இன்னொரு தாய்க்கு பிறந்த உண்மையான சகோதரர் விஜய்: விஜய்க்கு நன்றி சொன்ன சிம்பு! - VIKATAN
வாலு படம் ஒவ்வொரு முறையும் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போய் வருகிறது. மற்றவர்களுக்கு இது செய்தியாக இருந்துவந்த நிலையில் சமீபத்தில் படத்தின் பிரச்னைதான் என்ன எனக் கேட்டறிந்துள்ளார் விஜய்.இந்தப்படம் வெளியாகவேண்டுமென்றால் பெரியதொகை கொடுத்தாகவேண்டும் என்கிற விசயம் அவருக்குத் தெரியவந்திருக்கிறது.
அதைக் கேட்டவுடனே அவ்வளவு தொகையையும் தாமே தருவதாக ஒப்புக்கொண்டாராம்.“பலமுறை இந்தப்படம் தள்ளிப்போனதில் எனக்கு வருத்தம். எனவே படம் வெளியாக என்னாலான இந்த உதவியைச் செய்கிறேன். இதை எப்போது முடியுமோ அப்போது திருப்பிக்கொடுத்தால் போதும்” என்று சொல்லி அந்தப்பணத்தைக் விஜய் கொடுத்துள்ளார். அதோடு தமக்கு வேண்டிய விநியோகஸ்தர்களிடம் இந்தப்படம் வெளியாக உதவி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் என ஓரிரு தினங்களுக்கு முன்பு நம் சினிமா விகடனில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக சிம்பு இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்க்கு நன்றி கூறி ட்வீட் செய்துள்ளார். ” வாலு படம் வெளியாக உதவி புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி, இன்னொரு தாய்க்கு பிறந்த உண்மையான சகோதரர்” என விஜய்க்கு நன்றியை கூறி நெகிழ்ந்துள்ளார் சிம்பு. மேலும் எல்லா விதத்திலும் தனக்கு பேருதவியாக இருந்த ரசிகர்களுக்கும் நன்றிகளை தெரிவித்ததோடு, நீங்கள் பெருமைப் படும்படி கண்டிப்பாக செய்வேன் என நம்புங்கள், நீங்கள் இல்லாமல் நான் இல்லை . என அடுத்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார் சிம்பு.
Thanks to @actorvijay anna for his genuine moral support for #Vaalu ... Really means a lot. A true brother from another mother :)
— STR (@iam_str) July 30, 2015