http://i58.tinypic.com/bj7nn.jpg
Printable View
வெஜ் அண்ட் நான் வெஜ்
http://www.lakshmansruthi.com/news/F...s/susheela.jpg
தென்றல் சுசீலா
http://2.bp.blogspot.com/-PKo0PlKxNo...+6+volumes.jpg
புயல் ராட்சஸி
இருவரும் ஒரே மாதிரி இணைந்து பாடிய பாடல் இரண்டை இன்று பார்ப்போம்.
இரண்டு பாடல்களுமே கிட்டத்தட்ட ஒரே ரகம்தான். இரண்டுமே அமைதியாக ஆரம்பித்து படுஆர்ப்பாட்டமாய் முடியும். இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். அமைதியை யார் தருவது? ஆர்ப்பாட்டத்தை யார் அளிப்பது? என்று.
நடிகை பாமா பக்கத்து வீட்டில் குடி வந்ததால் ஒரு வீட்டில் ஏற்பட்ட ஏகப்பட்ட களேபரங்கள் நமக்கு அத்துப்படி. அதுவும் புலி பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல நடிகையைப் பார்த்து அவள் போலவே தோற்றத்திலும், பழக்கத்திலும் தங்கள் மனைவியும் இருக்க வேண்டும் என்ற முத்துராமன், நாகேஷ் போன்ற கணவன்மார்களின் ஆசையை நிறைவேற்றும் குடும்ப மனைவிகள் காஞ்சனா மற்றும் ஜெயந்தி.
http://sim.in.com/2/e3955f0afed430bf...39952_ls_t.jpg
கணவனுக்கு வசியப்பொடி கலந்து பாமா நினைப்பிலிருந்து அவனை விடுவிக்க காஞ்சனா செய்யும் தந்திரம் துரதிர்ஷ்டவசமாய், தாறுமாறாய் மாறிப் போக (முத்து எல்லாம் தெரிந்து வசியப்பொடி கலந்த பாலை காஞ்சானாவையே அருந்தச் செய்து விடுவார்) வசியம் செய்யப் போனவரே அதில் சிக்குண்டு கணவனை 'கிக்' பார்வை பார்த்து மயங்கிச் சிரிக்க சுசீலாவின் அமைதியான குரலில் ஆழமான பாடல் ஆரம்பம்.
கலர் தேவதை காஞ்சனா பிளாக் அண்ட் ஒயிட் தேவதையாக அமர்க்களம். முத்துராமன் திருதிரு முழி ராமன்.
நினைத்தால் சிரிப்பு வரும்
நிலவில் மயக்கம் வரும்
முதல் நாள் இரவு அதுதான் உறவு
அதை மாற்ற முடியாது
காதில் தேனாய் இறங்கும் சுசீலாவின் குரல்.
பாடலின் மறுபாதி
கணவன் நாகேஷை மயக்க ஜெயந்தி யோசனை. ரேடியோ பாடிக் கொண்டிருக்கிறது. 'சங்கம்' படத்தில் வைஜயந்தி மாடர்ன் உடை அணிந்து ராஜ்கபூரை உண்டு இல்லை என்று படுத்தும் 'Main Ka Karun Ram Mijhey Buddha Mil Geya' பாடல் வானொலியில் ஒலிக்க செம ஐடியா கிடைக்கிறது ஜெயந்திக்கு. விளைவு சேலை போய் நைட் டிரெஸ் கோலம். நாகேஷ் இன்ப அதிர்ச்சி.('மை டியர் குட்டிச்சாத்தான்' ரேஞ்சுக்கு பக்கவாட்டு சுவர்கள் மேலே நடப்பார். ஏறும் போது காலண்டரை வேறு தூக்கிப் பார்த்துவிட்டுச் செல்வார்):)
சும்மா பேயாட்டம். நவ நாகரீக ஆட்டம். இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்ற ரேஞ்சுக்கு. 'மெல்லிசை மன்னர்' மெச்சும்படி போட்ட மெல்லிசை பிளஸ் வல்லிசை
நினைத்தால் சிரிக்க வைப்பேன்
அணைத்தால் துடிக்க வைப்பேன்
ஒருநாள் முழுதும் அந்த நாடகத்தை
நான் ஆட முடியாதா
பாடலின் மீதிப் பாதி ராட்சஸியின் குரலில் ஜெயந்திக்கு. முதல் பாதி சுசீலாவுக்கு அப்படியே நேர் எதிர். படு ஸ்பீட். அலட்சியம். தன்னம்பிக்கை, பாமாவை விட எந்த வகையில் நான் குறைந்தவள் என்ற எகத்தாளம். 'ஒருநாள் முழுதும் அந்த நாடகத்தை நான் ஆட முடியாதா?' என்று எக்கச்சக்க கேள்வி. ஆதி மனிதர்கள் போலவே இருக்க ஆசை வேறு. அத்தனையும் அந்தக் குரலில் ஆர்ப்பாட்டமாய் வந்து சேரும்.
ஒரே பாடலில் இரு வேறு பாடகிகளின் தனித் தன்மையைக் கொண்டு என்ன ஒரு வெரைட்டி! அமைதிப் பாடகியும், ஆர்ப்பாட்ட பாடகியும் அவரவர்கள் பாணியில் பின்னி எடுக்க இருவேறு நிலை காட்டும் பாடல்.
https://youtu.be/vSnnSKLMVnw
இதே போல இன்னொரு பாடல். இதே இரு பாடகிகளும் பாடியது. ஆனால் ஜெயாவிற்கும், சி.ஐ.டி.சகுந்தலாவிற்கும். நாயகன் ஒருவர் ஜெய்சங்கர்.
https://i.ytimg.com/vi/llcwVOPSDwY/hqdefault.jpg
குத்துச் சண்டை வீர சூரர் ஜெய்யைக் காதலிக்கும் ஜெயா. பதிலுக்கு ஜெய்க்கும் ஜெயா மேல் காதல். ஆனால் நடுவில் நடிகை சகுந்தலா (படத்தில் நடிகை ரோல்) ஜெய்யைக் காதலிப்பார் ஒருதலையாக.
ஜெய் தன்னைக் காதலிப்பதாகச் சொன்னதும் கனவில் மூழ்கி ஜெயா தேவதைகள் அமுதம் தர, அருந்தி, மயங்கி காதலனை நினைத்து அமைதியாகப் பாடுவார். சேலை கட்டிக் கொண்டு நாகரீக மூவ்ஸ் அருமையாகத் தருவார். ஜெயாவை மோக போதையில் இது போல வேறு படத்தில் காண முடியாது
நான் எண்ணத்தில் நீந்தும் பெண்ணல்லோ
வண்ணங்கள் சூடும் செண்டல்லோ
மின்னலை வீசும் கண்ணல்லோ
வா வா
(சுசீலா பின்னணி தந்திருப்பார்)
மிக அருமையான பாடல்.
சுசீலா பின்னுவார். (வா வா)
அப்படியே திடுமென சகுந்தலா ஜெய்யை ஜெயாவிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்று விடுவார். இப்போது ஈஸ்வரிக்கு வேலை. வழக்கம் போல வெள்ளப் பிரவாகம். புயல் வேகம். சகுந்தலா இங்கு பேயாட்டம். செம டான்ஸ். ஜெய் தடதடவென ஜேம்ஸ் பாண்ட் போலவே கூட ஓடுவார்.:)
வா தினம் ஒரு புது சுகம் தரவா
என் மடியினில் கலைகளைப் பெறவா
நாம் இரவிலும் பகலிலும்
போதையில் விழவா
மிக மிக அருமையான பாடல். வி.குமார் அவர்களின் இசைக்கருவிகளின் ஆளுமை அசத்தல். பாடலின் நடுவே வரும் ஆண்குரலின் ஹம்மிங் சங்கர் கணேஷை ஞாபகப்படுத்தும். இசை கூட அவர்களின் பாணியிலேயே இருக்கும் இது பற்றி ராகவேந்திரன் சாரை கூற அழைக்கிறேன்.
எல்லாம் சரி! என்ன படம் என்று சொல்லாமலேயே அறுக்கிறானே என்று நினைக்கிறீர்களா?:) எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 'தெய்வக் குழந்தைகள்' என்ற அதிகம் தெரியாத படம்தான். முத்துராமன், 'குமாரி' பத்மினி, பாபி ஸ்ரீதேவி, மாஸ்டர் ராமு எல்லோரும் உண்டு.
வி.குமார் அவர்களின் அற்புத இசைக்கருவிகளின் சங்கமத்திற்கு இந்த ஒரு பாடல் சிறந்த சான்று.
இந்த இரண்டு பாடல்களையுமே சுசீலா ஆரம்பிப்பார். ஈஸ்வரி முடிப்பார். மெதுவாகப் பாடல் தொடங்கி வேகமாக முடியும். இரண்டும் நடிகை சம்பந்தப்பட்டது என்பது இன்னொரு விசேஷம்.
கேட்டுப் பார்த்துவிட்டு சொல்லுங்கள். 12.09 க்கு பாடல் துவங்கும்.
https://youtu.be/T14l68EYtVM
ஜி சூப்பர்
Thanks Ravi ! :) I like songs by PUC,MKT, T.R.Mahalingam, N.C.Vasantha kokilam, MLV,DKP, P.A.Periyanayaki and other older stalwarts.Quote:
Originally Posted by g94127302;1237671
[B
Here is one by P.U.Chinnappa in Jagathalaprathapan(1944):
http://www.youtube.com/watch?v=mPzjb0R9bbg
I posted this song to bring out the camera trick in the early 40s.
வாசு சார்
என்ன சொல்வது எப்படிப் பாராட்டுவது..
நெய்வேலியிலிருந்து நிலக்கரி மட்டுமே சுரங்கத்தில் கிடைக்கும் என்பதை உடைத்தெறிந்து அதை விட பற்பல மடங்கு சிறப்பு வாய்ந்த தமிழ்த் திரையிசைத் தகவல் களஞ்சியமும் அங்கே சுரங்கமாய் கிடக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்.
விக்டரி மூவீஸ் பெத்த மனம் பித்து தந்த பிரமிப்பூட்டும் வெற்றியைத் தொடர்ந்து எஸ்.பி.முத்துராமன் புதிய வெற்றி இயக்குநராக அடையாளம் காணப்பட்டார். அந்த வெற்றியைத் தொடர்ந்து அதே விக்டரி மூவீஸ் அதே ஜெயாவைக் கதாநாயகியாக வைத்து தயாரித்து அதே ஆண்டில் செப்டம்பரிலேயே வெளியிட்ட படம் தான் தெய்வக் குழந்தைகள். இரண்டுமே மெல்லிசை மாமணி வி.குமாரின் இசை தான். இன்னும் சொல்லப் போனால் பாலச்சந்தரின் ஆஸ்தான இசையமைப்பாளரான வி.குமாரை விட்டு பாமா விஜயத்திற்கு எம்.எஸ்.வி.யிடம் சென்றார் கே.பி. இருந்தாலும் இந்த நினைத்தால் சிரிப்பு வரும் பாட்டில் வி.குமாரின் பாணியை நினைவு படுத்தும் வகையில் மெல்லிசை மன்னர் இசையமைத்திருப்பார். அதனால் இந்த இரு பாடல்களும் ஒரே சாயலில் இருக்கும். [இந்த இடத்தில் சாயல் எனக் குறிப்பிடுவது மெட்டை அல்ல, பாடலின் அமைப்பு, இசைக் கருவிகளின் பிரயோகம், தாளக்கட்டு மாறும் உத்தி போன்றவை]. தங்களின் அபார ஞாபகசக்திக்கு இது மிகச் சிறந்த உதாரணம் வாசு சார். வி.குமாரின் இசையைப் பொறுத்த வரையில் ஹம்மிங் மிகவும் அபூர்வமாகத் தான் ஒலிக்கும். அவருடைய உதவியாளர் குணசிங் தான் பெரும்பாலும் குரல் கொடுப்பார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். தாங்கள் இப்பாடலில் குறிப்பிடும் ஹம்மிங் அநகமாக குணசிங் அவர்களின் குரலாக இருக்கலாம். பல ஆண்டுகள் குமாரிடம் உதவியாளராக இருந்த குணசிங், சங்கு புஷ்பங்கள் படத்திற்கு தனியாக இசையமைத்தார். அப்படி யில்லாத பட்சத்தில் இந்தக் குரல் ஏ.வி.ரமணனுடையதாக இருக்கலாம். ஏனென்றால் குமார் இசையமைத்த சில படங்களில் அவர் ஹம்மிங் பாடியிருக்கிறார் எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
Vasu mentioned the song 'main kya karoon ram...' from Sangam(1964)
Here is the song:
http://www.youtube.com/watch?v=tc4PTMHeOHo
I thought this was obscene. This is nothing compared to what we see in modern movies. The trend seems to be 'more skin, less clothing'. I won't say anything about the lyrics ! :lol: That is 'progress' ! :) Of course, I felt the song and dance 'Oh rasikkum seemaane vaa' in Parasakthi was obscene when I watched the movie in 1952 ! :)
https://upload.wikimedia.org/wikiped...20px-M.s.v.JPG
இசை இன்று அதிகாலை 5 மணிக்கு நம்மையெல்லாம் விட்டு இறைவனிடம் சேர்ந்து விட்டது.
மெல்லிசை மன்னர் நம் இதயத்தில் இசையாய் குடியிருந்த அந்த தெய்வம் தெய்வத்தோடு சேர்ந்து விட்டது.
http://thefunstons.com/wp-content/up...4/03/tears.jpg
வார்த்தைகள் வரவில்லை. எழுத்தும் அழுகிறது.
மனதிற்கினிய அமரத்துவம் வாய்ந்த மதுர கானங்களை அள்ளித் தந்து நமது இதயங்களைக் கொள்ளை கொண்ட மெல்லிசை மன்னருக்கு நடிகர்திலகம் / மக்கள் திலகம் / காதல் மன்னரின் திரி சார்ந்த அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்
https://www.youtube.com/watch?v=KiYCD6Nldqg
https://www.youtube.com/watch?v=vHVwDiEr64Q
https://www.youtube.com/watch?v=UuMzmHuqN2I
https://www.youtube.com/watch?v=YN3a660t6Mo
Heartfelt condeolences on the sudden demise of our beloved Mellisai Mannar. May his soul rest in peace even as our souls are filled with his mind scintillating vibrators!
மெல்லிசை மன்னர் ..எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் இயற்க்கை எய்திவிட்டார் ....
கலைத்தாய் தன்மகனை தன்னோடு அழைத்துக்கொண்டாள்.
அவருடைய ஆன்மா கலைமகள் பொற்பாதத்தில் இளைப்பாறும் என்பதில் ஐயமில்லை...
அன்னாரை இழந்துவாடும் குடுப்பதாருக்கும்...இசை உலகுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும்..
வருத்தங்களையும்...தெரிவித்துக்கொள்கிறேன் .....அவருடைய ஆன்மா சாந்தியடைவதாக இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
இன்று அவரைப்பற்றிய பதிவுகள் எல்லோரும் போடுவதற்காக - கருவின் கருவை இன்று பதிவிட மனம் வரவில்லை .
https://www.youtube.com/watch?v=JqJ62bv_07g
அஞ்ஞாத வாசத்திற்கு பிறகு என் முதல் பதிவே , என் இசை தெய்வத்துக்கு அஞ்சலியா? கடவுளே, என் இசை ஞானத்தின் ஆரம்ப புள்ளி, குடும்ப நண்பர், ஒரு வருட மொட்டை மாடி உலாவல் தோழர், நான் இந்தியாவிலேயே முதல்வராக நினைக்கும் இசை மேதை , எனக்கு மிக வேதனையான கருப்பு தினம். அந்த மேதையை இழந்து வாடும் திரி உறவினர்களுக்கு, என் நண்பர்களான அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். (எனக்கே தேவை)
RIP..music @ MSV
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...136c3f7ac9dbc7
It was probably the last song he recorded.. And he sang as though it was his first song
https://www.youtube.com/watch?v=922I...ature=youtu.be
http://static.sify.com/cms/image/miln9Uhigjbsi.jpg
இன்பத்தை தவிர வேறொன்றும் தந்தறியாத இசை சக்கரவர்த்தி இறந்தார்.
மதுர கானங்களில் நான்கில் மூன்று பங்கு ஆக்கிரமித்த 'மெல்லிசை மன்னர்' மறைந்தார்.
இசை சாம்ராஜ்யம் வீழ்ந்தது. இனி இனிமைக்கு யாரை நாடுவோம்?
இனி அவர் பாடல்களே எங்களுக்கு ஜெபம்.
நடிப்பின் சக்கரவர்த்தி மறைந்த போது ஆவி துடித்தது
மெல்லிசை மன்னர் மறைந்த போது நெஞ்சு துடிக்குது.
இறப்பு உங்களையும் எங்களையும் பிரிக்கலாம்
இசையும் ரசிப்பும் எங்களின் பரிமாற்றவல்லவா!
அதைப் பிரிக்க எவருக்கும், எதற்கும் சக்தியில்லை.
மெல்லிசை மன்னரை இறந்து வாடும் அவர் குடும்பத்திற்கும், இரு திலக ரசிகர்களுக்கும், மதுர கானங்களின் நண்பர்களுக்கும், மற்ற ஏனையோருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை கண்ணீருடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இசையும், நாதமும் கலந்த விஸ்வரூப விஸ்வநாதனே!
உம் ஆத்மா சாந்தி அடையட்டும்.
உன் புகழ் பாட மதுர கானங்கள் என்றும் இருக்கும்.
மெல்லிசை மன்னர் காலமாகவில்லை, காலாகாலத்துக்கும் நம் இதயங்களில் நிறைந்து வாழும் இசை வடிவமாகி விட்டார்.
சில மாதங்களுக்கு முன்னர் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு கைத்தாங்கலாக அழைத்து வரப் பட்டபோதே நம் இதயம் நெகிழ்ந்தது. மெல்ல மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வந்தார்.
சில நாட்களுக்கு முன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என்பதை அறிந்து மனம் பதைபதைத்தது.
இன்று அதிகாலை இசை ரசிகர்கள் மீது பேரிடி விழுந்து விட்டது.
அவர் உடலால் நம்மை விட்டு பிரிந்தாலும் தன அழியாத பாடல்களால் நம்மிடையே என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.
அவர் புகழைப் போற்றுவதே அவருக்கான சிறந்த அஞ்சலி.
எம்.எஸ்.விஸ்வநாதன்
( நண்பர் ஒருவர் என்னிடம் பகிர்ந்துக்கொண்டது )
சாதனை நாயகன் எம்.எஸ்.விஸ்வநாதன் 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி.கேரளாவில் உள்ள எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்தவர் எம்.எஸ். விஸ்வநாதன். இவரது தந்தை பெயர் சுப்ரமணியன். தாயார் பெயர் நாராயண குட்டியம்மாள். நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விஸ்வநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருஷ்ணன் நாயர் வீட்டில் வளர்ந்தார்.
பள்ளிப்படிப்பில் நாட்டமில்லாத இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் கர்நாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்று பதிமூன்றாவது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தியவர் இவர்.
இசையமைப்பாளர் சி. ஆர். சுப்பராமன் இசைக்குழுவில் எம். எஸ். விஸ்வநாதன் ஆர்மோனியக் கலைஞராகவும் ,டி. கே. ராமமூர்த்திவயலின் கலைஞராகவும் பணிபுரிந்தனர் . உடல் நலகுறைவு காரணமாக, தன்னுடைய முப்பது வயதில் சுப்புராமன் மறைந்தார். அவருடைய மறைவைத் தொடர்ந்து அவரது இசையமைப்பில் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களின் இசைப்பணியை அவரின் உதவியாளர்களாக இருந்த இவரும் ராமமூர்த்தியும் முடித்துக்கொடுத்தார்கள்.
எம்.எஸ்.வியிடம் கவியரசு கண்ணதாசன் விருது பெற்ற போது , தமிழ், தெலுங்கு தேவதாஸ், தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான சண்டிராணி படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப் படுத்தப்பட்டார்கள்.
எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ஜெனோவா திரைப்படம்தான் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படம்.""வடநாட்டில் சங்கர் - ஜெய்கிஷன் மாதிரி தென்னாட்டில் எம்.எஸ். விஸ்வநாதன் -ராமமூர்த்தி ஏன் இருக்கக் கூடாது'' என்று சொல்லி தன்னுடைய "பணம்' என்ற படத்தில் இருவரையும் இணைத்து முதன்முதலில் இசையமைக்க வைத்து டைட்டிலில் " ராமமூர்த்தி -விஸ்வநாதன்' என்று போட்டவர் பணம் படத்தின் தயாரிப்பாளர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அப்படத்திலிருந்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை சுமார் 700 படங்களுக்கு இவர்கள் இருவரும் இணைந்து இசையமைத்தார்கள்.
இது தவிர எம்.எஸ்.விஸ்வநாதன் தனியாக 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ்ப்பாட்டு, செந்தமிழ்செல்வன் என மூன்று படங்களுக்கு இசை அமைத்துள்ள இவர் தில்லு முல்லு படத்தில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர்ராஜாவுடன் இணைந்து இசையமைத்தார்.
1951-ல்ஆரம்பித்து 1981 வரை 30 வருடங்கள் தமிழ்த் திரை இசை உலகின் முடிசூடா மன்னராக இருந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,200 படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார்.
`பாசமலர்’ படத்தில் பாட ஆரம்பித்த இவர் வி.குமார், இளையராஜா, ஏ ஆர் ரகுமான், கங்கை அமரன், தேவா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் என பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடி இருக்கிறார்.
`புதியபறவை’ படத்தில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக் கொண்டு `எங்கே நிம்மதி’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த இவர் `பாகப்பிரிவினை’ படத்தில் `தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக் கொண்டு இசைக் கோர்ப்பு செய்தவர்.`நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம் பெற்ற `முத்தான முத்தல்லவோ’ பாடலை 20 நிமிடங்களில் உருவாக்கிய இவருக்கு `நெஞ்சம் மறப்பதில்லை’ பாடலை உருவாக்க இரண்டு மாதம் ஆனதாம்!
தமிழ்த் தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமையும் இவருக்கு உண்டு. உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப் படுத்திய பெருமையும் இவருக்கு சொந்தமானது எகிப்திய இசையைப்`பட்டத்துராணி’ பாடலிலும், பெர்சியன் இசையை `நினைத்தேன் வந்தாய் நூறு வயதிலும், ஜப்பான் இசையைப் `பன்சாயி காதல் பறவை’களிலும், லத்தீன் இசையை `யார் அந்த நிலவிலும்’, ரஷ்ய இசையைக் `கண் போன போக்கிலே கால் போகலாமா’விலும், மெக்சிகன் இசையை `முத்தமிடும் நேரமெப்போ’ பாடலிலும் கொண்டு வந்தவர் இவர்.
எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளிகிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்ற பல கர்நாடக இசைக் கலைஞர்கள் இவரது இசையில் பாடி இருக்கிறார்கள்! இந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்திய வரும் இவர் தான் நடிக்க வேண்டும் என்ற கனவோடு சினிமா துறையில் அடியெடுத்து வைத்த இவரது ஆசை ஆரம்பத்தில் நிறைவேறாமல் போனாலும் `கண்ணகி’ படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் `காதல்மன்னன்,’ `காதலா.... காதலா’ உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.
எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி பெயர் ஜானகி அம்மாள். இவர்களுக்கு கோபிகிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்களும், லதா மோகன், மது பிரசாத் மோகன்,சாந்தி குமார் என மூன்று மகள்களும் உள்ளனர். 1963ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி கவியரசு கண்ணதாசன் இயக்குனர் ஸ்ரீதர் ஜெமினி கணேசன் சந்திரபாபு "சித்ராலயா" கோபு முன்னிலையில் நடைபெற்ற ஒரு விழாவில் திரு சிவாஜி கணேசனால் இவருக்கும் இராமமூர்த்திக்கும் மெல்லிசை மன்னர்கள்
என்று பட்டம் வழங்கப்பட்டது.
கலைமாமணி, ஃபிலிம் ஃபேர், போன்ற பல விருதுகள் பெற்றுள்ள இவருக்கு தேசிய விருதோ, பத்மஸ்ரீ போன்ற இந்திய அரசின் உயரிய விருதோ இதுவரை கொடுக்கப்படாதது குறித்து விஸ்வநாதன் ஒரு போதும் வருத்தப்பட்டதில்லை என்றாலும் தமிழ் இசை ரசிகர்களைப் பொறுத்தவரை அது இன்றுவரை பெரிய ஏமாற்றம்தான்.
இந்த விருதுகளை விட பெரிய விருதாக இவர் நினைப்பது எல்லா தமிழ் நெஞ்சங்களிலும் வாழ்வதைத்தான். அந்த இடம் இவரைப் பொறுத்தவரை நிரந்தரமானது என்பதிலும் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் அந்த இடத்திற்கு அவர்களால் சொந்தம் கொண்டாட முடியாது என்பதும் நிஜம்.
'அழகு ஆயிரம் உலகம் முழுவதும்'
http://blog-assets.spuul.com/wp-cont...Paravaigal.jpg
வாசுதேவன் சாரும், யுகேஷ் சாரும் ஹிந்துவில் வந்த 'உல்லாசப் பறவைகள்' படப் பாடல்கள் பற்றிய பதிவை அளித்திருந்தார்கள். அதைப் படித்ததிலிருந்து 'உல்லாசப் பறவைக'ளின் மிக மிகச் சிறந்த பாடலான,
'அழகு ஆயிரம் உலகம் முழுவதும்'
பாடலே எண்ணம் முழுதும் ஓடிக் கொண்டிருக்கிறது. 'மெல்லிசை மன்னரி'ன் இழப்பு சோகமே தற்காலிகமாக அதைக் கொஞ்சம் விரட்டியது.
முதலில் அந்த அருமையான கட்டுரையைப் பதித்த இரு நண்பர்களுக்கும் நன்றி.
பிறகு அந்தக் கட்டுரையை எழுதின ரசனையாளருக்கு என் மனமுவந்த பாராட்டுக்கள்.
'உல்லாசப் பறவைகளி'ன் பாடல்கள் அனைத்தையும் ரத்தினச் சுருக்கமாக அந்த விமர்சகர் எழுதியிருந்தாலும் குறிப்பிட்ட 'அழகு ஆயிரம்' பாடலுக்கு அவர் எழுதியிருந்த ஒரு சில வரிகள் அருமையிலும் அருமை. மிக ரசனையாக ஓரிரு வரிகளில் அந்தப் பாடலின் மகத்துவத்தை அவர் உணர்த்தியிருந்தார்.
இந்தப் பாடல் அன்று முதல் இன்று வரை என்னைப் பைத்தியமாகவே ஆக்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடலைப் பற்றி நான் எண்ணாத நாளே இல்லை எனலாம்.
இசைக் கருவிகளின் ஆதிக்கம் நிறைந்த ஒரு பாடல். நோட்ஸ் எல்லாம் வினாடிக்கு வினாடி திகைக்க வைக்கும். அதுவும் ராஜா கிராமப் பின்னணியிலிருந்து மாறுபட்டு வெஸ்டர்ன் இசைக்கு வந்த ஆரம்ப காலத் துவக்கம்தான் அது. ஆனால் ராஜா எல்லாவற்றிலும் கரை கண்ட பிறகு கூட இந்த ஒரு பாடலுக்கு கொடுத்த இசை போல வேறு படத்தில் கொடுக்கவில்லை என்பது தனிப்பட்ட்ட என் தாழ்மையான கருத்து. இதை விட பிரம்மாண்டங்களை ராஜா தந்திருந்தாலும் இந்தப் பாடலின் ஒவ்வொரு வினாடி இசையும் தேவ ரகசியம் போல பல இசை விஷயங்களை உள்ளடக்கியது.
இந்தப் பாடலின் ஆரம்ப வினாடியே அப்படியே நம் உயிர் அணுக்களில் ஊடுருவி உடல் சில்லிட ஆரம்பித்து விடும். கட்டுரையாளர் மிக அழகாகக் குறிப்பிட்டிருந்தார் முகப்பு இசையிலேயே ஜாலங்களை நிகழ்த்தியிருப்பார் இளையராஜா என்று. எவ்வளவு உண்மை!
'உய்ய உய்ய உய்ய'...என்று சைரன் ஒலி போல இசை அஸெண்டிங்காகத் தொடங்கி அப்படியே அதனுடன் இணையும் பியானோவின் இசை (டங்டங்டங்டங்டங்... டங்டங்டங்டங்டங்) அந்தப் பியானோவின் இசைக்குப் பின்னால் மெதுவாகத் தட்டப்படும் டிரம் ஒலி, இவை எல்லாம் மிகச் சரியாக ஒன்றாகக் கலந்து நம் உடலோடு கலக்கும் போது அப்படியே பாடலின் டியூன் கிடாரில் மென்மையாக வந்து மிருதுவாக நம் முன்னாடி விழும். அதையே ஒரு ஆண்குரல் 'ததததாததா.... ததததாததா' ஹம்மிங் செய்யும் போது நம் மனம் இறக்கை கட்ட ஆரம்பித்து விடும். அப்படியே வயலின்களின் மொத்த ஓசையும் கடல் அலை போல ஒன்று போல் எழுந்து ஆர்ப்பரித்து அடங்கும்! அந்த அலை அடங்கவும் அதிலிருந்து ஜானுவின் குரல் அம்சமாக எழும்பவும் திரும்பவும் சுகம் சுகந்தத் தென்றலாய் பரவும்.
ஜானகி எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத பாடகி. ஆனால் இந்த ஒரு பாடலில் என் எண்ணத்தை சுக்கு நூறாக்கினார் அவர். இந்த ஒரு பாடல் போதும். 'சிங்கார வேலேனே தேவா'வில் சொக்கிப் போனவர்கள் ஏராளம். ராஜாவின் ஏகப்பட்ட பாடல்கள் ஜானகியிடம் போக, பிடிக்கிறதோ இல்லையோ ஜானகி சூப்பர் என்று ஒட்டு மொத்த தமிழகமும் ஓலமிட்டது..
ஊர் விட்டு ஊர் செல்லும் தனியார் பஸ்களில் ஜானகியின் முக்கலும் முனகலும் 5.1 ஸ்பீக்கர்களில் பஸ்சின் எஞ்சின் இரைச்சலையும் மீறி அலறியது.
ஆனால் என்வரையில் இந்த ஒரு பாடலுக்காகவே ஜானகி என்னுள் சமரசமானார். மாறாக என்னை மண்டியிடவும் வைத்தார் என்று ஒத்துக் கொள்ள எனக்கு வெட்கம் இல்லை. அந்த அளவிற்கு தன்னுடைய குரல் ஜாலத்தால் செயற்கைத்தனம் சிறிதும் இல்லாமல் வெகு அமர்க்களமாக இப்பாடலின் மூலம் மனதில் நுழைந்து வெளியே கிளம்பாமல் அங்கேயே குடிகொண்டு விட்டார். 'ஒ மாம மியா மாம மியா’ என்று அவர் பாடும் அழகை வர்ணிக்க எங்கு சென்று வார்த்தைகளைத் தேடுவது? அவர் குரலோடு சேர்ந்து பின்னால் 'மாம மி' என்று குரல்கள் ஒலித்து 'டக்'கென்று நின்றுவிடும் விந்தைகளை ராஜா தவிர வேறு யார் செய்து விட முடியும்?
'இறைவனின் திருக்கரம்.... எழுதிய ஓவியம்' என்று ஜானகி ஏறி ஏறி இறங்குவார். 'மாம மியா மாம மியா மாம மியா ...மா' என்று 'மா' என்ற ஒற்றை எழுத்துக்கு முடியும் போது அந்த எழுத்திற்கு 'மா'மரியாதை கிடைக்கும். பின்னணி கோரஸ் அற்புதமாக ஜானகியுடன் மேட்ச் ஆகும்.
இளையராஜாவின் திருக்கரம் எழுதிய இசை ஓவியங்கள் ஆயிரம் ஆயிரம் இருக்க இந்தப் பாடல் தனி 'மாம மியா'தான். அடுத்தடுத்து வித விதமான ஒலிகள் பின்னணிகள் அந்த சிறிய இடைவெளிக்குள் இந்திர ஜாலங்கள் புரிய ('கூக்கூக்கூ... கூக்கூக்கூ' என்ற இருமுறை ஒலிக்கும் அந்த புல்லாங்குழல் பின்னணி உட்பட) சற்றே பெண்மைத் தன்மை விடுத்து, குரலைத் தடிமனாக்கி, ஜானகி லேசான ஆண் குரலின் ரேஞ்சில் 'பா...பபபபப்பா' என்று பாடத் துவங்கும் அழகு பரவசமல்லாமல் வேறு என்ன? 'பா...பபபபப்பா' வுக்குப் பின்னால் அதனுடன் சேர்ந்து ஒலிக்கும் இசை சித்து வேலைகள் பார்த்து பார்த்து ராஜாவால் செதுக்கப்பட்டிருக்கும். அதற்குப் பிறகு மெல்லிய பியானோவின் ஒலி மட்டுமே இசைக்கப்பட்டிருக்கும்.
'ஹே......... மனம் போல நாளும்
மகிழ்ந்தாட வேண்டும்
ஒன்றாக நானும் நீயும்'
'ஹே.........' என்பதை மெதுவாக ஆரம்பித்து அம்சமாக உச்சத்துக்கு கொண்டு வருவார் ஜானகி. குரலில் லேசான நடுக்கத்தை அழகாகக் காட்டுவார். பின்னால் ராஜாவின் வான வேடிக்கைகளை கவனிப்பதா.... ஜானகியின் ஜாலங்களைக் கவனிப்பதா என்று மனம் குழப்பமடையும். இன்பத்தை ஒரு சேர அனுபவிப்பது எப்படி என்று எங்காவது கற்றுக்கொண்டுதான் நாம் வரவேண்டும். எவ்வளவு துன்பத்தை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்ளலாம்.... இந்தப் பாடலின் இனபத்தை தாங்கவே முடியாது போல் தோன்றும்
'இளமையின் சிலிர்ப்புகள்...புதுமையின் அழைப்புகள் எங்கும் 'மாம மியா மாம மியா' என்று மீண்டும் நம் மீது தேன் கொட்டும்.
http://i60.tinypic.com/wrkxf4.jpg
அடுத்த சரணம் தொடங்குமுன் ராஜா புறாக்கள் பறந்து போவதற்கான சப்தம் ஒன்று தருவார். அவ்வளவு அம்சமாக இருக்கும் 'டர டர டர டர டங்' என்பது போல். அப்படியே அதனுடன் சேர்ந்து மிக அழகான கிடார் பிட் ஒன்று அடுத்து வரும். பின் அதனுடன் சேர்ந்து பின்னால் வயலின் விளையாடத் தொடங்கும். வயலினும், பியானோவும் மாறி மாறி மார் தட்டும்.
முதல் சரணத்தில் 'ஹே' என்று தொடங்கியவர் இப்போது 'ஆ' என்று ஆரம்பித்து ஆனந்தப்படுத்துவார்.
ஆ...மழைக்காலம் மாறும்
வசந்தங்கள் தோன்றும்
உல்லாசம் வாழ்வில் சேரும்
திரும்ப அதை எடுக்கும் போது ஜானகி பழையபடி 'ஹே'... என்று மாற்றி தொடருவார்.
ஹே....மழைக்காலம் மாறும்
வசந்தங்கள் தோன்றும்
உல்லாசம் வாழ்வில் சேரும்
'மாலையே இந்த மாலை... வேளையே நல்ல வேளை...இனியது கனவுகள்... மயங்கிய நினைவுகள் எங்கும்
மாம மியா மாம மியா'
அதே முதல் சரணத்தின் இனிமை தொடரும்.
'லலலலாலலா... லலலலாலலா' என்று அற்புதமாகப் பாடலை முடிப்பார் ஜானகி.
உணர்வு சம்பந்தப்பட்ட சில பாடல்கள், சோகப் பாடல்கள் என்றெல்லாம் நம் நாடி நரம்புகளை அசைத்துப் பார்த்து நம்மையறியாமல் நம் கண்களில் நீர் துளிர்க்கச் செய்யும் பாடல்கள் பல உண்டு. அந்தப் பாடலின் காட்சியோடு ஒன்றி விட்டால் இன்னும் நம் நிலைமை கவலைக்கிடம் ஆகும். (எனக்கு 'மெல்லிசை மன்னரி'ன் 'நேரான நெடுஞ்சாலை')
ஆனால் காதலன், காதலி இருவரும் வெளிநாடுகளில் சுற்றி ஆனந்தமாகத் திரியும் இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் உடல், உள்ளம் சிலிர்த்து கண்களில் ஓரம் நீர் தெறிக்கிறதே! இது என்ன மாயம்?!
இத்தனைக்கும் சந்தோஷமான பாடல். காட்சி அமைப்புகள் அப்படியே ஒன்றி விடவும் வைக்காது. கமல் ரதி ஓடல்கள், துரத்தல்கள், விளையாட்டுக்கள், பிளைட், ஸ்கேட்டிங், உயர்ந்த கட்டடங்கள், ஆயிரக்கணக்கான கார் பார்க்கிங், கார் லோட் எடுத்துச் செல்லும் கண்டெயினர் என்று ஜாலியான, வழக்கமான வெளிப்புறப் படப்பிடிப்புதான்.
ஆனால் நம் நரம்புகள் அனைத்தும் இளையராஜாவின் வாத்தியங்களால் மீட்டப்படுகிறதே! ஜானகியின் வளமான குரலினால் 'ஜாம் ஜாம்' என்று மனம் குதிக்கிறதே! கண்களில் பொழிவது ஆனந்தக் கண்ணீர்தான். சந்தேகம் இல்லை.
ராஜா! இந்த ஒரு பாடல் போதும் நீ என் நெஞ்சை விட்டு அக்லாதிருக்க.
ஜானகியம்மா! மனதை விட்டு போக மறுக்கிறீர்கள்.
ஒரு நாளோ... இரண்டு நாளோ... பாடல் கம்போஸ் முடித்துவிட்டு, பாடி விட்டுப் போய் விடுவது நீங்கள். ஆனால் இங்கு வாழ்நாள் முழுதும் இந்தப் பாடலை எண்ணி எண்ணி வியந்து போவது நாங்களா? அந்த இனிமையிலே மூழ்கி எங்களைத் தொலைத்துக் கொள்வதும் நாங்களா?
இது நியாயமா?
http://i.ytimg.com/vi/Ga5WH7_hEZE/hqdefault.jpg
அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
ஒ..மாமமியா மாமமியா
இறைவனின் திருக்கரம்
எழுதிய ஓவியம்
மாமமியா மாமமியா மாமமிய..மா
அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
பா...பபபபப்பா....பபபபப்பா...பபபப்பா....பபபப்ப ா
ஹே...மனம் போல நாளும்
மகிழ்ந்தாட வேண்டும்
ஒன்றாக நானும் நீயும்
ஹே...மனம் போல நாளும்
மகிழ்ந்தாட வேண்டும்
ஒன்றாக நானும் நீயும்
சோலையில் எங்கும் காற்று
காற்றிலே எங்கும் வாசம்
இளமையின் சிலிர்ப்புகள்
புதுமையின் அழைப்புகள் எங்கும்
மாமமியா மாமமியா
அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
ஒ..மாமமியா மாமமியா
இறைவனின் திருக்கரம் எழுதிய ஓவியம்
மாம மியா மாம மியா மாமமியா மா
ஆ....மழைக்காலம் மாறும்
வசந்தங்கள் தோன்றும்
உல்லாசம் வாழ்வில் சேரும்
ஹே......மழைக்காலம் மாறும்
வசந்தங்கள் தோன்றும்
உல்லாசம் வாழ்வில் சேரும்
மாலையே இன்ப மாலை
வேளையே நல்ல வேளை
இனியது கனவுகள்
மயங்கிய நினைவுகள் எங்கும்
மாமமியா மாமமியா
அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
ஒ..மாமமியா மாமமியா
இறைவனின் திருக்கரம்
எழுதிய ஓவியம்
மாமமியா மாமமியா மாமமியா மா
அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
லலலலாலலா..லலலலாலலா
https://youtu.be/DN9GdmNjVbc
பியானோவில் இந்தப் பாடல் ஒலிக்கப்படும் அற்புதத்தை போனஸ் பதிவாகப் பெறுங்கள். மிஸ் பண்ணி விடாதீர்கள்.
https://youtu.be/7jqOhmf4d1M
வாசு , ஒரு இனிப்பை தந்து சுவைத்து முடிக்கும் முன் , இன்னொமொரு விருந்து - உங்கள் தீவிர ரசிகர்களான நாங்கள் எல்லோரும் இனி இன்சுலின் Dependents தான் . மிகவும் அழுக்கான துணிகளைக் கூட சற்றே சிரமம் எடுத்து அலசி விடலாம் - ஆனால் , படத்தயாரிப்பளர்களுக்கே தெரியாத அவர்களின் படங்களை , அதில் வரும் பாடல்களை தேடிக் கொண்டுவந்து , தீவிரமாக அலசி , நாங்கள் பார்க்காத கோணங்களில் விவரித்து , சரளா , குசல குமாரி போன்றவர்களை வாழவைக்கும் உங்கள் பதிவுகளை இன்னும் சரியாக பாராட்ட வேண்டுமென்றால் இந்த ஒரு பிறவி எங்களுக்கு போறாது . உங்களிடம் இருந்து இன்னும் நாங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் நபர்கள் :
1. அங்க முத்து
2. அங்குச பிரகதாம்பாள் - 1951 இல் வந்த மின்னல் கொடியில் கதாநாயகிக்கு சித்தியாக நடித்தவள் .
3. ஸ்வப்பன சுந்தரி
சும்மா ஒரு நகைச்சுவைக்காக சொன்னேன் ... தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் - உங்கள் பதிவுகள் உண்மையில் MSV யின் இழப்பிற்கு , மனத்தின் வேதனைக்கு சற்றே ஆறுதலாக உள்ளன . தொடருங்கள் ---
கருவின் கரு - 191
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
மகனே! குழந்தைப் பருவத்தில் உன்னை மீட்டெடுக்க வழியின்றி அறுவை சிகிச்சைக்கு முதன் முதலாக
நகையை விற்றேன்..!
முதல் வகுப்பிலேயே உன்னை முதலிடத்தில் உள்ள பள்ளியில் சேர்க்க நன்கொடை கட்டமுடியாமல்
நிலத்தை விற்றேன்..!
அடுத்தடுத்த வகுப்புகளுக்கு ஆடுகளை விற்றேன்..!
மேல்நிலை வகுப்புகளுக்கு மாடுகளை விற்றேன்..!
சுற்றுலா செலவுக்கு சில சமயம் நான்
சுற்றியிருந்த பொருளை விற்றேன்..!
பயணச் செலவுக்கு பல சமயம் என்
பசியை விற்றேன்..!
தேர்வு நாட்களில் உனக்கு தேநீர் கொடுக்கவே என்
தூக்கத்தை விற்றேன்..!
கடைசியில் கல்லூரி படிப்புக்காக
கட்டிய வீட்டையும் விற்றேன்..!
படித்தாய்.. உயர்ந்தாய்.. வளர்ந்தாய்
வாங்கினாய் மீண்டும் எல்லாவற்றையும்..!
இன்று நீ இருப்பதோ மூன்றடுக்கு இல்லத்தில்
நானிருப்பதோ முதியோர் இல்லத்தில்..!
எல்லாம் விற்றும் என்னிடம் இருந்தது இதயம்
எல்லாம் வாங்கியும் உன்னிடம் காணாமல் போனது .
உன் இதயம்
https://www.youtube.com/watch?v=vAoUr0p094g
கருவின் கரு - 192
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
எல்லா அப்பாக்களுமே ராஜாவாக இருப்பதில்லை - ஆனால் எல்லா பிள்ளைகளுமே இளவரசர்களாகவும் , இளவரிசிகளாகவுமே வளர்க்கப்படுகிறார்கள் ----------
https://www.youtube.com/watch?v=7qqKkfyhvAw
கருவின் கரு - 193
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
தந்தையை தெய்வமாக மகன் கருதும் பருவம்
கருவுற்ற மான் தன் மகவை ஈயும் ஒரு நிலை..
அது ஒரு அடர்ந்த புல் வெளியை கண்டது,
அதன் அருகே ஒரு பொங்கும் ஆறு.
இதுவே சரியான இடம் என்று அது சென்றது அங்கு.
அப்போது கருமேகங்ள் சூழ்ந்தன.
மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன.
மான் தன் இடப்பக்கம் பார்த்தது.. அங்கே ஒரு வேடன் தன் அம்பை மானை நோக்கி குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்.
மானின் வலப்பக்கமோ பசியுடனான ஒரு புலி மானை நோக்கி வந்து கொண்டிருந்தது.
ஒரு கருவுற்ற மான் பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது.மேலும் காட்டு தீயும் எரிய ஆரம்பித்து விட்டது.
என்ன நடக்கும்.?
மான் பிழைக்குமா?
மகவை ஈனுமா?
மகவும் பிழைக்குமா?
இல்லை காட்டு தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?
வேடனின் அம்புக்கு இரையாகுமா?
புலியின் பசிக்கு புசியாகுமா?
மான், தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறமும், மற்ற இருவரும் எதிர் புறமும்..
மான் என்ன செய்யும்?
மான் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈவதிலேயே செலுத்தியது.. ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல் அதன் கண்களில் இல்லை.
அப்போது நடந்த நிகழ்வுகள்.......
எங்கிருந்தோ அந்த பெண் மானின் துணையான ஒரு ஆண் மான் ஓடி வந்தது - குறிவைத்த வேடனனின் அம்புக்குத்தன்னை பலியாக்கிகொண்டது - பார்த்துக்கொண்டிருந்த புலி அங்கிருந்து ஓடிவிட்டது .. வேடனையும் மின்ன தாக்கியது - அவனால் அந்த இறந்து கிடந்த மானை எடுத்துச்செல்ல முடியாமல் அங்கிருந்து அகன்று விட்டான் .
தீவிர மழை காட்டு தீயை அழித்து விடுகிறது..
அந்த மான் அழகான குட்டி மானை பெற்றெடுக்கிறது. தந்தை செய்த ஒரு மாபெரும் தியாகம் அந்த பிறந்த மானுக்குத் தெரிய வாயிப்பில்லை . தன் குட்டி ஒரு புறம் , தன்னை காப்பாற்றிய கணவன் ஒரு புறம் --- பெண் மான் வாடியது .
நம் வாழ்விலும் இப்படிபட்ட சந்தர்ப்பங்கள் நிறைய வந்திருக்கிறது.. வரும்..அச்சூழ்லில் பல எதிர்மறை சிந்தனைகள் நம்மை சுற்றி நின்று அச்சுறுத்தும்.. சில எண்ணங்களின் பலம் நம்மை வீழ்த்தி அவை வெற்றி பெற்று நம்மை வெற்றிடமாக்கும்..
இம்மானிடம் இருந்து இந்த மானிடம் கற்றுக்கொள்வதென்ன ?
அந்த மானின் முக்கியத்துவம் முழுதும், மகவை பெற்றிடுவதிலேயே இருந்தது..மற்ற எதுவும் அதன் கை வசம் இல்லை..மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்து இருந்தால் மகவும் மானும் மடிந்து இருக்கும். தந்தை மான் தியாகம் செய்யாவிடில் எல்லாமே அங்கு அழிந்திருக்கும்
இப்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்..
எதில் என் கவனம்?
எதில் என் நம்பிக்கையும் முயற்ச்சியும் இருக்க வேண்டும்?
வாழ்வின் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி , மற்றதை தந்தைப்போல் இருக்கும் இறைவனிடம் விட்டு விடுங்கள்.. - நம் தந்தையைப்போல தியாக சிந்தனை நமக்கும் இருந்தால் நம்மால் பலருக்கு வாழ்வு கொடுக்க முடியும் .
https://youtu.be/UQVM44VTL9g
https://youtu.be/mV9faql_I6Y
கருவின் கரு - 194
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
தந்தையை தெய்வமாக மகன் கருதும் பருவம்
https://youtu.be/gjlCDqHd4FU
https://youtu.be/ScnsHvkTfIY
பெருந்தலைவரின் 113 ஆவது பிறந்த நாள்.
http://i.ytimg.com/vi/xU2iN2oMF0g/maxresdefault.jpg
https://youtu.be/psNH1lcohvk
திரு காமராஜரை நினைவில் கொண்டு வரும் நடிகர் திலகத்தின் என்றும் அழியாத பாடல்கள்
https://www.youtube.com/watch?v=_TQqVSwWd1A
https://www.youtube.com/watch?v=Xr4gvXXgCnU
வாசு சார்,
மோகம் அது முப்பதுநாள் பதிவை இன்றுதான் சார் பார்த்தேன். தாமதத்துக்கு மன்னிக்க வேண்டும். பணி நெருக்கடிகளோடு, மெல்லிசை மன்னர் மறைவால் நேற்றிலிருந்து மனசே சரியில்லை. நம்மால் நேசிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக வரமுடியாத இடத்துக்கு விடைபெற்றுச் செல்லும்போது இதுதான் இயற்கை நியதி என்று என்னதான் அறிவு விளக்கினாலும், உணர்வு அதை ஏற்க மறுக்கிறது. இதயம் கனக்கிறது.
மேலும், கல்தூண் பதிவை அன்றே பார்த்தாலும் பெரிதாக இருக்கிறதே பின்னர் படிப்போம் என்று தள்ளிப்போட்டேன். இன்றுதான் அதையும் படித்தேன். வெளுத்து வாங்கி விட்டீர்கள். (இன்னும் ராகவேந்திரா சாரின் அற்புதராஜ் படிக்கவில்லை. மன்னிக்கவும். விரைவில் படித்துவிடுவேன்) இனிமேல் அந்தப் பாடலையும் அதில் நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பையும் இதற்கு மேலும் யாரும் விவரிக்க முடியாது. உங்கள் உழைப்புக்கு தலைவணங்குகிறேன்.
கலைஞர் திரு.கருணாநிதி அவர்களை அரசியல் ரீதியாக நான் ஏற்கமாட்டேன். என்றாலும், நீங்கள் குறிப்பிட்டது போல அவர் மீது தனிப்பட்ட மரியாதை மற்றும் கலைத் திறமை மீது மதிப்பு எனக்கு உண்டு. உங்களுக்கும் உண்டு என்று கூறியதற்கு நன்றி. அதுதான் திறமை எங்கிருந்தாலும் மதிக்கும் தமிழனின் பண்பாடு.
பிள்ளையோ பிள்ளை படம் பார்த்து விட்டு, தனது ரிஸ்ட் வாட்சை முத்துவுக்கு பரிசளித்து, ‘‘தனக்கென்று தனி பாணியை முத்து உருவாக்கிக் கொள்ள வேண்டும்’’ என்று மக்கள் திலகம் சொன்னார். அதை திரு.முத்து அவர்கள் கேட்டிருந்தால் மேலும் சில ஆண்டுகள் தாக்குப்பிடித்திருப்பார். நல்ல குரல் வளம் கொண்டவர்.
மோகம் அது முப்பது நாள்... பாடலில் மக்கள் திலகத்தின் காப்பி சற்று தூக்கலாகவே இருக்கும். மிகவும் இனிமையான பாடலை பதிவிட்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி சார். இசையரசியுடன் மேட்ச் ஆகி பாடுவது அருமை. நம்மை மட்டுமல்ல, எல்லார் மனதையும் கொள்ளை கொண்ட பாடல்தான் இது.
//எது எப்படியோ எல்லாவற்றையும் மீறி இப்பாடல் என் மனதை எப்போதோ கொள்ளையடித்து விட்டது. எம்.ஜி.ஆர் அவர்கள் பாணியில் நடித்திருந்தாலும் மு.கமுத்துவும் இப்பாடலில் கவரவே செய்கிறார். அது ஏன் என்றும் புரியவில்லை. //
மக்கள் திலகம் பாணியில் நடித்ததுதான் கவர்வதற்கு காரணம். திரு.சத்யராஜ், திரு.ராமராஜன் ஆகியோருக்கெல்லாம் முன்பாகவே முதன் முதலில் மக்கள் திலகம் பாணியில் நடித்தவர் என்ற பெருமை பெற்றவர். ஓரிரண்டு படத்தோடு அதை விட்டிருந்தால் நிலைத்திருப்பார்.
நீங்கள் மேலே பதிவிட்டிருக்கும் திரு.முத்துவின் படம் சமையல்காரன் படத்தில் இடம் பெற்ற ‘நான் பாடிடும் கவிதையின் சந்தம்’ பாடலும் பாடகர் திலகத்தின் குரலில் அருமையான பாடல்தான். திரு.ராமராஜன் படங்கள் மாதிரி திரு.முத்து படங்களில் பாடல்கள் அமைந்துவிடும். அருமையான பாடலை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி சார்.
மங்கையரில் மகராணி, வெஜ்-நான் வெஜ் ஆகியவையும் சூப்பர். எல்லாருக்கும் வேலை இருக்கத்தான் செய்யும். அதையும் மீறி நேரம் ஒதுக்கி எல்லாரும் ரசிக்க அர்ப்பணிப்புடன் பதிவிடும் உங்கள் உழைப்பு பாராட்டத்தக்கது.
வேலை அதிகம் இருந்தாலும் இழுத்து வந்து விட்டீர்கள். அதுதான் உங்கள் திறமை. மீண்டும் நன்றி சார்.
ரவி சார்,
உங்கள் பாடல்களும் பொருத்தமான புராணக் கதைகளும் என்ன சொல்லி பாராட்டுவது? (மன்னிக்கவும். இன்னும் படிக்க வேண்டியது இருக்கிறது. அப்படி அள்ளி வழங்கியிருக்கிறீர்கள்) ஒன்று நிச்சயம் சார் . எல்லா பதிவுகளிலும் உங்கள் நல்ல உள்ளம் தெரிகிறது. ‘குட் மார்னிங்’ படங்களை எங்கிருந்து பிடிக்கிறீர்கள்? அட்டகாசம்.
திரு.ராஜேஷ், திரு.சிவாஜி செந்தில், திரு.குமார் சாரின் ஆவணப் பதிவுகள், திரு.யுகேஷ் பாபுவின் இணையத்திலிருந்து தேடி எடுத்த முத்தான பதிவுகள், திரு.ஆதிராமின் ஊக்கமூட்டும் பதிவுகள், திரு.ராஜ்ராஜ் சாரின் ஜூகல் பந்தி எல்லாமே அருமை.
முக்கியமாக, திரு.குமார் சாருக்கு திரு.ஆதிராமின் வாழ்த்தும் அதற்கு குமார் சாரின் நன்றியும் நான் ரசித்த பதிவுகள்.
கல்நாயக் எங்கே? கிருஷ்ணா சாரையும் ரொம்ப நாளா காணோமே?
நண்பர் திரு.சிவா அவர்கள் போட்டிருந்த பதிவு டெலிட் செய்யப்பட்டுள்ளது. மக்கள் திலகம், நடிகர் திலகம் திரிகளிலும் அப்படியே. திரு.சிவா அவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் கடுமையாக கருத்து கூறாதவர். என்ன பதிவு அது?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
எங்க ஊர் ராஜா
இடது கையைதூக்கி அப்படியே இடது கால் தொடையில் ஒருதட்டல்
வலது கையை தூக்கி இடது கையின் மேற்புறம் தட்டல்
வலது கையை தூக்கி இடது கையின் மேற்புறம் ஒரு தட்டல்
அப்புறம் வலது கை இடது நெஞ்சின் மேலும் இடது கை வலது நெஞ்சின் மேலும் ஒரு தட்டல்
மறுபடி வலது கை இடது கையை தட்டல் இடது கை வலது கை மேற்புறம் தட்டல்.
ஒவ்வொரு கையும் மாறிமாறி தட்டும் போது காமிராவலது இடது என்று மாறி மாறி படம் பிடித்திருக்கும்.இது என்ன பெரிய விசயம் என்று கேட்கலாம்.(Scene continuity )காட்சியின் தொடர்ச்சி க்காக இடத்தின் கோணங்கள் மாறாமல்படம் பிடிக்க வேண்டும்.அப்போதுதான் காட்சியின் தொடர்புகோர்வையாக இருக்கும்.கோணங்களில் மாறிமாறி படம் பிடிக்க வேண்டுமென்றால்காமிராவை வலது இடது என்று மாற்றி மாற்றி படம் பிடிக்க வேண்டும்.அப்போது நடிப்பவர் அதே இடத்தில் இருக்கும் நிலை மாறாமல்
அதற்குமுந்தைய கோணங்களில் சிறிதும் மாறாமல்நடித்தால் மட்டுமே அந்தக்காட்சி
சரியாக அமையும்.இப்போது அந்தக் காட்சியைப் பாருங்கள். அதன் சிறப்பு இன்னும் பல மடங்கு புரியும்.11 விநாடிகளுக்குள் இந்த அற்புதம் நடந்திருக்கும்.பின் இரு கைககளையும் சேர்த்து கை தட்டல் ஆரம்பமாகும்.அது படிப்படியாக உயர்ந்து உச்சத்தை அடையும்.இந்தக்காட்சியே ரசித்துப்பார்ப்பவர்களின் மனம் பிரமை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்.கைதட்டலின் முலம் உலகில் சரித்திரம் படைத்த படம் இது ஒன்றே.
அடுத்து கை தட்டுவதை தொடர்ந்து வேகமாக தட்டி பின் சட்டென்று நிறுத்தி கண்களை விரித்து ஒரு விரலை வாயில் வைத்து உஷ்ஷ்ஷ் என்று சொல்லும்போது
பிரமை நிலை விடுபட்டு மொத்த திரையரங்கமும் நிசப்தமாயிருக்கும்.இதற்கு மேல் ஒரு நடிப்பா?இப்படி ஒரு நடிகனா?இவருடைய ரசிகனல்லவா நாம்.நம்மை கர்வம் கொள்ள வைக்கும் நடிப்பு.இந்த மாதிரி நடிப்புகளை ஒருவன் பார்த்துக் கொண்டு வரும்போது அவனுடைய ரசனையின் ஈர்ப்பு (வெறி)
அதிகமாகிக் கொண்டேதானே இருக்கும்.
யாரை நம்பி நான் பொறந்தேன்போங்கடா போங்க-என்காலம் வெல்லும்
என்று மீசையைமுறுக்கும் அந்த ஸ்டைல்
தளர்ந்து போனவர்களுக்கும் புத்துணர்ச்சி
ஊட்டும்.
வென்ற பின்னேவாங்கடா வாங்கன்னு கையை மேலும் கீழும் ஆட்டும்அந்த ஸ்டைலுக்கு அரங்கங்கள் அதிரும்.
!குளத்திலே தண்ணியில்லேகொக்குமில்லே மீனுமில்லே
இரண்டு கைககளையும் முன்னால் நீட்டி வளைத்து வளைத்து ஆட்டியபடி அவர் நடக்கும் நடை நாட்டியத்திலே தேர்ச்சி பெற்று பல வருடங்கள் அனுபவங்கள் பெற்றிருந்தாலும் நடந்து காட்ட முடியாத நடை(பத்மாசு ப்ரமணியம்போன்றோர்பல சமயங்களில் கூறிய கருத்துக்களை நினைத்துப் பார்க்கவும்)
பெட்டியிலே பணமில்லேபெத்தபுள்ளே சொந்தமில்லே!...
பீரோவின் அருகில் வந்து பணத்தைக் குறிக்கும் அந்தக் விரல்களின் சைகை அபாரமாயிருக்கும்.அந்த விரல் வித்தை சாகசம் பாடல் வரிகள் இல்லாவிட்டாலும் அர்த்தத்தை விளங்க வைக்கும்.
தென்னையைப் பெத்தா இளநீருபிள்ளையைப் பெத்தா கண்ணீரு
அதுவரைஎவ்வளவு தன்னம்பிக்கை தைரியத்துடன் காட்டிக்கொண்டிருக்கும் அவரது முக பாவனைகள் சட்டென்று
சோக த்தையும் கலந்து காட்டும். வாழ்க்கையின் இழப்புகளை அந்த சோகத்தில் பிரதிபலித்திருப்பார்.
பெத்தவவன் மனமே பித்தம்மாபிள்ளை மனமே கல்லம்மா
இந்த வரிகளின் முடிவில் சுயமரியாதை தலைதூக்கும்படியும் சோகத்தை அலட்சியப்படுத்தும்படியும் படியான உடல் மொழிகளையும் முக பாவனைகளையும் வெளிப்படுத்தியிருப்பார்.
!பானையிலே சோறிருந்தாபூனைகளும் சொந்தமடாசோதனையை பங்கு வெச்சாசொந்தமில்லே பந்தமில்லே!...
இப்பொழுது தன்னம்பிக்கை சோகத்துடன் சிறிது வெறுப்பையும் கலந்து கதம்ப மாலையாகஉணர்ச்சிகளை
காட்டியிருயிருப்பார்.
நெஞ்சமிருக்கு துணிவாகநேரமிருக்கு தெளிவாக
இப்பொழுது வயதானால் ஏற்படும் தடுமாற்றத்தை மறைக்க முயற்சிப்பதையும்
தைரியத்தை இழக்கவில்லை என்பதையும்
கலந்து உணர்ச்சிகளைவெளிப்படுத்துவார்.
நினைத்தால் முடிப்பேன் சரியாகநீ யார் நான் யார் போடா போ
இயலாமையும் தள்ளாமையும் சேர்ந்து கொண்ட நிலைமையில் கொஞ்சம் விரக்தியும் அடைந்த நிலை.எங்கிருந்து அந்த வேகம் வந்தது ?உட்கார்ந்து கொண்டிருப்பவர் திடீரென்று எழுந்து நடந்து வருவது வெறி பிடித்த வேங்கை போல் இருக்கும்.
ஆடியிலே காத்தடிச்சாஐப்பசியில் மழைவரும்தேடிவரும் காலம் வந்தாசெல்வமெல்லாம் ஓடிவரும்!...
முடிவில்
வேட்டியை தூக்கிக் கட்டுவதும்
சென்று சென்று திரும்பி வருவதும்
என்று நடிப்பு ராஜாங்கம் செய்திருப்பார்.
வருக வருக அரிமா செந்தில் அவர்களே - இது உங்கள் முதல் பதிவு இங்கு என்று நினைக்கிறேன் - வாசு அவர்களின் பதிவுகள் அனைவரையும் இங்கு வரவழைக்கும் சக்தி வாய்ந்தது . உங்கள் கடினமான உழைப்பை இந்த மதுரகானத்திலும் பார்க்க எங்களுக்கு ஒரு வாயிப்பு கிடைப்பதற்கு மிகவும் பெருமை படுகிறோம் .
From Thulabharam (Tamil) (1969)
poonchittu kannangaL.....
http://www.youtube.com/watch?v=gOXox6BwOvw
From the Malayalam original Thulabharam(1968)
omanathinkalin onam........
http://www.youtube.com/watch?v=2rC0tU_R8pg
From the Telugu version Manushulu marali (1970)
paappayi...
http://www.youtube.com/watch?v=jBWEL20NPbo
From the Hindi version Samaj ko badal dalo(1970)
Taaron ki charon....
http://www.youtube.com/watch?v=OVzxbRuJUEM
taaron .... Duet
http://www.youtube.com/watch?v=qVPvAOsckXg
Thanks RD for the link to the Hindu article on Thulabharam. I have posted the video clips I found. I am sure there are other Malayalam movies remade in other languages. Time for you to enlighten us ! :)
Ankil ragam was remade in tamil & telugu
i guess the hindi version was the original not sure(nutan kishore kumar)
https://www.youtube.com/watch?v=P2F9GJzNm2g
tamil- madham oru poo malarum from neelamalargal
telugu - anuragaalu - jaabili velige
ரவி சார்,
மகனுக்காக எல்லாவற்றையும் இழந்த தந்தை , தாய் மானின் துணிவு, தந்தை மானின் உயிர்த் தியாகம், எல்லா அப்பாக்களுமே ராஜாவாக இருப்பதில்லை - ஆனால் எல்லா பிள்ளைகளுமே இளவரசர்களாகவும் , இளவரசிகளாகவுமே வளர்க்கப்படுகிறார்கள் என்று பதிவுகள் கலக்கல்.
இன்னும் 8 வந்தால் 200 ஐத் தொடுவீர்கள். என் முதல் வாழ்த்துக்கள் முன் கூட்டியே.
கலை சார்,
வருக. பதிவுகளைப் பொறுமையாகப் படித்து பின்னூட்டம் மற்றும் பாராட்டுக்கள் அளித்ததற்கு நன்றிகள். பதிவுகளிட்டு நாட்களான போதும் ஒன்று விடாமல் அதைப் படித்து பின்னூட்டம் அளிப்பதில் ஆதிராம் சார் போலவே தாங்களும் நிகரற்றவர்தான். அதற்காக என் மனமார்ந்த நன்றிகள்.
இன்னும் சில மு.க.முத்துவின் பாடல்கள் இருக்கின்றன. விரைவில் அதையும் அளிக்கிறேன். 'கல்தூண்' படப் பாடல் கதை சொல்லும் பாடல் ஆதலால் அதன் நீளம் அதிகம். கதை முழுவதையும், அத்தோடு சேர்ந்து வேலின் பெருமையையும் கூறும் பாடல். அதனால்தான் பதிவின் நீளம் அதிகம்.
வேலைப் பளுவிற்கு மத்தியிலும் நடுவே வந்து பதிவிட்டதற்கு நன்றிகள் சார்.
செந்தில்வேல் சார்,
மதுர கானத் திரிக்கு தங்களை அனைவரும் மனமகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். வருக12 வருக!.
அது போல 'எங்க ஊர் ராஜா' படத்தின் 'யாரை நம்பி நான் பொறந்தேன்' பாடலில் நடிகர் திலகத்தின் நடிப்பு அம்சங்களை பிட்டு பிட்டு வைத்து பிளந்து கட்டியதற்கு நன்றிகள். நடிகர் திலகம் திரியில் தங்களுடைய 'தியாகம்' பதிவையும் ரசித்துப் படித்தேன். நேற்று ராகவேந்திரன் சாரிடமும் இதுபற்றி பேசினேன்.
நடிகர் திலகத்தின் நடிப்பை அலசுவதற்கு ஒன்றன்பின் ஒருவராக தொடர்ந்து வருவது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. இது தங்களைப் போன்றவர்கள்ள இன்னும் தொடர வேண்டும். நல்ல பதிவிற்கு நன்றிகள். தொடர்ந்து பங்களியுங்கள்.
//விக்டரி மூவீஸ் பெத்த மனம் பித்து தந்த பிரமிப்பூட்டும் வெற்றியைத் தொடர்ந்து எஸ்.பி.முத்துராமன் புதிய வெற்றி இயக்குநராக அடையாளம் காணப்பட்டார். அந்த வெற்றியைத் தொடர்ந்து அதே விக்டரி மூவீஸ் அதே ஜெயாவைக் கதாநாயகியாக வைத்து தயாரித்து அதே ஆண்டில் செப்டம்பரிலேயே வெளியிட்ட படம் தான் தெய்வக் குழந்தைகள். இரண்டுமே மெல்லிசை மாமணி வி.குமாரின் இசை தான். இன்னும் சொல்லப் போனால் பாலச்சந்தரின் ஆஸ்தான இசையமைப்பாளரான வி.குமாரை விட்டு பாமா விஜயத்திற்கு எம்.எஸ்.வி.யிடம் சென்றார் கே.பி. இருந்தாலும் இந்த நினைத்தால் சிரிப்பு வரும் பாட்டில் வி.குமாரின் பாணியை நினைவு படுத்தும் வகையில் மெல்லிசை மன்னர் இசையமைத்திருப்பார். அதனால் இந்த இரு பாடல்களும் ஒரே சாயலில் இருக்கும். [இந்த இடத்தில் சாயல் எனக் குறிப்பிடுவது மெட்டை அல்ல, பாடலின் அமைப்பு, இசைக் கருவிகளின் பிரயோகம், தாளக்கட்டு மாறும் உத்தி போன்றவை]. தங்களின் அபார ஞாபகசக்திக்கு இது மிகச் சிறந்த உதாரணம் வாசு சார். வி.குமாரின் இசையைப் பொறுத்த வரையில் ஹம்மிங் மிகவும் அபூர்வமாகத் தான் ஒலிக்கும். அவருடைய உதவியாளர் குணசிங் தான் பெரும்பாலும் குரல் கொடுப்பார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். தாங்கள் இப்பாடலில் குறிப்பிடும் ஹம்மிங் அநகமாக குணசிங் அவர்களின் குரலாக இருக்கலாம். பல ஆண்டுகள் குமாரிடம் உதவியாளராக இருந்த குணசிங், சங்கு புஷ்பங்கள் படத்திற்கு தனியாக இசையமைத்தார். அப்படி யில்லாத பட்சத்தில் இந்தக் குரல் ஏ.வி.ரமணனுடையதாக இருக்கலாம். ஏனென்றால் குமார் இசையமைத்த சில படங்களில் அவர் ஹம்மிங் பாடியிருக்கிறார் எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.//
ராகவேந்திரன் சார்,
வெஜ் அண்ட் நான் வெஜ் பதிவுக்கு தங்களுடைய பின்னூட்டம் அம்சம். குமார் அவர்களின் இசை பற்றியும், குணசிங் பற்றிய அரிய தகவல்கள் தந்தும் பதிவை முழுமை பெறச் செய்து விட்டீர்கள். இதற்குத்தான் ரசிக வேந்தர் வேண்டும் என்பது. இந்த மாதிரி பதிவு சம்பந்தமான பின்னூட்டங்களே பெரு மகிழ்ச்சி அளிக்கின்றது. பார்த்தீர்களா? எவ்வளவு விஷயங்கள் தங்கள் மூலமாக இப்போது வெளிவருகின்றன!
அருமையான சப்போர்ட்டிற்கு நன்றிகள் சார்.
கருவின் கரு - 195:smile2::)
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
தந்தையை தெய்வமாக மகன் கருதும் பருவம்
கண்ணன் வாழ்ந்காலத்திலேயே கோபஸ்திரீகளிடத்தில் அதீத சாமா்த்தியம் இருந்திருக்கிறது. கண்ணனைப் பிடிக்கஒரு கோப ஸ்திரீ செய்த காாியம் அற்புதம்! உறியைத் தொட்டால் மேலே ஒரே மணி இருக்கும். அது கண,கண என்று அடிக்கும். வெண்ணெய் எடுக்க வேண்டும் என்று இல்லை. உாியைத் தொட்டாலே மணி அடிக்கும் .
குழந்தை கண்ணனுக்கு இந்த மணி இருப்பது தொியாமல் ஒரு நாள் சாயங்கால வேளை இந்த வீட்டிற்குச் சென்றான் . எல்லோரும் ஜாக்கிரதையாக இருந்ததால் வெண்ணெய் கிடைக்கவேயில்லை. ஒவ்வொரு வீடாகச் சுற்றி கடைசியில் இந்த வீட்டிற்கு பசியோடு வருகிறான் . உறியைப் பாா்த்தவுடன் அதீத சந்தோஷம்.
உறியைத்தொட்டான் ; தொட்டவுடன் மணி அடித்தது. நடுங்கிப் போய் விட்டான் குழந்தை கண்ணன் . இந்த குழந்தைக்கு த் தொிந்தது ஒரே வித்தை. அது பண்ணுவதும்,நமக்குச் சொல்லிக் கொடுப்பதும் அந்த வித்தைதான். என்ன அது? சரணாகதி. அதைத் தவிர வேறு எதுவும் தொியாது. மணியைப் பாா்த்து சரணாகதி பண்ணியது.
இப்படி அடிக்கிறாயே! நான் மாட்டிக் கொண்டால் அம்மா என் முதுகை சுத்தம் பண்ணிவிடுவாளே! உதை விழுமே! காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை.கொஞ்சம் அடிக்காமல் இரேன்! என்று கைகூப்பியது.
மணி உடனே'அடியேன்!அடியேன்!' என்று தாஸனான நான் அடிக்க மாட்டேன் என்றது. மிகவும் சந்தோஷத்தோடு குழந்தை பானைக்குள் கையை விட்டு வெண்ணெயை எடுத்து வாயில் போட்டுக் கொண்ட போது 'கண கண' வென்று மணி அடித்தது .
மணியே! அடிக்க மாட்டேன் என்றாயே! இப்படிப் பண்ணுகிறாயே..இதுதானா தர்மம் ? நீ சொன்னதால்தானே வெண்ணெயை வாயில் போட்டுக் கொள்ளப் போனேன். இப்படிச் செய்வது நியாயமா! என்று கேட்டது குழந்தை.
மணியின் மணியான வாா்த்தை இது. " ஏ க்ருஷ்ணா! நாராயணா! உனக்கு நிவேதனம் ஆகும் போது நான் பக்கத்தில் இருந்துகொண்டு அடிக்காமல் இருந்தால் எனக்கு ஏது பிரயோஜனம்? பகவானுக்கு நிவேதனம் ஆகும்போது மணியடிக்காமல் இருக்கலாமா...?அதனால் அடித்தேன் என்றது.
உனக்கு நிவேதனம் ஆனதால் மணியடித்தேன். இல்லையென்றால் அடித்திருப்பேனா? இனிமேல் அடிக்கமாட்டேன்.நீ சாப்பிடு என்று மணி சொன்னது. தா்மத்தைப் பற்றி பேசினால் கண்ணன் வாதாட மாட்டான். ஒத்துக் கொண்டு விடுவான்.அப்படி மணி பேசியதை ஒத்துக்கொண்டு போய் விட்டான் பரமாத்மா. உலகத்திற்கே தந்தையான அந்த பரம்பொருளே தர்மத்தைப்பற்றி பேசினால் அமோதித்து செல்லும் போது நடமாடும் தெய்வமான நம் தந்தையிடம் என் வாதிட வேண்டும் ? அவரின் தர்ம சிந்தனைகளுக்கு நாம் ஏன் ஒரு அணை போடவேண்டும் ? கண்ணனுக்கு ஒரு மணி போல , நாமும் நம் தந்தையை ஆராதிப்போம் - முதியோர் இல்லம் தேவை இல்லை - நம் மனக்கதவுகள் மணியோசையை எழுப்பும் போது !!
https://www.youtube.com/watch?v=15qP6ymBr3Q
கருவின் கரு - 196
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
நல்ல மனைவி , நல்ல பிள்ளை , நல்ல குடும்பம் தெய்வீகம்
ஆபத்துக்கு உதவாத
நண்பன்
அரும்பசிக்கு உதவாத
அன்னம்
தரித்திரம் அறியாத
பெண்டீர்
தாகத்தை தீர்க்காத
தண்ணீர்
கோபத்தை அடக்காத
மனிதன்
குருமொழி கேளாத
சீடன்
பெற்றோருக்கு அடங்காத
பிள்ளை
எதற்கும் பயன் இல்லை
இவ்வேழும் மெய்யே
==========
நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம் தெய்வீகம்
அது தெய்வீகம் -
நல்ல மனைவி நல்ல பிள்ளை தன்னை இழந்து கடமை மறந்து தவறும் இல்லம் அலங்கோலம் -
நல்ல மனைவி நல்ல பிள்ளை கள்ளிப்பூவில் முல்லை மணத்தைக்காணத் திரியும் ஒரு பிள்ளை
கானல் நீரில் தாகம் தீர ஓடித் திரியும் ஒரு பிள்ளை
உள்ளவரையில் ஆடிப்பார்த்து உறங்கத்துடிக்கும் ஒரு பிள்ளை
உறவை மறந்து உரிமை மறந்து பிள்ளை போலே ஒரு அன்னை பிள்ளை போலே ஒரு அன்னை - நல்ல மனைவி நல்ல பிள்ளை,,!
https://www.youtube.com/watch?v=ETpBKjWaaT4
கருவின் கரு - 197
பாகம் 2 - தந்தை
நல்லதொரு குடும்பம் என்றுமே ஒரு பல்கலை கழகம்
https://www.youtube.com/watch?v=0n2pYvN95kM
கருவின் கரு - 198
பாகம் 2 - தந்தை:)
நல்ல குழந்தைகள் , பெற்றோர்களை மதிக்கும் பிள்ளைகள் ,, அன்னை தந்தையை தன்னுடனே வைத்துக்கொள்ளும் மகன் இவர்கள் ஒன்றாக இருக்கும் வீட்டில் ஆனந்தம் என்றுமே விளையாடும் , குடி கொண்டிருக்கும் ...
https://www.youtube.com/watch?v=LcYi...ature=youtu.be