கருவின் கரு - 199
பாகம் 2 - தந்தை:)
https://www.youtube.com/watch?v=JD0g42lu43E
Printable View
கருவின் கரு - 199
பாகம் 2 - தந்தை:)
https://www.youtube.com/watch?v=JD0g42lu43E
கருவின் கரு - 200 :smile2::)
பாகம் 2 - தந்தை
அருமையான பாடல் - பாலாவின் குரலில் - இந்த 200 வது பதிவை எல்லோருக்கும் மதுர கானத்தை , தன் உடம்பை மிகவும் வருத்திக்கொண்டு , பிரதிபலன் பார்க்காமல் அள்ளி அள்ளி வழங்கும் நம் வாசுவிற்கு சமர்ப்பிக்கிறேன் .
https://www.youtube.com/watch?v=eSyiD-iWK5c
கருவின் கரு - 201
பாகம் 2 - தந்தை
எந்த தந்தை மனமகிழ்வுடன் தான் வாழும் காலத்தில் இப்படி பாடுகிறானோ , அந்த நாள் நம் வாழ்வில் ஒரு பொன்நாள் - நாம் நம் பிறவிப்பயனை அடைந்த நாள் .
" எங்க குடும்பம் ரொம்ப பெரிசு
பிள்ளைக்குட்டிகளோ பத்து தினுசு
இவை அத்தனையும் அன்பு பரிசு
நல்ல முத்துப்போல் வெள்ளை மனசு "
தந்தையைப்பற்றி பேசுவது , எழுதுவது என்பது சமுத்திரத்தில் ஒரு துளி தண்ணீரை மொண்டு எடுப்பதுப்போல - அவரின் பெருமைகள் கண்டிப்பாக 100 பதிவுகளில் அடக்கி விட முடியாது . ஏதோ என்னால் முடிந்த வரை ஆத்மார்த்தமாக பதிவுகள் போட்டுள்ளேன் - இதை மிகவும் பொறுமையுடனும் , பாராட்டுக்களுடனும் படித்த , வாழ்த்திய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் .
அன்புடன்
ரவி
https://www.youtube.com/watch?v=YzqHAAsA9h0
அபபா/(தத்துப்) பிள்ளை பந்தம்/சொந்தம்...
"கண்ணான கண்ணா உன்னை..."
"நீ தானா அந்தக் குயில்"; வைரமுத்து/ இளையராஜா/ கே.ஜே. யேசுதாஸ்...
www.youtube.com/watch?v=1kFc_TCRaxM
This is one of my (K.J. Yesudas' too!) most sentimental TFM songs. If I have posted this one before,
please bear with me...
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-8...Y/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
18
'என்ன சொல்ல! என்ன சொல்ல! '
http://i60.tinypic.com/qoa78o.jpg
பாலா பாடிய பாடல்களில் சற்று விரசம் தூக்கலான பாடல். காட்சியமைப்பிலும்தான். 'எத்தனை அழகு கொட்டிக் கிடக்கு' பாடலுக்கு முன்னோடி.
இந்த மாதிரிப் பாடலுக்கு அப்போது வேறு யார் பாலாவுடன் ஜோடி சேர முடியும் ராட்சஸியைத் தவிர. பின்னால் அந்த வேலை ஜானகியிடம் ஒப்படைக்கப்பட்டது.:)
பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. விஸ்தாரமாக எழுதுவதற்கும் இல்லை. மாட்டிக் கொண்டு விழிப்பதாயும் இல்லை.:)
மோக தாபப் பாடல். அவ்வளவே! அப்போது திரையரங்கில் நெளிய வைத்த பாடல்தான். இப்போதும் கூடத்தான். அதுவும் பாசமான 'பாபு' படத்தில். தவிர்த்திருக்கலாமோ என்று கூடத் தோன்றும். இந்தப் பாடலை இணைத்தால்தான் அந்தக் காவியமா? இன்னும் ஒன்று 'அந்தக் காலத்தில் கண்ணனும் கோபிகளும்'.
அப்போதைய இளம் ஜோடிகளை விரல்விட்டு எண்ணி விடலாம். இளம் வாலிபனுக்கு அப்போது சூர்யாவின் அப்பாவை விட்டால் ஆளேது? இவருக்கு பொருத்தமாக நிர்மலா, லஷ்மி இருவரும் அளவெடுத்தாற் போல் பொருந்தியது வேறு வாட்டமாகப் போய் விட்டது. அந்தக் காலத்தில் கண்ணன் சிவக்குமார் என்றால் கோபிகா ஸ்திரீ நிர்மலா. ஆரம்ப காலத்தில் பேந்தப் பேந்த விழித்த சிவக்குமார் இளம் சிட்டுக்கள் ஜோடி சேர, சேர சிலிர்த்தெழுந்த காளையானார்.:) சபை நடுக்கம் போய் குளிர் நடுக்கம் கண்டவராக மனிதர் ஜமாய்க்க ஆரம்பித்து விட்டார். அதற்கேற்ற மாதிரி பின்னணி பாட பாலா வசமாகச் சிக்கினார். (சிவக்குமாருக்கு பாலா சிறந்த பொருத்தம்) அப்புறம் ஈடு கொடுக்க இல்லை இல்லை ஈடுக்கு மேல் ஈடு கொடுக்க ஈஸ்வரி இருக்க, ஈரப் பாடல்களுக்கு இங்கித இசை தந்து 'மெல்லிசை மன்னர்' இளசுகளை ஈர்க்க ஆரம்பித்தார். (பெருசுகளையும்தான்)
மழை கொட்டு கொட்டு என்று கொட்ட, அழகான சிவக்குமார் அடுக்குமல்லிச்சர நிர்மலாவுடன் சரசமாடும் பாடல். 'ஸ்.....ஸ், ஆஹஹஹா...ஓஹோஹோ' என்று சப்த நாடியையும் அடக்கும் சப்தங்கள். உதடு மடித்து, கடித்து உஷ்ணம் ஏற்றும் 'வெண்ணிற ஆடை' நிர்மலா. (அவளுக்கு நிகர் அவளே):)
'லஹஹஹஹா...அஹ்ஹஹ்ஹா' என்று அலற ஈஸ்வரி அவர்களுக்கு சொல்லித் தர வேண்டுமா?
ஒற்றை ஒற்றை வரிகள். நாயகனும் நாயகியும் மாறி மாறி.
பாட்டின் இசைப் பின்னணி சங்கதிகள் சிலவற்றை 'சிவகாமியின் செல்வன்' பாடலில் மறுபடி கேட்கலாம்.
அப்புறம் நான் என்ன சொல்ல? (ஆதிராம் சார் எதிர்பார்ப்பு நிறைவேறியது)
பாடலைக் கேட்க, கேட்க 'மெல்ல மெல்ல' நான் சொன்னது விளங்கும். கொஞ்சம் நடுக்கமும் ஏற்படும்.
பாட்டின் முனகல் சப்தங்களை நான் சென்ஸார் செய்து பாடல் வரிகளில் நீக்கி விட்டேன். தயவு செய்து யாரும் போராட்டம் நடத்த வேண்டாம்.:)
இந்தப் பாட்டிற்கு HTML ஒர்க்கெல்லாம் கிடையாது. பதிவுகள் கருப்பு வெள்ளையில்தான். :)
http://i62.tinypic.com/1115ykw.jpg
என்ன சொல்ல என்ன சொல்ல
சொல்லித் தர நானிருக்கேன்
மெல்ல மெல்ல விளங்கும் போது
மயக்கமேன்
என்ன சுகம் என்ன சுவை
அள்ளித் தர நானிருக்கேன்
தொட்டுத் தொட்டுத் தொடங்கும்போது
நடுக்கமேன்
என்ன சொல்ல என்ன சொல்ல
சொல்லித் தர நானிருக்கேன்
மெல்ல மெல்ல விளங்கும் போது
மயக்கமேன்
என்ன சுகம் என்ன சுவை
அள்ளித் தர நானிருக்கேன்
தொட்டுத் தொட்டுத் தொடங்கும்போது
நடுக்கமேன்
ஓ... நான் கொடுத்த முத்திரைக்கு நன்றி சொல்
ஓ... நன்றி என்ன என்னையே நீ கொண்டு செல்
எடுத்துக் கொள்ளவோ
தடுத்துக் கொள்ளவோ
இடை அணைக்கவோ
தடை விதிக்கவோ
எடுத்துக் கொள்ளவோ
தடுத்துக் கொள்ளவோ
இடை அணைக்கவோ
தடை விதிக்கவோ
எதுவும் சொந்தமோ
எழுதிச் சொல்லவோ
தழுவக் கூடுமோ
நழுவிப் போகுமோ
என்ன சொல்ல என்ன சொல்ல
சொல்லித் தர நானிருக்கேன்
மெல்ல மெல்ல விளங்கும் போது
மயக்கமேன்
என்ன சுகம் என்ன சுவை
அள்ளித் தர நானிருக்கேன்
தொட்டுத் தொட்டுத் தொடங்கும்போது
நடுக்கமேன்
ஓ...ஓரிடத்தில் விழியிரண்டின் சங்கமம்
ஓ...ஒருவருக்கு ஒருவர் தந்த சங்கமம்
வழி தெரிந்தது
நதி நடந்தது
கரை கடந்தது
கடல் கலந்தது
விழி சிவந்தது
வாய் வெளுத்தது
உடல் குளிர்ந்து
மனம் வெளுத்தது
என்ன சொல்ல என்ன சொல்ல
சொல்லித் தர நானிருக்கேன்
மெல்ல மெல்ல விளங்கும் போது
மயக்கமேன்
என்ன சுகம் என்ன சுவை
அள்ளித் தர நானிருக்கேன்
தொட்டுத் தொட்டுத் தொடங்கும்போது
நடுக்கமேன்
https://youtu.be/w-qJOxY6v2E
Hi folks ! :)
Hope all is well ( அதான் வந்துட்டியேய்யா.. இனிமே எப்படி இருக்கப் போகுதோ! :) “ “யார்ப்பா அங்க குரல் விடறது”)
ம்ம் என்ன சொல்ல என்ன சொல்ல ( ஹா ஆ ஆவ்..ஒண்ணுமில்லீங்க்ணா டயர்ட் கோல்ட் காஃப் அப்புறம் களைப்பு..!)
பின்ன வாரேன் :)
”நீங்கள் வாழும்காலத்திலேயே நாஙகள் வாழ்வது எங்களுக்குப்பெருமையாக இருக்கிறது”
பற்பல வருடங்களுக்கு முன்னால் பாலகுமாரனின் ஒரு மாத நாவலைப் புரட்டிக்கொண்டிருந்த போது கண்ணில் பட்டது இந்த வாசகர் கடிதம்.. எதேச்சையாக கண்கள் டிவி பார்க்க.. ட்ட்ட டட்ட ஆ ஆ..ஆஆ.. என சுசீலாம்மா ஹம்மிங்கில் அ.கா கனவுக்கன்னி(?!) செளகார் மைக் பிடித்து பார்த்த ஞாபகம் இல்லையோ பாட ஆரம்பிக்க நாவலை வைத்து விட்டு பாட்டை முழுக்கப் பார்த்துவிட்டுத் தான் மறுபடி படிக்க ஆரம்பித்தேன்..அப்போது மனதில் ஓடிய எண்ணம் - எம்.எஸ்.வி வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதெ பெருமை என்பது..
எத்துணை பாட்டுக்கள்.. இறப்பு என்பது எல்லாருக்கும் வருவது தான் தவிர்க்க முடியாதது..பழுத்த இலை உதிர்வது இயல்பு நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை படைத்து இவ்வுலகு என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும் கூட ம்ஹூம் ஆற மாட்டேன் என்கிறது..
தனக்கு, தன் குரலுக்குப் பொருத்தமான பாடல்கள் எப்படி தேர்வு செய்தார் என்பது எனக்கு இன்னும் ஆச்சர்யம்..
அவர் குரலில் எனக்கு மிகப் பிடித்த பாடல் ஒன்று.
https://youtu.be/49Ua6vIWfSw
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..
இரு நூறு தந்தைப் பதிவுகள் அளித்த ரவிக்கு பாராட்டுக்கள். அப்புறம் மற்ற உறவுகள் எல்லாம் கடந்து மச்சினி க்கு இவர் வர எவ்வளவு காலம் ஆகும் என வாசு சாரைக் கேட்க வேண்டும் :)
Welcome back CK - எப்படி இருந்தது உங்கள் இந்தியா - பயணம் - உங்கள் பழைய நண்பியை பார்க்க முடிந்ததா ? நீங்கள் இல்லாமல் இந்த திரியை வாசுவின் மூலம் சிறிது தொலைவிற்கு எடுத்துச் சென்றிருக்கிறோம் . ஒரு பெரிய நிம்மதி - நீங்கள் கொஞ்ச நாட்களில் 4வது பாகத்தை முடித்து விடுவீர்கள் . கொஞ்ச நாட்கள் ஈசி chair இல் உட்க்காந்து கொண்டு கும்பகோணம் காபியைப் பருகிக்கொண்டு வாசுவின் " என்ன சொல்ல என்ன சொல்ல " போன்ற பாடல்களையும் , பாலாவின் அலசல்களையும் , சரளா/ குசல குமாரியின் தற்போதைய நிலைமையையும் இன்னும் மிகத்துல்லியமாக தெரிந்துகொள்வதர்க்காகவும் சில நாட்கள் திரியின் பின்னால் இருக்க விரும்புகிறேன் . உங்கள் பதிவிலிருந்து உங்கள் மச்சினியை மிகவும் மிஸ் பண்ணுகிறீர்கள் என்று நினைக்கிறேன் . இது முழுக்க முழுக்க வாசுவின் department - அவரால்தான் " என்ன சொல்ல , என்ன சொல்ல " என்று சொல்லிக்கொண்டே நன்றாக அலச முடியும் ... என்னமோ போங்க - உங்கள் எதிர்பார்ப்பு மிகவும் அதிகம் தான் ......
வாருங்கள் சிக. சார்
திரியின் நகைச்சுவை அம்சம் மீண்டும் தொடரும் சந்தோஷம் எங்களுக்கு..
(ஆனால் அதிலும் கூட சில சமயம் லேசாக சோகம் இழைக்கும் சாமர்த்தியம் தங்களுக்கே உரித்தான ஸ்பெஷல் க்வாலிடி)
ரவி..எந்துகு ஈஸி சேர்லாம்…வேண்டாம்.. அப்புறம் ஹைதராபாத்திற்கு அடுத்த ட்ரிப் வந்துடுவேன்..உஷார்..
என்னோட லீவ் பத்தி சொல்றதுக்கு முன்னால ஹோம் வொர்க்.. 123ம் பக்கத்துலருந்து…!
*
//- ventillatorஇல் இருக்கும் அவரை - உன் உடம்பை கொஞ்சம் பார்த்துக்கோ " என்று சொல்லிவிட்டு மிகுந்த மனசுமையுடன் ஊர் திரும்பினேன் .//
ரவி, ..வைத்தீஸ்வரன் கோவில் ஒரு அழகிய கோவில் முன்பு மூன்று நான்கு வருடங்களுக்குமுன் சென்று வந்தேன்..ப்ளஸ் கும்ப கோணம் கோவில்கள் என நீண்டது அந்த ட்ரிப். கோவில் மூடுவதற்குள் அரக்கப் பரக்க சென்று தரிசனம் முடித்து அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு அழகிய ஹோட்டலில் பகலுணவைமுடித்தோம்..
ராஜேஷ்…//மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய் ராஜா சீதாராமன் பற்றிய தகவலுக்கு நன்றி.. ஆஹா ரவீந்தர் சில்க் எக்ஸர்சைஸ்.. மெல்ல மெல்ல. என்னைத் தொட்டு மன்மதன்.. பாட்டு குட். ரொம்ப நாளாச்சு கேட்டு..
பாடல்களுக்கும் ஜூலியா ராபர்ட்ஸை ஆதரித்ததற்கும் நன்றி!
*
//"தூது சொல்ல ஒரு தோழி" ரெகார்டிங் முடித்து ஏதோ ஒன்று குறைவதாக தோன்ற சுசிலா பல்லவி பாட ஈஸ்வரி குரலை கொண்டு இணையாக ஆஹா சொல்ல வைத்து முடிவு கொடுத்தாராம்.// கோபால் எம்.எஸ். வி பற்றிய பதிவு நைஸ்..
வரதகுமார்// மின்னல் கோலம் கண்ணில்
போட யார் சொன்னதோ
கோலம் போடும் நீலக் கண்ணில்
யார் நின்றதோ.. தங்கத் தோணியிலே பாடல் பதிவிற்கு நன்றி. எனக்கும் ரொம்பப் பிடிக்கும்..
*
வாசு
/
//இன்பம் அவள் இன்னும் அறியாத கல்வி'/ பெண்ணைப் பார்த்தால் சொல்லத் தோன்றும் இன்னும் நூறாயிரம் ( நன்னா டயட்ல இருக்கப் பழகிக்கமா வா இருக்குமோ!) நல்ல பாட் நல்ல ரைட் அப் குட்..
*
கலை..
வளர்ந்த குழந்தை(?!) பாடும் இளமை கொலுவிருக்கும் பாடலுக்கு நன்றி..
*
ராஜ் ராஜ் சார்.
..//A few weeks back the pomegranate bushes in our backyard started blossoming. Now they are fruits. Hope the birds leave some for us. The blossoms reminded me anarkali meaning pomegranate bloom. Strictly kali in Sanskrit means bud.//
நான் தினமும் இரவு உணவுப்பின் உண்ணும் கன்னிகளில் ஸாரி டைப்போ கனிகளில் மாதுளம்பழமும் உண்டு.. ஹார்ட்டுக்கு நல்லதாமே.. ஜுகல்பந்திக்குத்தாங்க்ஸ்..
பூத்திருக்கும் விழி எடுத்து பாடலுக்கு தாங்க்ஸ் கோபால்..
//நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன்மொழி பேசும் சிங்காரச் செல்வம்
நான் பெற்ற செல்வம்...// எனக்கு மிகப் பிடித்த பாடல்களில் ஒன்று தாங்க்ஸ் ராகவேந்திரர்.
*
//கலரில் தாய் வேடம் 'ஞான சௌந்தரி'க்கு. கணவர் எடுத்த படத்தில் நாயகனுக்குத் தாய். இவர் கொஞ்சம் உதடுகளை குவித்து சிறுபிள்ளை சாக்லேட் கிடைக்காமல் வெம்புவது போல் அழுவது மிக இயல்பாய் இருக்கும்.// vasu sir. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் வெரி குட்டான பதிவு..
தாய்ப் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக் கண்டேன்
தாய்ப் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக் கண்டேன்
மற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ
அது உன்னிடத்தில் நானறிந்த பாடம் அல்லவோ// எனக்கு மிகவும் பிடித்த வரிகள்..
*
//இவர் நடிகர் திலகத்துடன் ஒரு படத்தில் நடித்திருப்பார். கிட்டத்தட்ட முறைப்பெண் ரோல். சின்னையா சின்னையா என்று நடிகர் திலகத்தை சுற்றி வருவார். என்ன படம் என்று தெரிகிறதா?// vasu.. maha kavi kaali daas thane m.s maalathy nadiththathu..
*
//சொல்லத் தெரியவில்லை
உள்ளத்தில் உள்ளதை
தெள்ளத் தெளிவாய்த்
சொல்லத் தெரியவில்லை// வாசு.. மூணாம்பாகத்துல இந்தப் பாட் போட்டாச் போட்டாச்னு நினைக்கிறேன்..( நீங்க மூணாம்பாகம் முழுசாப் படிக்கலை தானே!)
*
Raghavendar sir, மாப்பிள்ளை நீயல்லவா மாமா பாடலுக்கு தாங்க்ஸ்..ஷீலு அழகு.. ! இப்ப த் தான் பார்க்கறேன் கேட்கறேன்..அதே போல ஜெய் கறுப்பு திராட்சைக் கண்களுடன் சிற்பி செதுக்கிய ஒல்லி ஒல்லி சிலையாக விதுபாலாவின் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அர்த்தம் பாடலுக்கும் ஒரு நன்றி..(அது விதுபாலா தானே.. பக்கெட் வருமோ?)
/
அக்கக்கோ கை கை மலர்க்கை பாட் பிடிக்கு.ம்..வி.கு நோ..
*
எம்.எஸ்.வி, கண்ணதாசன் பிறந்த நாளில் பாடல் வழங்கியவர்களுக்கு நன்றி.. ம்ம்.. நேரான நெடுஞ்சாலை பாட் எனக்குப் பிடிக்கும்..என்னமோ இப்போ வரலை..
*
அச்சம் பாதி ஆசை பாதி பொங்குவதென்ன ஹைலல்லோஹைல்லல்லோ பாட்டுக்கு நன்றி கோபால்..
*
//பூவிரி சோலைகள் ஆடிடும் தீவினில்
பறவை பறக்கும் அழகோ
தேவியின் வெண்ணிற மேனியில்
விளையாடும் பொன்னழகு// தூள் பஹீத் அச்சா சூப்பர்..தாங்க்ஸ் வாசு( எல்.ஆர். ஈஸ்வரி லஷ்மிக்குப் பொருந்தவில்லை போல ஒரு பிரமை) பார்த்தது மட்டும் போதுமா ஒரு பாடம் சொல்லிவிடு.. இந்தவரியைவைத்து இன்னொரு இழையில் க்விஸ் கேட்டிருந்தேன் ஒருகாலத்தில்!
சாய்பாபாவின் 'அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ' (நான் இந்தப் பாடலுக்கு வாழ்நாள் அடிமை)// நானும் வாசுங்ணா..
*
பூவப்பூவ.. வெங்கடரமண ஷண்முகானந்த சங்கர சதாசிவ கல் நாயக்.. எப்படி இருக்கீர் செளக்க்யமா… ஆளையே காங்கலை..
//அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்// பாட் ரொம்பப் பிடிக்கும் ரவி..தாங்க்ஸ்
*
மெய்யாலுமே ஏன் கதை தலை சுற்றல் தான் வாசு சார்..ஆனால் வருவாயா வேல் முருகா பாட் மிகப் பிடிக்கும்..தாங்க்ஸ் டு ராகவேந்தர்
*
//இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்// ithuvum enakkup pidukkumE..
*
வெல்கம் சி.செ.. வாங்க வாங்க.. பல இனிய பதிவுகள் அளியுங்கள்..
*
ஆக 163 பக்கம் வரை படித்து விட்டேன்.மிச்சம் அப்புறம் சரியா..
பின்ன வாரேன்..
அன்புடன்
சி.க..
வரவேற்ற வாசு, ரவி, ராகவேந்திரருக்கு மிக்க நன்றி..
மீண்டும் வாரேன்..:)
மாற்றார் தோட்டத்து மெல்லிசையும் மதுரமே ! குறுந்தொடர்
பகுதி 1 ஜேம்ஸ் பாண்ட் தீம் ம்யூசிக்!
/ டாக்டர் நோ (1962) starring Sean Connery as James Bond OO7!
Quote:
உலகளாவிய மார்கெட்டில் என்றும் முதலிடத்தில் இருக்கும் ஜேம்ஸ் பாண்ட் படங்களை ரசிக்காதவர் உலகில் எவருமிலர்!
ஜேம்ஸ் பாண்டின் வீரதீரசூர சாகசங்களின் கருத்தை உள்ளடைக்கிய ரசிகர்களின் மனதை ஆகர்ஷித்த டைட்டில் மற்றும் பட ஓட்டம் முழுவதும் தூவப்படும் பிரபலமான தீம் இசை காரண கர்த்தா ஜான் பேரி என்னும் இசையமைப்பாளரே !
1962ல் டாக்டர் நோ திரைப்படம் உலகின் நம்பர் ஒன் வசூல் மன்னராக ஷான் கானரியை ஜேம்ஸ் பாண்ட் வடிவில் களமிறக்கியது. இன்று வரை அவரே ஒரிஜினல் ஜேம்ஸ் பாண்டாக உருவகப் படுத்தப் பட்டு ஒப்பீட்டளவில் நிகரற்றவராக போற்றப்படுகிறார்.!!
இந்த மனங்களை ஒட்டுமொத்தமாக இன்றும் வசீகரிக்கும் தீம் இசையை ரசிப்போமே !!
...இனி வரும் பகுதிகளில் என்னியொ மோர்ரிகோன்....உள்ளிட்ட ஏனைய வழிகாட்டி இசை விற்பன்னர்களின் இசைத் தூவல்களையும் வகைப் படுத்த எண்ணியுள்ளேன்.
இந்த தீம் இசையும் Gun Barrel Openingம் இல்லையெனில் ஜேம்ஸ் பாண்ட் படத்தை முழுமையாக ரசிக்க இயலாது
https://www.youtube.com/watch?v=E-IDfoZuQLM
Quote:
The James Bond theme music by John Barry in subsequent Sean Connery/Bond OO7 movies epitomized the tempo of Bond movies as an indispensable music component not only in the title sequences but also alongside the movies run till the climax and beyond! Dr No, From Russia with Love, Goldfinger, Thunderball, You Only Live Twice and Diamonds Are Forever...all these original James Bond movies created the Bond fever and this theme music was repeated in the subsequent Bond movies by Lazenby, Moore....and Craig till date!
BOND and B(EY)OND!
https://www.youtube.com/watch?v=CYbKKQ-hPwc
ஒவ்வொருவரும் மணி மணியாக பதிவுகள் செய்து அசத்துறீங்க... எனக்குத்தான் படிக்கவும் ரசிக்கவும் நேரமும் உடல் நிலையும் ஒத்துழைக்காமல் படுத்துது.. சிக்கா.. செந்தமிழ் நாட்டுக்கு வந்துட்டு கண்டுக்காமலே திரும்பிட்டீங்களே... கண்ணாலே பார்த்தால் மெட்ராஸ் ஐ ( அட... ரெண்டுமே லேட்டஸ்ட் படத்துப் பெயராக இருக்குதில்லே ) வந்துடுமின்னு பயமா ?
கரிதான் வைரத்தின் அடிப்படை இல்லையோ.. அதான் நெய்வேலியின் வைரம் ஜொலிக்குது.
ராகவேந்திரா சார்... பழைய பதிவுகளை எல்லாம் மெதுவாக ரீவைண்ட் செஞ்சு உங்க rare songs எல்லாம் கேக்கணும்.
ரவி சார்... உங்க பதிவுகள் எல்லாமே அருமை. ஆனால் நான் இன்னும் எல்லாவற்றையும் படிக்கவில்லை. தந்தை-மகன் பாடல்களில் ஒருவனுக்கு ஒருத்தி படத்தில் இடம் பெற்ற டி.எம்.எஸ்., ஜேசுதாஸின் "சரவணன் சொன்னான்" பாடல் நுழைய சான்ஸ் இருக்கிறதா ? உங்கள் உரையுடன் படிக்க ஆசை.
முடிந்தபொழுதெல்லாம் வந்து ரசிப்பேன். இயன்ற பொழுது பதிவேன். எல்லோருக்கும் நன்றி.
மாற்றார் தோட்டத்து மெல்லிசையும் மதுரமே ! குறுந்தொடர்
பகுதி 2 ஜேம்ஸ் பாண்ட் தீம் ம்யூசிக்!
From Russia with Love(1963) starring Sean Connery as James Bond OO7!
Quote:
This second outing of Connery/Bond was quite interesting and filled with inimitable action sequences, particularly the pioneering train fight sequence with Robert Shaw as the villain and the climax helicopter chase adapted by our director Sreedhar in his NT starrer Sivandha Mann!! The best Bond of all hitherto as regards the story content, narration and Connery's brilliant portrayal in tandem with John Barry's unforgettable music!!
courtesy : Wikipedia and You Tube
The "James Bond Theme" is the main signature theme of the James Bond films and has featured in every Eon Productions Bond film since Dr. No, released in 1962. The piece has been used as an accompanying fanfare to the gun barrel sequence in almost every James Bond film.
The "James Bond Theme" has accompanied the opening titles twice, as part of the medley that opens Dr. No and then again in the opening credits of From Russia with Love (1963). It has been used as music over the end credits for Dr. No, Thunderball (1965), On Her Majesty's Secret Service (1969), The World Is Not Enough (1999), Casino Royale (2006), Quantum of Solace (2008), and Skyfall (2012).
The "James Bond Theme" was recorded on 21 June 1962, using five saxophones, nine brass, a solo guitar and a rhythm section.The guitar riff heard in the original recording of the theme was played by Vic Flick on a 1939 English Clifford Essex Paragon Deluxe guitar plugged into a Vox AC15 amplifier. He was paid a one-off fee of £6 for recording the famous James Bond Theme riff. John Scott played the saxophone
Sean Connery (1962—1967, 1971)
The first appearance of the "James Bond Theme" was in Dr. No. There it was used as part of the actual gun barrel and main title sequence.
In From Russia with Love, the "James Bond Theme" in not only the gun barrel pre-title sequence, but as part of the main title theme and appears in the track "James Bond with Bongos". It is a slower, jazzier, somewhat punchier rendition than the original orchestration. The original Barry arrangement from Dr. No is heard during a check of Bond's room for listening devices.
In Goldfinger, the "James Bond Theme" can be heard on the soundtrack in "Bond Back in Action Again" (gun barrel and pre-title sequence). The "James Bond Theme" for this movie is heavily influenced by the brassy, jazzy theme song sung by Shirley Bassey.
Thunderball featured a full orchestral version of the theme in the track "Chateau Flight". Another full orchestral version was intended for the end titles of the film.
You Only Live Twice featured a funereal orchestration with Bond's "burial" at sea sequence in Hong Kong harbour.
With the return of Sean Connery in Diamonds Are Forever, the guitar made a comeback along with a full orchestral version during a hovercraft sequence. On the soundtrack this track is named "Mr. Wint and Mr. Kidd/Bond to Holland."
இசையை ரசிக்கும் செவிக்கு ருசிக்கும் மனதுக்கு மொழி எல்லை இல்லை !!
https://www.youtube.com/watch?v=Lcdmq07u2T8
Enjoy the title too dancing to the tune of John Barry's scintillating theme music!
https://www.youtube.com/watch?v=aOw2hTBHMvA
சிக்கா.. செந்தமிழ் நாட்டுக்கு வந்துட்டு கண்டுக்காமலே திரும்பிட்டீங்களே... கண்ணாலே பார்த்தால் மெட்ராஸ் ஐ ( அட... ரெண்டுமே லேட்டஸ்ட் படத்துப் பெயராக இருக்குதில்லே ) வந்துடுமின்னு பயமா ?// மதுண்ணா ரியல்லி வெரி ஸாரி.. சென்னையில் இருந்த நாட்கள் இந்த தடவை இரண்டும் இரண்டும் நாலே நாலு நாள்..உங்களுக்குடன் பேசவேண்டும் என்றிருந்து பேசவே முடியாமல் போய் விட்டது.. (கொஞ்சம் ஒரு ப்ரச்னை மனதைக் குடைந்து கொண்டு இருந்ததில்). மறுபடியும் மன்னிக்க..( ஹப்பர் ஸ் மீட் செப்டம்பரில் வைத்திருக்கிறீர்கள் ..முடிந்தால் டிசம்பரில் இன்னொன்று வைக்கலாமல்லவா.. உறுதியாகவும் சொல்ல இயலாது தற்போது).. உடல் நிலை எப்படி இருக்கிறது..
வாசு..இதே காரணம் தான் நான் உங்களிடமும் தொலைபேசிக்காத காரணம்..மன்னிக்க..
கருக்குள் கரு 202
தந்தை -மகன் பந்தம்
மது சார் - விரும்பி படிப்பதுடன் நிற்காமல் , பாராட்டுக்கள் தருவதற்கு பெரிய மனம் வேண்டும் - இவைகள் தான் secreat of our energy . எந்த விதமான எதிர்பார்ப்புகள் இல்லாமல் இங்கு எல்லோரும் பதிவுகள் போட்டாலும் அவர்களுக்கும் energy தேவைப்படுகிறது . நான் நினைத்துக்கொள்வது உண்டு . உதாரணமாக வாசு அவர்களை எடுத்துக்கொள்வோம் - அவர் ஒரு பதிவை இங்கு போட குறைந்தது 5 மணி நேரம் தேவைப்படுகிறது - அவர் பதிவுகள் எதுவுமே ஏனோ தானோ வகையச் சார்ந்தது அல்ல .யாருமே பார்க்காத கோணங்கள் , அலசாத பாடல்கள் , கேட்க்காத பெயர்கள் . முழு ஈடுபாடு , முழு கவனம் தேவை , சுவை குறையாமல் பதிவுகளைப்போட ----- தினமும் ஆபீஸ் வேலை அவருக்கு குறைந்தது 10 மணி நேரமாவது இருக்கும் . 7 மணி நேரமாவது ஒருவன் உறங்க வேண்டும் - அவர் தன் குடும்பத்துக்கு என்று ஒதுக்கிடும் நேரம் 2 மணிகளே . 2மணி நேரம் தான் என்றாலும் தன் பிள்ளைகளுக்கு ஒரு உதாரணம் காட்டும் தந்தையாக , பெருமைப்படக்கூடிய தந்தையாக இருக்கிறார் - ஆங்கிலத்தில் சொல்வார்கள் " don't cite an example - be that example " வாசு இந்த வாக்கியத்திற்கு மிகவும் பொருத்தமானவர் .
ஒரு சில நபர்கள் மட்டுமே பாராட்டும் இந்த திரியில் இவ்வளவு அருமையாக அவர் எழுதுகிறார் , அலசுகிறார் , ஆராய்கிறார் , மழையில் நனைய வைக்கிறார் , சரளாவையும் , குசல குமாரியையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் - பாலாவின் புகழைப்பரப்புகிறார் , கல் தூண் நாயகனை ஒரு நிமிடமும் மறக்காமல் உடுக்கையின் ஒலியை எழுப்பிய வண்ணம் இருக்கிறார் , கேடக்காதவருக்கும் அவர்களுக்குப்பிடித்த பாடல்களை கர்ணன் போல வாரி வழங்குகிறார் .. எல்லோரும் பாராட்டினால் அவர் எப்படி எழுதுவார் என்று கற்பனை பண்ணியும் பார்க்க முடியவில்லை
ஒன்றிரண்டு இனிய வார்த்தைகள் உங்களைப்போல நல்ல ரசிகர்களிடம் இருந்து வரும்பொழுது பட்ட கஷ்ட்டங்கள் , வலிகள் எல்லாம் மறைந்து புதிய உற்ச்சாகம் பிறக்கிறது - இன்னும் நன்றாக , சிறப்பாக எழுத வேண்டும் என்ற ஆவலும் பிறக்கின்றது .
உங்களுக்காக இந்த பாடலை தந்தை மகன் பந்தத்தில் சேர்த்து பதிவிடுகிறேன் - இந்த கருவிற்கு முடிவே இல்லை - எழுதிக்கொண்டே போகலாம் . படிக்கத்தான் ஆள் இருக்க வேண்டும் - அதுதான் என் கையில் இல்லை ...
அன்புடன் ரவி
https://www.youtube.com/watch?v=Cz0tIzWbTvU
சி.செ.. உங்கள் அசத்தல் தொடருக்கு டைட்டில் நான் வைக்கிறேன்.. Bondடு ரங்க விட்டலா! (முன்னால் ஒருகாலத்தில் பாண்ட் படங்களைப் பற்றி எழுத த்கவல்கள் சேகரித்து எழுதலாம் என வைத்த தலைப்பு! அப்புறம் விட்டு விட்டேன்..) .. நீங்கள் நான் எல்லாம் கமர்ஷியல் படங்களைப் பற்றி எழுதுவதில் வல்லவர்கள்.. (கோபால், வாசு போல் ஜீனியஸ் படங்களைப் பற்றி எல்லாம் கொஞ்சமே கொஞ்சம் தெரிந்தவர்கள்) எனில் இசை மட்டுமென்றில்லாமல் கொஞ்சம் ஒவ்வொரு படத்தின் ஸ்பெஷாலிட்டியையும் கொஞ்சம் டீடெய்ல்ட் வெர்ஷனாக தமிழில் எழுதுங்களேன்.. சின்ன ரெக்வஸ்ட் ....
லிவ் அண்ட் லெட் டை எப்போ வரும்னு ஆவல் மிகுகிறது..ஏன் எனில்.. 1996 ல் துபாய் ஷாப்பிங்க் ஃபெஸ்டிவல் துவங்கப் பட்ட போது அப்போது தான் மியூஸிக்கல் ஃபெளண்டன் கான்ஸெப்ட் அங்கு வந்தது..அப்போது போட்ட முதல் பாடல் என்ன தெரியுமா.. லிவ் அண்ட் லெட் டை இசை..!
//ஒரு சில நபர்கள் மட்டுமே பாராட்டும் இந்த திரியில் இவ்வளவு அருமையாக அவர் எழுதுகிறார் , அலசுகிறார் , ஆராய்கிறார் , மழையில் நனைய வைக்கிறார் , சரளாவையும் , குசல குமாரியையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் - பாலாவின் புகழைப்பரப்புகிறார் , கல் தூண் நாயகனை ஒரு நிமிடமும் மறக்காமல் உடுக்கையின் ஒலியை எழுப்பிய வண்ணம் இருக்கிறார் , கேடக்காதவருக்கும் அவர்களுக்குப்பிடித்த பாடல்களை கர்ணன் போல வாரி வழங்குகிறார் .. எல்லோரும் பாராட்டினால் அவர் எப்படி எழுதுவார் என்று கற்பனை பண்ணியும் பார்க்க முடியவில்லை// சரி சரி..வாசு வடகிழக்குல இருக்கற வாழைத் தோப்பை ரவி பெயரில் எழுதி வைச்சுடுங்கோ :)
சிவாஜி செந்தில் சார் - உங்கள் பதிவுகள் தனித்தன்மை வாயிந்தவை - உங்களால் மட்டுமே கற்பனை செய்து எழுதக்கூடியவை - புரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு ஞானம் குறைவுதான் என்றாலும் - உங்கள் ஈடுபாடு , உழைப்பு என்னை மிகவும் ஆச்சரிய பட வைக்கின்றது - உங்கள் அளவிற்கு உயர பல பிறவிகள் எடுக்க வேண்டும் - தொடருங்கள்
சிவாஜி செந்தில் சார்
வித்தியாசமான கோணங்களில் பாடல்களை அணுகுவதில் தங்களுடைய பாணியே தனி. இந்த வகையில் மாற்றார் தோட்டத்து மல்லிகையும் நிச்சயம் தனித்துவமாக விளங்குகிறது.
இந்தப் பட்டியலில் கம் செப்டம்பர், செப்டம்பரில் தான் வருமோ...?
சரி சரி..வாசு வடகிழக்குல இருக்கற வாழைத் தோப்பை ரவி பெயரில் எழுதி வைச்சுடுங்கோ
மீள் வருகைக்கு மீண்டும் நன்றி சி க ! தென்மேற்கே இருக்கும் ஜெமினித் (காதல் மாந் )தோப்பை மட்டும் கேட்டுவிடாதீர்கள்!!
Thanks for the complements Raaghavendhar Sir and Ravi SirQuote:
சிவாஜி செந்தில் சார் - உங்கள் பதிவுகள் தனித்தன்மை வாயிந்தவை - உங்களால் மட்டுமே கற்பனை செய்து எழுதக்கூடியவை - புரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு ஞானம் குறைவுதான் என்றாலும் - உங்கள் ஈடுபாடு , உழைப்பு என்னை மிகவும் ஆச்சரிய பட வைக்கின்றது - உங்கள் அளவிற்கு உயர பல பிறவிகள் எடுக்க வேண்டும் - தொடருங்கள் Ravi
The Good The Bad and the Ugly, My Name is Nobody, For a Few Dollars More...fame Ennio Morricone next to JB's John Barry
followed by The Sound of Music, Singing in the rain, Come September...a bonanza of western movies with evergreen music and songs...
I try my level best to extract...for a change and lateral thinking among our friends..
விட்டுப் போன ஹோம் வொர்க் ஃப்ரம் 163
வாசு..அருணோதயம் மதுரை நியூசினிமாவில் பார்த்த நினைவு.. நார்மல் படக்காட்சியிலேயே (35 எம் எம்) சரோஜாதேவி 70 எம் எம் ஆக இருப்பார்..மகா அகலமாக!.. ந.தி இளமை. முத்துராமனின் குடிப்பழக்கத்தை நிறுத்த நடத்தும் நாடகம் …தெள்ளிய நடிப்பு. சோ மனோரமா கொஞ்சம் புன்னகைக்க வைப்பார்கள்.. இந்தப் பாட் பிடிக்கும் என்றாலும் எனக்கு குங்குனாரே மிகப் பிடிக்கும்.. தாங்க்ஸ்..
//கன்னிமோகனம் என்னை கட்டி கட்டி
இழுப்பதற்கு என்ன காரணம்
என்ன காரணம் நெஞ்சின் எண்ணம் காரணம்' //
*
பால் வண்ணம் பருவம் கண்டு, பளிங்கினால் ஒரு மாளிகை..
சி.செ.. இரண்டுமே நல்ல பாடல்கள் தாங்க்ஸ்
*
ராஜ் ராஜ் சார் திடீர்னு கலர் ஜூகல் பந்தி யாருக்காக.. தாங்க்ஸ்லு..
///அல்லித் தண்டு கால் எடுத்து
அடி மேல் அடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்யும்/// எனக்குமிகவும் பிடித்த பாடல் ரவி..தாங்க்ஸ்
*
குசல குமாரி கட்டுரை நைஸ் வாசு சார்.. என் தாத்தாவிற்கு அவரை மிகப் பிடிக்கும் என நினைக்கிறேன்..
*
//"nagumOmu ganalEni..." in Abheri raagam...//ராகதேவன் நகுமோமுபாடல்கள் தொகுப்பிற்குஒரு ஓ அண்ட் தாங்க்ஸ்..
இதைச் சொல்லிக் கீழே வந்தால் ரவியின் அட்டகாசத் தொகுப்பு ப்ரோவ பாராமா.. ரவிக்கும் ஒரு ஓ அண்ட் தாங்க்ஸ்..
அப்புறம் ராஜ் ராஜின் மெல்லிய நகைச்சுவையுடன் பானுமதியின் நகுமோ..ஓ.. மத்யானம் தூங்கியும் இப்பக் கேட்கும் போது தூக்கம் வருகிறது..அமைதியுடன்..தாங்க்யூ சார்..
அப்புறம் அதே பானுமதி வைத்துமாசிலா உண்மைக்காதலேவிற்கும் ஒரு தாங்க்ஸ்..
*
வாசு..கல் தூண் பார்த்ததில்லை..பார்க்கத் தூண்டுகிறது உங்களின் எழுத்து..
*
ராகவேந்திரருக்கு 7000 பதிவிற்கு வாழ்த்துக்கள்.. மிக்க நன்றியும் கூட..
*
//Objection your honour!
ஜெமினி 'கொஞ்சும் லவராக' நடித்திருப்பார் என்றுதானே டைப்படித்தீர்கள் ?!
காதலில் விழுந்தாலே எல்லாம் வேகம்தான் ரவி சார்//
மங்கையரில் மகராணி பாட்டுக்கும் வழக்கமான அசத்தல் அலசலுக்கும் வாசு விற்கு ஒரு ஓ.. அப்புறம் சி.செ.. காதல்ல எப்படி எல்லாம் வேகமாகும்..குழம்புமே..
வளமாய் விழியூடி வாகாக நெஞ்சைக்
குழப்புமே காதலெனக் கூறு!.
*
குமார்..பட விளம்பரங்கள் ஆவணங்கள் என அசத்துகிறீர்கள்.. நன்றி..
//*'ஆபீஸில் வேலை வெட்டியில்லாமல் (?!?!?!) சும்மாதானே உட்கார்ந்திருக்கிறாய். சாத்தனூர் அணைக்கட்டில் படமாக்கப்பட்ட பாடல்களை உனக்குத்தெரிந்த வரையில் பட்டியலிட்டால் என்ன?' என்று மனம் கட்டளையிட்டதால் என் நினைவுக்கு வந்தவரை பட்டியலிட்டிருக்கிறேன். நிறைய விடுபட்டிருக்கு// ஆதி ராம் கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம் முத்ராமன் உடன் வருவது யார்..- அந்தப்பாட்டும் சாத்தனூர் தானே
*
ஆஹா..பட்டுச் சிறகுகொண்ட சிட்டுக்குருவி பாட்டில்கே.ஆர்.விஜயா அழகாய் இருக்கிறாரே.. நான் இப்போது தான் பாடலைக் கேட்கிறேன் பார்க்கிறேன்..தாங்க்ஸ் வாசு
*
நினைத்தால் சிரிப்பு வரும் (மதுரகானம் முதல் பாகத்தில் நான் கேட்டு நீங்கள் கொடுத்தீர்கள் வாசு.. நினைவிருக்கிறதா), மே. க்யா கரூ ஆஸ் முஜே புட்டாமில்கயா இரண்டும் எனக்குப் பிடித்த பாடல்கள்.. வாசு, ராஜ்ராஜ் சார் தாங்க்.ஸ்
*
என்ன சொல்ல பாட் இனிமேல் தான் கேக்கணும்..கொஞ்சம் இரவு இன்னும் ஏறட்டும்!
*
ரவி..தந்தை பாடல்களில் எல்லா வற்றையும் நான் கேட்கவில்லை.பல ஏற்கெனவே கேட்டது தான்..இருந்தாலும் ஒரு மிஸ்ஸிங் இருப்பது போல் தெரிகிறது..போட்டிருக்கிறீர்களா தெரியவில்லை..தந்தை என்று படித்த போதே எல்லார் மனதிலும் வரும் பாடல் அது..அது என்னவென்றால்…
https://youtu.be/ayXXXujt3Fo
*
சில பல விட்டுப் போயிருக்கலாம்.. என்னை மன்னிக்க..அப்புறம் சி.செ.. தென்மேற்கே இருக்கற தென்னந்தோப்பை தரமாட்டேன்..!
பின்ன வாரேன்.. நாளை நாம் எல்லாம் போவோமா ஊர்கோலம்(?!)
*
நிச்சயம் சி க !
முடிந்த வரை வகைப் படுத்துகிறேன் மேலோட்டமாக ...ஏனெனின் முதலிலேயே என் லெவல் இசையறிவில் அவுரங்கசீப் அளவுதான் என்று பாதுகாப்பாக
டிக்ளேர் செய்து விட்டேன்
நீங்கள் ரவி வாசு கோபால் ராகவேந்தர் கல்நாயக். ராஜேஷ் கலை......கோலோச்சும் இசைத்திரியில் நானும் அலைந்து திரிந்து பதிவிடுகிறேன்
ஆனால் இந்த இசை வகையறாக்களில் பயன்படுத்தப் பட்ட இசைக்கருவிகள் இசையின் தன்மை மற்றும் இதர சங்கதிகள் உங்களனைவரின் கைகளிலேதான் !
மாற்றார் தோட்டத்து மல்லிகை மணக்கும் போது மெல்லிசை மதுரமாகாதா என்னும் ஒரு சிறிய கருத்துப் பொறியின் விளைவே இது !!
When Roger Moore took over the Bond duty from Connery, the traditional musician was also changed for a change and the theme music was rarely sprinkled in this movie parts. Duran Duran troop music was so scintillating and added a fresh flavour to this light weight Bond movie with Moore trying his style even though shadowed by Connery till he broke the shell to come out in the Spy Who Loved Me!!
எம்ஜிஆர் ''தெய்வத்தாய்
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலத்தில் அவர் இசையமைத்த திரையிசைப் பாடல்களில்பிரபலமாகக் காணப்பட்டு, முழக்கப்பட்ட இசைக்கருவி பொங்கஸ் ( Bongo Drums) ஆகும்.
பொங்கஸ் ட்றம் என்றழைக்கப் படும் இந்த வாத்தியம் காலத்துக்குக் காலம் அதன் தோற்றத்திலும்தரத்திலும் மாற்றமடைந்து வந்தாலும் அது இசை உலகின் மிகப் பெரிய வரலாற்றைக் கொண்டது. 19ம்நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப் பட்டதாகக் கருதப்படும் இதன் பூர்வீகம் கியூபா எனக் கணிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான அழவு கொண்ட இரண்டு ட்றம்ஸ் களை ஒன்றோடு ஒன்று சேர்த்துப்பொருத்துவதன் மூலம் பொங்கஸ் வடிவமைக்கப் படுகிறது. இரண்டு மேளத்திலும் அழவில் பெரிதாக உள்ள மேளத்தை ( Drum ) , ஹெம்ப்றா ( hembra) என்று அழைக்கிறார்கள். . இது ஸ்பானிய மொழியில்பெண்பாலைக் குறிக்கும். சிறிய Drum மஹ்கோ (macho ) என்று ஸ்பானிய மொழியில் ஆண்பாலாகஅழைக்கப் படுகிறது. இதன் அழவு 6 – 7inch தொடக்கம் 7 – 8.5 inch ஆகும். ( சிறுவர்களுக்காகசெய்யப்படுவது அழவில் சிறியதாகக் காணப்படும்
1900இன் ஆரம்பத்தில் கியூபாவில் வாழ்ந்த ஆபிரிக்க ஸ்பானிய மக்களால் “changui`என்ற இசைக்கு/பாடலுக்கு இசையாக இது பயன்படுத்தப் பட்டதாதாகவும் காலப்போக்கில் அதுவே மருவி இப்போதையசல்சா ( Salsa ) ஆகியுள்ளதாகவும் கருதப்படுகிறது.
1900 தின் நடுப்பகுதியில் இந்த வாத்தியம், பொங்கோ மற்றும் ஜக் கோஸ்ரன்சோ என்பவர்களால்மிகப்பிரபலமாகி உலகின் எல்லா இசைகளிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. தற்போதும்உலகெங்கும் பிரபலமாகவுள்ள jazz ற்கு அடித்தளம் இந்த வாத்தியமென்றால் அது மிகையல்ல.
இதை இசைப்பவர்கள் தங்களின் இரு கால்களிற்கிடையிலும் தாங்கிப்பிடித்தபடியே விரல்களால்லாவகமாக இசைக்கவேண்டும்.
1960களில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி மற்றும் கே.வி.மகாதேவன் கோலோச்சிக்கொண்டிருந்த நேரம், இந்தவாத்தியம் தமிழ் திரையிசையில் புகுந்தது. அந்த நாளைய பல படங்களின் பாடல்களுக்கு இந்த இசைபயன்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பாக எம்.ஜி.ஆரின் பாடல்களில் அதிகளவில் இது புகுந்து விளையாடியது.எம்ஜிஆரின் படங்களில் மகிழ்ச்சியானதும், கலகல்ப்பானதும், வேகமானதுமான பாடல்கள் அதிகமாகஇருந்ததனால் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் இந்த வாத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம்.
இதன் ஆதிக்கம் பல பாடல்களில் இருந்தாலும், தெய்வத்தாய் திரைப்படத்தில் எம்ஜிஆர் சரோஜாதேவியைசுற்றி ஓடியபடி குதூகலித்து வெளிப்படுத்தும் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் என்ற பாட்டுபொங்கசின் அட்டகாசத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.
இந்தக்காலகட்டத்தில் எம்.எஸ்.வி.யின் ஆர்கெஸ்ட்ராவில் பொங்கஸ் கலைஞராக இருந்தவரின் பெயர்கணேஷ். இவர் எப்படி பொங்கசை இசைத்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, பலவருடங்கள் கடந்தாலும்இன்றும் உற்சாகம் கரைபுரண்டோடும்.
எம்ஜிஆரின் காதலின் போது குறும்புத்தனதுடன் குதூகலமாக ஓடி வருவது இந்தப் பொங்கஸ் தான். இளமை ததும்பும் இசைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி பொங்கசைப் மிகத் திறம்படப்பயன்படுத்தியிருப்பார்கள்.
மெல்லிசை மன்னர் ஒரு பாட்டுக்கு பொங்கசை, என்னென்ன நேரப் பரிமாணங்களில் பாவித்துள்ளார் எனபதை விளக்குவதற்கும் அதன் மூலம் எப்படி ஒரு பாட்டில் குதூகலத்தையும், புத்துணர்ச்சியையும் கொண்டுவந்தார் என்பதைப் புலப்படுத்தவும் எம்ஜிஆரின் இந்தப்பாடல் நல்லுதாரணம். இந்தப் பாடலில் அவர் பொங்கசை அட்டகாசமாகப் பாவித்துள்ள விதத்தை விபரமாகப் பார்ப்போம்.
இந்தப் பாட்டின் மொத்த நீளம் 4.30 நிமிடங்களாகும். இதில் பாடலின் ஆரம்ப இசையை அட்டகாசமாகத்தொடக்கி வைப்பதே பொங்கஸ் கணேஷ் தான். அழகான எம்ஜிஆர், மிடுக்காகத்தொடங்கும் பொங்கசின்தாளத்துக்கேற்ப, தனது கால்களால் ஆடுவது கண்கொள்ளாக் காட்சி.
பாடல் தொடங்கிய 0.04 செக்கனில் தனது விளையாட்டை ஆரம்பிக்கும் பொங்கஸ் 0.19 செக்கன் வரைஅட்டகாசமாகச் சென்று பல்லவிக்கு வழிவிட்டொதுங்கிகிறது..
பின் முதலாவது இடையிசையில் 1.08 நிமிடத்தில் தொடங்கி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு 1.26நிமிடத்தில் மெதுவாக ஓய்கிறது. முதலாம் சரணம் முடிந்ததும், 2.19 நிமிடத்தில் பாட்டின் இரண்டாவதுஇடையிசையில் மீண்டும் குதித்தோடி வரும் பொங்கஸ் எம்ஜிஆருடன் சேர்ந்து சில்மிஷம் பண்ணியபடி2.57 நிமிஷம் வரை எமையெல்லாம் உற்சாகத்தில் கட்டிப்போடுகிறது. அது முடிவுற்று இரண்டாவது சரணம்தொடங்கும் போது காணாமல் போய் இறுதியாக சரணம் முடிந்தும் முடியாததுமாக பாய்ந்தோடி வந்து 3.46நிமிடத்தில் காதுகளை அணைத்துக் கொள்கிறது. அப்படியே எம்ஜிஆருடன் மீண்டும் பரிணமித்து 4.09நிமிடத்தில் மெதுவாக வேகமெடுக்கும் பொங்கஸ், தொடர்ந்து மிக வேகமாக ஓடிப்போய் 4.30 நிமிடத்தில்பாடலின் முடிவுடனும் எம்ஜிஆருடன் மலர்ந்த முகத்துடனும் முடிந்து போகிறது.. ஆஹா அற்புதமான இசைகேட்டுப்பாருங்கள் நண்பர்களே தொலைந்து போவீர்கள்.
https://youtu.be/ufwwcCxpz8E
அதேபோல் நாளை நமதேயில் எம்ஜிஆர் லதாவுடன் ரொமாண்டிக் பண்ணும் என்னை விட்டால்யாருமில்லையிலும் பொங்கசைத்தான் முன்நிலைப் படுத்தியுள்ளார் எம்.எஸ்.வி. தனது ஆசானின்எதிர்பார்ப்பை உணர்ந்த பொங்கஸ் கலைஞர் அவரின் எதிர்பார்ப்புக்கு எந்தக் குறையும் வைக்காமல்அற்புதமாக இசைத்துள்ளார்.
courtesy - net
இனிய நண்பர் திரு ரவி அவர்களின் கதையின் கரு -200 பதிவுகள் மிகவும் அருமை .உறவுகள் பற்றி விரிவாக பட்டியிலிட்டு அதற்கேற்றபடங்கள் , பாடல்கள் பதிவிட்டு இந்த நாள் இனிய நாள் என்று தினமும் மகிழ்விக்கும் உங்களுக்கு அன்பு வாழ்த்துக்கள் .
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்‘,
என்கிற பல்லவி கடமையைக் குறிக்கவே எழுதப்பட்டிருந்தாலும்.. எம்.ஜி.ஆர் என்கிற மூன்றெழுத்தையும் குறிக்கிறதே!!
https://youtu.be/izPbQMhpnBc
புகழுக்குப் புகழ் சேர்க்க இப்பூமியில் அவதரித்த புருஷர்களுள் பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும் ஒருவர் என்றே கருதுகிறேன்! அவரின் மனிதாபிமானம், கொடைத்தன்மை, விருந்தோம்பல், நற்குணங்களைப் பின்பற்றும் தன்மை, மக்கள்மீது கொண்டிருந்த பற்று, பாசம்..அவர்களிடம் காட்டிய பரிவு, வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்கிற பேராவல், இவைதான் ஒரு சரித்திர மனிதராய் எம்.ஜி.ஆரை உருமாற்றிற்று என்றால் அது மிகையில்லை! மேலும் தாய்மீது எம்.ஜி.ஆர் கொண்டிருந்த பற்று என்பது தெய்வ பக்திக்கெல்லாம் இணையானது! அதுவே எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வழிகாட்டியாய் ஆன்மபலம்தந்து அடுத்தடுத்து வெற்றித் திருமகள் கட்டித்தழுவிடக் காரணமாய் அமைந்தது!
இவருக்காக பாடல் எழுதிய பெருமக்கள் வரிசை நீண்டிருக்க.. அதிலே யார் பாடல் எழுதினாலும் அந்த வரிகள் எம்.ஜி.ஆருக்கு பொருத்தமாய் அமைந்ததுடன்.. அவர் புகழை இன்னுமின்னும் உயர்த்திட வழிவகுத்தன! எம்.ஜி.ஆர் அவர்களுக்காக திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனம் சத்யா மூவிஸ் ஆகும்! இதிலே இடம்பெற்ற இப்பாடல்.. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்! பாடலின் பல்லவி தொட்டு பவனி வருகிற வரிகள் அனைத்திலும் கூறப்பட்டுள்ள சிந்தனைகள் மனித குலம் என்றைக்கும் மனதில் கொள்ள வேண்டியவை என்பதை எவர் மறுக்க முடியும்?
கலைத்துறை என்பது மக்களை எளிதில் சென்றடைகிற ஊடகம் என்பதை முற்றிலும் உணர்ந்த எம்.ஜி.ஆர் அவர்கள் அதனை நல்ல கருத்துக்களைப் பரப்பவே பயன்படுத்த வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் கருத்துக்களை.. எண்ணங்களை உள்வாங்கிய கவிஞர்கள் வரிசையில் இதோ வாலி அவர்களின் வைர வரிகள்.. தெய்வத்தாய்க்காக.. மெல்லிசை மன்னரின் தக்கதோர் இசையமைப்பில் டி.எம்.செளந்திரராஜன் அவர்கள் குரலில்..
“பதவி வரும்போது பணிவு வரவேண்டும்..
துணிவும் வரவேண்டும் தோழா..”
“நாளை உயிர்போகும்.. இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா..”
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
திரைப்படம்:தெய்வத்தாய்
இசை:எம்.எஸ்.வி
பாடகர்கள்: டி.எம் செளந்தராஜன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா
அன்பே உன் அன்னை
அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில்
ஒன்றே உன் வேதம்
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
அன்பே உன் அன்னை
அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில்
ஒன்றே உன் வேதம்
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை.
Courtesy
காவிரி மைந்தன்
வினோத் சார் - உங்கள் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி - உங்கள் தெய்வத்தாய் பதிவு அருமை . மிகவும் ரசித்து எழுதியுள்ளீர்கள் . ஏற்கனவே நான் பதிவிட்ட வேண்டுகோள் தான் - அடிக்கடி வாருங்கள் - மக்கள் திலகம் பாடல்களுடன் மற்ற நடிகர்களின் பாடல்களையும் உங்கள் கண்ணோட்டத்தில் அலசி , ck , வாசு , ராகவேந்திரா சார் , சிவாஜி செந்தில் சார் இவர்கள் தரும் சந்தோஷத்தை நீங்களும் எங்களுக்கு பரிசாக தரலாமே ! வேண்டுகோள் நிறைவேறக்கூடியதா ?
அன்புடன்
//ரவி..தந்தை பாடல்களில் எல்லா வற்றையும் நான் கேட்கவில்லை.பல ஏற்கெனவே கேட்டது தான்..இருந்தாலும் ஒரு மிஸ்ஸிங் இருப்பது போல் தெரிகிறது..போட்டிருக்கிறீர்களா தெரியவில்லை..தந்தை என்று படித்த போதே எல்லார் மனதிலும் வரும் பாடல் அது..அது என்னவென்றால்…//
CK - ஹோம் work யை சரியாக பண்ணுவதில்லை என்று தெரிகிறது - இதிலும் ஏனோ தானோ தானா ? வாசு எனக்கு எழுதி வைக்கும் வாழைத்தோட்டத்தை அப்படியே உங்களுக்கு தந்துவிடலாம் என்று நினைத்தேன் - எண்ணத்தை மாற்றிக்கொண்டேன் - முதல் பதிவே " பிள்ளைக்கு தந்தை ஒருவன் " தான் சார் - இந்த பாடலை மறந்தவர்கள் நல்ல ரசிகர்களாக இருக்க முடியாது
மாற்றார் தோட்டத்து மெல்லிசையும் மது()ர(ம்)மே !!
பகுதி 3 : கோல்டுபிங்கர் / Goldfinger (1964) starring Sean Connery as James Bond OO7!
Quote:
ஜேம்ஸ் பாண்டின் முதல் இரண்டு படங்களான டாக்டர் நோ மற்றும் ப்ரம் ரஷ்யா வித் லவ் டைட்டில் பாடல்களின்றி தீம் இசைக்கோர்ப்பு மட்டுமே செய்யப்பட்டு மாரிஸ் பைண்டரின் கற்பனைத் திறன் மிக்க அற்புதமான டைட்டில் கிராபிக்சுடன் கலக்கப் பட்டிருக்கும் !
இப்படத்தின் மூலம் ஜேம்ஸ் பாண்டின் உளவுத் தொழில்நுட்பங்கள் புதைந்த ஆஸ்டன் மார்டின் கார் அறிமுகமானது ! வெட்டுத் தொப்பியை சுழற்றும்
வில்லனின் அடியாள், அலட்டிக் கொள்ளாத வில்லன் ஜெர்ட் போர்பே, laesar scene, மற்றும் ஜேம்ஸ் பாண்டை வறுத்தெடுக்கும் கதாநாயகி....மறக்க முடியுமா?
கோல்டுபிங்கரில் முதல் முதலாக மனதை உரசும் வெண்கலக் குரலில் அருமையான குரல் வளம் கொண்ட பாடகி ஷர்லி பாஸ்சியின் பின்னியெடுக்கும் அரங்கமே அதிர்ந்த மனக்கிளர்ச்சியூட்டும்பாடல் இடம் பெற்றது. இப்படத்தின் மூலம் புகழேணியில் ஏறத் தொடக்கி மீண்டும் டயமண்ட்ஸ் ஆர் பாரெவர் படத்திலும் பாடினார். ஜான் பேரியின் இசையமைப்பு உச்சம் தொட்டது. ஷான் கானரியின் ஜேம்ஸ் பாண்ட் உருவகம் இப்படத்தின் மூலமே நூறு சதவீதம் ரசிகர்கள் மனதில் என்றென்றும் ஆராதிக்கப் படும் அகில உலக ஆராதனை நாயகராக அவருக்கு ஒளிவட்டமேற்றியது! ஜேம்ஸ் பாண்ட் அலை சுழன்றடித்து பாண்ட் காய்ச்சல் உலகம் முழுவதும் தொற்றிக்கொள்ள இப் பாடலும் ஒரு காரணமே !!
Goldfinger Pre-title sequence that made all the subsequent Bond movies to follow this pattern after From Russia with Love!!
https://www.youtube.com/watch?v=-CTpzLphy5Q
Enjoy Shirley Bassey's scintillating engrossing and embracing tonal magic!!
https://www.youtube.com/watch?v=Qt2WlDM3tEA
https://www.youtube.com/watch?v=mi2DRqW76c8
CK - உங்கள் ஹோம் வொர்க்கில் .எதை விடுகிறீர்களோ , இந்த பதிவைப்படிப்பதை மட்டும் விட்டு விடாதீர்கள் - உங்களுக்குத்தான் பெரிய நஷ்ட்டம் - ஆத்மார்த்தம் , ஈடுபாடு என்று சொல்கிறோமே அதற்க்கு உண்மையான உதாரணங்களை காட்டவேண்டுமென்றால் - கல்தூண் உடுக்கை பதிவும் , திரு ராகவேந்திரா சார் அவர்களின் இந்த ஒரு பதிவும் போதும் - எப்படிப்பட்ட அலசல் , உழைப்பு , ஈடுபாடு - இப்படிப்பட்ட பதிவுகள் எந்த விசாரணையும் இன்றி guinness world recordஇல் இடம் பெற வேண்டும் -குறைந்தது 10 மணி நேரமாவது அவர் செலவழித்திருக்க கூடும் - எந்த விதமான பலன்களையும் எதிர்பார்த்திருக்க மாட்டார் , வாசுவைப்போல .
அவருக்கு நாம் செய்யும் ஒரே நன்றிக்கடன் இறைவன் நல்ல தேக ஆரோக்கியத்தையும் , இப்படிப்பட்ட பல பதிவுகளை நமக்கு தரக்கூடிய நல்ல சூழ் நிலையையும் தர வேண்டும் என்று மனதார வேண்டுவது மட்டுமே !!
அவரிடமும் எனக்கு ஏதாவது எழுதி வைக்க முயற்சி செய்யவேண்டாம் :)
http://www.mayyam.com/talk/showthrea...art-15/page356
திரு ரவிகுமார்
பந்த பாசங்களை அழகிய நடையில் எளிய உரையில் தெளிவாக வழங்கிய உங்களின் 200 பதிவுகளுக்கு என் மனமார்ந்த நன்றி .
RARE OLD TAMIL CINEMA PAPER ADVT
http://i62.tinypic.com/10emvf4.jpg