-
Quote:
Originally Posted by
esvee
இன்று 20-09-1968 திரை உலக முடி சூடா மன்னனாக மக்கள்திலகம் திகழ்ந்த நேரத்தில் 100-வது திரை பட காவியமாக "ஒளிவிளக்கு"- வெளியான காலம் "பொற்காலம்"... ஆஹா!!! பட தலைப்பே என்ன ஒரு அற்புத அமைப்பு... எவ்வளவோ நடிகர்கள், நடிகைகள் படங்களில் அறிமுக காட்சி பல விதங்களில் வந்திருந்தாலும், ஒளிவிளக்கு - மக்கள்திலகம் அறிமுகம் ஆகும் காட்சியும், ஸ்டில்லும் (ஸ்டில்) இருக்கிறேதே, அடேயப்பா!!!!! என்ன ஒரு ஸ்டைல்... அட்டகாசம்...இது போல வேறு எவருக்கும் அருமையாக, அற்புதமாக அமைந்திருக்க வாய்ப்பில்லை...அந்த டைட்டில் காட்சிகள் முழுவதும் விதம், விதமான ஆடைகள் ஜெர்கின்ஸ் போன்றவை - காண நம் கண்கள் கோடி போதாது...அன்றிலிருந்து இன்று வரையிலும் இந்த காவியத்திற்கு ரசிகர்கள், பொதுமக்கள் - ஏகோபித்த பேராதரவு கிடைத்து கொண்டிருப்பதற்கு இந்த டைட்டில் காட்சியும் ஒரு முக்கிய காரணமாகும்...
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கலையுலகின் "ஒளிவிளக்கு " -100 வது படம்
47 ஆண்டுகள் நிறைவு தினம்.-நினைவலைகள்.
http://i59.tinypic.com/29vb9s4.jpg
-
-
-
-
"ஒளிவிளக்கு"- மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்.,வழங்கும் அற்புத காவியம் தமிழ்நாட்டில் மட்டுமன்றி ஸ்ரீ லங்கா உட்பட பற்பல இடங்களில் மக்களின் பேராதரவோடு வசூலை அள்ளி,அள்ளி குவித்து கொண்டிருக்கும் அட்சய பாத்திரம், கற்பக விருட்சம் எனில் மிகையன்று...அவற்றில் திருச்சி,தஞ்சாவூர்,புதுக்கோட்டை,நாகப்பட்டினம்,திரு வாரூர் மாவட்டங்களில் கண்ட வெற்றி, இணையில்லா வெற்றி என்று கூறலாம்... ஆம்., திருச்சி- ராஜா திரைஅரங்கம், கும்பகோணம்-ஸ்ரீ விஜயலட்சுமி - 100 நாட்கள் தாண்டியும் தஞ்சை- ஸ்ரீ கிருஷ்ணா 91நாட்கள், மன்னார்குடி- ஸ்ரீ செண்பகா - 99 நாட்களும் திருவாரூர், திருத்துறைபூண்டி, நாகப்பட்டினம், காரைக்கால்,பட்டுகோட்டை,கரூர் ஊர்களில் 9-வாரங்களை கடந்தும் மிக பிரம்மாண்டமான வெற்றியை சுவைத்தது.....
-
-
-
-