமராவ், செந்தாமரை, பெங்களூர் பச்சையா மற்றும் பலர் நடித்த மாபெரும் பல்லவர் சரித்திர திரைப்படம் காஞ்சித்தலைவன் இன்றோடு(26-10-1963) இந்த படம் வெளியாகி 56 வருடங்களை கடந்து மக்கள் உள்ளத்தில் நிலைத்திருக்கும் மாமல்லன் நரசிம்ம பல்லவர் (எம்ஜிஆர்) இன் மகத்தான வெற்றி காவியம். பாடல்கள் அத்தனையும் அருமை குறிப்பாக, (கண் கவரும் சிலையே), (மயங்காத மனம் யாவும் மயங்கும்), (ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா), (மக்கள் ஒரு தவறு செய்தால்), இவை யாவும் மிகவும் சிறப்புடன் தேமாங்கனி ஆக இனிக்கும். அனல் பறக்கும் சண்டை காட்சிகள் நெஞ்சை புல்லரிக்கச் செய்யும். பெங்களூர் பச்சைyavudan எம்ஜிஆர் மல்யுத்தத்தில் வெற்றி பெறுவார். இதில் பச்சையா தான் படத்தில் நடிக்கவும் என்பதை மறந்து தாறுமாறாக நடந்துகொள்வார். ஆனால் எம்ஜிஆர் எப்பேர் பட்ட பயில்வான் என்றாலும் தோற்கடித்து விடுவார். ஆதலால் எப்படியும் பச்சையாvai வெற்றிக் கொள்வார் எம்ஜிஆர். எம்ஜிஆர் பானுமதியின் அபாரமான நடிப்பு சிறப்பானது. படத்திற்கு மெருகூட்டுகிறது............. Thanks.........
அனைவருக்கும் இனிய " தீபாவளி" திருநாள் நல்வாழ்த்துக்கள்... என்றும் வாழ்க வளமுடன்...
எம்.ஜி.ஆர் பக்தர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.இச்சூழலில் புரட்சித்தலைவரின் இரட்டைஇலை நாங்குநேரி விக்ரவாண்டி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம்.இதற்கு உழைத்த EPS &OPS அண்ணன்களுக்கும் அவர்களுடன் உழைத்த அனைத்து கழக உடன்பிறப்புகளுக்கும் எம்.ஜி.ஆர் பக்தன் என்ற முறைக்கு நான் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதில் ஒரு சூட்சுமமும் உள்ளது.ஆளும் அரசு பல வசதிகள் ..........செய்தது.இருப்பினும் ஒரு கூடுதல் அம்சம் இரட்டை இலைக்கு வோட்டு போட்ட 20000க்கும் மேற்பட்ட எம்.ஜி.ஆர் பக்தர்கள்.வசதிகள் போக உள்ள சுத்தியுடன் வோட்டு போட்டவர்கள்.காரணம் சைதயார் இந்த தேர்தல் பிரச்சார காலங்களில் தினத்தந்தி TV ல் 7 எபிஸோடு நம் தலைவன் எம்.ஜி.ஆர் மற்றும் அவர் காமராஜரை எப்படி மதித்தார் என்று மிக விலாவாரியாக விவரித்து அந்த எபிசோடில் சொன்னார்.நாங்குநேரி கணிசமான காங்ரஸ் ஒட்டு வங்கி.அதில் சில அனுதாபிகள் எம்.ஜி.ஆர் இந்த அளவுக்கு காமராஜரை மதித்தார் என்ற மகிழ்வில் நமக்குவோட்டு கிடைத்தது என்ற நிலை உள்ளது.ஏனெனில் நாங்குநேரி காங்ரஸ் முக்கியஸ்தர்கள் சைதயாரிடம் இது குறித்து முக்கால்மணி நேரம் நேரடியாக பேசியுள்ளனர்.சோர்வுடன் இருந்த எம்.ஜி.ஆர் பக்தர்களுக்கு சைதயாரின் 7 எபிஸோடு பேச்சு நமக்கு மிக்க உந்துதலாக இருந்தது என்பதை மறக்க முடியாது.நாங்குநேரி மக்கள் நிறைய பேர் தந்தி TV பிரியர்கள்.அதனால் சைதயாரின் 7 எபிசோடின் பேச்சு அவர்களை ஈர்த்தது என்பது மறுக்க முடியாத உண்மை.ஆக நாம் சைதயாருக்கும் நன்றி சொல்லவேண்டும்........... Thanks...........
.
எந்தக் கட்சி வரலாற்றிலும் இல்லாத அளவு 300 க்கும் மேற்பட்ட சாதாரணத் தொண்டா்களை ,
அமைச்சா்களாக உயா்த்திய இயக்கம் .........அஇஅதிமுக !............ Thanks.........
https://youtu.be/dXvvFDzvTIc.......... Thanks...