Nadigar Thilagam - Malaysia Vasudevan
இமைகள் ன்னு ஒரு படம்
என்ன பாடறதுக்கு கூப்பிட்டு இருக்காரு அம*ர*ர்
நான் ஸ்டூடியோவுக்கு போனேன்
ஒரு பாட்டு சொல்லிக் கொடுத்தாரு
மாடப் புறாவோ ..மஞ்சள் நிலாவோ அப்டீன்னு
நானும் பாட்டெல்லாம் கத்துகிட்டு..
யோவ் யாருய்யா ஹீரோ ? ஹீரோவ சொல்லுங்கப்பா
அப்போதான் நான் அதுக்கு தகுந்தபடி
கொஞ்சம் வாய்ஸ அட்ஜெஸ்ட் பண்ணி பாடாலாம் அப்டீன்னேன்
நீ ஒண்ணும் பயந்துற மாட்டியேன்னாரு அம*ர*ன்
அதெல்லாம் பயப்பட மாட்டேன் சொல்லுங்கன்னேன்
நடிகர் திலகம் னாரு அப்போதான் பயம் வந்துச்சி
ஏன்னா சினிமா தியேட்டர்ல ஒக்காந்து நான் அதிசயமா பார்த்துக்கிட்டு இருந்தவரு
நம்ம கண்களுக்கு அதிசயமா தெரிஞ்சவரு
என்னா ஒரு நடிகர்
இமயத்தை விட மேலானவர்
அவ்வளவு பெரிய நடிகருக்கு நம்ம பாடப் போறோமா
அப்டீங்ற பயம் வந்திரிச்சு
யோவ் நான் பாடினா சரியா இருக்குமானேன்
நீ இதெல்லாம் இங்கே பேசாதே ஒக்காந்து இரு
பாடப் போற நேரத்துல சரியா வருமா வராதான்னெலாம் கேக்காதே
பாடு நல்லா பாடிரு அப்டின்னாரு..
அந்த பாட்டு பாடினேன் ..மாடப் புறாவோ..இல்லை மஞ்சள் நிலாவோ ..
அது பெரிய பேரும் புகழும் வந்துச்சி எனக்கு
அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா..
வெள்ளை ரோஜான்னு இளையராஜா அவர்கள் சிவாஜி சாருக்கு ஒரு படம் பண்றாரு
அந்த வெள்ளை ரோஜா படத்துல 'தேவனின் கோவிலிலே அப்டீங்ங்ற பாட்டை பாடினேன்
அதுவும் எல்லாருக்கும் புடிச்சி போச்சி
அதே ப*ட*த்துல* இன்னொரு பாட்டு நாகூர் ப*க்க*த்திலே
நம்மளோட பேட்டை..
பாரதிராஜா படத்துல பாடறத்துக்கு என்னை கூப்பிட்டு இருக்காங்க*
அப்பவும் என்ன சொல்றாரு இளையராஜா ?
நல்லா பாடிருய்யா எப்பவும் சொல்லுவாரு
நல்லா பாடிரு இலேன்னா வேணான்னு சொல்லிட போறாங்க*
சரின்னு பாட்டு கத்துகிட்டு ..பூங்காத்து திரும்புமா..ன்னு ஒரு பாட்டு..
அதுல வாற எல்லா பாட்டையும் நானே பாட ஆரம்பிச்சேன்
சிவாஜி சாரும் வந்து இருந்தாரு
வந்து சொன்னாரு நல்லா பாடுற 'கீப் இட் அப் அப்டீன்னாரு
அந்த ஒரு வார்த்தை போதும்
இமயம் வந்து கெரெட்டா இருந்துது ஒன் வாய்ஸ்
அப்டீன்னு சொன்னா அது எவ்வளவு பெரிய பெருமை
அதுக்கு எனக்கு பெரிய மகுடம் சூட்டின மாதிரி ஆயிடிச்சி
அவரோட ராஜரிஷி படத்துக்குபாட கூப்பிட்டாங்க
முதல் மரியாதையில பாடின மாதிரி பாடக் கூடாது
ரொம்ப கம்பீரமா பாடனும் நல்லா ஓபன் வாய்ஸ்ல பாடு
ஏன்னா ராஜரிஷி ரொம்ப கம்பீரமான காரெக்டரு
அதுக்கு பாடும்போது சாஃப்டா பாடினா எடுபடாது..
அதனால சிவாஜி சாரும் சொன்னாராம்
மொதல் மரியாதை எல்லாம் சரி இதுல இவன் பாடினா சரியா இருக்குமான்னு கேட்டாராம்
இல்லே சரியா பாட வச்சுடறோம் சொன்னார் இளையராஜா
டேப் பண்ணி கொண்டு போயி நல்லா கத்துக்கோ
நல்லா கத்துகிட்டு நாளைக்கு காலையிலே வந்து பாடுன்னு சொன்னாரு இளையராஜா
நான் போயி நைட் எல்லாம் ஒக்காந்து
விடிய விடிய கத்துகிட்டு வந்து பாடினேன் 'சங்கரா சிவசங்கரான்னு.. ஒரு பாட்டு
Singer Malaysia Vasudevan -Jaya TV Thirumbi paarkkirEn
Regards