-
படுத்திய பாடு இருக்கிற்தே என
எதிர்வீட்டு ராமசாமி ஆரம்பித்தால்
விடமாட்டார்.
அவரது பழைய அலுவலகம், வீட்டில் மகன்,மருமகள்,
பேரன், பேத்தி,
பார்த்த படம் என
எல்லாவற்றையும் குற்றம் சொல்வார்..
ம் கொட்டிக் கேட்பேன்..
சில நாட்களாகக் கிழவரைக் காணோம்...
எங்கே எனக் கேட்டால்.
முதியோர் இல்லத்திலாம்..
“ரொம்ப்ப் படுத்தறார்ங்க’ என வந்தது பதில்...
-
//'யோகம்' என்று கவிதை துவங்கத் தவறிவிட்ட போதிலும் புது நண்பர்கள் சேர்வது திரிக்கு யோகமே என்பதால் சின்னகண்ணனை வரவேற்போம்!//
பதில் வந்தது வேகமாய்
சுவற்றில் அடித்த பந்தாய்
அடுக்களையில் வீசும் புயல்
ஆத்திரம் பாத்திரங்கள் மேல்
'ணங்' என்றது போர் முரசு
நாராசமான எச்சரிக்கையது
கண்ணாட்டியை ஏசும் முன்பு
கணவன் யோசிக்க வேண்டாமா
-
ஷக்திப் ப்ரபாவின் ’பெருமைப் படுத்துவோம்’ என முடித்ததை கடைசி இடுகை என எண்ணி விட்டேன்..ப்டுத்துவோம் என அந்தாதியை எடுத்து மிகக் குழம்பி இட்டது...மன்னிக்க நண்பரே...
இந்த் இழை சுவாரஸ்யமாக உள்ளது..
*****
வேண்டாமா என்க்கேட்டால் ஆமா மென்க
...வேகமாக இட்லிகளை வேக வைத்து
தீண்டினால் கொப்பளிக்கும் சூட்டில் நீட்டி
...த்கதகக்கும் சாம்பாரைத் தட்டில் விட்டுத்
தேன் த்டவிச் சொன்னேன்நான் ஏண்டா இன்னும்
..திண்ணமாக் இரண்டுகூட வைக்க லாமா..
போதும்மா முன்சொன்ன தோசையைத் தான்
..வார்த்துத்தா என்கின்றான் என்ன செய்ய...
-
செய்ய முடிந்த காரியம் எத்தனையோ
களிமண்ணை பிசைந்து கலையாக்கலாம்
செய்ய முடியாத வினைகளிங்கு பல பல
நாயின் வாலை நிமிர்த்திடவே முடியாது
செய்ய முடிந்ததையும் முடியாததையும்
பகுத்தறிந்தால் தன்னால் தீரும் கவலை
-
கவலையின் நிழல்படிந்தமுகம்....
விழியோரம் காய்ந்த கறை...
எதிர்பிளாட்பாரத்தின் ரயிலில்
ஜன்னலோரத்தில் அவள்...
காரணங்கள் அணிவகுக்க...
ப்ரீட்சையில் தேறவில்லையா..
ம்ம்..அவ்வளவு சின்னவயதில்லை...
காதலா..
த்ந்தை ஏதாவது சொன்னாரா...
கணவன் புரிந்து கொள்ளவில்லையா..
கடனட்டை பிரச்னையா...
உடல் முடியவில்லையா..
ப்ளாட்பாரத்தின் சத்தங்களை மீறிய
சலனமில்லாத பார்வை ஏன்..
கண்மை கரைந்த்தால் அழகாய்த் தெரிகிறாளா..
பொட்டு கருநீலமா கருப்பா...
நீலம் மஞசள் கலந்த சுரிதார் அழகுதான் இல்லை...
சற்றே கலைந்த கேசம் கூட அழகாக....
தட்தட்த்து என் ரயில் வந்து
அவளை மறைக்க
அனைத்தும் மறந்து அருகில் கேட்டேன்
எஸ்-3 எங்கே நிற்கும் என....
-
நிற்கும் என காத்திருந்தாள்
நினைக்காமல் பொழிந்த மழை
நனைய ஆசைதான் மனதில்
நிறைவான புதிய உணர்விது
கட்டிப்போடும் கடமைகளிருக்க
காதலை கடந்து போகிறாள்
-
பவளமணி ஐயா...இது வைர வரிகளாக்கும். படிக்கப் படிக்க வெகு சுவையாய் உள்ளது..நன்றி..
போகிறாள் மனதில் வீசும் போர்க்களம் ஒதுக்கி விட்டு....
...ஏகுவாள் நெஞ்சில் கொண்ட எண்ணமும் நீங்கிடாமல்....
பாகினில் கரைந்த வெல்லம் பக்குவம் கொண்டு நாவில்....
..வேகமாய்க் இனிக்கும் வண்ணம் வையகம் காப்ப தற்கே...
துறவு வேண்டும் என்றே நீயும் முடிவும் செய்தாய்.....
..துயரம் இல்லா வாழ்க்கை தொடரும் எனவே எண்ணி
உறவு எல்லாம் உலகில் உறையும் மாயை தானே..
...உதறித் தள்ளி வாநீ இங்கு புவியும் வாழும்....
பவளங்கள் கோர்த்த மணிகள்..
..பர்ர்வையில் மின்னுதல் போலே...
தவத்தில்தான் சிந்தையும் கொண்ட......
..தங்கமணி மேக லயுந்தான்...
உவப்புடனே விம்மும் நெஞசம்...
...உலகமதின் மகிழ்ச்சி எண்ணி............
உளமார எடுத்தாள் காவி...
...உடுத்தித்தான் செய்தாள் நன்றை....
-
நன்றை ஒதுக்கி
நகைக்கும் குணம்
நாகரீக மோகம்
நடுங்குது மனம்
நாளும் வளருது
நச்சு விருட்சம்
நடக்குது கூத்து
நாராச பாட்டு
நிலை தடுமாறுது
நாளைய தூண்கள்
நிலையாது போகட்டும்
நிழலாய் மறையட்டும்
நிலவின் கிரகணம்
நிதமும் வேண்டினேன்
-
வேண்டினேன்
முறுவலித்து நின்றிருந்த
குட்டிக் கிருஷ்ணனை..
மனைவி, மகள்,
பழைய காதலி,
அலுவலகப் பதவி உயர்வு,
தொலைக்காட்சித் தொடர் கதானாயகி,
இந்திய அணியின் விளையாட்டு...
மற்றும் மற்றும்..
எல்லாருக்காகவும், எல்லாவற்றிற்கும்..
கண்மூடி.. மனமுருகி..
கண் திறந்ததில்
இதழ் விரிந்து
சிரிப்பு பூத்திருந்தது..
-
பூத்திருந்தது புதிய காலை
காத்திருந்தது செய்தித்தாள்
தித்தித்தது குடித்த காப்பி
ஈர்த்தது குறுக்கெழுத்துப் புதிர்
திறந்தது இணையப் புத்தகம்
தொடர்ந்தது குறுக்கெழுத்துப் பதிவு
அடுத்தது பண்ணை விளையாட்டு
விளைந்திருந்தது இரவு விதைத்தது
சேர்ந்திருந்தது பரிசுக் குவியல்
திளைத்திருந்தது இளைய மனம்