இந்த வரிகளைப் படிக்கும்போதே மனது வலிக்கிறது.
Printable View
இனிய நண்பர் திரு பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு
உங்களுக்கு திரு. கலைவேந்தன் அவர்கள் விடுக்கப்பட்டிருக்கும் கௌரவ விண்ணப்ப சவால் மடலை பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
திரு கோபால் அவர்கள் உரைத்துள்ள பதிவில் வருடவாரியாக அதிக வசூல் படங்களை எழுதிய நிலையில், எந்தெந்த வருடத்தில் தவறு உள்ளதோ...அந்த தவறை மட்டும் சரி செய்து (மீதம் சரியே என்ற தோரணையில்) தங்கள் பதிவு செய்துள்ளது பார்த்தோம்.
இருந்தாலும், திரு கலைவேந்தன் அவர்கள் பதிவில் தங்களை திரியில் சிவந்தமண் நம்நாடு வசூல் விபரங்களை பற்றிய உண்மையை பதிவு செய்ய சொல்லி அறைகூவல் விடுத்துள்ளார் !
அந்த அறைகூவல் உண்மையான அறைகூவலா, அரை கூவலா...அல்லது பொருள் இல்லாத வெறும் கூவலா என்பது உங்களுடைய பதிலை பொருத்துதான் அமையும்.
இது எங்களுக்கோ...உங்களுக்கோ ...அவர்களுக்கோ இடப்போகும் பதிவு அல்ல. நடிகர் திலகம் அவர்களின் கௌரவமும் இதில் அடங்கியுள்ள விஷயம் காரணம் ...
முதலில் திரு ஸ்ரீதர் அவர்கள் சிவந்தமண், தர்தி, வைர நெஞ்சம், கேகரி சால் திரைப்படங்கள் தயாரிப்பு மூலம் பெரும் பொருள் நஷ்டம் அடைந்தார் என்றும் ....(பிறகு 4 வருடம் நஷ்டத்தை பொறுத்துக்கொண்டு இருந்தபிறகு )
ஹிந்தி நடிகர் அறிவுரையின் பேரில் மக்கள் திலகம் அவர்களை சந்தித்து தன்னுடைய நிலையை உரைத்து, உடனே மக்கள் திலகம் அவர்கள் கால்ஷீட்டில் உரிமைக்குரல் எடுத்து தனது 4 படங்கள் மற்றும் காற்றினிலே வரும் கீதம்...ஒ மஞ்சு போன்ற படங்களால் வந்த நஷ்தம் ஆகமொத்தம் 6 - 8 படங்களால் வந்த நஷ்டத்தை என்ற பொருள் பதியும் வாக்கியத்துடன் ....உரிமைக்குரல் என்ற ஒரே மக்கள் திலகம் படத்தால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டார் (( உரிமைக்குரல் அவருக்கு உதவியதா இல்லையா என்பது இங்கு பிரச்சனையை அல்ல ! )என்பதை பொய்யான ஒரு இணைப்பை கொண்ட இணையதள இணைப்பை திரு கலைவேந்தன் பதிவிட்டு அதனை பிடித்தபடியே பதிவு செய்தது மையம் படிக்கும் நடுநிலையாளர்கள் உட்பட தாங்களும் அறிததே.
திரும்பி பார்க்கிறேன் என்று திரு ஸ்ரீதர் எழுதிய புத்தகத்தின் நகலை தாங்கள் தயவு கூர்ந்து உண்மையை ஆணித்தரமாக அறைந்து பதிவேற்ற திரு ராமஜயம் அவர்கள் மூலம் திருச்சி பாஸ்கர் அவர்களுக்கு அளித்து பேர்உதவி செய்துள்ளீர்கள் ! அதன்மூலம் ஸ்ரீதர் சிவந்தமண், வைர நெஞ்சம் (தமிழ் மற்றும் ஹிந்தி வடிவங்கள் ) மூலம் நஷ்டம் அடையவில்லை என்ற உண்மை வெளிக்கொண்டுவந்து , சிவந்தமண் திரைப்படம் ஓஹோ என்று ஓடியது என்ற உண்மையும் வெளிக்கொண்டு வர உதவியது !
.....திரு கலைவேந்தன் அவர்கள் பதிவு செய்த இணைப்பு பொய் தகவலை கொண்டது என்பது உங்கள் ஆதாரத்தின் உதவியால் மட்டுமே மக்களுக்கு புரியவைத்து தெளிவுபடுத்தப்பட்டது !
இப்போது அவர் முன்பு கூறியதை கூறவில்லை என்றும் ....வசூல் பொருத்தவரை சிவந்தமண் திரைப்படத்தை விட நம்நாடு அதிகம் என்றும் மட்டுமே கூறியதாக ஒரு அந்தர் பல்டி அடித்துள்ளார் ! அடித்ததோடு மட்டும் அல்லாமல் உங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அதாவது நீங்கள் திரு எஸ்வி அவர்களுக்கு கூறிய தகவலை PM முறையில் திரு ஈஸ்வீயிடம் கேட்டு அறிந்துகொண்டதாக பதிவு செய்துள்ளார்.
திரு எஸ்வி அவர்களும் அவருடைய முந்தைய பதிவில் உங்கள் பெயரை குறிப்பிடாமல் ...நண்பருக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை என்று மிக சாதுர்யமாக பெயரை கூறாமல் பதிவு செய்துள்ளார். நண்பர் என்று அவர் உரைத்தது உங்களையா ...அல்லது திருச்சி பாஸ்கரா....அல்லது அதிரம் அவர்களா...அல்லது என்னையா என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம் !
ஆகவே தாங்கள் தயவு கூர்ந்து இதற்க்கு உண்மையை தெரிவிக்கவேண்டும். இனியும் மௌனம் காப்பது முறையோ அல்லது அறமோ அல்ல !
உண்மை தகவலை வெளியிட உங்கள் மனதில் வேறு ஏதாவது எண்ணங்கள் தடுக்கிறது என்றால் அதனை இங்கே " எனக்கு இதில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை" என்றாவது தெரிவிக்கவும் ! இப்படி எதுவுமே பேசாமல் இருந்தால் திரு கலைவேந்தனும் மற்றவர்களும் மௌனம் சம்மதம் , அங்கீகரிப்பு என்று மீண்டும் எழுதி பொய்யை உண்மையாக்கும் அபாயம் உள்ளது ! இது நடிகர் திலகத்திற்கு இழைக்கப்படும் அநீதி என்பதை மட்டும் தயவு செய்து புரிந்துகொண்டு உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை சற்று தள்ளிவைத்து உண்மை தகவல் என்னதோ அதனை எழுதவும் !
இதற்க்கு மேல் உங்களுக்கு விளக்கம் சொல்ல தேவை இல்லை என்று நினைக்கிறன் !
Regards
RKS
Yesterday I had a chat with Mr Pammalar and he vehemently denied the so called movie surpassed the
collection of Sivandha Mann. It is a utter lie of these people doing it for years to defame NT's Film.
NT - the real Vasool Chakkaravathi.
முதல் ஸ்டேட்மென்ட் :
"சிவாஜியை வைத்து அதிக செலவில் சிவந்தமண் எடுத்து ஸ்ரீதர் நஷ்ட்டமடைந்தார். பின்னர் எம்.ஜி.ஆரை வைத்து உரிமைக்குரல் எடுத்து அந்த நஷ்ட்டத்தை ஈடு செய்தார்".
பிறகு பல்வேறு வாத, விவாத, ஆவணப்பதிவுகளுக்குப் பின்னர்
"சிவந்தமண் தோல்விஎன்று சொல்லவில்லை. வசூலாகவில்லையென்றும் சொல்லவில்லை. ஆனால் வசூலில் நம்நாடு படத்தை விட குறைவு என்றுதான் சொல்கிறோம்". (இதுவும் பம்மலார் அவர்களின் ஆதாரம் மூலம் தகர்க்கப்படப் போகிறது என்பது வேறு விஷயம்)
அப்படியென்றால் முதலில் சொன்ன 'சிவந்த மண் நஷ்ட்டம், உரிமைக்குரல் ஈடுகட்டல்' வாதம் என்னவாயிற்று?.
ஸ்ரீதர் கடனாளியாக இருந்திருக்கலாம். அதை உரிமைக்குரல் ஈடு செய்திருக்கலாம். ஆனால் அந்தக்கடன்கள் நடிகர்திலகத்தின் படங்களால் ஏற்பட்டவை அல்ல. சிவந்த மண், உத்தரவின்றி உள்ளே வா படங்களின் வெற்றிகளுக்குப்பின் ஸ்ரீதர் அவளுக்கென்று ஓர் மனம், அலைகள், ஓ..மஞ்சு மேலும் சில இந்திப்படங்கள் போன்ற பல படங்களின் தோல்வியால் கடனாளியானார் என்பது உண்மையாக இருக்கலாம். அதற்கு நடிகர்திலகத்தின் படங்கள் காரணமல்ல.
ஸ்ரீதர், நடிகர்திலகத்தை வைத்து தயாரித்த படங்கள் மூன்று. நெஞ்சிருக்கும்வரை, சிவந்தமண், வைரநெஞ்சம் ஆகியவை (ஊட்டிவரை உறவு கோவை செழியனின் தயாரிப்பு) . தமிழில் மிகக்குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இருபது படங்களை பட்டியலிட்டால் அவற்றில் நெஞ்சிருக்கும்வரை, வைரநெஞ்சம் படங்கள் இடம்பெறும். அந்த அளவுக்கு சிக்கனமாக எடுக்கப்பட்டவை. அதனால் சுமாரான வசூலிலும் ஸ்ரீதருக்கு லாபம் தந்தவை. சிவந்த மண் படத்தின் இமாலய வெற்றி பற்றி வேண்டிய அளவுக்கு இங்கே விவாதிக்கப்பட்டு விட்டது.
அன்புள்ள நண்பர் சைலேஷ் சார் அவர்கள் எனக்கு மூன்றாவது இறுதி நினைவூட்டல் விட்டிருக்கிறார். (என்னவோ தெரியவில்லை மற்றொரு நண்பருக்கு விட்ட நினைவுட்டலில் ஒவ்வொரு நினைவூட்டலுக்கும் கார், பங்களா, வில்லா, சொத்து, சுகம், நகை, நட்டு என்று கூட்டிக்கொண்டே வந்தவர் எனக்கு "வெறும் நினைவூட்டலோடு" விட்டுவிட்டார்).
நான் என்ன நிரூபிக்க வேண்டுமாம்?. "உலகம் சுற்றும் வாலிபன் தயாரிப்பு செலவும் அதிகம், வசூலும் அதிகம்" என்று நான் சொன்னதற்கு யார், எப்போது சொன்னார்கள் என்ற ஆதாரம் வேண்டுமாம்.
இதில் அவர் எதை மறுக்க விரும்புகிறார்?. உலகம் சுற்றும் வாலிபன் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் என்பதையா?. அல்லது அதிக வசூல் பெற்ற படம் என்பதையா?. இரண்டையுமே அவரால் மறுக்க முடியாதே. அதிலும் இரண்டாவதை அவர் கனவிலும் மறுக்க விரும்ப மாட்டார்.
உ.சு.வா. 1970-ல் தொடங்கி பல்வேறு கிழக்காசிய நாடுகளில் அதிக பொருட்செலவிலும் அதிக சிரமத்திலும் தயாரான படம் என்பதை எம்.ஜி.ஆர். அவர்களே எழுதிய தொடர் கட்டுரை வாயிலாகவும், பல்வேறு பத்திரிகை வாயிலாகவும் அனைவரும் அறிந்ததே. அத்துடன் தயாராகி பல ஆண்டுகள் வெளியிடாமலும் இருந்தது. அவரது அரசியல் எதிரிகள் அந்தப்படம் வராது என்று செய்திகளைப் பரப்பும் அளவுக்கு தாமதம் ஆனது. (எம்,ஜி,ஆரின் தீவிர அரசியல் பணி காரணமாகவும்).
பூஜை போடப்பட்ட அன்றைக்கே படம் விற்பனையானதால், விநியோகஸ்தர்களிடம் மீண்டும் அதிகப்படியாக பணம் பெற முடியவில்லை. வழக்கமாக தான் நடிக்கும் பிற படங்களையே சென்னை நகரில் எம்ஜியார் பிக்சர்ஸ் மூலமாக வெளியிடும் மக்கள்திலகத்துக்கு தன சொந்தப்படமான உ.சு.வாலிபனையே வேறொரு விநியோகஸ்தரான துர்கா பிலிம்ஸ் மூலமாக வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் படம் நன்றாக ஓடியும் விநியோகஸ்தர்கள் பலனடைந்தனரே தவிர தயாரிப்பாளர் என்ற முறையில் எம்.ஜி.ஆர். அவர்கள் அதிக பலடையவில்லை. நாடோடி மன்னன் வெற்றி பற்றி பெரியவர் சக்ரபாணி சொன்ன விஷயம் இந்தப்படத்துக்கும் ஏற்பட்டது. இந்த விவரங்கள் அப்போதே சில பத்திரிகைகளிலும் வந்தன. ஆனால் இப்போது அவசரத்துக்கு எந்தப் பத்திரிகைஎன்று தேடுவது?. முடிகிற காரியமா?.
சைலேஷ் பாபு ,
நீங்கள் ஆயிரத்தில் ஒருவனுக்காக செலவழித்தது போக ,பாக்கி இவ்வளவா இருக்கிறது? அப்பாடா ,மலைப்பே ஏற்படுகிறது.
https://scontent-hkg3-1.xx.fbcdn.net...8a&oe=56AA8D60
From friend's FB page....
"அம்மாவுடன்
கோயிலுக்குப் போனேன்.
கோயிலில் தெய்வம்
என் எதிரில் இல்லை.
என் கை பிடித்து
அருகில் நின்றது."
-அன்னையைக் குறித்த
என் கவிதை இது.
------------
"செக்கச் செவேலென
அழகான பெண் குழந்தை..
எங்கள் தெருமுனை
குப்பைத் தொட்டிக்கு."
-இதுவும் என்னுடையதுதான்.
-----------
ஒரு ஒப்புமைக்காகக் கூட இந்த இரண்டையும் பொருத்திப் பார்க்க மனம் அஞ்சுகிறது.
தன்னைத் தெய்வமென்று
பிள்ளையைச் சொல்ல வைத்தவளும்,தொட்டிலிலிட வேண்டிய செல்வத்தைக்
குப்பையில் வீசிப் போனவளும்
தாய்மை பொங்கும்
பெண்ணினத்தவர்தானே?
கோயிலுக்குப் போன குழந்தைக்குக் கிட்டிய நல்ல அன்னை,அந்த குப்பைத்தொட்டிக் குழந்தைக்கு
ஏன் கிடைக்காமல் போனாள்?
கேள்விகள்-
வேறு வேறு வடிவங்களில்
இறைவனை நோக்கிப்
போய்க் கொண்டே
இருக்கின்றன.
கோயில்களுக்கும்,
குப்பைத் தொட்டிகளுக்குமாய்
குழந்தைகள் போய்க் கொண்டே
இருக்கின்றன.
------------
குற்றமற்ற
குழந்தைப் பூக்களை,ஒரு பாசத் தோட்டமமைத்துப் பராமரிக்கிறவராய்
நடிகர் திலகம் தோன்றிப் பாடுமிந்த "எங்க மாமா" பாடல்,
கவியரசர் வழியாக காற்றில் வந்த கடவுளின் அறிக்கை.
அன்பென்கிற விஷயம் உள்ள வரை யாரும் இங்கே
அனாதையில்லை என்கிற நம்பிக்கை.
----------
இந்த
செல்லக் கிளிகளாம்
பாடல் கேட்டு,
குழந்தைகளோடு,
குழந்தைகளாய்..
நாமும் உறங்குகிறோம்-
நிம்மதியாக.
https://www.youtube.com/watch?v=SXyr...e_gdata_player
from:http://timesofindia.indiatimes.com/i...w/48983424.cmsQuote:
Sivaji Ganesan statue to be shifted to memorial in two years, TN govt tells Madras HC
CHENNAI: The Tamil Nadu government has told the Madras high court that it will take two years to build a manimandapam (memorial) for legendary actor Sivaji Ganesan on the banks of the Adyar river here. The statue of the actor -- erected at the Radhakrishnan Salai-Kamarajar Salai junction near the Marina Beach by the DMK government -- would remain at the spot till then, it said.
The work on the manimandapam will commence in October 2015, and it will be completed in October 2017. The statue would be shifted to the memorial thereafter, the government said.
Advocate-general of Tamil Nadu A L Somayaji made a submission to this effect before a division bench of Justice Satish K Agnihotri and Justice K K Sasidharan on Wednesday when a contempt petition relating to the delay in relocation of the statue came up further for hearing.
The matter relates to a PIL seeking relocation of the statue on the ground that it posed traffic risk to road users. The Chennai police admitted that the statue was indeed a hazard for vehicles, especially those taking the right turn from Kamararajar Salai.
As there was delay in shifting the statue, even after the high court asked the government to take a decision on the matter expeditiously in 2014 itself, the present contempt petition was filed.
Earlier this month, chief minister Jayalalithaa announced in the assembly that the government would construct the manimandapam near Andhra Mahila Sabha on the banks of the Adyar river. She said 67 cents of land was allotted by the government for this purpose in 2002.
The bench had then asked the authorities to submit its project schedule. Accordingly, Somayaji submitted the schedule on Wednesday. When judges sought to know as to why it would take two years for the government to complete the memorial, Somayaji reminded the court that the government had been asked only to take a decision on the matter.
தற்காலிக நிவாரணம்... அரசின் இந்த வாதம் உறுதியாக இருந்தால் நடிகர் திலகத்தின் சிலை அதே இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு இருக்கும் எனத் தெரிகிறது. அதாவது மணி மண்டபம் கட்டும் வரையிலும் சிலை அவ்விடத்தை விட்டு நகராது என்று தெரிகிறது.
நம்முடைய கோரிக்கை அந்த சிலை அங்கேயே நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதே. மணிமண்டபத்திற்கு வேறு சிலை செய்து கொள்ளட்டும்.
நடிகர் திலகத்தின் POWER என்ன என்பதற்கான சான்று.
Dear Friends,
This govt is approaching this in vedic way. That is the power of the soul will be submersed or immersed, taken control and it will be left in a compounded or water centric place. Nadigar thilagam natchathiram Thiruvadhirai, adhu eesanin natchathiram. Uggra thanmai kondadhu. Aagayaal andha silayin sakthi alladhu adhil padhindhulla Aanmaavai aavaaganam seidhu matroru idam thayaar seidhu angu pradishtai seiyum murai. Aanaal ivargal ariyaadha oru vishayam miga mukkiyamaana vishayam ivargal kannai maraithulladhu. Adhu saasthirapadi dharmappadi enna enbadhu enakku vilangivittadhu. INI nadakkappogum sambavangal neengale paarungal nadigar thilagaththin aanmaavin sakthiyinai. Theeyille irangivittaar...thirumbavandhu thaazhpanivaar...sathiyam idhu sathiyam..!
Aagave, nammudaya Silai andha idaththai vittu ORU INCH kooda nagaraadhu. Kavalai Vendaam.
Nadigar Thilagam Film Appreciation Association..
Next Programme...
http://i1146.photobucket.com/albums/...pss7j4yvvk.jpg
Hilarious movie. Don't miss it.
TODAY's DAILY THANTHI ADVERTISEMENT CARRYING OUR NEXT DIGITAL VENTURE ! THE EVERGREEN CLASSIC RAJAPART RANGADURAI !!!!
http://i501.photobucket.com/albums/e...ps8yxvtvuz.jpg
பிரணவப் பொருளே ஐங்கரனே அனைத்து திரிகளிலும் சகோதரத்துவமும் நேசமும் நிலவி அன்பான பண்பான பதிவுகள் நிறைந்திட முதல்வனே அருள்வாய் !
நடிப்புப் பிரபஞ்சத்தின் முழுமுதல் கணேசரின் திரி சார்ந்த விநாயகர் சதுர்த்தி வேண்டுதல்களும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களும் !
https://www.youtube.com/watch?v=UjbH5oqWMac
https://www.youtube.com/watch?v=juVSazxOH8c
அனைத்திற்கும் மூலவராக முதன்மையானவராக விளங்கும் விநாயக பெருமானின் சதுர்தியாம் விநாயக சதுர்தி வைபவம் காணும் இன்று, உதயமாகும் இந்த எண்ணம் ஸ்ரீ கணேச மூர்த்தி அருள் கொண்டு இனிதே வெற்றியுடன் அமைய எல்லாம் வல்ல விநாயக பெருமானை வேண்டி, இந்த முயற்சிக்கு அனைவரின் அன்பும் ஆதரவும் வேண்டுகிறேன்.
திரை உலகின் விநாயகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்ததினமான அக்டோபர் 1இல் அவர்தம் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் செப்டம்பர் 30 2016, டிஜிடல் (DIGITAL ) தொழில்நுட்பத்தில் அகன்ற திரையில் ( CINEMASCOPE ) வெளியீடு !
http://i501.photobucket.com/albums/e...psj5m8ytpm.jpg
இன்றைய தினகரன் நாளிதழில் மேற்படி விளம்பரம் வந்துள்ளதாக நமது நண்பர் தெரிவித்துள்ளார்.Quote:
இல்லை சார் இந்த வாசகங்கள் இல்லை !
பதிப்பாளர் நீக்கிவிட்டதாக செய்தி !
[QUOTE=RAGHAVENDRA;1251153]http://i1094.photobucket.com/albums/...alar/Anna1.jpg
திராவிட இயக்கங்களின் முன்னோடிகளில் ஒருவரான பேரறிஞர் அண்ணா அவர்களுடன் நடிகர் திலகம்.
நான் வணங்கும் எங்கள் குல தெய்வத்தின் தெய்வம் அதாவது என் தெய்வத்தின் தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில், அவரது பெருமையை பறை சாற்றும் விதத்தில் புகைப்படத்தை பதிவு செய்து மகிழ்வித்த தங்களுக்கு என் பணிவான நன்றி !
PILOT PREMNATH - SILVER JUBILEE ADVERTISEMENT - SHAKTHIVEL CBE FACEBOOK
http://i501.photobucket.com/albums/e...psrfljsoiy.jpg
Dear Friends,
I am out of town and been travelling for the past 2 days and would continue to do so till Sunday. Even posting this in a hurry from a friend's place. Could not go through the thread as connectivity is poor. Request all to maintain decorum and dignity and please avoid controversies.
Expecting everybody's cooperation.
Regards
உயர்திரு சைலேஷ்பாபு அவர்களுக்கு மதுரை-சென்ட்ரல் தியேட்டரில் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த இதயக்கனி திரைப்படம்
ஞாயிறன்று மாலைக் காட்சி மொத்த வசூல் 12,300 ரூபாய்.
ஏற்கெனவே வெளியிடப்பட்ட உரிமைக்குரல் மற்றும் நம்நாடு படத்தின் ஞாயிறு மாலைக் காட்சி வசூல் 14,500 ரூபாய். இதில் ஞாயிறன்று மாலைக் காட்சி அரங்கு நிறைந்தது என்ற தவறான தகவலை பதிவிட்டு உள்ளீர்கள். தங்களுக்கு சந்தேகம் இருந்தால் தங்களுக்கு வேண்டியவர்களிடம் சொல்லி தியேட்டர் மேலாளர் திரு.பாலமுருகன் அவர்களிடம் கேட்க சொல்லலாம்.
இப்படிப்பட்ட தகவல் வரும்போது தாங்கள் நன்றாக விசாரித்து எழுதவும். இல்லையென்றால் வசூல் சொல்பவர்களிடம் இது உண்மைதானா, இந்த வசூல் யாரிடம் கேட்டீர்கள் என்பதையும் சொன்னவர் உண்மையான தகவல் சொல்பவரா என்பதைக் கேட்கவும். நன்றி சார்.
தங்களுக்கு வேண்டுமானால் உண்மையான ஒரு வார வசூல் நாளை எழுதுகிறேன்.
வெள்ளிக்கிழமை வசூல் - 17000.00
சனிக்கிழமை வசூல் - 12000.00
ஞாயிறு மொத்த வசூல்- 20.000 த்தில் இருந்து 21.000க்குள்.
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
தங்களது பெயரை மாற்றி எழுதியதற்கு சைலேஷ் பாசு சார் மன்னிக்கவும், எனக்குத் தெரிந்த உண்மையான தகவலைத் தந்தேன். தனக்குத் தவறான தகவல் வந்ததாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி, முதலில் இதற்கு பெரிய மனது வேண்டும்.
மேலும் என்னைப் பொறுத்த வரையில் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் படம் என்பதற்காக வசூலை அதிகப்படுத்தியோ மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் படம் என்பதற்காக வசூலை குறைத்தோக் கூறமாட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் சார்.
தாங்கள் உடனடியாக பதிலுரைத்ததற்கு நன்றி சார்.
இதே போல் என்றும் உங்களிடம் அன்பான பதிலை எதிர்பாா்க்கும் அன்பன் சுந்தராஜன்.
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
https://scontent.fdel1-2.fna.fbcdn.n...30568528_o.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
https://www.youtube.com/watch?v=6r_nBE-Rnr4
அபிமான நடிகர், சிறந்த நடிகர் என பல்வேறு கோணங்களில் 1980 வரையிலான கால கட்டம் வரை தந்தி டிவி கருத்துக் கணிப்பு
A.R.S. Sir
Hats Off and Salute to You Sir.
8000 ஆவது சிறப்புப் பதிவு
'பொட்டு வைத்த முகமோ'
'சுமதி என் சுந்தரி'
http://thumbnails107.imagebam.com/26...8266041325.jpg
8000 ஆவது சிறப்புப் பதிவாக, ஸ்பெஷலாக வருவது 'சுமதி என் சுந்தரி' படப் பாடல். தமிழ்த் திரையுலக பாடல்கள் வரலாற்றையே புரட்டிப் போட்ட பாடல். திரு எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், ஜெமனி, சிவக்குமார் என்று பாலா பலருக்கும் பாடிக் கொண்டிருந்த சமயத்தில் 1971-ல் இளைஞர்களின் கனவுப் படமாக வந்து இளமை விதையைத் தூவி அனைவர் நெஞ்சிலும் புதுமைக் காதல் பயிர் வளர புது வழி காட்டிய புத்துணர்வுப் படமான 'சுமதி என் சுந்தரி' படத்தில் முதன் முதலாக நடிகர் திலகத்திற்குப் பாலா பாடி, தான் பாடிய அத்தனைப் பாடல்களையும் தானே முந்திச் சென்று 'பொட்டு வைத்த முகமோ' மூலம் எவருமே முந்த முடியாத முதல் இடத்தைப் பெற்றார்.
இதற்கு பாலா மட்டுமே காரணமல்ல. இதுவரை பாலா பாடிய பாடல்களின் மகத்துவமான வெற்றிக்கு அவரே முழுக் காரணம். ஆனால் 'பொட்டு வைத்த முகமோ' வெற்றிக்கு அவரால் அப்படி முழுக் காரணமாக முடியவில்லை. காரணம் 'நடிகர் திலகம்' என்ற ஜெயின்ட். அதை மீறி யாருமே ஒன்றுமே செய்ய முடியாது. டி.எம்.எஸ்ஸின் கம்பீரக் குரலிலேயே நடிகர் திலகத்தைப் பார்த்துப் பழகிப் போன நமக்கு டோட்டலாக மாறுதலுடன் இளமை பொங்கும் பாலா வாய்ஸுடன் அவர் இப்பாடலுக்கு மிகப் பொருத்தமாக நடித்திருப்பதை இன்று பார்க்கும் போதும் மிரட்சி அடங்கியபாடில்லை. நடிகனுக்காக பாடகனா? இல்லை பாடகனுக்காக நடிகனா? நடிகனுக்காக பாடகன் என்றால் பலர் இருக்கிறார்கள். ஜெமினிக்கு பி.பி.எஸ், எ.எம்.ராஜா. அத்தனை ஹீரோக்களுக்கும் பொதுவாக பாடகர் திலகம், தங்கவேலுவுக்கு எஸ்.சி.கிருஷ்ணன், நாகேஷுக்கு ஏ.எல்.ராகவன் இப்படி. பாடகனுக்காக நடிகனா என்றால் அதுவும் என்னால் முடியும் இதுவும் என்னால் முடியும் என்று சூளுரைக்க சூரக்கோட்டையாரைத் தவிர வேறு ஒருவரை நினைத்துப் பார்க்க முடியாது.
http://thumbnails104.imagebam.com/26...0266040796.jpghttp://www.5eli.com/Lyrics/wp-conten...00-300x300.jpg
1971-லோ நடிகர் திலகம் உடல் வனப்பில் உச்சம் தொட்டிருந்தார். வாளிப்பான உடல். 43 வயது. தோற்றமோ இருபது வயது வாலிபன் போல. கல்லூரிக் கட்டிளங் காளை போல. இத்தனைக்கும் மேக்-அப் ஹெவி எல்லாம் கிடையாது. அதனால் பாலாவுக்கு மிக மிக வாட்டமாகப் போயிற்று. சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி, மோத்தி, பி.பி.எஸ், சௌந்தர்ராஜன் என்று பாத்திர வார்ப்புகளுக்கு ஏற்ப பலர் நடிகர் திலகத்திற்கு பாடினாலும் பாடகர் திலகமே பின்னால் நடிகர் திலகத்தின் குரலாக பாடல்களில் முழு ஆக்கிரமிப்பு செய்து விட்டார்.
இப்போது அப்படியே ஒரு சேன்ஜ். இளமை பொங்கும் கலைக்குரிசிலும், கலைச்செல்வியும் ஜோடி. இயற்கை எழில் கொஞ்சும் தேயிலைக் காடுகளின், மலைகளின் சரிவுப் பாதைகள் நடுவே ரசமான பாடல். அடித்தது யோகம் பாலாவிற்கு. எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பாடி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தாகி விட்டது. மற்ற துண்டு துக்கடாக்களுக்கும் பாடி ஓகே ஆகி விட்டது. இப்போது நடிப்பின் இமயத்திற்கு பாடி அதுவரை 'தொட்டபெட்டா' தொட்டிருந்தவர் 'எவரெஸ்ட்'டில் ஏறி அமர்ந்து விட்டார். அமர்ந்தவர் அமர்ந்தவர்தான். கீழே இறங்கவே இல்லை.
சரி வருமா, குரல் பொருந்துமா என்ற சந்தேகங்கள் எல்லோருக்கும் பாலா உட்பட. திலகத்திற்கோ தன் திறமை மேல் எப்போதுமே திடமான நம்பிக்கை. பயத்தில் பாலா புலம்ப 'பாலு...நீ பாடு... மற்றதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று சர்வ அலட்சியமாக நடிப்பின் சர்வாதிகாரி சொல்ல, தைரியம் வரவழைத்து அற்புதமாக பாடி முடித்து விட்டார் பாலா. இப்போது ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்.
இப்போது நடிகர் திலகத்தின் டர்ன். பாட்டை முழுவதும் கேட்டு உள்வாங்கியாகி விட்டது. கொஞ்சம் வழக்கத்தை விட கவனமாக. தான் நடிகர் திலகம் இல்லை.. 'சுமதி என் சுந்தரி' படத்தின் சுந்தர ஹீரோ...இளம் நாயகன். உடன் அழகு நாயகி. அது மட்டுமே. பாடகர் திலகத்தின் குரலுக்கு வாயசைத்து அசைத்து பழகி ஆகி விட்டது. இப்போது வேறு ஒரு இளைஞன் பாடுகிறான். அதற்கேற்ற மாதிரி வாயசைக்க வேண்டும்.அவ்வளவுதானே ! ஜூஜுபி.ஊதித் தள்ளி நடித்தாகி விட்டது. பாடலை பார் புகழ ஹிட் ஆக்கியும் கொடுத்தாகி விட்டது.
ரிசல்ட் என்ன! பாலா எவருமே தொட முடியாத புகழை இந்த ஒரு பாடல் மூலம் பெற்று விட்டார் நடிகர் திலகத்தின் வாயசைப்பு மூலமாக. அது போல தன்னுடைய அசாத்திய திறமை மூலமும். நடிப்பின் சமுத்திரமும், பாடல் கடலும் ஒன்று சேர்ந்து ஒரு இசைப் பிரளயத்தையே நடத்தி முடித்து விட்டன எம்.எஸ்.வி என்ற இன்னொரு இசைக் கடல் இணைவின் மூலம்.
மிக உற்சாகமாக ஆரம்பிக்கும் இசை. புள்ளி மானைப் போல மலைப் பாதைகளுக்கு இடையில் கலைச்செல்வி துள்ளி ஓடி வர, வெகு இயல்பாக 'நடிகர் திலகம்' நடந்து வந்து செடியிலிருந்து இலை கிள்ளிப் போட, அந்த நான்கு நிமிடப் பாடல் நான்கு ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாதது. ஒரு காலை மடக்கி ஸைடில் நிற்கும் போஸாகட்டும்...அல்லது பேன்ட்டின் முன்னிரண்டு பக்க பாக்கெட்டுகளில் கட்டை விரல் கொடுத்து கொக்கி போட்டு, இடுப்பொடித்து நிற்கும் அழகாகட்டும்... வலதுகாலை டைட் செய்து, இடது கால் மடக்கி உயரே செல்வி இருக்க, சரிவில் நின்றபடி 'பொட்டு வைத்த முகமோ' பாடல் தொடங்கும் போதே தியேட்டர் ஓனர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து முடித்திருப்பார். வெளிர் நீல டைட் பேண்ட்டும், ஜவுளிக் கடைகளின் வெளியே அப்போதெல்லாம் விளம்பரத்திற்கு வைக்கப்பட்டு 'சுமதி என் சுந்தரி ஷர்ட்' என்று அமோக விற்பனை ஆன அந்தப் பெரிய செக்டு ஷர்ட்டும் அணிந்து ஏதோ பத்தாம் வகுப்பு பையனைப் போல ஆச்சர்யம் வரவழைக்க நடிகர் திலகத்தை விட்டால் வேறு யார்?
http://i.ytimg.com/vi/NaeKkH0hPus/hqdefault.jpghttp://i60.tinypic.com/2vtpmci.jpg
'தரையோடு வானம்' என்று கலைச்செல்வியின் ஒரு கை பிடித்து, இன்னொரு கையை வானம் நோக்கி உயர்த்தையிலே திரையரங்குகளின் கூரைகள் நொறுங்குமல்லவா? படத்தின் போஸ்டர்கள் இந்தப் போஸைத்தானே தாங்கி நிற்கும்! கை தூக்கி இடையொடித்து செல்வி நிற்கையிலே அவர் இடையின்மீது ஒரு கை வைத்து ('இடையோடு பார்த்தேன்.... விலையாகக் கேட்டேன்') இன்னொரு கையை தன் இடுப்பின் மீது நடிகர் திலகம் வைத்து ஸ்டைலாக நிற்கும் அடுத்த போஸ் அதற்குள் வந்து முன் போஸை ரசித்து முடிப்பதற்குள் நம்மைப் பாடாய்ப் படுத்துமே! அடுத்த சில வினாடிகளில் அதே விலையில்லா வரிகளுக்கு ஜெயா முன் நடக்க, அப்படியே பின்னால் தொடர்ந்து சற்று கழுத்தைச் சாய்த்து புற்களுக்கு மத்தியில் கால்களைத் தூக்கி வைத்து நடக்கும் அந்த ஸ்டெப்ஸ். (போலீஸ் உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டம் பண்ணும் ரசிகர்களை அடக்க முயன்று தோற்றுப் போகும்) என்ன நடக்கிறது என்றே தெரியாது. வானம் இடிந்து விழுந்து விட்டதோ என்று எண்ணுமளவிற்கு ரசிகர்களின் ஆரவார சப்தம் ஒலிக்கும். 'செவ்வானம் போலே புன்னகை புரிந்தாள் என்றபடி கால் மடக்கி, படுத்து நாயகி கரம் பிடித்து, விருட்டென்று 'புரிந்தாள்' என்று முடித்தவுடன் கையை விசிறி விலக்குவது விசில் சப்தங்களை வீறிட வைக்கும். திரும்ப அதே வரி வரும் போது தாழ்நிலையில் பாய்வது போல் நிற்க, ஒரு நொடி குளோஸ்-அப் காட்டி பின் காமெரா தூர விலகி விடும். ஜெயாவின் கைபிடித்து ஒவ்வொரு முறையும் பின்னால் நடந்து வரும் ஸ்டைல் விதவிதமாக இருக்கும். 'குழலோ.. ஓ.. ஓ' என்று பாலா பாடும் போது அதற்குத் தகுந்தாற்போல் 'நடிகர் திலகம்' அந்த 'ஓ' வுக்கு தலையை சாய்த்து மிக அழகாக வாயசைக்கும் போது யாருக்குத்தான் 'ஓ' போடத் தோன்றாது?
'அந்தி மஞ்சள் நிறமோ' என்று வெகு அழகாக நெஞ்சு நிமிர்த்தி அவர் ஓர் முழு ஆண்மகனுக்குரிய தகுதியை உடல் மொழியாகக் காட்டுவார் பாருங்கள். (அதாவது முதல் சரணம் முடிந்து மீண்டும் பல்லவி வரும் போது) காட்டிவிட்டு மீண்டும் உடனே உடல் தளர்த்துவார்)
அடுத்த சரணத்தில் ஜெயாவின் பின் நின்று, அவரது இரு கைகளையும் பின்பக்கம் இழுத்தவாறு பிடித்து ஊஞ்சல் ஆட்டுவது போல 'பொன்னூஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்' என்று பாடுவது கிளாஸ். என்னுடன் கலந்தாள்' இரண்டாம் தரம் ஒலிக்கையில் குளோஸ்-அப்பில் மிக அழகாக சிரிப்பார் கலைச் செல்வியைக் கட்டி அணைத்தபடி. வசந்தா குரலில் 'லலலா லலலா லலலா லால்லா' என்று ஜெயா இவர் அணைப்பிலிருந்து விலகி பின்புறம் சாய்ந்து ஹம்மிங் தரும் போது நடிகர் திலகம் தலையை முன் நீட்டி சைட் போஸில் சிரிப்பது செம ரகளை.
http://i62.tinypic.com/15hhcte.jpg
மூன்றாவது சரணமான 'மலைத் தோட்டப் பூவில்' வரிகளில் நிற்கும் உடல் மொழி அசர வைத்து விடும் நம்மை. தலையை ஒரு வெட்டு வெட்டி இந்த லைனை ஆரம்பிப்பார். வலது கை கட்டை விரல் பேன்ட் பாக்கெட்டில் கொக்கியாய் மாட்டியிருக்க, இடது கை நீட்டி 'மணமில்லையென்று' பாடிக் கொண்டிருப்பவர் சடேலென்று கையை வீச்சருவாள் வெட்டுவது போல விசிறி ஒரு ஆக்ஷன் செய்து கையை பின்னால் கொண்டு செல்வாரே பார்க்கலாம். இதற்கு நடுவில் தலை ஸ்டைலாக ஷேக் ஆவதையும், உடம்புப் பகுதிகள் வளைந்து நெளிவதையும் நாம் கவனிக்கத் தவறி விடக் கூடாது. இரு வினாடிகளில் இடைவிடாத அதிசய அசைவுகளைக் கா(கொ)ட்டி விடுவார். அப்படியே வரிகள் மீண்டும் தொடரும் போது படு அலட்சியமாக ஜெயாவைப் பின் தொடர்ந்து நடை போட்டு செல்வார். அப்படியே நின்று இடது காலை சற்று மடக்கி வலது கையை உயர்த்துவார்.
'நிழல் போல் மறைந்தாள்' என்னும் போது தியேட்டர் ரெண்டு பட்டு விடும். வலதுகையை மார்புக்கு நேராக நீட்டி ஓடும் ஜெயாவை சுட்டு விரலால் சுட்டிக் காட்டுவார். அய்யோ! அமர்க்களம் சாமி! அடுத்து வரும் போது வேறு வித போஸ்.
இப்படி பாடல் முழுதிற்கும் வினாடிக்கு வினாடி போஸ் முத்திரைகள், நினைத்துப் பார்க்க முடியாத விந்தை அசைவுகள், ஸ்டைல், நடை என்று தூள் பரத்துவார்.
பாலா குரலை அப்படியே தன்னுள் உள்வாங்கி, அதே போன்ற வாயசைப்போடு தன்னுடைய முத்திரைகளை மறக்காமல் அளித்து, அனைத்து ரசிகர்களையும் பரவசப்படுத்தி, பார்ப்போரை வியப்பிலாழ்த்தி நடிகர் திலகம் இந்தப் பாடலை எங்கோ கொண்டு சென்று விட்டார்.
கலைச்செல்வியும் நல்ல கம்பெனி. எளிமையான கண்களை உறுத்தாத சிம்பிள் மேக்-அப். உடையும் அது போலவே ரொம்ப எளிமை. வெளிர் வயலட் நிற சேலை மிகப் பொருத்தம். அழகில் அள்ளுகிறார். பி.வசந்தாவின் குரல் அப்படியே மேடம் பாடுவது போல அவ்வளவு பொருத்தம். இன்னும் கொஞ்சம் அந்த 'லலலா லலலா லலலா லால்லா' ஹம்மிங் வராதா என்று ஏங்குமளவிற்கு அற்புதம்.
பாடல் முழுதுமே இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசங்களில் படமாக்கப்பட்டது. எத்தனயோ இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசங்களில் பல பாடல்கள் படமாக்கப்பட்டிருந்தாலும் இந்தப் பாடல் அவற்றையெல்லாம் மீறிய தனிச் சிறப்பு கொண்ட காந்தத் தன்மை மிக்கது. அழகான காதலியை ரசித்து அவளைப் பின்பற்றியபடியே தொடரும் அவளைவிட அழகான இளைஞனின் காவிய ரசனைப் பாடல் இது.
'மெல்லிசை மன்னரி'ன் ஒவ்வொரு இசைக்கருவிகளும் இப்பாடலின் ஒவ்வொரு எழுத்தோடு இசைந்து இன்பம் தரும். சிதார், ஷெனாய், சந்தூர், கிளாரினெட், சாக்ஸ் , தபேலா, டோலக் என்று மனிதர் விளையாடி இருப்பார். நடிகர் திலகமும், கலைச்செல்வியும் தங்களை மெய்மறந்த நிலையில் அந்த பூங்காவின் பெஞ்சில் தழுவி கட்டுண்டு கிடக்க, பின்னால் ஒலிக்கும் அந்த கோரஸ் தொடர்ந்து வர இருக்கும் இந்த அற்புதப் பாடலுக்குக் கட்டியம் கூறி விடும். 'லாலா ஹாஹா ஹாஹா' என்று பெண்களின் குரல் ஒன்று சேர்ந்து கோரஸாக ஒலிக்கும் போது ஒவ்வொரு இளைஞனும் புளகாங்கிதம் அடைந்து விடுவான். மனதுக்குள் இனம்புரியாத கிலேசம் தோன்றி அனைவரையும் இன்பச் சித்ரவதை செய்துவிடும்.
படத்தின் துவக்க இசையே நம்மை உற்சாகத் துள்ளல் போட வைத்து விடும்.
பாலா நாம் யாருக்குப் பாடுகிறோம் என்பதை உணர்ந்து வெகு அழகாக பாடியிருப்பார். நடிகர் திலகத்திற்கே உரித்த கம்பீரமும் குறைந்து போகாமல், அதே சமயம் காதல் பாடலென்பதால் தன்னுடைய பாணி குழைவுகளையும் விட்டுக் கொடுக்காமல் வார்த்தைகளை தெள்ளத் தெளிவாக உச்சரித்து பாலா புகுந்து விளையாடியிருப்பார். தினைமாவுடன் சேர்ந்த தேனாக வசந்தாவின் ஹம்மிங் உலகம் உள்ளவரை பேசப்பட்டுக் கொண்டிருக்கும்.
இறப்பே இல்லாத சாகாவரம் பெற்ற பாடல்.
http://2.bp.blogspot.com/_78rwGPFYej..._Y/s1600/2.jpg
பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
பொட்டு வைத்த முகமோ
ஆஆஆ… கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
தரையோடு வானம் விளையாடும் கோலம்
தரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன்
இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன்
செவ்வானம் போலே புன்னகை புரிந்தாள்
புன்னகை புரிந்தாள்
பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
ஆஆஆஆஆஆஆஅ………
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மணமேடை தேடி நடைபோடும் தேவி
பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்
லலலா லலலா லலலா லால்லா
என்னுடன் கலந்தாள்
லலலா லலலா லலலா லால்லா
ஆஆஆஆஆஆஆஆ……. ஹ ஹா ஹா
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள்
ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள்
லலலா லலலா லலலா லால்லா
நிழல் போல் மறைந்தாள்
லலலா லலலா லலலா லால்லா
பொட்டு வைத்த முகமோ
ஓஓஓஓஓ….
கட்டி வைத்த குழலோ
ஓ...ஓஓஒ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
லலலா லலலா லலலா லால்லா
அந்தி மஞ்சள் நிறமோ
லலலா லலலா லலலா லால்லா
https://youtu.be/NaeKkH0hPus
Vasu sir,
1000 , no 10000 no 100000 no infinity kisses to you for your writing and narration about NT, NT every seconds poses.... You reflect my (no) our feelings of our NT...
Within few seconds so many expression and styles. Style's guru NT....
Week end songs going to be this song only, countless.....
Congrats Mr Neyveliar for reaching another landmark.
Regards
வாசு ,
எண்ணிக்கைக்காக பாராட்டுவது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அது எவ்வளவு முறை பேதியானது என எண்ணி ,ஒரு மனிதனை பாராட்டுவது போன்றது.(இதில் நான் முரளி,வேலன் கட்சியாக்கும்) எத்தனை அதில் தரத்துடன், மற்றோருக்கு புதிய செய்திகளை சொன்னது என்று பார்த்தால், என்னை தவிர கார்த்திக் ,முரளி, நீ, ஓரளவு ராகவேந்தர்,பார்த்தசாரதி,சாரதா,பம்மலார், முத்தையன் அம்மு, கலைவேந்தன்,இவ்வளவுதான் தேறும்.ரவி,சின்னகண்ணன் இப்போது கொஞ்சம் தேறி வருகின்றனர். நான் மிக ரசிக்கும் பதிவாளர்கள் வெங்கி ராம்,பிரபுராம் முதலியோர் காண்பதேயில்லை.
இதில் உன் பாணி அலாதி. தரத்துடன்,மற்றவர் ரசனையையும் கணித்து,புது புது கான்செப்ட் பிடித்து, அதற்காக மெனக்கெட்டு உழைத்து,உன் தேகத்தையும் ,நேரத்தையும் தியாகம் செய்து இவ்வளவு சுவாரஸ்யத்துடன் ரசனை குழைத்து நீ நடத்திய இந்த 8000 குட யாகத்திற்கு எனது தலையாய தலை வணக்கங்கள்.
நன்றி கோபால் சார்..நீங்கள் சொல்லிய பட்டியலில் என் பெயரும் உள்ளது..சந்தோசம்..என் பதிவுகள் தொடரும்..
http://i57.tinypic.com/16056cg.jpg
வாசுதேவன் சார்
தங்களின் 8000வது பதிவு சுமதி என் சுந்தரி அருமை. தொடரட்டும் தங்கள் தொண்டு
Dear Vasudevan Sir (Neyveli),
Amazing write-up on "Pottu vaitha mugamo" song, especially about various signature styles of NT. You exactly captured the various nuances/poses of NT (as I and of course most of the fans would have captured), with your very very special and scintillating writing style.
Hats off!
Regards,
R. Parthasarathy
வாசுதேவன் சார்!
8000 பதிவுகளை சிரமம் பார்க்காமல் பதிவிட்டமைக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்துடன் கூடிய வாழ்த்துக்கள்.
நட்புடன்
சிவாஜிதாசன்