Ҹ¢!!
á Ĩ Ȣ즸 -- á š즸 -- . š? ¡?
á ... Ĩ Ȣ즸Ţħ... Ţ Ȣ٧?...... š -- ɡġ?
ɧ ... ɦġ ȧ....ɡ ........!!
Printable View
Ҹ¢!!
á Ĩ Ȣ즸 -- á š즸 -- . š? ¡?
á ... Ĩ Ȣ즸Ţħ... Ţ Ȣ٧?...... š -- ɡġ?
ɧ ... ɦġ ȧ....ɡ ........!!
:lol:
ɨ ɨ... Ǣ § 츢...
š. :) :D
¢ Ƣž Ţ ̾¢ "Ҿ§ " ؾ ¾ ¡ ؾ¨ Ÿ !
ؾ ž ĸ â츢Ǣ ɾ 즸...... 측 측 ؾɡ... Ǣ ܼ ɧš , 측... ɡ.... ?
ͨ츢....
by PPMadam:
//Ǣɢ Ǣ
Ц
Ģ Ģ ɸ
츢Ǣ
ȡ
¦ Ţ
Ǣ
â¨ħ Ȣ
Ģ Ȣ ɾ
Ш ̧
¢ ا
Ǣ¢
ɧ
â ɧ
ɢҨ¡ Ţ
½Ǣ âǢ
ġ иǢ ̸Ǣ
ՄǢ
ɧ
¢ Ȣ
Ȣ Ǣ
ġ
ڨ ¢ Ҩ
ɡ ը¡ Ҹơ
Һ¡
ž Ģ
츢ħ
â 쨸 ġ
Ȣ ŧ
Ӿ ̧
ﺡ
¢ڼ ¡
Ը â á
§ ȧ by PP Madam.//
excellent!!
ؾġ Ţ
ڧ ɢ --
¡տ
ġ š
:D
:D :D
Quote:
Originally Posted by Gurusamy
thank you RR for the links
ஒவ்வொரு நாளும் ஒருவெண்பா பாடினார்பால்
செவ்விய பாத்திறனும் சேர்ந்திடுமே -- கவ்விக்
கடிக்கக் கடிக்கவே ் கெட்டியுண்டை நெல்லும்
இடிக்க இடிக்கவே தூள்..
எழுதுங்கால் போஒய்ப் பழுதாகும் ஒற்றால்
முழுதும் கவனிக்க முந்தி -- உழுதிடும்
நல்லுழவர் போலவே நாமும்நம் நேரத்தைச்
செல்லவிட்டோம் செந்தமிழுக் கே. ்
போனார் திரும்புவதும் புண்ணியமே; சொல்மதியைப்
பேணார் திருந்தவரும் கண்ணியமே; -- நாணிலாராம்
பெண்டிரும் மாறிடிலோ பேறுகளில் மேல்கண்ணாற்
கண்டுரைப் பாரே கரி.
கொழும்புக்கோ சென்றார் குழவிப்பால் ஊட்ட?
அழும்பிள்ளை விட்டே அகலல் --- பெரும்பிழையே!
வந்தால் வணங்கி வரவேற்கும் நாள்நோக்கி
எந்தாய்த் தமிழால் இசை.
இது ஒரு ஈழ நண்பர் - திடீரென்று காணாமற் போய்விட்டது பற்றிய பாடல். இதை : "வரவேற்கும் நாள்வரைக்கும் " என்று எழுதியிருந்தேன். இப்போது, நாள்நோக்கி என்று மாற்றினால், பொருள் மன நிறைவு தருவதுபோல் தோன்றுகிறது.
வந்தால் வணங்கி வரவேற்போம்; நன்றென்றே...
என்றெழுதினால்--?
வடித்தவெண் பாக்கள் படித்தவுடன் தானும்
துடித்தொன் றியற்றிக் கொடுத்து --- முடித்திடவும்
யAரையும் காணவில்லை பாரில்வெண் பாட்டெழுத
ஊறுமோ பற்றும் இனி.
Server rejects efforts to edit.
Reader please read intended amendments into the text. (as indicated)
Will attempt later.
வடிப்பதோ வெண்பா வளைவு நெளிவாய்'
அடித்துச் செதுக்குவதும் ஆமோ--- படிப்பறிவு
மிக்கோரே மீதுவக்கும் வெண்பாவை நாட்டிலுயர்்
மக்காள்நீர் கொள்வீரோ மேல்.
இதனை ஆய்வு செய்க.
இராஜராஜன் புகழ் வாழ்க.
தஞ்சைப் பெருவுடையார் அருள் பொழிக.
ஆயிரம் ஆண்டுகள் ஆகி அணிபெற்ற
கோயிலாம் தஞ்சைப் பெருவுடையார் --- கோயிலைக்
கட்டிய ராஜராஜன் மட்டிலாச் சீர்த்திதன்னைச்
சுட்டுங்கால் சோர்விலோம் நாம்.
அறியாரோ இப்போ தறியேன்நான் என்றே
குறியாது கோலெடுத் தாட்டி ---சிறியோன்போல்
நேராய் மிரட்டுகிறார் , தீரா அறியாமை
பாரோர் அறியாப் படிக்கு.
இந்து சமயம் தழைத்த பெருநாடாய்
இந்துத் திருநேய இந்துநேசி யாவிருந்தே
எந்தவோர் காரணத்தால் இன்றிங்ஙன் மாறிற்றோ?
சொந்தமாய்ச் சிந்திப்போம் நாம்!
டத்தோஸ்ரீ சாமிவேலு
பன்னெடுங் காலம் பலதுன்பம் பட்டவர்
பொன்னேரம் தன்னைப் பொதுவிற்கு -- எந்நாளும்
தந்தசாமி வேலுத் தலைவர்க்குத், தூதுவராய்
வந்தார் பதவிக்கு, வாழ்த்து.
அலைப்பட்ட அவை
ஊழல் இலதாம் ஒருதுறை இவ்வுலகில்
வாழும் மனிதர்க்கும் வாய்த்திடுமோ --- கூழும்
துவையலும்போல் எங்கும் தொடர்தரும் இஃதால்
அவையும் அலைப்படுதல் காண்.
ஊடக மாந்தரிடம் உண்மையிலை காசுபணம்
பூடக மாகயிலை பாதகரும் நேரடியாய்
நாடக மாடுகிறார் நம்செவியில் நறுமலரை
சூடிட சாடுவ தாரு?
பிகு: இப்போது தான் எழுதிப் பழகுகிறேன். பிழைகளை சுட்டிக்க்காட்டினால் திருத்திக்கொண்டு கற்க ஆர்வமாக உள்ளேன்.
Welcome! Welcome!!Quote:
Originally Posted by P_R
பிழைகள் என்று சொல்வதைவிட, எப்படி வெண்பாவாக்குவது என்று சிந்திக்கலாம். வெண்பாவாக இல்லாவிடின் வேறு ஒரு வகைப் பாட்டு ஆகலாம் அல்லவா?
நறுமலரை என்பதை நன்மலரை என்றும்,
சாடுவதாரு என்பதைச் சாடுவ தார் என்றும் மாற்றிப் பாருங்களேன்.
சிறு மாற்றங்களே தேவை . Very good attempt.
ஆம். இலக்கணச்சுத்தமாக எழுதப் பயில ஆசை.Quote:
Originally Posted by bis_mala
ஆஹ். காய் முன் நேர். கோட்டை விட்டுவிட்டேன். நன்றிQuote:
நறுமலரை என்பதை நன்மலரை என்றும்,
இந்த நாள்,மலர்,காசு,பிறப்பு எனக்குச் சரியாகப் புரியவில்லை என்று நினைக்கிறேன். தாரு - என்பது 'காசு' போன்ற சொல்லாக கொள்ளமுடியாதா?Quote:
சாடுவதாரு என்பதைச் சாடுவ தார் என்றும் மாற்றிப் பாருங்களேன்.
Thank You.Quote:
Very good attempt.
Thank You.[/quote]Quote:
Originally Posted by P_R
ஊரு என்று முடித்து, அது காசு என்னும் வாய்பாடு என்று வாதிடக் கூடுமென்றாலும், தமிழ்ச்சொல் "ஊர்" என்பதே ஆகலின், ஊர் என்றே முடிக்க.
ஊர் என்பது நாள் என்ற வாய்பாட்டில் வந்து, வெண்பா இடர் ஏதுமின்றி முடிவதால், ஊரு தேவையில்லையாகிறது.
Compose a few more and enjoy....
ஆசியக் கண்டத் தருந்தலைவர் சார்பின்மை
பேசிய பேரரிமா நேரு.
நேரு செயற்கரிய செய்தார்; நிகரற்றார்;
யாரும் இவர்ந்தறியா மேரு.
நெடிலைத் தொடர்ந்து ருகரத்தில் முடிந்த இறுதிச்சீர் கொண்ட சான்றோர் வெண்பா யாப்புச் செய்யுட்களைக் காணமுடியவில்லை. Anyone who comes across such, please post. Thank you.
ருகரம் கிடைக்கவில்லை றுகரம் கிடைத்தது:
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு
ஒரு கேள்வி:
ஒற்றில் முடியில் சீருக்கு அடுத்த சீர், உயிரில் தொடங்கும்போது, சில சமயம் சேர்த்தெழுதுகிறார்கள், சில சமயம் அப்படிச் செய்வதில்லை.
உம்.: மேற்சொன்ன குறளைச் சில இடங்களில்
"அரசரு ளேறு" என்று முடிக்கிறார்கள். Consistentஆக இருக்க வேண்டும் என்றால் "நட்பர ணாறும்" என்று இருக்கவேண்டுமல்லவா. ஆனால் அப்படி இல்லை. "நட்பரண் ஆறும்" என்று பிரித்து எழுதுகிறார்கள்.
எப்படி எழுத வேண்டும்?
பண்டைத் தமிழில் எதையுமே பிரித்து எழுதாமல்,
"அகரமுதலவெழுத்தெல்லாமாதிபகவன்முதற்றேயுலகு"
என்று எழுதினார்கள்! அக என்பதிலிருந்து படிக்கத் தொடங்கி, பக என்பது வந்தவுடன் அடுத்த அடி தொடங்கி விட்டதென்று கண்டுகொண்டார்கள்.
அசையும் சீரும் படிப்பவரே அல்லது பாட்டாய்ப் பாடுகிறவரே பிரித்துக்கொள்ளவேண்டியதுதான்.
ஓலைச் சுவடியின் ஓர் ஓலையில் முழுவதும் எழுத இடம் வேண்டுமென்பது 'மட்டுமல்ல', தனிதனிச் சொற்களாகவோ சீர்களாகவோ எழுதுவது அவர்கள் பழக்கமில்லை.
தொடரும்.
அக்காலத்தில் சுவடிகளும் சிலவே நாட்டில் நடமாடின. தொல்காப்பிய நச்சினார்க்கினியர் உரைமுழுதுங் கொண்ட ஒரு
சுவடி வேண்டுமானால், அதை வைத்திருக்கும் புலவரிடம் போய் அதைப் பெற்றுவந்து பல ஆண்டுகள் கவனமாக முயன்று அதைப் படி(copy ) செய்யவேண்டியிருந்தது. பெரும்பாலும் வாத்தியார் பாடம் சொல்ல, செவி வழியாகவே வகுப்பு நடைபெற்றது. எனவேதான், "கற்றிலனாயினும் கேட்க!" என்கிறார் நாயனா- ர். "செல்வத்துள் செல்வம், செவிச்செல்வம்". பாடம் நின்ற- போதுதான், சோறிடப்பட்டது. "செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படு"மென்றார்.
மாணவர், அசை சீர் தளையெல்லாம் மண்டைக்குள்ளேயே வைத்துப் பிரித்துக்கொள்ளவேண்டியதுதான். தொல்காப்பியம் சொல்லிக்கொடுப்பவர், தொல்காப்பியம் முழுமையையும் மண்டைக்குள் வைத்துக்கொண்டு சொல்லிக்கொடுப்பதுதான் பழக்கம்.
ஒவ்வொரு பாடலையும் கூச்சமில்லாமல் பாடுவதுதான் பழக்கம்.
will continue
இத்தகைய சூழலில் நெடுங்காலம் வளர்ந்த தமிழ் அசை சீர் முதலியன பிரிக்கப்படாமல்தான் எழுதப்பட்டு வந்தது. சொற்கள் தனித்தனியாக எழுதப்படும் ஆங்கில மொழியின் தாக்கத்தினால், உரை நடையோடு ், சந்தி பிரித்துத் தமிழை எளிதாக்கி அச்சிடும் முறையும் தமிழுக்கு வந்தது.
கடினம் என்று நினைக்கும் இடங்களில் சந்தி பிரித்தும், ஏனைய இடங்களில் பிரிக்கப்படாமலும் இப்போது எழுதப்பட்டு வருகிறது. சந்தி பிரிக்காமல் எழுதினால், மாணவர்கள் தவறாகப் பி்ரித்துப் பொருள் அறியாது இடர்ப்படுவர் என்பது காரணமாம். எங்கு பிரிக்கலாம், எங்கு கூடாது என்ற ிதிமுறை
ஏதுமில்லை.
Thanks.
பிரிந்துசொல் நிற்க வரைந்திடல் ், கற்போர்
புரிந்துகொளல் வேண்டுமென் போக்கில் --- உரிந்த
பழம்போலும் உண்டிடப் பாங்குடைத்தாய்ப் பேச்சும்
எழுத்தும் இருத்தல் குறி.
இப்பாடலில் வெண்டளை பிழைத்துள்ளதா, பாருங்கள்.
என் இடுகைகளில், சில குறிகள் ( எ-டு " - " )தாமே ோன்றியுள்ளன. வாசிக்குங்கால், சரிசெய்துகொண்டு வாசிக்கவும். நன்றி.
விளக்கத்துக்கு நன்றி bis_mala :-)
முதலில் :clap:Quote:
Originally Posted by bis_mala
இந்தச் சரளம் தான் என் குறிக்கோள்
இப்போது பிரித்துப் பார்க்கிறேன்:Quote:
Originally Posted by bis_mala
கருவிளம் தேமா கருவிளம் தேமா
கருவிளங்காய் கூவிளம் தேமா - புளிமா
புளிமாங்காய் கூவிளம் கூவிளங்காய் தேமா
புளிமா புளிமா மலர்
அசை பிரித்தது சரியென்றால்
விளமுன்நேர் - சரி
காய்முன் நேர் - சரி
மாமுன் நிரை - சரி
தளை தட்டவில்லை என்று நினைக்கிறேன்.
ஆனால் நான் பிரித்ததுபோல உரக்க சொல்லிப் பார்த்தால் rhythm சரியாக வராததுபோல இருக்கிறது. அதனால் நான் சரியாகப் பிரிக்கவில்லை என்று நினைக்கிறேன். சரியா?
சொற்களை மாற்றாமல், இசை நயம் கூட்டுங்கள் பார்க்கலாம்.
(சொற்களை நீட்டலாம், நீட்டம் குறைக்கலாம். இடம் மாற்றலாம்,)
But do not put in any new word which is not in the veNbA.
Objective: To induce rhythm.
பலவாறு யோசித்தும் எதுவும் தோன்றவில்லை.
பலவும் யோசித்து, யோசித்த எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டீர்கள் போலும்!
நீங்கள் என்னென்ன யோசித்தீர்கள் என்று சொன்னால், நீங்கள் விட்ட இடத்திலிருந்து, மற்றவர்கள் பற்றி ஏறி நுனிக்கொம்புக்குப் போக வாய்ப்பு ஏற்படுதலும் கூடுமன்றோ.............
அதற்கு உதவிய பெருமை, உங்களுக்காகுமே!
ஓசை இப்படி இருக்கிறதுQuote:
Originally Posted by bis_mala
Quote:
கருவிளம் தேமா கருவிளம் தேமா
கருவிளங்காய் கூவிளம் தேமா - புளிமா
புளிமாங்காய் கூவிளம் கூவிளங்காய் தேமா
புளிமா புளிமா மலர்
இரண்டாம் அடி
"கருவிளம் கூவிளம் தேமா - புளிமா" என்று இருந்தால், முதல் இரு அடிகள் இவாறு இருக்கும்.
என்பதில் சிகப்பிட்டது வரை ஓசை நன்றாக இருக்கும் என்று தோன்றியது.Quote:
கருவிளம் தேமா கருவிளம் தேமா
கருவிளம் கூவிளம் தேமா - புளிமா
"புரிந்திட வேண்டுமே போக்கில்" என்று வைத்துக்கொள்வோம்
ஈற்றடி
புளிமா புளிமா மலர்
அதற்கு முன் அடி: புளிமா புளிமா கருவிளம் தேமா
என்று இருந்தால் நன்றாக வரும்
இவ்வாறாக:
பழம்போல் (உண்ணப்) பாங்குடைப் பேச்சும்
இதில் (உண்ண) என்பதற்கு புளிமா என்று வருமாறு இரு சொல் கிடைத்தால் முடிந்தது. அருந்த?Quote:
பிரிந்துசொல் நிற்க வரைந்திடல் கற்போர்
புரிந்திட வேண்டுமே போக்கில் - உரிந்த
பழம்போல் (உண்ணப்) பாங்குடைப் பேச்சும்
எழுத்தும் இருத்தல் குறி
அருந்திட
அருந்த cannot be used....
Ah yes. :oops:Quote:
Originally Posted by bis_mala
Quote:
பிரிந்துசொல் நிற்க வரைந்திடல் கற்போர்
புரிந்திட வேண்டுமே போக்கில் - உரிந்த
பழம்போல் அருந்திடப் பாங்குடைப் பேச்சும்
எழுத்தும் இருத்தல் குறி