-
"சூரியன் உதித்ததுங்கோ இங்கே காரிருள் மறைந்ததுங்கோ" இந்த வரிகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் நீக்குவது தவறு. எம்ஜிஆர் எதையுமே தீர்க்கமாக பார்த்து தான் செய்வார். அவர் அனுமதி இல்லாமல் பாடல்கள் மட்டுமல்ல, எந்த ஒரு காட்சியும் அவர் திரைப்படங்களில் இடம் பெற்றது கிடையாது. எம்ஜிஆரை புரிந்து கொள்ளாதவர்கள் மனப்பாங்கு இது. சூரியன் என்றால் என்ன தி.மு.க.வோ அல்லது கருணாநிதியோ கிடையாது. எம்ஜிஆர் மட்டும்தான்.ஓயாது உழைப்பதில் சூரியனாக இருப்பவரும் அவரே, ஒவ்வொரு வீட்டிலும் சந்திரோதயம் ஆக இருப்பவர்அவரே. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி கட்டிலில் அமர்ந்த உடன் பாமர மக்களின் அறியாமை, துன்பம் என்ற இருள் நீங்கி ஒளிவீசும் என்பதாகும். பின்னால் வரும் வரிகளை கவனிக்கவேண்டும் சரித்திர மாறுது இனிமே சரியா போகும். இது மட்டுமல்ல இந்த நான்கு வரிகளும் சர்வ சாதாரணமாகவே கேட்டவுடனே தெரிந்து விடுமே எம்ஜிஆர் தீர்க்கதரிசி என்பது. இன்னும் இது போல் எத்தனையோ சொல்லியிருக்கிறார். எம்ஜிஆரை நன்கு புரிந்து கொள்ளாதவர்கள் இப்படித்தான்அரசியல் பிரச்சாரங்களின் போது,நம்நாடு திரைப்படத்தில் உள்ள இந்தப் பாடலில் இந்த வரிகளை நீக்கி விட்டு ஒளிபரப்பினார்கள், அடிமைப்பெண் திரைப்பட பாடலை ஒளிபரப்பும் போது ஓயாது உழைப்பதில் சூரியன் நீ என்ற வரிகளை நீக்கி விட்டு ஒளிபரப்புகிறார்கள்.நாடோடி மன்னன் டிஜிட்டல் திரைப்படத்தில் நம்ம திராவிட குலமே என்று தொடங்கும் ஏழு நிமிடம் பாடலை வேண்டுமென்றே நீக்கிவிட்டார்கள் வருக வருக வேந்தே என்று, எங்கள் திராவிட சூரியனே என்றெல்லாம் சிறப்பாக வரும் பாடல் அது. அதுமட்டுமல்ல 2014 ஆம் ஆண்டு டிஜிட்டலில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திலும், எம் என் நம்பியார் எம்ஜிஆரை பார்த்து சொல்வார் வாள் சண்டையின் போது, நீ அணையப் போகும் சுடர், அஸ்தமித்த சூரியன் என்று, அதற்கு எம்ஜிஆர் அவர்கள் அஸ்தமித்த சூரியன் அடுத்த நாளே உதயம் ஆவான் என்று சொல்லி சண்டை போடுவார். இதையும் வேண்டுமென்றே கட் செய்துவிட்டு தான் எடுத்தார்கள். இதெல்லாம் தீர்க்கதரிசனமாக உங்களுக்கு தெரியவில்லையா. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் இந்த காட்சி எடுக்கப்பட்டபோது 64 65 இருக்கும்அந்த நேரத்திலெல்லாம் காங்கிரஸ் வலுவான நிலையில் இருந்தபோது சூரியன் அஸ்தமித்து விடும் என்றெல்லாம் பலவாறாக பேசிக்கொண்டிருந்தார்கள் , அப்படி இருக்கையில் அண்ணாவை ஆட்சிக்கட்டிலில் ஏற்றி உதய சூரியனை ஒளிர செய்தவர் எம்ஜிஆர். அதனால் தீர்க்கதரிசி இறைவன் எம்ஜிஆரை உண்மையாகப் புரிந்து கொண்டு அவர் வழி நடப்பவர் புனிதமானவர். தீர்க்கமாக பார்த்து நல்வழி நடவுங்கள். தவறு ஏதும் இருந்தால் அடியேனை மன்னித்துக் கொள்ளுங்கள். வாழ்க எம் ஜி ஆர் புகழ்! வாழ்க எம் ஜி ஆர் பக்தர்கள்..........s mm
-
தொடரின் இறுதி பதிவு. உ...த்தமன் 15
நீங்க ஆரம்பத்திலேயே நினைத்திருக்கலாம். "உத்தமனு"க்கு ஏன் உ போட்டு நிறைய புள்ளிகள் வைத்து பின் எழுத வேண்டிய காரணத்தை யோசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வேறு ஒன்றும் இல்லை.படத்தின் உள்ளும் புறமும் இழுவையின் தன்மையை குறிப்பால் உணர்த்தவேதான் இந்த புள்ளி சமாசாரம்.
படத்தை யாரும் தனியாக சென்று பார்த்துவிட முடியாது. அப்படி ஒரு அறுவை என்று சொல்ல கேள்வி. . நானும் இந்தப்படத்தை பார்க்கவில்லை. ஆனால் அதன் இந்திப்பதிப்பு ஆ கலே லகு ஜா வில் சசிகபூர், ஷர்மிளா டாகூர் அசத்தலாக நடித்திருப்பார்கள். கதைக்கு ஏற்ற பொருத்தமான ஜோடி மற்றும் அளவான நடிப்பால் படம் வெற்றி மகுடத்தில் ஜொலிக்கும்படி அமைந்திருக்கும்.
ஆனால் "உ....த்தமனை" பார்த்தவர்கள் படம் அய்யனும் மஞ்சுளாவும் அருவருப்பாக நடித்ததாக சொன்னதும் படம் பார்க்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.
ஆனால் கைபிள்ளைகள் அதை எப்படி கொண்டாடுகிறார்களோ தெரியவில்லை. ஒருவேளை அய்யன் தன் கைபிள்ளைகளை மனச்சிதைவு ஏற்படுத்தி விட்டாரோ என்று நினைக்க தோன்றுகிறது.
நல்ல கதையை அய்யன் தனது மிகையான கசாப்பு நடிப்பை பயன்படுத்தி கொத்தி குதறுவதை பார்த்த உண்மை ரசிகர்கள் மனம் பதைத்து வெதும்புவதை காணமுடிந்தது. இதனால் அய்யனின் நடிப்பை ஒதுக்கி தள்ளி விட்டு வேறு சின்ன சின்ன நடிகர்களின் படங்களை பார்க்க ஆரம்பித்தார்கள். அய்யனின் மிகை நடிப்பை பார்த்து மனம் வெறுத்தவர்கள், இளையவர்களின் இயற்கை நடிப்பில் மனம் நெகிழ்ந்து அய்யனை உதறி தள்ளி விட்டு சென்று விட்டார்கள்.
அய்யனின் எதிர்காலத்தை அவரே சிதைத்துக்கொண்டு மூலையில் போய் ஒதுங்கி விட்ட பிறகு எனக்கு அரசாங்கம் விருது கொடுத்து கெளரவிக்கவில்லை என்று புலம்ப ஆரம்பித்தார்.
அப்படியிருந்தும் அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கட்சி செய்த உதவி என்று நினைக்காமல் பிரதமர் பதவி கொடுக்கவில்லையே என்கிற மாதிரி ஏக்கம் வேறு. தற்போது வந்த "வியட்நாம் வீடு" அவரது தீவிர ரசிகரான சுப்புவை எங்கே கொண்டு போய் விட்டதோ தெரியவில்லை. படத்தில் அவர் போடும் கூச்சல் பக்கத்து குடும்பங்களையும் சிதைத்து விடும் அளவுக்கு இருக்கும். பட்டாசு இத்தனை டெசிபல்தான் ஒலி எழுப்ப வேண்டும் என்று கட்டுப்பாடு விதிப்பர்கள் அய்யனின் அலறலுக்கு டெசிபல் நிர்ணயித்தால் தியேட்டருக்கு வருபவர்கள் நிம்மதியாக உறங்கவாவது வழி பிறக்கும். பாதி தூக்கத்தில் அய்யனின் அலறல் ஒலி கேட்டு பயப்பட தேவையில்லை அல்லவா கைஸ்களே.
சரி "உ....த்தமனு"க்கு வருவோம். படத்தை என்ன செய்தும் நகர்த்த முடியவில்லை என்பதை உணர்ந்ததும் படத்தை 50 வது நாளில் கீழே போட்டு விட்டு ஓடிப் போயினர். அவர்கள் கனவு கலைந்து போனது. ஆனால் அந்தப் பகுதி மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர்.
அந்தப்பக்கம் போனவர்களை எல்லாம் பிடித்து தியேட்டருக்குள் போட்டதால் அந்தப் பக்கம் டிராபிக் குறைந்து வெறிச்சோடி போனது. இந்தக் காலத்தில் டிராபிக்கை கட்டுப்படுத்த கொரானா பயன்பட்ட மாதிரி அந்தக்காலத்தில் அய்யன் படங்கள் மூலமாகத்தான் டிராபிக்கை கட்டுப்படுத்தியிருப்பார்கள் போல தெரிகிறது.
படத்தை தூக்கியபிறகுதான் அந்தப் பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இவ்வளவு செய்தும் "உத்தமன்" வசூலை வெளியிட மறுத்து விட்டனர். கடல்கடந்து படத்தை ஓட்டிய படத்தின் கப்ஸா வசூலை அளந்து விட்டவர்கள் எல்லாம் உள்ளூரில் ஓட்டிய "உ....த்தமன்" வசூலை வெளியிட தயாரா? அதுதான் பட்டறை போட்டாகி விட்டதே?, பின்னர் என்ன தயக்கம் கைஸ்களே?
இந்த கத்தல் நடிகனின் முத்தல் நடிப்பில் கதிகலங்கி சித்தம் தடுமாறிய அநேகர் மக்கள் திலகத்தின் ரசிகர்களாக மாறியதால்தான் மக்கள் திலகம் நம்பர் ஒன் நடிகராக மக்கள் மனதில் கொலுவிருந்தார் என்று கூறலாம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்தியாவிலும் சிறந்த நடிகராக இறுதி வரை திரையுலகில் வலம் வந்தார் என்று சினிமா ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
அது மட்டுமா? அவருடைய இயல்பான நடிப்பில் பல விருதுகள் பெற்ற படங்களை பார்க்கலாம். அகில இந்தியாவிலும் சிறந்த படம் என்று தேர்ந்தெடுத்து மத்திய அரசின் வெள்ளி பதக்கம் பரிசு பெற்ற "மலைக்கள்ளன்". மிகச்சிறந்த படம் என்று உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் விருது பெற்ற "நாடோடி மன்னன்"
சென்னை வெகுஜன சினிமா ரசிகர் சங்கத்தால் சிறந்த படம் என்ற விருது பெற்ற "எங்க வீட்டுப் பிள்ளை"
தமிழக அரசால் சிறந்த படம் என அறிவிக்கப்பட்ட "காவல்காரன்" தயிழகத்திலேயே சிறந்த நடிகர் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட "குடியிருந்த கோயில்" சிறந்த படம் என்று பிலிம்பேர் விருது பெற்ற "அடிமைப்பெண்"அகில இந்தியாவிலும் சிறந்த நடிகர் என்று பாரத் விருது பெற்ற "ரிக்ஷாக்காரன்"
என்று சொல்லிக்கொண்டே போகலாம். எந்தவித கத்தலும் கதறலும் இன்றி தெளிந்த நீரோடை போன்ற நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற அத்தனை புரட்சி நடிகரின் படங்களும் விருதுக்கு தகுதியான படங்களே.
பதினைந்து வாரங்கள் தொடர்ந்து வந்த இந்த பதிவை பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றி நன்றி.
தொடர் இத்துடன் நிறைவடைந்தது.
நன்றி வணக்கம்..........ksr.........
-
The definition of grandeur in cinema has changed drastically over the decades. Ambitious filmmakers world over have been pushing the envelope when it comes to enriching our big-screen experience by making expensive and visually spectacular movies. Recently, Hollywood filmmaker Christopher Nolan revealed that he crashed an actual Boeing 747 filming a sequence for his upcoming movie Tenet.
Back home in the 60s, merely showing a landing Air India passenger aircraft made a movie a large-scale production. And if the aircraft was shown in 16mm Eastmancolor film, the experience just got bigger.
AVM Production’s Anbe Vaa was one of the early colour films of Tamil cinema. It was a modern big-budget movie that established a template for future big-budget movies. There is also a noble intent behind the film’s extravagant production. Back in the day, this movie could have been the closest many members in the audience would have come to experience air travel, picturesque mountainous landscape, sprawling mansion and the lifestyle of a man who comes from money. Cinema still remains a dream portal through which many see exotic locations across the world and experience things that they may not be able to do in their lifetime.
Loosely inspired by Come September (1961), Anbe Vaa (1966) starred legendary MG Ramachandran. The screenplay by A. C. Tirulokchandar, who also helmed the movie, is a case study for how one can spin a star-vehicle without undermining the need for a strong script and logic.
MGR plays a young business magnate called J Balasubramaniam aka JB. The hectic work schedule starts affecting JB’s well-being. And to restore balance in his life, he decides to take a vacation. Man’s gotta have some fun, yo.
Cut to the next scene, JB arrives in Shimla. And he celebrates the break from his stressful life by singing the iconic “Pudhiya Vaanam” through the streets of Shimla. Wait, he is a rich businessman, but why is he walking the streets like a vagrant? Where are the expensive cars?
The first thing that JB notices soon after he deboards the train at Shimla is nobody is waiting for him to chaperone him to his mansion. He is visibly irritated. And he picks up a telephone at the railway station and calls his staff at the mansion. But, the guy who picks up the phone is a self-obsessed, cocky and money-minded newcomer who lacks basic manners and hangs up the call without knowing who is on the other end of the telephone: it is the big boss. Hence, JB had to walk home.
Maybe Tirulokchandar could have easily chosen to ignore this plot continuity and right away jumped into the first song. Well, he would have known that nobody would complain as long as they get to see MGR sprinting through hilly roads. But, no. As a writer, Tirulokchandar stayed loyal to his material and did not overlook the importance of cause and effect in his screenplay. The entire narration seamlessly develops and moves forward so organically.
The protagonist in Anbe Vaa wants to have fun and get away from his mechanical life. So he assumes an alternate identity as Balu and even tolerates Ramaiah (a wonderful Nagesh) who mistreats him without knowing his actual identity. JB plays well-meaning pranks on Geetha (B. Saroja Devi), and challenges her in good spirit. And he never vows to teach the woman a lesson by putting her in her place. He wins over everyone by his charm and good behaviour. In the meantime, the audience also learns new information about JB in every scene. He is not just a workaholic but also a fun-loving person who does not take his wealth and social status seriously. He plays golf, and he is kind, chivalrous, strong and can throw a punch if need be.
Tirulokchandar never deviates from the plot to accommodate unwanted things to serve MGR’s image. Imagine, if MGR broke into a song in Anbe Vaa that spoke about revolution, instead of pleasures of twist dance, test match and blessings of youth. Or as a side gig, he fought corrupt politicians and cops when he was not busy playing pranks on his girlfriend.
Tirulokchandar’s discipline and focus are what many big-budget, star-vehicles lack today....Baabaa
-
ஆமாம் தானே?
-------------------------
எம்.ஜி.ஆர் தான் 2016 வரைக்கும் ஆண்டு கொண்டிருந்தாராமே என்று முக நூலில் எவரோ நக்கலாகக் கேட்டிருந்தார்களாம்?
அதன் பாதிப்பில் பிறந்தது தான் இந்தப் பதிவில் நாம் கேட்கும் இந்தக் கேள்வி!
முக நூல் வாட்ஸ்-அப் இப்படி இனி எந்த அரசியல் கட்சிகளின் தலையெழுத்தையும் எழுதப் போவது கம்ப்யூட்டர் தான். அதாவது--
கணினி தான் பிரதானம் என்னும் போது--
கணி--நீ அ.தி.மு.கவின் வெற்றியை என்று கேட்டால்--
அ.தி.மு.கவின் ஆட்சிக் கட்டிலில்--
ஜெ டாட் காம்--
ஓ.பி.எஸ் டாட் காம்
எடப்பாடி டாட் காம்
நாளை வேறொருவர் டாட் காம்--
இப்படி யூஸர் ஐ.டிக்கள் மாறினாலும்
அவர்களின் வெற்றியை நிர்ணயிக்கும்-பாஸ் வோர்ட்--
எம்.ஜி.ஆர் 07 டாட் காம் மட்டும் தானே??
சரியா தப்பா என்றக் கேள்விக்கே இடமில்லாத படி
சரியாதப்பா உன் செல்வாக்கு!!
ஆம் அல்லது இல்லை--நீங்கள் அலசுங்கள்.........vtr.........
-
எம் ஜி ஆருக்கு அப்படி ஒரு நிலை வர கூடாது இறைவா
எஸ் . என்.லட்சுமி ...
"தொழிலாளி", "விவசாயி " போன்ற பல படங்களில் எம் ஜி ஆரின் தாய் ஆக நடித்தவர் எஸ் என்.லட்சுமி தன் ஆரம்பகால சம்பாதியத்தை சேர்த்து வைத்து ஒரு வீடு கட்டுகிறார் முக்கால் பாகம் முடிந்தது மீதி கட்ட பணம் இல்லை எவரிடமும் பணம் கேட்கும் குணம் இல்லாதவர் அதனால் வீடு அப்படியே நிற்க்க இப்படி விட்டால் பாழகிவிடும் என்று தன் உற்ற தோழிடம் கூறுகிறார் இது எப்படியோ எம் ஜி ஆர் அறிய நேரிட ஒரு நாள் வரலட்சுமி வீட்டிற்க்கு ஒருவர் வந்து சின்னவர் தரசொன்னார் என்று ஒரு பணபொட்டலத்தை கொடுத்து விட்டு செல்லுகிறார் பணத்தை திகைப்போடு பெற்று கொண்ட வரலட்சுமி நிற்க்க வீடு செய்யும் மேஸ்திரி வந்து எம் ஜி ஆரிடம் இருந்து பணம் வந்ததாக வீடு உடனே முடிக்க சொல்லி எம் ஜி ஆரிடம் இருந்து உத்தரவு வந்ததை கூற பணம் பொட்டலத்தை பிரிக்காமலே அவர் கையில் கொடுக்கிறார்
எவரிடமும் பணம் பெற விரும்பாத குணம் உடைய நான் உடனே புறபட்டு எம் ஜி ஆரிடம் சென்று உங்களுக்கு எதற்க்கு இந்த சிலவு என்று கூற
அம்மா உங்கள் குணம் எனக்கு தெரியும் இப்போது உங்களுக்கு பணம் தேவை அது என்னிடம் இருக்கு தருகிறேன் இன்னொரு முறை எனக்கு பணம் தட்டுபாடு வரும் போது தாருங்கள் வாங்கி கொள்கிறேன் என கூறி என்னை உண்ண வைத்து அனுப்பினார்
நான் உடனே இறைவனிடம் இந்த நல்ல உள்ளம் படைத்தவருக்கு அந்த நிலையை உருவாக்காதே என உளமாற இறைவனை வேண்டினேன்
அள்ள அள்ள குறையாத அட்ச பாத்திரம் எம் ஜி ஆரின் கொடை
வாழ்க எம் ஜி ஆர் புகழ்.........
-
எனது எண்ணங்கள்
தமிழ் சினிமா ஹீரோக்கள் மத்தியில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர்....!
தமிழ் திரைவுலகில் தமிழக மக்களின் மனதைக் கவர்ந்த கதாநாயகனாக இன்றுவரை தனக்கு நிகராக ஒருவரும் இல்லை என்று சொல்லுமளவுக்கு உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர். அவர் இறந்து 30 ஆண்டுகள் ஆகியும் இன்றும் தமிழக மக்கள் அவரை நினைவு கூறுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இன்றையத் தலைமுறையினரையும் கவரும் அவரது திரைப்படங்கள் தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
எம். ஜி. ஆர் சுமார் 135 படங்களில் நடித்திருக்கிறார். அத்தனைப் படங்களிலும் அவர் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் இரக்கமனம் படைத்த நல்ல மனிதனாகவே நடித்தது என்பது அவரது ரசிகர்களை அதே வழியில் செல்ல அவர்களது சிந்தனையை தூண்டியது என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. அவர் திரைப்படத்தில் ஏழை மக்களுக்கு உதவுவார். உழைப்பாளி மக்களின் உரிமைகளை கேட்கும் தோழனாக இருப்பார்.
இவரை அடிக்கும் வில்லன்களிடம் கூட இரக்கம் காட்டுவார். இவரை தாக்கும் வில்லன்களை உடனே தாக்கமாட்டார். பிறகு அடிவாங்கிய அதே வில்லனுக்கு அறியுரை வழங்கி உதவிசெய்வார். இவரது சண்டைக்காட்சிகளில் வன்முறை இருக்காது. ஒரு முறை அன்றைய சோவியத் யூனியனில் நடைபெற்ற திரைப்படவிழாவில் எம். ஜி. ஆர் நடித்த திரைப்படம் ஒன்றையும் திரையிட்டிருக்கிறார்கள். அந்த திரைப்படத்தில் வரும் சண்டைக்காட்சியில், எம்ஜிஆர் கத்தி சண்டைப் போட்டிருக்கிறார். அதைப்பார்த்த ரஷிய மக்கள் ''எம்ஜிஆர் அழகா டான்ஸ் ஆடுறாரு'' என்று சொல்லியிருக்காங்க. அந்த அளவுக்கு வன்முறை இல்லாத சண்டைக்காட்சிகளாக இருக்கும். எம்ஜிஆர் கதாநாயகியிடம் கூட சண்டைப்போட்டுட்டு வருகிறேன்னு சொல்ல மாட்டார். ''விளையாடிவிட்டு வருகிறேன் வேடிக்கைப்பார்'' என்று சொல்லி சண்டைக்காட்சிகளை கூட விளையாட்டாய் செய்வார்.
கதாநாயகி ஆபத்தில் சிக்கிக்கொண்டால், சாகசங்களை எல்லாம் செய்து காப்பாற்றுவார். காதல் காட்சிகள் விரசமில்லாது இருக்கும். எல்லை மீறாத காதலாக இருக்கும். காதல் பாடல்கள் இலக்கியமாக இருக்கும்.
எம்ஜிஆர் ஒரு குறிப்பிட்டக் காலம் வரை பாடல் காட்சிகளில் கூட கதாநாயகியை தொடாமல் நடித்து வந்திருக்கிறார். அதேப்போல, எம்ஜிஆர் திரைப்படத்தில் கதைக்காக கூட மது அருந்துவது போலவோ, சிகரெட் குடிப்பது போலவோ நடித்ததில்லை. பெண்களை கேலிசெய்வது போன்றெல்லாம் இல்லாமல் அவர்களுக்கு மதிப்பளிப்பதும், அம்மாவை உயர்த்திக்காட்டுவதும், உயர்த்தி பாடுவதும், சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அறியுரை வழங்குவதும், அறியுரை வழங்கி பாடுவதும் எம்ஜிஆர் படங்களில் உள்ள சிறப்பம்சங்கள் ஆகும்.
இப்படியெல்லாம் எம்ஜிஆர் நடித்ததால், அவரை நியாங்களை கேட்கும் ஒரு நல்ல வீரனாகவும், காதல் ததும்பும் கதாநாயகனாகவும், உதவிகள் செய்யும் நல்ல மனிதனாகவும், நன்னடத்தை கொண்ட நல்ல பண்பாளராகவும் மக்கள் பார்வையில் உயர்வான மனிதராக காட்சியளித்தார். பிற்காலத்தில், இப்படியாக அவர் நடித்த திரைப்படங்களும், அவரைப்பற்றிய மக்களின் பார்வையும், அதனால் அவர் மீது ஏற்பட்ட நம்பிக்கையுமே அவரை தமிழக அரசியலில் ஒரு உயர்ந்த இடத்திற்கு இட்டுச்சென்றது.
இன்றைக்கு அவரது காலத்திற்கு பிறகு, அவரை பின்பற்றி நடிப்பவர்களும், தனக்கென தனி முத்திரையோடு நடிப்பவர்களும் எம்ஜிஆரைப் போன்று மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை என்பது உண்மை.
அதுவும் இன்றைக்கு தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகர்களை பார்க்கும் போது, இளைஞர்களைப் பற்றி - குழந்தைகளைப் பற்றி - சமூகத்தைப் பற்றி அக்கறையில்லாமல் வெறும் இலாப நோக்கத்தில் நடிக்கும் கதாநாயகர்களைத் தான் நம்மால் பார்க்க முடிகிறது. இன்றைய ஹீரோக்கள் என்றால், மது அருந்துவார், புகைப்பிடிப்பார், பெண்களை கேலி செய்வார், அம்மா - அப்பாவை மதிக்கமாட்டார், அப்பா சட்டைப்பையிலிருந்து காசு திருடுவார், சண்டைக்காட்சிகளில் வில்லன்களை விட மோசமாக வன்முறையோடு சண்டைப்போடுவார், எதிரிகளின் மண்டை உடையும் - எலும்புகள் முறியும் - ரத்தம் சொட்டும் - கத்தியால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு, மின்சார ட்ரான்ஸ்பார்மரில் தூக்கி எறியப்பட்டு உயிர் போகும் - வரம்பு மீறி காதலிப்பார் - இப்படியாக நல்லப் பண்புகளே இல்லாத கதாநாயகர்களையே நாம் அன்றாடம் பார்க்கிறோம். அந்தக்காலத்தில் வில்லன்கள் செய்ததை எல்லாம் இன்றைய கதாநாயகர்கள் செய்கிறார்கள்.
அதனால் தான் இவர்கள் எம்ஜிஆரைப் போல் மக்களின் மனதில் நிற்பதில்லை. அதனால் தான் இன்றைய ஹீரோக்களைப் பார்க்கும் போது மக்களின் மனதில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம்ஜிஆர்..........
-
முதல் திருமணத்திற்கு எம்.ஜி.ஆர் போட்ட முட்டுக்கட்டைகள்
-சித்ரா லட்சுமணன்
“முதலில் நீ பெண்ணைப் பார். உனக்குப் பிடித்தால் கல்யாணம் பண்ணிக் கொள். இல்லையென்றால் மதியம் ரயிலிலேயே நாம் மதராஸ் போய்விடலாம்” என்று சொல்லி ஒரு புறம் எம்.ஜி.ஆரை சமாதானப்படுத்திய அவரது தாயார் மறுபுறத்திலே அன்று நடைபெறவிருந்த திருமணத்துக்கான ஏற்பாடுகளை எம்.ஜி.ஆருக்குத் தெரியாமல் செய்தபடி இருந்தார்.
பாலக்காட்டில் எம்.ஜி.ஆர் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஏழெட்டு வீடுகள் தள்ளி அவருக்காக நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணின் வீடு இருந்தது. எம்.ஜி.ஆர் தங்கியிருந்த அறையிலிருந்து ஜன்னல் வழியாகப் பார்த்தால் அந்த வீடு நன்றாக தெரியும். அங்கே மணப்பந்தல் போடப் பட்டிருந்ததையும் அந்தக் திருமணத்தில் எந்த பிரச்னையும் இல்லாததுபோல அங்கே உற்சாகமாக பலர் நடமாடிக் கொண்டிருந்ததை தையும் தனது அறையிலிருந்து பார்த்த எம்.ஜி.ஆருக்கு தன்னுடைய திருமணத்தை எப்படியும் நடத்தி முடித்து விடுவது என்ற முடிவில் தன்னுடைய தாயார் இருப்பது லேசாக புரியத் தொடங்கியது
.ஆகவே தன்னுடைய திருமணத்தைத் தடுத்து நிறுத்த தன்னுடைய அண்ணன் சக்ரபாணி ஊரில் இல்லாததை ஒரு ஆயுதமாகப் பயன் படுத்திக் கொள்ள முடிவெடுத்த அவர் “கடைசியாகக் கேட்கிறேன். இந்தத் திருமணம் பற்றி உன்னுடைய முடிவு என்ன?” என்று அவரது தாயார் கேட்டபோது அண்ணன் இல்லாமல் எப்படி என்னால் திருமணம் செய்துகொள்ள முடியும்” என்ற கேள்வியை தன்னுடைய தாயாரின் முன்னே வைத்தார்.
தன்னுடைய தாயிடம் தான் அப்படிச் சொன்ன அடுத்த நிமிடம் மதராசிலிருந்து புறப்பட்டால் கூட தனது அண்ணனால் பாலக்காட்டிற்கு வந்து சேர முடியாது என்பது எம்.ஜி.ஆருக்கு நன்கு தெரியும் என்பதால் திருமணத்தைத் தள்ளிப் போட மிகப்பெரிய உத்தியை பயன் படுத்தி விட்டதாக அவர் தன்னுடைய மனதளவில் ஆனந்தம் அடைந்தார்.
ஆனால் அவர் அப்படி சொல்லி முடித்த அடுத்த நிமிடமே அவருடைய திட்டத்தை ஒரு கடிதத்தின் மூலம் தவிடு பொடியாக்கினார் அவரது தாயார்
“நானும் உங்க அண்ணனும் சேர்ந்துதாண்டா இந்த ஏற்பாட்டினை செய்தோம்” என்று சொன்ன அவர் தனது மடியிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து அவரிடம் நீட்டினார்
“தாங்கள் சொன்னபடி தங்கள் கடிதம் கிடைத்ததும் ராமச்சந்திரனை அனுப்பி வைக்கிறேன். விரைவில் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். ஆனால் அவசரப்பட்டு எந்த முடிவும் செய்து விட வேண்டாம். அவன் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் ஆகவே நன்கு யோசித்து எல்லா ஏற்பாடுகளையும் செய்யவும் “என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார் சக்ரபாணி.
அந்தக் கடிதத்தை தன்னுடைய தாயாரிடமிருந்து வாங்கிப் படித்த எம்.ஜி.ஆருக்கு அடுத்து என்ன செய்வது என்று சிறிது நேரம் புரியவில்லை. திருமணத்தை தடுத்து நிறுத்த அடுத்து என்ன செய்யலாம் என்று அவர் மீண்டும் யோசிக்கத் தொடங்கியபோது அவருடைய மனதுக்குள் இன்னொரு யோசனை பளிச்சிட்டது .
சில காலம் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சார்ந்து இருந்ததால் கதர் ஆடைகள் மீது எம். ஜி. ஆர் அளவில்லா விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் அவரது தாயாருக்கோ அவர் கதர் ஆடை அணிவது சுத்தமாகப் பிடிக்காது.இனி நீ கதர் ஆடைகளை அணியக்கூடாது என்று பல முறை எம்.ஜி.ஆரைக் கண்டித்திருக்கிறார் அவர்.ஆகவே தன்னுடைய திருமணத் தைத் தடுத்து நிறுத்த அந்தக் கதர் ஆடைகளையே ஒரு ஆயுதமாக பயன் படுத்த முடிவெடுத்த அவர் “இந்தத் திருமணத்திற்கு நான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றால் நான் கேட்கும் ஒரு விஷயத்துக்கு நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று தன்னுடைய தாயாருக்கு ஒரு நிபந்தனை விதித்தார்.எப்படியாவது அந்தத் திருமணத்தை நடத்தி முடித்து விட வேண்டும் என்ற முடிவில் இருந்த சத்யபாமா அம்மையார் எம். ஜி. ஆரின் நிபந்தனை என்ன என்று கூட அவரிடம் கேட்காமல் "எந்த நிபந்தனை என்றாலும் ஏற்றுக் கொள்கிறேன் "என்று கூறிவிட்டார்.
அவர் அப்படிச் சொன்னவுடன் “இந்த திருமணத்தின் போதும் சரி, திருமணத்திற்குப் பிறகும் சரி நான் கதர் ஆடைகளைத்தான் அணிவேன்.அதற்கு நீங்கள் ஒப்புக் கொள்வதாக இருந்தால் இந்தத் திருமணத்திற்கு நான் ஒப்புக் கொள்கிறேன்”என்ற எம்.ஜி.ஆர் தான் அப்படிச் சொன்னவுடன் தன்னுடைய தாயின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் என்று எதிர்பார்த்தார் .
ஆனால் அவரது தாயாரோ ஒரு கணம் கூட யோசிக்காமல் "நீ விருப்பப்படும் உடைகளை அணிந்து கொள்ளலாம் .நான் எந்தத் தடையும் சொல்ல மாட்டேன்"என்றார்
அவ்வளவு எளிதாக தன்னுடைய நிபந்தனையை தாயார் ஏற்றுக் கொண்டுவிட்டதும் “பெண்ணைப் பார்க்காமலே திருமணத்திற்கு ஒப்புக் கொண்டு விட்டோமே”என்ற எண்ணம் எம்.ஜி.ஆருக்குத் தோன்றியது.
ஆனால் தான் மணக்கவிருந்த பெண்ணைப் பார்த்தபோது அவர் அடைந்த அதிர்ச்சி இருக்கிறதே அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
தனது தாயின் காலில் விழுந்து வணங்கிவிட்டு மணமகளின் வீட்டுக்குப் புறப்பட்ட எம்.ஜி.ஆர் அங்கே இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்ததும் அங்கே இருந்த ஒரு பெரியவர் "பெண்ணை அழைத்துக் கொண்டு வாருங்கள்" என்று உரத்த குரலில் உத்தரவிட்டார் .அவர் அப்படி குரல் கொடுத்தவுடன் தன்னையும் அறியாமல் எம்.ஜி.ஆர் தலையைக் குனிந்து கொண்டார்.
சிறிது நேரத்தில் அங்கே ஏற்பட்ட சலசலப்பிலிருந்து மணப்பெண் வந்து கொண்டிருக்கிறாள் என்று அவருக்குப் புரிந்தது.
அந்தப் பெண்ணை நிமிர்ந்து பார்ப்பதா இல்லை பார்க்காமல் இருப்பதா என்று என்று ராமச்சந்திரன் தனது மனதிற்குள்ளே விவாத மேடை ஒன்றை நடத்திக் கொண்டிருந்தபோது "இந்தத் துணியை அந்தப் பெண்ணிடம் கொடு"என்று சொல்லியபடி ஒரு சேலையை எம்.ஜி.ஆரின் கையில் கொடுத்தார் அவரது மாமா.புடவையைக் கொடுக்கும்போது எப்படி பெண்ணைப் பார்க்காமல் இருக்க முடியும்?ஆகவே தலையை நிமிர்த்தி லேசாக அந்தப் பெண்ணைப் பார்த்தார் ராமச்சந்திரன்.
அந்தப் பெண்ணைப் பார்த்த அடுத்த நிமிடம் அவரது கண்கள் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அசையாமல் அப்படியே நிலை குத்தி நின்று விட்டன.
அந்தப் பெண் அந்த புடவையை வாங்கிக் கொண்டு திரும்பிப் போனதற்குப் பிறகுதான் தனது பார்வையை மற்றவர்கள் பக்கம் திருப்பினார் எம்.ஜி.ஆர் .
ஆனால் அப்போதும் அந்த ஆனந்த அதிர்ச்சியில் இருந்து அவர் முழுமையாக விடுபடவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
ஒரு பெண் இவ்வளவு சிவப்பாகக்கூட இருக்க முடியுமா என்று தனது மனதுக்குள்ளாகவே கேள்வி கேட்டுக் கொண்டார் அவர்.எம். ஜி. ஆரே அப்போதுதான் மலர்ந்த ரோஜா மலரைப் போல செக்கச் சிவப்பாக இருக்கக் கூடியவ்ர் .அப்படியிருக்க அவரே அந்த மணப்பெண்ணின் நிறத்தைப் பார்த்து அந்த அளவிற்கு பிரம்மித்துப் போனார் என்றால் அந்த மணமகள் எப்படிப்பட்ட நிறத்தில் இருந்திருப்பார் என்பதை நாம் எளிதில் ஊகித்துக் கொள்ளலாம்
ஒல்லியாக இருந்தாலும் தனது உயரத்துக்கு ஏற்ற உருவம் பெற்றிருந்த அந்த மணமகளின் தலை முடி முழங்கால் வரை நீண்டிருந்ததையும், அவரது கண்களுக்கு அபாரமான ஈர்க்கும் சக்தி இருந்ததையும் பார்த்த எம். ஜி. ஆர். மிரண்டு போனார்.
அந்தத் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரை சம்மதிக்க வைக்க பல உத்திகளைக் கையாண்ட அவரது தாயார் ஒரு முறை அந்தப் பெண்ணை அவரது கண் முன்னே ஒரு முறை காட்டியிருந்தார் என்றால் அடுத்த நிமிடமே மறு வார்த்தையின்றி அந்தப் பெண்ணின் கழுத்திலே அவர் தாலியைக் கட்டியிருப்பார் என்பதுதான் உண்மை.அந்த அளவிற்கு அந்த மணப்பெண்ணின் அழகு எம். ஜி. ஆரை ஈர்த்திருந்தது.
திருமணம் முடிந்து அன்று இரவு தனியறையில் இருந்தபோது"என்னை உனக்குப் பிடித்திருக்கா ?'என்று தனது மனைவி பார்கவியிடம் எம். ஜி. ஆர் கேட்டபோது கடைக்கண்ணால் அவரை ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் தரையைப் பார்த்தார் பார்கவி.
"நல்லா இருக்கேனா இல்லையா என்று பார்க்கிறியா?"என்று அவரைப் பார்த்து எம்.ஜி.ஆர் மீண்டும் கேட்டபோது "என்ன இருந்தாலும் அவளோடு ஒப்பிடும்போது உன்னை அழகன் என்று சொல்ல முடியாது " என்று ராமச்சந்திரனின் உள் மனது அவருக்குக் கூறியது
"கற்பனையில் துவங்கி நினைவில் நிலைத்து விடுவதுதானே இல்லற வாழ்க்கை.ஆனால் எங்களைப் பொறுத்தவரை அந்த முதலிரவு கற்பனையோடு நின்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது " என்று தன்னுடைய முதலிரவு அனுபவத்தைப் பற்றி ஒரு கட்டுரையில் வெளிப்படையாகக் குறிப்பட்டிருக்கிறார் எம் ஜி ஆர்
திருமணம் முடிந்ததும் எம்.ஜி.ஆர் தன்னுடைய மனைவி பார்கவியை மதராசுக்கு அழைத்துக் கொண்டு வந்தார். எம்.ஜி.சக்ரபாணி, அவரது மனைவி, எம். ஜி. ஆர்,அவரது மனைவி பார்கவி.அன்னை சத்யபாமா ஆகிய அனைவரும் கூட்டுக் குடும்பமாக வால்டாக்ஸ் சாலையில் தங்கி இருந்தனர்.
எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரையிலே அசைவம் இல்லாமல் அவருக்கு சாப்பாடு இறங்காது.ஆனால் அவரது மனைவியான பார்கவிக்கோ அசைவ வாடையே ஆகாது. வீட்டில் அசைவம் சமைக்கின்ற நாட்களில் ஏறக்குறைய பட்டினியாகவே இருந்து விடுவார் அவர்.
மனைவிக்கு அசைவம் ஆகாது என்பதால் பல நாட்கள் சைவ சாப்பாடே போதும் என்று கூட சொல்லத் தொடங்கினார் எம்.ஜி.ஆர்
அப்படி ஈருடல் ஒருயிர் என்று வாழ்ந்த அந்தத் தம்பதிகளை அவர்களுடைய திருமணம் முடிந்த சில மாதங்களுக்குள்ளாகவே நிரந்தரமாக பிரித்து வைத்து காலம் கண்ணாமூச்சு ஆடியது....Baabaa
-
#மக்கள்_திலகத்தின்_ப்ளாக்பஸ்டர்
#படகோட்டி.
எத்தனையோ கடலும் கடல் சார்ந்த திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் வந்தாலும், அத்தனைக்கும் மைல்கல் #படகோட்டி ஒன்றே.இந்த படத்தில் மீனவர் சமுதாயத்தை படமாக பார்க்க வைக்கவில்லை இயக்குநர் டி.பிரகாஷ் ராவ், மாறாக படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகர்களையும் மீனவ மக்களோடும்-மீனவர் தலைவனாய் வரும் மக்கள் திலகத்தோடும் பயணிக்க வைத்துள்ளார் இயக்குனர்.
மாணிக்கம் பாத்திரத்தில் மீனவர்களின் தலைவனாக வாழ்ந்து காட்டியிருக்கும் மக்கள் திலகம்- அவர்களது ஒற்றுமைக்காக தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும் வழங்குபவராக அற்புதமாக நடித்துள்ளார்.
திருக்கை மீனவர்கள்-சுறா மீனவர்கள் என ஜமீன்தார் நீலமேகத்தின் சூழ்ச்சியால் பிரிந்து கிடக்கும் மீனவ சமுதாயத்தை தன் தந்தையாரின் இறுதி விருப்பத்திற்கிணங்க,பல சூழ்ச்சிகளை முறியடித்து சேர்த்து வைக்கும் ஏழைப்பங்காளனாக அற்புதமாய் நடித்திருக்கிறார் மக்கள் திலகம்..
அவரோடு சரோஜா தேவி, நம்பியார், ராமதாஸ், அசோகன், நாகேஷ், மனோரமா ஆகியோரும் அருமையான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள்.அதிலும் "முத்தழகி"பாத்திரத்தில் நடிக்கும் சரோஜாதேவி அசத்தியிருக்கிறார். அவரது குறும்பான நடிப்பும்- மக்கள் திலகத்தை அவர் பார்க்கும் போதெல்லாம் சொல்லும் "அய்யோடி சொக்கி"யும் ரசிக்க வைக்கின்றன.
பாட்டுக்களை பற்றி கூறவும் வேண்டுமா? "பாட்டுக்கு ஒரு படகோட்டி" என படம் வெளியான நாளில் இருந்தே இப்படத்தின் பாடல்களுக்கு பெயர் உண்டு...எட்டு பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டு..!!!அதே போல "ராய்" அவர்களின் ஒளிப்பதிவு இப்படம் படமாக்கப்பட்ட கேரள கடற்கறைகளுக்கே நம்மையும் பயணிக்க வைக்கிறது.
1964ம் வருடம் தீபாவளிக்கு வெளிவந்த இந்தப்படம், பிற வெளியீடுகளான நவராத்திரி, முரடன் முத்து ஆகிய படங்களோடு போட்டியிட்டு தமிழகமெங்கும் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டு வசூல் சாதனை புரிந்தது. நூறு நாட்களுக்கு மேல் அதிக திரையரங்குகளில் ஓடி வெற்றி பெற்றது.
பின்னாளில் மக்கள் திலகம், அரசியலில் நுழைந்த பிறகு அந்த இயக்கத்துக்கென்று நிலையான வாக்கு வங்கியை பெற்றுத்தர மிக முக்கிய காரணியாக இந்தப்படம் விளங்கியது என்பது மறுக்கமுடியாத உண்மை.
தகவல் :https://en.wikipedia.org/wiki/Padagotti.........Sr.Bu...
-
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் செய்த 'முதல்' சாதனைகள்!
l)தமிழ் சினிமாவில் பல முதன்மைகளை, புதுமைகளை நிகழ்த்தியவை எம்ஜிஆர் படங்கள்.
எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் ஆங்கிலத்தில் டைட்டில் கார்டு காட்டப்பபட்ட முதல் திரைப்படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்'. *
எம்.ஜி.ஆர். நடித்து தரக்குறைவான பத்திகைகளின் போக்குக்கு எதிர்த்து எடுக்கப்பட்டு வெளி வந்தப் படம் சரவணா பிலிம்ஸ் 'சந்திரோதயம்'. அன்றைய சூழலில் ஒரு முன்னணிப் பத்திரிகையை முற்றாக எதிர்த்து நடித்தார் எம்ஜிஆர்.
எம்.ஜி.ஆர். நடித்து காளைமாட்டுடன் மோதும் (ஜல்லிக்கட்டு) காட்சியை முதன்முதலாக தமிழ் சினிமாவில் காட்டிய படம் 'தாய்க்குப்பின் தாரம்'.
எம்.ஜி.ஆர். நடித்து தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெருமையை திரைப்படம் மூலம் உலகுக்கு தெரிவித்த படம் கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த 'மதுரை வீரன்'.
எம்.ஜி.ஆர். நடித்து புலியுடன் மோதும் சண்டைக் காட்சியை முதன்முதலாக திரைப்படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி'.
எம்.ஜி.ஆர். நடித்து சண்டைக் காட்சியின்போது 350 பவுண்ட் எடைக்கொண்ட சண்டை நடிகரை அலக்காக தூக்கி நிறுத்தி சண்டை காட்சியில் சாதனைப் புரிந்த படம் ஏவிஎம்மின் 'அன்பேவா'. *
எம்.ஜி.ஆர். நடித்து கிராமங்களில் நடக்கும் மாட்டு வண்டிபோட்டியை முதன் முதலில் திரைப்படத்தில் காட்டிய படம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ தயாரித்த 'பெரிய இடத்துப் பெண்'.
எம்.ஜி.ஆர். நடித்து முதன்முறையாக யோகா பயிற்சியை படத்தின் மூலம் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சி இடம்பெற்ற படம், தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'தலைவன்'.
எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராக நடித்து உடல் வளர்ச்சிக்கு தேவையான அனுகு முறையை மாணவர்களுக்கு சொல்லித் தரும் காட்சியை முதன் முதலாக படமாக்கப்பப்பட்ட படம் 'ஆனந்தஜோதி', 'பணம் படைத்தவன்'.
எம்.ஜி.ஆர். நடித்து முதன்முதலாக கிராமத்து காட்சியும், நகரத்து காட்சியையும் இணைத்து கதை அமைத்து திரைப்படமாக வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் 'பெரிய இடத்துப் பெண்'.
எம்.ஜி.ஆர். நடித்து பேருந்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம் தேவர் பிலிம்ஸ் 'தொழிலாளி'.
எம்.ஜி.ஆர். நடித்து மீனவ மக்களின் போராட்ட வாழ்க்கையை முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்து வெற்றிப்பெற்ற படம் சரவணா பிலிம்ஸ் 'படகோட்டி'.
எம்.ஜி.ஆர். நடித்து ஓய்வில்லாத ஒரு பிரபலமான தொழிலதிபரின் காதல் கதையை முழுமையாக முதன்முறையாக படமாக்கப்பட்ட படம் ஏவிஎமின் 'அன்பே வா'.
எம்.ஜி.ஆர். நடித்து பம்பாய் நகரில் முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ராகவன் புரொடக்ஷன்ஸ் 'சபாஷ் மாப்பிள்ளே'.
எம்.ஜி.ஆர். நடித்து ரிக்ஷாவில் அமர்ந்தபடியே சிலம்பு சண்டை போடும் காட்சியை தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக எடுக்கப்பட்ட படம் 'ரிக்ஷாக்காரன்'. இந்தப் படத்துக்காக இந்திய அரசங்கத்திடமிருந்து பாரத பட்டத்தைப் பெற்றார். எம்.ஜி.ஆர். படத்தில்தான்
நடிகர் முத்துராமன் அறிமுகமானார். படம் 'அரசிளங்குமரி'. எம்.ஜி.ஆர். படத்தில் அறிமுகமான இன்னொரு முக்கிய நடிகர் அசோகன். படம் 'பாக்தாத் திருடன்'.
எம்.ஜி.ஆர். நடித்து அண்ணன், தங்கை பாசத்தை முழுமையாக சினிமாவில் காட்டப்பட்டப்படம் முதல்படம் 'என் தங்கை'. எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக நாட்கள் (352) ஒடிய படமும் 'என் தங்கை' தான்.
எம்.ஜி.ஆர். நடித்து நல்ல கருத்துகளை வலியுறுத்தும் தலைப்பில் வெளிவந்த படங்கள்: 'நல்லவன் வாழ்வான்', 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தர்மம் தலைக்காக்கும்', 'பெற்றால் தான் பிள்ளையா', 'சிரித்து வாழ வேண்டும்', 'நீதிக்குத் தலைவணங்கு'.
எம்.ஜி.ஆருடன் இணைந்து 9 கதாநாயகிகள் நடித்த படம் 'நவரத்னம்'. தமிழில் இதுவும் ஒரு 'முதல்முதலாக'தான். எம்.ஜி.ஆர். நடித்து கிழக்கு ஜெர்மன், எகிப்து, துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகளில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் 'நாடோடி மன்னன்' (1958). இந்தப் படம் வெளிவந்த போது ரிசர்வேஷனிலும் சாதனைப் புரிந்தது.
எம்.ஜி.ஆர். நடித்து, ஈரான் நாட்டு படவிழா, மாஸ்கோ படவிழா, சர்வதேச படவிழா தாஷ்கண்ட் படவிழா, கோவா படவிழா என்று பல விழாக்களில் கலந்துக் கொண்ட முதல் தமிழ்ப்படம் சத்யா மூவிஸ் 'இதயக்கனி'. இந்தப் படத்தின் 100 நாள் வெற்றி விழா ஆந்திரா முதல்வர் என்.டி.ராமாராவ் தலைமையில் நடந்தது (அப்போது அவர் முதல்வராகவில்லை. எம்ஜிஆருக்குப் பிறகுதான் அவர் அரசியலுக்கு வந்தார்). எம்.ஜி.ஆர். நடித்து சென்னை சத்யம் திரையரங்கில் ஓடி வெள்ளி விழா கொண்டாடிய முதல் தமிழ்ப் படம் 'இதயக்கனி'.
எம்.ஜி.ஆர். நடித்த 'நீரும் நெருப்பும்' படத்திற்காக நடந்த ரிசர்வேஷன் கூட்டத்தை கட்டுப்படுத்துவற்காக குதிரைப்படை வரவழைக்கப்பட்டது, தமிழ் சினிமாவில் முதல்முறை நடந்த அதிசயம். எம்.ஜி.ஆர்.
அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு வயோதிகர் வேடத்தில் ஒருசில காட்சிகளில் நடித்த படங்கள் 'மலைக்கள்ளன்', 'குலேபகாவலி', 'பாக்தாத் திருடன்', 'படகோட்டி'.
அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். நடித்து விஞ்ஞான அடிப்படையில் உருவான கதையை படமாக்கப்பட்ட படங்கள் 'கலையரசி', 'உலகம் சுற்றும் வாலிபன்'. இந்த ஜானரில் வெளிவந்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை கலையரசிக்கே.
எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளி வந்த முதல் சமூகப்படம் 'திருடாதே'. எம்.ஜி.ஆர். நடித்து தனது தாயாரின் பெயரில் சத்யா ராஜா பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியை இயக்குநராகப் பணியாற்ற வைத்த படம் 'அரசக் கட்டளை'.
எம்.ஜி.ஆர். நடித்து பொங்கல் திருநாளன்று வெளிவந்து வெற்றிப்பெற்றப் படங்கள் 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'சக்கரவத்தி திருமகள்', 'அரசிளங்குமரி', 'ராணி சம்யுக்தா', 'பணத்தோட்டம்', 'வேட்டைக்காரன்', 'எங்க வீட்டுப் பிள்ளை', 'அன்பேவா', 'தாய்க்குத் தலைமகன்', 'ரகசிய போலீஸ் 115, 'மாட்டுக்காரவேலன்', 'மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன்'. எம்.ஜி.ஆர். நடித்த திகில், மர்மம், கொலை, போன்ற காட்சிகளை சித்தரித்து எடுக்கப்பட்ட படங்கள் 'தர்மம் தலைகாக்கும்', 'என் கடமை', 'தாழம்பூ.
எம்.ஜி.ஆர். நடித்து காட்டின் பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள் 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தாயைக்காத்ததனயன்', 'வேட்டைக்காரன்'. எம்.ஜி.ஆர்.
சீர்காழியில் நடந்த 'அட்வகேட் அமரன்' நாடகத்தில் நடித்த போது கால் முறிந்து பின் குணமாகி மீண்டும் வந்து நடித்து கொடுத்தப் படம் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி'.
எம்.ஜி.ஆர். நடித்து கோவா கடற்கரையில் படமாக்கப்பட்ட படங்கள் 'நாடோடி மன்னன்', 'ஆயிரத்தில் ஒருவன்',
கேரளா கடற்கரையில் முழுமையாக படமாக்கப்பட்ட படம் 'படகோட்டி'.
எம்.ஜி.ஆர். முதன்முதலில் வண்ணத்தில் நடித்து கொடுத்த படங்களும், நிறுவனங்களும் : 'அலிபாபாவும் 40 திருடர்களும்' - மாடர்ன் தியேட்டர்ஸ், 'படகோட்டி' - சரவணா பிலிம்ஸ், 'எங்கவீட்டுப் பிள்ளை' - விஜயா வாஹினி, 'ஆயிரத்தில் ஒருவன்' - பத்மினி பிக்சர்ஸ், 'அன்பேவா' - ஏவிஎம், 'பறக்கும் பாவை' - ஆர்.ஆர்.பிக்சர்ஸ் (டிஆர் ராமண்ணா), 'ஒளிவிளக்கு' - ஜெமினி பிக்சர்ஸ், 'நல்ல நேரம்' - தேவர் பிலிம்ஸ். எம்.ஜி.ஆர்.
வில்லனாக நடித்த படங்கள் : 'சாலிவாகனன்', 'பணக்காரி', 'மாயா மச்சீந்திரா'. 'சாலிவாகனன் படத்தில் ரஞ்சன் கதாநாயகனாக நடித்தார்.
'பணக்காரி' படத்தில் வி.நாகையா கதாநாயகனாக நடித்தார்.
எம்.ஜி.ஆர். நடித்து விளம்பரப்படுத்தப்பட்டும், பூஜைபோடப்பட்டும் நின்று போன படங்களின் பட்டியலும் கொஞ்சம் பெரிதுதான். 'சாயா', 'குமாரதேவன்', 'வாழப் பிறந்தவன்', 'பாகன் மகன்', 'மக்கள் என் பக்கம்', 'மறுபிறவி', 'தந்தையும் மகனும்', 'வெள்ளிக்கிழமை', 'தேனாற்றங்கரை', 'அன்று சிந்திய ரத்தம்', ' இன்ப நிலா', 'பரமபிதா', 'ஏசுநாதர்', 'நாடோடியின் மகன்', 'கேரளக் கன்னி', 'கேப்டன் ராஜா', 'வேலு தேவன்', 'உன்னை விடமாட்டேன்', 'புரட்சிப் பித்தன்', 'சமூகமே நான் உனக்கே சொந்தம்', 'தியாகத்தின் வெற்றி', 'எல்லைக் காவலன்', 'சிலம்புக்குகை', 'மலைநாட்டு இளரவசன்', 'சிரிக்கும் சிலை, 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு, இன்பக் கனவு', 'நானும் ஒரு தொழிலாளி'.
-
"சிவந்தமண்" அதன் தயாரிப்பு செலவுக்கு வசூலான தொகை மிகவும் சொற்பம். உள்நாட்டில் தயாரித்த "கர்ணனி"ன் தயாரிப்பு செலவு ரூ40 லட்சம் என்று பேசும்படம் சொன்னது. அதுபோல் "சிவந்தமண்ணி"ன் குறைந்த பட்ச தமிழ் தயாரிப்பு செலவு ரூ 80 லட்சம் என்று பல்வேறு பத்திரிகை செய்தி மூலம் அறியப்பட்டாலும் கைஸ்கள் அதன் வசூலை போட்டு சாதனை என்று உளறி கொட்டுகிறார்கள்.
தயாரிப்பு செலவுக்கு வசூலான தொகை அவர்கள் கூற்றுப்படி ரூ 50 லட்சம் என்று வைத்துக் கொண்டாலும் வரி நீக்கி தியேட்டர் ஷேர் போக ரூ20 லட்சம் கூட தேறாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அப்படியானால் வரவு 20 :80 என்றால் 4ல் ஒரு பகுதி கூட வசூலாகவில்லை. அதை ஏற்றுக் கொள்ளாத கைஸ்கள் செலவு குறைந்த படங்களோடு முறையற்ற வகையில் கம்பேர் செய்து திருப்தி பட்டுக் கொள்கிறார்கள். அதையே விநியோகஸ்தர்கள் "சிவந்தமண்" 175 நாட்கள் தொடர்ந்து அத்தனை திரைகளிலும் எல்லா காட்சிகளும் அரங்கு நிறைந்து ஓடினாலும் லாபம் வராது என்று அடித்துக் கூறியும் காதில் ஏறாமல் ஸ்ரீதர் பெரும் கடனில் சிக்கி கொண்டார்.
ஒரு வியாபாரி, இந்த சரக்கு இவ்வளவு தொகை தான் விற்கும் என்று கூட தெரியாமல் முதலீடு செய்வானா?.
ஸ்ரீதரின் வீழ்ச்சிக்கு யார் காரணம்?
விதியின் குற்றமா? இல்லை விதி என்ற பெயரில் வந்த வி.சி.கணேசனின் குற்றமா? என்று ஆய்வு செய்து பார்த்தால் அதில் வி.சி.கணேசனுக்கு தான் பெரும் பங்கு உண்டு என்று தெரிகிறது. தனது மார்க்கெட்டை உயர்த்திக்கொள்ள ஸ்ரீதரை பகடைக்காயை போல பயன்படுத்தியிருப்பதை மிக நன்றாக புரிந்து கொள்ளலாம். "சிவந்தமண்ணை" அய்யன், ஸ்ரீதர் டைரக்ஷனில் தனது சொந்த படமாகவேட தயாரித்திருக்கலாமே. தனது மார்க்கெட்டை பற்றி தெரிந்தும் அந்த தவறை கணேசன் செய்வாரா?
ஸ்ரீதர் தலையில் பெரும் கடன் சுமையை ஏற்றி வசமாக சிக்க வைத்து விட்டார் விசி கணேசு. தன்னை நம்பியவர்களை வாழ வைப்பார் கடவுள் கணேசன். தன்னை நம்பியவர்களை சீரழித்து பார்ப்பார் நம்ம வி.சி.கணேசன். அந்த பானை வயிற்றோன் பக்தர்களை காப்பவன்.
இந்த பானை வயிற்றோன் நம்பியவர்களை சீரழிப்பவன். என்னை நம்பியிருந்தால் அவர் நலமடைவார்
என்றும் அதுதானே என் விருப்பம் என்பதற்கு அடையாளமாக ஸ்ரீதரின் "உரிமைக்குரலை" ஓங்கி ஒலிக்கச் செய்த புரட்சி தலைவரின் மனிதநேயம் யாருக்கும் வராது.
அய்யன் பாடிய "அகப்பட்டுக்கொண்டார் ஸ்ரீதரே, அந்தோ பரிதாபம். ஆடிய நாடகம் புரியவில்லை அடியேன் அனுதாபம்" என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை. அதிலும் பரமார்த்த குருவின் சீடர்களை காட்டிலும் மோசமான கைஸ்கள் "சிவந்தமண்ணி"ன் வசூலை "உரிமைக்குரலோ"டு ஒப்பிடுவதை பார்க்கும் போது மூடத்தனம் போய் மொள்ளமாரித்தனம் வந்த மாதிரி தெரிகிறது.
சென்னையை போட்டவர்கள், அடுத்த ஊரான கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி போன்ற ஊர்களை ஏன் போடவில்லை. தூத்துக்குடியில் "சிவந்தமண்" ஓட்டிய நாட்களோடு "உரிமைக்குரல்" ஓடிய நாட்களை கம்பேர் செய்திருக்கிறார்கள். எப்போதுமே தூத்துக்குடி வசூலோடு நாகர்கோவில் வசூல் மிக அதிகமாக இருக்கும். இது கைபிள்ளைகளுக்கும் நன்றாகவே தெரியும்.
ஆனால் "சிவந்தமண்" ணின் நாகர்கோவில் 50 நாட்கள் வசூலை காட்டிலும் தூத்துக்குடி 50 நாட்கள் வசூல் மிக அதிகமாக இருப்பதை பார்க்கும் போதே தெரிகிறது முட்டாள் கைஸ்களின் வேலையை. இதேபோல் மதுரை திருச்சி கோவை சேலம் நெல்லை தூத்துக்குடியில் "உரிமைக்குரல்" 50 நாட்கள் வசூல் அய்யனின் "சிவந்தமண்" வசூலை சுனாமி தாக்கி சீரழித்ததை நாம் புரிந்து கொள்ளலாம். எப்போதுமே அவர்களுக்கு எது தோதாக தெரிகிற தோ அதை மட்டும் பயன்படுத்திக் கொள்வார்கள்.
அதைப்போல "நீதி"யின் 4 வார வசூல் "ராஜா"வை தாண்டி விட்டதாக போட்டிருப்பதால் "ராஜா"வின் வசூல் கப்ஸா வசூலோ என்ற சந்தேகம் வருகிறது. நெல்லையில் "ராஜா" 2 வார வசூல் பார்வதியில் ரூ46000 என்று போட்டவர்கள் மிகப்பெரிய திரையரங்கமான செள்ட்ரலில் "நீதி"யின் 4 வார வசூல் ரூ53000 என்று படுகேவலமான வசூலை பதிவு செய்திருக்கிறார்கள். படத்தை 5 வது வாரத்திலேயே தூக்கி வீசி விட்டார்கள். இதெல்லாம் ஒன்றும் தெரியாத அப்பாவி கைஸ்களை ஏமாற்றவா இந்த வசூல் நாடகம்.
அதே சென்ட்ரலில் 69 ல் வெளியான அடிமைப்பெண் 4 வாரத்திலேயே 1 லட்சத்தை தாண்டி வசூலானது பாலாஜிக்கு தெரியாமல் போய் விட்டதா? இப்படியெல்லாம் ஏமாற்றி கைஸ்களை முட்டாளாக ஆக்கியிருப்பது அவர்களுக்கே புரியாது. அய்யன் நடித்த அத்தனை பிரமாண்ட படங்களும் "கர்ணன்" "சிவந்தமண்" "ராஜராஜ சோழன்" "ராஜரிஷி" உட்பட அனைத்தும் படுதோல்வி படங்களே...........ksr.........
-
மக்கள் திலகத்தின் வித்தியாசமான படங்கள்...
#பறக்கும்_பாவை..!!!
ஒரு தொழிலதிபரின் மகனான ஜீவா (மக்கள் திலகம்) தன் குடும்ப நண்பரும், நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலையில் இருக்கும் வேதாச்சலம் (சித்தூர் நாகையா) விற்கு அவரின் மகளான கலாவை ((சரோஜா தேவி)) எவ்வித ஆபத்தும் நேராமல் பார்த்துக்கொள்வதாகவும், பாதுகாவலனாக இருப்பதாகவும் உறுதி அளிக்கிறார். கலாவிற்கு தன் தந்தையின் சொத்துக்கள் வந்து சேரவே, அவரது உயிருக்கும் ஆபத்து வருகிறது. நிம்மதி வேண்டி தன் வீட்டை விட்டு வெளியேறி சர்க்கஸ் கம்பெனியில் சேருகிறார் கலா.அங்கே பறக்கும் பாவையாகிறார். ஆனால் கலாவிற்கு சர்க்கஸ் கம்பெனியிலும் உயிருக்கு ஆபத்து தொடர்கிறது. சிங்கக்கூண்டு கலாவை குறிவைத்து திறக்கப்படுகிறது, அவர் மேல் மர்ம நபர்களால் கத்தி வீசப்படுகிறது. அனைத்து ஆபத்துகளிலிருந்தும் ஜீவாவின் உதவியோடு தப்புகிறார்.
கலாவின் தகப்பனாருக்கு உறுதி அளித்தபடி கலாவை தேடி கண்டுபிடித்து, சர்க்கஸ் கம்பெனியில் தானும் சேர்ந்து..கலாவின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க காரணமானவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார் ஜீவா.
இந்த படம் மக்கள் திலகத்தின் மற்ற படங்களிலிருந்து எப்படி வேறு படுகிறதென்றால், இரண்டாவது பாதி முழுவதும் சர்க்கஸை களமாக கொண்டு கதை புனையப்பட்டிருப்பதுதான். விறுவிறுப்பான திரைக்கதையோடு சர்க்கஸ் தொழிலாளர்களின் போராட்டமான வாழ்க்கையையும் முன் நிறுத்தியிருப்பதில் இயக்குநர் ராமண்ணா வெற்றி கண்டுள்ளார்.
மக்கள் திலகத்தின் அரசியல் வாழ்வில் அடித்தட்டு-விளிம்புநிலை மக்களின் அசைக்கமுடியாத ஆதரவு இருந்ததற்கு அம்மக்களின் போராட்டம் மிகுந்த வாழ்க்கையை தன் படங்களில் பதிவு செய்ததுதான். "படகோட்டியில் -மீனவர் ; ரிக்ஷாகாரனில் -ரிக்ஷா இழுப்பவர்; மாட்டுக்கார வேலன்; போன்ற பல படங்களைப்போன்றே இதிலும் சர்க்கஸ் தொழிலாளியாக அசத்தியுள்ளார்.
சரோஜா தேவி, காஞ்சனா, சந்திரபாபு, மனோகர், தங்கவேலு, அசோகன், நம்பியார் ஆகியோரும் தங்களது நடிப்பால் மனம் கவர்கிறார்கள். அதிலும் கோமாளியாக வரும் சந்திரபாபு தூள். காஞ்சனாவிற்கு சற்று வில்லத்தனமான வித்தியாசமான பாத்திரம்.
வழக்கம் போல் மெல்லிசை மன்னரின் இசை காலங்களைதாண்டி நிற்கிறது. *"பட்டுப்பாவாடை எங்கே"
*"உன்னைத்தானே ஏய்"
*"கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா"
*"முத்தமோ..மோகமோ"
*" நிலவென்னும் ஆடை கொண்டாளோ"
*"சுகம் எதிலே.."
*யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்"
என வித்தியாசமான இசையமைப்பில் அசத்தியுள்ளார். அதிலும் "முத்தமோ..மோகமோ பாடலில் மிருகங்களின் உருமல்களையும், ஓசைகளையுமே இசையாக்கி இருப்பது புதுமை,அருமை.
"பறக்கும் பாவை" வணிக ரீதியாக வென்றது.
புகைப்படம் :https://www.tamil2lyrics.com/movies/parakkum-paavai/
தகவல் :
https://en.m.wikipedia.org/wiki/Para............Sr.Bu...
-
வேட்டைக்காரன் எம்ஜிஆர்...
அப்பொழுதெல்லாம் எம்.ஜி.ஆர் சிவாஜி இருவருக்குள்ளும் கடும் போட்டா போட்டி இருந்து வந்தது. இவர்கள் இருவரின் படங்கள் வெளிவரும் போது இரண்டு நாயகர்களின் ரசிகர்களும் மோதிக்கொள்ளவார்கள்.
அப்படிப்பட்ட சூழ் நிலையல் தான் எம்.ஜி.ஆர்.நடித்த வேட்டைக்காரன் படமும், சிவாஜி நடித்த கர்ணன் படமும் ரெடியாகி கொண்டிருந்தது. இன்னும் சொல்லப்போனால் டைரக்டர் பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய கர்ணன் படம் மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்ட கலர் படம்.
இதில் முன்னணி நட்சத்திரக் கூட்டம் அதிகமாக இருந்தது. படமும் பாதியளவில் முடிந்து அடுத்தத கட்ட படப்பிடிப்பிற்கு போகும் போதுதான் எம்.ஜி.ஆர் நடித்த வேட்டைக்காரன் படம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தப் படத்தை தேவர் பிலிம்ஸ் சார்பில் சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் தயாரித்திருந்தார். அவரது சகோதரர் எம்.ஏ. திருமுகம் படத்தை இயக்கியிருந்தார்.இதில் ‘மகாதேவி’, ‘பரிசு’ படத்திற்கு பிறகு எம்.ஜி.ஆருடன் ஜோடியாக சாவித்ரி நடித்திருந்தார்.
கருப்பு வெள்ளையில் குறைந்த பட்ஜெட்டில் குறைந்த நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட படம் வேட்டைக்காரன்.
டைரக்டர் பி.ஆர்.பந்துலு கர்ணன் படத்தின் அனைத்து கட்டப் படப்பிடிப்புகளையும் முடித்து படத்தை பொங்கலன்று (14.01.1964) வெளியிட ஏற்பாடுகளைச் செய்தார்.
அப்பொழுதுதான் பி.ஆர்.பந்துலுவின் நண்பர் ஒருவர் ஒரு செய்தியை வந்து சொன்னார். சிவாஜி நடித்த கர்ணன் படம் வெளியாகும் அன்றே எம்.ஜி.ஆரின் வேட்டைக்காரன் படமும் வெளியாகிறது என்ற செய்திதான் அது.
ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் சேர்ந்து வருவதைவிட தனித்தனியாக வந்தால் அந்தந்த படங்களுக்கு கிடைக்க வேண்டிய வசூல் கிடைக்கும். இரண்டு நடிகர்களுக்கும் நிகரான ரசிகர் பட்டாளம் உண்டு.
டைரக்டர் பந்துலு தனது படக்குழுவினருடன் கலந்து பேசினார். இதுபற்றிய செய்தியை சிவாஜி அவர்களிடமும் தெரிவித்தார்கள். சிவாஜியும் யோசனையில் ஆழ்ந்தார்.
சாண்டோ சின்னப்பா தேவரை வரவழைத்து பேசினார்கள். அவரும் படம் எடுத்திருப்பது தேவர் பிலிம்ஸ் தான்.
ஆனால் படம் வெளியாகும் தேதியை சின்னவர் (எம்.ஜி.ஆர்) தானே முடிவு பண்ணுவார் அவரிடம் எப்படி பேசுவது, ஒருவாரம் தள்ளி படத்தை வெளியிடுங்கள் என்று.
இறுதியில் படக்குழுவினர் ஒருவர் சொன்ன ஐடியாபடி சிவாஜி நடித்த கர்ணன் படத்தை எம்.ஜி.ஆருக்கு மட்டும் தனியாக போட்டு காட்டுவது.
அதன்பிறகு இதுபற்றிப் பேசுவது என்று முடிவு செய்தார்கள். எம்.ஜி.ஆரைச் சந்தித்தார்கள்.
கர்ணன் படத்தைத் தங்களுக்காக பிரத்யோகமாக போட்டு காட்ட விரும்புகிறோம். அதற்கான நேரத்தை ஒதுக்கி தந்தீர்களானால் நாங்கள் படத்தை திரையிட்டுக் காட்ட ஏற்பாடு செய்கின்றோம் என்று சொன்னார்கள்.
எம்.ஜி.ஆரும் ஒரு குழந்தையை போல துள்ளிகுதித்து கர்ணன் படத்தைப் பார்க்கச் சம்மதித்தார். படமும் அவருக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது.
படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் திலகம் சிவாஜியை மனதார பாராட்டினார். அற்புதமாக நடித்திருக்கிறார். அப்படியே கர்ணனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
இவரைப்போல ஒரு சிறந்த நடிகரை எங்கேயும் பார்க்க முடியாது என்று மனம் திறந்து பாராட்டினார். படத்தின் பிரம்மாண்டத்தையும் டைரக்டர் பி.ஆர்.பந்துலுவையும் மற்ற கலைஞர்களையும் வாயாரப் புகழ்ந்தார்.படம்
வெற்றியடைய அனைவருக்கும் வாழ்த்துகளை சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் எம்.ஜி.ஆர்.படப்பிடிப்பு குழுவினரும் டைரக்டர் பி.ஆர்.பந்துலுவும் அவரிடம் வேட்டைக்காரன் படம் கொஞ்சம் தள்ளி வெளிவந்தால் உதவிகரமாக இருக்கும் என்று அந்த நேரத்தில் பேசத் தயங்கினார்கள்.
மறுநாள் சாண்டோ சின்னப்பா தேவரை வைத்தே எம்.ஜி.ஆரிடம் பேசினார்கள். அவரும் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, ‘படம் பார்த்தேன் பிரம்மாண்டமாக இருக்கிறது.
நண்பர் சிவாஜியும் அற்புதமாக நடித்திருக்கிறார். படத்தை தைரியமாக ரிலீஸ் பண்ணச்ச சொல்லுங்க..
அதே நேரம் வேட்டைக்காரன் படமும் அந்த நேரத்தில் வெளிவந்தால்தான் நல்லது.
தம்பி சிவாஜி ரசிகர்களுக்கும் படம் பார்த்த சந்தோஷம் கிடைக்கட்டும். எனது ரசிர்களுக்கும் படம் பார்த்த சந்தோஷம் கிடைக்கட்டும் மொத்தத்தில் எல்லா ரசிகர்களும் இந்த இரண்டு படத்தை பார்க்கட்டும்,’ என்று பதில் சொல்லி அனுப்பிவிட்டார்.
இறுதியில் இரண்டு படங்ளும் ( வேட்டைக்காரன் & கர்ணன்) 14.1.1964 அன்று வெளிவந்தன. வெளிவந்த தியேட்டர்கள் வாசலில் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட கர்ணன் படத்திற்கான விளம்பர பேனர் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டது.
சூரியபகவான் பல குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் வருவதுபோல் பேனர் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டது.
வேட்டைக்காரன் ரிலிசான தியோட்டர்களில் இரும்பு கூண்டு வைத்து நிஜமான ஒரு புலியை அதில் அடைத்து வைத்தார்கள். படம் பார்க்க வந்தவர்கள் அனைவரும் நிஜப் புலியைப் பார்க்க கூட்டம் கூடியது.
கர்ணனுக்கு பாராட்டுகள் குவிந்தன.ஆனால் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட அளவிற்கும் படம் வெற்றி பெறவில்லை.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட வேட்டைக்காரன் மிகுந்த வசூலை அள்ளி கொடுத்தது.
பின்னாளில் எம்.ஜி.ஆர். பி.ஆர்.பந்துலுவுக்கு ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு கால்ஷீட் கொடுத்து அதிக லாபம் பெற வைத்தார் (1965)...........Baabaa
-
Ahead of Tamil Nadu Assembly Polls This Year, Scramble for MGR's Legacy Worries Ruling AIADMK
While the AIADMK is partially pleased at the way everyone is praising its founder, it is concerned that this could bring political gains for rivals.

MGR

Saradha V
NEWS18CHENNAI
UPDATED ON:JANUARY 27, 2021, 08:29 IST
FOLLOW US ON:
Facebook*Twitter*Instagram
MG Ramachandran, aka MGR, the matinee idol and former chief minister of Tamil Nadu, continues to be an irresistible presence in Tamil Nadu’s political space. The 104th birth anniversary of MGR, who died in 1987 and was fondly called Puratchi Thalaivar or Revolutionary Leader by many, was celebrated across the state on January 17. It was also an opportunity for many politicians from different parties to cherish and flaunt their memories and proximity with the late actor-turned-politician, who was probably one of the most influential film stars of South Asia as well as the only actor whose political career continues to survive even after three decades.
President of Dravida Munnetra Kazhagam (DMK) MK Stalin has always been careful in his remarks about MGR, the arch rival of his late father M Karunanidhi. It was MGR’s tussle with Karunanidhi that forced the former to create a new party, AIADMK, in 1972.
Advertisement
Even as Stalin would fondly recall his personal connection with MGR, he would be extra cautious when it comes to MGR’s governance or schemes.
In a meeting held at Dharmapuri a few days ago, Stalin said, "I am a great fan of MGR. I used to miss classes to watch his films. It was Karunanidhi who brought MGR into films. MGR used to make sure that nobody would call Karunanidhi by his name; that is the kind of respect he had for Kalaignar.”
Advertisement
Kamal Haasan, another film star who entered politics recently, has been claiming the legacy of MGR ever since he floated his party. Haasan’s party, Makkal Needhi Maiam, having contested on almost all seats in the state during the 2019 Lok Sabha polls, gained about a 2% vote share.
While it remains a fact that it is not easy for film stars to convert their fame into votes, aspiring politicians or chief ministers like 66-year-old Haasan are also seen by the public as personalities who entered politics as a “post-retirement plan”, after completing decades in acting.
Advertisement
Haasan has memories with MGR to cherish, like how he grew up on the legend's lap and was very close to him though not involved in politics along with him. His political slogan "Naalai Namadhe" is inspired by the title of an MGR film, he would say. Recently, Haasan accused the AIADMK of forgetting MGR and his ideals. After releasing the documentary 'Kaalathai Vendravan' at MGR's residence at Ramapuram in Chennai, he said, "MGR's photographs in ADMK posters are becoming smaller day by day. I share MGR's dreams and goals and so I can claim his legacy."
The AIADMK has been vehemently resisting anyone who tries to appropriate MGR's legacy, be it alliance partner BJP or principal opposition DMK.
MGR and Jayalalithaa are two icons of AIADMK who formed successive governments in Tamil Nadu. While no one is claiming Jayalalithaa's legacy, every party now wants to associate itself with MGR's name and politics.
It was only Jayalalithaa's image which was prominent in the party until her death. After that, the party has been facing an identity crisis and the elections ahead are not going to be easy for it.
While the AIADMK is partially pleased at the way everyone is praising its founder MGR, it is concerned that this could bring political gains for rivals.
Chief minister Edappadi Palaniswami, while speaking at one of the events held in Chennai as part of MGR 's 104th birth anniversary celebrations, said, "It is a fact that even people launching new parties have to use MGR's name." Last month, while paying homage at MGR's memorial in Chennai on his death anniversary, he pledged not to allow opponents to appropriate MGR's legacy. When the BJP used pictures of MGR in its campaign videos, juxtaposing them with Modi and party state president L Murugan, AIADMK minister Jayakumar was quick to react. He said, "Use pictures of your own leaders. Why do you use our leader's? MGR was the founder of AIADMK and he would always want only AIADMK to be in power."
Arunan, author of 'MGR- History of actors becoming chief minister', observed, "Appropriating MGR's image helps in anti-DMK politics. MGR termed Karunanidhi an 'evil force' to build a negative image around him. So BJP, Kamal Haasan, whoever wants to take on DMK uses MGR's image. DMK understands that it will gain nothing by criticising a leader who is dead. Therefore, they talk only about the warm and cozy relationship that Karunanidhi and MGR shared in the early days. It is ADMK who is in a fix now, so it is trying to bring back its founder leader."..........
News 18
-
கவியரசர் கண்ணதாசனுக்கு அளவற்ற மகிழ்ச்சியை கொடுத்த புரட்சித் தலைவர்...
கவியரசரின் துணைவியார் வள்ளியம்மை அவர்களின் பதிவிலிருந்து...
கவிஞருக்கு மிக்க சந்தோஷத்தை ஏற்படுத்திய விஷயம், அவருக்கு ஆயுள் கால ஆஸ்தான கவிஞர் பதவியைத் தரப்போவதாக எம்.ஜி.ஆர் போனில் தெரிவித்துதான்.
அவரை அவ்வளவு சந்தோசமாக நான் அதுவரை பார்த்ததே இல்லை. “உன் கணவன் இனிமேல் கவிஞன் இல்லை, அரசு கவிஞன்” என்று பெருமைப்பட்டுக் கொண்டார்...
வாழ்க்கையில் கணவரின் நிறைவேறாத ஆசை எம்.ஜி.ஆர் கொடுத்த தங்கப் பதக்கத்தைத் தான் இறக்கும்போது மாா்பில் வைத்து எரிக்க வேண்டும் என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
குடும்பக் குழப்பத்தில் அதுவும் நடக்கவில்லை.
நன்றி: இந்திய டுடே...1996...
-
பொன்மனச்செம்மல் எம். ஜி.ஆர். அவர்களுக்கு ஓர் தனி சிறப்பு உண்டு! அவரை புகழ்ந்து போற்றுபவர்கள் மட்டுமல்ல அவரை தூற்றுபவர்கள் கூட நன்மை அடைவார்கள்; அப்படி தூற்றியவர்கள் கூட எதிர்த்தவர்கள் உட்பட பிற்காலத்தில் அவரை போற்றி வணங்குவார்கள்; இதற்க்கு நிறைய உதாரணங்கள் உண்டு. அவ்வளவு என்? அவரது அரசியல் நேர் எதிரி கலைஞர். அவருடைய மகன் திரு ஸ்டாலினே புரட்சி தலைவர் எம். ஜி. ஆர். அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு இவ்வருடம் அவர் படத்துக்கு மாலை அணிவித்து இரு கரம் கூப்பி பல தி. மு. க. தொண்டர்களுடன் வணங்கினாரே..... போன வருடம் பல கோடி செலவில் உருவான புதிய சட்டசபை வளாகத்தை திறந்து வைத்த நேரத்தில் பிரதமர் மன்மோகன் அவர்கள் திருமதி சோனியா, கலைஞர் மற்றும் பல காங்கிரஸ் தி. மு. க. பிரமுகர்கள் எதிரிலேயே "இன்று இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் பள்ளிகளில் பின் பற்றப்படும் மதிய உணவு திட்டத்துக்கு" காரணமாக விளங்குபவர் "அமரர் எம். ஜி. ஆர்" அவர்கள் என்று புகழாரம் சூடினாரே! அதை என்னவென்று சொல்வது? ஒரே வரியில் சொல்வதென்றால், எம். ஜி. ஆர் அவர்கள் "குற்றமில்லாத மனிதன், கோயில் இல்லாத இறைவன்" -
அன்புடன்...✌✌✌✌ ரசிகன்... Sekar Covai...
-
இந்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, எம்.ஜி.ஆரின் மரபு கவலைகள் போராடும் AIADMK...
AIADMK அதன் நிறுவனரை எல்லோரும் புகழ்ந்து பேசும் விதத்தில் ஓரளவு மகிழ்ச்சியடைகையில், இது போட்டியாளர்களுக்கு அரசியல் லாபத்தை தரக்கூடும் என்று கவலை கொண்டுள்ளது.

எம்.ஜி.ஆர்

சாரதா வி
செய்தி 18சென்னை
புதுப்பிக்கப்பட்டது:ஜனவரி 27, 2021, 08:29 IST
எங்களைப் பின்தொடரவும்:
பேஸ்புக்*ட்விட்டர்*இன்ஸ்டாகிராம்
எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர், மேட்டினி சிலை மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், தமிழகத்தின் அரசியல் இடத்தில் தவிர்க்கமுடியாத இருப்பைத் தொடர்கிறார்.*1987 ஆம் ஆண்டில் இறந்த எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாள், பலரால் "புரட்சி தலைவர்" அல்லது புரட்சிகரத் தலைவர் என்று அழைக்கப்பட்டது, ஜனவரி 17 அன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் தங்கள் நினைவுகளை மதிக்கவும், வெளிப்படுத்தவும் இது ஒரு வாய்ப்பாகும். மறைந்த நடிகராக மாறிய அரசியல்வாதியுடன், தெற்காசியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவராகவும், மூன்று தசாப்தங்களுக்குப் பிறகும் அரசியல் வாழ்க்கை தொடர்ந்து நீடிக்கும் ஒரே நடிகராகவும் இருக்கலாம்.
திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) தலைவர் எம்.கே.ஸ்டாலின் தனது மறைந்த தந்தை எம்.கருணாநிதியின் பரம எதிரியான எம்.ஜி.ஆர் பற்றி தனது கருத்துக்களில் எப்போதும் கவனமாக இருக்கிறார்.*கருணாநிதியுடனான எம்.ஜி.ஆரின் மோதல்தான் 1972 ல் அதிமுக என்ற புதிய கட்சியை உருவாக்க முன்னாள் கட்டாயப்படுத்தியது.
விளம்பரம்
எம்.ஜி.ஆருடனான தனது தனிப்பட்ட தொடர்பை ஸ்டாலின் அன்புடன் நினைவு கூர்ந்தாலும், எம்.ஜி.ஆரின் ஆளுகை அல்லது திட்டங்களுக்கு வரும்போது அவர் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பார்.
சில நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், ஸ்டாலின், "நான் எம்.ஜி.ஆரின் சிறந்த ரசிகன். அவரது படங்களைப் பார்ப்பதற்காக வகுப்புகளைத் தவறவிட்டேன். எம்.ஜி.ஆரை படங்களில் கொண்டுவந்தது கருணாநிதிதான். எம்.ஜி.ஆர் யாரும் செய்யமாட்டார்கள் என்பதை உறுதிசெய்தார் கருணாநிதியை அவரது பெயரால் அழைக்கவும்; அதுதான் கலைங்கருக்கு அவர் கொண்டிருந்த மரியாதை. ”
விளம்பரம்
அண்மையில் அரசியலில் நுழைந்த மற்றொரு திரைப்பட நட்சத்திரமான கமல்ஹாசன், எம்.ஜி.ஆரின் பாரம்பரியத்தை தனது கட்சியில் மிதந்ததிலிருந்து கூறி வருகிறார்.*2019 மக்களவைத் தேர்தலின் போது மாநிலத்தின் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் போட்டியிட்ட ஹாசனின் கட்சியான மக்கல் நீதி மய்யம் சுமார் 2% வாக்குகளைப் பெற்றார்.
திரைப்பட நட்சத்திரங்கள் தங்கள் புகழை வாக்குகளாக மாற்றுவது எளிதல்ல என்பது ஒரு உண்மையாக இருக்கும்போது, ஆர்வமுள்ள அரசியல்வாதிகள் அல்லது 66 வயதான ஹாசன் போன்ற முதலமைச்சர்களும் அரசியலில் நுழைந்த ஆளுமைகளாக “ஓய்வூதியத்திற்கு பிந்தைய திட்டமாக” பார்க்கப்படுகிறார்கள். ”, நடிப்பில் பல தசாப்தங்கள் முடிந்த பிறகு.
விளம்பரம்
புராணத்தின் மடியில் அவர் எப்படி வளர்ந்தார், அவருடன் அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார் என்பது போன்ற ஹாசனுக்கு எம்.ஜி.ஆருடன் நினைவுகள் உள்ளன.*அவரது அரசியல் முழக்கம் "நாளை நமதே" ஒரு எம்.ஜி.ஆர் படத்தின் தலைப்பால் ஈர்க்கப்பட்டுள்ளது, என்று அவர் கூறுவார்.*அண்மையில், எம்.ஜி.ஆர்., மற்றும் அவரது கொள்கைகளை AIADMK மறந்துவிட்டதாக கமலஹாசன் குற்றம் சாட்டினார்.*சென்னையில் உள்ள ராமபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் இல்லத்தில் "காலத்தை வென்றவர்" , என்ற ஆவணப்படத்தை வெளியிட்ட பின்னர், "ஏ.டி.எம்.கே சுவரொட்டிகளில் எம்.ஜி.ஆரின் புகைப்படங்கள் நாளுக்கு நாள் சிறியதாகி வருகின்றன. எம்.ஜி.ஆரின் கனவுகளையும் குறிக்கோள்களையும் பகிர்ந்து கொள்கிறேன், எனவே அவரது மரபுக்கு நான் உரிமை கோர முடியும்" என்றார்.
எம்.ஜி.ஆரின் மரபுக்கு பொருத்தமான எவரையும் AIADMK கடுமையாக எதிர்த்து வருகிறது, அது கூட்டணி பங்குதாரர் பாஜக அல்லது பிரதான எதிர்க்கட்சியான திமுக.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தில் அடுத்தடுத்து அரசாங்கங்களை அமைத்த அதிமுகவின் இரண்டு சின்னங்கள்.*ஜெயலலிதாவின் மரபுக்கு யாரும் உரிமை கோரவில்லை என்றாலும், ஒவ்வொரு கட்சியும் இப்போது எம்.ஜி.ஆரின் பெயர் மற்றும் அரசியலுடன் தன்னை இணைத்துக் கொள்ள விரும்புகின்றன.
ஜெயலலிதாவின் உருவம் மட்டுமே அவர் இறக்கும் வரை கட்சியில் முக்கியத்துவம் பெற்றது.*அதன்பிறகு, கட்சி ஒரு அடையாள நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, மேலும் தேர்தல்கள் அதற்கு எளிதானதாக இருக்காது.
AIADMK அதன் நிறுவனர் எம்.ஜி.ஆரை அனைவரும் புகழ்ந்து பேசும் விதத்தில் ஓரளவு மகிழ்ச்சி அடைகையில், இது போட்டியாளர்களுக்கு அரசியல் லாபத்தை தரக்கூடும் என்று கவலை கொண்டுள்ளது.
எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "புதிய கட்சிகளைத் தொடங்கும் மக்கள் கூட எம்.ஜி.ஆரின் பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்பது உண்மைதான்" என்றார்.*கடந்த மாதம், அவரது மரண ஆண்டு விழாவில் சென்னையில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் போது, எம்.ஜி.ஆரின் மரபுக்கு பொருத்தமான எதிரிகளை அனுமதிக்க மாட்டேன் என்று உறுதியளித்தார்.*பா.ஜ.க தனது பிரச்சார வீடியோக்களில் எம்.ஜி.ஆரின் படங்களை பயன்படுத்தியபோது, அவற்றை மோடி மற்றும் கட்சி மாநிலத் தலைவர் எல்.*அவர் கூறினார், "உங்கள் சொந்த தலைவர்களின் படங்களை பயன்படுத்துங்கள். எங்கள் தலைவரை ஏன் பயன்படுத்துகிறீர்கள்? எம்.ஜி.ஆர் AIADMK இன் நிறுவனர் ஆவார், மேலும் அவர் எப்போதும் AIADMK மட்டுமே அதிகாரத்தில் இருக்க விரும்புவார்" என்று கூறினார்.
'எம்.ஜி.ஆர்- நடிகர்கள் முதலமைச்சர் ஆனது' என்ற எழுத்தாளர் அருணன், "எம்.ஜி.ஆரின் உருவத்தை ஏற்றுக்கொள்வது திமுக எதிர்ப்பு அரசியலுக்கு உதவுகிறது. எம்.ஜி.ஆர் கருணாநிதி தன்னைச் சுற்றி ஒரு எதிர்மறை பிம்பத்தை உருவாக்க ஒரு 'தீய சக்தி' என்று குறிப்பிட்டார். எனவே பாஜக, கமல்ஹாசன், டி.எம்.கே.யைப் பெற விரும்பும் எவரும் எம்.ஜி.ஆரின் படத்தைப் பயன்படுத்துகிறார். இறந்த ஒரு தலைவரை விமர்சிப்பதன் மூலம் அது ஒன்றும் பெறாது என்பதை டி.எம்.கே புரிந்துகொள்கிறது. ஆகையால், ஆரம்ப நாட்களில் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் பகிர்ந்து கொண்ட அன்பான மற்றும் வசதியான உறவைப் பற்றி மட்டுமே அவர்கள் பேசுகிறார்கள். ஏ.டி.எம்.கே. இப்போது ஒரு தீர்வில் உள்ளது, எனவே அதன் நிறுவனர் தலைவரை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறது. ".........News 18...
-
எங்கள் தலைவா (இறைவா ) உன்னை போல் மனித தெய்வம் இவ் உலகில் உண்டா தரணி போற்றும் தன்னிகர் இல்லா எங்கள் தங்க தலைவா ,மக்களுக்க்கவே வாழ்ந்த "மக்கள் திலகமே "
எங்களின் இதயமே நீ தானே.
================================================== =========
எம்.ஜி.ஆரின் ஆரம்ப நாட்களில் , அவர் மீது மிகப் பெரிய அவதூறு ஒன்று சொல்லப்பட்டது..!
ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டு விட்டு , ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டுக் கொடுத்து விட்டு , அதன் பிறகு நடிக்க மாட்டேன் என்று மறுத்தால்....அது குற்றம்தானே...?
ஏன் அந்தக் குற்றத்தை செய்தார் எம்.ஜி.ஆர்.?
இதோ.. அந்தக் குற்றச்சாட்டுக் கேள்வி....
“சில படங்களில் நடிக்க நீங்கள் மறுத்து விட்டதாகவும், சில படங்களில் நடிக்க செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும் பத்திரிகைகளில் வரும் செய்திகள் உண்மையா?”
இதற்கு எம்.ஜி.ஆர். கூறிய பதில் :
“இரண்டு படங்கள். ஒன்று காத்தவராயன். இன்னொன்று லலிதாங்கி. இரு படங்களில் இருந்து விலகினேன். ஆனால் பத்திரிகைகள் கூறும் காரணங்களால் அல்ல. சாமி கும்பிட மறுத்து விலகினேன் என்பது தவறு. கடவுள் வழிபாடு என்பது அவரவர் சொந்த விஷயம்.
காத்தவராயன் படத்தில் மாந்தரீக காட்சிகள் நிறைய. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. என் மாமன் ஒருவர் மாந்தரீகனாக இருந்தார். எனவே எனக்கு நன்றாக தெரியும். மாந்தரீகம் ஒரு பித்தலாட்டம். மந்திரத்தில் மாங்காய் விழாது.
படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் படிக்காதவனும் சினிமா பார்க்கிறான். அந்த பாமரர்கள் என் படத்தில் நான் சொல்வதையும் செய்வதையும் நம்புகிறார்கள். அவர்களின் மனதில் தவறான கருத்துகளையும் பொய்களையும் புகுத்த நான் சம்மதிக்க மாட்டேன்.
நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது. அதனால் ஒப்பந்தம் போடும்போதே அதையெல்லாம் மாற்றினால்தான் நடிப்பேன் என்று சொன்னேன். ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பிறகு பின்வாங்கினார்கள். கர்ண பரம்பரையாக சொல்லப்படும் கதையை மாற்றினால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். நான் விலகாமல் என்ன செய்வது?
அப்படித்தான் லலிதாங்கியும். அதில் கதாநாயகன் எல்லா பெண்களும் விபசாரிகள் என்கிறான். தாய்க்குலத்தை மதிக்க வேண்டும் என்று சொல்லி வரும் நான் எப்படி அதை உச்சரிக்க முடியும்? லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா? நாட்டின் எதிர்காலமே அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது? அதனால் அந்த படத்தை வேண்டாம் என சொல்லி விட்டேன். இதுதான் நடந்தது...”
# இதுதான் எம்.ஜி.ஆரின் ஒப்புதல் வாக்குமூலம்...! ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத்தானே இருக்கிறது..?
இதில் நாம் கற்றுக் கொள்ள இன்னும் சில விஷயங்களும் கூட இருக்கின்றன..!
#“நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது.”
“லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா?”#
# எம்.ஜி.ஆர். காட்டிய இந்த சமூக அக்கறையை ,
இன்றைய “பீப்” பாய்கள் [Beep Boys ] கொஞ்சம் புரிந்து கொள்வது நல்லது...!.........VRH...
-
தலைவரின் லட்சியப் படமான "பல்லாண்டு வாழ்க" 1975 அக் 31 ல் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது. உதயம் புரடொக்ஷன்ஸார் தலைவரோடு இணைந்த 3 வது தயாரிப்பான "பல்லாண்டு வாழ்க" முதல் இரண்டு படங்களான "இதயவீணை" "சிரித்து வாழ வேண்டும்" ஆகியவை 100 நாட்கள் ஓடினாலும் அதனினும் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. படத்தில் தலைவரின் கண்களுக்கு உள்ள சக்தியை அனைவரையும் உணர வைத்தது.
பாடல்கள் அத்தனையும் அருமையான இளமையான மெட்டுக்கள். 'தோ ஆங்கென் பாராகத்' என்ற சாந்தாராமின் படத்தை தழுவி எடுத்தாலும் தமிழுக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்து எடுக்கப்பட்டது. "இதயக்கனி"யின் 72 வது நாளில் வெளியாகிய போதிலும் அதற்கு அடுத்ததொரு வெற்றியை பெற்றாலும் ஒரு சில சென்டர்களில் அபரிமிதமான வசூலை கொடுத்தது எனலாம்.
நெல்லை பூர்ணகலாவில் 101 நாட்கள் ஓடி மாநகரிலேயே மாற்று நடிகரின் எந்த ஒரு படமும் நெருங்க முடியாத வெற்றியை பதிவு செய்தது.நெல்லை பூர்ணகலாவில் 100 நாட்கள் கண்ட ஒரே படம் "பல்லாண்டு வாழ்க" மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 101 நாட்களில் ரூ 260000 ஐ வசூலாக பெற்று அசர வைத்தது.
மதுரையில் 33 நாட்களிலேயே 3 லட்சத்தை தாண்டி சாதனை செய்தது.
சென்னையில் தேவிபாரடைஸ்(104) அகஸ்தியா(104) சரவணாவில்(70) வெளியாகி மொத்தம் 278 நாட்கள் ஓடி ரூ 1453287.36 வசூலாக பெற்றது.1975 ம் ஆண்டில் 3வது 10 லட்சம் தாண்டி வசூலான படமாக சாதனை செய்தது.
தேவிபாரடைஸில் மட்டும் ரூ 793428.80 வசூலானது. அகஸ்தியாவில் 104 நாட்களில்
ரூ 428927.19 வசூலாக பெற்றது.
சரவணாவில் 70 நாட்களில் ரு 230931.37 வசூலானது. தேவி பாரடைஸில் வெளியான அய்யனின் அனைத்து படங்களையும் வென்று முன்னணி பெற்றது குறிப்பிடத்தக்கது. நெல்லையில் 101 நாட்களிலேயே ரூ 260534.80 பெற்று அய்யனின் அனைத்து படங்களையும் ஓவர்டேக் செய்தது "பல்லாண்டு வாழ்க" படத்தின் தனி சிறப்பு..........ksr.........
-
35 ஆண்டுகளுக்கு முன் பள்ளி மாணவனாக இருந்த போது*
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடன் அமர்ந்து சத்துணவு சாப்பிட்டதை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என்று எம்.ஜி.ஆர்
விழா ஒன்றில் திருச்சியை சேர்ந்த ஆசிரியர் நெகிழ்ச்சியுடன் கூறினார்
35 ஆண்டுகளுக்கு முன் எம்.ஜி.ஆருடன் அமர்ந்து சத்துணவு சாப்பிட்ட பாலகன் இன்று வளர்ந்து 40 வயதை தொட்டு விட்டார். அவரது பெயர் கே. புஷ்பராஜ். எம்.எஸ்சி., பி.எட் படித்து உள்ள இவர் தற்போது ஆசிரியர் பணியை செய்து வருகிறார் காட்டூர் பாத்திமாபுரத்தில் வசித்து வரும் இவரது மனைவி பெயர் ஜூலி மேரி. இந்த தம்பதியினருக்கு மேஷா (வயது5) என்ற பெண் குழந்தையும் ஆண்டோ (2) என்ற ஆண் குழந்தையும் உள்ளன. புஷ்பராஜின் தந்தை பெயர் குழந்தைசாமி, தாயார் ஞானசவுந்தரி நிர்மலா மேரி,
மகிழ்ச்சி நிறைந்த
இனிய வணக்கம்..........*
-
எம்.ஜி.ஆர் சிகர சாதனையின் சிற்பி - 1970ல் பேசும்படம் புகழாரம்
நமது தலைவர் எம்.ஜி.ஆரின் மிக உன்னத மகோன்னத படைப்பு "அடிமைப்பெண்", வெள்ளிவிழா காவியம், படம்.176 நாட்கள் ஓடியது.இந்த படத்திற்கு பிலிம்பேர் விருது கிடைத்தது.இந்த படத்தின் பெருமைகளை நாம் பல கோணங்களில் சொல்லிக்கொண்டே போகலாம்.இந்த படத்தை எம்.ஜி.ஆர்., ஒருவர் தான் இவ்வளவு சிறப்பாக எடுக்கவும்,இயக்கவும் முடியும் (படம் கே.சங்கர் இயக்கம் என்றாலும் இயக்கியது தலைவரே.ஒவ்வொரு பிரேமும் தலைவர் அனுமதி இல்லாமல் படம் பிடிக்கப்படவில்லை ) என்று இந்திய திரை உலகமே சொன்னது.இந்தப்படம் சென்னையில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் குடும்பத்துடன் பார்த்துவிட்டு காட்சிக்கு காட்சி தனது பிரமிப்பை தன் குடும்பத்துடன் உணர்ச்சி மேலிட்டு சொல்லிவந்தாராம்.அண்ணனை தவிர வேறு எவரும் இந்த படத்தை இவ்வளவு பிரமாண்டமாக எடுக்க முடியாது என்று சொன்னாராம்.
பேசும்படம் தனது 1970 ஜூலை இதழில் அடிமைப்பெண் படம் பற்றி வானுயர புகழ்ந்து எழுதியது.மக்கள் திலகதின் ஒரு மாபெரும் சாதனை ,புதுமையின் விளைநிலம் புரட்சிநடிகர் என்று புகழ்ந்தது."சிகர சாதனையின் சிற்பி" என்று புகழாரம் சூட்டியதோடு ,அந்த சிறப்புக்குப் பிறப்பு கொடுத்தது அடிமைப்பெண் என்றது.பேசும்படம் புகழுரை இத்துடன் பதிவு செய்துள்ளேன்..........nssm...
-
எங்கே_தேடுவோம் ...?!
பிரபல திரைப்பட கதை வசனகா்த்தா*
சக்தி கிருஷ்ணசாமி .
வீரபாண்டிய கட்டபொம்மன்*
போன்ற பல திரைப்படங்களுக்குக்*
கதை வசனம் எழுதியவா் .
அவரது மகளுக்குத் திருமணம்*
நடைபெறுவதாக இருந்தது .
ஒருநாள் , அமைச்சராகவும்*
பேரவைத் தலைவராகவும்*
இருந்த க.இராஜாராமிடம் இதுபற்றி*
சக்தி கிருஷ்ணசாமி பேசிக்*
கொண்டிருந்தபோது ,
'உங்களுக்குத்தான் எம்.ஜி.ஆரைத்*
தொியுமே . அவா் படங்களுக்கும்*
வசனம் எழுதி இருக்கிறீா்களே ,*
அவாிடம் உதவி கேட்கலாமே' என்றாா்*
இராஜாராம் .
'நான் தொழில் ரீதியாகத்தான்*
அவருடன் பழகி் இருக்கிறேன் .*
இதுபோல் உதவி கேட்கும் அளவுக்கு*
நெருங்கிப் பழகியதில்லையே' என்று*
சக்தி கிருஷ்ணசாமி சொல்லி இருக்கிறாா் .
'அதனால் என்ன, நான் கூட்டிப்*
போகிறேன் வாருங்கள்' என்று*
சொல்லிவிட்டு இராஜாராம் , அவரை*
அழைத்துச் சென்று எம்.ஜி.ஆாிடம்*
அவாின் நிலைமையை எடுத்துச்*
சொன்னாா்.
உடனே புரட்சித் தலைவா்*
எம்.ஜி.ஆா்., சக்தி கிருஷ்ணசாமியைப்
பாா்த்து 'எவ்வளவு பணமிருந்தால்*
திருமணத்தை நன்றாக நடத்துவீா்கள்'
என்று கேட்டாா் .
உடனே 'இருபதாயிரம் இருந்தால்*
சிறப்பாகச் செய்து விடுவேன்' என்று*
கிருஷ்ணசாமி சொல்ல ,*
உடனே இருபத்தைந்தாயிரம் ரூபாய்*
கொடுத்து , திருமணத்தைச் சிறப்பாக*
நடத்துங்கள்'
என்று சொல்லிவிட்டு ,
பொருளாதார ரீதியில் மேலும் உதவும்*
வகையில் , அப்போது தான் நடிக்க*
ஒப்பந்தமாயிருந்த "எங்க வீட்டுப் பிள்ளை" , படத்திற்கு வசனம் எழுதவும்*
வாய்ப்பளித்தாா் .
புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா்., போன்ற
ஒரு மாமனிதரை இனி நாம் எங்கே*
தேடுவோம் ?...
♥♥
-
நம் தங்க தலைவரின் "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்", படத்தின் படப்பிடிப்பு வட மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியில் படம் ஆகி கொண்டு இருந்த நேரம்.
ஒரு ஓய்வு நாளில் பட குழுவினர் அருகில் இருந்த அஜ்மீர் தர்காவில் வழி பாடு நடத்த செல்ல...அங்கே வரும் பயணிகளை அழைத்து கொண்டு செல்லும் குதிரை வண்டிகளில் ஒரு வண்டி பின் புறம் ..
நம் தலைவரின் பெரிய படம் ஒட்ட பட்டு இருக்க கண்ணை நம்ப முடியாமல் குழுவினர் அருகில் சென்று அந்த வண்டியின் பின் புறம் பார்க்க அது தலைவர் படமே தான்...
தன் குதிரை வண்டி அருகில் ஒரு கூட்டம் நிற்பதை பார்த்த அதன் உரிமையாளர் அருகில் வர நம்மவர்கள் இவர் படத்தை நீங்கள் ஏன் ஒட்டி இருக்குறீர்கள் என்று வியந்து ஹிந்தி தெரிந்தவர் கேட்க.
அதற்கு அந்த வட இந்திய வண்டிக்காரர் இவர் எனக்கு கடவுள் போல...இவர் நடித்த படம் ஒன்று அதாவது "அடிமைப்பெண்", பட பிடிப்பின் போது மொத்த குழுவினருக்கும் மற்றும் ஒட்டகங்களுக்கும் எங்கு இருந்தும் தண்ணீர் நிரப்பி பட பிடிப்பு நடக்கும் இடத்துக்கு கொண்டு வந்து சேர்ப்பேன்.
படத்தில் நாயகன் இவர் என் உண்மை உழைப்பை பார்த்து எல்லா காட்சிகளும் எடுக்க பட்டு அவர் ஊர் திரும்பும் வேளையில்.
நான் அணுதினம் கொடுத்த தண்ணீர் லோடுகள் கணக்கை தினம் தினம் சரியாக பணம் கொடுத்த போதும்...
ஊர் திரும்பும் நாள் அன்று இந்த எளிய குதிரை வண்டி காரன் எதிர் பார்க்காத ஒரு பெரும் தொகையை எனக்கு கொடுத்து என்னை கை குலுக்கி விடைபெற்றார்.
நானும் எத்தனையோ பெரிய மனிதர்கள் செல்வந்தர்கள் நடிகர்கள் எல்லோரையும் பார்த்து இருக்கிறேன்...ஆனால் அவர் கண்ணில் இருந்த நேர்மை உண்மை வேறு எங்கும் இது வரை நான் பார்க்க வில்லை...அந்த நொடி முதல் நான் என்னை அவரிடம் இழந்தேன் என்று சொல்ல...
குழுவினர் திகைத்து போய் இப்போ அவரை பார்க்க வர விருப்பம் ஆ என்று கேட்க அவரும் எங்கே எங்கே என்று ஆவலுடன் கேட்க அவரை அழைத்து கொண்டு நம் மன்னவர் முன்பு விவரம் சொல்லி அவரை நிறுத்த.
தலைவர் மனம் நெகிழ்ந்து அவரை வரவேற்று தொழில் எப்படி இருக்க என்று கேட்க உங்க புண்ணியத்தில் அருமை என்று அவர் பதில் சொல்ல..
இப்போ என்ன வேண்டும் உங்களுக்கு என்று தலைவர் கேட்க ஐயா எனக்கு ஒன்றும் வேண்டாம்...உங்கள் உடன் ஒரு புகைப்படம் படம் மட்டும் போதும் என்று சொல்ல.
அவரை அருகில் அழைத்து அவர் தோளில் கையை போட்டு கொண்டு அவர் தலைவர் உடன் எடுத்து கொண்ட அந்த படம் இன்னும் அஜ்மீர் தர்கா பகுதியில் அவர் குதிரை வண்டியில் ஒட்ட பட்டு சுற்றி கொண்டு இருப்பதை.
நம்பித்தான் ஆக வேண்டும்...வாழ்க தலைவர் புகழ்.
உங்களில் ஒருவன். நெல்லை மணி...
நன்றி தொடரும்...
பூவுடன் சேர்ந்த நாறுக்கு கிடைக்கும் புகழ் எல்லாம் பூக்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது உலக பொது விதி..நன்றி.........
-
'கண் நிறைந்த தலைவரை இதயத்தில் பூஜிக்கும் கண்பார்வையற்ற தாய்'- உங்கள் நெஞ்சை பதம் பார்க்கும் உருக்கமான செய்தி.....'என்ன உடம்புயா...சும்மா கல்லு மாதிரி இருக்காரே தலைவரு'- இப்படி பாத்திமாபீவி மெய்சிலிர்த்தது இன்று மட்டுமல்ல. 1969 லேயே தனது இளம் வயதில் தலைவரின் மீது உள்ள அன்பில் அழகில் மெய்சிலிர்த்து சொன்ன வார்த்தைகள். சேலம் லைன்மேடு பகுதியில் வசிப்பவர் 70 வயதான மூதாட்டி பாத்திமாபீவி. கடந்த 13 நாட்களாக(28.01.2021) சேலம் அலங்காரில் வெற்றிநடைபோடும் அடிமைப்பெண் காவியத்தை ஒருநாள் விட்டு ஒருநாள் பார்த்து வருகிறார். தலைவரின் எந்த காவியமானாலும் வசனங்களை அச்சு பிறழாமல் மனப்பாடமாக சொல்கிறார். கண்கண்ட கணவரை இழந்த இவர் தற்போது கண் பார்வை இன்றி உள்ளார். என்றாலும் தலைவர் காவியத்தை காதால் கேட்டு ரசிக்க வருகிறார். எவரது உதவியும் இன்றி தனது பணத்தை கொண்டே டிக்கெட் எடுக்கிறார். தாயை தியேட்டருக்கு அழைத்து வருவது இந்த தெய்வத்தாயின் மகன் ரபீக். சமையல் வேலைக்கு சென்று தாயை வாழவைக்கிறார். மிகவும் ஏழ்மையில் குடிசை ஒன்றில் வசிக்கிறார்கள்." அடிமைப்பெண்" காவியத்தை 1969 ல் சாந்தி தியேட்டரில் 15 க்கும் மேற்பட்ட தடவை பார்த்தாராம். தலைவரின் கொள்ளை அழகில் மனதை பறிகொடுத்த பல்லாயிரம் ரசிகர்களில் இவரும் ஒருவர். இந்த அலங்கார் தியேட்டரில் தலைவரின் "ரிக்சாக்காரன்", "என் அண்ணன்" உள்ளிட்ட பல காவியங்கள் நூறு நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்றுள்ளது என்றும் என் அண்ணன் காவியத்திற்கு 107 அடி உயர கட்அவுட் வைக்கப்பட்டது என்றும் இந்த தியேட்டரை முன்னாள் அமைச்சர் திரு. ராஜாராம் திறந்து வைத்துள்ளார் என்றும் தலைவர் இந்த தியேட்டரில் நடந்த தனது காவியத்தின் வெற்றிவிழாவுக்கு வருகை தந்துள்ளதாகவும் கூறும் திரு. மாஸ்டர் சுப்பிரமணி, தலைவர் வீட்டில் அவரை சந்தித்து தலைவர் கைகளை பிடித்து மகிழ்ந்ததையும் நினைவூட்டினார். தீவிர தலைவர் பக்தரான மாஸ்டர் திரு.சுப்பிரமணி பல நாள் காத்திருந்து பாத்திமாபீவி அம்மாளை கண்டுபிடித்து அவருக்கு சிறப்பு செய்ய ஏற்பாடு செய்தார். இந்த அம்மாவைப்பற்றி அறிந்த நாளிலிருந்து 'எனக்கு புகைப்படம், வீடியோ பேட்டி எடுத்து அனுப்புங்கள்'என நச்சரித்துக் கொண்டே இருந்தேன். அதை அடிமைப்பெண் 10 வது நாள் விழாவான கடந்த ஞாயிறன்று நிறைவேற்றி வைத்தனர் தலைவர் பக்தர்கள். அதன்படி பகுதி கழக எம்ஜிஆர் மன்ற செயலாளர் திரு.ஜெ.மாணிக்கம் அவர்கள் பாத்தீமாபீவி மற்றும் அவரது மகனுக்கு புத்தாடைகள் உள்ளிட்ட பல உதவிகள் வழங்கி பாராட்டி மகிழ்ந்தார். தியேட்டரில் படம் பார்க்க வந்த 130 க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு எவர்சில்வர் தட்டு பரிசு வழங்கினார். தியேட்டர் ஊழியர்கள் 10 க்கும் மேற்பட்டோருக்கு எவர்சில்வர் குடம் வழங்கினார். செய்தி தொகுப்பு நான்- (சாமுவேல்,சத்தியமங்கலம்).பேட்டி- சுப்பிரமணி. புகைப்படங்கள் திரு.ஜெ.மாணிக்கம் அவர்களின் மகன் திரு.சவுந்திரராஜன். உங்கள் கருத்துகளை, வாழ்த்துகளை பாத்திமாபீவி அம்மாளுக்கு நேரில் தெரிவிக்க முடியாவிட்டாலும் திரு.சுப்பிரமணி அவர்களுக்கு தெரிவிக்கலாம்.(9566537161).........
-
நமது தலைவர் எம்.ஜி.ஆர் திரையுலகில் கதாநாயகனாக தெரிவு செய்யப்பட்டு நடித்த முதல் படம் ராஜகுமாரி.எம்.ஜி.ஆர் கதாநாயகனாக டைரக்டர் ஏ.எஸ்.ஏ.சாமி பெரு முயற்சி மேற்கொண்டவர்.ராஜகுமாரி படத்தை இயக்கியவரும் ஏ.எஸ்.ஏ சாமி தான்.படம் 11.4.1947ல் வெளியாகி வெற்றி பெற்று 168 நாட்கள் ஓடியது.அந்த ஏ.எஸ்.ஏ சாமி ,கலைமணி ஜூன் 1952 இதழில் ஒரு பேட்டி கொடுத்தார்.அதில் எம்.ஜி.ஆர் கத்திசண்டையில் கைதேர்ந்தவர்,வசனங்கள் உதவி செய்தால் வீர ரசம் இவரிடம் நன்றாக இருக்கும் என்று புகழாரம் செய்துள்ளார்.ஆம்.நமது தலைவர் சரித்திர ராஜாங்க படங்களில் பேசும் வீர வசனங்களில், தமிழ் உச்சரிப்பில் வீர ரசம் சொட்டியது உண்மைதானே !.........nssm
-
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் மறுவெளியீடு*தொடர்ச்சி ................இந்த வாரம் வெளியான* படங்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை* மூலக்கடை ஐயப்பாவில்* 28/1/21* முதல்* நீரும் நெருப்பும்*
தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .*
தகவல் உதவி : திரு. ராமு, மின்ட்.*
29/01/21* முதல் மதுரை* ராம் அரங்கில்* எங்க வீட்டு பிள்ளை*
தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி : திரு.எஸ். குமார், மதுரை .
29/01/21 முதல் கோவை சண்முகாவில்* தொழிலாளி* தினசரி 3 காட்சிகள்*
நடைபெறுகிறது .
தகவல் உதவி : திரு.ஜெய்குமார் .,கோவை .
-
#வாத்தியாருன்னா #மாஸ்
#Real #Action #Hero
திரைப்படத்துறையில் பெரும்பாலான ஆக்ஷன் ஹீரோக்கள் நிஜவாழ்வில் ஆக்ஷன் ஹீரோக்களாக இருப்பதில்லை...உடலை மட்டுமே கட்டுமஸ்தமாக வைத்துக்கொண்டு என்ன பயன்? நெஞ்சுல 'தில்'லு வேணுமே!!!
வாத்தியார் நிஜவாழ்விலும் ஆக்ஷன் ஹீரோ தான்...கேள்விப்பட்ட சில சம்பவங்களைப் பகிர்கிறேன்...
என் தந்தையார் சொன்னது :
ஒருமுறை பெங்களூரில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போது, படப்பிடிப்பு குழுவினரைத் தாக்கமுயன்ற கன்னடவெறியர்களை தனியொருவராக சமாளித்தது...
வாத்தியாரின் மெய்க்காப்பாளர் திரு.கே.பி.இராமகிருஷ்ணன் கூறியது :
இரயிலில் இரவு நேரம் பயணம் செய்துகொண்டிருக்கும் போது, தலைவர் இருந்த கோச்சில் 'ஐயோ, அம்மான்னு' அலறல் சத்தம்...நாங்கள் ஓடிச்சென்று பார்க்க, தன்னைத் தாக்கவந்த சில சமூகவிரோத கும்பலை தனியாளாக 'பெண்டு' நிமிர்த்துக்கொண்டிருந்தார்.
புத்தகத்தில் படித்தது :
ஒருமுறை இரவு நேரம் காரில் வரும்போது, கத்தியுடன் தன்னைத் தாக்க வந்த வழிப்பறிக்கொள்ளையர்களை துணிச்சலாக எதிர்கொண்டது...
மேலும், உ.சு.வா படப்பிடிப்பில் கதாநாயகியிடம் வம்பு செய்த ஜப்பான்காரனைப் பதம் பார்த்தது...
இறுமாப்புடன் அறைகூவல் விடுத்த தாராசிங்கிடம், 'தான் உங்களுடன் மல்யுத்தம் செய்யத்தயார்' என பகிரங்கமாக சவால் விட்டது...
இப்படிப் பட்டியல் நீளும்............BSM...
-
"எம்.ஜி.ஆர் பாடம் புகட்டுவதில் அவர் ஒரு நிஜ வாத்தியார்"
மைசூரில் :
கங்கா கெளரி படத்தின் ஷூட்டிங் மைசூரில் நடந்தபோது சிலர் அங்கிருந்த ஜெயலலிதாவிடம் வந்து நீங்கள் கர்நாடகாவில் தானே பிறந்தீர்கள் அதனால் ‘கன்னடம் வாழ்க, தமிழ் ஒழிக’ என்று சொல்லுங்கள் என்று வற்புறுத்தினர். ஜெயலலிதா தமிழ் ஒழிக என்று சொல்ல மறுத்துவிட்டார். கூட இருந்த படப்பிடிப்புக் குழுவினர் வற்புறுத்தியும் ஜெயலலிதா சொல்லவில்லை. கன்னடர்கள் படப்பிடிப்பு நடத்தவிடமாட்டோம் என்று கலாட்டா செய்தனர். இந்த விஷயம் தெரிந்து அருகில் வேறு ஊரில் ஷூட்டிங்கில் இருந்த எம்.ஜி.ஆர் அங்கு வந்துவிட்டார். இப்போது படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக உணர்ந்தனர். எம்.ஜி.ஆர் இங்குதான் இருக்கிறார் அவர் பார்த்துக்கொள்வார் என்று நம்பினர். ஜெயலலிதாவிடம் பேசி ஆறுதல் கூறினார். தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கும்படி தயாரிப்பாளருக்கு ஆலோசனை வழங்கினார்.
ஒரு சமயம் மைசூரில் எம்.ஜி.ஆரும் லதாவும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது படப்பிடிப்பு இடைவேளை விடப்பட்டது. எம்.ஜி.ஆர் சற்று தூரத்தில் அமர்ந்திருந்தார். அதை கவனிக்காத சில வாலிபர்கள் லதாவையும் மற்ற நடிகைகளையும் பார்த்து ஆபாசமாக பேசி சிரித்தனர். இதை கவனித்த எம்.ஜி.ஆர் விரைந்து வந்து அவர்களை அடித்து உதைத்தார். அநியாயம் நடக்கும்போது ஸ்டன்ட் நடிகர்களை அழைத்து அடிக்கச் சொல்வோம் என்று எம்.ஜி.ஆர் காத்திருக்க மாட்டார். எதிரிகள்மீது விழும் முதல் அடி அவர் அடியாகத்தான் இருக்கும். அவர்கள் தம் வாழ்நாளில் திரும்பவும் அந்தத் தப்பை செய்ய நினைக்காத அளவுக்குப் பாடம் புகட்டுவதில் அவர் ஒரு நிஜ வாத்தியார்..........mgn...
-
#வியப்பும் #பக்தியும்
பேராசிரியர். திரு.கு.ஞானசம்பந்தம் ஒரு நிகழ்ச்சிக்காக இலங்கைக்குச் சென்றிருந்தார்...நிகழ்ச்சியை முடித்துவிட்டுக் 'கண்டி' நகரம் வழியாக டாக்ஸியில் வந்துகொண்டிருந்தார்...
திடீரென அந்த டாக்ஸி டிரைவர் வண்டியை நிறுத்தி ஒரு காலியிடத்தை நோக்கிக் கும்பிட்டுவிட்டு பின்னர் காரை ஓட்டத்தொடங்கினார்...
டிரைவரின் செய்கையைப் பார்த்த
ஞானசம்பந்தன் அவர்களுக்கு ஒரே வியப்பு..."அந்த இடத்தில் கோயிலோ வேறொன்றுமோ இல்லை!!! ஒரு காலியிடத்தைக் கும்பிடுகிறாரே!!!!"
ஏன் தம்பி! அந்த இடத்தில் ஒன்றுமே இல்லையே! அதை ஏன் கும்பிட்டீர்கள்...???
அதற்கு டிரைவர்,
"இந்த இடத்தில் தான் ஒரு காலத்தில் எங்க எம்ஜிஆர் பிறந்தவீடு இருந்தது..."
என்றதும்...!!!
ஞானசம்பந்தன் அவர்கள் அப்படியே ஒருகணம் ஆடிப்போய்விட்டார்...
'ஒரு காலியிடத்தில் தங்கள் மனங்கவர்ந்த தலைவன் பிறந்தவீடு என்ற ஒரே காரணத்திற்காக வணங்குகிறார்களென்றால் அந்தத் தலைவன் எப்படிப்பட்ட தலைவனாக இருந்திருக்கிறார்...அப்படிப்பட்ட தலைவன் மேல் இந்த மக்களுக்கு எந்தளவு பக்தி...!
பிரமித்துப்போனார்...பேராசிரியர்.........bsm.. .
-
'பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்டது' என்று நினைக்குமாம். அதுபோல சில கிணற்று கைஸ்கள்
அய்யனின் முதல் படம் வெளியான நாளான அக் 17 ல் புரட்சி தலைவர் கட்சி ஆரம்பித்தாராம். அதனால் யாரும் அழிக்க முடியாத பெருவெற்றி பெற முடிந்ததாம். இந்த அரை பைத்தியங்களை என்ன சொல்லி அழைப்பது என்று அகராதியை புரட்டி பார்த்தும் சரியான வார்த்தைகள் கிடைக்காமல் அலைகிறேன்.
சரியான அரைவேக்காடுகளாக திரியும் இவர்களை போன்றோர்கள் கொடுத்த பில்ட் அப்களில்தான் பேஸ்மென்ட் வீக்காகி அய்யன் ஆல் அவுட் ஆனதை மனதில் கொள்ளாமல் இன்னமும் அதை சொல்லியே திரிகிறார்கள். இனியும் இவர்களை விட்டு வைத்தால் ஆண்டவனை படைத்தது அய்யன்தான் என்ற புது ஆராய்ச்சியில் இறங்கி விடுவார்கள்.
அதனால் என்ன சொன்னாலும் அய்யனின் கைஸ்கள் திருந்ந மாட்டார்கள் என்பதால் அந்த புலம்பலை காதில் வாங்காமலே விட்டு விடலாம். மக்கள் திலகம் முதல் கதாநாயகனாக நடித்த "ராஜகுமாரி" வெளியான ஆண்டு 1947 ல் தான். ஆனால் அந்த முதல் படமே அந்த ஆண்டில் வெளியான படங்களில் வசூலில் முதலிடம் பெற்று சாதனையின் சிகரமாக விளங்கியது அய்யனின் அரைவேக்காடுகளுக்கு தெரியாதா?.
"ராஜகுமாரி" 9 திரையரங்குகளில் 100 நாட்களை தாண்டி அதிகபட்சமாக 168 நாட்கள் வரை ஓடி மகத்தான வெற்றி பெற்றது. அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படம் ராஜகுமாரிதான். புரட்சி நடிகரின் நடிப்பில் தெரிந்த எழுச்சி அனைவரையும் உற்று நோக்க வைத்தது. ஆனால் "பராசக்தி"யின் வெற்றிக்கும் அய்யனுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அது ஓடியது தீய சக்தியின் தீயான வசனத்துக்காக மட்டும்தான் என்பதை கூட மறைக்க முயல்கிறார்கள்.
அதேபோல் "மனேகரா"விலும் தீய சக்தியின் பங்கு அபரிமிதமானது. இந்த இரண்டு படங்களுக்கும் இடையே வந்த அய்யனின் அனைத்து படங்களுமே தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்பதே உண்மை. சில படங்கள் படுதோல்வி அடைந்தது.
அய்யனின் நடிப்பால் கூட படத்தை நிலை நிறுத்த முடியவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. "பராசக்தி", "மனோகரா" தவிர தீயசக்தியின் பங்களிப்பு இல்லாத அய்யனின் படங்கள் எடுபடவில்லையா? அப்படியானால் அய்யனின் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் அம்போவா.
ஆனால் புரட்சி நடிகரோ 1950 ல் அவர் நடித்த இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாக அமைந்தது. "மருதநாட்டு இளவரசி" "மந்திரி குமாரி" ஆகிய படங்கள்தான். இரண்டுமே பல சென்ட்டர்களில் 100 நாட்களை தாண்டி ஓடியது. "மந்திரி குமாரி" படத்தில் தலைவர் காங்கிரசில் அமைதியாக இருந்த போதிலும் திரைப்படத்தில் சீறிப் பாய்ந்ததை மக்கள் வெகுவாக ரசித்தார்கள்.
எம்ஜிஆருக்கு புயல் வேகத்தில் ரசிகர் மன்றங்கள் தோன்றின. அடுத்து 1951ல்
வெளியான "மர்மயோகி" "சர்வாதிகாரி" போன்ற படங்கள் திரையிட்ட அநேக சென்டர்களில் 100 நாட்களை தாண்டி ஓடியது. "மர்மயோகி"யில் குதிரையில் புழுதியை கிளப்பி வரும்போதே எழும்பும் கரவொலியே சொல்லும் தலைவருக்கு உச்ச நடிகர் அந்தஸ்து கிடைத்தாயிற்று என்று. அவர் பேசும் 'கரிகாலன் குறி வைத்தால் குறி தவறாது' என்ற பஞ்ச் டயலாக் இளைஞர்களின் நெஞ்சத்தை கொள்ளை கொண்டது. திரையுலகில் புரட்சியை ஏற்படுத்திய ஆளுமையை என்னவென்று சொல்வது. அதுவரையில் திரைத்துறையில் கால் பதிக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த அய்யன் தலைவருக்கு போட்டியாக யாரால் அவரை நினைக்க முடியும். தன்னம்பிக்கை இல்லாதவன்தான் கைத்தடியாக கழகத்தை பயன்படுத்துவான் என்பதற்கு அய்யனே சாட்சி.
"மந்திரி குமாரி" 1950 ஆண்டும் "மர்மயோகி" 1951 ம் ஆண்டும் வசூலில் முதன்மை ஸ்தானத்தை பிடித்ததை எண்ணி பார்க்க வேண்டும். பலபேர் தாங்கிப் பிடித்து நடிக்க வைத்த மீன்வாய் அய்யனை, (மீன்வாய் என்று சொன்னது நானல்ல உயர்திரு மதிப்பிற்குரிய திரு ஏவிஎம் அவர்கள்), போய் தலைவருக்கு போட்டியாக நினைக்கத்தான் முடியுமா? ஆண்டிற்கு ஒரு படம் 100 நாட்கள் ஓடினால் அய்யனுக்கு அதிசயம்.ஆனால் தலைவருக்கோ ஒரு படம் ஓடாவிட்டால் அது அதிசயம். அதிசயமே அசந்து போகும் தலைவரே ஒரு பேரதிசயம்.
அதே ஆண்டு வெளியான "என்தங்கை" படம்தான் "பராசக்தி"யை காட்டிலும் அதிகமாக(351 நாட்கள்)
ஓடியதை அறியவில்லையா ஆப் பாயில்டு அய்யன் கைஸ்கள்?.
இப்படி திமுக மூலம் நுழைந்த அய்யனை தீயசக்தி தாங்கி அழைத்து வராவிட்டால் அய்யன் அன்றே புழக்கடை வழியாக சென்றிருப்பார். கனல் தெறிக்கும் வசனங்களை கத்தி பேசும் அய்யனை காட்டிலும் கனல் தெறிக்கும் விழிகளால் வசனத்தை புரட்சி நடிகர் பேசும் பாங்கு அனைவரையும் கவர்ந்திழுத்ததால்தான் இறுதி வரை நம்பர் ஒன் இடத்திலே இருந்தார் என்பதை யாரும் புறந்தள்ள முடியாது..........ksr..........
-
உப்பு இட்டவரை உள்ளலவும் நினை!
என்பார்கள் !அந்த வகையில் அதை சிரமேற்கொண்டு தன் உயிர் போனாலும் நிறைவேற்றுபவர்!
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்!
தன் இளமைக்
காலத்தில் இதை நன்கு உணர்ந்தவர் மக்கள்திலகம் அவர்கள் !ஆரம்ப காலத்தில் தான் பட்ட அனுபவங்களை நாடகம் சினிமா அரசியல் என எல்லா நிலைகளிலும் நடத்திக்காட்டியவர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்கள் ! ஒரு மனிதர் எப்படிப்பட்ட சூழ் நிலையிலும் அதை நிறைவேற்ற பகீரத முயற்ச்சி எடுத்து நடத்திக்காட்டியவர்!
நினைத்ததை முடிப்பவன் என பெயர் வாங்கியவர் மன்னாதி மன்னன் எம்ஜிஆர் அவர்கள்! *இந்த வைராக்கியம் எல்லோரும் எளிதில் செயல்படுத்த முடியாது !ஆனால்
அதை மிக எளிதாக நிறைவேற்றிய
ஆயிரத்தில் ஒருவர் தனிப்பிறவி எம்ஜிஆர் அவர்கள்! இந்த அரிய செயல்களை நல்ல
மனம் கொண்டவர்களாகலேயே நினைக்க முடியும் !சூது வாது வெள்ளை மனம் வெளுத்ததெல்
லாம் பால் என நினைக்கும் பொன்மனம் கொண்டவர்களால் தான் இத்தகைய காரியங்களை நிறைவேற்ற முடியும் !
அரசியலில் இவர் உருவாக்கிய திட்டங்கள் அதை நிறைவேற்ற சந்தித்த தடங்கல்கள் சிரமங்கள் உலகில் இவர் ஒருவரால்தான் கடந்து பொற்கால ஆட்சி தரமுடிந்தது !
இதற்கு சாதாரமனம் இருந்தால் போதாது !வீரம் நெஞ்சுரம் நற்சிந்தனை தாராள குணம் வாரி வழங்கும் கொடைத்திறன் இத்தனையும் ஒரு சேர இருந்ததால்தான் சாதிக்க முடிந்தது !
சரித்திரநாயகன் என பெயர் எடுக்க முடிந்தது ! இந்த நூற்றாண்டின் இனையற்ற மனிதர் வரலாற்று நாயகர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஒருவரே! 104 வது பிறந்த நாளை கொண்டாடி மகிழும் இவ்வேளையில் அவர் புகழ் பெருமை கீர்த்தி சாதனை வெற்றி இவைகளை நாம் என்றும் நினைத்து அவர் புகழ் என்றும் ஓங்கி ஒலிக்க இரத்தத்தின் இரத்தங்கள் ! தங்கள் உயிர் போனாலும் புரட்சித்தலைவர் பெருமையை அவர் ஆட்சி சாதனைகளை ஊர் தோறும் பரப்பி வாழும் தெய்வம் !
ஏழை எளிய மக்களின் இறைவன் எங்கள் எம்ஜிஆர் என முழக்கமிட வேண்டும் அவர் இன்றி இந்த நாட்டின் தலையெழுத்தை யாராலும் மாற்ற முடியாது !தேர்தல்
என்று வந்தால் புரட்சித்தலைவர் புகழ் பாடுபவர்களுக்கே ஓட்டு என்ற சாதனை படைத்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை வணங்கி வருவோம் !
வாழ்வில் வளம் பெறுவோம் !
இனிய மாலை வணக்கம் !. ✌️✌️✌️✌️✌️✌️ . -எம்.எஸ்.சேகர்
கோவை-641103..........
-
'டி.வியை off பண்ணு...செல்போனை off பண்ணு...எம்ஜிஆர் படம் பார்க்க தியேட்டருக்கு போவோம்'.... இதுதாங்க எம்ஜிஆர் ரசிகன். ஆனால் இன்று.... 'எம்ஜிஆரின் 110 காவியங்களை கைபேசியில் கண்டுகளியுங்கள்' என்ற செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் மக்கள் திலகம் ரசிகர்களுக்கோ இந்த செய்தி ஆச்சரியமாகப்படவில்லை என்பதே உண்மை. தியேட்டரில் அவரது காவியங்களுக்கு மவுசு குறைந்தா விட்டது? கொரோனா பீதி அடங்கியபின் இரண்டு மாதங்களுக்குபின் திறக்கப்பட்ட தியேட்டர்களில் 90 சதவீதம் மக்கள்திலகம் காவியங்களே திரையிடப்பட்டு ரசிகர்கள் ஆதரவைப் பெற்றன. எனவே திரையுலகை மீண்டும் மீட்டது நடிகப் பேரரசர் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரே. இன்றைய புதுப்படங்களுக்கு வெற்றிகரமாக 2 வது நாள், 3 வது நாள் என நாளிதழ்களில் விளம்பரம் செய்கிற அவல நிலை உள்ளது. 4 வது நாளிலோ முதலுக்கே மோசம் என்ற நிலையில்... 'எம்ஜிஆர் படத்தை போடு. அப்பத்தான் தியேட்டரை ஓட்ட முடியும்' என்ற நிலை உள்ளது. இன்றுகூட 5 ஊர்களில் நமக்கு தெரிந்து மக்கள் திலகம் காவியங்கள் வெற்றிநடை போடுகிறது. கடந்த 3 மாதங்களில் சேலம் அலங்காரில் நம்நாடு, அடிமைப்பெண் தலா 2 வாரங்கள் ஓடியுள்ளன. திருப்பூரில் அன்பே வா 3 வாரங்கள் ஓடி உள்ளது. திருச்சியில் எங்க வீட்டுப் பிள்ளை 2 வாரம் ஓடி உள்ளது. தமிழகம் முழுவதும் நாம் கணக்கெடுக்க திணறும் வகையில் புள்ளி விபரங்களுடன் மக்கள் திலகத்தின் காவியங்கள் மட்டுமே எண்ணற்ற ஊர்களில் கடந்த 3 மாதங்களாக வசூல் சாதனை படைத்து வருவதை இதே தளத்தில் அவ்வப்போது நாம் ஆதாரத்துடன் பதிவிட்டு வருகிறோம். அதிலும் தொலைக்காட்சிகளில் சுமார் 60 காவியங்கள் மாதம் ஒன்றுக்கு தலா 110 தடவை ஒளிபரப்பாகி வருகிறது. அதையும் ஆதாரத்துடன் பதிவிட்டு வருகிறோம். நிற்க......கடந்த 7 ஆண்டுகளில் தமிழ் திரையுலகில் மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் காவியம்தான் 190 நாட்கள் சென்னை ஆல்பர்ட், 160 நாட்கள் சத்யம்) அதிக நாட்கள் ஓடிய சாதனை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் இது மறுவெளியீடுதான். நிற்க. மக்கள் திலகத்தின் ஒவ்வொரு காவியங்களும் முதல் ரிலீஸ் காலத்திலிருந்து அதன் நெகடிவ் உரிமையாளர் மீண்டும் மீண்டும் பிரிண்ட் போட்டு அதன் படப்பெட்டி வைத்திருந்த விநியோகஸ்தர்கள் அந்தக் காவியம் பிலிம்ரோல் சேதமடையும் காலம் வரைக்கும் 70, 50 ஆண்டுக்கணக்கில் திரையிட்டு வாழ்ந்து வருகிறார்கள். நெகடிவ் அழிந்து போய் அல்லது திரையிட முடியாத பல எம்ஜிஆர் காவியங்கள் திரைக்கு வருமேயானால் இன்றும் அமோக வரவேற்பை பெறும். குறிப்பாக மருதநாட்டு இளவரசி, சர்வாதிகாரி, ராஜகுமாரி, மர்மயோகி ஏன் மோகினி, நாம், குமாரி போன்ற காவியங்கள் தியேட்டருக்கு வராதா...என எம்ஜிஆர் ரசிகர்கள் ஏங்கிக் கிடக்கிறார்கள்...அட...60.70 வயது ரசிகர்கள் மட்டும் இல்லீங்க...25, 30 வயதுடைய இளைய தலைமுறை எம்ஜிஆர் ரசிகர்களும்தாங்க. ம்...படகோட்டி காவியம் வராதா என நித்தமும் துடிதுடித்துப் போகிறார்கள் இவர்கள். வேணும்னா பாருங்க...உலகம் சுற்றும் வாலிபன் டிஜிட்டலில் வெளியிடும்போது இதெல்லாம் உண்மை என விளங்கும். ரொம்ப சந்தேகம் இருந்தால் இன்று திரையிடப்பட்டுள்ள மேற்கண்ட 5 ஊர் தியேட்டர்களிலும் பக்தி பரவசம், ஆரவாரத்தை காணலாம். எனவே... எனவே... எனவே....போலி தலைவன் போலி நடிகன், போலி ரசிகன்கள்தான் கொரோனாவிலிருந்து தியேட்டரை மீட்டார்கள் என்ற போலி செய்தியை நம்பாதீர்கள். குறிப்பாக கைபேசியில் எம்ஜிஆர் படங்கள் பாருங்கள்...டி.வியில் எம்ஜிஆர் படங்கள்...டிவிடி பிளேயரில் எம்ஜிஆர் படங்கள் பாருங்கள் என கூறி எம்ஜிஆர் ரசிகர்களிடம் காமெடி பண்ணாதீர்கள். எம்...ஜி...ஆரா....கொக்கா? யாருகிட்ட....ம்??????!!! Sml...
-
இருப்பதை கொண்டு சிறப்பாக வாழ்க!
நடிகையர் ஆண்களை வெட்டி அதிகாரம் செய்வது தகாது என்றும் எம்.ஜி.ஆர் கருதினார். ஒரு முறை சரோஜாதேவி ஷாட் முடிந்ததும் ‘ஏ ஃபேனை போடுப்பா’ என்று ஆயாசமாக வந்து நாற்காலியில் உட்கார்ந்தார். உடனே எம்.ஜி.ஆர், ‘உன்னால் செய்யக்கூடிய வேலையை ஏன் அடுத்தவருக்கு ஏவுகிறாய்’ என்று கடிந்து கொண்டார். லட்சுமி ஒரு நாள் மதிய இடைவேளையின் போது உறங்கிக்கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் என்ன உறக்கம் என்று எழுப்பிக் கேட்டதற்கு, ‘நேற்று வீட்டில் கரன்ட் இல்லை ஃபேன் ஓடவில்லை’ என்றார். ‘அப்படிச் சொல்லாதே வீட்டில் இருக்கும் வசதியைக் கொண்டு இருக்க பழகிகொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தினார். ஒருமுறை ஏ.வி.எம் சரவணனிடமும் இது போன்ற ஓர் அறிவுரையைக் கூறினார். ‘வசதியாக வாழலாம் ஆனால் ஆடம்பரம் கூடாது’ என்பார். எனவே நடிகைகள் கண்ணியமாக வாழ வேண்டும். மற்றவர்களும் அவர்களை மதிக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் கொள்கையாக இருந்தது.
Posted by : MG Nagarajan
-
"பல்லாண்டு வாழ்க"... அருமையான படம். காவியம்...ஒரிஜினல் படத்தில் வார்டன் சாந்தாராம் இறந்துவிடுவார். நமக்கு தலைவர் சாகக்கூடாது. நமக்காக , நம்ப எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி கதை மாற்றப்பட்டது. புரட்சித் தலைவர் எப்பவுமே நம்ம திருப்திக்காக படம் எடுப்பார். எங்களுக்கு அதான்யா வேணும். கல்கியில் படம் வந்த சமயத்தில் நம் தலைவன் ஓலைத் தொப்பியுடன் கூலிங்கிளாசுடன் ஸ்டைலா சிரிக்கும் புகைப்படம் போட்டிருந்தார்கள். ஓட்டை ஓட்டையா இருக்குகிற தொப்பியில் சூரிய ஓளி பாய்ஞ்சு தலைவர் முகத்தில் சூரிய ஒளி புள்ளி புள்ளியா விழும். அருமையான போட்டோ.....நம்பியாருடன் சண்டைக் காட்சி. நம்பியார் குத்தவரும் மண்வெட்டிய காலிலே தேக்கி உதைச்சு தள்ளி, சட்டுனு மின்னல் மாதிரி படுக்கையிலே இருந்து துள்ளி எழுந்து நின்று சண்டைக்கு தயாரா இந்த போஸ் கொடுப்பார். தியேட்டரில் நாற்காலிகள் உடையும்........கடைசியில் ஜீப்புக்கு ஈடு குடுத்து ஓடி வருவாரே. அதுவும் அந்த வயசுல. இதெல்லாம் எந்த நடிகனும் அந்த வயசில் இவ்வளவு சுறுசுறுப்பா நினைச்சுப் பார்க்கமுடியாது. தலைவன் டா........rrn...
-
கைதி மனோகரோட அம்மா கொடுக்கும் லட்டை மக்கள் திலகம் கண்ணில் தண்ணீரோட அன்போட வாங்கி சாப்பிடுவார்.கிழவியால் வளர்க்க முடியாததால் மனோகரின் 2 குழந்தைகள் இங்கியே இருக்கட்டும் நு சொல்வார். அதுக்கு அந்தக் கிழவி.. ஏழைங்க கஷ்டத்த புரிஞ்சவங்க இந்த உலகத்துல உன்ன மாதிரி யாரும் கிடையாதுப்பான்னு சொல்லும்போது தியேட்டரில் ஆனந்தக் கண்ணீர். இப்ப இந்த சீன் டிவில பாத்தாலும் நெஞ்சு விம்மி எனக்கு அழுகை வரும்..........RRN..........பல்லாண்டு வாழ்க திரைபடத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் ஒவ்வொரு பாடல் முடிவிலும் ஒரு சன்டை காட்சி. பரங்கிமலை ஜோதி தியேட்டரில் படம் ரிலீஸ். முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று அன்று மேட்னி ஷோ பார்த்தேன். அப்போது நான் 10 ம் வகுப்பு படிக்கிறேன். தியேட்டரில் அந்த பகுதி முழுவதும் மக்கள் கூட்டம், எங்கும் திருவிழாக்கோலம், ஒரே எழச்சி. தலைவர் படத்தை முதல் நாளே பார்த்ததில் ஒரே பரவசம். ஜோதி தியேட்டரில் படம் 99 நாட்கள் ஓடியது. அதன் பிறகு தாம்பரம் வித்யா தியேட்டரில் 2 nd ரிலீஸ் படம் 50 நாட்கள் தாண்டி ஓடியது. அன்றைய நாட்கள் நினைவுகள் பசுமையாக இருக்கிறது........Hayadullah
-
A unique storyline in which MAKKAL THILAGAM MGR and his favourite and dearest villain actors took part.I heard that V.Shantharam never allows anybody to remake his stories nor his pictures.But when MAKKAL THILAGAM approached him,with the desire to do this character which Shantharam did,he readily accepted it and permitted him.If any other actor would have done this character other than MAKKAL THILAGAM it would have been a fiasco....... Albert Jayakumar Davis
-
நமது இதய சிம்மாசனத்தில் எம்.ஜி.ஆர் ஏன் வீற்றிருக்கிறார் தெரியுமா ! அவர் அத்துணை புகழுரைக்கும் சொந்தக்காரர் ! !.
1970 ல் சத்யா ஸ்டுடியோவில் பூனா திரைப்பட கல்லூரியில் படித்து தேர்ச்சிபெற்ற கலைஞர்களை அறிமுகப்படுத்தி கௌரவிக்கும் பொருட்டு ஒரு விழா நடக்கிறது.அந்த விழாவில் என்.டி.ராமாராவ் கலந்துகொண்டு சொன்னார் "எம்.ஜி.ஆர் எதை செய்தாலும் அது வரவேற்கத்தக்கதாகத்தான் இருக்கும்".என்பதோடு எம்.ஜி.ஆர் சேர்ப்பதிலும் செலவழிப்பதிலும் நேர்மையும் நிறைவும் கொண்ட வள்ளன்மை உடையவர் என்றார்.
எம்.ஜி.ஆர் பூனா கலைஞர்களுக்கு அவர் கையொப்பமிட்ட தங்கசங்கிலியை வழங்கி கௌரவப்படுத்தினார்.
பூனா கலைக்குழு தலைவர் அஸ்வானி பேசுகையில் லண்டன் ராயல் அகாடமி வாயிலில் எழுதப்பட்ட "நீ சிறந்த கலைஞனாக வேண்டுமாயின் முதலில் நல்ல மனிதனாக மாறு "என்ற வார்த்தைகளின் உண்மைப்பொருளை உள்ளபடியே எம்.ஜி.யாரிடம் பிரதிபலிக்கக் கண்டதாக பிரமித்துக்கூறினார்.
எப்பேர்ப்பட்ட குணக்குன்று நமது எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் பக்த நண்பர்களே அவர் புகழை மறைத்து செயல்படும் எவரையும் நாம் அனுமதிக்கக்கூடாது..........nssm...
-
மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா !
மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா !
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒரு போதும் தெய்வம் கொடுத்த தில்லை !என்ற உண்மையை இந்த உலகுக்கு உணர்த்திய உழைக்கும் கரங்களே !
உங்களால் உயர்ந்தவர் கோடி
வாழ்ந்தவர் பல கோடி அதனாலேயே பாசம் கொண்ட நாங்கள் உங்களை
எங்க வீட்டுப் பிள்ளையாக வணங்கினோம் ! இதைக்கண்ட சில புல்லுறிவிகள்
அரசியலிலும் சினிமாவிலும் உங்களை பயன்படுத்தி சொந்தம் கொண்டாட துடிக்கின்றனர் ! அதற்கு உங்கள் செல்வாக்கு ஒன்றே அவர்கள் குறி!அதை தெரிந்து அவர்கள் உங்களை மாதிரி புகழ் பெற நினைக்கின்றனர் !
புலி வேஷம் போட்டவனெல்
லாம் புலியாகி விடமுடியுமா !
எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து ஒன்றே இன்று தேர்தலில் வெற்றி பெற உதவும் !
இதை இன்றைய ஆட்சியாளர்கள் உணர்ந்தால் வெற்றி நமதே !
தேர்தலில் தீய சக்தியை விரட்ட உதய சூரியனை அஸ்தமன சூரியனாக்க இது ஒன்றே வழி ! உணருங்கள் ஆட்சியாளர்களே !
உங்கள் செல்வாக்கு எல்லாம் பூஜியமே !
இந்த சூட்சமத்தை புரிந்து தேர்தல் பணியாற்றுங்கள் !
இனிய இரவு வணக்கம் !
இரத்தத்தின் இரத்தங்களே !
--எம்.எஸ்.சேகர்
கோவை-641103 ..........
-
எம் ஜி ஆர் உலக சாதனைகள்
உலகிலே அதிக சிலை கொண்ட தலைவர் எம் ஜி ஆர்
உலகிலே அதிக நூல் தனி மனிதன் எழுதபட்டது எம் ஜி ஆர் பெயரில்
உலகிலே நாடாண்ட முதல் நடிகர் எம் ஜி ஆர்
உலகிலே ஒரு நாட்டின் பிரதமர் திறந்த ஒரே நடிகர் மன்றம் எம் ஜி ஆர் மன்றம்
உலகிலே அதிக செல்வாக்கு கொண்ட நடிகர் அரசியல்வாதி எம் ஜி ஆர் இரு துறைகளிலும்
உலகிலே அதிக நீளம் கொண்ட பெயர் உள்ள இரண்டாவது ரயில் நிலையம் புரட்சி தலைவர் எம் ஜி ராமசந்திரன் ரயில் நிலையம் முதல் ரயில் நிலையம் அமேரிக்காவில் உள்ளது
இந்தியாவில் எம் ஜி ஆர்
சாதனைகள்
இந்தியாவின் அத்தனை பட்டங்களையும் பாரத் பத்மஸ்ரீ பாரத்ரத்னா ரூபாநாணயம் பாரளுமன்றத்தில் சிலை ஸ்டாம்பு சாரணர் வெள்ளியானை ரயில்நிலையம் என அத்தனையும் ஒருங்கே பெற்ற ஒரே தலைவர் எம் ஜி ஆர்
ஒருநதியையே தன் நாட்டில் பாயவைத்த ஒரே தலைவர் எம் ஜி ஆர்
ஐ நா பாராட்டிய ஒரே இந்திய முதல்வர் எம் ஜி ஆரை
அமேரிக்கா பாராளுமன்றம் மரியாதை செலுத்திய ஒரே இந்திய முதல்வர் எம் ஜி ஆர்
இந்திய யுத்த நிதி முதலில் கொடுத்த அதிக தொகை அதிகம் கொடுத்த முதல் இந்திய குடிமகன் எம் ஜி ஆர்
வெளி நாட்டில் பிரான்ஸில் சிலை கொண்ட ஒரே இந்திய தலைவன் எம் ஜி ஆர்
டெல்லி செங்கோட்டை கொடி தாழ்த்து கட்டி இந்தியா முழுவதும் விடுமுறை விட்டு இந்தியா மரியாதை செலுத்தியா ஒரே மாநில முதல்வர் எம் ஜி ஆர்
ஆசியாவின் பெரிய பஸ் நிலையம் எம் ஜி ஆர் பஸ் நிலையம்
ஒரு துளி நீர் பங்கிட முடியாத அரசியல் நடுவில் ஒரு நதியை கிருஷ்ணா நதியை தமிழகத்தில் பாயவைத்தார் எம் ஜி ஆர் இது எம் ஜி ஆரால் மட்டுமே முடியும்
இந்தியாவில் மக்களின் அதிக செல்வாக்கை அன்பை பெற்ற ஒரே முதல்வர் எம் ஜி ஆர்
வாழ்க எம் .ஜி. ஆர்., புகழ்.........Arm.........
-
எங்களின் நிரந்தர புகலிடமே:
தான் முதலமைச்சராக இருந்து எந்த ஒரு திட்டங்களுக்கும் தன் பெயரை முன்னிலை
படுத்தாத ஒரே தலைவர்.
இவரிடம் உங்கள் பெயரில் ஒரு மருத்துவ பல்கலைக்கழகம் திறக்கப் படுகிறது என்று
கூறியவர்களிடம் நாட்டில் எத்தனையோ அறிஞர் பெருமக்கள் இருக்கும்போது என் பெயர் வேண்டாம் என அன்போடு மறுத்தார்.
மீண்டும் அவர்கள் வலியுறுத்தி ஒரு தேதியை தேர்ந்தெடுத்தனர்.அந்த தேதிக்கு முன்னமே
தன் மூச்சு நின்றது,அப்படிப்பட்ட தனிப்பிறவி எங்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
மற்ற முதல்வர் என்று சொல்லிக்கொண்டு
அனைத்து திட்டங்களையும் தங்கள் பெயரிலே தீட்டிக் கொண்டவர்களை நாங்கள் என்றுமே பொருட்படுத்துவது இல்லை.
எங்கள் தலைவர் என்றால் அது எம்.ஜி.ஆர்,
எங்கள் இறைவன் என்றால் அது எம்.ஜி.ஆர்,
எங்கள் கோவில் என்றால் அது ராமாபுரம்,
மற்றும் மெரினாவில் தாமரையாய் வீற்றிருக்கும் எங்கள் எம்.ஜி.ஆர் மட்டுமே....
என்றும் அவருக்கு ரசிகர்களாக,பக்தர்களாக நாங்கள் நிரந்தரமாக இருப்போம்.
வாழ்க புரட்சித் தலைவர் புகழ்!!
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨...gsn...
-
நாம் கழகத்தின் உண்மை தொண்டர்கள்.1972ல் கழகம் துவக்கி 1973ல் திண்டுக்கல்,பின்னர் கோவை இடைத்தேர்தல்களில் உழைத்த உழைப்பு.பின்னர் 1977,1980,1984 தேர்தல்களில் உழைப்பு.ஆதரவு.தேர்தல் பணி.பின்னர் தலைவர் 1987ல் தெய்வமானார்.பின்னர் இந்த கழகத்தை தொடர்ந்து நடத்திட ஜானகி அம்மையார் தலைமை ஏற்றார்.எம்.ஜி.ஆர்-ஜானகி அசல் அக்மார்க் ஜோடி.அப்பொழுதும் அவர்களது வாழ்க்கையில் ஒரு தரப்பு எதிர்ப்பில் இருந்தது.அது ஜானகி அம்மையார் முதல்வராக பொறுப்பேற்றதும் அந்த காழ்ப்பு கழகத்தை உடைத்தது.உடைத்தது யார் ??? இரட்டை இலை பறிபோனது.ஜானகி அம்மையார் அசல் அக்மார்க் துணைவியாதலால் கழகத்தை ஒன்றிணைத்து பறிகொடுத்த இரட்டை இலை மீண்டும் பெற கடிதம் கொடுத்து,கழகம் வளர்ந்திட ஒரு கோடியும் கொடுத்தார்.இது கழக வரலாறு.ஆம்.ஜானகி எம்.ஜி.ஆர் நாடாண்ட முதல் முதல்வர் பெண்மணி.அ.தி.மு.க வின் முதல் பெண்மணி முதல்வர்.இந்த பெண்மணியின் பிறந்தநாளை அரசு விழாக அறிவிக்க கோரி நாம் தார்மீக அடிப்படையில் மட்டுமே முயன்று வருகிறோம்.குமுதம் இதழ் கூட ஜானகி அம்மையார் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கவேண்டும் என்று விரும்பி சொல்லியுள்ளது.ஆனால் 2வது பெண் முதல்வருக்கு அரசு விழா அறிவிக்கப்பட்டுள்ளது.ஜானகி அம்மையார் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லையே.இரட்டை இலை திரும்பப்பெற அவர்தான் மூலம். நமது கோரிக்கையை அரசு ஏற்று அறிவிப்பு செய்யவேண்டும்.அமீரகத்தில் இருக்கும் நமது உண்மை எம்.ஜி.ஆர் பக்தரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பதிவு செய்துள்ளார்கள்.
-ஒரு சாமானிய 1972அ.தி.மு.க தொண்டன்....