-
புன்சிரிப்புகள், கைகுலுக்கல்கள் எல்லாம் முடிந்து
அவரவர் அமர,
ஒரு நிமிட் மேலாளர்;
மீன் மூலம் மேலாண்மை
போன்ற புத்தகங்களைப் பற்றி
நகைச்சுவையுடன் செவ்வனே பேசி
பின்னர்
விற்பனை இலக்கு ஏன் குறைவு..
யாரிடம் என்ன குறை
என விலாவாரியாக விவரித்து,
ஏன் சீக்கிரம் வசூலிக்க முடியவில்லை
ஏன் இவ்வளவு செலவுகள்
என
கணக்கப் பிள்ளையைச் சாடி;
அடுத்த மாத இலக்கை நிர்ணயித்து முடித்து
மணி பார்த்தால் ஒன்றரை..
அதான் பசிக்கிறது..
கை குலுக்கிக் கலைந்து
அறையில் மடிக்கணினியில்
வேறென்ன வேலை.....
மதியம் மூன்று மணிக்கு
விளம்பரக் கம்பெனிப் பெண் வருவாள்..
அழகாவும் இருப்பாள்..
ரசித்துக் கொண்டே பேசினால்
இன்றையப் பொழுது முடிந்த்து..
நாளைக்கு என்ன..
அட..
இன்றைப் போல் ஒன்றுமில்லையே.
போரடிக்குமே..
சரி, தொழிற்சாலை சென்று பேசுவோம்..
நம்மைப் பற்றி.. நமக்குத்தெரிந்த்தைப் பற்றி..
நிறையக் கொஞ்சுவோம்..
கொஞ்சம் திட்டுவோம்..
இப்பொழுது சற்று ஒப்பனை செய்யலாம்..
அழகி வேறு வருவாள்
முகம் கழுவும் அறைக்குச் சென்று
கண்ணாடி பார்த்த்தில்
தெரிந்த து.. சிறந்த மேலதிகாரியின்
பிம்பம்....!
-
பிம்பம் நிசத்தின் பிரதிபலிப்பு
என்பதுதான் சராசரி கணிப்பு
இருக்கு கற்பனையின் பங்களிப்பு
கண்ணாடியில் என் முகம் அழகு
-
அழகுக்கும் மலருக்கும் ஜாதியிலை..
நெஞ்சில்
ஆசைக்கும் உணர்வுக்கும் பேதமில்லை..
அறுபதில் பாடிய பாடலதன்
பொருள்
இன்னும் மாறாமல் தானின்று இருக்கிறதா..
அஹ்ஹஹ்ஹா...ஒஹ்ஹோஹ்ஹோ..
டொய்ங்க் டொய்ங்க்...!
-
டொய்ங்க்
தன்னிச்சையாய் தந்தியை மீட்டுகிறது விரல்
மேகக்கூட்டமாய் உருமாறி அலையும் மனம்
எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி தடுமாறும்
எதை எடுப்பது எதை விடுவது தீராத குழப்பம்
மதில் மேல் பூனையாய் நிற்கும் ஊசலாட்டம்
குழம்பிய குட்டை தெளியுமா மீன் தெரியுமா
-
தெரியுமா..
உலகம் மிக்க் குறுகலானது..
நாம் சோகமாயிருக்கும் போது...
உலகம் மிக விசாலமானது..
அழகானது..
நமது சந்தோஷத் தருணங்களில்...
-
சந்தோஷத் தருணங்களில்
விசேஷ கணங்களில்
விழாக் காலங்களில்
விகசித்த முகங்களில்
வெளிச்சம் தெரிகிறதே
வெள்ளி முடி மின்னுகிறதே
வெள்ளைச் சிரிப்பு பூக்கிறதே
புதுசாய் மீண்டும் பூக்கிறதே
புகைப்படங்களாய் பிடித்ததை
பார்க்கின்றபோதெல்லாம்
-
எல்லாம் எளிதாய் நடந்தால் இகழ்வாய்
தெரியும் உழைப்பும் உயர்வும்.
-
கிறுக்கன்
-
உயர்வும் உயர்வில் அடக்கமுங் கொண்டால்
துயரம் விலகிடும் பார்
-
பார் இன்றுன் பரிதாப நிலையை
எவ்வழி மன்னன் அவ்வழி மக்கள்
கோலோச்சும் அரசின் ஆசைகள்
கூசாமல் பழி போட வைக்கும்
கனவென்றால் கோடிகள்தானா
பாவமறியா பச்சை குழந்தைகள்
-
குழந்தைகள் குழந்தைகள் தான்
சுசித்ராவைக் கேளுங்கள்
வாழ்க்கையின் துடிப்புக்கு
சிசர்ஸ்
கம் நியர் ஃபார்ய க்ளோசப் ஸ்மைல்
ஆரோக்ய் வாழ்வைக்காத்திடும் லைஃப்பாய்
லைஃபாய் இருக்குமிடம் ஆரோக்கியம் இருக்குமிடம்
இளமை பூரிக்கும் மாலா
அவள் சிரிப்பிலோர் அலாதி அழகு
உபயோகிப்பது கோல்கேட்...
முதலில் வெறுத்தபடி..
பின்னர் ரசிக்க ஆரம்பித்த விளம்பரங்கள்..
இன்றைய விளம்பர உலகிலும்
பெரிய நட்சத்திரங்கள், தொழில் நுணுக்கம்
என வந்த போதிலும்
மறக்காததற்குக் காரணம்
அதன் தன்மையா என் சிறு வயதா..
தெரியவில்லை..
-
தெரியவில்லை
இரவா பகலா
இனிப்பா கசப்பா
இசையா இரைச்சலா
இடரா உதவியா
இதெல்லாம் இலக்கியமா
இத்தனை சுதந்திரமா
இன்னும் என்னென்னவோ
இருட்டுது வெருட்டுது
இணையம் தஞ்சம்
-
தஞ்சமென வந்ததுபோல்
வெளியே செல்ல விடாமல்
காலடியில் முட்டுது தெரு நாய்க்குட்டி..
நேற்றிரவு போட்ட பிஸ்கெட் காரணமா.
வால் படபடவென அடிக்க
கண்களில் தெரியும் பாசம்..
உள்சென்று மறுபடி கொடுத்து விலக நினைத்தால்
வேகமாய் ஓரிரண்டை உண்டுவிட்டு
கேட் வரை ஓடி வருகிற்து..
நான் காட்டும் அன்பு
இதனன்புக்குச்சமமா..
-
சமமா சரிசமமா நிசமா
உமையொரு பாகனா
உடலிலும் மனதிலும்
உரிமை கொடுப்பவனா
ஒருவன் வருவானா
ஒவ்வொருத்தியின் ஆசை
-
வயசுக் கோளாறு
ஆசையுடன் கோபம் கொண்டு
தனித்து வாழ்ந்த அறிவை
இனம் புரியா காதல் ஒன்று
மனம் முடிக்க எண்ணி
மடல் ஒன்றை வரைந்தது
"என் ஆசை நாயகனே!..."
என்று துவங்கும் அந்த மடலைப்
படித்த அறிவு சிந்தித்தது
"ஆசையுடன் தனித்திருந்தால் கோபம் வரும்!..
ஆசையின்றி தனித்திருந்தால் காதல் வரும்!..
...அத்துடன் ஆசையும் வரும்!..
அட்ரா சக்க நமக்கு ரெண்டு பொண்டாட்டி!!!"
மறு பேச்சின்றி காதலை மணந்தது அறிவு.
-
அறிவு ஒரு ஆயுதம்
செதுக்கு உன் வாழ்வை
செம்மையான முறையில்
சீரான நேர்பாதையில்
விலகட்டும் அஞ்ஞானம்
விரியட்டும் கண்ணோட்டம்
வேண்டும் ஆக்கபூர்வம்
வேண்டாம் வீண் ஆராய்ச்சி
விளைவுகளை நினை
விழிப்புடன் முன்னேறு
-
முன்னேறும் இதயமற்ற கால்கள்..
பின்னோக்கும் அன்பான கண்கள்..
என்னப்பா எழுதறே..ஒண்ணும் புரியலை..
அஃதாவது
எவ்வளவோ பணிவிடைகள்
உன் அம்மாவின் கால்களுக்குப் புரிந்திருக்கிறேன்..
நல்ல செருப்பு,
காலைப்பராமரிக்க அழகு நிலையச் செலவு என..
ஆனால்
அந்தக் கால்கள் தான் நன்றியில்லாமல்
பணம் செலவழிக்க கடைத்தெருவிற்கு.
.சரி தமிழில் ஷாப்பிங்
போகுது..
உன் அம்மாவின் கண்களைப் பார்க்கமுடியுமா..
(எரித்துவிடுவாளே)
ஆனால் அவை மட்டும் என்னைத்
திரும்பிப் பாசத்துடன்
பார்த்தவண்ணம் செல்கின்ற்ன..
அப்பா..
வழக்கம் போல நீ ஒரு லூசு..
ஒன்ன அப்படிப் பார்த்துப் பார்த்து
ஏமாத்தறா...அம்மா
-
அம்மாவின் கைமணம்
மீனானம் தேனானம்
மனைவியும் நிபுணிதான்
ஆனாலும் ஒரு படி கீழே
மருமகளே மருகாதே
மாமியார் ஆனதும் பார்
மகன் பல்லவி தொடர்வான்
மருமகள் பல்லைக் கடிப்பாள்
-
பல்லைக் கடிப்பாள்..
விழிகளை உருட்டி மிரட்டுவாள்..
அதுவா அசரும்..
கிடுகிடுவெனத் தவழ்ந்து போய்
சற்றே
மேஜையைப் பிடித்து
மேலுள்ள பொருளை
கீழ் தள்ளி விட்டு
ஓசை எழும்புவதை வேடிக்கை பார்க்கும்..
அருகில் சென்று
அடிக்க கை ஓங்கினாலோ
நிமிர்ந்து பார்த்து கடகடவென நகைக்கும்..
அந்தச் சிரிப்பில்
அவளுக்கு
மற ந்து போகும் எல்லாம்...
-
எல்லாம் தெரிந்தவர் இல்லை
எல்லாம் புரிந்தவர் இல்லை
எல்லாம் உணர்ந்தவர் இல்லை
எல்லாம் கண்டவர் இல்லை
எல்லாம் வென்றவர் இல்லை
எல்லாம் இன்பமயந்தான்
இயற்கையோடு நடந்தால்
இடரின்றி பயணம் முடியும்
-
முடியும் எனப்
பலதடவை நினைத்த
நீள்தொலைக்காட்சித் தொடர்
முடியவில்லை.- பார்க்கவும்
முடியவில்லை..!
முடியாது என நினைக்கும் வாழ்க்கையோ..
...
மூன்று புள்ளிகளில்
முதற்புள்ளி முடிவதற்கும்
காத்திருப்பதில்லை
-
காத்திருப்பதில்லை
கண்ணீர்த் துளிகள்
கன்னத்தில் வடியும்
காரியம் சாதிக்கும்
-
சாதிக்கும் எண்ணமெதுவுமின்றி
சிறுவனைச் சந்தோஷப் படுத்துவ்தற்காக
கிடுகிடுவென ஓடிப்
பந்தை எடுத்து வருகிற்து
அந்த்த் தெருநாய்,,
வாலை ஆட்டிய படியே..
மறுபடி எறிய..
மறுபடி எடுத்து வர...
திடீரென பந்தை நாய் போட
சிறுவன் எடுத்து வர..
சிலிர்த்துக் கொண்ட சிறுவன்
நினைத்துக் கொண்டான்..
‘சே அப்படி எல்லாம் செய்யாது..
இது மட நாய்..”
-
நாய்க்கு வேணும் நாணம்
நங்கைக்கு அல்லவாம்
புரட்சிப்புலவன் வாக்கு
பிழையாய் போனதின்று
அர்த்தமும் அனர்த்தமும்
அறிந்திட ஒரு வாய்ப்பு
-
வாய்ப்புக் கிடைக்குமென
எதிர்பார்க்கவில்லை..
வழியில் தான் சந் தித்தேன்..
சற்றே குண்டாய் இருக்கிறான்..
மீசையின் இரு மூலைகளிலும் வெண்மை..
கண்களில் சற்றே சுருக்கம்..
இரண்டு குழ ந்தைகளாம்..
பெயர் விஜய் வினிதாவாம்..
என் பெயர் இல்லை..
மனைவி சுகமாம்..
வேலைபரவாயில்லையாம்..
குடும்பம் ஊரிலாம்..
ஓமானுக்கு வந்து இரு மாதமாம்..
கேள்விகளுக்குப் பதில் வந் த்து
கேள்விகள் வரவில்லை..
நானும் சொல்லவில்லை..
சற்றே கண்களைப் பார்த்துவிட்டுக்
கைகுவித்தேன்..
அவனும் கைகுவிக்கையில்
தெரிந்த்து
நான் கொடுத்த கடிகாரம்....
-
கடிகாரம் நின்றுவிட்டதா
எத்தனை தரம் பார்ப்பது
கடினமானது காத்திருப்பது
கடிகார முள் பறக்கிறதே
அதற்குள் பிரிய வேண்டுமா
கடிகாரம் என்னவோ ஒன்றேதான்
-
உயிர்
ஒன்றேதான் உள்ளது என்னிடம்
கொன்றே தந்து விடுகிறேன் உன்னிடம்
இன்றே வருவாய் என்னிடம்
-
என்னிடம் அவனது
எதிர்பார்ப்பு புரிகிறது..
சிறிய தலையாட்டல்..
மெலிய புன்சிரிப்பு..
கொஞ்சம் தயக்கமான பார்வை..
ம்ஹீம் மாட்டேன் போ..
தைர்யமிருந்தால் நீ வா..
இதோ..
எதிரில் அவன்..
வழக்கம் போல்
தலைகுனிந்து கடந்து
திரும்பிப் பார்த்தால்..
இல்லை.,.
முன்னால் சென்றால்
வ்ழிமறித்துத் தொடர்கிறது
அவன் உருவம்..
மனதில்..
-
மனதில் நடக்குது பட்டிமன்றம்
கெஞ்சுவதா மிஞ்சுவதா
கொஞ்சுவதா குழைவதா
சாம தான பேத தண்டத்தில்
இந்தக் கணம் இவனை வெல்ல
துரிதமாய் துணிவாய் முடிவெடு
-
முடிவெடு அழகின் அழகே என்னைச்
சேர்ந்தால் உனக்கு ராஜ யோகம்
அந்தப் புரத்தின் அழகிகளெல்லாம்
உனக்கே அடிமை மற்றும் நகைகள்
இந்த இலங்கை எல்லாமுன்சொத்து..
சொன்ன ராவணன் பதிலுக்கு நிற்க
சோகம்,துக்கம்,வெறுப்பு எல்லாம்
கலந்தே சிரித்தாள் சீதை மெல்ல..
அந்தச் சிரிப்பிற்கிருக்கும் கதையும்
மதியில் மயக்கம் கொண்டவன் அறியான்..
*
சீதா ராமர் திருமண வைபவம்
சிறப்பாகவே நடந்திடும் சமயம்
தாமதமாகவே வந்தார் சிவனும்..
அவர்கள் அருகே சென்றே வாழ்த்த
‘ராமா மன்னி, உம்மைக் கண்டு
வாழ்த்த வேண்டும் என்ற அவசரத்தில்
பரிசு எதுவும் வாங்கவு மில்லை..
என்னவேண்டும் உரை நீ என்றார்..
தம்பதிகளில் தான் சீதை சொன்னாள்..
ஈசா நீவிர் இங்கே வந்து
எமைத்தான் வாழ்த்தினீர் அதுவே போதும்..;
ஈசன் சிரித்தே சொன்னான் அம்மா..
எந்தன் சிரிப்பை உனக்கே தருவேன்..
தக்க சமயத்தில் உபயோகப் படுத்து..!
**
திருமணப் போதில் கிடைத்த பரிசு
ஈசன் சிரித்த அழகிய சிரிப்பு
சாதா ரணமான சிரிப்பா அதுதான்
திரிபுரம் தன்னைப் பொடிப்பொடி யாகச்
சாம்பலாய் ஆக்கிய சிரிப்புதான் அன்றோ..
அதையே அந்த சோகப் பொழுதில்
தந்தாள் சீதை பிற்காலத்தில்
இலங்கையை எரித்த்து அந்தச் சிரிப்பு...
**
-
சிரிப்பு ஒரு திரை
அழகாய் மறைக்கும்
உள்ளத்து உணர்வை
உலை கொதிப்பதை
வலி வாட்டுவதை
வினை விளைவதை
நாகரிக ஒப்பனை
போலி வெளிப்பூச்சு
அறிவார் தேர்ந்தவர்
எளிதில் ஏமாறாதவர்
-
எளிதில் ஏமாறாதவர் சித்தப்பா..
அவ்ரையும் ஏமாற்றி விட்டாள் அவள்..
பாரு சாமி
சேப்பு கலந்த மாநிறமா
இருக்குது பாரு பழம்
ஒன்னைப் போலவே
எனச் சொல்லித்
தலையில்கட்டியும் விட்டாள்..
வெட்டிச் சுவைத்தால் ஒரே புளிப்பு..
என்ன சித்தப்பா மசக்கையா
எனக் கேட்டு குட்டும் வாங்கினேன்..
மறுநாள் காலை
அதே சமயம்
அவள் குரல் கேட்க..
சித்தப்பா அவளைக்
கூறு போடுவதைப் பார்க்க
நாங்கள் தயாராக..
அவள் வந்தும் சென்றும் விட்டாள்..
பின் வந்த சித்தப்பா
பெருமூச்சு விட்டுச் சொன்னார்..
’இந்தக் காலத்தில்
எங்கு பார்க்க முடிகிறது..
நல்ல வியாபாரியையும்..
ந்ல்ல மாம்பழத்தையும்...’
-
மாம்பழத்தையும் நாரதர் பகடையாக்க
பரமசிவன் குடும்பத்தில் தகராறு
பந்தயம் பாகப்பிரிவினை பிரச்சினை
பக்தர்க்கு கோவில்கள் பஞ்சமில்லை
-
பஞ்சமில்லை வாழ்க்கையில்
அன்புக்கு..
பரிவுக்கு..
பணத்திற்கு..
பாசத்திற்கு..
ஆசைக்கு.
வெறுப்புக்கும் விருப்புக்கும்...
இருந்தும்
மனிதனென்பதால்
திருப்தியில்லாமல்
தொடர்கின்றன என் தேடல்கள்..
-
தேடல்கள் ஏராளம்
எங்கேயும் எப்போதும்
தொலைந்த திருகாணிக்கு
மறந்த சாவிக்கு
மணமக்கள் தேவைக்கு
மனம்கவர் நட்புக்கு
கடற்கரை மணலிலே
இணைய தள சேவையிலே
புதையல் கிடைக்கலாம்
புதைந்தும் போகலாம்
காத்திருப்பது என்ன
அறிந்தவர்தான் யாரோ
-
யாரோ
அந்தப் பக்கம் சிரிக்கிறார்கள்..
யாரோ
அந்தப் பக்கம் அழுகிறார்கள்..
யாரோ நடந்துகொண்டு இருக்கிறார்கள்..
யாரோ பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள்..
யாரோ பய்ணம் முடிந்தும் வருகிறார்கள்..
அல்லது செல்கிறார்கள்..
எல்லாவற்றையும்
மெளனமாய்
அவ்வப்போது மறைக்கும் மேகத்தையும் விலக்கிப்
பார்த்துக் கொண்டிருக்கிறது வானம்..
-
வானம் ஏன் அழுகிறது
அடை மழை பெய்கிறது
சந்திரனை சலவை செய்து
உலர்த்திய கவிதை வரிக்கா
-
கவிதை வரிக்கா..
உனக்குப் பிடித் த தாய்
இருக்கவேண்டுமா..
பரிசு....
என்னது முத்தமா..
ஒவ்வொரு வரிக்குமா..
கொஞ்சம் இரு..
இந்தா...
சீ..போப்பா நீ ரொம்ப மோசம்..
நான் என்ன செய்துவிட்டேன்..
உன் பெயரை முப்பது முறை
எழுதியிருக்கிறேன்..
அதற்கு ஏன்
உன் முகம்
இப்படிச் சிவக்கிறது.....
-
சிவக்கிறது தெருவெல்லாம்
குருதி பெருகியோடியதில்
தலைகள் உருண்டோடிடும்
அகந்தையும் ஆணவவும்
அரியணை தொலைக்க
சமுதாய நீதி தர்மம்
புதிதாய் அங்கே பிறக்க
பொற்காலம் சில காலம்
சக்கரம் நிற்காது சுழல்கிறது
மறுபடியும் ஓடுது ரத்த ஆறு
-
ஆறு
அன்று அமைதியாய்த் தான்..
மாம்பழக் கலர் பட்டுப் பாவாடையும்
சிகப்புச் சட்டையும் போட்டுக் கொண்டு
சமர்த்தாய்
மணல் வீடு கட்டிக் கொண்டிருந்த
உன்னைப் போலவே...
நான் தான் மோசம்..
தொம்மென்று விழுந்து கலைத்து விட்டேன்..
கோபமும் கண்ணில் நீருடனும்
விருட்டென்று பேசாமல் போய்விட்டாய்..
பிற்காலங்களில்
நம் காதலை வளர்த்த்து
அந்த ஆறு தான்...
மெளனமாய் நம் உணர்ச்சிகளைப்
பார்த்துக் கொண்டிருக்கும்..
நம் தோழி தான்..
ஒரு நாள்
அதற்கும் கோபம் வந்து
வெள்ளமாய்க் காட்டியது..
என்று என்று உன் மனது அறியும்...
**
சமீபத்தில் ஊர் சென்ற போது
ஆற்றங்கரை சென்றேன்..
வயதாகி விட்ட்து போலும்..
நீர் கொஞ்சமாக..
மணலும் போய்..
பாவம்...
-
பாவம் ஏணி
ஏற்றுவது வேலை
நகராது நின்று
கடமையை செய்
பலனை எதிர்பாராதே
கண்கூடான தர்மம்