Originally Posted by
kaliaperumal vinayagam
திருமதி சாவித்திரி அவர்கள் திரையுலகில் கொடி கட்டி பறந்தபோது மிகவும் செல்வமாக வாழ்ந்தவர் என்பது அனைவரும் அறிந்தது...பின்னாளில் அவர் சிலரது துர்போதனையால்சரியான பாதையில் செல்லாதபோது , தலைவரின் அறிவுரைகள் அவர் செவியில் விழவில்லை..அதனால் செல்வங்களை இழந்து, சொந்தங்களை இழந்து, நண்பர்களை இழந்து வறுமையில் வாடினார்..பின்னர், நற்பண்புகள் போதித்த நம் தலைவர்தான் தன் துன்பங்களை தீர்க்கும் அருமருந்து என உணர்ந்து "அண்ணா, ரொம்ப கஷ்டப்படறேன்" என்ற ஒரு வாக்கியத்திற்கு, அவருடைய கஷ்டங்களுக்கு பண உதவியும் செய்து, சொந்தமாக ஒரு வீடும் கொடுத்து, 'நிழல் அண்ணனாக' இல்லாமல் 'நிஜ அண்ணனாகி' உதவினார்..கஷ்டம் என்றால் கொஞ்சம் பணம் கொடுத்து அதோடு விட்டிருக்கலாம்..ஆனால் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது, அதை அனைவரும் அடைய வேண்டும் என்று பாடுபட்ட நம் இறைவன், திருமதி சாவித்திரி அவர்கள் குடியிருக்க சொந்தமாக ஒரு வீட்டை கொடுத்தார்..அதனால்தான் அவர் இன்னும் எட்டாவது வள்ளலாக வாழ்கிறார்...
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்..