முதலில் நீங்கள் என்ன உங்கள் வீட்டில் செய்தீர்கள் எனக் கேட்பது போல எழுதியிருந்தேன்.. எழுதலாமா எனத் தெரியவில்லை..எனில் என் மனைவியிடம் சொன்னது போல் எழுதினேன்..(ஆமா ஆக்சுவலா நேத்து என்னவாக்கும் செஞ்சீங்க?!)-வெண்பா ப்ளீஸ்
Printable View
முதலில் நீங்கள் என்ன உங்கள் வீட்டில் செய்தீர்கள் எனக் கேட்பது போல எழுதியிருந்தேன்.. எழுதலாமா எனத் தெரியவில்லை..எனில் என் மனைவியிடம் சொன்னது போல் எழுதினேன்..(ஆமா ஆக்சுவலா நேத்து என்னவாக்கும் செஞ்சீங்க?!)-வெண்பா ப்ளீஸ்
உங்கள் மனைவியை நீங்கள் "கால்கட்டில் மாட்டிய காரிகை" என்பது அவர்கள் அடிமைப் பட்டுவிட்டு மாட்டிகொண்டிருப்பதையே வரணிப்பதாகக் கொள்ளவேண்டி யுள்ளது. வாழ்க்கையில் இணையான இடமில்லை என்று காட்டுகிறது. காலுக்குக் கட்டுப்போட்டா வைத்திருக்கிறீர்கள்! இல்லாவிட்டால் .......
என்ன வரணணை இது?
பால்கலந்த தேன்வண்ணம் மாறியே
எந்த வண்ணத்துக்கு மாறியதாம்?
உதாரணமாக, கோபத்தில் முகம் சிவந்தது எனலாம். இப்படிச் சொல்லாமல், கோபத்தில் கருவண்ணம் மாறிற்று எனலாமா?
You must describe the end effect.
திருமணம் என்பதற்கு கால்கட்டு என்று சொல்வது காலந்தொட்ட வழக்கம்..கால்கட்டு என்பது பெண்ணுக்கு மட்டுமில்லை ஆணுக்கும் தான்.. ஓ நான்மோனை வரவேண்டும் என எழுதியது சரியில்லையோ.. சரி மாற்றி எழுதப் பார்க்கிறேன்.. வேறு எதுவும் உள்ளர்த்தம் வைத்து எழுத்வில்லை ம..
பால்கலந்த தேன்வண்ணம் மாறியது என்பது பொன்னிறம் என்பது செந்நிறம் என்ற அர்த்தத்தில் எழுதினேன்.. அது எப்படிகருவண்ணம் ஆகும்..
வாழ்த்துக்கள் சொன்னேனே வாலண்டைன் டேயன்று
பால்வண்ணம் தான்கொண்ட பைங்கிளிக்கு - நூல்போல்
மெலிந்த இடையாளும் மென்னகை சிந்த
மிளிர்ந்தது சந்தோஷ மே
இப்ப சரியா.. பைங்கிளி காதலி,மனைவி என வைத்துக் கொள்ளலாம்.. அதெப்படி பெண்களுக்கெல்லா கிளிமூக்கா எனக் கேட்காதீர்கள் :)
ஏதாவது தவறுதலாக எழுதி மனம்புண்பட்டிருந்தால் மன்னிக்க
Why have u resorted to apologies. You have done nothing wrong. Everyone has the liberty to express his or her views unless what you have put out conflicts with the rules. So not to worry.
Write and let me read some more! I assure you, you are a good writer.
Let Sivamaalaa enjoy a good veNpaa or other poems from you. This is not a venpaa thread. So feel free.
I am with you.