https://www.facebook.com/moorthy.n.m...4338628142490/
Printable View
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில்
மன்னர் வீரபாண்டிய கட்டப்பொம்மன்
தூக்கிலிடப்பட்ட இடத்தில் “நடிகர் திலகம்”
சிவாஜிகணேசன் செலவில்
பெருந்தலைவர் காமராஜர்...
“வீரபாண்டிய கட்டப்பொம்மன்” சிலையை
திறந்துவைத்ததினம் இன்று.
( 16 ஜூலை 1970 )
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...70&oe=57F60EB4https://scontent-yyz1-1.xx.fbcdn.net...17840633_o.jpghttps://scontent-yyz1-1.xx.fbcdn.net...93&oe=58303269https://scontent-yyz1-1.xx.fbcdn.net...36300823_o.jpg
(சபாபதி அவர்களின் முகநூலில் இருந்து)
சுயமாக சிந்தித்து செயல்பட்ட இருவர்
பெயருக்காக செயல்படாமல்
உணர்வோடு செயல்பட்டவர்கள்
இவர்கள் இருவரையும் பார்த்து காப்பியடித்தவர்கள்
அதிகாரத்தை வைத்துக்கொண்டு
பெயர்பெற்றுக்கொண்டார்கள்
http://oi67.tinypic.com/335fd3m.jpg
அரைவேக்காடு கால்வேக்காடுகள் என்றெல்லாம்
திட்டி எழுதலாமா? எனக்கு தெரியாமல்போச்சே
ஏன் என்றால் அங்கு நெறியாளர் வாரார் போறார்
பார்த்திருப்பார்தானே ஒன்றும் சொன்னதாக தெரியவில்லை
From Dinamani.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி சரோ-, ‘எம்.ஜி.ஆர். என் உடன் பிறவா சகோதரர் என்றால், என் கலை உலக ஆசான் சிவாஜி ஆவார். சிவாஜிக்கு மூச்சே நடிப்புதான். நடிகர் திலகத்தின் இடத்தை சினிமாவில் யாராலும் நிரப்ப இயலாது. அவரே இன்னொரு ஜென்மம் எடுத்து வந்தால் மட்டுமே அந்த இடத்தை நிரப்ப முடியும்!
நடிப்பைத் தவிர என் குருவுக்கு வேறு உலகம் தெரியாது. நடிக்க வந்து விட்டால் செட்டுக்குள்ளயே இருப்பார். டைரக்டர் பிரேக் சொன்ன பிறகுதான் வெளியே போவார்.
பெங்களூருவில் பள்ளியில் படித்து வந்த காலம். ‘மனோகரா’ நாடகம் நடைபெற்றது. தோழிகள் சிலர் ‘சிவாஜி மனோகரனாக நடிக்கிறார். நேருக்கு நேர் அவரது அற்புத நடிப்பைப் பார்க்க நமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. நீயும் அவசியம் வரவேண்டும்’ என்று என்னையும் வற்புறுத்தி அழைத்தார்கள்.
சிவாஜி கணேசன் நடிப்பில் மகத்தானப் புகழ் பெற்றவர். மிகப் பெரிய இந்தி நட்சத்திரங்கள் கூட அவரை வியந்து பாராட்டுகிறார்கள். சிவாஜி நம் ஊரில் நடிக்கிறார் என்றால் மக்கள் வழக்கத்தை விட அதிகமாகவே கூடுவார்கள். அவரை நேரில் காணும் ஆசை எல்லாருக்கும் சகஜமாக இருக்கும்.
எனக்கோ கூட்டம் என்றாலே பிடிக்காது. அதனால் என் சிநேகிதிகளிடம்,
‘நீங்கள் போங்கள். எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிட்டட்டும்’ என்றேன். நான் அப்போது விளையாட்டாகச் சொன்னது, பிற்காலத்தில் பலிக்கும் என்று நான் நிச்சயம் எதிர்பார்த்தவள் கிடையாது.
தங்கமலை ரகசியம் படத்தில் நடிகர் திலகத்துடன் ஒரு சின்ன வசனம் மட்டுமே எனக்கு இருந்தது. சும்மா இரண்டே வார்த்தைகள்.
‘வாழ்க்கைக்கு எது மிகவும் முக்கியம், இளமையா... அழகா...? ’ என்று நான், சிவாஜி அண்ணனைப் பார்த்துக் கேட்க வேண்டும்.
மிகப் பெரிய கலைஞரான அவர் முன்பு அதைப் பேச முடியாமல் கூச்சத்தில் தவித்தேன். கையும் காலும் தந்தி அடித்தன. இரண்டு சொற்கள் என் வாயிலிருந்து வெளியே வரவில்லை.
‘தைரியமாகப் பேசும்மா’ என்று சிவாஜி கணேசன் ஊக்கம் தந்த பிறகு, சமாளித்துக் கொண்டு பேசினேன்.
சபாஷ் மீனாவில் நாங்கள் இருவரும் நடித்திருந்தாலும் அவருடன் பழகச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. பாகப் பிரிவினைக்குப் பிறகே நடிகர் திலகத்தின் அன்பையும் ஆசியையும் ஆதரவையும் பெற்றேன்.
விடிவெள்ளி படத்துக்குக் கால்ஷீட் கொடுப்பதில் எனக்குப் பட அதிபருடன் சிறு சிறு பிரச்சனைகள் எழுந்தன. சிவாஜியின் மிக நெருங்கிய நண்பர் வேட்டைக்காரன்புதூர் முத்து மாணிக்கம். அவரோட தயாரிப்பு விடிவெள்ளி.
அண்ணன் சிவாஜியோ எதிலும் பட்டுக் கொள்ளாமல் அமைதியாக ஒதுங்கியே இருந்தார்.
‘சொந்த விருப்பு வெறுப்புகளை மனத்தில் வைத்துக் கொண்டு, அதைப் படத் தொழிலில் உடன் நடிப்பவர்களிடம் சிவாஜி அண்ணன் எப்போதும் காட்டியது கிடையாது.
மனத்தில் எதையும் துளி கூட வஞ்சம் வைக்காத உயர்ந்த மனிதர்!
அவரை அரசியல் மேடைகளில் தூற்றியவர்களும், அண்ணனைப் பத்தி குறை கூறிப் பேசியவர்களும் சிவாஜியோட படங்களில் நடிச்சிருக்காங்க. அது பொது ஜனங்களுக்கும் தெரிஞ்சிருக்கலாம்.
நானாக மனம் நொந்து போய் யாரைப் பற்றியாவது அண்ணனிடம் புகார் செய்தால்,
‘போனால் போகட்டும் போ’ சினிமா உலகமே அப்படித்தான் என்று தொடங்கி, சிரித்துச் சிரித்துப் பேசி அனுப்பி விடுவார். யாருடனும் பகையை வளர்க்க விரும்ப மாட்டார்.
பாகப் பிரிவினை தொடங்கி நான் அவருடன் நடித்த ஒவ்வொரு படமும் எனக்கு நடிப்புக் கல்லூரியில் ஒவ்வொரு வகுப்பாகும்.
என்னிடம் ஏதாவது திறமை இருந்தால், சினிமாவில் நான் நடப்பது முதல் நடிப்பது வரை எனக்குச் சொல்லிக் கொடுத்த வழி காட்டி சிவாஜி அண்ணன்!
சிவாஜியின் கூட்டுக் குடும்பம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். எந்த வீட்டிலும் இல்லாத அம்சம்! ஞாயிற்றுக்கிழமையானால் அவங்க வீட்டு டைனிங் டேபிளில் அறுபது பேர் அமர்ந்திருப்பார்கள். அத்தனை பேர்களுக்கும் மருமகள்களே பரிமாறுவார்கள்.
ரொம்ப காலத்துக்குப் பிறகு ‘ஒன்ஸ் மோர்’ படத்துல நானும் சிவாஜியும் நடித்தோம். ‘அண்ணனோட மறுபடியும் நடிக்கிறோம்’னதும் சந்தோஷமா இருந்தது. பழைய நினைவுகள் மொத்தமா மனசுல வந்து அலை மோதுது.
காலை ஏழு மணிக்குக் கால்ஷீட் கொடுத்திருந்தார்னா ஆறே முக்கால் மணிக்கெல்லாம் மேக் அப்போட செட்ல உட்காந்திருப்பார். நாங்க பெண்கள் மேக் அப் போட்டு முடிய எப்பவுமே கால தாமதம் ஆகும்.
அதுல கொஞ்சம் கூடுதலா லேட்டாயிடுச்சுனா முறைக்கிற மாதிரி ஒரு பார்வை பார்ப்பார். அதனாலயே சிவாஜி செட்டுக்கு வந்திட்டாருன்னா, நாங்க மேக் அப்காரரை சீக்கிரம் சீக்கிரம்னு அவசரப்படுத்தி இருக்கோம்.
சிவாஜி கிட்டே என் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை மனம் விட்டுப் பேசி இருக்கிறேன். பல சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லி இருக்கிறார்.
அவர் மட்டும் அல்ல, அவரோட மனைவி கமலாம்மா, பொண்ணுங்க உட்பட ஒட்டு மொத்தக் குடும்பமும் என் மேல் தனிப்பாசம் வெச்சிருந்தாங்க. அண்ணன் காலத்துக்குப் பிறகும் அது மாறாம தொடருது.
சில நேரம் நாங்க லேடீஸ் எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து பேசிக்கிட்டு இருப்போம். அந்த சமயம் சிவாஜி வந்துட்டாருண்ணா , ‘என்ன மாதர் மன்றமா எல்லாரும் ஒண்ணு சேந்துட்டீங்களா..., அப்ப நான் போயிடறேன்னு...’ கிண்டல் பண்ணுவார்.
என் வாழ்க்கை திறந்த புத்தகம். அதில் ரகசியம் எதுவும் கிடையாது. 1986ல் என் கணவர் என்னைத் தவிக்க விட்டு விட்டுப் போய் விட்டார். என்னை விதவை கோலத்தில் காண சிவாஜி விரும்பவில்லை.
‘நான் சரோஜாவைப் பார்க்க மாட்டேன். அவள் நெற்றியில் குங்குமம் இல்லை. ’ என்று சில ஆண்டுகள் என்னைப் பார்க்காமலே தவிர்த்தார். நானாக மனத்தைத் தேற்றிக் கொண்டு அவரைச் சென்று பார்த்தேன். கடைசிக் காலம் வரையில் அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
‘ஒன்ஸ் மோர்’ ஷூட்டிங். முதல் நாள் லன்ச் பிரேக்ல சிவாஜி என்னிடம், ‘சரோஜா... நம்ம வீட்லருந்து சாப்பாடு வந்துருக்கு. நீயும் இப்ப என் கூட சாப்பிடறே...’ என்றார்.
‘இல்லண்ணே... எனக்குத் தனியா மீல்ஸ் வரும்’ என்றேன்.நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. சிவாஜி வீட்டுச் சாப்பாட்டை, அவருடன் எத்தனை நாள் சாப்பிட்டிருக்கிறேன். இன்னிக்குப் புதுசா என்ன வந்ததுச்சு..?
ஒரு வேளை... கால இடைவெளி, என்னை இந்த வார்த்தையைப் பேச வைத்து விட்டதோ..!
அப்போது சிவாஜி என்னிடம், ‘சரோஜா... நமக்கு வேண்டியவங்க எல்லாரும் ஒவ்வொருத்தரா போயிட்டே இருக்காங்க பார்த்தியா... பாலையாண்ணன், சகஸ்ரநாமம், ராதா அண்ணன்லருந்து இப்ப எம்.ஜி.ஆர். அண்ணன் வரை போயாச்சு...
நம்மள்ள கூட இப்ப நான், பப்பி, நீன்னு கொஞ்சம் பேர்தான் இருக்கோம். நம்மள்ள யார் முந்தறோம்னு நமக்குத் தெரியாது. இருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா அனுசரணையா இருப்போம்’ன்னாரு.
சிவாஜி அப்படி சோகம் பொங்க வருத்தமாச் சொன்னதும் எனக்குக் கண் கலங்கிற்று. அவராலயும் மேற்கொண்டு ஏதும் பேச முடியாம நாக்கு தழுதழுத்துச்சு. எனக்காக சிவாஜியோட சாப்பாடு கேரியர் பிரிக்காமயே இருந்தது. கொஞ்சம் கழிச்சு அண்ணன் மறுபடியும் என்னைத் தன்னோட சாப்பிட வற்புறுத்தினார்.
‘சரோஜா உனக்கு லன்ச் எப்ப வரும்? ’
‘உங்களோடயே சாப்பிடறேன் அண்ணே. ’என்று சொல்லி அவருடனேயே மதிய உணவைப் பகிர்ந்து கொள்ள உட்கார்ந்தேன்.
இழப்பு என்பது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து கொண்டாலும், தனது நண்பர்களின் இழப்பு அவரை எத்தனை தூரம் பாதித்து இருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.
அதற்குப் பிறகு ஒன்ஸ் மோர் ஷூட்டிங்கில் சிவாஜி வீட்டுச் சாப்பாடுதான் தினமும் எனக்கு!
From Dinamani.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி சரோ-, ‘எம்.ஜி.ஆர். என் உடன் பிறவா சகோதரர் என்றால், என் கலை உலக ஆசான் சிவாஜி ஆவார். சிவாஜிக்கு மூச்சே நடிப்புதான். நடிகர் திலகத்தின் இடத்தை சினிமாவில் யாராலும் நிரப்ப இயலாது. அவரே இன்னொரு ஜென்மம் எடுத்து வந்தால் மட்டுமே அந்த இடத்தை நிரப்ப முடியும்!
நடிப்பைத் தவிர என் குருவுக்கு வேறு உலகம் தெரியாது. நடிக்க வந்து விட்டால் செட்டுக்குள்ளயே இருப்பார். டைரக்டர் பிரேக் சொன்ன பிறகுதான் வெளியே போவார்.
பெங்களூருவில் பள்ளியில் படித்து வந்த காலம். ‘மனோகரா’ நாடகம் நடைபெற்றது. தோழிகள் சிலர் ‘சிவாஜி மனோகரனாக நடிக்கிறார். நேருக்கு நேர் அவரது அற்புத நடிப்பைப் பார்க்க நமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. நீயும் அவசியம் வரவேண்டும்’ என்று என்னையும் வற்புறுத்தி அழைத்தார்கள்.
சிவாஜி கணேசன் நடிப்பில் மகத்தானப் புகழ் பெற்றவர். மிகப் பெரிய இந்தி நட்சத்திரங்கள் கூட அவரை வியந்து பாராட்டுகிறார்கள். சிவாஜி நம் ஊரில் நடிக்கிறார் என்றால் மக்கள் வழக்கத்தை விட அதிகமாகவே கூடுவார்கள். அவரை நேரில் காணும் ஆசை எல்லாருக்கும் சகஜமாக இருக்கும்.
எனக்கோ கூட்டம் என்றாலே பிடிக்காது. அதனால் என் சிநேகிதிகளிடம்,
‘நீங்கள் போங்கள். எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிட்டட்டும்’ என்றேன். நான் அப்போது விளையாட்டாகச் சொன்னது, பிற்காலத்தில் பலிக்கும் என்று நான் நிச்சயம் எதிர்பார்த்தவள் கிடையாது.
தங்கமலை ரகசியம் படத்தில் நடிகர் திலகத்துடன் ஒரு சின்ன வசனம் மட்டுமே எனக்கு இருந்தது. சும்மா இரண்டே வார்த்தைகள்.
‘வாழ்க்கைக்கு எது மிகவும் முக்கியம், இளமையா... அழகா...? ’ என்று நான், சிவாஜி அண்ணனைப் பார்த்துக் கேட்க வேண்டும்.
மிகப் பெரிய கலைஞரான அவர் முன்பு அதைப் பேச முடியாமல் கூச்சத்தில் தவித்தேன். கையும் காலும் தந்தி அடித்தன. இரண்டு சொற்கள் என் வாயிலிருந்து வெளியே வரவில்லை.
‘தைரியமாகப் பேசும்மா’ என்று சிவாஜி கணேசன் ஊக்கம் தந்த பிறகு, சமாளித்துக் கொண்டு பேசினேன்.
சபாஷ் மீனாவில் நாங்கள் இருவரும் நடித்திருந்தாலும் அவருடன் பழகச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. பாகப் பிரிவினைக்குப் பிறகே நடிகர் திலகத்தின் அன்பையும் ஆசியையும் ஆதரவையும் பெற்றேன்.
விடிவெள்ளி படத்துக்குக் கால்ஷீட் கொடுப்பதில் எனக்குப் பட அதிபருடன் சிறு சிறு பிரச்சனைகள் எழுந்தன. சிவாஜியின் மிக நெருங்கிய நண்பர் வேட்டைக்காரன்புதூர் முத்து மாணிக்கம். அவரோட தயாரிப்பு விடிவெள்ளி.
அண்ணன் சிவாஜியோ எதிலும் பட்டுக் கொள்ளாமல் அமைதியாக ஒதுங்கியே இருந்தார்.
‘சொந்த விருப்பு வெறுப்புகளை மனத்தில் வைத்துக் கொண்டு, அதைப் படத் தொழிலில் உடன் நடிப்பவர்களிடம் சிவாஜி அண்ணன் எப்போதும் காட்டியது கிடையாது.
மனத்தில் எதையும் துளி கூட வஞ்சம் வைக்காத உயர்ந்த மனிதர்!
அவரை அரசியல் மேடைகளில் தூற்றியவர்களும், அண்ணனைப் பத்தி குறை கூறிப் பேசியவர்களும் சிவாஜியோட படங்களில் நடிச்சிருக்காங்க. அது பொது ஜனங்களுக்கும் தெரிஞ்சிருக்கலாம்.
நானாக மனம் நொந்து போய் யாரைப் பற்றியாவது அண்ணனிடம் புகார் செய்தால்,
‘போனால் போகட்டும் போ’ சினிமா உலகமே அப்படித்தான் என்று தொடங்கி, சிரித்துச் சிரித்துப் பேசி அனுப்பி விடுவார். யாருடனும் பகையை வளர்க்க விரும்ப மாட்டார்.
பாகப் பிரிவினை தொடங்கி நான் அவருடன் நடித்த ஒவ்வொரு படமும் எனக்கு நடிப்புக் கல்லூரியில் ஒவ்வொரு வகுப்பாகும்.
என்னிடம் ஏதாவது திறமை இருந்தால், சினிமாவில் நான் நடப்பது முதல் நடிப்பது வரை எனக்குச் சொல்லிக் கொடுத்த வழி காட்டி சிவாஜி அண்ணன்!
சிவாஜியின் கூட்டுக் குடும்பம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். எந்த வீட்டிலும் இல்லாத அம்சம்! ஞாயிற்றுக்கிழமையானால் அவங்க வீட்டு டைனிங் டேபிளில் அறுபது பேர் அமர்ந்திருப்பார்கள். அத்தனை பேர்களுக்கும் மருமகள்களே பரிமாறுவார்கள்.
ரொம்ப காலத்துக்குப் பிறகு ‘ஒன்ஸ் மோர்’ படத்துல நானும் சிவாஜியும் நடித்தோம். ‘அண்ணனோட மறுபடியும் நடிக்கிறோம்’னதும் சந்தோஷமா இருந்தது. பழைய நினைவுகள் மொத்தமா மனசுல வந்து அலை மோதுது.
காலை ஏழு மணிக்குக் கால்ஷீட் கொடுத்திருந்தார்னா ஆறே முக்கால் மணிக்கெல்லாம் மேக் அப்போட செட்ல உட்காந்திருப்பார். நாங்க பெண்கள் மேக் அப் போட்டு முடிய எப்பவுமே கால தாமதம் ஆகும்.
அதுல கொஞ்சம் கூடுதலா லேட்டாயிடுச்சுனா முறைக்கிற மாதிரி ஒரு பார்வை பார்ப்பார். அதனாலயே சிவாஜி செட்டுக்கு வந்திட்டாருன்னா, நாங்க மேக் அப்காரரை சீக்கிரம் சீக்கிரம்னு அவசரப்படுத்தி இருக்கோம்.
சிவாஜி கிட்டே என் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை மனம் விட்டுப் பேசி இருக்கிறேன். பல சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லி இருக்கிறார்.
அவர் மட்டும் அல்ல, அவரோட மனைவி கமலாம்மா, பொண்ணுங்க உட்பட ஒட்டு மொத்தக் குடும்பமும் என் மேல் தனிப்பாசம் வெச்சிருந்தாங்க. அண்ணன் காலத்துக்குப் பிறகும் அது மாறாம தொடருது.
சில நேரம் நாங்க லேடீஸ் எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து பேசிக்கிட்டு இருப்போம். அந்த சமயம் சிவாஜி வந்துட்டாருண்ணா , ‘என்ன மாதர் மன்றமா எல்லாரும் ஒண்ணு சேந்துட்டீங்களா..., அப்ப நான் போயிடறேன்னு...’ கிண்டல் பண்ணுவார்.
என் வாழ்க்கை திறந்த புத்தகம். அதில் ரகசியம் எதுவும் கிடையாது. 1986ல் என் கணவர் என்னைத் தவிக்க விட்டு விட்டுப் போய் விட்டார். என்னை விதவை கோலத்தில் காண சிவாஜி விரும்பவில்லை.
‘நான் சரோஜாவைப் பார்க்க மாட்டேன். அவள் நெற்றியில் குங்குமம் இல்லை. ’ என்று சில ஆண்டுகள் என்னைப் பார்க்காமலே தவிர்த்தார். நானாக மனத்தைத் தேற்றிக் கொண்டு அவரைச் சென்று பார்த்தேன். கடைசிக் காலம் வரையில் அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
‘ஒன்ஸ் மோர்’ ஷூட்டிங். முதல் நாள் லன்ச் பிரேக்ல சிவாஜி என்னிடம், ‘சரோஜா... நம்ம வீட்லருந்து சாப்பாடு வந்துருக்கு. நீயும் இப்ப என் கூட சாப்பிடறே...’ என்றார்.
‘இல்லண்ணே... எனக்குத் தனியா மீல்ஸ் வரும்’ என்றேன்.நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. சிவாஜி வீட்டுச் சாப்பாட்டை, அவருடன் எத்தனை நாள் சாப்பிட்டிருக்கிறேன். இன்னிக்குப் புதுசா என்ன வந்ததுச்சு..?
ஒரு வேளை... கால இடைவெளி, என்னை இந்த வார்த்தையைப் பேச வைத்து விட்டதோ..!
அப்போது சிவாஜி என்னிடம், ‘சரோஜா... நமக்கு வேண்டியவங்க எல்லாரும் ஒவ்வொருத்தரா போயிட்டே இருக்காங்க பார்த்தியா... பாலையாண்ணன், சகஸ்ரநாமம், ராதா அண்ணன்லருந்து இப்ப எம்.ஜி.ஆர். அண்ணன் வரை போயாச்சு...
நம்மள்ள கூட இப்ப நான், பப்பி, நீன்னு கொஞ்சம் பேர்தான் இருக்கோம். நம்மள்ள யார் முந்தறோம்னு நமக்குத் தெரியாது. இருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா அனுசரணையா இருப்போம்’ன்னாரு.
சிவாஜி அப்படி சோகம் பொங்க வருத்தமாச் சொன்னதும் எனக்குக் கண் கலங்கிற்று. அவராலயும் மேற்கொண்டு ஏதும் பேச முடியாம நாக்கு தழுதழுத்துச்சு. எனக்காக சிவாஜியோட சாப்பாடு கேரியர் பிரிக்காமயே இருந்தது. கொஞ்சம் கழிச்சு அண்ணன் மறுபடியும் என்னைத் தன்னோட சாப்பிட வற்புறுத்தினார்.
‘சரோஜா உனக்கு லன்ச் எப்ப வரும்? ’
‘உங்களோடயே சாப்பிடறேன் அண்ணே. ’என்று சொல்லி அவருடனேயே மதிய உணவைப் பகிர்ந்து கொள்ள உட்கார்ந்தேன்.
இழப்பு என்பது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து கொண்டாலும், தனது நண்பர்களின் இழப்பு அவரை எத்தனை தூரம் பாதித்து இருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.
அதற்குப் பிறகு ஒன்ஸ் மோர் ஷூட்டிங்கில் சிவாஜி வீட்டுச் சாப்பாடுதான் தினமும் எனக்கு!
எனக்கு பள்ளி வயதில் ஸ்ரீதர் என்றொரு நண்பன் . கலையில் நாட்டம் கொண்டவன். நாங்கள் நெய்வேலி நூலகத்தில் தேடி தேடி புத்தகம் படிப்போம்.முக்கியமாக சரித்திரம். என்னை வசீகரித்த தலைவர்களுள் ஒருவர் ஹிட்லர். முரணான பல விஷயங்கள். ஆனாலும் கடைசி சில நாட்கள் பல திருப்பு முனைகள் கொண்டது. ஹிட்லரின் கடைசி சில நாட்கள் என்று நான் ஒரு திரை குறிப்பு தயாரித்தேன்.சொன்னால் நம்ப மாட்டீர்கள் மொத்தம் 32 காட்சிகள். 32 பக்கங்களே திரைக்கதை. நம் நடிகர்திலகத்தை வைத்து எடுக்கும் ஆசை. எனக்கு வயது 14.(நிறைய திரைக்கதை பண்ணியுள்ளேன். எல்லாம் சிவாஜிக்கே)
ஹிட்லரின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்தவர் கோயபெல்ஸ்.
அவரின் மிக முக்கியமான ஒரு பொன்மொழி அப்போது தமிழகத்தில் அற்புதமாக நடைமுறையில் இருந்தது.
ஒரு பொய்யை சொல்லுங்கள். அதையே திரும்ப திரும்ப சொல்லுங்கள். மக்கள் அதனை உண்மை என்று ஏற்பதுடன் , பின்னால் நீங்களே உண்மையை கூறினாலும் அதனை உண்மை என்று நம்ப மாட்டார்கள்.
இப்போது ஸ்ரீதர் எங்கேயோ?
ஒரு அருமையான பாடல். நல்ல சிச்சுவேஷனும் கூட. ஆனால் நல்ல நடிகை இருந்தும் அவரின் அன்றைய உருவத்தால், அவருக்கு பொருத்தமில்லா நடனத்தால் இப்பாடல் உரிய பலனை அடையாமல் போனது. சுசீலா அம்மாவின் அற்புதமான பாடலின் சூழலை உணர்ந்த குரல் பாவங்கள். அதற்கேற்ற அந்த பாத்திரத்தின் மேல் பார்ப்பவர்கள் கருணையோடு பரிதாபப்பட்டு நெகிழச் செய்யும் மன்னரின் துள்ளாட்டத்தோடு கூடிய உருக வைக்கும் இசை.
https://upload.wikimedia.org/wikiped...an_Poster_.jpg
திருடனான கணவன் திருந்தி வாழும் போது வறுமைக்கு உள்ளாகிறான். மனைவியும், குழந்தையும் உணவு கூட இன்றி வாழ வேண்டிய சூழ்நிலை. நல்லவனாய் மாறினாலும் திருடன் என்ற முத்திரை மாறாததால் சமூகம் அவனுக்கு வேலை தர மறுக்கிறது. பாலின்றித் தவிக்கும் தன் குழந்தையின் நிலைமை கண்டு அவன் துடிக்கிறான். தவிக்கிறான். மனைவி அவனை எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவன் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் படுக்கையில் விழுகிறான். அரண்டு பிதற்றுகிறான். அவன் உடல்நிலை மோசமாகிறது. படுக்கையில் படுத்தபடியே 'யாராவது வேலை கொடுங்களேன்' என்று அரற்றுகிறான். அவனை படுக்கையில் கண்ட்ரோல் செய்ய முடியாமல் மனைவி அவனை கட்டிலுடன் சேர்த்து சேலையால் கட்டிப் போடுகிறாள் அழுதபடியே. ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வர, டாக்டர் மருந்து எழுதித் தந்து சத்துள்ள ஆகாரமாக அவனுக்குத் தரச் சொல்லி செல்ல, மனைவி செய்வதறியாது நிற்கிறாள் வறுமையின் கொடுமையை நினைத்தபடியே.
இப்போது அவள் ஒரு முடிவெடுக்கிறாள். ஹோட்டலில் நடனமாடி, வருவாய் ஈட்ட முடிவு செய்து, அட்வான்ஸும் வாங்கி கணவனுக்கு மருந்துகள் வாங்கி வருகிறாள். கணவன் இவையெல்லாம் 'எப்படி வாங்கினாய்?' என்று வினவ, தான் வேலைக்குப் போவதாகக் கூறுகிறாள். கணவன் அதை எண்ணி துயரமடைகிறான். அவள் கணவனிடம் வேலைக்குப் போவதாகத் சொன்னாளே ஒழிய, தான் ஹோட்டலில் நடனமாடிச் சம்பாதிப்பதாகச் சொல்லவில்லை.
இப்போது அவள் ஹோட்டலில் நடனமாடச் செல்ல, வீட்டில் தனியே இருக்கும் கணவனிடம் வருகிறான் அவனுடைய பழைய பாஸ். அவனை மறுபடி திருட்டுத் தொழிலுக்கு வரச் சொல்லி வற்புறுத்துகிறான். ஆனால் திருந்தியவனோ தீர்மானமாக அதற்கு மறுக்க, அவனுடைய கொள்ளையர் தலைவன் அவன் மனைவி ஹோட்டலில் பல பேர் அறிய மானத்தை விட்டு நடனமாடி சம்பாதிப்பதை விட திருடுவது எவ்வளவோ மேல் என்று அவன் மனைவி நாட்டியமாடுவதை அவனிடம் போட்டு உடைக்க, அதைக் கேட்டு அதிர்ந்து, உறைந்து போகிறான் கணவன். கோபம் தலைக்கேற தான் பாஸுடன் ஹோட்ட்டலுக்கு புறப்படுகிறான்.
அங்கே கணவனுக்காக தன் மானத்தையே விட்டு நடனமாடுகிறாள் அவன் மனைவி.
திருந்திய திருடனான கணவன் வேடத்தில் நடிகர் திலகம். கேட்கவே வேண்டாம். மனைவி ரோலுக்கு கே.ஆர்.விஜயாதான். கொள்ளைக்கார பாஸ் பாலாஜி.
ஹோட்டலில் நடனமாடும் ரோல் சற்றும் பொருந்தா விஜயா. உடல் பருமன் உடன் பயமுறுத்துகிறது. மரியாதைக்குரிய நாயகி என்று பெயர் எடுத்தது விட்டதால் உடல் முழுதும் மறைத்த கோபிகாஸ்திரி கவர்ச்சி டிரெஸ் விஜாவிற்கு சூட் ஆகவில்லை. இந்த மாதிரி நடனமும் அவ்வளவாக அவருக்குப் பழக்கமில்லை.
என் ஆசை என்னோடு
சலங்கை தரும் ஓசை உன்னோடு
உலகமே ஆடும் பெண்ணோடு
மயக்கந்தான் ஹா ஹா ஹா மயக்கந்தான்
ஓஹோஹோ
அஹா அஹா அஹாஹா
அஹா அஹாஹா
(என் ஆசை என்னோடு)
கூட்டத்தில் விளையாடப் புதிதானவள்
கோலத்தின் அலங்காரம் பழகாதவள்
பாட்டுக்கு நடை போட்டு அறியாதவள்
பாவத்தை பிறர் காண சகியாதவள்
ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு
ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு
கேட்டால்
உலகமே ஆடும் பெண்ணோடு
மயக்கந்தான் ஹா மயக்கந்தான்
ஓ மயக்கந்தான்
(என் ஆசை என்னோடு)
மதுக் குடத்தினில் நனைத்தெடுத்தது எந்தன் உடலல்ல
வடித்த பொன்னென அணைக்க வந்தவள் நானல்ல நானல்ல
மணமுள்ள மலர் காண கொடியானவள்
வாழ்கின்ற துணைக்காக கனியானவள்
வழி கண்டு சபை தேடி சிலையானவள்
மானத்தின் நிழலோடு கலையானவள்
ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு
ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு
கேட்டால்
உலகமே ஆடும் பெண்ணோடு
மயக்கந்தான் ஹா மயக்கந்தான் ஓ மயக்கந்தான்
(என் ஆசை என்னோடு)
'புன்னகை அரசி'யை புறந்தள்ளிவிட்டு பாடலை முழுவதும் ஆக்கிரமிப்பது இசையரசியே. பாடலின் முழு அர்த்தத்தையும் உணர்ந்து அதை நம் உள்ளங்களில் உணர்வோடு உணர்த்தும் வித்தையில் கைதேர்ந்த குரல்காரி இந்த பார் போற்றும் பாடகி. நடிகையின் முக பாவங்களையும், உடல் பாவங்களையும் ஒரே ஒரு குரல் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது.
'ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு
ஆட்டத்தில் ஆசை உண்டு ஆசைக்கும் தேவை உண்டு'
என்று வரிகள் முடித்து
'கேட்டால்'
என்று ஒரு வார்த்தை கேட்டு, சிறிது நிறுத்தி,
'உலகமே ஆடும் பெண்ணோடு
மயக்கந்தான் ஹா மயக்கந்தான்
ஓ மயக்கந்தான்'
என்று தபேலா வாத்தியங்களுக்கிடையே சுசீலா பாடும் இந்தப் பாடல் என்னுள் ஆழப் புதைந்தது. 'நடிப்புத் திருடன்' என்ற பிரளய சுனாமியால் இந்த பாடல் காணாமல் மறக்கடிக்கப்பட்டு விட்டது என்பதும் ஒரு புறம் உண்மையே. இருந்தாலும் மதுர கானங்கள் இதையெல்லாம் வெளிக்கொணரத்தானே உருவாக்கப்பட்டது?
கதையறிந்து, காட்சியறிந்து காவிய வரிகள் படைக்க கண்ணதாசனை விட்டால் யார்? விரசம் எதிர்பார்க்கும் பத்து ஆண்களுக்கு மத்தியில் பத்தினி ஒருத்தி தன் மானத்தையும் காத்துக் கொண்டு, அதே சமயம் நாட்டியமும் ஆட வேண்டிய கட்டாய நிர்ப்பந்தத்தில் காலத்தின் கோலத்தை நினைத்து தன் நிலையை எண்ணிப் பாடும் வரிகள் அருமை. 'அனைத்தும் பெண்ணே' என்பதை 'உலகமே ஆடும் பெண்ணோடு' என்ற ஒரே வரியில் கலக்கிய இவனல்லவோ கவி!
மனைவியை ஹோட்டலில் நடனமாடும் கோலத்தில் பார்த்துவிட்டு அவளைத் 'தரதர'வென வீட்டுக்கு இழுத்து வந்து, ஒரு வார்த்தை கூட பேசாமல் தான் மறுபடி கத்தி, துப்பாக்கி எடுத்து திருட்டுத் தொழிலுக்குப் போவதை பலவேறு முகபாவ உணர்ச்சிகளால் நமக்கும் அவளுக்கும் உணர்த்தும் நடிகர் திலகத்தின் பேராற்றல் நடிப்பு எப்பேற்பட்டதையும் மறக்கடிக்கச் செய்யும் மாயா ஜால வித்தை. அதை வெல்ல எவரால் முடியும்?
ராகவேந்திரன் சார்,
உங்களுக்காகவே இந்தக் காட்சியையும் சேர்த்து பாடலுடன் இணைத்துள்ளேன். மூலவர் இல்லாமலா?
('Youtube'-ல் ஏற்கனவே அப்லோட் செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. எனவே இன்று நான் அப்லோட் செய்தது)
https://youtu.be/Dn5pz-nGQB4
வாசு சார்
http://2.bp.blogspot.com/_V5FGJxuN-m...600/nanri2.jpg
திருடன் நம் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளையடித்தவன். ஸ்டைல் என்ற வார்த்தைக்கு இன்னுமோர் பரிமாணத்தைக் கொடுத்தவர் தலைவர் இப்படத்தில். செய்யும் தொழில் சமூக விரோதமாக இருந்தாலும் அதனை கட்டாயத்தின் அடிப்படையில் மேற்கொள்பவனின் உள்மனதில் எத்தகைய போராட்டங்களெல்லாம் வெடிக்கும் என்பதை உன்னதமாக சித்தரித்தார் தலைவர். இந்தத் தொழிலே வேண்டாம் என்று ஒதுங்கி செல்பவரை சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அதற்குள்ளேயே நுழைக்கும் கட்டங்களில் மனம் எப்படியெல்லாம் துடிக்கும் என்பதை காட்சி யாக அற்புதமாக வடித்தவர் தலைவர். என்னைப் பொறுத்தவரையில் இப்படத்தில் மேலே தாங்கள் பகிர்ந்து கொண்டிருக்கும் பாடலும், அதைத் தொடர்ந்து அந்த சூதாட்ட விடுதியில் மீண்டும் இவரை வரவேற்கும் விதமாக அமைக்கப்பட்ட பாடலும் முதலிடம் பெறும். அதிலும் நினைத்தபடி நடந்ததடி வராதவன் வந்து விட்டான் என்று சூழ்நிலைக்கேற்ற பாடல் வரிகளோடு அமைந்த பாடலில் வெள்ளுடை வேந்தராக மிகவும் ஸ்லிம்மாக சுமார் 20 அல்லது 25 வயதுக்கு மேல் மதிப்பிட முடியாத இளமைத் தோற்றத்தில் தலைவரின் ஒய்யாரமான நடன அசைவுகளும் நடையழகும் நம் உள்ளத்தைக் கபளீகரம் செய்து விடும்.
மறக்க முடியாத திருடன் பாடலோடு மறக்க முடியாத நாளாக இன்றை ஆக்கி விட்டீர்கள். இனியென்ன நினைத்தபடி நடந்து விடும். இந்த இரண்டு பாட்டும் இன்று முழுதும் ஆக்கிரமிக்கும்.
Nadigar Thilagam Film Appreciation Association (NTFAnS) Next Programme.
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...2e&oe=583091B4
திருச்சி கெய்ட்டி திரை அரங்கில் வரும் சனிக்கிழமை அதாவது 23 ஆம் தேதி முதல் உலக திரை உலகினரால் முடிசூட்டப்பட்ட நிரந்தர சாம்ராட், நடிக்க வந்த 23 ஆவது ஆண்டிலேயே 175 ஆவது காவியம் கண்ட திரை உலகின் சக்ரவர்த்தி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய மாபெரும் வெற்றிப்படைப்பு அவன் தான் மனிதன் திரையிடப்படுகிறது !
http://i501.photobucket.com/albums/e...psp1w09nmt.jpg
அவன்தான் மனிதன் திரைப்படத்தின் அந்த கால வசூல் மற்றும் ஓடிய நாட்களின் விளம்பர ஆவணங்கள் இருப்பின் அதனை தயவு செய்து இங்கு நண்பர்கள் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன் !
RKS
ஹிட்லர் கடைசி நாட்கள் பற்றி வாசு விவரம் கேட்டான்.நான் எழுதிய திரைக்கதை கரையானால் பறி போனது. (நெய்வேலியில்)
ஆனால் நினைவில் உள்ளது ,கடைசி 30 நாட்கள்,அதில் அடங்கும்.அது படமாகி இருந்தால் சிவாஜிக்கு oscar நிச்சயம். பாடல்கள் கிடையாது.
32 பக்கங்களில், மற்றோர் பேசும் வசனங்கள் 24 பக்கங்கள் . 8 பக்க வசனம் நடிகர்திலகத்துக்கு. அதிக பட்சம் 5 வாக்கியங்கள் தான் தொடர் வசனம்.மிச்சம் ஓரிரு வாக்யங்களே.
முதலில் ஹிட்லரின் முழு ஆளுமை. - தேச பக்தன், அஞ்சாநெஞ்சன், தான் நினைத்ததை சாதிப்பவன்,திட்டமிடுபவன்,கம்பீரன் ,பேச்சாளி,ஆளுமை மிகுந்தவன். ஆனால் hysteria நோய் ,வயிற்று கோளாறு,கொலை வெறி,personality disorder இவற்றால் அவதி. சைவன், நாய்களின் மீது பிரியம், பெண்களின் மீது நாட்டமின்மை,ஆனால் இனவொழிப்பில் ஈடு பட்டவன்.
ஆனால் கடைசி சில நாட்கள்.
ஹிட்லரின் ஆளுமை படி படியாய் சிதையும். மற்றோர் ஆலோசனை கேளாமல் ,தப்பிக்க எண்ணாமல் கடைசி வரை நம்பிக்கை விதைப்பான். ஆனால் சோர்வு,நம்பிக்கை குலைவு சிறிதே தெரியும். கடைசி நிமிடங்களில் ரகசியமாய் உடைந்து அழுதுள்ளான் .வெளியே காட்டாமல். கடைசி நிமிடங்கள் ஈவா பிரவுன் திருமணம். பிறகு தற்கொலை . என்று உணர்ச்சிகளை அள்ளி தெறிக்கும் படிப் படி நிலை. நடிகர்திலகத்தை தவிர யாருமே செய்திருக்க முடியாது.
அப்போதைய உடல்வாகு ஒத்துழைத்திருக்கும்.
என்ன செய்வது ,அப்போது எனக்கு வயது 14. வாசனும் மறைந்திருந்தார்.
http://oi63.tinypic.com/5x3fkh.jpgQuote:
அவன்தான் மனிதன் திரைப்படத்தின் அந்த கால வசூல் மற்றும் ஓடிய நாட்களின் விளம்பர ஆவணங்கள் இருப்பின் அதனை தயவு செய்து இங்கு நண்பர்கள் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன் !
RKS
100 தொடர்ந்து கொட்டகை நிறைந்த காட்சிகள்
http://oi68.tinypic.com/wsjjus.jpghttp://oi65.tinypic.com/xdruiu.jpghttp://www.nadigarthilagam.com/papercuttings/adm.jpg
"அவன் தான் மனிதன்" 100 நாட்களைக் கடந்த அரங்குகள்:
1. சென்னை - சாந்தி
2. சென்னை - கிரௌன்
3. சென்னை - புவனேஸ்வரி
4. மதுரை - சென்ட்ரல்
5. சேலம் - நியூசினிமா
6. திருச்சி - ராஜா
7. யாழ்ப்பாணம் - லிடோ
மேலும், சேலம் மாநகர திரைப்பட வரலாற்றில், ஒரே சமயத்தில் இரு அரங்குகளில் வெளியான படங்களில், ஒன்றில் 107 நாட்களும் [நியூசினிமா], மற்றொன்றில் 35 நாட்களும் [பேலஸ்] ஓடிய முதல் திரைப்படம் "அவன் தான் மனிதன்".
கோவை 'கீதாலயா'வில் 85 நாட்கள் ஓடி வசூல் மழை பொழிந்தது. மேலும் பற்பல ஊர்களிலும் 50 நாட்களைக் கடந்து பெருவெற்றி பெற்றது.
அயல்நாடான இலங்கையில், கொழும்பு 'கிங்ஸ்லி' திரையரங்கில் 82 நாட்களும், யாழ்ப்பாணம் 'லிடோ' திரையரங்கில் 122 நாட்களும் ஓடி இமாலய வெற்றி அடைந்தது.
சென்னை மாநகரின் சாந்தி(100), கிரௌன்(100), புவனேஸ்வரி(100) ஆகிய மூன்று திரையரங்குகளின், 300 நாள் மொத்த வசூல் ரூ.13,29,727-37பை.
1970களில் ஒரு படம், முதல் வெளியீட்டில், மொத்த வசூலாக அரை கோடியை [ரூ.50,00,000/-] ஈட்டினாலே 'சூப்பர்ஹிட்' அந்தஸ்தைப் பெற்று விடும். "அவன் தான் மனிதன்" முதல் வெளியீட்டில் மொத்த வசூலாக ரூ.55,00,000/-த்தை [ரூபாய் ஐம்பத்து ஐந்து லட்சங்களை] அளித்தது. அன்றைய சில லட்சங்கள் இன்றைக்கு பல கோடிகளுக்குச் சமம்.
"அவன் தான் மனிதன்" முதல் வெளியீட்டில் உண்டாக்கிய பாக்ஸ்-ஆபீஸ் பிரளயத்தின் முழு விவரத்தை, நமது திரியின் 8வது பாகத்தில் தனியொரு சிறப்புப் பதிவாகவே தருகிறேன்.
மேலும், மறுவெளியீடுகளாகவும், சிங்காரச் சென்னையில் "அவன் தான் மனிதன்" கணிசமான அளவுக்கு திரையிடப்பட்டுள்ளது. 1988-ல் சென்னையின் பல அரங்குகளை ரெகுலர் காட்சிகளில் அலங்கரித்த காவியம் "அவன் தான் மனிதன்". 1989 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்குப் பின் மீண்டும் சென்னையில் வெளியான இக்காவியம் பல அரங்குகளில் House-Full காட்சிகளாக அமோக வரவேற்பு பெற்றது. 'எவ்வளவு தான் உடைஞ்சாலும் ராஜா ராஜா தான்' டயலாக்கிற்கெல்லாம் அரங்குகளின் கூரைகள் பிய்த்துக் கொள்ளும். பின்னர் 1993-ம் ஆண்டிலும், 1997-ம் ஆண்டிலும் கூட சென்னையில் ரவிகுமார் வெற்றி உலா வந்திருக்கிறார். மதுரை ரசிகர்கள் எப்போதும் எதிர்பார்க்கும் படம் இதுதான். மதுரையில் பல முறை மறுவெளியீடுகளில் சக்கை போடு போட்டிருக்கிறது. ஏனைய ஊர்களிலும் ரவிகுமார் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஹீரோ தான்!
அன்புடன்,
பம்மலார்.
இலங்கையில் 17 ..09 ..1976 ல் திரையிடப்பட்டது
அவன்தான் மனிதன்
கொழும்பு...............கிங்ஸ்லி....83..நாட்கள ்
கொழும்பு..............கல்பனா......51..நாட்கள்
யாழ்நகர்...............லிடோ.........122..நாட் கள்
யாழ்நகர்......லிடோவில்...105 தொடர் house full காட்சிகள்
http://i1065.photobucket.com/albums/...psmdtpvebe.jpg
http://i1065.photobucket.com/albums/...psjpczgkl0.jpg
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...45&oe=58332791
19.07.2016 தேதியிட்ட இன்றைய தினத்தந்தி நாளிதழிலிருந்து...
Written by Mr. Sudhangan,
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 135.
http://www.dinamalarnellai.com/site/...ews_Nellai.jpg
சிவாஜியிடம் அப்படியென்ன கேள்வி கேட்கப்பட்டது?
`உங்களுக்கு பின்னால் வந்த நடிகர்கள் சிலர் ஏதோ ஒரு காலகட்டத்தில் படங்களை டைரக்ட் செய்திருக்கிறார்கள். நீங்கள் ஏன் அந்த முயற்சி செய்யவில்லை?’
அதற்கு சிவாஜி என்ன பதில் சொன்னார்?
ஓர் இயக்குநருக்கு எவ்வளவு பெரிய பொறுப்பும், கடமையும் உள்ளன என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
அதனால்தான் நான் படம் இயக்கவில்லை.
ஒரு வேளை நான் ஒரு நல்ல உதவி இயக்குநராக இருந்திருக்க முடியும். மற்றவர்களுக்கு நடிப்பைச் சொல்லிக்கொடுத்திருக்க முடியும். `இது மாதிரி செய்தால் நன்றாக இருக்கும், இப்படி மாற்றினால் சிறப்பாக இருக்கும்’ என்று கருத்து சொல்ல முடியும்.
ஆனால், நான் ஒரு இயக்குநராக முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
நான் ஒரு படத்தை இயக்குகிறேன் என்றால், அதில் நடிக்கும் எல்லா நடிகர்களின் முகங்களிலும் என்னுடைய சாயல் இருக்கிறதா என்றுதான் பார்ப்பேன். என்னை மாதிரி நடிக்கிறார்களா என்றுதான் எதிர்பார்ப்பேன். அப்படி இல்லை என்றால் விடமாட்டேன். அவர்களாகவும் நடிக்க அனுமதிக்க மாட்டேன். என்னை மாதிரி நடிக்கிறவரைக்கும் பயிற்சி கொடுத்துக்கொண்டே இருப்பேன். இதனால் என்ன ஆகும்? என்னுடன் நடிக்கும் எல்லோருமே சிவாஜி கணேசன் போல்தான் நடிப்பார்கள்.
ஒரே காட்சியில் எட்டு சிவாஜி கணேசன் இருந்தால், அந்த காட்சி நன்றாய் இருக்குமா? ஒரு சிவாஜி கணேசனாக இருந்தால் மக்கள் ரசிப்பார்கள்.
அதனால்தான், அந்த தவறான காரியத்தை நாம் செய்யக்கூடாது என்பதால்தான் நான் படங்களை இயக்க விரும்பவில்லை. எனக்கு தெரியாத வேலையில் நான் எப்போதும் தலையிடுவதில்லை. அப்படியும் ஒரு படத்தில் என்னை திரைப்பட இயக்குநர் வேடத்தில் நடிக்க வைத்தார்கள். அந்த படம்தான் `சாதனை.’
ஒரு திறமையான இயக்குநர் ஒரு சமயத்தில் ஒரு படம்தான் இயக்க விரும்புவார். அப்பொழுதுதான் எல்லா பொறுப்புக்களையும் சரிவரச் செய்ய முடியும். நடிகனாக இருந்தால், ஒரே சமயத்தில் மூன்று நான்கு படங்களில் நடிக்கலாமே! இதையெல்லாம் யோசித்துத்தான் நான் இயக்குநராகவில்லை. அடுத்து தன்னை கவர்ந்த சில இயக்குநர்களைப் பற்றியும் சிவாஜி சொல்லியிருக்கிறார்.
பல படங்களில் அவற்றை இயக்கியவரே அந்தப் படத்தின் கதை, வசனத்தையும் எழுதியிருப்பார். உதாரணமாக– ஏ.பி.நாகராஜன், கே.எஸ். கோபாலகிருஷ்ணன். இதைத்தவிர பீம்சிங், மாதவன், தாதாமிராசி, கே.சங்கர் போன்ற பல இயக்குனர்கள் என்னை இயக்கியிருக்கிறார்கள். அதே போல் தன் சக நடிகர்கள் பற்றியும் பதிவு செய்திருக்கிறார் அவர்.
‘நான் ஏழிலிருந்து எழுபது வயதுக்குள் மூன்று தலைமுறை கலைஞர்களை பார்த்திருக்கிறேன்.
1950--–70களில் பிரபலமாக இருந்த எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர்.,- பாலையா, சந்திரபாபு, வி.கே. ஆர்., நம்பியார், முத்துராமன், ஜெமினி கணேசன், மனோகர், தங்கவேலு, நாகேஷ் என்று பலரை சொல்லலாம்.
என்.டி.ராமாராவ், பிரேம்நசீர் போன்றவர்களுடன் நடித்திருக்கிறேன்.
நடிகைகள் என்று பார்த்தால் பானுமதி, அஞ்சலிதேவி, சாவித்திரி, பத்மினி, சவுகார் ஜானகி, தேவிகா, மனோரமா, எம்.என்.ராஜம். கே.ஆர்.விஜயா, மஞ்சுளா, சுஜாதா, லட்சுமி என்று பலரைக் குறிப்பிடலாம்’.
இதெல்லாம் சரி!
சிவாஜிக்கும் – எம்.ஜி.ஆருக்குமான உறவு எப்படி இருந்தது?
காரணம், இரு தரப்பு ரசிகர்களும் எதிரிகளாகவே இருந்தார்கள்!
சின்னப் பிள்ளையிலிருந்தே நானும் எம்.ஜி.ஆரும் நெருங்கிய நண்பர்கள். என் வீட்டிற்கு அவர் வருவதும், அவர் வீட்டிற்கு நான் செல்வதும், என் தாயார் கையால் அவர் சாப்பிடுவதும், அவருடைய தாயார் கையால் நான் சாப்பிடுவதும் சகஜம்.
ஒரு கதை மாதிரி எங்கள் நட்பு வரலாற்றைச் சொல்கிறேன்.
இரண்டாவது உலகப் போர் முடிந்த சமயம். 1943-–44ல் நான் சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்திலுள்ள ஒற்றைவாடை தியேட்டர் அருகேதான் குடியிருந்தேன்.
அந்த காலத்தில்தான் லட்சுமிகாந்தன் நாடகத்தை நடத்திக்கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில்தான் எம்.ஜி.ஆர். தன் தாயார், சகோதரர் எம்.ஜி.சக்ரபாணியுடம் தங்கியிருந்தார். அப்போதுதான் எம்.ஜி.ஆர்., சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருந்தார்கள்.
நானும் நண்பர் காக்கா ராதாகிருஷ்ணனும் அடிக்கடி அவருடைய வீட்டுக்கு போவோம். அனேகமாக சாப்பிடும் நேரத்தில் அங்கேதான் இருப்போம்.
எம்.ஜி.ஆர்., `பசிக்கிறது’ என்றாலும், `இருப்பா, கணேசன் வரட்டும்’ என்பார் அவருடைய தாயார்.
அந்த அளவுக்கு அவருக்கு என் மேல் பாசம் இருந்தது.
எம்.ஜி.ஆர்., இரவு நேரத்தில் என்னையும் காக்கா ராதாகிருஷ்ணனையும் டவுனுக்கு பக்கத்தில் உள்ள தியேட்டருக்கு சினிமா பார்க்க கூட்டிச் செல்வார். திரும்பி வரும் போது சாப்பாத்தி, பால் போன்றவற்றை சாப்பிடுவோம். அது போல நீண்ட நாட்களாக இருந்தோம்.
பிறகு நான் காஞ்சிபுரம் சென்று அண்ணாவுடன் சேர்ந்துவிட்டேன்.
`சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகத்தில் முதலில் எம்.ஜி.ஆர்., நடிப்பதாகவே இருந்தது. அவர் என்ன காரணத்தினாலோ நடிக்கவில்லை. அண்ணா என்னை தேர்ந்தெடுத்தார். நான் நடித்தேன். மறுபடியும் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது.
சில வருடங்கள் கழித்து நான் சினிமாவில் சேரும் போது எம்.ஜி.ஆரை சந்தித்தேன். ஒரே காலகட்டத்தில் இருவரும் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தோம். அதே சமயத்தில் அரசியலிலும் ஈடுபட்டிருந்தோம்.
`ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியுமா? நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் இருந்தால், இருவருக்கும் ஒரே ரசிகர்கள்தான் இருப்பார்கள். நாங்கள் இருவரும் தனித்தனியே செயல்பட்டதால் அவருக்கு வேறு ரசிகர்கள், எனக்கு வேறு ரசிகர்கள் இருந்தார்கள்.
என்னை அவர் விமர்சிப்பார்! அவரை நான் விமர்சிப்பேன்! அது அரசியல்ரீதியாகத்தான்! பெர்ஸனலாக இருக்காது! இதை வைத்துக்கொண்டு பலரும் நாங்கள் ‘விரோதிகள்’ என்று பேசிக்கொண்டார்கள்.
அதைப் பற்றி நாங்கள் இருவருமே கவலைப்படவில்லை. பல வருடங்களுக்குப் பின், அவர் முதல்வரானார்!
அவர் பதவியிலிருக்கும்போது நான் அவரை பலமுறை சந்தித்திருக்கிறேன். அவரும் பல நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்கிறார். எனக்கும் அவருக்குமுள்ள நட்பு என்றும் மாறவில்லை. எனக்கு மெட்ராசில் ஒரு தோட்டம் இருக்கிறது.
அதுவும் எம்.ஜி.ஆர். தோட்டத்திற்கு பக்கத்திலேயே இருக்கிறது.
என் தோட்டத்தில் உள்ள என் தாயாரின் உருவப்படத்தை திறக்க வரவேண்டுமென்று நான் எம்.ஜி.ஆரை கேட்டுக்கொண்டேன்.
உடனே ஒத்துக்கொண்டு தன் மனைவியுடன் வந்து என் தாயாரின் உருவப்படத்தை திறந்து வைத்தார் எம்.ஜி.ஆர்.
தனது தாயைப் போல் கருதிய என் அம்மாவின் உருவப்படத்தை திறந்து வைப்பதில் அவர் மகிழ்ச்சியடைந்தார். இதே போல் மற்றொரு சம்பவமும் நடந்தது!
அது என்ன?
(தொடரும்)
அன்புள்ள மக்கள்தலைவரின் அன்பு உள்ளங்களே,
நமது உயிராக நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு 23.07.2016 சனிக்கிழமை முதல் திருச்சி-கெயிட்டி திரையரங்கில் நடிகர்திலகத்தின் 175வது வெள்ளி விழா காவியமான அவன்தான் மனிதன் திரைப்படம் திரையிடப்படுகிறது.
திருச்சிக்கு அருகில் உள்ள அனைத்து ரசிகர்களும் அவசியம் அவன்தான் மனிதன் திரைப்படத்திற்கு வருகை தந்து படத்திற்கு மாபெரும் வெற்றியை ஈட்டித் தருமாளு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஏற்கனவே, திருச்சி கெயிட்டி திரையரங்கில் வெளிவரும் நமது மக்கள்தலைவரின் படங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிநடை போட்டு, அந்த செய்திகள் செய்தித்தாள்களில் வருவதை பார்த்திருக்கறோம்.
ஆனால் இந்த முறை அவன்தான் மனிதன் திரைப்படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் பாதிபேர் திரும்பி விட்டனர், என்ற செய்தி வியப்படைய வைக்க வேண்டும்.
மாசற்ற மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் ஒருவரே கலையுலகில் என்றும் வசூல்சக்கரவரத்தி என்பதனை நிரூபிப்போம்.
கெயிட்டி தியேட்டருக்கு வாருங்கள்,
கலைப் பசியாறிவிட்டு செல்லுங்கள்.
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...d36b1986c3a874
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/15072016_1.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
சரித்திரம் படைத்த சிவகாமியின் செல்வனின்
மதுரை வெற்றி விபரம் நாளை........
http://www.sivajiganesan.in/Images/150716_2.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/110716_1.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
நமது மக்கள்தலைவரின் நினைவுநாளை முன்னிட்டு 21.07.2016 அன்று மதுரை மாநகர் மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் நடத்தப்படும் விழாவின் அழைப்பிதழ்
http://www.sivajiganesan.in/Images/150716_3.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/080716_3.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
திருச்சி மாவட்டம், அகில இந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கம் சார்பாக...மாவட்ட நிர்வாகிகள் நமது உலக மகா நாயகனின் நினைவுநாளுக்கு 4 பிட் சுவரொட்டிகள் அடிக்கப்பட்டு, திருச்சி மாநகரம் முழுவதும் நேற்று இரவு ஆங்கேங்கே ஒட்டுப்பட்டுள்ளன. அதன் நகல் இங்கே.
குறிப்பு : வரும் 21.7.2016 அன்று காலை சரியாக 9 மணிக்கு திருச்சி, பாலக்கரை சிவாஜி சிலை ரவுண்டான அருகில் பிரபாத் தியேட்டர் நுழைவு வாயிலில் நமது செவாலியே சிவாஜியின் திரு உருவ படம் திறப்பு மற்றும் மலர் அஞ்சலி நடைபெற இருக்கிறது...அன்பு நண்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன். நன்றி
திருச்சி எம்.சீனிவாசன்.
தலைவர் : அகில இந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கம்.
https://scontent-sit4-1.xx.fbcdn.net...ef&oe=57EFE0ED
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.