which is its permanent residence?
ஒரு நாளைக்கு ஒன்று என்று குறளை ஓதலாம் என்றாலும், வாழ்வின் அன்றாட செயல்பாட்டு நெருக்கடிகளால், அதுகூட முடியவில்லை. ஆகவே நல்ல நூல்களை மிக முயன்று படிக்கவேண்டியுள்ளது.
இப்போது ஒரு குறளை ஓதியறிவோம். உடம்பில் உயிர் எங்கே இருக்கின்றது என்று அறிய முடிவதில்லை. நெஞ்சிலா? தலைப் பகுதியிலா? வேறு எவ்விடம்...என்று தேடிப் பார்க்கிறோம்.
உடலில் இருந்துவிட்டு, என்றாவது ஒருநாள் ஓடிவிடுகிறது...எங்கே போய் விடுகிறது?
இதையும் அறிய முடிவதில்லை.
நிலையான வீடு அமையவில்லை, உயிருக்கு!
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. 340.
How to avoid affliction, sorrow, distress, trouble, etc.....
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன் - 628
இன்பம் எனும் ஒன்றை விரும்ப மாட்டான்; துன்பம் என்பது என்றும் எங்கும் எவர்க்கும் வருவதுதான் என்பான்; அத்தகையவன் என்றும் துன்புறுவதில்லை.
துன்பம் என்பது வாழ்வில் இயல்பானது என்பதறிந்தால், பிறகு துன்புறுதல் இல்லையே!.
"பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும்பேரின்பம்" என்கிறார் மணிமேகலையில், சாத்தனார். அது வேறு கருத்து அன்றோ? (just from memory....). Check the book for accuracy.