பேராசை! உங்கள் கவிதையின் கடைசி வார்த்தைக்கு நீங்களே எழுதிகொள்வதற்கு!!!
எண்ணற்ற விதத்தில் கற்பனை விரியும் சாத்தியம் இருக்க ஏன் இந்த ஊகங்கள்??? புடவையை கொஞ்சாத பெண்கள் உண்டா? (சுடிதார்காரிகளைத் தவிர்த்து!)
Printable View
பேராசை! உங்கள் கவிதையின் கடைசி வார்த்தைக்கு நீங்களே எழுதிகொள்வதற்கு!!!
எண்ணற்ற விதத்தில் கற்பனை விரியும் சாத்தியம் இருக்க ஏன் இந்த ஊகங்கள்??? புடவையை கொஞ்சாத பெண்கள் உண்டா? (சுடிதார்காரிகளைத் தவிர்த்து!)
கல்யாண மண்டபத்தை விட்டு வருகிற வழியைக்காணோம்!!!
அப்பாடி வந்துட்டேன்.. நாளைக்கு இன்னும் நல்லா எழுதறேன்..கொஞ்சம் என் லெவலுக்கு ஈஸியா கொடுங்க..
**
ஆமா சென்னைல எந்த காய்கறிவண்டிக்காரன் பேரம்பேச விடறான்...பண்றதும் தப்பில்லை தான்...ஏன்னா இருமடங்கா இருந்தா பரவாயில்லை..அதற்கும் மேலே விலை இருக்குமாம்..என் சென்னை மைத்துனன் சொன்னான்!
மற்றவர்கள் கொடுப்பதை விட அதிகம் கொடுத்தால் ஏமாளி என்று எண்ணினால் ஏழை எளியவரிடம் எட்டணாவிற்கு பிசினாறக்கூடாது என்று இன்னொரு வாதம்/தத்துவம்!!! என் அனுபவத்தில் சென்னையில் மூன்றில் ஒரு பங்குதான் விலை கேட்க வேண்டும்!!!
சென்னையில்மட்டுமல்ல எங்கும் அப்படித் தான்..மார்க்கெட் டில் இருந்து வாங்கி வருபவர்களுக்கு கட்டுப் படி ஆக வேண்டுமல்லவா..
அது சரீஈ..மதுரை ஞாயிற்றுக் கிழமை சந்தை தெரியுமா..(வியாழக் கிழமை சந்தை உண்டு என்றாலும் அதற்கு ஞா.கி.ச என்றுதான் பெயர்..அங்கும் அம்மாவிடம்காசு வாங்கிப் போய் காய் பேரம் பேசி வாங்கி வருவேன் சின்ன வயதில்...காலேஜ்படிக்கும் சமயத்தில் சென் ட்ரல் மார்க்கெட் பக்கம் சென்று வாங்கும் போது தான் தெரிந்தது - ஞா.கி சந்தையில் பேரம் பேசிவாங்கிய்தை விட அங்கு சில்லறை விற்பனைக்குஆன விலை இன்னும் கம்மி என்பது..
(ஞா.கி.சந்தைப்பக்கம் தான் அடியேனின் வீடு இருந்தது..இன்னும் இருக்கிறது..ஆனால் மதுரை மட்டும்தொடர்பு விட்டுப் போய்விட்டது..)
தாங்கள் ரொம்ப பழைய காலத்தில் இருக்கிறீர்கள்! நான் சின்ன பிள்ளையாய் இருந்தபோது நீங்கள் சொன்ன மாதிரி வியாழன், ஞாயிறு சந்தை நாட்கள்- பாட்டியுடன் சென்று மண் செப்பு வாங்கிய பொன்னான நாட்கள்! ஆனால் பல ஆண்டுகளாக தினசரி சந்தையாகிவிட்டது- காய்கறி விற்பதில்லை, காயலான் கடை சாமான்கள், பழைய பொருட்கள், பச்சிலை மூலிகைகள், மண் பாண்டங்கள், செல்ல பிராணிகள்-வண்ண மீன், லவ்பேர்ட்ஸ், முயல், புறா போன்றவை விற்கும் இடமாகிவிட்டது. கடைசியில் சொன்ன கடைக்கு நாங்கள் இருவரும் அடிக்கடி போவதுண்டு- விடுமுறையில் வருகை தரும் பேரப்பிள்ளைகளுக்காக பெரிய கூண்டில் லவ் பேர்ட்ஸ் வளர்ப்பதால், பெரிய பறவைகள் வாங்க, குஞ்சுகளை விற்க என்று!!!
Love birds....antha naal niyabagam nenjilee vanthathee.... :-(
வருத்தம் வேண்டாம், நண்பரே! மீண்டும் பிற்காலத்தில் அந்த நாள் ஆசைகளுக்கு வாய்ப்பு வரும்!
எனக்கு அந்த நாளில் இதற்கு மனம், நேரம், ஆர்வம் இருக்கவில்லை- மகள் எவ்வளவோ அடம்பிடித்து கேட்டபோதிலும்; இந்த ஓய்வு கால்த்தில் பேரப்பிள்ளைகள் ஆசையை வெளியிட்டதும் உடனடியாக இணங்க சாத்தியப்பட்டுள்ளது!!!
மெய்யாலுமா பெருகட்டும்னு கொடுத்து படுத்திப் புட்டீங்க..கடைசில எண்சீர் எடுக்க வேண்டியதாய்டுத்து..கொஞ்சம் சுமார் தான்..(மோசிகீரனார் தான் கடைசில கை கொடுத்தார்!)
**
எண்பத்தெட்டின் பிற்கு மதுரை விசிட் வெகுவாகக் குறைந்து புகுந்தவீடு சென்ற் சில வருடத்தில் சுத்தமாக நின்றுவிட்டது..!கடைசியாய் சென்ற்து 96ம் வருடம்..
**
ஏன் இருவரி நண்பர் இப்போதெல்லாம் காணோம் அந்தப் பக்கம்..
'புகுந்த வீடு'??? அப்படியானால் சின்னகண்ணன் ... என்னமோ போங்க... எனக்கு அடுத்த கவிதைக்கு கரு கிடைத்தது!