கிருஷ்ணா சார்,
ஒருமுறை சி.ஐ.டி.சகுந்தலா தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் சொன்னது.
"நான் மிகவும் கடினப்பட்டு அதுவும் வேகமாக ஸ்டெப்ஸ் போட்டு ஆடிய பாடல் காட்சி இதுவாகத்தான் இருக்கும். இந்தக் காலத்தில் யாரையாவது இப்படி ஸ்டெப்ஸ் போட்டு ஆடச் சொல்லுங்கள் பார்க்கலாம்"
ஓரளவிற்கு உண்மையும் கூட. சகுந்தலா பிரமாதமாக ஆடுவது இருக்கட்டும்.
http://image6.buzzintown.com/files/e...olden-nite.JPG
ஆனால் ராட்சஸி என்ன ஒரு அமர்க்களம்!
விண்ணில் நிலவும்
இந்த மண்ணில் அழகும்
ஒன்றன்றோ ஒ............................ஒ என்று இழுத்து ஒரு தூக்கு தூக்குவார் பாருங்கள். அடப் போங்க சார்! யாராவது ஒரு பாடகியை இப்படிக் காண்பியுங்கள் பார்ப்போம்.
அது யார் நான்றோ
மதுவோ பூச்செண்டோ
காதல் பேசும் கண்ணன் யாருண்டோ?
கடலுக்கு மேலே படுக்கையை போட்டு
கடவுளும் பாடும் காதலின் பாட்டு
பாடலாசிரியர் கண்ணதாசன் சும்மா விளையாடுகிறாரே!
அதுவும் படுதிமிர்வாட்டத்தில் இந்த கிராதகி
'காலம் போனால் காரணம் நாணல்ல்ல்ல'
என்ற 'ல்ல்ல்ல' அழுத்தம் இருக்கிறதே!
தெலுகு டப்பிங் பட பாணியில் சொன்னால் 'யம்மாடியோவ்!'
ஈஸ்வரி எமனே!
பாடகி என்றால் நீயன்றோ
சொல்லுங்கள் வேறுண்டோ
கிருஷ்ணா சார்,
ரொம்ப படுத்தி விட்டீர்கள்.
சென்னையில் நான் உங்களை சந்திக்கிறேன். நாம் இருவரும் அந்த ராட்சசியை சந்திக்கிறோம். பம்மலாரும் பயங்கர ரசிகர். அவரும் வருவார்.
பாருங்கள். இந்த அபூர்வப் பாடகியின் அட்டகாசங்களை.
https://www.youtube.com/watch?featur...&v=1gzB-HyUC7o

