பாராட்டிய ஷங்கர்....நன்றி சொன்ன ராஜமௌலி!
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பேசப்பட்டு வரும் படம் பாகுபலி. படத்திற்கு பல ஹாலிவுட் டிவி சேனல்கள் பாராட்டுகளை தெரிவித்ததோடு ஹாலிவுட்டில் ரீமேக் செய்யும் முயற்சி எடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரம்மாண்ட உருவாக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஒரே நாளில் 160 கோடிகளை வசூலித்து இந்தியாவின் அதிக முதல் நாள் வசூல் பட லிஸ்டில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் பாகுபலி படக்குழுவையும் இயக்குநர் ராஜ மௌலியையும் வெகுவாக புகழ்ந்துள்ளார்.
பாகுபலி காவிய படைப்பு, கவித்துவமான கற்பனை, வலிமையான கதாபாத்திரங்கள், நல்ல ஹீரோயிஸம், ஆச்சர்யமூட்டும் காட்சியமைப்பு, சியர்ஸ் டு ராஜமௌலி டீம் மற்றும் ராஜமௌலி என ட்விட்டரில் பாகுபலி படம் குறித்து தெரிவித்துள்ளார்.
இதற்கு நன்றி கூறி பதில் ட்வீட் கொடுத்துள்ளார் ராஜ மௌலி, உங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சார், உங்கள் மெஸேஜ் வெறும் அறிக்கை இல்லை, அது ஒரு சான்றிதழ் , உங்கள் பாராட்டால் மொத்த குழுவும் மகிழ்ச்சியாகியுள்ளோம். என ராஜமௌலி ஷங்கரின் பாராட்டுக்கு நன்றி கூறியுள்ளார்.