Originally Posted by
Gopal,S.
கிருஷ்ணா/சி.க,
ஏதோ casual ஆக சொல்ல போக ,தகவல் களஞ்சியம் ஆகவே ஆகி விட்டது.சோ,விசு,மௌலி,எஸ்.வீ.சேகர்,கிரேசி ,கோமல்,மெரினா,பூரணம் ஒரு நாடகம் கூட விட்டதில்லை.சிவாஜியின் வியட்நாம் வீடு, எம்.ஆர்.ராதா தூக்கு மேடை,ரத்த கண்ணீர் என்று சில.
சிறு வயதில் நானே எழுதி ,நானே நடிப்பேன். எம்.ஐ period ,என் சொந்த கதைகளை எழுதி,படிக்க சொல்லி என்னை ஊக்குவித்தார்கள் ராஜேந்திரன் ,ஆர்.பீ சார்.(11,12 வயதில்).D.E .O வந்தால்,இலக்கிய மன்றங்களில்,ஆண்டு விழாக்களில்,ரேடியோ நாடகங்களில் (பாண்டி,திருச்சி) நானே எழுதி ,இயக்கியவை.நான் தான் ராஜா ரோல் ஆண்டு விழாக்களில் (கதாநாயகிகள் ,தோழிகள்,ராணிகள் இத்யாதி. மீரா,ஜெயந்தி,விமலா என்று)
என் நாடகம் பற்றிய பார்வை,புரிதல் மாறியது ஞானியை சந்தித்த பின். முத்துசாமி,இந்திரா பார்த்தசாரதி,அம்பை,பிரபஞ்சன்,வண்ணநிலவன்,பாதல் சர்க்கார் (work shop ),டெண்டுல்கர் என்ற ஜாம்பவான்களுடன் சந்திப்பு. பரீக்ஷாவில் 6 வருடம் தொடர்ந்த பங்களிப்பு.கூத்து பட்டறை,எம்.பீ.எஸ் youth coir என்று ஒரு பெரிய வட்டம்.
பிறகுதான் வியாபாரியாகி விட்டேனே??