https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...2f&oe=57FDB5AC
Printable View
http://oi67.tinypic.com/16h850o.jpg
( திரைவானம் இதழின் புகைப்படங்கள் கிடைக்க காரணமான
நண்பர் திரு சீனிவாசகோபாலன் அவர்களுக்கு நன்றிகள் பல.)
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...cd&oe=57FBE140
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...5a&oe=57EE1CAB
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...9d&oe=57ECBCB1
Sekar Parasuram added 3 new photos.3 hrs ·
கோடிகளை கொட்டி திரைப்படங்கள் எடுத்து அந்த படத்தை திரையிட திரையரங்கு கிடைக்காமல் அப்படியே கிடைத்து விட்டாலும் படத்தை பார்க்க
3 ( வெள்ளி, சனி,ஞாயிறு) நாட்களுக்கு மட்டுமே ஓரளவு பார்வையாளர் வரும் நிலையில்தான் உள்ளது இக்கால கோலிவுட் சினிமா தொழிற்சாலை, அவ்வாறு வரும் படங்களுக்கு முதலீடு உத்தரவாதம் தொலைக்காட்சி சேனல்கள் தான் என்றாகி விட்டது,
நிலைமை இவ்வாறு இருந்த போதிலும் " நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் " மட்டுமே எந்த காலகட்டத்திலும் வசூலுடன் தியேட்டரில் 100 நாட்கள் கடந்து வெற்றிகரமாக ஓடுகின்ற சரித்திர நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன, தற்போது டிஜிட்டலில் வெளிவந்த
" சிவகாமியின் செல்வன் " நூறு நாட்கள் கடந்து வெற்றி விழா கொண்டாடப்படுகிறது, இன்றைய தினத்தந்தி
நாளிதழில் வந்திருக்கும் புதிய படங்களுக்கு இல்லாத விண்ணை முட்டும் விளம்பரம்
எத்தனை படங்கள் விளம்பர பக்கத்தில் இருந்த போதிலும் சிவகாமியின் செல்வன் மட்டுமே வெற்றிப் புன்னகையாய்.
நன்றிகள் கோடி சிவாமூவிஸாருக்கு
(முகநூலில் இருந்து)
Friends, I thank each and every fan who made it at today's function of celebrating 100 days run of Sivakamiyin Selvan. Of course, we have to go a long way as far as time management is concerned. Otherwise, it was a memorable evening.
The best narrator of our thread, Murali Sir, has also become a superb Stage Manager. Well done Murali. The only thing, as I said, is we should stick on to the time in future.
Pulavar Pulamaipithan and M.N. Rajam could not attend due to unavoidable reasons.
However, the full house audience made every one happy and brought festivity.
Thanks to each and every one involved for the memorable and successful event.
நேற்று 10.07.2016 ஞாயிறு மாலை ஸ்ரீநிவாசா திரையரங்கில் சிவகாமியின் செல்வன் 101வது நாள் அரங்கினுள் ரசிகர்கள் அளப்பரையில் என்னை மிகவும் கவர்ந்த நிழற்படம். இந்த நிழற்படத்திற்கெனத் தனிக்காவியமே கவிதையாய்ப் படைக்கலாம்.
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...e6&oe=58328973
நன்றி சேகர் பரசுராம் முகநூல் பக்கம்
நடிகர்திலகத்தின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாரிஸ் குரூப் சிவாஜி பக்தர்கள் வெளியிட்ட போஸ்டர்
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...a1&oe=5831C325
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...f5&oe=57F32C94
a very very rare still from Sivakamiyin Selvan shooting spot. Not in the movie.
சிவகாமியின் செல்வன் மறுவெளியீட்டில் 100வது நாள் விழா
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நடித்து 1974 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படம் சிவகாமியின் செல்வன், தற்போது இத்திரைப்படம் டிஜிட்டலில் வெளியிடப்பட்டு, மறுவெளியீட்டில் வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடியதையொட்டி, சென்னை, மேற்கு மாம்பலம் சீனிவாசா திரையரங்கில், 10/07/2016 ஞாயிறு மாலை 100வது நாள் விழா, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் நடைபெற்றது,
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் கே. சந்திரசேகரன் தலைமையில், விழாக்குழுவினர் பி. ஜெயக்குமார், எஸ்,ராமஜெயம், நடராஜ், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை நிர்வாகிகள். திரளான ரசிகர்கள் கலந்துகொண்டனர்,
இத்திரைப்படத்தின் இயக்குனர் சி,வி,ராஜேந்திரன், திரைப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் மதுரை சிவா மூவிஸ், திரையரங்க உரிமையாளர் ஆகியோருக்கு, சென்னை மாநகர முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா. சுப்பிரமணியன் நினைவுப்பரிசுகளை வழங்கினார், திரையரங்க ஊழியர்களுக்கு புத்தாடை, ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது,
இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் பேச்சு
நான் சிறுவயதில் சிவாஜியின் நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன், இப்படியும் ஒரு நடிகரால் நடிக்கமுடியுமா என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன், ஆனால், நான் பார்த்து வியந்த நடிகர்திலகத்தை வைத்தே பல வெற்றிப்படங்களை இயக்குவேன் என்று நினைத்துப் பார்த்ததில்லை,
சிவாஜி எப்போதுமே தொழில் பக்தி, நேரந்தவறாமை இவற்றை திரையில் நடிக்கும்போது கடைபிடித்தார், அவருடன் பழகியபோதுதான் தெரிந்தது, கடமையையும், கட்டுப்பாட்டையும் தன் வாழ்க்கையிலும் கடைபிடித்தார்,
ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவர்கள் குடும்பமே சிவாஜி ரசிகர்கள்தான். அப்போது. அவருடைய மகன் தான் வேலைக்கு இண்டர்வியூ செல்வதாகவும், யாராவது தெரிந்தவர்களின் பெயரும், ஏதாவது கூடுதல் தகுதியும் கேட்பார்கள் என்ன சொல்வது என்று கேட்டுக்கொண்டிருந்தான். அருகிலிருந்த நான், அந்தப் பையனிடம் இண்டர்வியூவில் கேட்கும்போது நான் சிவாஜி ரசிகன் என்று சொல் என்று சொல்லி அனுப்பினேன், அதன்படியே அவனும் இண்டர்வியூவில் கூற வேலையும் உடனே கிடைத்தது, ஏனெனில், சிவாஜி ரசிகன் என்றால் ஒழுங்காக வேலை பார்ப்பான் என்பது அந்தக் கம்பெனியினருக்கும் தெரிந்திருக்கிறது,
திரையுலகினருக்கு, சிவாஜி ஒரு பகவத் கீதை, பைபிள், குரான் போன்றவர், ஓரிரு தலைமுறைகள் அல்ல இன்னும் தலைமுறைகள் வந்தாலும், தமிழ்த் திரையுலகம், சிவாஜி என்ற கைடு-ஐப் (guide) பின்பற்றிதான் நடக்கவேண்டும்,
சிவகாமியின் செல்வன் இந்தி ஆராதனாவின் தழுவல் என்றாலும், தமிழில் சிவாஜி தனது திறமையான நடிப்பால் படம் முழுக்க கோலோச்சுவார், 1974ல் திரைப்படம் வெளியாகி வெற்றிபெற்றது, தற்போது 40 வருடங்களுக்குப் பிறகுகூட மீண்டும் வெற்றிபெற்று அதன் 100வது நாள் விழாவில் பங்கேற்பது பெருமையாக உள்ளது,
இவ்வாறு அவர் பேசினார்,
மா,சுப்பிரமணியன் பேச்சு
நான் சிறுவயதில் கிராமத்திலிருக்கும்போது திரைப்படம் பார்க்கவே வாய்ப்பு கிடைக்கவில்லை, சென்னைக்கு வந்தபின். 40 வருடங்களுக்கு முன்பு இதே சீனிவாசா திரையரங்கில் நான் முதலில் பார்த்த படம் எம்,ஜி,ஆர் நடித்த அன்பே வா. அடுத்த சில வாரங்களிலேயே நடிகர்திலகம் சிவாஜி நடித்த மூன்று தெய்வங்கள் பார்த்தேன். நினைவு தெரிந்து முதலில் பார்த்த படம் எம்.ஜி.ஆர் படமென்றாலும், இரண்டாவதாகப் பார்த்த சிவாஜிக்குதான் ரசிகனானேன். இன்றுவரை ரசிகனாக இருக்கிறேன்.
அப்போதெல்லாம் நண்பர்கள் குழுவில் நான் நன்றாகப் பாடுவேன், முதலில் நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் பாடலைப் பாடுவேன், வேறு பாடல் என்று கேட்டால். போனால் போகட்டும் போடா பாடலைப் பாடுவேன், இந்த இரண்டு பாடலை முழுவதும் கேட்டாலே, சமூக மற்றும் வாழ்க்கைத் தத்துவமும் புரியும்.
தலைவர் கலைஞர், தனது நண்பராக சிவாஜியைப் பாவித்தார், அவருடைய பெருமையைப் போற்றும் வகையில், சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அவருக்கு சிலை வைத்தார், ஆனால். போக்குவரத்துக்கு இடையூறு என்று பொய்யான காரணத்தைக்கூறி, அதனை அகற்ற ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு முயற்சி செய்தது, கண்ணகி சிலையை லாரியை வைத்து இடித்து அகற்றினார்கள், அப்போது தி.மு.க போராடி மீண்டும் அதே இடத்தில் கண்ணகி சிலையை நிறுவினோம். சிவாஜி சிலையை லாரி வைத்து இடிக்காமல், கோர்ட் மூலம் அகற்றப் பார்க்கிறார்கள். சிவாஜி பேரவை அமைப்பு அகற்றக்கூடாது என்று போராடினார்கள். தேர்தல் நேரத்தில் அகற்றினால் மீண்டும் போராடுவார்கள் என்பதால் கால அவகாசம் கோரி அதனைத் தள்ளிவைத்திருக்கிறார்கள்,
அதுபோல, நடிகர்திலகம் சிவாஜிக்கு மணிமண்டபம் என்பதும் தமிழக அரசால் அறிவிப்போடு நின்றுபோயுள்ளது. கலையுலகின் பிதாமகனாகத் திகழ்ந்த நடிகர்திலகத்திற்கு கட்சி வேறுபாடின்றி, அரசியல் கடந்து அனைவருமாகச் சேர்ந்து மணிமண்டபம் அமைக்கவேண்டும். இதற்காக நானும். நான் சார்ந்த தி,மு,கவும் என்றும் துணைநிற்கும்.
தலைமுறை கடந்து சிவாஜியின் திரைப்படங்கள் மக்களின் பேராதரவைப் பெறும் என்பதற்கு ஏற்கனவே கர்ணன் திரைப்படம் வெளிவந்து மறுவெளியீட்டில் மாபெரும் வெற்றியைப் பெற்றது, இப்போது சிவகாமியின் செல்வன் 100வது நாள் விழா காண்கிறது,
இதேபோல், நடிகர்திலகத்தின் மேலும் பல திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி விழாக்கள் காணவேண்டும் என்பதே எனது விருப்பம்,
இவ்வாறு அவர் பேசினார்,
சிவகாமியின் செல்வன் 100வது நாள் விழா - சில புகைப்படங்கள்
http://i1234.photobucket.com/albums/...psj8maezkp.jpg
http://i1234.photobucket.com/albums/...ps1zfuxtjl.jpg
http://i1234.photobucket.com/albums/...ps8wizra9a.jpg
http://i1234.photobucket.com/albums/...psqqprdp52.jpg
http://i1234.photobucket.com/albums/...psktnfocxd.jpg
http://i1234.photobucket.com/albums/...pschi8oupx.jpg
http://i1234.photobucket.com/albums/...ps1ui96cp1.jpg
http://www.dinamalarnellai.com/site/...ews_Nellai.jpg
அவசர அவசரமாக இரவோடு இரவாக எந்த பகுதியின் பிலிம் சுருள்கள் கெட்டுப் போனது என்று பார்த்தார் அன்றைய ஜெமினி அதிபர் எஸ். பாலசுப்ரமணியம். அவரால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. ஒருவித கூச்சத்தோடும், பயத்தோடும் இயக்குநர் ஸ்ரீதரை அழைத்து விஷயத்தைச் சொன்னார். அவரும் கொஞ்சம் கலங்கித்தான் போனார்! பிறகு படத்தை போட்டுப் பார்த்தார்கள்.
`கவலை வேண்டாம் பாலு! பெரிய சேதம் எதுவுமில்லை’ என்ற பிறகுதான் பாலசுப்ரமணியம் நிம்மதி அடைந்ததாகச் சொல்லுவார்!
1970கள் கூட சிவாஜி கணேசன் ஆண்டு என்றே சொல்லலாம்! அந்த வருட ஆரம்பத்தில் வந்த படம் ‘எங்க மாமா!’ இந்தியில் வந்த ‘பிரம்மசாரி’ படத்தின் தமிழாக்கம்தான் இந்த படம்! இந்தப் படத்தை ஜேயார் மூவீஸும் ஏவி.எம். நிறுவனமும் இணைந்து எடுத்த படம்தான் இந்தப் படம்.
இந்தப் படத்தை ஏ.சி.திருலோகசந்தர் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சிவாஜியும், ஜெயலலிதாவும் ஜோடி!
இந்த படம் சென்னை வெலிங்டன் திரையரங்கில் வெளியானது! அடுத்து வெளியான படம் ஏப்ரல் மாதத்தில் வெளியானது! அதுதான் சிவாஜி நாடக மன்றத்தினரின் வெற்றிகரமான நாடகமான `வியட்நாம் வீடு.’
நூறு படங்களில் நடித்து புகழுச்சியில் இருந்த சிவாஜி கணேசன் மீண்டும் நாடகத்தில் நடிக்க வந்தார். அந்த நாடகம்தான் ‘வியட்நாம் வீடு!’ இதன் கதையை எழுதியவர் அப்போது 24 வயதே ஆன இளைஞர் ஒருவர்! சென்னை டன்லப் டயர் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்!
ஒய்.ஜி. பார்த்தசாரதியின் யு.ஏ.ஏ. குழுவில் உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தவர். அவர் சிவாஜியிடம் சொன்ன கதைதான் ‘வியட்நாம் வீடு!’ ஏன் இந்த படத்திற்கு இந்த தலைப்பு? இன்றைக்கு பார்ப்பவர்களுக்கு வியப்பாக இருக்கலாம்! அப்போது அமெரிக்கா பல ஆண்டுகளாக வியட்நாமில் போர் நடத்திக் கொண்டிருந்தது! ஜெர்மனியில் ஹிட்லர் பல யூதர்களை கொன்று குவித்ததைப் போல, அமெரிக்கா வியட்நாமில் பல உயிர்களை கொன்று குவித்தது.
அதாவது ஓயாத சண்டை என்றால் அதற்கு வியட்நாமை உதாரணமாகச் சொன்னார்கள். ஒரு நடுத்தர குடும்பத்தில் நடக்கும் ஓயாத சண்டை என்கிற அடிப்படையில்தான் இந்த படத்திற்கு இந்த தலைப்பை வைத்தார் அந்த இளைஞர். அவர் பெயர் சுந்தரம்!
அவர்தான் பின்னாளில் ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் என்றே திரையுலகில் அறியப்பட்டார்.
வழக்கமாக நாடகங்கள் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில்தான் அன்றைய நாட்களில் அரங்கேற்றமாகும்!
ஆனால், இந்த நாடகத்தை சிவாஜி வடசென்னை பகுதியிலிருந்த ராஜா அண்ணாமலை மன்றத்தில்தான் அரங்கேற்றினார்.
அந்த அரங்கேற்றத்தில் சிவாஜி எதிர்பாராத விஷயமும் அரங்கேறியது! நூறு படங்கள், அதில் எத்தனையோ வெள்ளி விழா படங்கள், உலகமெங்கும் சிவாஜிக்கு ரசிகர்கள்!
இத்தனை பெருமைகளோடுதான் அவர் மீண்டும் மேடைக்கு வருகிறார்! திரையில் அவரை முதல் காட்சியில் பார்க்கும் ரசிகர்கள் காசுகளை அள்ளி திரை மீது வீசுவார்கள். அந்த சிவாஜி இப்போது மேடைக்கு வருகிறார்! அவரை நேரடியாக ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள். பிராமணப் பின்னணியைக் கொண்ட கதை இது! சிவாஜிக்கு இதில் பிரஸ்டீஜ் பத்மநாபன் கதாபாத்திரம்! தன்னம்பிக்கையும், சுயகவுரவமும் கொண்ட ஒரு கதாபாத்திரம்! முதல் காட்சியில் சிவாஜி மேடையில் தோன்றுவார்! அவ்வளவுதான்! அரங்கத்தில் விசில் பறந்ததோடு, ரசிகர்கள் கூடை கூடையாக பூக்களை சிவாஜி மீது வீசவும் செய்தார்கள்.
திக்குமுக்காடிப் போனார் சிவாஜி!
அவரால் மேடையில் நகரக்கூட முடியாதபடி மேடை முழுவதும் பூக்கள்.
இதை எதிர்பாராமல் மேடைவிளக்கை அணைத்தார்கள். சிவாஜி திரைக்குப் பின்னால் போனார்! பூக்களையெல்லாம் அப்புறப்படுத்தினார்கள்! அதற்குப் பிறகுதான் நாடகம் தொடர்ந்தது!
அடுத்த நாள் நாடகம்! இதே போல் நடந்தது! ஆனால் இங்கே ஒரு காரியம் செய்தார்கள் நாடகக் குழுவினர்! பூக்கள் வீசப்பட்டன! மேடையில் இருக்கும் எல்லா விளக்குகளையும் அணைத்தார்கள்.
ஒரு விளக்கு மட்டும் எரியும்! அந்த விளக்கொளியில் வந்து நிற்பார் சிவாஜி!
`கரண்ட கட் ஆயிடுத்து! இந்தாத்திலே கரண்ட் கட் ஆச்சுன்னா கூட இந்த பிரஸ்டீஜ் பத்மநாபன்தான் போன் பண்ணனும், யாருக்கும் இந்தாத்திலே பொறுப்பே கிடையாது’ என்று பேசிக்கொண்டே போவார். அதற்குள் இருட்டான பகுதிகளில் இருக்கும் பூக்களை அப்புறப்படுத்திவிடுவார்கள்.
இந்த நாடகத்தைப் பார்த்த அமரர் எஸ்.எஸ். வாசன் இதை ஆனந்த விகடனில் புகைப்படங்களோடு தொடராக வெளியிட்டார்.
இதனால் நாடகம் பட்டித்தொட்டியெங்கும் பரவத் தொடங்கியது! அதற்குப் பிறகுதான் சிவாஜி பிலிம்ஸே பி. மாதவன் இயக்கத்தில் இதை படமாக்கினார்கள்.
நாடகத்தில் சிவாஜியின் மனைவி சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜி. சகுந்தலா! ஆனால், படத்தில் இந்த வேடத்தில் பத்மினி நடித்தார்!
சிவாஜிக்கு இந்த பிராமண கதாபாத்திரம் அத்தனை இயற்கையாக அமைந்தது! அவரே ஒரு பேட்டியில் சொன்னார்!
`எனக்கு நிறைய பிராமண நண்பர்கள் உண்டு! மேலும் தொழிலதிபர்கள் டி.எஸ். கிருஷ்ணா, சித்ரா நாராயணசாமி இவர்களின் நடை உடை பாவனைகளைப் பார்த்தேன். அதை அப்படியே கிரகித்துக் கொண்டுதான் இந்த ஜெனரல் மானேஜர் கதாபாத்திரத்தைச் செய்தேன்’ என்றார்.
மிகக்குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டு, மிகப்பெரிய வெற்றியை அடைந்த படம் ‘வியட்நாம் வீடு!’
சிவாஜியின் அடுத்த படமும் பி. மாதவன் இயக்கிய படம்தான்!
இந்த படம் சிவாஜி ரசிகர்களுக்கு மிகப்பெரிய தீனியாக இருந்தது!
அந்த படம்தான் `ராமன் எத்தனை ராமனடி!’
இதில் சிவாஜி ஒரு கிராமத்து அப்பாவி இளைஞனாக இருந்து சினிமாவில் மிகப்பெரிய கதாநாயகனாக உயரும் கதை! இது ஒரு வகையில் சிவாஜியின் சுயசரிதை மாதிரியே இருந்தது! இந்த படத்தில் சிவாஜியின் கடந்தகால
படங்களின் காட்சிகளையெல்லாம் காட்டுவார்கள்.
ரசிகர்களுக்கு ஏதோ மொத்த சிவாஜி படங்களையும் பார்த்த திருப்தி ஏற்பட்டது! இந்த படத்தில் ஒரு காட்சியில் அவர் `சத்திரபதி சிவாஜி’ யாக நடிப்பார்! திரையில் சுமார் 15 – 20 நிமிடங்கள் இந்த காட்சி வரும்!
இந்த படத்திற்கு கதை – வசனம் எழுதியவர் பாலமுருகன்! ஆனால் இந்த ‘சத்திரபதி சிவாஜி’ நாடகம் என்பது அப்போது தொலைக்காட்சிக்காக சிவாஜி நடித்துக் கொடுத்த ஒரு நாடகம்!
இந்த நாடகத்தை தொலைக்காட்சிக்காக எழுதியவர் அன்றைய பிரபல கவிஞரும் எழுத்தாளருமான தஞ்சைவாணன்!
அவரை திரைக்கும் எழுத அழைத்தார் சிவாஜி! இந்த காட்சி திரையில் வரும் போது கைத்தட்டல் அடங்கவே வெகுநேரமாகும்.
http://www.dinamalarnellai.com/site/...ews_Nellai.jpg
ராமன் எத்தனை ராமனடி’ படம் மாபெரும் வெற்றியடைந்தது! இதில் ஆரம்ப கட்டத்தில் சிவாஜி ஒரு வெகுளியான கிராமத்து இளைஞன்! பின்னாளில் அதே கிராமத்து இளைஞன் சினிமாவில் முன்னணிக் கதாநாயகன்!
இந்த படத்தின் இன்னொரு சிறப்பே பாடல்கள்தான்! ஒரே பாட்டு இரண்டு முறை வரும். அந்த பாட்டுத்தான் `அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு.’ ஆரம்பத்தில் இந்த பாடலை கிராமத்து சிவாஜி பாடும்போது பாடலின் தாளம் கொஞ்சம் வேகமாக இருக்கும்.
அதே சிவாஜி சினிமாவில் பெரிய கதாநாயகனாகி, அதே கிராமத்துக்கு திரும்பி வரும் போது, எந்த பெண்ணுக்காக தான் உழைப்பால் உயர்ந்து வந்தானோ, அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகியிருக்கும்.
அதனால், அதே பாட்டை இப்போது பாடும் போது அது லேசான சோகத்துடன் கூடிய மெல்லிய ராகமாக பவனி வரும்!
இந்த படம் வெளியான காலத்தில் வானொலியில் இந்த பாட்டுத்தான் அடிக்கடி ஒலிக்கும். எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்குமே சங்கீதத்தில் மிகுந்த ரசனை உண்டு. தங்கள் படங்களின் பாடல்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார்கள்.
எம்.ஜி.ஆர். பாடல் உருவாவதற்கு முன்பே அந்த டியூனைக் கேட்டு, பிடித்திருந்தால் மட்டுமே பாடலை பதிவு செய்ய சொல்லுவார். சிவாஜி, பாடல் தயாரானவுடன் தன் கருத்தைச் சொல்லுவார்! அப்படி அவர் மாற்றிய பாடல் ஒன்று கூட உண்டு!
‘பார் மகளே பார்’ படத்தில் வந்த ‘நீரோடும் வைகையிலே’ பாடல் முதலில் ஆண் குரல் இல்லாமலேயே பதிவானது!
ஆண் குரலுக்கு பதிலாக விசில் சத்தம்தான் இருக்கும். சிவாஜி இதை ஏற்றுக்கொள்ளவில்லை! இசையமைப்பாளர் விஸ்வநாதனை அழைத்து அந்த விசில் கூடவே ஆண் குரலை சேர்க்கச் சொன்னார்.
அதனால் படத்தில் சிவாஜிக்காக டி.எம்.எஸ். பாடும்போது விசிலுடன் தான் ஆண் குரல் பாடல் துவங்கும்! அதே போல் இசையமைப்பாளர்கள் மீதும், கவிஞர்கள் மீதும் எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்குமே அளவு கடந்த அன்பும் பாசமும் உண்டு! இவர்களை பற்றி சிவாஜியே பதிவு செய்திருக்கிறார்.
`ஒரு படத்தின் பாடல்கள் மக்கள் மனதில் பதிந்தால் அந்த பெருமை, பாட்டெழுதியவரையும், இசையமைப்பாளரையும், பாடியவரையும் சாரும். சினிமாவுக்கு எத்தனையோ கவிஞர்கள் பாட்டு எழுதியிருக்கிறார்கள். முன்னாளில் பாபநாசம் சிவன் போன்ற பெரியவர்கள் இருந்தார்கள். பின்னாளில் கவிஞர் கா.மு. ஷெரிப், மருதகாசி, உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று பலரைச் சொல்லலாம்.
அந்த காலகட்டத்தில் குறிப்பிடத் தக்கவர் கவிஞர் கண்ணதாசன். நான் நடித்த பல படங்களுக்காக எண்ணற்ற பாடல்களை எழுதிக் கொடுத்தவர், என் அருமை நண்பர் கவிஞர் கண்ணதாசன்!
அவரை நான் புகழாத நேரமே இல்லை! அவரைப் பாராட்டும் போது
‘கவிஞா! என் கண்ணே! கண்ணதாசா!
நீ கவிஞன் கம்பனையும் மிஞ்சுகிறாய்!
காளிதாசனையும் மிஞ்சுகிறாய்!’ என்பேன்.
பொதுவாகவே எனக்கு சிறு வயது முதலே கவிதை மீது அதிக நாட்டம் உண்டு. அதனால்தான், நான் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில், முழுக்க முழுக்க கவிதை வடிவிலேயே ‘களம் கண்ட கவிஞன்’ என்ற நாடகத்தை நடத்தினேன்.
இசையமைப்பாளர்கள் வரிசையை நினைத்துப் பார்த்தால், அந்த காலத்தில் இருந்த ராஜகோபாலய்யர், எஸ்.வி. வெங்கட்ராமன், சுப்பையா நாயுடு, ஜி. ராமநாதன் போன்றவர்கள் நினைவுக்கு வருவார்கள். இவர்கள் சங்கீத ஜாம்பவான்கள்!
அதற்கு பிறகு விஸ்வநாதன்– ராமமூர்த்தி, கே. வி. மகாதேவன் ஆகியோர் பல படங்களுக்கு ஜனரஞ்சகமாக பாடல்கள் அமைத்து பல்லாயிரம் பாடல்களைத் தந்திருக்கிறார்கள்.
இதே காலத்தில்தான் சங்கர்– கணேஷும் இருந்தார்கள்.
இவர்கள் வரிசையில் கிராமியப் பாடல்களைப் பெரிதும் பிரபலப்படுத்தி யவர்களில் இளையராஜா முக்கியமானவர்!
தஞ்சாவூரிலுள்ள சூரக்கோட்டை கிராமத்தில், எனக்கு ஒரு வீடு இருக்கிறது.
ஒரு முறை அங்கு தங்கியிருந்தபோது, ஒரு நாள் அதிகாலையில் ஏதோ பாட்டுச் சத்தம் கேட்டது. வெளியில் வந்து பார்த்தால், வயலில் ஐம்பது – அறுபது பெண்கள் நடவு நட்டுக்கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பெண் பாடிக்கொண்டிருந்தாள் `போவோமா ஊர்கோலம்’ என்று. மற்ற பெண்கள் அதை வாங்கிப் பாடிக்கொண்டிருந்தார்கள். எவ்வளவு மக்களுடைய மனதை இளையராஜாவின் இசை தொட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன்.
இசையமைப்பாளர்கள் வரிசையில் சமீப காலத்தில் ஏ. ஆர். ரஹ்மான், தேவா போன்ற புதியவர்கள், மக்களை கவரும் வண்ணம் இசையமைத்து வருகிறார்கள்.
இசையைப் பற்றிச் சொல்லும்போது பின்னணிப் பாடகர்கள் நினைவுக்கு வருகிறார்கள். அந்த காலத்தில் சி.எஸ். ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.எஸ்., பி.பி. ஸ்ரீனிவாஸ், சுசீலா, ஜானகி போன்றவர்கள் நிறைய படங்களுக்கு பின்னணி பாடியிருக்கிறார்கள். அதற்கு அடுத்த தலைமுறையில்தான் எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ், சித்ரா போன்றவர்கள் வந்தார்கள்.
அவர்கள் எல்லோருமே தங்கள் இனிய குரலால், மக்களின் பாராட்டைப் பெற்றவர்கள். சமீப காலத்தில் நிறைய இசைக்குழுக்களைப் பார்க்கிறோம். புதுப்புது இளம் பாடகர்களையெல்லாம் சில டி.வி. நிகழ்ச்சிகளில் அறிமுகப்படுத்துகிறார்கள். இதெல்லாம் இசைத்துறையின் வளர்ச்சியைக் காட்டுகிறது.
ஆனால், என் தொழிலில் நான் `முதல் மரியாதை’ கொடுப்பது இயக்குநர்களுக்குத்தான்! காரணம், அவர்தான் கேப்டன் ஆப் தி ஷிப். என்னை எப்படி கொண்டு போவதென்று அவர்தான் தீர்மானிக்கிறார்.
என்னுடைய திறமைகளை எல்லாம் எப்படி வெளியில் கொண்டு வருவது என்றும் அவர்தான் பாடுபடுகிறார். நான் என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரிந்தாலும், அதை சரியாக சொல்லிக் கொடுப்பவர் இயக்குநர்தான்.
ஒரு படம் தோல்வி அடைந்து விட்டால்,`சிவாஜி நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் அந்த படத்தை இயக்கிய இயக்குநர்தான் சரியில்லை’ என்று சொல்வார்கள்.
ஒரு படம் நன்றாக ஓடியது என்றால், `சிவாஜி நன்றாக நடித்திருக்கிறார்’ என்பார்கள். இதனால் இயக்குநருக்கு பெருமை சேராது! படம் சரியாக போகவில்லையென்றால் பாதிக்கப்படுவது இயக்குநர்தான். அதனால் இயக்குநரிடம்தான் திறமையெல்லாம் இருக்கிறது.
இயக்குநர்கள் பல பொறுப்புக்களை எடுத்துக்கொண்டு வெற்றி பெறுவதால்தான், அந்த அருமை எனக்குத் தெரியும். அவர்களிடம் நான் மிகுந்த அன்பு செலுத்துகிறேன். அவர்கள் மீது அளவு கடந்த மரியாதை வைத்திருக்கிறேன்.
செட்டிற்குள் போனால் நான் வெறும் நடிகன் மட்டும்தான்! அங்கே போனவுடன் இயக்குநரிடம் `அப்பா! நீங்கள்தான் இங்கே தலைவர்! நீங்கள் சொல்ற வேலையைச் செய்யத்தான் நான் இங்கே வந்திருக்கேன். என்னை எப்படி வேணும்னாலும் வேலை வாங்கிக்குங்க’ என்பேன். அடுத்து சிவாஜியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது!
(தொடரும்)
சுப்ரமணியம் போன்ற அரை வேக்காட்டு ஆட்கள் ,நடிகர்திலகத்தை யானை பார்த்த குருடனை போல உணர்ந்து உளறுவதை நிறுத்த வேண்டும். இரும்புத்திரை, படிக்காத மேதை,தெய்வப்பிறவி இவையெல்லாம் ,Stanislavsky பள்ளியில் வராதா?முட்டாள்கள் விஷயம் தெரியாவிட்டால் ,அவரை பார்த்த அனுபவத்தை மட்டுமே எழுதினால் போதும். சகிக்க முடியாத உளறல்கள் .
கால யந்திரத்தில் பின்னோக்கி பயணித்து சைக்கிடெலிக் ட்ரான்ஸ் அனுபவம் பெற்றதுண்டா? கிட்டத்தட்ட ஜார்தா கொஞ்சம் மிகையாக எடுத்தால் அந்த அனுபவம் கிட்டலாம். சிவகாமியின் செல்வன் நூறாவது நாள் விழா நடந்த ரஷியன் கலாசார மண்டபத்தில் எனக்கு பிடித்த பருவ வயதிற்கு சென்று ,கை தட்டி விசிலடித்து கூத்தடித்து என்னை மறந்த வேளை ,இன்றும்,என்றும் இனிப்பது.
வாணிஸ்ரீ,Y .G .மஹேந்திரா,ராம்குமார்,சீ.வீ.ராஜேந்திரன்,லதா,எம்.எஸ ்.வீ புதல்வி,சிதம்பரத்தின் (கமலா)புதல்வர்,கனகசபை பேரன்,சேரன்,வீரரின் அன்னை,என்று சபை நிறைந்தது.
நம் Y .Gஆரம்பத்தையே களை கட்ட வைத்தார். சிவாஜி ஒருவர் மட்டுமே சாதனையாளர்,அவர் படங்களே பாடம் என்று துவங்கினார்.
லதா கொஞ்சம் சொதப்பல்,ஆனாலும் ,சிவாஜியுடன் தன் நல் அனுபவத்தை பரவசத்துடன் நினைவு கூர்ந்தார்.
வாணிஸ்ரீயின் சரளமான extempore பேச்சுதான் அன்றைய highlight . தான் ,குடும்பத்தின் பொருட்டு சினிமாவை,வெளிச்சத்தை தவிர்த்து வாழ்ந்ததை குறிப்பிட்டு ,குடும்ப தலைவியாய் வாழ்ந்த அனுபவத்தை மிக அழகான முரண்களோடு விளக்கினார். நடிகர்திலகத்தின் ரசிகையாக தொடங்கி அவருடன் நடிக்கும் போது ஒரே குடும்பமாக பழகி களித்ததை நினைவு கூர்ந்து,அவர் தன்னை ட்ரெஸ்ஸிங் சென்ஸ் க்கு புகழ்ந்து தள்ளியதை இனிப்புடன் குறிப்பிட்டார். ஒரு நடிகர்திலகம்தான் உலகிற்கு,இனி பிறக்கவே முடியாது என உறுதி பட உரைத்தார்.
சீ.வீ. ராஜேந்திரன், இந்த படத்தை எடுக்கும் யோசனையுடன் சென்று ,நடிகர்திலகம் தனக்கு ஊக்கம் கொடுத்ததை கூறினார். நடிகர்திலகம் தான் பாத்திரத்துக்காக தானே உடை,சிகை ,நடிப்பு முறை எல்லாவற்றையும் முடிவெடுத்து செயல் படுத்தும் லாவகத்தை குறிப்பிட்டார். எம்.எஸ்.வீ ,இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பு கொண்ட தைரியத்தை புகழ்ந்தார்.
சேரன் , தான் வெறி கொண்ட நடிகர்திலகத்தின் ரசிகனாக தன் அனுபவங்களை சொல்லி, அவரின் நாயகியர்களை தானும் காதலித்ததை வேடிக்கையாக குறித்தார். நடிகர்திலகத்தின் கொள்கையும் அரசியலும் தூய்மையும் மக்களால் புரிந்து கொள்ள பட்டிருந்தால் ,தமிழகமே இன்று நிமிர்ந்திருக்கும் என்பதை குறிப்பிட்டார்.
சிதம்பர புதல்வர் ,தான் நடிகர்திலகத்தின் ரசிகனாக இருந்த அனுபவத்தை சுவை பட கூறினார்.
விருந்தினர்,சிறப்பு விருந்தினர்,பங்களிப்பாளர் (படத்திற்கு)எல்லோருக்கும் பாராட்டு தட்டு,சால்வைகள் என்று சம்பிரதாயங்கள். நண்பர்களுக்குள் அரட்டை குதூகலம் ,படத்தை கண்டு களித்தல் என்று அபூர்வ மாலை பொழுது முடிந்தது.
ராம்குமாரின் பேச்சு வழக்கம் போல cliched .குறிப்பிட ஒன்றுமில்லை.
இரண்டு விஷயங்கள்.
நீங்கள் ஒரு வீட்டிற்கு அழைக்க படுகிறீர்கள் என்று வைப்போம். வர ஒப்பு கொண்டு விட்டு, அந்த வீட்டிற்கு சென்றால் ,அந்த வீட்டு மனிதர்களுக்கும் ,உங்களுக்கும் பொதுவாக உகந்த விஷயத்தைத்தானே பேச வேண்டும்? ஒருவர் வெறுத்து ஒதுக்கும் விஷயத்தையா பேசுவது?இந்த சபை நாகரிகம் கூட தெரியாதவர்கள் பொது வாழ்வுக்கோ .சபைக்கோ வர அருகதையற்றவர்கள். அதை சிலரிடம் எதிர்பார்க்க முடியாது.
எனது கனவு கன்னியை ஆர்திரிடிஸ் கால்களுடன் ,நடக்க முடியாமல் நடந்து வந்ததை காணும் போது ,மனது வலிக்கவே செய்தது.
முரளி ,ராகவேந்தர் இருவருக்கும் எங்கள் நன்றிகள்,வாழ்த்துக்கள்.
சிவகாமியின் செல்வன் பிறந்த தினத்தன்று மீண்டும் மதுரை மாநகரில் சிவகாமியின் செல்வன்.
மீனாட்சி பட்டணத்தில் மீனாட்சி திரையரங்கில்
ஜூலை 15 சிவகாமியின் செல்வன் பிறந்த நாளில் வெளியாகி ராஜாமணியின் தவப்புதல்வனின் நினைவு நாளான ஜூலை 21-லும் வெற்றி முரசு கொட்ட வருகிறார்.
அன்புடன்
http://i1094.photobucket.com/albums/...Kamarajar6.jpg
[புகைப்படத்திற்கு நன்றி சுவாமி!]
இன்றைக்கு 113 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் உதித்த துருவ நட்சத்திரமே!
விருதுபட்டி ஈன்றெடுத்த கர்ம வீரரே!
சுதந்திர பாரதத்தின் சோஷலிச சிற்பியே!
விடுதலை இந்தியாவில் தமிழகத்தின் விடிவெள்ளியே!
1947-க்கு பின் இந்த
அறுபத்தியொன்பது ஆண்டு தமிழக வரலாற்றில் ஒரே ஒரு பொற்கால ஆட்சி வழங்கிய அற்புத முதல்வனே!
தொழிற் புரட்சி ஏற்படுத்திய தொழிலாளர் தோழனே!
பல்வேறு அணைகளை கட்டி பாசன வசதியை மேம்படுத்தி
பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் அளித்த ஏழை பங்காளனே!
பள்ளி சிறார்களுக்கு மதிய உணவு அள்ளி தந்த படிக்காத மேதையே!
எண்ணிக்கையில் வெறும் 9 அமைச்சர்களை வைத்துக்கொண்டு [அதிலும் முதல் இரண்டு அமைச்சரவைகளில் எட்டே பேர்] ஊழலற்ற அரசாங்கமாய் வெளிப்படையான நிர்வாகமாய் எண்ணிலடங்கா மக்கள் நல்வாழ்வு திட்டங்களை நிறைவேற்றிய செயல் வீரனே!
அகில இந்தியாவையும் ஆர் ஆள வேண்டும் என்பதை
அகிலத்திற்கே அறிவித்த பாரத ரத்தினமே!
ஆட்சியிலிருந்தவரை ஆராலும் தோற்கடிக்கப்பட முடியாத சாதனை சரித்திரமே!
1947-க்கு பின் இந்த
அறுபத்தியொன்பது ஆண்டு தமிழக வரலாற்றில்
ஜனநாயக முறையில் தேர்தலை சந்தித்து பெரும்பான்மை பலம் பெற்று
ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்து மீண்டும்
ஜனநாயக முறையில் தேர்தலை சந்தித்து பெரும்பான்மை பலம் பெற்று
வெற்றி பெற்ற ஒரே தமிழக தலைவனே!
என்றென்றும் எங்கள் பெருந்தலைவனே!
ஏங்கி கிடக்கிறோம் பல்லாயிரம்
எப்போது வரப்போகிறது உன் மறு அவதாரம்
அன்றுதான் ஆரம்பமாகும்
தாழ்ந்து கிடக்கும் தமிழகம்
தலை நிமிரப் போகும் பொற்காலம்!
அன்புடன்
பொதுவாகவே மீள் பதிவு என்பது எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லாத ஒன்று. ஆனால் இந்த மீள் பதிவு நானே இரண்டாவது முறையாக விரும்பி செய்த ஒன்று.
காமராசர்-
ஒரு நல்ல மனம் கொண்ட எளிமையான அரசியல்வாதி. தமிழகத்தின் மிக சிறந்த முதல்வர். இந்த வரிசையில் அண்ணா வந்திருப்பார் இன்னும் சில ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தால்.ராஜாஜி தொடர்ந்திருந்தால் தமிழகம் இன்னும் நன்றாக திட்டத்துடன் முன்னேறி இருக்கும்.
முன்னேற்றம் என்பதெல்லாம் பூஜ்யத்திலிருந்து தொடங்கியதால் ஏற்பட்ட விறு விறு மாற்றங்களே. அந்த காலகட்டத்தில் அவர் இருந்தது அவருடைய அதிர்ஷ்டம்.பல முன்னேற்ற திட்டங்கள்,இலவச கல்வி,மதிய உணவு ,பிற்படுத்த பட்டோர் நலம் போன்ற பல திட்டங்களுக்கு இந்த பச்சை தமிழனுக்கு (ஆசான் பெரியார்) புகழ் சேராமல் யார் யாருக்கோ போய் சேர்ந்தது. மது என்பது தமிழகத்தை எட்டியே பார்க்கவில்லை.
சத்யமூர்த்தி ,ராஜாஜியுடன் ஏற்பட்ட பிணக்கில் இவரை தூக்கி விட, ராஜாஜியும் பார்ப்பன எதிர்ப்பு அலையை புரிந்து கொள்ளாமல், கவர்னர் ஜெனெரல் என்ற பதவியில் இருந்து விட்டு பல படிகள் தாழ்ந்து தமிழக முதல்வர் ஆனார். குலதொழில்-கல்வி திட்டம் மிக மிக தொலை நோக்கு கொண்டது. பல சமூகங்கள் முன்னேறி இருக்கும். இந்த திட்டம் தோல்வியடைய பார்ப்பனர்களுக்கு தொழிலே இல்லாமல் போனது ,பார்ப்பன சூழ்ச்சியாய் பார்க்க பட்டது.
காமராசர் ,ஆட்சியை துறந்து(காமராஜ் திட்டம்) ,பக்தவத்சலம் போன்ற தகுதி,திறமை,நேர்மை இல்லாதவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தது ,திராவிட இயக்கங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்தது. மத்திய அரசுடன் இணங்கிய திராவிட இயக்கங்கள், கச்ச தீவு,காவிரி,முல்லை-பெரியார் பிரச்சினை,இலங்கை தமிழர் பிரச்சினை ,மது விலக்கு , கல்வி,சுகாதாரம் எல்லாவற்றிலும் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து ,இந்தியாவுக்கே மோசமான முன்னுதாரணம் ஆனது.
எனக்கு காமராசர்,அண்ணா, கருணாநிதி போன்றோருடன் ,ஓரளவு மதிப்பு உண்டு.
காமராசரின் மிக பெரிய தோல்விகளுக்கு காரணமான தலைமை தகுதியில்லாத குணங்கள்.(அண்ணாவிற்கு தலைவராக முதல் மதிப்பெண் கொடுக்கலாம் )
மாற்றத்தை உணராத பழமை பிடிவாதம்.
கருத்துக்களை சரியாக வெளியிட தெரியா விட்டாலும்,பல பேச்சாளர்களை வளர்த்திருக்கலாம்.
செல்வாக்கு மிக்க சிவாஜி போன்றவர்களை சரியாக உபயோக படுத்தாத உதாசீனம்.சிவாஜி என்ற ஒரு அற்புதமான தூய மனம் கொண்ட ,சுத்தமான மனிதருக்கு,இவரால் இழப்புகள் மிக அதிகம். சிவாஜியின் உன்னதம் தொட்ட காலங்கள்(purple patch ) ,அவர் அரசியல் யமனிடம் இருந்து விலகியிருந்த 1957 முதல் 1964 வரையான காலங்களே.
தன்னுடைய மாநிலத்தை சேர்ந்த கலைஞர்களை , பல்திறமை கொண்டவர்களை தேசிய அளவில் இவர் செல்வாக்கை வைத்து இனம் காட்டவில்லை.ஒரு அவ்ரங்கசீப் போல ரசனை கெட்ட ஆள்.சிவாஜிக்கு உலக அளவில் வந்த பெருமைக்கு ஈடாக, இந்தியாவில் வராமல் போனதற்கு ,இந்த மாதிரி ரசனை கெட்டவர்களின் பின்னால் போனதே காரணம்.
இரண்டாம் நிலை தலைவர்களை வளர்க்காமல், அடுத்த தலைமையை இனம் காட்டாமல் போனது.சுத்தமாக தலைமை குணமே இல்லாத அரைகுறை அரசியல்வாதி.
இந்திரா எதிர்ப்பு அலையை ,ஜெயப்ரகாஷ் போன்று சரியாக திட்டமிடாதது.
தன்னுடன் தன் கட்சிக்கும் சமாதி கட்டியது.
தமிழகத்தின் பிரத்யேக நலன்களை புறக்கணித்து,தனித்தன்மை துறந்து ,தேசியத்தில் இணைய துடித்து, தேசிய தலைமை தேடி வந்த போதும் ஏற்று கொள்ளாத தாழ்மையுணர்வு. இது அவரை இரண்டுங்கெட்டான் அரசியல் ஞான சூன்யமாக இனம் காட்டி விட்டது.
ஜனநாயகத்தில் ,மக்கள் மன மாற்றங்களை உணராத ,குண்டு சட்டியில் குதிரை ஓட்டியவர்.(மொழி கொள்கையிலும் தெளிவில்லை)
ஆனாலும் ,அவருடைய நல்ல மனம் கொண்ட,மக்களிடம் நிஜமான அக்கறை கொண்ட ,நல்லாட்சிக்கு தலை வணக்கம்.
அந்தக் கடவுளைப் போல்
அத்தனை அழகில்லை.
ஆனாலும்,
அகன்று பரந்த
அந்த முகத்தில்
அவளுக்குப் போலவே உண்டு-
கருணை விழிகள் ரெண்டு.
அவளுக்கிருப்பது போல்
இப்படியும்,அப்படியுமாய்
முளைத்த கைகள்
நான்கில்லை இங்கே.
இடுப்புக்குக் கீழே
வழிந்து நீளும்
இரண்டே கைகள்.
இரண்டுமே,
கோடிக் கோடி ஜனங்கள்
தம் கண்களில்
நன்றிகளோடு
ஒற்றிக் கொண்டவை.
அவள் திருமேனியில்
இறுகி மினுக்கும்
பட்டாடை இல்லை இங்கே.
தொள தொளவென்று
அணிந்த உடைகள்..
அந்த வெள்ளை மனசு
போலவே
மிகத் தாராளம்.
அவள் போல் அமர்ந்து
அருளாட்சி செய்ய
வெண் தாமரை இருக்கை
இல்லை இங்கே.
அலைந்தலைந்து
நல்லது செய்த
அந்த அன்புருவத்தின்
வீற்றிருப்பெல்லாம்
ஏழையரின் இதயங்களில்.
அவள் மடியிருந்து
கனிவான இசை சிந்தும்
கை வீணை கிடையாதிங்கே.
சத்திய எச்சில் தெறிக்கப்
பேசுகிற பேச்சிலெல்லாம்
சங்கீத இனிமை இங்கே.
சரஸ்வதி அல்ல.
நாங்கள் வணங்கிப் பணியும்
கல்விக் கடவுளுக்கு
"காமராஜ்" என்று பெயர்.