http://i61.tinypic.com/2v7xm2w.jpg
Printable View
சின்னா!
மீண்டும் தங்களை வருக வருக என வரவேற்கிறேன். நேற்று பொழுது ஷிப்ட்டிலேயே கழிந்து விட்டதால் சரியாக வரவேற்க முடியவில்லை.
உங்களுடைய ஹோம் ஒர்க் சின்சியாரிட்டி அபாரம். அதற்கு உங்கள் பாணியிலேயே ஒரு 'ஹோ'.
//ந.தி இளமை. முத்துராமனின் குடிப்பழக்கத்தை நிறுத்த நடத்தும் நாடகம் …தெள்ளிய நடிப்பு//
குடிப்பழக்கம் தெளிய நடிப்பு
குசல குமாரி கட்டுரை நைஸ் வாசு சார்.. என் தாத்தாவிற்கு அவரை மிகப் பிடிக்கும் என நினைக்கிறேன்//
உங்களுக்கும் குசலகுமாரிக்கும் ஒரே வயசு இருக்கும் போது எப்படி இங்கே உங்கள் தாத்தா வந்தார்?:)
சரி! சரி! நமக்குள் கல்ஸ்,கலை சார் செல்லச் சண்டை வேண்டாம்.:) என் வயதை எப்ப்போதும் நான் சொல்ல ரெடி. சரியாக 54.
//சொல்லத் தெரியவில்லை
உள்ளத்தில் உள்ளதை
தெள்ளத் தெளிவாய்த்
சொல்லத் தெரியவில்லை// வாசு.. மூணாம்பாகத்துல இந்தப் பாட் போட்டாச் போட்டாச்னு நினைக்கிறேன்..( நீங்க மூணாம்பாகம் முழுசாப் படிக்கலை தானே!)//
அத்தனை பாகங்களையும் ஒரு எழுத்து விடாமல் படித்தாயிற்று. மறதியால் திரும்ப வந்திருக்கும். ஓகேவா?:)
அப்புறன் நீங்கள் மறந்து விட்ட விஜயநிர்மலா (கண்ணுக்குத் தெரியாத) பற்றி பக்கம் பக்கமாக தகவல் தந்து விட்டேன். அந்தப் பாடலையும் சேர்த்துத்தான். இப்போது நீங்கள் கேட்ட அதே கேள்வி உங்களுக்கு. ஐ...பழி வாங்கியாச்சு. ஜாலி.:)
அனைவர் பதிவுகளையும் படித்து அத்தனை பேரையும் பாராட்டி உற்சாகப் படுத்தியதற்கு நன்றி.
இருந்தாலும் சந்திக்காமல் அவாய்ட் பண்ணியதில் கோபம் தீரவில்லை. மன்னிப்பதாக இல்லை.:)
மது அண்ணா!
தங்கள் பதிவைக் கண்டு மிக்க சந்தோஷமடைந்தோம். அப்பாடி! எவ்வளவு நாட்கள் ஆயிற்று? நீங்கள் இல்லாமல் இந்தத் திரி வாடிப் போய் இருப்பது உண்மை. நிச்சயம் இறைவன் அருளால் தாங்கள் நல்ல உடல்நலம் திரும்பப் பெற்று உங்களுக்கே உரித்தான தனித் தன்மையுடன் கலக்குவீர்கள். நீங்கள் இல்லாமல் எனக்கு ஒரு கை உடைந்த மாதிரி இருக்கிறது. தங்களுடைய அன்பான பாராட்டிற்கு என் தலை சாய்க்கிறேன்.
உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். தங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் போன் செய்யுங்கள். உங்கள் பதிவுகளுக்காக நாங்கள் எப்போதும் ஆவலுடன் வெயிட்டிங்.
குமார் சார்,
ஆவணப் பொக்கிஷமாக எங்களுக்குக் கிடைத்திருக்கிறீர்கள். கிடைத்தற்கரிய விளம்பரங்களை பதிவிட்டு எங்களை திக்குமுக்காடச் செய்கிறீர்கள். ஒவ்வொரு விளம்பரமாகத் தேடிக் கண்டுபிடித்து ஸ்கேன் செய்து போடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதுவும் போட்டோ புக்கெட், டைனி பிக்சர்ஸ் இதிலெல்லாம் விளம்பரங்களை அப்லோட் செய்ய நீண்ட நேரம் பிடிக்கும். அது கேட்கும் வார்த்தைகளை வேறு பார்த்து பார்த்து டைப் செய்ய வேண்டும்.
டைப் அடித்து கட்டுரை பதிவிடுவதை விட இது கடினமான வேலை என்ற அனுபவத்தில் சொல்கிறேன். பம்மலாருக்குப் பிறகு அற்புதமான ஆவணங்களை எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் பதிவிட்டு திரியை
மேலும் வளப்படுத்துவதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
உங்கள் உழைப்பு போற்றி வணங்கத்தக்கது.
ரவி சார்!
தங்கள் மனமுவந்த பாராட்டுதல்களுக்கு என் பணிவான நன்றிகள். மது அண்ணா கேட்டு நீங்கள் பதித்த 'சரவணன் சொன்னான்... சங்கரன் கேட்டான்' என்ற 'ஒருவனுக்கு ஒருத்தி' படப் பாடல் தினமும் நடைப் பயிற்சியின் போது நான் கேட்டு மகிழும் பாடல். அப்பாடலைக் கேட்ட மது அண்ணாவிற்கும், பதித்த உங்களுக்கும் ஸ்பெஷல் நன்றிகள்.
சரி 'ஒருவனுக்கு ஒருத்தி' (இயக்கம் ரா.சங்கரன்) படத்தின் கதையைத் தழுவி நடிகர் திலகம் நடித்த படம் ஒன்று பிறகு வந்தது. அது என்ன படம் தெரியுமா?
ராகவேந்திரன் சார். ப்ளீஸ். மூச்.
சின்னா!
வெல்டன். அது மாலதியேதான். கலக்கிட்டீங்க. ஆமா! 'உய்ய உய்ய உய்ய' ராஜாவின் அமர்க்களமான மியூசிக் கேட்டாச்சா? 'அழகு ஆயிரம்' படிச்சாச்சா?
'நல் பாட் வாசு சார்' என்று தப்பிக்கக் கூடாது.:)
அந்தப் பாடலைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை எழுதுங்கள். சுவைக்கக் காத்திருக்கிறேன்.
அந்தப் பாடலைப் பற்றி மற்றவர்கள் கருத்தை ரொம்ப எதிர்பார்த்தேன். கொஞ்சம் ஏமாற்றம்தான். கொஞ்சமல்ல... நிறையவே.:( அந்தப் பாடலுக்கு, அந்த இசைக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரமே வேறு.
சிவாஜி செந்தில் சார்,
அருமையான அமர்க்களம். உங்களுடைய ஆங்கிலப் படங்களின் நுண்ணறிவை நான் அறிவேன். குறிப்பாக பாண்ட் படங்களில் உங்களுக்கிருக்கும் ஆர்வம் பற்றி ரொம்ப நாட்களாகவே எனக்குத் தெரியும். தங்களுடைய 'மாற்றார் தோட்டத்து மெல்லிசையும் மதுரமே' அலசல்களை அள்ளிப் பருகக் காத்திருக்கிறோம் அனைவரும். 'மாற்றான்' தோட்டத்து என்ற ஒருமை விளி கூட மற்றவரைப் புண்படுத்தும் என்று எண்ணி'மாற்றார்' என்று அதை மாற்றிக் காட்டியிருப்பது ஒன்றே போதும் உங்களின் பண்பான குணத்தை உணர்த்த. வாழ்த்துக்கள் சார்.
குமார் சார் - மிக்க நன்றி . கருக்குள் கரு இன்னும் முடியவில்லை - 3வது பக்கம் தொடங்க இருக்கிறேன் - இது நீண்ட பாகமாக இருக்காது . இந்த மூன்றாம் பாகத்தில் மச்சினி உறவு :-dதவிர மற்ற எல்லோருமே ஓரளவுக்கு இடம் பெறுவார்கள் . ஓரிரு நாட்கள் மற்றவர்கள் இங்கு போடும் பதிவுகளை படித்து திறமையை வளர்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன் .
உங்கள் ஆவணங்களைப் பார்க்கும் பொழுது - இப்படிப்பட்ட படங்கள் கூட , அதை தயாரித்தவர்கள் கூட ஆச்சிரியப்படும் வகையில் வந்திருக்கின்றனவா என்று வியக்க வைக்கிறது - இந்த படங்கள் உங்களுக்கு அடுத்த வகையில் வாசுவிற்கு மட்டுமே தெரிந்த உண்மை .
நன்றி மீண்டும் .
மாற்றார் தோ(கோ)ட்டத்து மெல்லிசையும் மதுரமே !
பகுதி 4 : தண்டர்பால் (1965) / starring Sean Connery as James Bond OO7!
Quote:
கோல்ட் பிங்கரையும் மீறிய இமாலய வெற்றி கண்ட ஜேம்ஸ் பாண்ட் படங்களின் மகுடம் தண்டர்பால்
இதில் வரும் கடல் நீரடிக் காட்சியமைப்புகள் இன்றுவரை எந்தப் படத்தினாலும் முறியடிக்கப் படாத சாதனையே
எதிரிகளிடமிருந்து டக்கென்று தப்பிச் செல்லும் ஜெட் பேக் புதுமையே! ஷான் கானரியின் ஜேம்ஸ் பாண்ட் ஆடையலங்காரங்கள் அமர்க்களம் !!Underwater action sequences are incomparable even today, winning an Oscar for meticulous underwater photography!!
இப்படத்திற்கு பின்னரே தமிழில் மாடர்ன் தியேடர்ஸ் ஜெய் ஷங்கர் இணைவில் ஜேம்ஸ் பாண்ட் பாணி படங்களை இசையமைப்பாளர்கள் வேதா மற்றும் டி ஆர் பாப்பா துணையுடன் ஜான் பேரி சாயலில் தமிழ் தீம் இசையுடன் வெளிக் கொணர்ந்தனர் !!
தண்டர்பாலின் டைட்டில் பாடலும் (Tom Jones / John Barry) படத்தினூடே ஆங்காங்கே நைட் கிளப்புகளில் வரும் இசையும் நடனத்துடன் சிறு பாடல்களும் ரசித்துத் தாளமிட வைக்கும் !!
Enjoy the theme music sprinkled with the Jet Pack escape!
https://www.youtube.com/watch?v=uuTUTbXPf48
He always runs .... while others walk!...and
He strikes like Thunderball!!....enjoy the lyrics too!!
https://www.youtube.com/watch?v=sT0x7QiJI1g
May I cut in...? You should have told me that your wife is here!!
https://www.youtube.com/watch?v=vgTHZhNqOAc
Mr Kiss Kiss Bang Bang sung by Shirley Bassey!!
https://www.youtube.com/watch?v=j4m9ptFefwo
திரி மீண்டும் களை கட்டிவிட்டது.
வாசு ஜி, ரவி அருமையான பாடல்கள் தொடரட்டும்
சி.க. வருக வருக
எனக்கும் பாண்ட் மூவீஸ் மிகவும் பிடிக்கும். குறிப்பாக ரோஜர் மூர் படங்கள்
இப்பொழுது பாண்ட் படங்களை தழுவி வந்த ஸ்பை படங்களை பார்த்துகொண்டிருக்கிறேன்
ஹாய் குட்மார்னிங் ஆல்..
ரவி.. ஸாரி.. என்றெல்லாம் சொல்ல மாட்டேன்..ச்சும்மா கொஞ்சம் எழுதிப் பார்த்தேன்.. நீங்கள் போட்ட இடுகை உங்களுக்கே நினைவிருக்கிறதா என்று ( கண்ணா நல்லா சமாளிக்கறடா நீ!)
மூன்றாம் பாகம் எழுதப் போறீங்களா.. அன்பரே கொஞ்சம் இடைவெளி விட்டு அதை ம.ம. கா ஐந்தாம் பாகம் ஆரம்பிக்கும் போது ( அதாவது கல் நாயக் அல்லது நீர் – இருவருக்குள்ளும் தான் போட்டியே) தொடங்கவும்.. இப்போதைக்கு வேறு தலைப்பு எடுத்து தொடராக எழுதும் படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. (தமிழில் சொல்வதென்றால் – ஓய்.. கண்டியூவஸா ஸேம் டாபிக் என்று எழுதினீர்கள் என்றால் – அடுத்த டாபிக் கணவன் மனைவி, காதலன் காதலி என்று எழுதி என்,வாசு சப்ஜெக்டில் கை வைப்பீர் (!) அண்ட் அண்ணன் தங்கையையே அம்மா அப்பாவில் நிறையக் கொண்டு வந்துவிட்டீர் – பின் எதுவாக எழுதப் போகிறீர்கள் என்பதும் சில காலத்திற்குசஸ்பென்ஸாக இருக்கட்டுமே..( எழுதுவதென்றால் எழுதுங்கள்..இது என் எண்ணம் மட்டுமே..மன்னிக்க)
வாசு.. அழகு ஆயிரம் உலகம் முழுவதும் பாடல்கேட்டதில்லை.. ஹோம்வொர்க்ல சாய்ஸ்.லாம் விடப்படாது போல…! பட் இப்ப கேட்டேன் பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்...
உல்லாசப் பறவைகள் படம் பார்த்ததில்லை..சினிப்ரியாவில் ரிலீஸ் ஆகி ஸ்ரீதேவியில் மறு ரிலீஸ் ஆன நினைவு.. ஜெர்மனியில் செந்தேன் மலரே பாட் அடிக்கடி கேட்டிருக்கிறேன்..சிலோனிலும் வரும்..
//'இளமையின் சிலிர்ப்புகள்...புதுமையின் அழைப்புகள் எங்கும் 'மாம மியா மாம மியா' என்று மீண்டும் நம் மீது தேன் கொட்டும். // பாட்டு நல்லாத் தான் இருக்கிறது..என்ன.. ரத்தியை லாங்க் ஷாட்டில் காட்டுவது, பாடலுக்கு வாயசைக்காதது என்பது ஒரு குறையே..
இந்த இசைக்கருவிகள் எல்லாம் – சி செ சொல்வதுபோல- எனக்குஅவ்வளவாகச் சொல்லத் தெரியாது..இசையை ரசிக்க மட்டுமே தெரியும்..வெகு அழகாக அலசி இருக்கிறீர்கள்.. நல்ல பாட் வாசு சார் ! (கலர் எழுத்துக்களில் மஞ்சள் (அல்லதுஆரஞ்ச்?) எழுத்து கண்ணைச் சுருக்கிப் பார்க்க வைத்து படிக்க கஷ்டமாக இருந்தது.. மஞ்சள் தாவணி பார்ப்பது சுலபம் ஒருகாலத்தில்! இப்போ எழுத்து கொஞ்சம் கஷ்டம்..எனில் வேறு கலரில் இடுங்கள்..
பாராமல் பார்த்த நெஞ்சம் சம் ச சம் சம்.. என ஒருபாட் இப்பக் கேட்டேன்.. நடிக நடிகையர் தெரியவில்லை பட் பாட் ஓகே..1
https://youtu.be/sxItiuEa9MQ?list=RDDN9GdmNjVbc
சி.செ. தண்டர் பால் கொஞ்சம் சுமார் தான்..எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது..பார்க்கவிட்டுப் போன பாண்ட் என லிஸ்ட் போட்டு வெகு ஆவலுடன் துபாயில் வீடியோ வாங்கிப் பார்த்தது..ம்ம் அப்புறம் விரிவாய் எழுதறேன்.
அப்புறம் வாரேன்..:)
*
Courtesy: Tamil Hindu
காற்றில் கலந்த இசை 13: எழுபதுகளின் இருவர்- எம்.எஸ்.வி. எஸ்.பி.பி.
எம்.எஸ்.வி. மறைவுச் செய்தி வெளியான சில மணிநேரத்தில் எஸ்.பி.பி.யின் பேஸ்புக் பக்கத்தில் வெளியான எம்.எஸ்.வி.யின் புகைப்படம் அனைவரையும் அதிரவைத்தது. மெலிந்த உடல், நரைத்த தாடியுடன் முதுமையின் கொடுங்கரம் அவரைப் பற்றியிருந்ததைப் பார்த்த பலரும் கலங்கியிருப்பார்கள்.
அவர் அருகே லேசாகச் சிரித்தவாறு அமர்ந்திருந்தார் எஸ்.பி.பி. ஆனால், தன்னை உருவாக்கிய இசை மேதையின் உடல்நிலை அப்படி ஆனதை நினைத்து உள்ளுக்குள் கதறிக்கொண்டு இருந்திருப்பார். ஏனெனில், அவரது இசைப்பயணத்தின் வழிகாட்டியும் வழித்துணையும் எம்.எஸ்.வி.தான்!
பகல் நேரத்துப் பாடல்கள்
சில பாடல்கள் காலத்துடன் இறுகப் பிணைக்கப் பட்டவை. அந்தப் பாடல்களைக் கேட்கும்போது குறிப்பிட்ட அந்தக் காலத்துக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும் தன்மை கொண்டவை. இளையராஜா காலம் தொடங்குவதற்கு முன்னதான காலம், அவரது வருகைக்குப் பிறகான சில ஆண்டு காலம் ஆகிய காலகட்டத்தில் வெளியான எம்.எஸ்.வி.யின் பாடல்கள் அந்த வகைமையில் அடங்கக்கூடியவை. பாலசந்தரின் பரீட்சார்த்தப் படங்கள் வெளியான காலகட்டமும், கமல், ரஜினி போன்ற நடிகர்கள் அறிமுகமாகியிருந்த காலகட்டமும் இதில் அடக்கம்.
‘வால் பேப்பர்’ ஒட்டப்பட்ட அட்டைச் சுவர்கள் கொண்ட அறைகள், அகன்ற வானத்தை வெறித்து நிற்கும் பாறைகள் நிறைந்த நிலப்பரப்பு போன்ற இடங்களில், பெரும்பாலும் பகல் நேரங்களில் படமாக்கப்பட்ட இந்தப் பாடல்கள் தரும் உணர்வு மிக வித்தியாசமானது. 70-களின் மத்திய தரக் குடும்பங்களின் வாழ்க்கை, தாம்பத்ய உறவின் சிக்கல்கள் இக்காலகட்டத்தின் பாடல்களில் பொதிந்திருக்கும். இப்பாடல்களைக் கேட்கும்போது பகல் நேரத்தின் வெம்மையையும், பாடல் தரும் ஆறுதல் நிழலையும் உணர முடியும்.
அந்தக் காலகட்டத்தில் பிற பாடகர்களும் பாடகிகளும் எம்.எஸ்.வி.யின் இசையில் முக்கியமான பாடல்களைப் பாடியிருந் தாலும், எஸ்.பி.பி.யே பிற இசையமைப் பாளர்களின் இசையில் பாடி யிருந்தாலும் ‘எம்.எஸ்.வி.-எஸ்.பி.பி.’ ஜோடி தந்த பாடல்கள் தனிச்சுவை கொண்டவை. இளம் குரலுடன் தனது பயணத்தைத் தொடங்கிய எஸ்.பி.பி.யின் குரலில் கம்பீரமும் பாந்தமும் வெளிப்படுவதற்கு எம்.எஸ்.வி.யின் பாடல்கள் சிறந்த களமாக அமைந்தன.
கண்ணனை நினைக்காத (சீர் வரிசை), பொன்னென்றும் பூவென்றும் (நிலவே நீ சாட்சி) நிலவே நீ சாட்சி (நிலவே நீ சாட்சி), ராதா காதல் வராதா (நான் அவனில்லை), மங்கையரில் மகராணி (அவளுக்கென்று ஒரு மனம்), ஊர்கோலம் போகின்ற கிளிக்கூட்டம் எல்லாம் (அக்கரைப் பச்சை), நான் என்றால் அது அவளும் நானும் (சூரியகாந்தி), அன்பு வந்தது என்னை ஆள வந்தது (சுடரும் சூறாவளியும்), தென்றலுக்கு என்றும் வயது (பயணம்), ஓடம் அது ஓடும் (கண்மணி ராஜா), காதல் விளையாட (கண்மணி ராஜா), கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் (எவளோ ஒரு பெண்ணாம்), மாதமோ ஆவணி (உத்தரவின்றி உள்ளே வா), மார்கழிப் பனியில் (முத்தான முத்தல்லவோ), தொடங்கும் தொடரும் புது உறவு (முடிசூடா மன்னன்), மான் கண்ட சொர்க்கங்கள் (47 நாட்கள்) என்று முடிவின்றி நீளும் பட்டியல் அவர்களுடையது.
பாலசந்தர்- எம்.எஸ்.வி.- எஸ்.பி.பி.
இக்கூட்டணியில் கணிசமான எண்ணிக்கையிலான பாடல்கள் கே. பாலசந்தர் இயக்கிய படங்களில் இடம்பெற்றவை. ‘நிழல் நிஜமாகிறது’ படத்தின் பாடல்களில்தான் எஸ்.பி.பி.யின் குரலில் எத்தனை விதமான பாவங்கள். கண்ணதாசனின் பங்களிப்பு இக்கூட்டணியை மேலும் செழிக்கச் செய்தது. ‘கம்பன் ஏமாந்தான்’ பாடலில், ‘… அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல… அட… நானும் ஏமாந்தேன்’ எனும் வரியில் சுய இரக்கம், சுய எள்ளல் கலந்த ஒரு சின்னச் சிரிப்பு அவர் குரலில் இருக்கும். அதேபோல், ’இலக்கணம் மாறுதோ’ பாடலில், ‘தெய்வங்கள் எல்லாம் உனக்காகப் பாடும்… பாடாமல் போனால் எது தெய்வமாகும்’ எனும் வரியில் எஸ்.பி.பி.யின் குரலில் இருக்கும் பாந்தமும் பரிவும் உருக்கிவிடும்.
உலுக்கும் வயலின் இசையுடன் தொடங்கும் ‘வான் நிலா நிலா அல்ல’ (பட்டினப் பிரவேசம்) பாடல் இந்த ஜோடியின் இன்னொரு சாதனை. ‘இன்பம் கட்டிலா.. அவள் தேகக் கட்டிலா’ எனும் வரியில் எஸ்.பி.பி.யின் குரலில் ஏக்கம், இயலாமை, தத்துவ மனம் வெளிப்படும். இரண்டு சரணங்களின் இறுதி வரிகளை வயலினால் பிரதியெடுக்கும் எம்.எஸ்.வி.யின் கற்பனை அற்புதமானது.
‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் ‘கடவுள் அமைத்து வைத்த மேடை’ மிகப் பெரிய வெற்றியடைந்த பரிசோதனை முயற்சி. ‘அவர்கள்’ படத்தின் ‘ஜூனியர்’ பாடலும் இதில் அடங்கும். ‘மிமிக்ரி’ கலையின் சாத்தியங்களைப் பாடலுக்கு நடுவே புகுத்துவதற்கு அற்புதத் திறன் மட்டுமல்ல, சோதனை முயற்சிக்கான துணிச்சலும் வேண்டும். அது எம்.எஸ்.வி.யிடம் ஏராளமாக இருந்தது.
என்று நினைத்தாலும் இனிக்கும்!
இளையராஜாவின் வருகைக்குப் பின்னர் வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படம் விஸ்வநாதனின் விஸ்வரூபத்தை ரசிகர்களுக்குக் காட்டியது. டைட்டிலிலேயே ‘இது ஒரு தேனிசை மழை’ என்று எழுதியிருப்பார் பாலசந்தர்.
‘எங்கேயும் எப்போதும்’, ‘இனிமை நிறைந்த’ போன்ற பாடல்களில் துள்ளும் உற்சாகம், ‘யாதும் ஊரே’ பாடலில் சுற்றுலாப் பயணியின் குதூகலம், ‘பாரதி கண்ணம்மா’, ‘நினைத்தாலே இனிக்கும்’ பாடல்களில் பொங்கும் காதல் உணர்வு என்று இசையின் வீச்சை எல்லைகளுக்கு அப்பால் கொண்டுசென்றிருப்பார் எம்.எஸ்.வி. அவரது கற்பனைக்கும் உழைப்புக்கும் உயிர் கொடுத்திருப்பார் எஸ்.பி.பி.
கண்ணதாசன் மறையும் வரை- 1980-களின் தொடக்க காலம் வரை எம்.எஸ்.வி.யின் இசைப் பயணத்தில் தொய்வு ஏற்படவில்லை. அதற்குப் பின்னரும் அவரால், ஹிட் பாடல்களைத் தர முடிந்தது. இளையராஜாவுடன் இணைந்து ’மெல்லத் திறந்தது கதவு’ படத்தில் அவர் தந்த பாடல்கள் மறக்க முடியாதவை. குறிப்பாக, ‘தேடும் கண் பாவை தவிக்க’ பாடல் கம்போஸ் செய்யப்பட்டபோது, அதைப் பாடுவது மிகச் சிரமம் என்று நினைத்ததாக எஸ்.பி.பி. குறிப்பிட்டிருக்கிறார். ஒரு கஜல் பாடலுக்குரிய அம்சங்களுடன் மிக மென்மையாக நகரும் அப்பாடல், காலத்தை வெல்லும் கலையாற்றலின் எடுத்துக்காட்டு!
Courtesy: Tamil Hindu
எம்.எஸ்.விக்கு எப்படி இரங்கல் தெரிவிப்பது?
எம்.எஸ்.வி., கண்ணதாசன், ராமமூர்த்தி
மனதில் தோன்றியதை அப்படியே பேசிவிடும் வெகு சிலரில் விஜயகாந்தும் ஒருவர். அதனாலேயே கிண்டலுக்கும் உள்ளாகுபவர் அவர். எம்.எஸ்.வி.யின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது ஊடகங்களுக்குப் பேட்டியளித்த விஜயகாந்த் ‘எனக்கு இரங்கல் தெரிவிக்க மனம் வரவில்லை’ என்றார். பெரும்பாலானோரின் உணர்வும் அதுதான். நம்முடன் எப்போதும் இருப்பவர் இவர் என்ற உணர்வு ஒரு சிலரிடம் மட்டும்தான் ஏற்படும்; அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் எம்.எஸ்.வி. அவருடைய இறப்பைப் பற்றிச் சொல்லப்போனால் நம் கிராமத்து வழக்கில்தான் சொல்ல வேண்டும்:
‘கல்யாணச் சாவு’. இப்படிப்பட்ட மரணங்களின்போது ஒரு பெருவாழ்வு நினைவுகூரப்பட்டு ‘ஆகா, எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்’ என்ற பெருமகிழ்ச்சிதான் நம்மிடம் வெளிப்படும். எம்.எஸ்.வி காலமானதைக் கேள்விப்பட்டுப் பலரும் துயரத்தில் ஆழ்ந்துபோய் அவருடைய பாடல்களைக் கேட்க ஆரம்பித்துக் கடைசியில் சந்தோஷ உணர்வை, பரவச உணர்வை அடைந்ததுதான் உண்மை.
யோசித்துப் பார்த்தால் ஒரு விஷயம் புரிகிறது. நாம் கண்ணதாசனைக் கொண்டாடியிருக்கிறோம், டி.எம்.எஸ், பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ் போன்றோரைக் கொண்டாடியிருக்கிறோம். ஆனால், எம்.எஸ்.வி.யை அந்த அளவுக்குக் கொண்டாடவில்லை.
எம்.எஸ்.வி. இசையமைத்த எம்.ஜி.ஆர்., சிவாஜி பாடல்களைக்கூட எம்.எஸ்.வி-யின் பாடல்களாகக் கருதாமல் எம்.ஜி.ஆர்., சிவாஜி பாடல்களாகக் கருதிதான் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். தனது கலையின் பின்னால் தன்னை மறைத்துக்கொண்டவர் எம்.எஸ்.வி., அதனால்தான் நாம் எம்.எஸ்.வியின் பாடல்களில் கண்ணதாசன், டி.எம்.எஸ், பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றோரைக் காண்கிறோமேயொழிய எம்.எஸ்.வியைக் காண்பதில்லை.
ஆக, கண்ணதாசனின் அற்புதமான வரிகள், டி.எம்.எஸ்., பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் ஈடிணையற்ற குரல்கள், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோரின் உத்வேகம், சோகம் போன்ற எல்லாவற்றுக்கும் பின்னால் நின்று களம் அமைத்துக்கொடுத்து அவர்களை முன்னிலைப்படுத்தியதுதான் எம்.எஸ்.வியின் இசை. ‘நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்’ என்று எம்.ஜி.ஆர். நீதியின் சாட்டையை வீசும்போது நாம் எம்.எஸ்.வி.யையா நினைத்துப்பார்க்கிறோம்? எம்.ஜி.ஆரைத்தானே நினைத்துப் புல்லரிக்கிறோம். ‘நான் ஆணையிட்டால்’ என்ற டி.எம்.எஸ்ஸின் குரலைப் பின்தொடரும் ஏற்றமிகு கொம்பு சத்தம்தான் தமிழ் வாழ்வில் எம்.ஜி.ஆரின் இடம் எது என்பதற்கு அழுத்தம் திருத்தமாகக் கட்டியம் கூறியது.
இரட்டை இசையமைப்பாளர்கள்
எம்.எஸ்.வி-யைப் பற்றிப் பேசும்போது அங்கே கண்ணதாசன் இருப்பார். கண்ணதாசனைப் பற்றிப் பேசும்போது எம்.எஸ்.வி. இருப்பார். ‘இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்’ என்ற பாடல் வரிகளைக் கேட்கும்போதெல்லாம் பிரமிப்பாக இருக்கும். அதிலும் ‘மன்றம்’ என்ற சொல்லின் பயன்பாடு அற்புதமாக இருக்கும். சாதாரணமாகச் சொல்லும்போது கவித்துவமற்ற, பண்டிதத்தன்மை கொண்ட ஒரு சொல் அது.
ஆனால், எம்.எஸ்.வியின் மெட்டுக்குள் நுழையும்போது அது எளிமையான, அழகான சொல்லாக மாறிவிடுகிறது. இவ்வளவு எளிமையான சொற்கள், அதிக கனமில்லாத சொற்கள், அழகான சொற்கள் எப்படி இவ்வளவு இயல்பாகப் பொருந்தி, ஓடிவருகின்றன என்ற வியப்பு ஏற்படும். யோசித்துப்பார்த்தால் ஒரு உண்மை தெரியும்.
அந்த மெட்டின் இயல்பே அதுதான். வேறு எப்படியும் எழுதிவிட முடியாது. இது கண்ணதாசனைக் குறைத்துச் சொல்வதில்லை. கண்ணதாசனிடம் அற்புதமான வரிகளை வாங்கும் வித்தை எம்.எஸ்.வி.யின் மெட்டுக்குத் தெரிந்திருக்கிறது; எம்.எஸ்.வியின் அற்புதமான மெட்டுக்குள் எப்படிப் பாய்வதென்று கண்ணதாசனின் வரிகளுக்குத் தெரிந்திருக்கிறது. அப்படிப்பட்ட பரஸ்பர உறவு அது.
திரைப்பட இசையைப் பொறுத்தவரை பிரதானமானவர்களாக இசையமைப்பாளர்களையும், அவர்களைச் சார்ந்திருக்கும் இரண்டாம் நிலையினராகப் பாடலாசிரியர்களையும் கருதுவதுதான் வழக்கம். ஆனால், இங்கு ஒரு இசையமைப்பாளர் காலம் முழுவதும் ஒரு பாடலாசிரியரைப் பிரதானப்படுத்தியபடி அவரைத் தூக்கிவைத்துக் கொண்டாடியிருக்கிறாரே, என்ன உறவு அது, என்ன மனிதர் எம்.எஸ்.வி!
அதனால்தான், கண்ணதாசனின் மரணம் தந்த அதிர்ச்சியிலிருந்து எம்.எஸ்.வியும் அவரது இசையும் பெரும்பாலும் மீளவே இல்லை. விஸ்வநாதன்-ராமமூர்த்தி மட்டுமல்ல, விஸ்வநாதன் கண்ணதாசனும் இரட்டை இசையமைப்பாளர்கள்தான். தமிழர்களின் ரத்தத்தில் மயக்கத்தை, உத்வேகத்தை, காதலை, துயரத்தை ஏற்றத் தெரிந்த இரட்டை இசைக் கலைஞர்கள் அவர்கள்.
எத்தனையெத்தனை பாடல்கள்! ‘யார் அந்த நிலவு’ (சாந்தி) பாடலையே எடுத்துக்கொள்வோமே! விசித்திரமான ஒரு உணர்வைக் கொடுக்கும் பாடல். அந்தப் படத்தைப் பார்க்காதவர்களுக்கு அந்தப் பாடல் மௌனியின் கதையைப் படிப்பதுபோல் ஒரு உணர்வை ஏற்படுத்தும். தூரத்தில் ஒலிக்கும் ஒரு பாடலைப் போல அந்தப் பாடலை உருவாக்கியிருப்பார் எம்.எஸ்.வி., அப்படியே பாடியிருப்பார் டி.எம்.எஸ்., அப்படியே எழுதியிருப்பார் கண்ணதாசன். ‘யார் அவள், எனக்கும் அவளுக்கும் என்ன உறவு, இது கனவா நனவா’ என்ற இனம்புரியாத உணர்வுக்கு உயிரூட்டிப் புகைமூட்டமான வரிகளாக எழுதியிருப்பார் கண்ணதாசன்:
இப்படி அவர்களுடைய உறவால் விளைந்த பாடல்கள் ஏராளம். அவர்களுடைய உறவு நம் வாழ்க்கையின் அனைத்து தருணங்களுக்குமான பாடல்களை உருவாக்கியிருக்கிறது. கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரிப் பருவத்தின் இறுதி நாள் பிரிவுக்கு ‘பசுமை நிறைந்த நினைவு’களை நாடுவது இன்று வரை நடக்கிறது.
காதலி/காதலன் பிரிவில் தவிக்கும் ஒருவருக்கு ‘நினைக்கத் தெரிந்த மனமே’ போன்று ஆறுதல் தருவது ஏது? ‘உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே’ என்ற பாடல் போல் உழைப்பாளிகளுக்கு உத்வேகம் அளிக்கும் பாடல்கள் மிகவும் குறைவு. இன்றும் மணப்பெண்களைக் கிண்டல் செய்ய ‘வாராயோ தோழி’ பயன்படுகிறது.
எம்.எஸ்.வி.க்காக எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரை ஒன்றில் இப்படி எழுதப்பட்டிருந்தது: ‘மயக்கமா கலக்கமா’ என்ற பாடல் ஒரு மனிதரைத் தற்கொலையிலிருந்து தடுத்துக்கொண்டிருக்கும் வரை, ‘காலங்களில் அவள் வசந்தம்’ என்ற பாடல் இன்னும் இன்னும் காதல் கதைகளைப் பூக்கச்செய்யும்வரை எம்.எஸ்.வி. வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்’. இந்த வரிகள் எம்.எஸ்.வி., கண்ணதாசன் இருவருக்கும் பொருந்துகின்றன என்பதைப் பார்க்கும்போது நாம் இவ்வளவு காலம் கண்ணதாசனைக் கொண்டாடியதில் மறைமுகமாக எம்.எஸ்.வி.யையும் கொண்டாடியிருக்கிறோம் என்ற உண்மை நமக்குப் புரிபடும்.
கண்ணதாசன், டி.எம்.எஸ்., பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோர் மட்டுமல்ல நான், நீங்கள் என்று அனைவரும் சேர்ந்த மொத்தம்தான் எம்.எஸ்.வி. திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் நாம் வாழும் காலத்துக்கே பின்னணி இசை கொடுத்த அந்த மகத்தான கலைஞனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது அபத்தமான விஷயமாக விஜயகாந்துக்குத் தோன்றியதில் ஆச்சரியமே இல்லை!
Courtesy: Tamil Hindu
எம்.எஸ்.வி.- தமிழர்களின் கிலுகிலுப்பை!
இலங்கை வானொலியில் மயில்வாகனன் சர்வானந்தாவோ, ராஜேஸ்வரி சண்முகமோ ‘பொங்கும் பூம்புனல்’ என்று சொல்லும்போது கடிகாரம் எட்டு மணியைக் காட்டும். அப்படியொரு சர்க்கரைப் பொழுதில்தான் எம்.எஸ். விஸ்வநாதன் என் செவியில் நுழைந்து மனசுக்குள் ரங்கராட்டினம் சுழற்றினார்.
‘பூ மாலையில் ஓர் மல்லிகை/ இங்கு நான்தான் தேன் என்றது’ என்கிற பாடல் காதுகளுக்கு தந்த தித்திப்பைப் போன்று எந்தப் பழங்களும் என் வாய்க்குத் தரவே இல்லை.
நின்று நிதானித்துப் பார்க்கும்போது - இன்று நாற்பதைத் தாண்டியிருக்கும் தமிழர்களின் வாழ்க்கைப் பொழுதுகளில் ஒரு சென்டி மீட்டர் இசை மழையையாவது பொழிந்திருப்பார் எம்.எஸ்.வி.
இரவு ஏழரை மணிக்கு திருச்சி வானொலியில் ஒலிப்பரப்பாகும் ‘வயலும் வாழ்வும்’ நிகழ்ச்சியில்
‘தாய் வரம் தந்த வரம்… தாவரம்’ என்கிற பாடல் கசியும். விவசாயப் பின்னணியைச் சேர்ந்த எங்களுக்கெல்லாம் விஸ்வநாதன் இவ்வாறாகத்தான் அறிமுகமாகியிருந்தார்.
காதல், ஊடல், திருமணம், தாம்பத்யம், பிறப்பு, வறுமை, உயர்வு, நட்பு... என வாழ்வின் எல்லா சந்து பொந்துகளிலும் புகுந்து புறப்பட்டிருக்கிறது அவருடைய இசை. தொலைக்காட்சி, கணினி போன்ற நவீன அறிவியல் சாதனங்களின் புழக்கமற்ற அப்போது ரேடியோதான் சந்தோஷ வாசல். அந்த வாசல் வழி வழிந்தோடிய விஸ்வநாதனின் விரல் வித்தை தமிழர்களின் 50 ஆண்டு கால மகிழ்ச்சியின் நீளம்.
எம்.எஸ்.வியின் சாதனை என்பது தமிழ்த் திரையிசையின் பாதி வரலாறு. படத்தின் பெயர் தெரியாது; அந்தப் படத்தைப் பார்த்திருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. ஆனால், இது ‘எம்ஜிஆர் பாட்டு; இது சிவாஜி பாட்டு’ என்று சொல்லிவிட முடிகிற அளவுக்கு டி.எம்.எஸ்.ஸின் பக்கபலத்தோடு வித்தியாசம் காட்டியது எம்.எஸ்.வியின் இசை நுணுக்கம்.
ஒரு காலத்தில் மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி நீர் கடைமடை வரை பாய்ந்தோடியதைப் போல எல்லோருக்குமான இசையைத் தந்ததுதான் எம்.எஸ்.வி.யின் முதல் சாதனை.
அடுத்தது - அவர் போட்ட மெட்டுக்கள். சுயம்புவாக அவர் கொடுத்த பாடல்கள் அனைத்தும் வரலாற்றில் ‘கிளாஸிகல்’ ரகத்தில் சேர்ந்துவிடும். மாடர்ன் தியேட்டர்ஸ் ‘சுகம் எங்கே’ என்று ஒரு படம் தயாரித்தது. இசையமைப்பாளர்களாக ஒப்பந்தமான விஸ்வநாதன் - ராமமூர்த்தியிடம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் “இந்தி டியூன் கொடுத்தா பாட்டு போடுவீங்களா?” என்று கேட்டுள்ளார்.
“நாங்க சொந்தமாதான் டியூன் போடுவோம். விருப்பமிருந்தா எங்களை புக் பண்ணுங்க. இல்லேன்னா எங்களை விட்டுடுங்க” என்று கம்பீரமாகச் சொன்னவர் எம்எஸ்வி.
எங்கள் கிராமத்தில் தங்கராசு என்கிற ஒரு சிகைதிருத்துநர் இருந்தார். அவருடைய ‘சார்மினார்’ சலூன்தான் எங்களின் விடுமுறை விருப்பம். எம்.எஸ்.வி.யின் தீவிர ரசிகர். ஒரு பாடலில் அதன் வரிகளை மட்டும் பாட மாட்டார். பாடலின் ஆரம்பத்திலோ இடையிலோ கடைசியிலோ வரும் இசைக் கருவிகளின் ஜாலங்களையெல்லாம் அவர் உருட்டிவிடும்போது, நாங்கள் திக்குமுக்காடிப்போவோம்.
‘ஊட்டி வரை உறவு' படத்தில் பி.சுசீலா பாடியது 'தேடினேன் வந்தது' என்கிற பாடல். அதனை தங்கராசு,
'தேடினேன் வந்தது...
டின்டக்கு டின்டக்கு...
நாடினேன் தந்தது
டின்டக்கு டின்டக்கு'
என்று பாடியதை நினைத்துப்பார்க்கும்போது எம்.எஸ்.வியின் இசை சாம்ராஜ்யம் தங்கராசு வரை விரிந்திருந்தது தெரிகிறது.
‘அவளுக்கென்ன அழகிய முகம்' என்ற ‘சர்வர் சுந்தரம்' படப் பாடலை பாடும்போது பாடல் வரிகளுக்கு இடையே டிரிபிள் பாங்கோஸும், கிளாரிநெட்டும் சேர்ந்திசைக்கும்
‘பாபப்பப்பம் பாபபப பாபப்பப்பம்...
ன்ட்டாகு... ன்ட்டாகு... ன்ட்டாகு’ என்று தங்கராசுக்குள் எம்.எஸ்.வி. புகுந்து புறப்படுவார்.
‘பாகப் பிரிவினை' படத்தில் ‘தாழையாம் பூ முடிச்சு' பாடலின் இடையே ஒலிக்கும்
‘தந்தானே தானனன்னே... தானன்னே தானனன்னே... தானன்ன தானானே...'
என்கிற ஹம்மிங்கை தங்கராசு மூலம் எங்கள் கிராமத்துக் கீர்த்தனையாக்கியவர் எம்எஸ்வி.
‘சிவந்த மண்' படத்தில் ‘ஒரு ராஜா ராணியிடம்' என்கிற பாடலை தங்கராசு பாடிக்கொண்டே வருவார். இடையில்
‘டண்டரரானே டண்டரரானே... டண்டர டண்டர டண்டர டண்டரரா...' என்று முழங்கிவிட்டு
‘வெள்ளிய மேகம் துள்ளி எழுந்து அள்ளி வழங்கும் வெள்ளைப் பூவில்
புதுவிதமான சடுகுடு விளையாட்டு
விட்டுவிடாமல் கட்டியணைத்து
தொட்டது பாதி பட்டது பாதி
விதவிதமான ஜோடிகள் விளையாட்டு
இது காதலில் ஒரு ரகமோ இங்கு காதலர் அறிமுகமோ’ என்று சரணத்துக்குள் பாய்ந்துவிடுவார்.
ராகம், ஆலாபனை, அவரோகணம், தாளக்கட்டு, நோட்ஸ் எதுவுமே தெரியாது தங்கராசு என்கிற எங்கள் ஊர் எம்.எஸ்.வி.க்கு. தமிழகத்தில் எத்தனையோ தங்கராசுக்கள் இன்னமும் வாழ்கிறார்கள். இந்தச் சாதனையை எந்தத் திரையிசைக் கலைஞனும் இதுவரை நிகழ்த்தவே இல்லை.
சாஸ்திரிய இசை அரங்குகளில் பாடிக்கொண்டிருந்த பாலமுரளி கிருஷ்ணாவை ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த ‘கலைக்கோயில்’ படத்தில் ‘தங்க ரதம் வந்தது வீதியிலே…’ பாடலைப் பாட வைத்து, இன்னொரு உலகில் புகழ்பெற்ற மேதமையைத் தமிழ் திரையிசைக்குள் கொண்டுவந்தார் எம்.எஸ்.வி.
‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ஒரு பாடலில் உண்மையிலேயே ஓர் அபூர்வ ராகத்தைப் பயன்படுத்த நினைத்தார் எம்.எஸ்.வி. அந்த நேரத்தில் பாலமுரளி கிருஷ்ணா ‘மஹதி’ என்கிற பெயரில் ஒரு ராகத்தை உருவாக்கியிருந்தார். அந்த ராகத்தையும் வேறு சில ராகங்களையும் குழைத்து ஒரு ராகமாலிகையாக எம்.எஸ்.வி. கம்போஸ் செய்ததுதான் ‘அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம்’ பாடல்.
பந்துலு, பீம்சிங், ஸ்ரீதர், பாலசந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்று பல இயக்குநர்கள் தங்களின் பல்லக்கை வெற்றிகரமாக நகர்த்த சக்கரமாக இருந்தவர் எம்.எஸ்.வி. திரைப்படப் பாடல்களை இசையை உரித்துவிட்டுப் பார்த்தால் அதில் உள்ள தமிழ் சட்டென்று நம்மைக் கவர்ந்திருக்காது. கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம் போன்ற கவிஞர்களை நாம் கொண்டாட விஸ்வநாதன் ஒரு மூல காரணம்.
தமிழ்த் திரையிசையில் பல வடிவங்களில் இசையை வாரி வழங்கியவர் எம்.எஸ்.வி.
‘அன்புள்ள மான்விழியே/ஆசையில் ஓர் கடிதம்/ நான் எழுதுவதென்னவென்றால்/ உயிர்க்காதலில் ஓர் கவிதை’ என்று அஞ்சல் அட்டைக்கு இசைச் சிறகு முளைக்க வைப்பார்.
‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி/ புது சீர் பெறுவாள் வண்ணத் தேனருவி’ என்று கல்யாணப் பத்திரிகை வடிவில் அட்சதை தூவும் ஒரு பாடல். இந்தப் பாடலில் வரும் ‘தங்கள் நல்வரவை விரும்பும்/ ரகுராமன் ரகுராமன் ரகுரா…மன்’ என்கிற வரிகளின்போது யாருக்கும் தெரியாமல் கண்களைத் துடைத்துக்கொண்ட பல அண்ணன்களை நான் பார்த்திருக்கிறேன்.
‘வாராயோ தோழி வாராயோ’ என்று பல தமிழ் வீடுகளின் வாசலுக்கு மருமகள்களை வலது காலை எடுத்து வைத்து அழைத்து வந்திருக்கிறது எம்.எஸ்.வி-யின் இசை.
‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழிவண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விடிந்த கலையன்னமே
நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே’ என்று ‘பாசமலர்’ படத்தில் கண்ணதாசனுடன் இணைந்து எம்.எஸ்.வி தந்த இசை தாலாட்டும் தாலாட்டு பாடியவர்களும் காணாமல் போன இந்நாட்களில் தமிழர்களின் கிலுகிலுப்பையாகும்.
வாசு,
என்ன சொல்ல பாட்டைப் பற்றிச் சொல்லாமல் இருக்கலாமா..
//இந்தப் பாட்டிற்கு HTML ஒர்க்கெல்லாம் கிடையாது. பதிவுகள் கருப்பு வெள்ளையில்தான்// எனில் இந்த வரி தான் உங்கள் வயதைக் காட்டுகிறது..!
அந்தக் காலத்தில் ஹீரோவிற்கெல்லாம் கஷ்டமான வேலை..ஆ..ஊ என்றால் ஹீரோயினைத்தூக்கிக் கொள்வது போல் காட்டுவார்கள்..அதில் முகத்தில் சிருங்காரம் வேறு காட்ட வேண்டும்..என்ன சுவை என்னசுவை என நிர்மலாவைத் தூக்கியபடி பாடும் போது எப்படித் தான் கனத்தை முகத்தில்மறைத்தாரோ சிவகுமார்!
//விழி சிவந்தது
வாய் வெளுத்தது// வாயின் சிவப்பு விழியிலே மலர்க்கண் வெளுப்பு இதழிலே வரி நினைவில் வரவில்லையா.. மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ கார்குழலும் பாய் விரிக்கும் கண்சிவந்து வாய் வெளுக்கும்.. அதுவும் நினைவில்.வருகிறது
முழுக்க நனைந்து டூயட் பாடி முடித்த பிறகு சிவக்குமார் கோட் கழற்றி நிர்மலா நனையாமல் இருக்க அவருக்குப் போடுவது டைரக்டோரியல் டச்!
அந்தக்காலத்தில் கண்ணனும் கோபியரும் அதுவும் இந்த ப்படம் தானே..!
இருந்தாலும் பாடலில் மூழ்கி அழகாய் அலசி விலாவாரியாக எழுதி – எனக்கு வந்த இந்த மயக்கம் உங்களுக்கும் (எங்களுக்கும்) வரவேண்டும் என எழுதியதற்காக ஒரு குட்டிப் பரிசு (போட்டாச் இல்லை)
https://youtu.be/1UykRR6ZA_o
போனஸாக..
தாநூறு என்றாலோ சட்டெனவே கண்சிவந்து
தேனூறும் தெள்ளுதமிழ் பேச்சினிலே - வானூறும்
தூறலென மென்மையினைக் கன்னத்தில் சுட்டியே
பூடகமாய்க் கிள்ளியதே பூ
https://youtu.be/ddcUDbK-8Yg
மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு…
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு..
*
CK - ஒரு புதிய கோணத்தில் மற்றைய உறவுகளை 3வது பாகத்தில் அலசலாம் என்றிருந்தேன் - தலைப்பு அதே என்றாலும் - சொல்லக்கூடிய விஷயங்கள் வேறு . ஒரு circuit complete பண்ணலாம் என்றிருந்தேன் - உங்களுக்கு பிடிப்பு இல்லை என்பதை உணர்ந்துகொண்டேன் . வேறு புதிய எண்ணங்கள் , கருத்துக்கள் தோன்றும் வரை இந்த திரியில் ஒரு பார்வையாளர் ஆக இருந்து , உங்கள் , மற்றும் பலரின் பதிவுகளைப்படித்து திறமைகளை இன்னும் வளர்த்துக்கொள்ளலாம் என்ற நினைக்கிறேன் - என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக மீண்டும் சந்திப்போம் இதே திரியில் .....
அன்புடன்
டியர் ரவி சார்,
கருவின் கரு என்ற அருமையான தலைப்பை எடுத்துக்கொண்டு, அதை மிக மிக சுவாரஸ்யமாகவும் நேர்த்தியாகவும் கொண்டு சென்று 201 வெற்றிப்பதிவுகளை பூர்த்தி செய்திருப்பது ஒரு இமாலய சாதனை. என்பதில் சந்தேகமில்லை.
ஒவ்வொரு பதிவுக்கும் எடுத்துக்கொண்ட உண்மைச்சம்பவங்கள், எடுத்துக்கொண்ட முயற்சிகள், ஒவ்வொரு குட்மார்னிங் கிற்காக பதித்த காணக்கிடைக்காத அருமையான நிழற்படங்கள் (குறிப்பாக துருவக் கரடிகளின் விளையாட்டு) அனைத்தும் சூப்பர் அட்டகாசம். எல்லாவற்றிற்கும் மேலாக தந்தையரின் தியாக வாழ்க்கை பற்றிய அற்புத அலசல்கள் மனதைத் தொட்டன,
உங்கள் வித்தியாச பதிவுகளால் மதுர கானம் திரி பெருமை பெற்றுள்ளது.
மூன்றாம் பாகத்துக்கு வாழ்த்துக்கள்.
என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக மீண்டும் சந்திப்போம் இதே திரியில் .// ரவி..கோபம் இல்லை தானே.. என்றாவது ஒரு நாள் என்பதெல்லாம் செல்லாது.. நீங்கள் உங்கள் எண்ணங்க்ளை வழக்கம் போல் தொடருங்கள்.. பிடிப்பில்லை என்று சொல்லவில்லை.. ஆதிராமும் என் இதயத்துடிப்பை எகிற வைத்துவிட்டார்..கடைசி வரிக்கு தாங்க்ஸ் அவருக்கு - அதாவது கருவின் கருவிற்குத்தான் ஓய்வு எனச் சொல்லியிருக்கிறாரே தவிர உங்களை அல்ல..
அகெய்ன் கோபம் இல்லை தானே..
டியர் வாசு சார்,
உல்லாசப் பறவைகள் படத்தின் 'அழகு ஆயிரம்' பாடலின் விஸ்தாரமான ஆய்வு அருமையோ அருமை.
நேர்மையாக சொல்வதென்றால் உங்கள் ஆய்வுக்கு முன் அந்தப்பாடலை படத்தில் பார்த்தபோது அவ்வளவாக என்னைக் கவரவில்லை. இளையராஜா பாடல் என்பதால் அசுவாரஸ்யமாக பார்த்ததாலோ அல்லது காட்சி பிரம்மாண்டத்தில் மனதைப் பறிகொடுத்ததாலோ தெரியவில்லை.
ஆனால் இப்போது கேட்கும்போது உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் முன்னைவிட மனத்தைக் கவர்கிறது என்பதில் சந்தேகமில்லை.
பாடல் ஆய்வில் வழக்கம்போல உங்கள் அபரிமிதமான உழைப்பு மலைக்க வைக்கிறது. பாராட்டுக்கள்
டியர் சின்னக்கண்ணன் சார்,
தங்கள் வருகை மனதுக்கு மகிழ்ச்சியை தருகிறது. இனி உங்கள் பங்குக்கு அதிரடி ஆரம்பம் ஆகட்டும்.
நீங்கள் கேட்ட 'கண்ணுக்கு தெரியாத அந்தசுகம்' பாடலில் முத்துராமன் ஜோடி விஜயநிர்மலா. ஏற்கெனவே வாசு சார் சொல்லியிருக்கிறார்.
அந்தப்பாடல் சாத்தனூர் அணையில் எடுக்கப்பட்டதல்ல. வேறொரு அணைக்கட்டு. பெரிய மீன் வயிற்றுக்குள் ஒரு அக்குவாரியம் (மீன்காட்சி சாலை) அமைக்கப்பட்டிருக்கும். மு.க.முத்துவின் பிள்ளையோ பிள்ளையின் 'மீனாட்டம் கண்கொண்ட மீனாட்சி' பாடலிலும் இந்த அணைக்கட்டுதான். (பெயர்தான் தெரியவில்லை. வாசு சார் இருக்கையில் கவலை எதுக்கு?)
உனக்காக நான் படத்தில் நடிகர்திலகம் - லட்சுமி டூயட் படமாக்கப்பட்டது மலம்புழா அணைக்கட்டில். அங்குள்ள மிகப்பெரிய நிர்வாண யட்சிணி சிலை ரொம்ப பேமஸ்.
மாட்டுக்கார வேலனின் 'பட்டிக்காடா பட்டணமா' பாடல் வைகை அணையில் எடுக்கப்பட்டது.
சாத்தனூர் அணையும், வைகை அணையும் பெருந்தலைவர் ஆட்சியின் நூற்றுக்கணக்கான சாதனை வெள்ளத்தின் இரு துளிகள்.
டியர் வாசு சார்,
என் வேண்டுகோளை ஏற்று பாபு படத்தில் இடம்பெற்ற 'என்ன சொல்ல என்ன சொல்ல' பாடல் ஆய்வை சமர்ப்ப்பித்ததற்கு மிக்க நன்றி.
பாபு படத்தின் இடைவேளைக்குப்பின் பாபுவின் தியாகம், சோகம் என்று சென்று கொண்டிருந்ததை மாற்றி சற்று கிளுகிளுப்பூட்ட 'அந்தக்காலத்தில் கண்ணனும் கோபியரும்' பாடலையும் 'என்ன சொல்ல என்ன சொல்ல' பாடலையும் இடம் பெறசெய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இரண்டிலும் நம்ம ராட்சசி கலக்கியிருப்பார்.
மேலும் நடிகர்திலகம் தன படங்களில் நடிக்கும் சக நடிகர்களுக்கும் டூயட் பாடல் கொடுத்து மகிழ்வார் என்பதற்கு 'என்ன சொல்ல என்ன சொல்ல' இன்னொரு எடுத்துக்காட்டு.
'நான் கொடுத்த முத்திரைக்கு நன்றி சொல்' என்னுமிடங்களில் பாலா கொஞ்சுவார். எனக்கென்னவோ இந்தப்பாடல் அவ்வளவு விரசமாக தெரியவில்லை.
கருப்புவெள்ளை பாடல் ஆய்வை கருப்பு வெள்ளையிலேயே தந்திருப்பது பொருத்தமே.
உங்களைப்பார்த்து, நடிகர்த்திலகத்தைப்போல 'கேட்டதும் கொடுப்பவனே(ரே)' என்று பாடுவதா அல்லது ஜெயந்தியைப்போல 'நான் கேட்டேன் அவன்(ர்) தந்தான்(ர்)' என்று பாடுவதா என்று தெரியவில்லை.
பாராட்டுவதற்கு ரவி சாரைப்போல நானும் புது மொழியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
Courtesy: Tamil Hindu
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மெல்லிசை மன்னர் பட்டம் வழங்கியது யார்?
திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடமி ஆதரவில், என்.கே.டி. கலா மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் (இடமிருந்து) சிவாஜி கணேசன் தலைமை தாங்க, கவிஞர் கண்ணதாசன் முன்னிலை வகிக்க, ‘மெல்லிசை மன்னர்கள்’ விருதுடன் டி.கே.ராமமூர்த்தி, எம்.எஸ்.விஸ்வநாதன்.
திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடமி ஆதரவில், என்.கே.டி. கலா மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் (இடமிருந்து) சிவாஜி கணேசன் தலைமை தாங்க, கவிஞர் கண்ணதாசன் முன்னிலை வகிக்க, ‘மெல்லிசை மன்னர்கள்’ விருதுடன் டி.கே.ராமமூர்த்தி, எம்.எஸ்.விஸ்வநாதன்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ‘மெல்லிசை மன்னர்’ பட்டம் வழங்கியது யார், எப்போது, எங்கே என்பது குறித்து பலவிதமான செய்திகள் வெளியாகின்றன.
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், அவருடன் இணைந்து இசையமைப்பில் ஈடுபட்ட டி.கே.ராமமூர்த்திக்கும் சேர்த்தே ‘மெல்லிசை மன்னர்கள்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. இதுதொடர்பாக 1963-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி வெளியான ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளிவந்த தகவல் இதோ:
‘தி இந்து’ மற்றும் ‘ஸ்போர்ட் & பாஸ்டைம்’ பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்த கஸ்தூரி சீனிவாசன் நினைவாக நூலகம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அந்த நூலகத்துக்கு நிதி திரட்டும் நல்ல நோக்கத்தில் பிரபல திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடமி ஆதரவில் என்.கே.டி. கலா மண்டபத்தில் 1963 ஜூன் 16 மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தலைமை தாங்கினார். கவிஞர் கண்ணதாசன் முன்னிலை வகித்தார். ஜெமினி கணேசன், சாவித்திரி, ஏ.எல்.சீனிவாசன், இயக்குநர் ஸ்ரீதர், சித்ராலயா கோபு, சந்திரபாபு உட்பட பலர் கலந்துகொண்டு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை இரட்டையர்களை பாராட்டிப் பேசினர். அப்போது இருவருக்கும் ‘மெல்லிசை மன்னர்கள்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதற்கு நன்றி தெரிவித்து எம்.எஸ்.விஸ்வநாதன் பேசினார். அந்த நிகழ்ச்சியில் 45 இசைக் கலைஞர்களைக் கொண்ட குழு 3 மணி நேரத்துக்கு அற்புதமான இசை விருந்து அளித்தது. பீ.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா, எஸ்.ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி, வீரமணி, சந்திரபாபு ஆகியோர் பாடினர். பின்னணி இசைக் கலைஞர்கள் வழங்கிய அந்த மெல்லிசை விருந்தில் 3,000 ரசிகர்கள் மூழ்கித் திளைத்தனர். குறிப்பாக ஸ்ரீனிவாஸ், சுசீலா, ஜானகி ஆகியோரின் பாடல்களை வெகுவாக ரசித்தனர்.
இசையமைப்பாளர்கள், பாடகர்களுக்கு லட்சுமி திருவுருவம் பொறித்த கேடயங்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நினைவுப் பரிசாக வழங்கி நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்றும், நிகழ்ச்சி முடிந்த பிறகு நன்றி தெரிவித்தும் திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடமி துணைத் தலைவர் ஆர்.ரங்காச்சாரி பேசினார். இவ்வாறு ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
டியர் குமார் சார்,
உங்கள் ஆவண அணிவகுப்பு மலைக்க வைப்பதுடன் அந்தந்த காலங்களுக்கு மனதை பயணிக்க வைக்கிறது.
ஏற்கனவே ஆவணப் பதிவுகளை அள்ளித்தந்து கொண்டிருந்த பம்மலார் சார், வினோத் சார் இருவரும் என் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு அருகில் உங்களுக்கும் ஒரு சிம்மாசனம் போட்டுவிட்டேன். (ஆய்வு பதிவுகள் எழுதும் வாசு சார், கோபால் சார், ராகவேந்தர் சார், ரவி சார், ஆகியோருக்கான சிம்மாசனங்கள் அடுத்த அறையில்).
உங்கள் அபார உழைப்புக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், நன்றிகள்.
அருமை... அற்புதம்... அட்டகாசம்...
மது
தங்கள் உடல் நிலை எவ்வாறுள்ளது. உடல் நலன் பேணவும்.
தங்களுக்கு எப்பொழுதெல்லாம் அவகாசம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் இங்கு பங்கு கொள்ளவும்.
மெல்லிசை மன்னர்கள் பட்டம் பற்றி ...
திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடெமி சார்பில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவருக்கும் பட்டம் அளிக்க தீர்மானித்த போது உறுப்பினர்களிடையே பல்வேறு பட்டங்களைத் தரச்சொல்லி அதற்கேற்ப அவர்களிடமிருந்து வந்திருந்த பல்வேறு பட்டங்களிலிருரந்து தேர்ந்தெடுக்கப்பட்டது தான் மெல்லிசை மன்னர்கள் பட்டம்.
அவ்வகையில் நடிகர் திலகம், மெல்லிசை மன்னர்கள் இரண்டுமே ரசிகர்கள் அளித்த பட்டங்கள். இவையே இவர்களுக்கு நிரந்தரமாக அமைந்தது இறைவனின் சித்தம்.
'நான் தன்னந்தனிக் காட்டு ராஜா'
ரவி சார்,
'கருவின் கரு' - 201 ல் நடிகர் திலகத்தின் 'எங்க மாமா' படப் பாடலான 'நான் தன்னந்தனிக் காட்டு ராஜா' பாடலைப் பதிவிட்டு கொன்று விட்டீர்கள் கொன்று.
இந்தப் பாடலும், பாடலில் நடிகர் திலகம் என்னுள் ஏற்படுத்திய தாக்கமும் சொல்லி மாளாது. இன்றுவரை வியந்து, வியந்து பார்த்து ரசிக்கும் சந்தோஷப் பாடல் இது.
உணர்ச்சிக் கலவைகளுக்கு இடம் தராமல் குழந்தைகளோடு குழந்தையாய் 'நடிகர் திலகம்' என்ற தெய்வக் குழந்தை விளையாட்டாய், படுஜாலியாய், கவலை கிஞ்சித்தும் இல்லாமல் எல்லாவற்றுக்கும் மேல் ஆர்ப்பரிக்கும் கொள்ளை அழகால், இணையே இல்லாத ஸ்டைலால் அத்துணை பேரையும் கட்டிப் போட்ட பாடல் இது.
நடிகர் திலகத்திற்கென்றே எழுதப்பட்ட வரிகள்.
http://i.ytimg.com/vi/Yyhqu8jDWLs/hqdefault.jpg
'நான் தன்னந்தனிக் காட்டு ராஜா'
உண்மைதானே! எங்கும் எதிலும் அவர் 'தன்னந்தனிக் காட்டு ராஜா' தானே!
அதை வாயால் சொல்லிப் பார்க்கும் போதே அப்படி இனிக்கும். ('எங்கள் தங்க ராஜாவும்' அப்படியே)
இந்தப் பாடல் ஆரம்பிக்கும் போது அழகான ஒரு ஏரியில் (வேடந்தாங்கல்?) தண்ணீரில் மூழ்கி இருக்கும் மரக்கிளைகளில் இருந்து பறவைகள் ரம்மியமாக சிறகடித்துப் பறக்கும். அது ஏன் தெரியுமா?
அந்தப் பறவைகள் உல்லாசமாகப் பறந்து அனுபவிப்பதைப் போல இந்தப் பாடலை அதே சந்தோஷத்துடன் நீங்கள் அனுபவிக்கத் தொடங்குங்கள் என்று அர்த்தம் சொல்வதாகவே நான் நினைக்கிறேன்.
(நடிகர் திலகத்தோடு குழந்தைகள் உல்லாச பிக்னிக் என்பதற்கு பறவைகள் குதூகலம் என்ற திருலோக்கின் டைரெக்ஷன் 'டச்' அது என்பது வேறு)
சென்னை சிட்டியின் சென்ட்ரலுக்கு எதிரே பிரதான சாலைகளில் குழந்தைகள் அனைவரையும் ஏற்றிக் கொண்டு, அந்த 'டப்பா' சிகப்புக் கலர் ஓப்பன் காரை ஆரம்பக் காட்சியில் நடிகர் திலகமே ஓட்டி வருவார். பின்னால் ஒரு பிளாக் அம்பாஸிடர் வந்து கொண்டிருக்கும். உங்கள் 'கரு'வின் தந்தை ஒருவர் அவர் மகனை கைப்பிடித்தபடி அழைத்து வருவார்.
ரோடின் பக்கவாட்டு சாலையில் நடிகர் திலகம் காரோட்டும் அழகைப் பார்த்தவாறு ஷூட்டிங்கை ரசித்தபடி சிலர் மிதிவண்டிகளில் வேகமாக காருக்கு இணையாக சைடில் வந்து கொண்டிருப்பார்கள். இரண்டு கார்கள் கூட வந்து கொண்டிருக்கும். நல்ல உச்சி வெயிலில் இந்தக் காட்சியை எடுத்திருப்பார்கள். பிறகு பேக் புரஜெக்ஷன்.
மிக அழகான பூஞ்சிறகு பதித்த ரெட் ஹேட் அணிந்திருப்பார் நடிகர் திலகம். உள்ளே ரெட் ஷர்ட்டும், வெளியே வெளிர் சந்தன கோட்டும் கோலாகல கோமானாய்க் காட்டும் அவரை.
http://i61.tinypic.com/x0r1o5.jpg
'நான் தன்னந்தனிக் காட்டு ராஜா'
என்று வலது கை ஆள்காட்டி விரலை முகத்துக்கு நேரே உயர்த்தும் போதே ரசிகர்களின் ஆள்காட்டி விரலும், கட்டை விரலும் ஒன்றாகச் சேர ஆரம்பித்து விசில் வீ(பீ)றிட்டுக் கிளம்ப ஆரம்பித்து விடும். கொட்டகை இரண்டு படும்.
'ராஜா' என்னும் போது அந்த காந்த வார்த்தையை அமர்க்களமாக நம் 'ராஜா' அழுத்தமாக வாயசைப்பில் கொண்டு வருவார். ராஜா இல்லையா? 'ராஜான்னா ராஜா'தான்.
தலைகளில் வித வித தொப்பி அணிந்து, கைகளில் இசைக்கருவிகள் சுமந்து, எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது அந்தக் குழந்தைகளிடம்!
http://i58.tinypic.com/kbr9qu.jpg
ஜெய கௌசல்யா, ('தங்கை'யில் தங்கை, 'நீதி'யில் உடன் பிறவா தங்கை, 'ஞான ஒளி' யில் தலைவரின் பேத்தி பிரமோஷன் என்று நிறைய) ரோஜாரமணி, ('இரு மலர்களி'ல் ஒரு மலரின் மகள், பின்னால் 'என் மகனி'ல் மகள் மற்றும் தங்கை என்று இவரும் நிறைய) மற்றும் பிரபாகர், சேகர், லட்சுமி, விஸ்வேஸ்வரராவ், ரஜனிஸ்ரீ, சுரேந்திர குமார், ஜிந்தா, மாஸ்டர் ராமு, சுமதி, ரமேஷ் என்று நீளமான பட்டியலில் குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள் நம் பெரிய குழந்தை பேரழகனுடன்.
http://i61.tinypic.com/ac4gop.jpg
'நான் தன்னந்தனிக் காட்டு ராஜா' என்று மறுபடி பாடும் போது நெற்றியையும், வலது கண்ணையும் மறைக்குமளவிற்கு தொப்பியை ஸ்டைலாக முன்னால் இழுத்து விடுவார் இந்த மூக்கழகர். மூக்குப் பகுதியிலிருந்து முகவாய்க்கட்டை வரை குறுக்கி, பெருமிதம் பொங்க 'இந்தத் தனிக்காட்டு ராஜாவுக்கு' நிகர் எவருமில்லை என்று உணர்த்துவார். நாக்கை சற்று முன் வைத்து கடித்தவாறு வாயசைப்பு அருமையாக இருக்கும். குழந்தைகள் 'ஊ ஊ' என்று இரைச்சல் இடும் போது டிரைவ் செய்தபடி அழகாக அவர்களைத் திரும்பிப் பார்ப்பார். இப்போதும் பக்கத்தில் ஷூட்டிங் பார்க்கும் ஜனங்களைப் பார்க்கலாம்.
அடுத்து மெரினா கடற்கரை. 'என்னப் பார்வை உந்தன் பார்வை?' என்று முத்து கார் ஓட்டியபடி காஞ்சனாவுடன் காதல் புரிந்த அதே இடம். அங்கு ரொமான்ஸ் செய்யும் ஒரு காதல் ஜோடியை குழந்தைகள் செமையாய்க் கத்திக் கலாய்க்கும்.
அப்படியே எல்.ஐ.சி கட்டிடம். மவுண்ட் ரோடு. குழந்தைகளின் வாத்தியங்கள் வாசிப்பு சப்தம் கேட்டு தாங்க முடியாதவாறு மிக அழகாக காதுக்குள் விரல் விட்டு அடைத்து குடைவார். (கோபால் சாருக்கு மிக மிக பிடித்த சீன் இது)
'முத்தம் கொடுக்கையில் மூக்கைக் கடித்திடும்'
வரிகளில் குழந்தைகளின் குறும்பைத் தாங்க மாட்டாமையை விழிகளை அகல விரித்துக் காட்டுவார்.
அடுத்து மெட்ராஸ் மிருகக் காட்சி சாலையில் குழந்தைகளோடு Midget train விளையாட்டு ரயில் பயணம். எஞ்சின் டிரைவருடன் சேர்ந்து நீராவிப் புகை முகத்திலடிக்க பயணம் செய்வார்.
அடுத்து வரும் காட்சிதான் மிக மிக அற்புதம்.
http://i61.tinypic.com/esjndv.jpg
ரயிலிலிருந்து இறங்கி, ரயில் பக்கத்தில் வந்து கொண்டிருக்க, ரயிலின் கூடவே விசலடித்தபடி, பேண்ட்டின் இரண்டு பாக்கெட்டுகளிலும் கை விட்டுக் கொண்டு, அப்படியே தொப்பியையும் சரி செய்து கொண்டு, மெதுவான ஸ்டைலான ஓட்டத்தில் கைகளை மிக அழகாக வைத்துக் கொண்டு பின்னி விடுவார் பின்னி. பிரவுன் நிற பேன்ட் பிரமாதம்.
சப்பாத்திக் கள்ளிச் செடியின் தடிமனான கடின இலைகளின் மேல் முள்ளால் எழுத்துக்கள் எழுதினால் எக்காலமும் அது அழியாதாம். அது போல இந்தக் காட்சி என் மனதை விட்டு அழியவே அழியாது. நான்கே விநாடிக் காட்சி. நாற்புறம் எரித்த சிவனே ஆனாலும் அதை அழிக்கவே முடியாது.
இந்த ஒரு காட்சிக்காகவே இப்பாடலின் ஆய்வை எடுத்தேன்.
மறுபடி ரயிலில்.
மெல்ல வளர்ந்திடும் செல்லக் குழந்தைகள்
நாளை உலகத்தை ஆளும் தலைவர்கள்
வஞ்சம் அறியாத பிஞ்சுக் கரங்களில் வாழத்
துடிக்கின்ற வேகம் இருக்குது
அப்படியே பொருட்காட்சிக்கு காட்சி நகரும்.
இள மனதில் தோன்றும் நினைப்பு
புது உலகைக் காணும் துடிப்பு
இதன் இடையில் ஏது களைப்பு
அதைக் காணத்தான் எந்தன் உழைப்பு
(என்று படத்தில் மட்டுமே வரும் வரிகள். வானொலிகளில் 'கட்')
http://i62.tinypic.com/20ftgjs.jpg
மேற்கண்ட வரிகளில் அப்படியே 'மக்களைப் பெற்ற மகராசி'யின் 'பொன்னு விளையிற பூமியடா' செங்கோடனை நாகரீக பேன்ட், கோட், சூட் போட்ட 'கோடீஸ்வரனி'டம் இங்கு காணலாம். (குறிப்பாக 'அதைக் காணத்தான் எந்தன் உழைப்பு' வரிகளில் காட்டும் பின்வாங்கல் தலையாட்டலில் கண்டு கொள்ளலாம்) ஒரு காலைத் தரையில் வைத்து, பேரல் இருக்கும் அந்த மர ஸ்டாண்டில் இன்னொரு காலைத் தூக்கி வைத்து கைகளைக் கொட்டி, தொப்பியைச் சரி செய்து, சிரித்துக் குதூகலித்தபடி செம ஸ்டைல் )
ராட்டினம் சுற்றும் குழந்தைகளிடம் வெளியே நின்று சிரித்தபடியே கை சைகையால் சுற்றச் சொல்லிக் காட்டுவது அருமையோ அருமை.
'Merry Go Round' ராட்டினத்தில் வெள்ளைக் குதிரை பொம்மை மேல் இன்னொரு பொம்மைக் குழந்தை பேபி சுமதியுடன் அமர்ந்து ராட்டினம் சுற்றுவார்.
'அல்லா முதற்கொண்டு இயேசு புத்தன் வரை
எல்லோர் மதங்களும் எங்கள் வழித்துணை'
என்று மத நல்லிணக்ககத்தை மழலைகளிடம் விதைப்பார்.
பின் ராட்சத சுழலும் ராட்டினத்தில் பலூன்கள் மத்தியில் மழலைகளுடன் அமர்ந்து பாடுவார்.
பாதி காட்சிகள் நிஜமாயும், மீதி புரஜெக்ஷன் காட்சிகளாயும் ரசிக்கும்படி படமாக்கப் பட்டிருக்கும்.
'நடிகர் திலகம்' தான் நடிகர் என்றே நினைக்காமல், படமென்று நினைக்காமல், படப்பிடிப்பு என்று நினைக்காமல், குழந்தைகளோடு குழந்தையாகவே மாறிவிடுவதை நாம் கண்கூடாக கண்டு கொள்ள முடியும். அதே போல் மற்ற குழந்தைகளாக ரசிகர்களாகிய நாமும் மாறி அவருடன் இணைந்து விடுவோம் என்பதும் மறுக்க முடியாத உண்மையே.
அத்தனை நடிகர்களும் குழந்தைகளோடு சேர்ந்து பாடல் காட்சிகளில் பல படங்களில் நடித்திருந்தாலும்... அவ்வளவு ஏன் நடிகர் திலகமே பல படங்களில் குழந்தைகளுடன் நடித்திருந்தாலும் இந்தப் பாடல் காட்சி தனி மகத்துவ விசேஷம் கொண்டது. இதற்குப் பிறகுதான் மற்ற எல்லா குழந்தைப் பாடல்களும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலிக்கும் பாடல்களில் என்றும் முதலிடமாக,
'நான் தன்னந் தனிக் காட்டு ராஜா'
என்று இறுமாப்புக் கொண்டு மார் தட்டும் பாடலும் கூட. பிள்ளைகள் கைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வாத்தியக் கருவிகள் இருக்கும் டிரம்பென்ட், பேண்ட் என்று. அதற்கேற்றார் போல் 'மெல்லிசை மன்னர்' அத்தனை வாத்தியங்களையும் பயன்படுத்தி பாடலை இன்னும் பிரம்மாண்டப் படுத்தியிருப்பார் காட்சியமைப்பிற்குத் தக்கவாறு.
(வினோத் சார் உடனே 'சிக்கு மங்கு' பாடலைப் பதிவிடலாம்.:) அதுவும் குழந்தைகளை நல்வழிப்படுத்தும் நல்ல கருத்துக்கள் நிறைந்த, நன்கு ரசிக்கத் தகுந்த பாடலே! அருமையான படமாக்கமே!)
http://rajtv.tv/Image_Movies/EngaMama.jpg
ரவி சார்! உங்கள் எண்ணம் நிறைவேறியதா? இதில் போன் செய்து வேறு வெறி கிளப்பி விட்டீர்கள். 'எங்க மாமா' என்று குழந்தைகள் உரிமை கொண்டாடிய எங்க (நம்ம) அண்ணனை, அவர் நடித்த பட்டை கிளப்பும் பாடல் காட்சியை இங்கு பதிவிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளிவிட்டு விட்ட தங்களுக்கு என் தங்கமான நன்றிகள்.
இதோ மீண்டும் ஒருமுறை
https://youtu.be/2BqghZZSNnQ
வாசு - பதிவிட வேண்டாம் சற்றே ( நீண்ட )ஒய்வு எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன் - உங்கள் " நான் தன்னந்தனிக் காட்டு ராஜா'" பதிவு என் "ஒய்வு எடுக்கலாம்" என்ற எண்ணத்தை கெடுத்து விட்டது .இந்த பதிவு எனக்கு நீங்கள் தந்த பரிசாக கருதுகிறேன் - உடுக்கை சத்தம் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கும் போதே இளமையின் சத்தம் இன்னும் அதிகமாக கேட்க்கும் படி செய்து விட்டீர்கள் .
எனக்கு மிகவும் பிடித்த பாடல் - நான் 2வது பாகத்தை முடிப்பதற்குள் நெய்வேலிக்கு இந்த பாடல் ஓடிப்போய் விடக்கூடாதே என்று எல்லா இடத்திலும் போலீஸ் படையை நிறுத்தி வைத்திருந்தேன் - நல்ல வேலை , நான் 2வது பாகத்தை முடித்த பின் தான் அலசி உள்ளீர்கள் . இந்த பாட்டில் இவர் காட்டும் ஸ்டைல் , அழகு , நளினம் , இளமை , இனிமை -" தங்கை "யில் வரும் " இனியது இனியது உலகம் " என்ற பாட்டில் இவர் காட்டும் அழகை விட அதிகம் . வினோத் சாருக்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும் என்று அவரே சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன் . யாருக்குத்தான் வாசு இந்த பாடல் பிடிக்காது ? அப்படியே ஓரிருவர் இருந்தால் , உங்கள் அழகான , அருமையான அலசலை படித்த பின்பும் மரக்கட்டையாக இருக்க மாட்டார்கள் .
மீண்டும் நன்றி
வாசு சார்
பறவைகள் பறந்த வுடன் முதன் முதலில் காட்டப்படுவது
எங்கள் செனட் ஹவுஸ்..
சென்னைப்பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூற்றைம்பது ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம். அக்காலத்தில் பட்டம் பெற்று வருபவர்களைக் காட்ட இந்த இடத்தைத் தான் திரைப்படங்களில் பயன்படுத்துவார்கள்.
பாபு வில் அந்த உணர்வு மயமான காட்சி நினைவுக்கு வரும்.. நிர்மலா பட்டம் பெற்று வரும் போது ந.தி. வாயிலில் பூரிப்போடு கண்டு களிக்கும் உன்னதமான காட்சி. அதே போல் காதலிக்க நேரமில்லை என்ன பார்வை பாடலின் ஒரு பகுதியும் இந்த இடத்தில் தான் படமாக்கப்பட்டது.
அடுத்து சென்னை அண்ணா சாலை ஆயுள் காப்பீட்டு நிறுவனக் கட்டிடம்.
இதற்குப் பிறகு வருவது சென்னையில் அப்போது இருந்த மிருகக் காட்சி சாலை.
இதே கடற்கரையில் நடிகர் திலகத்தின் எத்தனை காட்சிகள்.. அதே போல் நினைத்ததை முடிப்பவன் படத்தில் இடம் பெற்ற பூமழை தூவி பாடலின் பெரும் பகுதியும் இங்கு தான் படமாக்கப்பட்டது.
நாகேஷ் நடித்த பாடல் காட்சி, மெட்ராஸ் நல்ல மெட்ராஸ், அதுவும் இங்கே தான் படமாக்கப்பட்டது. உழைப்பாளர் சிலையின் அருகில் நாகேஷ் நிற்கும் போது பின்னணியில் கடலில் கரை தட்டிய கப்பலைப் பார்க்கலாம்.
இது கிடக்கட்டும் ஒரு புறம்.
இப்பாடலைப்பற்றிய தங்கள் வர்ணனை.. ஆஹா... (வினோத்துக்கு நீங்கள் மட்டும் தான் பாடல் எடுத்துக் கொடுப்பீர்களா என்ன.. இப்போது பாருங்கள் இன்னொன்றும் கிடைத்து விட்டது.)
மாற்றார் தோ(போ)ட்ட மெல்லிசையும் மதுரமே
பகுதி 5 : யு ஒன்லி லிவ் ட்வைஸ் / YOU ONLY LIVE TWICE (1967)
Sean Connery is James Bond OO7!
Quote:
இம்முறை ஜேம்ஸ் பாண்ட் வானவெளியில் 'லபக்'கப் படும் விண்கலங்களின் கடத்தல் மூளையை செயலிழக்க வைக்கும் பணியில் செய்யும் சாகசங்கள்
மெய் சிலிர்க்க வைக்கும் முரட்டுத்தனமான டூப் போடாத சண்டைக் காட்சிகளின் மன்னர் ஷான் கானரி !! ராட்சஷ மேக்னட்டின் துணை கொண்டு அடியாட்களுடன் பின் தொடரும் காரை அந்தரத்தில் பற்றியெடுத்து கடலுக்குள் வீசும் காட்சி.....லிட்டில் நெல்லி ஹெலிகாப்டரில் பறந்து எரிமலை வாய்களை வில்லனின் இருப்பிடம் கண்டறிய ஜேம்ஸ் பாண்ட் ஆய்வு செய்யும்போது வழிமறிக்கும் பெரிய ஹெலிகாப்டர்களை சிதறடிப்பது ....எரிமலை செட்டப்புக்குள் கயிறு கட்டிக் குதித்து சண்டையிடும் சாகசம்....இக்காட்சிகளில் பட்டையைக் கிளப்பும் ஜான் பேரியின் தீம் இசைச் சிதறல்...மெய்மறக்க வைக்கும் டைட்டில் இசைப் பாடலுடன் (by Nancy Sinaatra the daughter of Star/Singer Frank Sinaatra, the Von Ryon Express movie fame!) கூடிய மாரிஸ் பைண்டரின் கிராபிக்ஸ் அதிரடி.....அவ்வாண்டின் முதலிட வெற்றிப் படம்....அகில உலக சூப்பர் டூப்பர் ஸ்டார் அந்தஸ்தை எப்போதும் போல தக்க வைத்துக் கொண்டார் கானரி !!
The title credits with Maurice Binder's excellent graphics of the day alongside the tantelizing song by Nancy Sinatra!
https://www.youtube.com/watch?v=hcIl_6amBvU
Just a drop in the ocean!! Usual reception to baddies!!
https://www.youtube.com/watch?v=bLAo27BtBJ0
The excellent fight choreography with a sumo fighter!
Cheers!...Siamese Vodka?!
https://www.youtube.com/watch?v=VPBY6c5iuDg
The ever green action scene in the sky with this Little Nelli!!
The theme music enhances the tempo and makes the audience to their edge of seats restless till the end!!
https://www.youtube.com/watch?v=gnmau8_iypw
இனிய நண்பர் திரு குமார் சார்
அண்ணா மற்றும் நவமணி தின இதழ்களில் வெளிவந்த தமிழ் படங்களின் விளம்பரங்களை மீண்டும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில காணும் அரிய வாய்ப்பை தந்தமைக்கு நன்றி . சென்னை நகர அன்றைய திரை அரங்குகள் இன்று 99% மூடப்பட்டு விட்டது மிகவும் ஏமாற்றமாக உள்ளது .
இனிய நண்பர் திரு ஆதிராம் சார்
உங்கள் மனதில் எனக்கு இடமிருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி .சமீப காலங்களில் ஆவணங்கள் கிடைக்காததால் பதிவுகளை தர இயலவில்லை பூ மழை தூவி பாடல் பெரும்பாலான காட்சிகள்
காஷ்மீரில் படமாக்கப்பட்டது .சாரதா சம்பந்த பட்ட ஓரிரு காட்சிகள் மட்டும் சென்னையில் படமாக்கபட்டது .
இனிய நண்பர் திரு வாசு சார்
எங்க மாமாவில் இடம் பெற்ற நான் தன்னந்தனி காட்டு ராஜா பாடலை பற்றிய விரிவான வர்ணனைகள் அமர்க்களம் .
பாராட்டுக்கள் .