வீட்டுக்கு ஒரு பிள்ளை 1971 தீபாவளி ரிலீஸ் நெல்லை ரத்னா
ராமன் pictures
கனக சண்முகம் டைரக்டர்
ராமண்ணா மேற்பார்வை
விச்சு மியூசிக்
ஜெய்ஷங்கர்,உஷா நந்தினி (அறிமுகம்) ,நாகேஷ்,தேசிய நடிகர் சசிகுமார்,
எம் ஆர் ஆர் வாசு,ஜி வரலக்ஷ்மி,என்னதே கண்ணைய ,சுருளிராஜன்,சுந்தரிபாய் கே விஜயன் ,ஆர்.எஸ். மனோகர் (கௌவர வேடம் ),டைபிஸ்ட் கோபு போன்றோர் (பெரிய நட்சதிர பட்டாளம்) நடித்து வெளி வந்த வெற்றி சித்ரம்
படம் செம ஹிட் சார்
இது ஒரு ஹிந்தி படத்தின் தழுவல் டைட்டில் மறந்து விட்டது
(நாகேஷ் இந்த படத்தின் டைட்டில் மாறு வேஷம் போட்டு உஷா நந்தினியை ஏமாற்றும் போது கூறுவர் )
டைட்டில் மியூசிக் மியூசிக் மட்டும் தான் கிட்டத்தட்ட ராஜா பட டைட்டில் போல இருக்கும். ஆனால் கொஞ்சம் மாறுபட்டு இருக்கும்
விச்சு டீம் chorus (லோலிலோ ,லோலிலோ )
ஜெய்ஷங்கர் fight உடன்
ராஜாவில் (தரதும் தரதும்தும் தரதும் ராஜா ராஜா ராஜா )
வாசு சார்/ராகவேந்தர் சார் இந்த ராஜா டைட்டில் மியூசிக் கிடைக்குமா ?
மன்னிக்கவும் இது பாடல்கள் பற்றிய திரி என்பதை மறந்து விட்டேன்
பாடல்களை மட்டும் ஆராய்வோம்
1.ஜெய்ஷங்கர் வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் நடக்கும் இரவு டின்னெர் பாடல் .
எம் ஆர் ஆர் வாசு சகுந்தலாவை சீதா என்று அறிமுகம் செய்யாமல் ரீட்ட என்று அறிமுகம் செய்வார்
"நாகரீகம் வருக நவ நாகரீகம் வருக " ஈஸ்வரி குழுவினர்
விச்சுவின் பேஸ் drum மற்றும் கிடார் இரண்டும் பேசும்
அதிலும் ஒரு வரி
"ஆடை கட்டுவதும் கூந்தல் மாற்றுவதும் மேலை நாடுகளின்
நாகரீகம்" என்று ஈஸ்வரி பாடி முடித்ததும் ஒரு பேஸ் drum (டுன்டுன்டுன்) "ஹரே ராம் ராம் கிருஷ்ணா ராம் " என்று chorus
பாதி பாடலின் போதே ஜெய் வெறுத்து போய் வீட்டுக்கு கிளம்பி விடுவார். அப்ப ஜெய் டின்னெர் ஹால்லருந்து வெளி வரும்போது
rerecording சூப்பர் பாடல் மியூசிக் சவுண்ட் குறைந்து ஜெய் பேசுவது ஒலிக்கும்
2.நான் போட்ட புள்ளி ஒரு மாற்றம் இல்லை கல்யானமஆனா கன்னி பொன்னே என்னம்மா - tms டீசிங் பாடல்
ராஜாவின் "கல்யாண பொண்ணு " போல் இருக்கும்
(இந்த ஆற்றங்கரை எங்கு இருக்கு நிறைய படத்தில் வரும் )
3.அன்பு வாசு சார் உங்க ராட்சசியின் பாடல்
"பெண் என்றால் நான் அன்றோ சொல்லுங்கள் தேர் என்றோ
விண்ணும் மண்ணும் .....
காதல் பேசும் கன்னி நான் அல்ல "
இந்த பாட்டில் நிறைய இடங்களில் சகுந்தலாவை ஸ்டில் ஆக நிறுத்தி காட்டுவார்கள்
விச்சுவின் தபேல பின்னி பெடல் எடுக்கும் (டன்ஆ டன்ஆ தனா )
4. ஜானகியின் "ஏன்டா ராஜா என்ன வேண்டும் எதை கேட்டாலும் அதை நான் தருவேன் என்ன (என்னை என்றும் சிலர் பாடுவார்கள்) கண்டு பயந்தாய் சொல்லு ராஜா "
எஸ்வி சார் கூட இந்த பாடல் பற்றி சொல்லி இருந்தார்
பாடலின் இடையில் அடிகடி குழந்தை அழுகுரல் கேட்கும்
பாடல் ஊடே சுருளி சுந்தரிபாய் காமெடி மிக கலக்கல்
சுருளி டீ குடித்து கொண்டே இந்த பாட்டை ரசிப்பார்
சுந்தரி பாய் வாசல் திண்ணையில் உட்கார்ந்து ரசிப்பார்
5."இன்று முதல் சொந்தம் இது என் அழகு தெய்வம் இது வானில் வந்தது .மஞ்சளுடன் சந்தனமும் குங்குமம் காண வந்தது "
பாலாவின் குழைவு பாடல் உடன் வசந்த ஹம்மிங் என்று நினவு
அதுவும் இறுதியில் beautiful பாலா ஹம்மிங் "ஹும் ஹும் ஹும் "
"கைகளால் அத்தான் தன்னை கைது செய் காதல் கண்ணே
முத்து போல் ... சித்ரம் தந்தால் என்ன "
இது ஒரு கனவு பாடல்
6. "ஆட்டை கடிச்சான் மாட்டை கடிச்சான் ஆளை கடிச்சான்"
மீண்டும் ராட்சசி
அதிலும் "கட்டு கை கொள்ளாமல் கட்டு ஒன்ன ரண்ட சொல்லம்மா "
என்று பாடும் போது ஈஸ்வரியின் அந்த பாஸ்ட் முச்சு வெளி வரும்
சுபெர்ப் ஸ்டெப் அண்ட் டான்ஸ் by சுந்தரி பாய்
விச்சுவின் போலக்
7. "கொண்டு வா நீதி கெட்டவனை நேர்மையற்றவனை கடவுள் முன்னே
தண்டனை பாதி இங்கு வரும் மீதி அங்கு வரும் விடுவதல்லை
நினைக்கும் காரியம் அனைத்தும் ஆகுமா "
tms சீர்காழி ஈஸ்வரி இணைந்து கலக்கும் படத்தின் இறுதி பாடல்
"அதிலும் ஐந்தாறு காக்கைகள் ஒன்றஆக சேர்ந்தாலும் "
என்று நாகேஷ் ஒரு ஸ்டெப் போட்டு ஆடுவர்
அலிபாபா 40 திருடர்களும் படத்தில் வருவது போல் ஆயில் பர்ரெல் வைத்து ஒகனேகல் அருவியில் போடுவது போல் வரும்
இந்த படத்திற்காக ரெகார்டிங் செய்து பின்பு குலகொழ்ந்து என்று படத்தில் (ஜெய் ஸ்ரீப்ரிய நடித்து 1980 கால கட்டத்தில் வெளி வந்தது )
"கேள்வி கேட்கும் நேரம் அல்ல இது " பாலா வித் ஜானகி
கண்ணதாசன் வரிகள் சில இந்த பாடலில் மிகவும் நன்றாக இருக்கும்
பாலா குரலில்
"கோபுரம் பார்த்தவன் கோயில் சென்றான்
கோயிலில் பூஜைஏய் தேவியின் சேவை என்றான்
தேவியோ பார்க்கலாம் நாளை என்றாள்"
ஜானகி குரலி
"சொல்லுவாள் ஆயிரம் தொட்டதும் மாறுவாள்"
கொலம்பியா LP ரெகார்ட் இரண்டு பக்கம் நல்ல நினைவு
இதில் என்னதே கண்ணைய வழக்கம் போல்
"கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு " repeated டயலாக்
நான் படத்தில் வருவது போல் "என்னதே பார்த்து செய்து "
ஜி வரலக்ஷ்மி,வாசு,என்னேதே கண்ணைய,சசிகுமார் எல்லோரும் வில்லன் கோஷ்டி
ரொம்ப பெரிசா சார் post