Originally Posted by
Murali Srinivas
மதுரை ஜெய்ஹிந்தபுரம் அரவிந்த் திரையரங்கிற்கு விஜயம் செய்திருக்கிறார் பாரிஸ்டர் ரஜினிகாந்த். பாரிஸ்டர் வந்தாலே பரபரப்பிற்கு பஞ்சம் வராதே! சனி ஞாயிறு இரண்டு தினங்களும் திரையரங்கும் சரி அரங்க வளாகம் மற்றும் அரங்கம் அமைந்திருக்கும் தெருவும் சரி இரண்டுபட்டு விட்டது என்று நேரில் கணடவர்கள் சொன்னார்களாம். ஞாயிறு மாலை அரங்க வாசலில் வைத்திருந்த போஸ்டர் ஒட்டிய தட்டியே கீழே விழுந்து விடுமோ என்று நினைக்கும் அளவிற்கு மலர் மாலைகள் குவிந்து விட்டனவாம். உள்ளே வெளியே நடந்த அலப்பரையையும் கூட்டத்தையும் பார்த்துவிட்டு அண்மைக் காலத்தில் இப்படி ஒரு சந்தோஷ கொண்டாட்டத்தையும் கூட்டத்தையும் பார்த்ததில்லை என்று தியேட்டர் நிர்வாகத்தினர் வியந்து சொன்னதாக தகவல்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை நம்முடன் பகிர்ந்து கொண்ட திரு குப்புசாமி அவர்களுக்கும் நண்பர் ராமஜெயம் அவர்களுக்கும் நன்றி.
அன்புடன்