Thanks Saradhaa for the continuous support
Printable View
Thanks Saradhaa for the continuous support
தேவயானியின் பிரசவத்துக்காக கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மஞ்சள்மகிமை தொடருக்கு இடைவேளை விட்டார்கள். இப்போது பிரசவம் முடிந்து மீண்டும் தேவயானி நடிக்கத் தயாராகி விட்டதால் மஞ்சள்மகிமை மீண்டும் தொடரத் தொடங்கியிருக்கிறது.
"திருமண உறவில் விரிசல் ஏற்படவே புகுந்த வீட்டை விட்டு வெளியேறுகிறாள் கதாநாயகி. தற்செயலாக ஒரு வீட்டில் அடைக்கலமாக, அங்கு இருப்பவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி. அதே வீட்டில் கதாநாயகியை போன்ற தோற்றம் கொண்ட இளம் பெண் காணாமல் போனதால் சோகத்தில் ஆழ்ந்திருந்த குடும்பம், அடைக்கலமாக வந்த புதுவரவால் ஆனந்த கூத்தாடுகிறது. புது சொந்தங்கள் கொடுத்த அன்பில் திக்குமுக்காடினாலும் தன்னுடைய சாமர்த்தியத்தால் அந்த வீட்டில் இருந்து காணாமல் போன பெண்ணை கண்டுபிடித்து ஒப்படைக்கிறாள். பின்னர் தன்னுடைய கணவனிடம் நியாயத்தைக் கேட்டு போராட புறப்படுகிறாள்.''
இதுதான் `மஞ்சள் மகிமை' தொடரின் கதைக்களம். வரும் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
தேவயானி நாயகியாக நடிக்கிறார். மோகன் சர்மா, ரவிக்குமார், வேணு அரவிந்த், அஜய் ரத்தினம், லதா, சீமா உள்பட பலர் இத் தொடரில் நடிக்கிறார்கள்.
கலைஞர் டி.வி.யில் தினமும் காலை 11.30 மணிக்கு ஒளி பரப்பாகி வரும் நெடுந்தொடர் கல்யாணப்பரிசு இந்த தொடர் 100-வது நாளை நோக்கி சென்று கொண்டுள்ளது.
இந்த தொடருக்கு பெண்களிடமிருந்து தினமும் நூற்றுக்கணக்கான விமர்சனக் கடிதங்கள் வருவதால் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த விமர்சனத்திற்கு வாரம் ஒரு பட்டுப் புடவை வழங்கப்பட்டு வருகிறது.
-
தத்தெடுத்த மகளுக்கும், வளர்த்த தாய்க்கும் இடையே நடக்கும் சொத்துத்தகராறுதான் கதை. தத்தெடுத்த மகள் மீது பாசம் காட்டும் தந்தை, அவளுக்கு சொத்தை எழுதி விட, தத்தெடுத்த மகளுடன் வளர்ப்பு தாய் மோதுகிறாள். 100 நாளை தாண்டி, பழனியில் இப்போது கதை ஓடிக்கொண்டிருக்கிறது.
தசாவதாரத்தின்' இசை நாடா வெளியீட்டின் மிக பிரமாண்ட விழா கலைஞர் "டிவி'யில் ஒளிபரப்பப் பட்டது. மிகப்பெரிய நெட்வொர்க், கலைஞர் "டிவி'யிடம் உள்ளது. எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும், நிகழ்ச்சி நிர்வாகிகளும் நிரம்ப அனுபவஸ்தர்களாகத்தான் இருப்பர்.
இத்தனைக்கும் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு கிடையாது. பதிவு ஒளிபரப்பு தான். பாட்டு, நடனம், மிமிக்ரி என வேறு எந்த அயிட்டங்களும் இல்லை. மிகப் "பெரியவர்கள்' (முதல்வர், ஜாக்கிசான், கமல், அமிதாப், மம்முட்டி) மேடையில் இருந்தனர். பார்வையாளர்கள் இடத்தில் திரையுலக பிரபலங்களின் பெரும் அணிவகுப்பு. ரசிகர்கள் செம கூட்டம். கேமரா, மேடையிலேயே படுத்து தூங்கிவிட்டது. மோஷன் கேமரா அல்ல அது. ஸ்டில் கேமரா, நோ மூவ்மென்ட்ஸ். மல்லிகா ஷெராவத் "படு கிளாமராய்' துளி ஆபாசமில்லாமல் எல்லைக் கோட்டில் உடுத்தி உயிரை வாங்கினார். ஜாக்கிசானின் சீன மொழியில் பேசி அவரை வரவேற்றிருக்கலாம் நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகை ஷோபனா.
இதில், மற்ற அனைவரையும் அவரவர் தாய்மொழியில் அல்லது "திரை' மொழியில் வரவேற்று விழாவின் பாணியை வித்தியாசப்படுத்தி இருந்தார். ஒவ்வொரு பிரபலம் பேசுவதற்கு முன்னும் அவர்கள் சம்பந்தப்பட்ட திரைக் காட்சிகள் காட்டப்பட்டன. முழு விழாவையும், அதிரடியாய் ஒரே முழுங்காய் விழுங்கி ஏப்பம் விட்டவர் ஜாக்கிசான். என்ன பணிவு, என்ன மரியாதை! ரஷ்ய, சீன நாடுகளில் மக்கள் கைதட்டும்போது மேடையில் இருப்பவர்களுக்கும் ஒரு பண்பாடு உண்டு. அது பதிலுக்கு நன்றி சொல்லுதலாய் கைதட்டுவது. ஒவ்வொரு ரசிகர்களின் கைதட்டலுக்கும் ஜாக்கியும் தட்டினார். ஒன்றுமே புரியாவிட்டாலும் புளகாங்கிதமாய் அமர்ந்திருந்தார்; தனக்கு போட்ட மல்லிகை மாலையை முகர்ந்து சந்தோஷித்தார். மேடையில் கிடந்த காகித குப்பையை எடுத்து ஓரம் போட்டார்.
மிக மிக இயல்பாய், குழந்தையாய் இருந்து அங்கிருந்த அனைவருக் கும் "பாடமாக', "உயிருள்ள மனித பாடமாக' திகழ்ந்தார். "முதலமைச்சர் கருணாநிதி' என்று ஜாக்கி தமிழ் பேசியது கண்டு முதல்வரே வியப்புற்றார். என்னை பற்றியா சொல்கின்றனர் என்று கேட்க, அடிக்கடி தன் மூக்குக்கு நேரே ஆட்காட்டி விரலை காட்டி காட்டி அவர் சைகை செய்து கேட்டது கண் முன் நிற்கிறது. முதல்வர், ஜாக்கிசானின் வரலாற்றை பிறப்பிலிருந்து தொட்டுக் காட்டியவிதம், விசிலடிச்சான் குட்டிகளுக்கு நற்போதனை. ஜாக்கிசான் தன்னை பற்றி எழுதிய புத்தகத்தில் "பெற்றோர் இருக்கும் போதே மரியாதை செலுத்துங்கள். கல்லறையில் மரியாதை செலுத்தாதீர்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். அதை இளைஞர்கள் தங்கள் இதயத்தில் இருத்தி கொள்ள வேண்டும்.
ஆனால் 'கோலங்கள்' சீரியலில், திருச்செல்வம் புத்திசாலித்தனமாக 'அபி' அமெரிக்கா போய்விட்டதாக 'கதை' பண்ணி, தேவயானியை பிரசவத்துக்கு அனுப்பிவிட்டார். காரணம் அபி இல்லாமலேயே கதையைக்கொண்டு போகுமளவுக்கு தொல்ஸ், ஆர்த்தி, ஆனந்தி, ஆதி கேரக்டர்கள் ஸ்ட்ராங்காக இருக்கின்றன.Quote:
Originally Posted by R.Latha
What happened to Thenmoziyal serial...Since last monday no mention about Thenmoziyal...After the 'manjal mahimai' restart, namma kudumbam shifted to 21.00hrs which was previously Thenmoziyal slot.
Rekha IPS...it seems Rekha can not do any thing....The criminals are more smarter than Rekha always...Yesterday's episode, Rekha with 4 police officials tried to catch the criminal David....They rounded the his house in a planned manner but finally as usual he escaped...
கலைஞர் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 க்கு ஒளிபரப்பாகி வரும் இன்னொரு நடன போட்டியான 'ஆட்டம் பாட்டம்' நிகழ்ச்சியில் பங்கேற்போர் மிக அருமையாக ஆடி வருகின்றனர். 'கையில் காசு வாயில் தோசை' என்பதுபோல ஒவ்வொரு சுற்றுக்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்றோர் அடுத்த சுற்றுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஒருசிலர் தவிர, பெரும்பாலோரிடம் நல்ல நடனத்திறமையிருக்கிறது. அட்டகாசமாக ஆடுகிறார்கள்.
நேற்று நடந்த 'HORROR EPISODE' ல் பங்கேற்றோர் அனைவரும், பேய் சப்ஜெக்டை எடுத்துக்கொண்டு அசத்தினர். ஒருவரிடம் மட்டும்தான் ஆட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது. மற்றவர்களெல்லாம் நன்றாக ஆடினர். கான்செப்டுகளும், லைட்டிங்ஸ்,செட் அரேஞ்ச்மெண்ட், சவுண்ட் எஃபெக்ட் அனைத்தும் சேர்ந்து கலக்கின.
முன்பு அப்பாஸ் - காயத்ரிரகுராம் நடுவர்களாக இருந்தபோது சற்று தொய்வடைந்த நிகழ்ச்சி பின்னர் சென்ற வாரம் முழுக்க பூஜா - பிருந்தா நடுவர்களாக இருந்தபோது மீண்டும் சுறுசுறுப்படைந்தது. நேற்று முதல் மீண்டும் 'பூஜா - பிரசன்னா மாஸ்ட்டர்' கூட்டணி நடுவர் பொறுப்பை ஏற்று சிறப்பாக நடத்துகின்றனர்.
தினமும் அரைமணிநேரம் நிகழ்ச்சிதான். ஆனாலும் 20 - 20 மேட்ச் போல விறுவிறுப்பாக இருக்கிறது. அந்த காம்பியர் பொண்ணு ரொம்ப நல்லா பண்ணுகிறது.
:clap: :clap:Quote:
Originally Posted by saradhaa_sn
'ஆட்டம் பாட்டம்' போட்டியில் நேற்றும் 'HORROR ROUND EPISODE' தொடர்ந்தது. (தினமும் அரைமணிநேரமே என்பதால் ஒவ்வொரு எபிசோடும், குறைந்தது மூன்று நாட்களுக்கு வருகிறது).
நேற்றும் பேய்களின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. ஒவ்வொருவரும் கொண்டு வரும் கான்செப்டகளைப்பார்க்கும்போது, அப்பப்பா... எப்படியெப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் என்று மலைப்பு வருகிறது. (வருகிற பேய்கள் அத்தனையும் நடுவர் பூஜாவை பயமுறுத்துவதை ஒரு அங்கமாக வைத்திருக்கிறார்கள். அதிலும் ஒரு பேய், பூஜாவுக்கு தெரியாமல் அவருக்குப் பின்னாலிருந்து வந்து திடீரென பயமுறுத்தியபோது.... அய்யோ. பாவம் அந்தபொண்ணு). ஒருவர் பச்சை மாமிசம் தின்பவராக வந்தவர், உடம்பு முழுக்க மைதா மாவினால் மேக்கப் போட்டு, அங்கங்கே ரத்தம் வடிவதுபோல பண்ணியிருந்தது பயங்கரமாக இருந்தது. டெக்னிக்கல் அம்சங்களில் நம்மவர்கள் ரொம்பவே முன்னேறியிருக்கிறார்கள்.
வந்த பேய்களில் நல்லபேய் எது என்பதை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ரசிகர்களிடமே உள்ளது. நல்ல பேய் என்றால் சாந்தமான பேய் அல்ல, அதிக அட்டகாசம் செய்து பயமுறுத்திய பேய் எது என்பதுதான்.
மனிதர்களுக்கு ஓட்டுப்போட்ட காலம் போய், இப்போது பேய்களுக்கு ஓட்டு. ('உங்கள் ஓட்டு ரத்தக்காட்டேரிக்கே', 'உங்கள் ஓட்டு மோகினிப்பிசாசுக்கே' என்று ஆட்டோக்களில் கத்திக்கொண்டு வராமல் இருந்தால் சரி).