ராகவ் ஜி... அது ஜமுனா ராணி அல்ல...எஸ்.ஜானகியின் குரல்.
இந்தப் பாட்டை தனிமையில் இருக்கும்போது கேட்டாலும் சரி.. கூட்டத்தில் இருக்கும்போது ஹெட்போனில் கேட்டாலும் சரி... நம்மை எங்கேயோ தூக்கிக் கொண்டு போய்விடும்..
Printable View
கம்ப்யூட்டர் கைவசம் இல்லை. இது அண்ணன் வீட்டிலிருந்து அவசரப் பதிவு. நிதானமாக வந்து படிக்கணும்..
தாயின் கருணை பாடலும் ஏற்கனவே பதிவானதுதான் என்று நினைக்கிறேன்.
ஆனாலும் என்றும் இனிமை குறையாத பாடல்களில் இதுவும் ஒன்றல்லவோ
https://www.youtube.com/watch?v=zgoxSlDf_so
வேண்டாம் சார், துளி கூட எடுத்து வைக்காதீர்கள்...அதற்கு அவசியமும் இல்லை.. நம் மனிதர்கள் நடுவே எப்போது வேண்டுமானாலும் 24 x 7 கிடைக்கக் கூடியதாயிற்றே...Quote:
'துளி விஷம்' கூட எடுத்து வைக்கவில்லை
நன்றி மது.. அதென்னவோ தெரியவில்லை.. என்ன மாயமோ தெரியவில்லை.. கொஞ்சம் குரல் இழைவாகக் கேட்டு விட்டால் உடனே மனம் ஜமுனாராணி பெயர் சொல்லி விடுகிறது..
பதிவிலும் திருத்தி விடுகிறேன்.
நண்பர்கள் அனைவரின் வாழ்த்திற்கும் வரவேற்பிற்கும் மிக்க நன்றி
இறக்கை கட்டி பறக்குதையா மதுரகானம் திரி பாகம் 5 .
சு எ சு கலைச்செல்வி உதடு சுருக்கி அழைக்கும் மது ஸ்டில் அபாரம்
நமது திரி கொட்டட்டும் ' ஜெயா' பேரிகை .
மது என்றுடன் எனக்கு நினைவிற்கு வந்தது .
கிளாப் கிளாப் சுனந்தனி கூப்பிடும் 'மதுக்கண்ணா' .
(எந்த தண்ணீர் குடிச்சாங்க தெரியல) கரகர (ப்ரியா) ஹலம் கூப்பிடும் 'மது மது ' .ஸ்வீட்டி ஜெயப்ரதா கூப்பிடும் 'மது டியர்'.
ஏகப்பட்ட பாட்டுகள் அலசபடுகின்றன. எதைப்படிக்க எதை விட என்று தெரியவில்லை.
நேற்று கேரளாவில் குமிளிக்கு ஒரு தனியார் ஜீப்பில் அலுவலக நண்பர்கள் உடன் பயணித்தேன். ஜெயம் ரவி நடித்த பேராண்மை திரைப்படம் படப்பிடிப்பு நடந்த குட்டிகானம்,பாம்பனார் போன்ற பகுதிகளை கண்டு ரசிக்க முடிந்தது.
http://img1.holidayiq.com/photos/ku/...05-cropped.jpghttp://tamil.gallery/images/2010/09/Peranmai-336.jpg
1985-2000 கால கட்டகங்களில் ராஜாவின் ராஜாங்கம் என்ற பாடல் தொகுப்பு கொண்ட CD ஒலித்து கொண்டு வந்தது. பாடல்கள் அனைத்திலும் tabelaa வாத்தியம் கொடி கட்டி பறந்தது.
சில பாடல்கள் ஒரே மெட்டு போன்றே தோன்றியது . எடுத்துகாட்டாக
'“பெரிய வீட்டு பண்ணக்காரன்” படத்திலிருந்து கே.ஜே. யேசுதாஸ் மற்றும் சித்ரா அவர்களின் குரலில் “மல்லிகையே மல்லிகையே தூதாக போ” மற்றும் சின்னவர் திரைப்படத்தில் இருந்து "கொட்டுங்கடி கொட்டு நாயனம் காற்றினில் " பாலாவின் அமுத குரல்
நட்புடன்
கிருஷ்ணா ஜி
ஆஹா...வாங்க கிருஷ்ணாஜி.. என்னவொரு இயற்கையான புகைப்படங்கள்.. (யாரங்கே.. நான் முதல் போட்டோவைத் தான் சொன்னேன் :) ) பேராண்மை எனக்குப் பிடித்த படமும்கூட.. க்ளைமேட் எப்படி இருக்கிறது..
ஒரு மெட்டுக்குப் பாட்டெழுதி அது செலக்ட் ஆகாமல் அந்தப்பாட்டுக்கு வேறு ஒரு பாட்டு எழுதிவிட்டாராம் கவிஞர். முதலில் எழுதிய பாட்டை வேறொரு மெட்டுக்கு உபயோகப் படுத்தி விட்டாரம்..புரியுது ஆனால் புரியலை இல்லை..
தன்னனா தனன்ன தன்ன க்கு மொட்டுவச்ச வாசன மல்லி என எழுதி அது காட் ரிஜக்டட்
தென் தெ போயட் ரோட் அஸ்... ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ண்ம ஸாங்க்..
அப்புறம் கருடாசெளக்கியமாக்கு ஒரு மெட் இசையமைப்பாளர் போட இவர் எழுதிய
மொட்டு வச்ச வாசனை மல்லி
வாங்கி வந்தேன் ஆசையில் அள்ளி
அதையே உபயோகப் படுத்திக்கொண்டாராம்..அந்த மெட்டுக்கு..அந்தக் கவிஞர் வைரமுத்து..ஒரு பேட்டியில் சொன்னார் இதை..
KrishnaG
http://www.animatedgif.net/welcome/ctmwelcome_e0.gif
Long time .. no see...
இரண்டாம் ஃபோட்டோ எப்படியிருந்தால் இயற்கையாக இருக்கும் சி.க. சார்... கொஞ்சம் சொல்லுங்களேன்...Quote:
ஆஹா...வாங்க கிருஷ்ணாஜி.. என்னவொரு இயற்கையான புகைப்படங்கள்.. (யாரங்கே.. நான் முதல் போட்டோவைத் தான் சொன்னேன் )
ஏனென்றால் இயற்கை என்றால் இங்கே ஏகப்பட்ட அர்த்தமிருக்கு... சிவாஜியையே எடுத்துக்குங்களேன்.. அவருக்கு கொஞ்சம் கூட இயற்கை நடிப்பு ஒத்து வர மாட்டேங்குதாம்..
(நான் சொல்லவில்லை சார்....)
படத்தின் பெயர் சொல்ல இன்று வரை நிலைத்து ரசிக்க வைக்கும் பாடல்.முதல் இரண்டுவரிகளைமீண்டும் மீண்டும் ரீவைண்ட் செய்து கேட்டுக் கொண்டே இருக்கலாம்.பாலாவின் தேன் மதுரக்குரல் மற்ற மெலடிகளை விட இதில் குழைவு அதிகம்.
பொதுவாக சந்தோசம்சொன்னால்தான் சுகம்.ஆனால் இதில் சோகம் சொல்வதும் இதம் என்பதை பாலு பாடும்போது மயங்க வைக்கிறது.
இளையராஜா +பாலு*பிரபு கூட்டணியில் மற்றும் ஒரு சூப்பர்ஹிட் பாடல்.இன்றைய இரவு நேர தாலாட்டாக வைத்துக் கொள்ளுங்கள்.
நிலவொன்றுகண்டேன் என் ஜன்னலில்
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண் மை
அது சொல்லும் உண்மை
(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)
கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்
பனித்தோட்டம் யாவும் அனலாக மாறும்
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
பூவுக்கு வாய்ப்பூட்டு
என் சோகம் நீ மாற்று
என் வாழ்விலே தீபம் ஏற்று
(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)
நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே
நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானே
உடல்கள் வேறு உயிர் ஒன்று தானே
நான் இங்கு நானல்ல
என் துன்பம் யார் சொல்ல
என் தெய்வமே நீ பெண்ணல்ல
(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)
Nilavondru கண்டேன் - எஸ்.பி.பி. - ஜானகி -. Kairaa…: http://youtu.be/AXo8i3tVPWI
படம்:கைராசிக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
ஹச்சோ இந்த ஆட்டைக்கே வரலை ராகவேந்திரா சார்.. இரண்டாம் போட்டோவும் இயற்கையாவே இருக்கு சரியா :) அந்த என்.சி.சி மாணவிகளின் விளையாடும் போஸ்.
இயற்கையான நடிப்பு தான்.. நான் சொன்னது முதல் போட்டோ நேச்சர் பற்றித்தான்..
ஒரு நகைச்சுவைக்காகத் தான் சொன்னேன்..
இரண்டாவது பாரா என்னை மிகவும் வேதனைப் படுத்திவிட்டது..ந.திக்கு இயற்கையாக நடிக்கத் தெரியாதா..அப்படிச் சொல்பவர்களை எல்லாம் ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ராகவேந்தர் சார்.. அவரைப் பற்றி உங்களுக்கு நிறையத் தெரியும்.. எனக்கு ஒரு தம்மாத்தூண்டு ரசிகன் என்ற முறையில் அவரது மேக்ஸிமம் படங்களைப் பார்த்தவன் என்ற முறையில் நன்றாகவே தெரியும்....எனில் மற்றவர் சொல்வதைக் கேட்டு வருத்தப் பட வேண்டிய அவசியமில்லை..அதற்காக சண்டை போட எனக்குத் தெரியாது..உள்ளுக்குள் வைத்துப் புழுங்கவும் மாட்டேன்.. ஐ வில் இக்னோர் தெம்..
வேறென்ன சொல்வது என எனக்குத் தெரியவில்லை..
சி.க. சார்
நான் அதையெல்லாம் சட்டை செய்பவனே இல்லை. பொதுவான ஒரு பேச்சை சுட்டிக்காட்டினேன்.
மற்றபடி மனம் நோகும் விஷயமெல்லாம் ஏதுமில்லை. ஸோ.. கூல்....
இதோ பாருங்கள் உங்கள் பேர், நம்ம வாசு சார் பேர் எல்லாம் நடிகர் திலகம் சொல்கிறார். கேட்டு ஆனந்தப்படுங்கள்...
https://www.youtube.com/watch?v=RvzIQsSnb-c
பாடகர் திலகத்தின் உன்னதமான குரலில், மெல்லிசை மன்னரின் சூழலுக்கேற்ற மெட்டு மற்றும் பின்னணி இசையில், காலத்தை வென்று நிற்கும் சிறந்த பாடல். என்ன ஸ்டைல்.. தலைவர் நிற்பது, நடப்பது எல்லாமே இந்தப் பாட்டில் நம்மை கட்டிப்போட்டு விடும்.
குறிப்பாக அந்த வரி... குயில் இட்ட முட்டை என்று காக்கைக்குத் தெரியும், அது கூவும் போதும் தாவும் போதும் யாருக்கும் புரியும்..
இந்த வரிகளின் போது கை விரல்களாலேயே அதைப் பற்றிச் சுட்டிக்காட்டும் பாவனை..
ஆஹா... தமிழகம் பெற்ற தவப்புதல்வனல்லவா தலைவா நீ...எனக் கூவத் தோன்றும்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
ஒரு மலரும் நினைவு.. மீள் பதிவாகக் கூட வைத்துக்கொள்ளலாம்.
இந்தப் படம் 1978ல் சென்னை சாந்தியில் வெளியான போது ந.தி.யின் படப்பட்டியலை எழுதி மாடியில் லௌஞ்சில் வைத்திருந்தேன். அதைப் பற்றிய செய்திக்குறிப்பு, செப்டம்பர் 1978ல் வெளிவந்த ஆனந்த விகடன் துணுக்கு ஸ்பெஷலில் மூன்றாம் பக்கத்தில் இடம் பெற்றது, மறக்க முடியாத விஷயம்.
கிருஷ்ணா சார்!
உங்களுக்காக சின்னா சார்பில் என்னுடைய பதில் இயற்கை போட்டோ. மோகன்லாலைப் பார்த்தால் கொஞ்சம் பத்திகிட்டு எரியுதுதான்.:) ஆனால் கூட இருப்பவ்களைப் பார்த்ததும் மனம் சாந்தியடைஞ்சிடுது. விழியோரம் சில நேரம் கனவுகள் வருமோ நாயகியைப் பாருங்கள். என்னமாய் காமெரா ஸ்டேன்டை பிடித்துக் கொண்டு நிற்கிறார்! எங்கள் நெய்வேலியில் தெருவில் கடை போட்டு சேலை விற்ற மாதுரியா இவர்! நம்பவே முடியல. சின்னா வேற நிக்கும் பிகர்களைப் பற்றி விவரம் கேட்பதற்குள் நான் ஓடியே போய் விடுகிறேன்.
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...4a&oe=56639EA1
ஹைய்யா ஜாலி! நாளை மறுநாள் நம் செந்தில் சாரை பார்க்கப் போகிறேனே! முடிந்தால் செந்திவேல் சாரையும். அப்புறம் ராகுல்ராம்.
சிவனேன்னு முழிக்கிற இந்தக் குழந்தைங்க யாருங்கோ?
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...3c&oe=569D804Bhttps://scontent.fmaa1-2.fna.fbcdn.n...aa&oe=56A0FF3E
முதல் போட்டோவில் இருப்பது மார்க்கண்டேயனின் வாரிசுகள்... இரண்டாவதில் பெருசு ஈயடிக்கும் வில்லன் போல தெரிகிறது. சின்னது யாரோ ? கன்னட வாரிசா ?
கரீட்டு. அதேதான்.
From ondru pattaal uNdu vaazhvu
sala sala raagathile........
http://www.youtube.com/watch?v=28pzpPyKzz0
Lyrics: Pattukkottai KalyaNasundaram
Reminds of my summers wading in Vettar river near my ancestral village ! :)
ஹாய் குட்மார்னிங் ஆல்..
ராஜ் ராஜ் சார். நான் கேட்டிராத பாட்டு.. சலசல ராக்த்திலே.. பட்டுக்கோட்டையார் எனப்து ஒரு போனஸ் தகவல்..வாவ்..
சலசல ராகத்திலே
டம்மு டும்மூ தாளத்திலே
சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா நீ
சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா
.
ஆத்துக்குள்ளே நானிருக்க அக்கரையிலே மனமிருக்க
அலைமேலே அலை எழுந்து ஆளை வந்து தள்ளிடுதே
நேரத்திலே போகணும் நீண்ட கதை பேசணும்
ஆழத்தையும் தாண்டியே அன்பு முகத்தைப் பாக்கணும்
அன்பு முகத்தைப் பாக்கணும்
.
.
பச்சை மலை சாரலிலே பனியுறங்கும் பாறையிலே
படைபோலே பறவையெல்லாம் பறந்து வந்து கூடுதே
மீனும் மீனும் மேயுதே வேடிக்கையாய்ப் பாயுதே
ஆனந்தமாய்க் கண்களும் அவரை நாடிப் போகுதே
அவரை நாடிப் போகுதே ஓஓஓஓ
*
எளிமையான் இசை..எளிமையான வரிகள்.. எளிமையான அழகுள்ள நடிகை (?)
தாங்க்ஸ்ங்கோவ்..
*
வாஸ்ஸூ.. நடுவில் உள்ளது லிஸ்ஸி போலத்தெரிகிறது..இந்தக் கார்னர் யார் எனத் தெரியவில்லை - கலர்ப்படத்தில்..
ப்ளாக் அண்ட் ஒய்ட்.. படம் தெரியவே இல்லீங்கோவ்..(மதுண்ணாவின் க்ளூவும் தலை சுற்றுகிறது..)
நெய்வேலி டு கோவை ரொம்ப தூரமோன்னோ..
*
ராஜ்ராஜ் சார் உங்களுக்காக..
https://youtu.be/Cnc0cHgUR4g?list=RD2sCowEs_Yuk
வாசு சார்,
ஏற்றி வைத்த தீபம் ஒன்று-என்னிடத்து வந்து நின்று-பார்த்து மகிழ்ந்த
தென்னவோ-பின்னர் பாராமல் போனதென்னவோ.
நடிகர் திலகம் கூறும் இவ்வரிகள் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரினைக் கூறுங்கள்.
அன்புடன் கோபு
//விழியோரம் சில நேரம் கனவுகள் வருமோ நாயகியைப் பாருங்கள். என்னமாய் காமெரா ஸ்டேன்டை பிடித்துக் கொண்டு நிற்கிறார்! // நக்கீரன் பப்ளிகெஷன்ஸின் “ நடிகையின் கதை” படித்திருக்கிறீர்களா வாசு..
படித்தால் துக்கம் தொண்டையை அடைக்கும்.என்னால் முழுக்கப் படிக்க இயலவில்லை...சில நடிகைகளின் கஷ்டங்கள் எப்படியெல்லாம் துன்பப் பட்டார்கள் என்பது.. மாதுரியைப் பற்றியும் அதில் போட்டிருந்தார்கள்..முக்கால் வாசி நடிகைகளுக்கு வெள்ளித்திரைக்குப் பின்னால் வாழ்க்கை முச்சூடும் சோகம் தானா.. பாவம்..:sad:
Hearty welcome Vasu Sir to Coimbatore the city of Colleges, Motors and Pumps!! Nowadays not much of Tex mills!!
senthil and on behalf of senthilvel and raghulram and Dr Ramesh Babu!
Have fun in CBE vasu! :) The Coimbatore i knew till 1965 is not there anymore. Like any other city it is crowded and polluted. Too many shopping centers and hotels! In 2006 we visited CBE on our way to Cochin and stayed in Residency on Avinasi road. Nice hotel. When I lived there I used to fequent BBH(Bangalore Briyani Hotel). It was not there.
I am sure you will enjoy the stay ! :) Visit Marudamalai for a change !
கலர் பாடல்கள்
1.சிவப்பு விளக்கு எரியுதம்மா
2.மஞ்சள் முகம் நிறம் மாறி
3.பச்சை நிறமே
4.நீலக்குயில்கள் ரெண்டு
5.ஊதா கலரு ரிப்பன்
6.ரோஸ் ரோஸ் ரோஸ் ரோஜாப்பூவே
7.வெள்ளைப்புறா ஒன்று
8.கறுப்புதான் எனக்குபுடிச்ச கலரு
வேறு கலர்கள்?
செந்தில்வேல்.. இதோ..கலர்ஸ் :)
**
இசையும் கதையும்..
*
சின்னக் கண்ணன்.
*
கலர்ஸ்..
*
முன் கதைச் சுருக்கம் (?!) நான் சுந்தரா..அவள் மைவிழி.. இரண்டு அத்தியாயங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!
*
3. நாடக மேடை…..திரையில்லை… நாயகி வந்தாள் கவி பாடி!
****************.
காதலில் மைவிழிப் பார்வையும் என் பார்வையும் எக்ஸ்சேஞ்ச் ஆகி உயிரும் எக்ஸ்சேஞ்ச் ஆகியிருந்தது என போன தடவை சொல்லியிருந்தேன்..
ஆனால் அப்படி உயிர் எக்ஸ்சேஞ்ச் ஆகியிருந்ததைப் புரிவதற்கே எனக்கு/engalukku ஒன்றரை வருடங்களுக்கு மேலாகியிருந்தது..
காதல் என்பது எந்தக் கணமும் பூக்கும் மலரும் என்பது உண்மை தான்..ஆனால் காதல்வயப்பட்டவர்கள் காதலனோ காதலியோ மற்றவர்களின் நினைவிலேயே உருகுவார்கள் என்பதெல்லாம் கதையில் நடக்குமே தவிர வாழ்க்கை என்பது வேறு..
எனக்கும் ஒரு சில கனவுகள் எல்லா வாலிபர்களைப் போல இருந்தது.. நிறையப் படிக்க வேண்டும்.. பெரிய பதவி, நிறையச் சம்பாதிக்க வேண்டும் என ஆசைகள் இருந்ததேயொழிய பெண்களின் நினைவுகள் அவ்வளவாக எழுந்ததில்லை எனலாம்..
பின்ன என்ன வர்ணிக்கவெல்லாம் செய்தாய் என்றால் என்னைப் பற்றி எழுதுபவர் செய்த செயல் அது..!
பின்னர் எங்கள் காதல் வளர்ந்த விதம் என்பதை விட எங்களுடைய சந்திப்புக்கள் ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் என்பது போல
அவள் என் வீடு வரும் பொழுதும், என் சகோதரி கல்யாணம் முடித்து ஒருவருடம் கழித்து வந்த போது அவளுடைய அக்கா பூவிழி வீட்டிற்குக் கூட்டிச் செல்லச் சொன்ன போதும் தொடர்ந்தது..
அப்போதும் கூட மையூவின் அழகெல்லாம் என் மனதில்புகுந்து இம்சிக்கவில்லை.. நெஜம்மா... நான் சொல்வதை நீங்கள் நம்பித் தானாக
வேண்டும்..
காதலனோ காதலியோ -தனிமையில் இருக்கும் போது மற்றவரை நினைத்துக் கனவு கண்டு எக்ஸ்ட்ரீம் எல்லைக்கெல்லாம் போவது என்பது ஒரு வகையில் ஹம்பக் தான்..மேக்ஸிமம் கொஞ்சம் ப்யாலஜிக்கல் நீட்ஸினால் கிளுகிளுப்பு தான் இருக்குமே யொழிய ரியல் லைஃபில்யாரும் கண்ணே மணியே கற்கண்டே கரும்புச் சாறே என்றெல்லாம் கனவு காண்பதில்லை..
தேவாமிர்தம் தேனிதழ்கள்
தேவதை இல்லை நான் வந்தேன்
மார்பின் அகலம் குன்றங்கள்
மலர்கள் இல்லை நான் வந்தேன்…..
என்றெல்லாம் டூயட் பாடுவதில்லை..!
கொஞ்சமே கொஞ்சமாக ஈர்ப்பு இருக்கிறது எனத்தெரிந்து.. வழக்கம் போல ப்ரபோஸெல்லாம் பண்ணாம்லேயே ஒரு நாள் தனிமையில் – அவள் வீட்டில் தான் ஹேய் ஐ லவ்யூடி எனச் சொன்னபோது அவள ப்ளஸ்டூ முடித்துக் கல்லூரியில் சேர்ந்த்திருந்தாள்.. நான் கல்லூரி முடித்து ஐ.சி.டபிள்.யூ ஏ கரெஸ்பண்ண ஆரம்பித்திருந்தேன்..
யோசிக்கவெல்லாம் செய்ய்யாமல் மி..டூ சுந்தரா..பட் பேச்சு மட்டும் வச்சுக்கலாம் என்றாள் கைகளைப் பற்றியவாறு..
சின்னதாய்க் கண்ணிமைகள் படபடக்க பட் நான் காலேஜ் முடிக்கணும்.. நீ ஒரு குட் ஜாப்ல உட்கார்ந்து செட்டில் ஆகணும் தென் ஒன்லி வி கேன் கோ ஃபார் மேரேஜ்”என என் மனதில் உள்ளதையே சொல்ல நானும் கண் சிமிட்டி அங்கீகரித்தேன்..
இந்தக் கதையெல்லாம் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முந்தையவை எனச் சொல்ல அவசியமாகிறது..
மதுரையில் நிறைய இடங்கள் கிடையாது காதலர்கள் சுற்றுவதற்கு.ராஜாஜி பார்க், மீனாட்சி கோவில் ரொம்ப தூர அழகர் கோவில் என வெகுசிலவே அந்தக்காலத்தில்..எனில் எனக்குத் தெரிந்த அவளுக்கும் தெரிந்த ஒரு சீக்ரெட் இடத்தில் சம்டைம்ஸ் வீ யூஸ்ட் டு மீட்..
செய்ண்ட் மேரீஸ் பள்ளியிலிருந்து செய்ண்ட் ஜோசப் பள்ளிக்குச் செல்லும் சாலையில் சற்றே போய் உடனே வலது கைப்பக்கம் திரும்பும் சாலையில் கொஞ்சம் சென்று வளைந்தால் ஒரு இடுகாடு வரும்..அதையும் தாண்டி கொஞ்ச தூரம் நடந்தால் பே எனப் பரந்து விரியும் மைதானம்..புல்தரைகள் மரங்கள் எல்லாம் இருக்கும்..அது நான் படித்த செ.மே. பள்ளிக்குச் சொந்தமானது என நினைக்கிறேன்..அங்கு தான் ஸ்போர்ட்ஸ் நாட்கள் எல்லாம் நடக்கும்..மற்ற் நாளில் ஈ காக்காய் இருக்காது..
(இப்போதும் அப்படியே இருக்கிறதா என்றும் தெரியாது)
என் வாழ்க்கையில் நடந்த்தைச் சொல்ல அந்த இடம் ஒரு அவசியமாகிறது..
என் வாழ்க்கையில் இருந்த அந்த நாளுக்கு உங்களை அழைத்துச் சென்றால்..:
என்ன நடக்கிறது..
https://youtu.be/yvbDJYvl1r0?list=PL...5QsJ3M37XN7STO
இசையும் கதையும்..
*
சின்னக் கண்ணன்.
*
கலர்ஸ்..
*
*
3. நாடக மேடை…..திரையில்லை… நாயகி வந்தாள் கவி பாடி!
**** தொடர்ச்சி..
***
“தன்முகத்துச் சுட்டித் தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோய்
பொன்முகக் கிண்கிணி ஆர்ப்ப ப் புழுதி அளைகின்றான்
என்மகன் கோவிந்தன் கூத்தினை இள மாமதீ
நின் முகம் கண்ணுள ஆகில், நீ இங்கே நோக்கிப் போ……
அதாவது மையூ, என் சன் கோவிந்த் இருக்கானே அவன் முகத்தில இருக்கற நெற்றிச் சுட்டியானது டபக் டபக்குனு பலதடவை அசையுது.அதில் உள்ள மணிகள் எல்லாம் கலகலன்னு ஒலியெழுப்புது அப்படியே தவழ்ந்து போய் டஸ்ட் டெல்லாம் அளைஞ்சுண்டிருக்கான்..ஓ..மூனே.. உனக்கு ஐஸ்னு ரெண்டு இருந்துச்சுன்னா இந்தப் புள்ளையோட கூத்தைப் பார்னு அர்த்தம்” என சீரியஸாக நான் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே “யே” என்று கண்ணைக் கசக்க ஆரம்பித்தாள் மைவிழி..
“யோவ்.. உன் பேர் என்ன”
“சுந்தரா” விழித்தேன்..
“என்ன பண்ற இப்போ..”
“ஐசிடபிள்யூ ஏ பண்றேன்.. இண்ட்ட்ர் ஓவர் ஃபைனல் ல ஒரு பேப்பர் பாக்கி”
“ஃப்யூச்சர்ல”
“கொஞ்ச நாள்ள துபாய் போய்டுவேன்..பாங்க் ஃபோன் இண்டர்வியூல தேறிட்டேனாம்.. அத்திம்பேர் சொன்னார்..விசா வந்துடும்.. அப்புறம் ஒரு வருஷத்துல வந்து உன்னைக் கட்டிக்கினு இஸ்துக்குவேன்.. சரி தெரிஞ்ச விஷயத்தை ஏன் கேக்கற”
“பேசாதே.. நான் யாரு”
“என்னோட ஐடெக்ஸ் கண்ணு..” முறைத்தாள்..
இப்ப என்ன பண்ணிக்கிட்டிருக்கேன்..
மீனாட்சி காலேஜ்ல பி.எஸ்ஸி பிஸிக்ஸ்.. செகண்ட் இயர் ..எத்தனை வருஷம் படிக்கப் போறயோ..
யோவ்.. இது என்ன இடம்..
என்னடி..கேள்வியா கேக்கற அவுட்க்ரெளண்ட்.. அதாவது செய்ண்ட்மேரிஸ் ஸ்கூலோட அவுட்க்ரவுண்ட்னு சொல்வாங்க..ஸ்போர்ட்ஸ்லாம் இங்க தான் நடக்கும்.. நாம இருக்கற இடம் அழகான நிழல் தரக்கூடிய மரத்தடி.. கொஞ்சம் வெய்யிலா இருந்தாலும் அதோட எஃபெக்ட் இங்க இல்லை.. பசும்புல் வெளில்லாம் இருக்கு..இன்னிக்கு வீக்டே ஆனதினால யாரும் விளையாட வரலை..
இந்த இடத்தைச் சொன்னது யாரு..
நீதான்
கூட்டிக்கிட்டு வந்தது
நான் தான்..
டேய்.. ஒரு சிறுவயசுப் பொண்ணு ஒரு வீக்டேல்ல ஷையெல்லாம் விட்டுட்டு ஸோ கால்ட் லவ்வரோட தனியாவந்தா என்ன அர்த்தம்..
ஸத்தியமா புரியலை எனச் சொல்லிச் சிரித்தேன்.. முறைத்தாள்
என்ன திடீர்னு பாசுரம்லாம் படிக்கற..
நீ தான் மூஞ்சை மூஞ்சைப்பார்த்துக்கிட்டிருந்த..ஒன் முத் கொடுக்கவும் விடமாட்டேங்கற.. தள்ளி பஃப்னு டாலாட்டமா உட்கார்ந்துண்டிருக்க ஏதாவது பேசேன்ன..இன்னிக்குக் காலைல கேட்ட எம்.எஸ் பாட் நினைவுக்கு வந்தது..அதான் சொன்னேன்..
யோவ்.. நீ எல்லாம் ஒரு ஆளு..ஒனக்கு நானொரு ஆளு.. ஒனக்குன்னு ஒரு வண்டி..
கொஞ்சம் தள்ளிப் பார்க் பண்ணியிருந்த என் லேம்ப்ரெட்டாவை முறைத்தாள்..
ஏன் இதுக்கென்ன குறைச்சல்.. என்ன பிக்கப்.. அண்ணா வச்சுருந்தான்..அவன் ராஜ் தூத் வாங்கிட்டதால் எனக்குக் கொடுத்துட்டான் .. நல்லாத்தானே இருக்கு.. சினிப்ரியா வரைக்கும் வந்தயே..ஒடம்பு வலிச்சதா என்ன..
நீ எங்கே என்னை ப் படம் பார்க்கவிட்டே..ச்சும்மா ச்சும்மா கை நீட்டிக்கிட்டிருந்த.. தட்டிவிடறதுக்கே டயம் சரியா இருந்துச்சு..ஆமா ராஜ்தூத்னா சொன்னே
ஆமாம்…
நான் மரத்தடியில் சாய்ந்து உட்கார்ந்திருக்க அவள் சற்றே தள்ளி அமர்ந்திருந்தாள்..ரொம்ப தூரமும் இல்லை..ரொம்ப கிட்டவும் இல்லை..
இல்லை..இங்கருந்து பாக்கறச்சே ஒரு வண்டி இரண்டு மரத்துக்குப் பின்னால தெரியறது.. ராஜ் தூத்னு தான் நினைக்கறேன்.. உங்க அண்ணன் வண்டி என்ன கல.ர்..
சிகப்புக் கலர்..
ஹை..இதுவும் சிகப்புத் தான்.. குழந்தைத் தனமாகச் சொன்னாள்..
ஊர்ல ஆயிரத்தெட்டு சிவப்பு வண்டி இருக்கு
..கொஞ்சம் அனிச்சைச் செயலாய் எழுந்து எட்டிப்பார்த்தேன்.. வெளிறினேன்..
ஏனெனில் பக்கத்து மரத்தடியில் ராஜ்தூத் பக்கத்தில் இருந்தது…..என் அண்ணனே தான்..கூடவே இருந்தது…..பூவிழி!
https://youtu.be/ff2Xtqty4p4
தொடரும்.
//வாஸ்ஸூ.. நடுவில் உள்ளது லிஸ்ஸி போலத்தெரிகிறது..இந்தக் கார்னர் யார் எனத் தெரியவில்லை - கலர்ப்படத்தில்..//
இடது மாதுரி வலது அஸ்வினி.
மிக்க நன்றி ராஜ்ராஜ் சார். கோவை பற்றி பழைய மலரும் நினைவுகளா?
//Visit Marudamalai for a change ! //
முயற்சி செய்கிறேன் சார்.
செந்தில்வேல் சார்,
பி.எம்.பார்க்கவும்.
//ப்ளாக் அண்ட் ஒய்ட்.. படம் தெரியவே இல்லீங்கோவ்..(மதுண்ணாவின் க்ளூவும் தலை சுற்றுகிறது..)//
//முதல் போட்டோவில் இருப்பது மார்க்கண்டேயனின் வாரிசுகள்... இரண்டாவதில் பெருசு ஈயடிக்கும் வில்லன் போல தெரிகிறது. சின்னது யாரோ ? கன்னட வாரிசா ?//
சின்னா!
தலையில் கேப் போட்டுக் கொண்டு சூர்யா. அவரின் இடது பக்கத்தில் வழக்கம் போல கள்ளப் பார்வை பார்த்துக் கொண்டிருப்பவர் தம்பி கார்த்தி. இதைத்தான் மார்கண்டேயன் வாரிசுகள் என்று மதுண்ணா குறிப்பிட்டுள்ளார்.
பக்கத்து போட்டாவில் 'நான் ஈ' வெற்றிப்படத்தின் பிரதான வில்லன் சுதீப். (முக ஜாடை அப்படியே இருக்கிறதே) அவர் பக்கத்தில் நிற்கும் குட்டிப் பையன் கன்னட சூப்பர் ஸ்டார் வீரப்பன் புகழ் ராஜ்குமாரின் புதலவர், கன்னட உலகின் பிரதான நடிகர் புனித ராஜ்குமார். இதைத்தான் மதுண்ணா கன்னட வாரிசு என்று சொன்னார்.
http://www.top10cinema.com/dataimages/22274-a.jpghttp://www.indiancinemagallery.com/i...jkumar-304.jpg
இதை சரியாக சொல்லலாமல் உமக்குத் தலை சுற்றியதால் உம்மை ஆறாவது வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பிற்கு கிளாஸ் இறக்கம் செய்கிறேன்.:)
செந்திவேல் சார்,
'கைராசிக்காரன்' பாடல்கள் பலமுறை கேட்டாலும் அலுக்காதவை. 'நிலவொன்று கண்டேன்' எப்போதும் என் வாய் முணுமுணுக்கும் பாடல். அதே போல 'சில்க்'கும் பிரபுவும் பாடும் 'தேன் சுமந்த முல்லைதானா' பாடலும் பிடிக்கும். அருமையான பாடலை அளித்துள்ளீர்கள். 'இளையதிலக'த்தின் பாடல்கள் பல எனக்கு ரொம்பப் பிடித்தவை. அது பற்றி நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக பகிர்ந்து கொள்கிறேன். நன்றி!
அதிலும் பாலா
'பூக்கள் மொத்தமாய் வீழ்ந்ததால் பூமியும் நொந்தது
பாவை பாதமே பட்டதால் ஆறுதல் கண்டது
தீண்ட வந்த தென்றல் இன்று தாண்டவில்லை பெண்ணைக் கண்டு'
என்று பாடுவது
ஓஹோ!
https://youtu.be/P9W6bu9_omk
கலர் பாடல்கள் தொடர்ச்சி
1)மஞ்சள் முகமே வருக
2)கூந்தல் கருப்பு
3)பச்சை மரம் ஒன்று
4)பச்சைக்கிளி முத்துச்சரம்
கோபு
பேபி ராணியுடன் 'சித்தி'க்குப் பிறகு பத்மினி கொஞ்சி மகிழும் பாடல் 'குழந்தைக்காக' படத்தில். சுசீலா அம்மாவின் ஸ்வீட் குரலில் இதமாய் ஒலிக்கும். குறிப்பாக,
'பாலுக்கு வெண்மை படைத்தவன் எவனோ
பாப்பாவைப் படைத்தது அவன்தானே
பாப்பாவைப் படைத்த கைகளினாலே
பால் போன்ற நிலவைப் படைத்தானே'
அப்புறம் கேப் விட்டு, கேப் விட்டு அந்த குரல் அமிர்தமாய் இன்பம் தருமே!
முத்துரதம் ஏறும்
நிலவுக்கு நாங்கள்
கொட்டி வைத்த வைரம்
நட்சத்திரமாகும்
பூமாலை வெண்மேகமே!
இவ்வளவு அருமையான பாடலில் ஆரம்பத்தில் குழந்தைக்கு அன்னமூட்டும் பத்மினி மேலாடை சரிய போஸ் தந்து நிற்பது யாரைத் திருப்திபடுத்த என்று தெரியவில்லை.:) இந்தப் பாடலுக்கு இது நல்லாயில்லை.
https://youtu.be/Q1pb7zfCaag
இதே போல இயக்குனர் பத்மினியை மிக அற்புத பாடலான 'தொட்டுப் பாருங்கள்....ஜோடிப் பூவைப் போலக் கன்னங்கள்' (எனக்குப் பைத்தியமான பாடல். சுசீலா அம்மாவின் இன்னொரு அற்புதம். 'வாட்டம் உண்டு இங்கே! தோட்டக்காரன் எங்கே?' 'தொட்டுப் பா.........ருங்கள்' என்று 'பா' வை ஒரு இழு இழுப்பார் பாருங்கள். ஈடு இணை செய்ய முடியாத பாடகி) பாடலில் கவர்ச்சியாட்டம் போட வைத்து ராமதாஸ், மேஜர், மனோகர் இவர்களுடன் பார்வையாளர்களை சேர்த்து சந்தோஷப்பட வைத்திருப்பார்.
எது எப்படியோ இரண்டு பாடல்களும் கேட்க கேட்க அவ்வளவு சுகம். கேட்பவர்கள் கேட்டு விடுங்கள். பார்க்கிறவர்கள் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருங்கள்.:)
https://youtu.be/03ninGnTUAg
'தை மாத மேகம்' பாடல் போலவே 'தை மாதப் பொங்கலிட்டு' என்று சுசீலா பாடும் பாடல் ஒன்று உண்டு. 'நிலவே நீ சாட்சி' என்று நினைக்கிறேன். வீடியோ கிட்டுமா?
வாசு.. குழந்தைக்காக ரெண்டு பாட்டுமே அழகு.. அப்படி ஒன்றும் விரசமாகத் தெரியவில்லை.. நன்றி..
தைமாதை ப்பொங்கலிட்டு தேடினால்.. தைப்பொங்கல் பாட்டு த் தான் கிடைக்கிறது..தீர்த்தக் கரை தனிலே ச்ண்பகப் புஷ்பங்களே போட்டாச் தானே..
அடடா.. மார்க்கண்டேயர் என்றவுடன் நினைவுக்கு வந்திருக்க வேண்டும் இல்லையே. நான் ஈ சுதீப் சாயலெல்லாம் நான் பார்க்கவில்லையே நன்றி செண்பகப் பாண்டியனின் சந்தேகத்தைத் தீர்த்ததற்கு.. அஸ்வினி.. ஆனந்தக் கும்மி தானே..?
எந்தக் காதல் பாட்டானாலும் எஸ்.பி.பி தான் வருகிறார் அந்தக்க் காலப் பாட்டுக்களில்.. நீர் திட்டினாலும் பரவாயில்லை..ஒரு பாட் போட்டுக்கட்டா..அத்தியாயத்துக்கு செலக்ட் செய்து எடுத்துவைத்திருந்த பாடல்களில் 80 பர்சண்ட் எஸ்.பி.பி.
நெய்வேலிகோவை ட்ரெய்னா பஸ்ஸா..
ஊட்டி வரை உறவு இன் இந்தப் பாட்டு படத்தில் வராதாமே..எனக்கு நினைவிலில்லை..
https://youtu.be/vXr9_eFiuDc
கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு
ஜிங்கிச்சா ஜிங்கிச்சா செகப்புக்கலரு ஜிங்கிச்சா
மஞ்சள் வெயில் மாலையிலே
நீலவண்ணக் கண்ணனே உனது எண்ணமெல்லாம் நானறிவேன்
வெள்ளை மனம் உள்ள மச்சான்
அழகிய செந்நிற வானம் – அழகிய பாடல் போட்டாச் ?
https://youtu.be/wDiwXWkMU0M
ரெண்டு பேருமே யார்னு தெரியலை...