சிவாஜி சிவாஜிதான்
Printable View
http://i1028.photobucket.com/albums/...psev5cj86c.jpg
பிடித்தவரைக் காட்டும் பிடித்தமான சினிமா, பிடித்த
விதத்தில் பளீரென்று கண்முன்னே விரியும் போது
குபீரென்று ஒரு சந்தோஷம்
தானே வர வேண்டும்?
எனக்கென்னவோ இன்றைய
ஞாயிறு மதியம் முதல் மாலை
வரை பொங்கிப் பொங்கி அழுகையாய் வந்தது.
நான் இன்று "சிவகாமியின் செல்வன்" பார்த்த, மதுரை
வெயிலுக்கெதிராய் வெற்றிகரமாய்க் குளிரிய
சுகப்ரியா திரையரங்க இருட்டு
என் அழுகைகளை ரகசியப்படுத்தியது.
வளைந்து, வளைந்து மலைப்
பாதையில் ஓடுகிற ரயிலோடு
பயணிக்கிற ஜீப்பில், ஒரு சந்தோஷ அமர்வில் "ஜிகு ஜிகு" பாடி நம் நாயகர்
அறிமுகமாகிய போது துவங்கியது அது.
சற்றும் எதிர்பாராத பொழுதில்
ஒரு வாளித் தண்ணீரையும்
உடம்பில் வாங்கிக் கொண்ட
அதிர்ச்சியோடு, அழகாகக்
கையுதறும் போது,
உரக்கப் பேசாமல், அடக்கிப்
பேசும் போதும் கம்பீரம் கரகரக்கும் அந்த சிம்மக்குரலில்
"மேடம்... சூடா ஒரு கப் காஃபி
கிடைக்குமா?" என்று கேட்கும்
போது,
காதலியோடு பேசி முடிக்கும்
ஒவ்வொரு வார்த்தையையும்
புன்னகையோடு முடித்து
வைக்கிற போது,
"இனியவளே" பாடலுக்கூடே
"இதழால்" என்று வெட்டி,வெட்டிப் பாடுகையில், பரசவ
பாவனைகளை முகத்தில்
காட்டும் போது,
அதே பாடலில் ஓரிடத்தில்
மலைச்சரிவில் காலூன்றி
நடந்து வருவதையே ஒரு
நடன அசைவு போலாக்கி
விடும் போது,
கோயிலில் மாலை மாற்றிக்
கொண்ட பின், ஒற்றை ரூபாய்ப்
புகைப்படத்திற்கு பாவனையாய்
சிரிக்கும் போது,
"எத்தனை அழகு" என்பதாய்க்
காதலியைக் காமத்தோடு
நோக்கும் கண்களில், மன்மத
மின்னல்கள் காட்டும் போது,
முகத்திலும், விழியிலும்
பெருமிதம் தேக்கி "சிவாஜியோட வீரத்துக்கும்,
வெற்றிக்கும் அவங்க அம்மாதான் காரணம்" என்று
சொல்லும் போது,
பரிசுத்தமான மனமுடையவன்
என்பதைக் காட்சிப்படுத்தும்
விதமாய், காதலியின் தந்தையிடம் உண்மையைச்
சொல்லி விட, படுக்கை விட்டு
தலை எக்கித் துடிக்கும் போது,
"சிவகாமி பெற்றெடுத்த செல்வன் அல்லவோ?" என்று
மெல்லிசை மாமன்னரின்
ஞானக்குரல் பின்னொலிக்க,
நம்மவரின் சின்னஞ்சிறு பிம்பமாய் குழந்தையொன்று காட்டப்படும் போது,
"இவனா..இவனா" என்று
வாணிஸ்ரீ இரண்டு சாதாரணங்களைக் காட்டிக்
கேட்கும் நேரத்தின் சலிப்பு
தகர்த்து, துள்ளலாய்த் தலைவன் "ஹாய்" சொல்லி வரும் போது,
இனம் புரியாத அம்மாப் பாசத்தை, வாணிஸ்ரீயைச்
சந்திக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் காட்டும் போது,
நேர்ப்பார்வை பார்த்துக் கொண்டு நூல் பிடித்தாற்போல்
ஒரு ஒழுங்கு நடையோடு
"ஆடிக்குப் பின்னே" பாடலின்
ஊடே வரும் போது,
"அவள்தான் அன்னை, அவளது
தியாக வேள்வியின் பலன்தான்
தான்" என்று தெரிந்து கொள்கிற
நிமிஷத்தில், கண்கள் சிவக்கக்
கலங்கும் போது,
அன்னையென்று புரிந்த பிறகு,
அவளை நேச நடை கொண்டு நெருங்கும் போது,
கண்களில் நீர் திரள, அன்னையை மேடைக்கு
அழைக்கும் போது,
அவள் கையால் அணிவிக்கப்படும் வீரப்பதக்கத்திற்குக் கழுத்து
காட்டி,பெருமிதப் புன்னகை
பூக்கும் போது...
- என்று "வணக்கம்" போடும்
வரை அழுகைதான்.
அந்த என் அழுகையில், இழக்கக்கூடாத மகாகலைஞனை இழந்து விட்ட சோகமிருக்கிறது.
அந்த என் அழுகையில்,
அவருக்காக அழுகிறோம் எனும் சுகமிருக்கிறது.
அந்த என் அழுகையில்,
நாற்பத்திரண்டு வருஷப்
பழமையை "லபக்" என்று
விழுங்கி விட்டு, "களுக்" என்று
சிரிக்கிற குழந்தை போல
"சிவகாமியின் செல்வ"னைப்
புதுசாய்த் தந்த மதுரை சிவா
மூவிஸ், திரு V.C.S , உறுதுணையாய் உடன் நின்று
ஜெயிக்க வைத்த நல்லவர்கள்
அத்தனை பேருக்குமான என்
வணங்குதலுடனான நன்றி
இருக்கிறது.
பைலட் சிவாஜிக்கு மாபெரும் வரவேற்பு
http://oi63.tinypic.com/29bmrly.jpg
(ஞாயிறு தினத்தந்தி E பேப்பர் விளம்ரம்.)
ஆதவன் ரவி நீங்கள் கேட்டது
காதல் ராணி ... பாடலுக்கான நிழற்பட பதிவு
முத்தையன் சார் ஆதவன் தங்களிடம் கேட்டதில்
ஒரு பாடலுக்கான நிழற்பட பதிவை நான்
பதிவிட்டுள்ளேன். தங்களுக்கு ஆட்சேபனை இல்லைதானே.
http://oi65.tinypic.com/14azs4m.jpghttp://oi65.tinypic.com/2h68u37.jpghttp://i64.tinypic.com/nosww9.jpg http://i65.tinypic.com/nltsax.jpg
http://i66.tinypic.com/1z65no9.jpg http://i65.tinypic.com/262quf5.jpg
http://i66.tinypic.com/2l95y9.jpghttp://i66.tinypic.com/307x9ax.jpg
http://i67.tinypic.com/2qunfb8.jpg
http://oi64.tinypic.com/335clcw.jpghttp://oi68.tinypic.com/2wfn7mx.jpghttp://oi65.tinypic.com/24gog3b.jpghttp://oi67.tinypic.com/2v0ix52.jpghttp://oi64.tinypic.com/28vyq05.jpghttp://oi65.tinypic.com/zt7v4g.jpghttp://oi66.tinypic.com/2sb7hmr.jpghttp://oi66.tinypic.com/350rx5h.jpghttp://oi66.tinypic.com/ay13pt.jpg
Yesterday pleasant Morning at sathyam cinemas and enjoyed the movie SS with
NT Fans. In the evening witnessed the celebration at Srinivasa Theatre in West Mambalam.
NT rocks everywhere.