http://i61.tinypic.com/2v8n8ya.jpg
Printable View
மறு வெளியீடுகளில் சரித்திரம் படைத்தது வரும் மாமன்னரின் படங்கள் ''நாடோடி மன்னன் '' - ''என்கடமை '' 12.12.2014 அன்று கோவை நகரில் ஒரே நேரத்தில் வெளிவருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி .
கோவை நகர எம்ஜிஆர் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் ..நன்றி திரு ரவிச்சந்திரன் சார் .
என் அனுபவத்தில் [1969-1975 ] சென்னையில் பார்த்தமக்கள் திலகத்தின் படங்களின் பிரமாண்ட முன்பதிவு -ரசிகர்கள் வெள்ளம் - முதல் நாள் மக்கள் வெள்ளம் - ரசிகர்களின் ஆரவாரம் - வெற்றி செய்திகள் .
1. அடிமைப்பெண் - மிட்லண்ட் - கிருஷ்ணா - மேகலா - நூர்ஜஹான் .
2. நம்நாடு - சித்ரா - கிருஷ்ணா - சரவணா - ஸ்ரீனிவாசா
3. மாட்டுக்கார வேலன் - பிளாசா - பிராட்வே - சயானி - கிருஷ்ணவேணி
4. என் அண்ணன் - மிட்லண்ட் - கிருஷ்ணா - மேகலா - நூர்ஜஹான் .
5. ரிக்ஷாக்காரன் - தேவி பாரடைஸ் - கிருஷ்ணா - சரவணா
6. நீரும் நெருப்பும் - தேவி பாரடைஸ் - கிருஷ்ணா- மேகலா
7. நல்ல நேரம் - சித்ரா - மகாராணி - மேகலா - ராம் .
8. இதய வீணை - குளோப் - கிருஷ்ணா - மஹாலக்ஷ்மி - ராஜகுமாரி
9. உலகம் சுற்றும் வாலிபன் - தேவிபாரடைஸ்- அகஸ்தியா - உமா - ராயல் - லக்ஷ்மி
10.நேற்று இன்று நாளை - பிளாசா - மகாராணி - சயானி - கிருஷ்ணவேணி
11.உரிமைக்குரல் - ஓடியன் - மகாராணி - உமா - கிருஷ்ணவேணி
12.சிரித்து வாழ வேண்டும் - பிளாசா - கிருஷ்ணா - மஹாலக்ஷ்மி - கிருஷ்ணவேணி
13.நினைத்ததை முடிப்பவன் - தேவிபாரடைஸ் - அகஸ்தியா - உமா
14.இதயக்கனி - சத்யம் - மகாராணி - உமா - கமலா
15.பல்லாண்டு வாழ்க - தேவிபாரடைஸ் - அகஸ்தியா - சரவணா
தொடரும் .....
கோவையில் ராயல் திரையரங்கில் மே மாதம் திரையிடப்பட்டு 11 நாள் வெற்றிகரமாக ஓடி, 3 மாதங்களுக்குள்ளாகவே அருகிலேயே அமைந்துள்ள டிலைட் திரையரங்கில் மீண்டும் திரையிடப்பட்டு, வெற்றிகரமாக 14 நாட்கள் ஓடி, மீண்டும் 4 மாதத்தில் ராயல் திரையரங்கில் ஒரு படம் வெளியிடப்படுகிறது என்றால் அது நிச்சயம் தலைவர் படமாக மட்டுமே இருக்க முடியும். இன்றும் கூட, தலைவரின் இந்த பாக்ஸ் ஆபிஸ் பவரையும் மக்களை கவர்ந்திழுக்கும் திறனையும் என்னவென்று சொல்ல?.... சாதனைகளுக்கு சொந்தக்காரர் தலைவரே என்பதைத் தவிர. கொங்கு மண்டல தளபதி திரு.ரவிச்சந்திரனுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
தெய்வம் மக்கள் திலகம் -வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்
வானத்தை போல பரந்துவிரிந்தது எது? கடலைப்போல ஆழமானது எது? எம்.ஜி.ஆர். மீது மக்களுக்கு இருக்கும் அன்பு என்பதுதான் சரியான பதிலாக இருக்கும். ஆமாம் காலங்கள் கடந்தாலும் இன்று கூட கடவுளாக மதிக்க படுபவர் ஆவார் நம் மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். நடிகராக நடைபோட தொடங்கிய அவரது பயணம், நல்ல சிந்தனைகளாலும், நல்ல செயல்களாலும், அவரை நாடாளும் தலைவர் நிலைக்கு கொண்டு சென்றது. இது அந்த கருணை உள்ளத்திற்கு காலம் இட்ட கட்டளை. சினிமாவில் சேர்ந்து புகழ் ஏணியில் ஏறி தங்கள் வசதிகளை சேர்த்து/பெருக்கி கொண்டோர் பலர். ஆனால் எம்.ஜி.ஆர். புகழ் ஏணியில் ஏறவில்லை, மக்களால் புகழ் ஏணியின் உச்சத்திற்கு ஏற்ற பட்டார். மக்கள் ஆதரவு அவருக்கு மமதையை தந்ததில்லை. மாறாக அவருக்கு மக்கள் மீது மாறாத பற்றை வளர்த்தது. திரையிலே பார்த்து ரசித்து விட்டு, திரை அரங்கை விட்டு வெளியே வந்தபிறகு மறந்துவிட அவர் வெறும் நடிகர் அல்ல. நாடு போற்றும் நல்லவர். கடைசங்கம் கண்ட ஏழு வள்ளல்களோடு, கருணை உள்ளம் கொண்ட எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். இந்த வள்ளலின் வாழ்க்கை அவர் நடித்த திரை படங்களோடு பின்னிபிணைந்து இருந்தது. ஆகவேதான் மக்கள் அவரை எங்க வீட்டு பிள்ளை, ஏழைகளின் காவலன் என்று ஏற்றுகொண்டனர்/அழைத்தனர். அவர்களுக்கு எம்.ஜி.ஆர். கலங்கரை விளக்கமாக இருந்தார். திரை உலகின் முடிசூடா மன்னனாக, தனிபிறவியாக விளங்கினார் நம் மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த பாடலுக்கு இலக்கணமாகவே வாழ்ந்தார் இந்த ஏழைபங்காளன். தான் கடந்து வந்த பாதையை மறந்து விடாமல், தான் நடந்து வந்த பாதையில் மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்ற நினைவோடு மனம் தளராமல் நடைபோட்டார் மக்கள் திலகம் -வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். தான் உயிராய் மதித்த நடிப்பு தொழிலை விட்டு விட்டாலும், தனக்கு நல்வாழ்வு தந்த சமுதாயத்துக்கு சேவை செய்ய அரசியலை பற்றுகோடாக கொண்டு, அந்த புரட்சிநடிகரின் பாதை மக்களின் நலனுக்காகவே பயன் பட்டது.
எடுத்து கெடுக்கும் கரங்களின் மத்தியிலே, கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தகாரர் மக்கள் திலகம் -வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். என்ற மகத்தான மனிதருக்கு சமுக அக்கறை இருந்தது. மற்றவர்க்கு உதவும் குணம், கொடைத்தன்மை இருந்தது. ஆகவேதான் சமுதாய நலனை பாடல்கள் வாயிலாகவும், நல்ல எண்ணங்களை வசனங்கள் மூலமாகவும், தன் படங்களில் காட்சிகள் மூலமாகவும், விளக்கி வந்தார். அந்த வாரிதந்த பாரிவள்ளலை, மக்கள் இன்னமும் தங்களின் எங்க வீட்டு பிள்ளை என்று கொண்டாடி வருவது இயற்கையே.
மரணத்தையே மண்டியிட செய்த மாமனிதர். எமனின் பாச கையிற்றைகூட மக்களின் பாசத்தால் அறுத்தெறிந்த மனிதபுனிதர். இந்த இதய வேந்தனை, ஏற்றமிகு புனிதரை மக்கள் இன்னமும் தங்கள் மனங்களிலே கோட்டைகட்டி குடி வைத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அவரின் புகழுக்கு எதை ஒப்பிடுவது - இமயமலையா? அண்டமா? அகிலமா? ஆதவனா? அல்லாவின் கருணையா? கிறிஸ்துவின் கிருபையா? கிருஷ்ணனின் கீதையா?
காலத்தை வென்ற காவிய நாயகன்.
வங்ககடலோரம் தங்கமகன் உறங்குகிறார். அவர் படைத்தது சாதனையா? சரித்திரமா? இல்லை இல்லை என்றும் வாழும் சகாப்தம்.
http://i60.tinypic.com/339oxef.jpg
அடிமைப்பெண் - 1969 நினைவலைகள்
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நாடோடிமன்னன் [1958] படத்திற்கு பிறகு சொந்தமாக படம் தயாரிக்க திட்டமிட்டார் .1965ல் எம்ஜிஆர் பிச்சர்ஸ் சார்பாக ''அடிமைப்பெண் '' தயாரிப்பதாக அறிவிப்பை வெளியிட்டார் . மக்கள் திலகத்துடன் சரோஜாதேவி - கே.ஆர். விஜயா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பதாக விளம்பரம் வந்தது
. 1966ல் வெளியான நான் ஆணையிட்டால் படத்தில் நல்ல வேளை நான் பிழைத்த கொண்டேன் பாடல் காட்சியில் ''விரைவில் வருகிறது அடிமைப்பெண் '' என்ற விளம்பரம் வந்தது குறிப்பிடத்தக்கது .
1967ல் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக ''அடிமைப்பெண் '' படம் மீண்டும் பல மாற்றங்களுடன் படபிடிப்பு துவங்கியது .மக்கள் திலகத்தின் கடும் உழைப்பினில் பிரமாண்டமாக உருவானது .பல்வேறு உள்ளரங்குகள் - வெளிப்புற படபிடிப்புகள் ஜெய்பூர் - ராஜஸ்தான் பாலைவனம் - சிங்கத்துடன் சண்டை காட்சிகள் என்று அன்றைய சினிமா செய்திகளில் பரப்பரப்பான செய்தாக வந்த வண்ணம் இருந்தது .
மக்கள் திலகத்தின் 100வது படம் ஒளிவிளக்கு வெளியான நேரத்தில் 20.9.1968 ல் ஜெய்ப்பூரில் அடிமைப்பெண் படபிடிப்பில் கலந்து கொண்டு இருந்தார் . எல்லோரின் எதிர்பார்ப்பும் 1969 பொங்கல் வெளியீடாக படம் வரும் என்று
எதிர்பார்த்தார்கள் .அண்ணா அவர்கள் மறைவு காரணாமாக தமிழ் புத்தாண்டு அன்று படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது . ஒரு வழியாக 1.5.1969 அன்று முதல் சென்னை மிட்லண்ட் - கிருஷ்ணா - மேகலா - நூர்ஜஹான்
மற்றும் தென்னாடெங்கும் விளம்பரம் வந்தது .
முன்பதிவில் சாதனை
http://i59.tinypic.com/119nu6b.jpg
முன்பதிவு தொடங்கிய முதல் நாள் அன்று சென்னையில் 4 அரங்குகளில் ரசிகர்கள் - மக்கள் வெள்ளம் அலை மோதியது . 100 காட்சிகள் 4 அரங்கில் ரிசர்வேஷனில் புக் ஆனது என்று முழு பக்க விளம்பரம் வந்தது .
1.5-1969 அன்று தமிழ்நாடு - கர்நாடக - கேரளா வில் அடிமைப்பெண் திரையிடப்பட்டது .
http://i58.tinypic.com/16ld403.jpg
சென்னையில் மக்கள் திலகம் தலைமையில் அடிமைப்பெண் சிறப்பு காட்சி நடந்தது . அன்றைய தமிழக முதல்வர்
மற்றும் திமுக அமைச்சர்கள் - பிரபல தயாரிப்பாளர்கள் - இயக்குனர்கள் - பத்திரிகை நிறுவனங்கள் எல்லோரும் படத்தை பார்த்துவிட்டு பிரமித்து பாராட்டை மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு வழங்கினார்கள் .
தொடரும் ....
http://i1170.photobucket.com/albums/...psd7184e60.jpg
கள்ளிக்குடி என்ற ஊரில், அரசு நிகழ்ச்சியில், கலந்துகொண்ட முதல்வர் எம்.ஜி.ஆர். முன், , கிராமத்தினர் சிலர், "இனி சாராயம் காய்ச்சமாட்டோம் " என்று சாராய பானையை, மேடையிலேயே, போட்டு உடைத்தனர்... அருகே நிற்பது சேடப்பட்டி முத்தையா...எம்.ஜிஆருடன் , சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்ட நான் எடுத்த படம்..
courtesy ramakrishnan dinamalar reporter
http://i1170.photobucket.com/albums/...psc88f8ca2.jpg
ராமேஸ்வரம்,, மண்டபம் விஜயம் செய்த, முதல்வர் எம்.ஜி.ஆர்., அங்கு கடற்கரையில், மீனவர்களை சந்தித்து , குறைகளை கேட்டார்.. உடைந்த படகுகளை , பார்வையிட்டு, அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய உத்தரவிட்டார்.. அருகே, அமைச்சர் எட்மண்ட்...
(பின் குறிப்பு: இந்த மாதிரி ஒரு தலைவர் மீண்டும் நமக்கு கிடைப்பாரா ? காலம் தான் பதில் சொல்ல வேண்டும் )
courtesy dinamalar reporter ramakrishnan
எம்.ஜி.ஆர் முதல்வராகவும் , இந்திராகாந்தி
பிரதமராகவும் இருந்த போது , இலங்கை
அரசுக்குக் கொடுத்த அதிரடி நடவடிக்கை
இப்போது தேவை : டாக்டர் ராமதாஸ் .
## எம்ஜியார் , இந்திராகாந்தி அருமையெல்லாம்
மோடியைப் பார்த்த பிறகுதான் ராமதாசுக்கே
தெரியுது . இதில் சிறப்பு என்னென்னா , எம்ஜியார்
முதல்வராக இருந்தபோது , வன்னியர் சங்கம் மட்டுமே
நடத்தி வந்த ராமாதாஸ்சுக்கே ' அதிர்ச்சி வைத்தியம் '
கொடுத்தது ' வாத்தியார் ' தான் . எதுவாக இருப்பினும்
டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள் !
அடிமைப்பெண் விமர்சனம் by JEEVANANTHAM.
வேங்கைமலை ராணியாக இருக்கும் மங்கம்மா (பண்டரிபாய்) மீது ஆசைப்படும் செங்கோடனின் காலை ராணி வெட்டிவிடுகிறார்.இதை அறிந்த வேங்கைமலை ராஜாவான எம்ஜியார் மன்னிப்பு கேட்க சொல்லி அவனிடம் வருகிறார்.ஆனால் போர் புரியும் சூழ்நிலை ஏற்படும் போது இருவரும் சண்டை போடலாம் என தீர்மானம் எடுத்து ஒற்றைக்காலுடன் இருக்கும் செங்கோடனுடன் தானும் ஒரு காலை கட்டிக்கொண்டு சண்டையிடுகிறார். இதில் தோற்ற செங்கோடன் வஞ்சகமாக எம்ஜியாரை கொன்று விடுகிறான்.நாட்டையும் கைப்பற்றி விடுகிறான்.ராணி தப்பித்துவிடுகிறாள்.ஆனால் அவர்களது குழந்தை செங்கோடன் கையில் சிக்கி சிறையில் அடைக்கப்படுகிறது.
செங்கோடன் அங்கிருக்கும் வேங்கை மலை பெண்களை சங்கிலி போட்டு அடிமைப்படுத்தி விடுகிறான்.சிறையில் குழந்தை வெளியுலகம் தெரியாத ஆளாக வளர்ந்து பின் வேங்கைமலை ஆளால் தப்பிக்க வைக்கப்படுகிறான்.ஜீவா எனப்படும் வேங்கைமலை பெண்ணிடம் புது மனிதனாக வளர்கிறார் புது எம்ஜியார்.பேச்சு முதல் காதல் வரை அனைத்து கலைகளையும் கற்று தேர்கிறார்.தன் தாயார் உயிருடன் இருப்பதை அறிந்து எம்ஜியார் அவரை சந்தித்து சபதம் எடுக்கிறார்.அடிமைப்பட்டு கிடக்கும் பெண் சமூகத்தை விடுதலை செய்து விட்டு வந்து சந்திக்கிறேன் என்று...
இதற்கிடையில் பவளநாட்டின் தளபதியின் சூழ்ச்சியால் எம்ஜியார் ஜீவா இருவரும் கைதாகின்றனர்.அந்நாட்டின் ராணி பவளவல்லியின் காதலை ஏற்காததால் எம்ஜியார் இருக்கும் இடத்தினை செங்கோடனிடம் சொல்லி விடுகிறாள்.அதே சமயம் மங்கம்மாவினை கண்டுபிடித்து செங்கோடன் கொடுமைப்படுத்தும் போது எம்ஜியார் செங்கோடனை கொன்று தன் தாயாரையும் தன் நாட்டையும் காப்பாற்றி அடிமைப்பெண்களின் விலங்கை உடைப்பது தான் கதை.
எம்ஜியார் இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கூன் விழுந்தபடி நடித்து பின் ஒரு சண்டைக்காட்சியில் கல்லைத்தூக்கும் போது முதுகு நிமிரும் காட்சியில் நமக்கே புல்லரிக்கிறது.அதே மாதிரி பவள நாட்டில் கைகளை கட்டி இழுக்கும் காட்சியில் கைதட்டல் காதைப் பிளக்கிறது.கிளைமாக்ஸ் காட்சியில் சிங்கத்துடன் சண்டையிட்டு அதன் வாயை பிளக்கும்போது நாம் வாயைப் பிளக்கிறோம் உற்சாகத்தில்.
செங்கோடன் எம்ஜியாருடன் வலையில் குதித்துக்கொண்டு கீழே இருக்கும் குத்தீட்டிகளில் மோதாமல் நடக்கும் சண்டைக்காட்சியில் பிரமிக்க வைக்கிறது.அதே மாதிரி கிளைமாக்ஸ் காட்சியும் பவர்புல்..
இதில் ஜீவா, பவளவல்லியாக ஜெயலலிதா இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கவர்ச்சி வேடங்களில் கலக்கி இருக்கிறார்.படம் முழுக்க கவர்ச்சி உடையிலேயே வலம் வருகிறார்.நடனத்திலும் பின்னி இருக்கிறார்.ஒரு பாடலில் தன் கால்கள் மற்றும் இடையினில் மத்தளத்தினைக் கட்டிக்கொண்டு அடிக்கும் நடனத்தில் இப்போதைய கவர்ச்சி நடிகைகள் எல்லாம் கை கட்டி நிற்க வேண்டும்.
படத்தின் வசனங்களும் அருமை.பவளநாட்டின் மந்திரவாதியாக சோ, வேங்கைமலை வைத்தியராக சந்திரபாபு, தளபதியாக மனோகர் நடித்து இருக்கின்றனர்.
பாடல்கள் அனைத்திலும் சமூகக்கருத்துக்கள் பொதிந்து இருக்கின்றன.
ஏமாற்றாதே....ஏமாறாதே...
தாயில்லாமல் நானில்லை...
அம்மா என்றால் அன்பு....
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
காலத்தை வென்றவன் நீ....காவியமானவன் நீ
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
என ஆறு பாடல்கள்...அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.
இதில் அம்மா என்றால் அன்பு பாடலை ஜெயலலிதா பாடியிருக்கிறார் முதன் முதலாக.
ஆயிரம் நிலவே வா பாடலை நம்ம எஸ்பிபி அவர்கள் முதன் முதலாக எம்ஜியார்க்கு பாடியிருக்கிறார்.தமிழ்த்திரையுலகிற்கு எஸ்பிபியின் முதல் பாடலாக இதுவே இருக்கிறது.
கே வி மகாதேவனின் இசையில், கே.சங்கரின் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக படம் இருக்கிறது
http://i62.tinypic.com/357pyyu.jpg
இன்று பிறந்த நாள் கொண்டாடும் பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்கள்
இன்று போல் என்றும் எல்லா நலமும், வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க
என என் சார்பாகவும் , அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும்
இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.
ஆர். லோகநாதன்.
இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு இனிய நல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
இன்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடும் திருமதி சௌகார் ஜானகி மற்றும் திரு ரஜினிகாந்த் இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
அடிமைப்பெண் -1.5.1969 முதல் நாள் - ரிபோர்ட்
அடிமைப்பெண் வெளியான முதல் நாள் திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் திருவிழா போல் மக்கள் வெள்ளம்
ரசிகர்களின் ஆராவாரம் - படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி - மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு கிடைத்த
புகழ் மாலைகள் .இந்திய திரை உலகமே எம்ஜிஆரை பாராட்டியது .
முதல் நாள் அடிமைப்பெண் படத்தின் ரிபோர்ட் .
அடிமைப்பெண் - ஹாலிவுட் படத்திற்கு இணையாக எம்ஜிஆர் தயாரித்து உள்ளார் .
காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு - படம் முழுவதும் பிரமாண்டம் . .
எம்ஜிஆரின் சிறந்த நடிப்பு - சிறந்த தயாரிப்பு - ஜெய்பூர் அரண்மனை - பாலைவனகாட்சிகள் -சிங்கத்துடன் மோதும்
சண்டை காட்சி - இனிய பாடல்கள் - உலகளவில் தமிழ் சினிமாவின் பெருமை உணர்த்திய காவியம் .
அடிமைப்பெண் - முந்தய படங்களின் சாதனைகளை முறியடிக்கும் .
சங்கிலியால் கட்டப்பட்ட எம்ஜிஆர் தன்னுடைய தேகத்தின் பலத்தை காட்டி , சங்கிலியை உடைதெறிக்கும் காட்சி
அபாரம் . சிங்கத்துடன் மோதும் போது காட்டும் முக பாவங்கள் - ஜஸ்டின் - மனோகருடன் மோதும் சண்டை காட்சிகள் அருமை .
1969ல் மெகா ஹிட் படம் .எம்ஜிஆரின் அடிமைப்பெண் - முதல் நாள் ரிபோர்ட் சொல்லாமல் சொல்லியது .
.
Adimai Penn – Tribute to the centenary of Indian cinema
One among the box office hits of MGR-Jayalalithaa team work was ‘Adimai Penn’. K Shankar directed movie ran25 weeks at Madurai and 100 days in all major cities of Tamil Nadu. Around three crore people saw this movie. The film ‘Adimai Penn’ told the story of revenge of a kingly family. The villain of the movie is a suburban king Sengodan who kill the king and imprison the queen and son. With the help of princess Jeeva the prince escapes and later captures his kingdom. The prince kills the villain Sengodan and save the queen from the prison. The supporting actors in the movie were R S Manohar and Cho Ramaswamy.Box office hit movie and broken the perivious records in 1969.
இன்று பிறந்த நாள் காணும் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்கள்
இன்று போல் என்றும் வாழ்க
பல்லாண்டு வாழ்க
என வாழ்த்தும்
தாய்க்கு தலைமகன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
இன்று பிறந்தநாள் காணும் எங்கள் அன்பு சகோதரர் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.
மக்கள் திலகத்தின் ஆசிகள் என்றும் அவருக்குத் துணை நிற்கும்.
பல்லாண்டு வாழ்க.
11000 பதிவுகளைக் கடந்து மாபெரும் சாதனை நிகழ்த்தியிருக்கும் எங்கள் மக்கள் திலகம் திரியின் கேப்டன் அருமை நண்பர் திரு.வினோத் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
http://www.youtube.com/watch?v=_cW2aNdWT4o
The following Lines is said in LINGAA:
நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
Best wishes for the Day Professor Sir
http://www.youtube.com/watch?v=nS08v1WFBIM