டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் பாராட்டு என் கண்களில் ஆனந்தக்கண்ணீரை பெருக்கெடுக்கச் செய்து விட்டது.
தங்களது உச்சமான பாராட்டுக்களுக்கு எனது உயர்வான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
Printable View
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் பாராட்டு என் கண்களில் ஆனந்தக்கண்ணீரை பெருக்கெடுக்கச் செய்து விட்டது.
தங்களது உச்சமான பாராட்டுக்களுக்கு எனது உயர்வான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
Dear Ragavendran Sir,Quote:
Originally Posted by RAGHAVENDRA
Neengal solvathu romba unmai. Ippothu ulla entha Desiya Arasiyalvaathikkum, nam thalaivarin paer solla thaguthi illai enbathai migavum sariyaga solli ulleergal. Thalaivar paerai solli valanthavargal thaanae avargal. Thalaivarin senai thunai kondu vendra nandi kettavargal thaanae avargal.
Nammai valinadaththa thalaivarin magangalukku antha thaguthi undu enbathai migavum sariyaaga solli ulleegal.
Inraiya soolnilaiyil, namakku velai illai enbathu unmai. Aanaalum,
En pondrorin aathangam ennavendraal, nam thalaivar padai arasiyalil thorkkum padai illai enbathai intha ulagirkku urakka solla vaendum. Nam thalaivar vaguththuk koduththa paathaiyil naam nadai poduvom.
Nam thalaivarin puthalvargal, palamurai arasiyal kalaththil iranguvathaaga seithigal varum. Pin meendum maraiyum. I think, they are waiting for the proper situation to get into Politics. Thalapathi Ramkumar avargalo allathu Ilaiya Thilagam Prabhu avargalo emmai vali nadaththa vaendum. Appadi oru naalukka naangal kaaththu irukkindrom. Ithu thaan engal aasai.
Arasiyalukku, naam oru puthu mugavari thara vaendum.
Anbulla Pammalaar,
Ungal thamil nadai migavum arputham. Puthiya paravai padaththai 15 murai theatril kandu irukkindraen. Kadaisiyaaga, 1995-il, chennai natraj thiryarangil kandaen. Ungal varnanaigalai, padikkum pothu, 15 murai kanda pothum kidaikkatha oru puthu unarvai perukindraen.
Thodarattum ugam tamil nadi, nam thalaivarin kaalaththaal aliyaatha kaaviyangal vaayilaga!!!
messege deleted
டியர் ஜவஹர் சார்,
தங்களின் பசுமையான பாராட்டுக்களுக்கு எனது பணிவான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 108
கே: நடிகர் திலகம் எந்த மாதிரி வேஷத்தில் நடிப்பதைத் தாங்கள் விரும்புகிறீர்கள்? (கே.எல்.மல்லிகா கன்னியப்பன், சிலியாவ், மலேசியா)
ப: எந்த வேடத்தில் அவர் நடித்தாலும், 'இப்படித்தான் நாம் விரும்பினோம்' என்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தி விடுகிறார்.
(ஆதாரம் : பேசும் படம், அக்டோபர் 1971)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 109
கே: "எங்க மாமா" வெற்றிப்படமா? (என்.சுந்தர் குமார், நாகர்கோவில்)
ப: ஆமாம். தயாரிப்பாளருக்கு வெற்றியைக் கொடுத்த படம் தான்.
(ஆதாரம் : பேசும் படம், ஜூன் 1970)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 110
கே: இன்றைய தலைமுறை நடிகர்களில் யாரை திரையுலகின் தூண் என்பீர்கள்? (டி.ஜெய்சிங், கோவை)
ப: 'கல்தூண்' என நின்றவரின் திறமைகளைத் தெரிந்தோ, தெரியாமலோஅடியொற்றி நடக்கின்ற அத்தனைக் கலைஞர்களுமே திரையுலகின் தூண்கள்தாம்.
(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 16-30 ஜூன் 2006)
அன்புடன்,
பம்மலார்.
Dear Mr.Murali Srinivas,
Thanks for your appreciation. Its a very very small or next to nothing contribution from me towards spreading of NT'S glory and fame.
we will be pleased to know more about 1970 &1984 rally from you.
Dear Mr.Ragavendra
Thanks for your appreciation. After your posting and clarifications i also concur with you that if at all any one is there to lead us it should either be Thalapathi Ramkumar or Annan Prabhu.
Mr.Harish-- Thanks for your appreciation.
Regards
Shiv.
Dear NT fans,
I also heard from my friend in Chennai that EVKS Elagovan had spoke in a public meeting asking the DMK government about the long pending "Manimandapam" for our Thalaivar.(it was published in Saturday's Dinamalar).
Can some one throw more light on this speech?
Atleast there is one congressman (ex-TMM secretary) who is still loyal to our NT!!!.
Regards
Shiv
டியர் ஜவஹர், ஷிவராம் மற்றும் நண்பர்களுக்கு,
தங்களுடைய பதில்களும் பெருந்தன்மையும் எனக்கு உவகை அளித்துள்ளது. தற்போது இருக்கும் தலைவர்களுக்கோ அல்லது மறைந்த அவரது கால, அவரது முற்காலத்திய தலைவர்களுக்கோ எந்த விதத்திலும் நடிகர் திலகம் குறைந்தவரல்ல. சொல்லப் போனால் எல்லோரையும் விட ஒரு படி மேலே தான் உள்ளார். அந்த அடிப்படையில் தான் எனனுடைய கருத்து அமைகிறது. சிவாஜி ரசிகர்களின் வாக்குகள் கடைச் சரக்கல்ல என்பதை நாம் வலியுறுத்த வேண்டும். வெறும் ஒரு சில கோரிக்கைகளின் அடிப்படையில் நம் வாக்குகளை சிலர் பெற்று விட முயல்வதை நாம் அநுமதிக்காமல் சில குறைந்த பட்ச அங்கீகாரத்தை நடிகர் திலகத்தின் அரும்பணிகளுக்கு அவர்கள் தருவாரேயானால் அப்போது நாம் அதைப் பற்றி சிந்திக்கலாம்-
என்னுடைய தனிப்பட்ட எண்ணங்கள்.
1. இந்திய அளவில் சிறந்த தலைவராக திகழும் நடிகர் திலகத்தை அந்த அடிப்படையில் யார் தலைவராக ஏற்றுக் கொள்கிறாரோ, எந்த இயக்கம் ஏற்றுக் கொள்ளுகிறதோ, அவர்களுக்கு நம் வாக்கை அளிப்பதைப் பற்றி நாம் சிந்திக்கலாம்.
2. ஒவ்வாத காரணங்களை சொல்லிக் கொண்டிருக்காமல், அவருக்கு பாரத் ரத்னா விருது பெற்றுத் தருபவருக்கே அல்லது அந்த இயக்கத்தினைப் பற்றி நாம் சிந்திக்கலாம்.
3. திரையுலகில் இந்தியாவின் மிகப் பெரிய விருதாக சிறந்த நடிகருக்கு வழங்கப் படும் விருதை நடிகர் திலகம் சிவாஜி பெயரில் வழங்க வேண்டும்.
4. இந்த மணிமண்டபம் என்பது சில பல கோடிகளில் நடந்து விடக் கூடியது, அது ஒன்றும் பெரிய காரியம் அல்ல, அதுவும் அதை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஒரு கடமைக்கு செய்யாமல் அதை உரிய முறையில் செய்ய வேண்டும். அது நிச்சயம் நடக்கும். அது வெறுமனே ஒரு அரசியல் தலைவருக்கு கட்டப்படுவது போல் செய்வதில் எனக்கு உடன் பாடில்லை. அது உலக அளவில் போற்றப் படவேண்டும், உலக அளவில் பயன் பெற வேண்டும், சும்மா வந்து அஞ்சலி செலுத்தி விட்டு போகும் வகையில் இருக்கக் கூடாது. அது மிகப் பெரிய அளவில் உலக வல்லுநர்களை வரவழைத்து ஒரு அருங்காட்சியகம் போல் அமைக்கப் பட வேண்டும். திரைப்படத்துறை மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் போன்ற பல தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் நிதானமாக யோசித்து செய்ய வேண்டிய காரியம்.
எனவே இந்த மணிமண்டபம் விவகாரத்தில் அரசியல் வாதிகளின் தலையீடு இல்லாமல் இருப்பதே சாலச் சிறந்தது.
இவையெல்லாம் என் தனிப்பட்ட விருப்பங்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
திரு. ஜவஹர் அவர்களே வருக!. சில நாட்களுக்குப் பின்னர் தற்போதுதான் பதிவுகளைப் பார்க்க முடிந்தது. த.மு.மு அலுவலகத்திலும் பின்னர் நடிகர்திலகம் தலைவராக இருந்தவரை, ஜனதாதள அலுவலகத்திலும் பொறுப்பாளராக இருந்தவன் என்ற முறையில் சில தகவல்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
1. தமிழகம் மட்டுமல்ல, உலகிலேயே என் பெயரை சொல்லியோ, கட்சிப் பெயர் சொல்லியோ நன்கொடை வசூல் செய்யக் கூடாது என்று கண்டிஷன் போட்டு கட்சி நடத்திய ஒரே தலைவர் நடிகர்திலகம் மட்டும்தான்.
2. கட்சி ஆரம்பித்துவிட்டதற்காக தன்னுடைய அடிப்படைக் கொள்கை எதையும் விட்டுக் கொடுக்காதவர் - உதாரணம்:
அ) நேரம் தவறாமை
ஆ) வெளிப்படையான பேச்சு
இ) சுய மரியாதை
இதுபோன்ற பல உண்டு
3. எல்லாவற்றுக்கும் மேலாக, கொடுத்த வாக்கு தவறக்கூடாது என்பதால், ஜானகி அணியோடு கூட்டணி இருந்தார் என்பதுதான் உண்மை.
4. திரையுலகில் ஜாம்பவானாக, பல நண்பர்களைப் பெற்றிருந்தும் யாரையும் கட்சிக்கு வர அழைக்கவில்லை
5. மேஜர் சுந்தர்ராஜனைப் பொறுத்தவரை, பணத்துக்காக - நட்பைக் கைவிட்டார் அவர். அதுதான் பிரிவுக்குக் காரணம். (த.மு.மு வில் செயலாளராக இருந்த அவருக்கு கொடியேற்றக் கூட தொண்டர்கள் பணம் கொடுத்தனர்). நடிகர்திலகம் என்றுமே நட்புக்கு மரியாதை கொடுப்பவர். இது அவர் அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தெரியும்.
தன்னுடைய சுய மரியாதை பாதிக்கப்பட்டால், சிறிதும் சமரசம் செய்துகொள்ளாதவர் நடிகர்திலகம். காங்கிரசிலிருந்து வெளியேறியதற்கும் சரி, ஜனதாதளத்திலிருந்து வெளியேறியதற்கும் சரி அதுதான் முக்கிய காரணமாக இருந்தது.
த.மு.மு கட்சி தோல்வியடைந்தவுடன் இதயம் பேசுகிறது மணியன் அவர்களுக்கு அளித்த சிறப்பு பேட்டியை அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்.
அன்பு நண்பர்களுக்கு,
நடிகர் திலகத்தின் ரசிகர்களின் செல்வாக்கு என்பதை நிரூபிக்க வாய்ப்பு வரும்போது அதனை எப்படி உணர்த்துவது என்பதற்கு சில வழிமுறைகளாக என் உள்மனதில் தோன்றியவற்றைத் தான் இங்கே என் கருத்துக்களாகப் பகிரந்து கொண்டுள்ளேன் என்பதையும் அரசியல் விவாதத்தை இங்கே தொடர்வதில் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்கென தேவைப்பட்டால் தனித் திரியொன்றை துவங்கி அதில் நாம் அதைப் பற்றி அலசலாம் என்பதே என் எண்ணம்.
அன்புடன்
ராகவேந்திரன்
ஷிவ்,
1970 மற்றும் 1984 பேரணிகள் இரண்டுமே அரசியல் தொடர்புடையவை என்பதால் சிறிது நாட்களுக்கு பிறகு அதை பற்றி பேசுவோம்.
சற்று அரசியலை மறந்து நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றி பேசுவோம்.
இரண்டு விஷயங்கள். இரண்டுமே ஜெமினி நிறுவனம் சம்பந்தப்பட்டவை. முதலில் இரும்புத் திரை. இது இந்தியிலும் தயாரிக்கப்பட்டது. [paigam என்று நினைவு]. இந்தியில் திலீப் குமார். மதுரைக்கு அருகில் உள்ள ஒரு ஆலையில் படமாக்கப்பட்டதாம். முதல் நாள் திலீப் சம்மந்தப்பட்ட காட்சி எடுக்கப்பட்டது. தமிழ் பதிப்பின் ஷாட் ரெடி என்றதும் நடிகர் திலகம் தான் அணிந்திருந்த யூனிபார்மில் சிறிது கீரிஸை தெளித்து கையிலும் சிறிது தேய்த்துக் கொண்டாராம். ஒரு தொழிலாளி ஆலையில் வேலை பார்க்கும் போது எப்படி இருப்பானோ அப்படி இருக்கிறேன் என்று சொன்னவுடன் ஜெமினி வாசன் நெகிழ்ந்து போக, யூசுப் பாய் அப்படியே நடிகர் திலகத்தை தழுவிக் கொண்டாராம். இதை நேரில் பார்த்த ஒருவர் சொன்ன தகவல்.
இது வாசனுக்கு நேர்ந்த அனுபவம் என்றால் அவர் மகன் பாலனுக்கு வேறொரு அனுபவம். விளையாட்டுப் பிள்ளை படப்பிடிப்பு. மைசூருக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் ரேக்ளா போட்டி படமாக்கப்பட்டது. அந்த ஷெட்யுலில் இறுதி நாள் படப்பிடிப்பு. படப்பிடிப்பு முடிந்து விட்டால் நடிகர் திலகம் கிளம்புகிறார். காட்சிப்படி போட்டியில் வெல்லும் நடிகர் திலகம் தன்னை பாராட்டும் சிறு வயது இளவரசியிடம் பேசி கை குலுக்கி விட்டு மேடைக்கு சென்று பரிசை வாங்கிக் கொண்டு கிழே இறங்கி வந்து பத்மினியை பார்த்துக் கொண்டே போய் நின்று முகத்தில் ரியாக்ஷன் கொடுக்க வேண்டும். பத்மினியின் முகத்தை நோக்கி திரும்பும் காமிரா அங்கிருந்து மீண்டும் நடிகர் திலகத்தின் முகத்திற்கு பயணிக்கும்.
இப்போது பிரச்சனை என்னவென்றால் காமிராவில் 450 அடி பிலிம் தான் இருக்கிறது. கலர் பிலிம். பிலிம் வாங்க வேண்டும் என்றால் பல கிலோமீட்டர் தாண்டியுள்ள மைசூருக்கு தான் செல்ல வேண்டும். படப்பிடிப்பு நடப்பது ஞாயிற்றுக்கிழமை வேறு. கடை திறந்திருக்குமா என்று தெரியாது. நடிகர் திலகம் அன்றே கிளம்ப வேண்டும். மாலை நேரமாகிக் கொண்டிருக்கிறது. மீண்டும் அனைவரின் கால் ஷீட்டும் ஒரு சேர கிடைத்து இந்த ஒருக் காட்சிக்காக வர வேண்டும். பாலன் மற்றும் ஏ.பி.என். முகத்தைப் பார்த்துவிட்டு ஏதோ ப்ராப்ளம் என்று புரிந்துக் கொண்ட நடிகர் திலகம் விஷயம் என்னவென்று கேட்க, அவரிடம் உண்மையை சொல்லியிருக்கின்றனர். சரி, இன்றே முடித்து விடலாம் என்று சொன்னவர் ஒரு ரிகர்சல் பார்த்து விட்டு இயக்குனர் ஏ.பி.என். எப்படி காட்சியமைப்பை வடிவமைத்திருந்தாரோ அதில் சற்றும் மாற்றம் இல்லாமல் நடித்து முடிக்க, அந்த காட்சி 450 அடிக்குள்ளாகவே படமாக்கப்பட்டு விட்டது. பார்த்துக் கொண்டே நின்ற பாலனின் கண்களில் பிரமிப்பு மற்றும் கண்ணீர். எப்போது நடிகர் திலகத்தை பற்றி பேசினாலும் இதை சொல்லி ஆச்சரியப்படுவாராம் எஸ்.எஸ்.பாலன்.
அன்புடன்
Plum,
If destiny wills, you would get an apportunity to view Puthiya Paravai at Mumbai - Arora.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 111
கே: சிவாஜி கணேசன் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்? (எஸ்.மனோகரன், கண்டி)
ப: அவரது 'அம்மா'வின் கட்சியை! அம்மா சொல்வதை தட்டுவதே கிடையாது சிவாஜி.
(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1958) ['அம்மா' - அன்னை ராஜாமணி அம்மையார்]
நாளை 24.8.2010 இதயதெய்வத்தை ஈன்றெடுத்த தெய்வம் அன்னை ராஜாமணி அம்மையார் அவர்களது 38வது ஆண்டு நினைவு தினம். அவரது நினைவைப் போற்றுவோம்!
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
Dear Mr.Ragevendra/Mr.Murali Srinivas
Agreed with your views of not continiung with discussions on political path of NT. I was only trying to express my enjoyment & fulifllment in participating in those events and nothing more than that.
Regarding NT films, I do not have the required presentation skills to express them in this forum though our Thalaivar's movies have been the sole motivation for me in my life and Ienjoy it day in and day out. Hence for the time being I shall be a silent observer enjoying the write ups of yours/Mr.Murli srinivas/Pammalar & Ms.Sharada.I can whole heartedly say that you all are a treasure house of info and details on our beloved thalaivar.
Regards
Shivram
MS, one interesting fact about NT in the various stories and anecdotes that emerge is how he made up for the inadequacies of others, difficult circumstances and unfortunate constraints.
If only he had better folks to work with, who could supplement his efforts rather than sit back and benefit from it...
Dear Shiv,
I think you have misunderstood what we had said about discussing political things. This is a sensitive topic and discussion on these lines may throw up some unpleasant and unwarranted repurcusions. Moreover this is basically a movie section where films and related matters are discussed. Not that politics should not be discussed but is being allowed if it is appropriate to the topic discussed. When we go beyond this, the Hub rules also come in to play and we may be asked to stop discussing politics here. As for as possible we are exercising self restraint here in this thread.
Now just because politics is not discussed that doesn't mean you should be silent here. As you yourself had mentioned there are 100s of NT movies which have been of inspirational as well as entertainement value. We don't have any special writing skills and it doesn't require any to write about your favourite movies or scenes or theatre happenings. Rest would automatically follow.
If everybody starts writing like Saradha, Swami or Raghavender Sir, then would it not be boring? So, please write whatever you know or have seen.
Hope this clears the air and hope to see you here often.
Regards
Plum, agree with you 100%
Dear Ragavendran Sir,
I agree with your points that Political matters need not be discussed in this thread. With this, I will restraint myself not writing any political activities in this thread.
Writing about thalaivar's movies, I will try to do share my experiences. Our thalaivar was un-conqurred king in the cine field. Until now, no body is near to his calibers. In politics, when his name is used for defeats, it is not digestable for the fans like me. That is why we prefer to give more importance to politics. Hope you undertand our feelings.
Being an adrent fan and keeping our NT as Thalaivar for me and involved in the political process of our thalaivar, politics will come automatically into picutre. This is the reason, I wrote more about political things in this thread. Hereafter, as per your advise, I will restraint in posting political matters here.
Dear Chandrasekaran Sir,
We are really proud of your contribitions and your associations with our thalaivar. You are doing lot of social work under Samuga Nala Paeravi. Thodarattum, ungal pani. If any sort of help can be required from me, please let me know. I will do my best. All the best for all your activities.
Let us pray that, the Ninaivu Mandapam for our thalaivar will happen soon in our country.
Thalaivarin aasirvaathangal endrum ungalukku irukkum.
டியர் ஜவஹர்,Quote:
Originally Posted by Jawahar
தங்களுடைய த.மு.மு. அநுபவங்களைக் கேட்கக் கேட்க பல புது விஷயங்கள் அறிய முடிகிறது. அவற்றையெல்லாம் அறிய அனைவரையும் போல நானும் ஆவலாய் உள்ளேன். சொல்லப் போனால் த.மு.மு. இயக்கம் பற்றி தனியாக ஒரு திரி தொடங்கினால் அதில் சுவையான பல தகவல்களைத் தெரிந்து கொள்ள ஏதுவாயிருக்கும்.
இதையே ஹப் நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். தயவு செய்து தமிழக முன்னேற்ற முன்னணியைப் பற்றி விவாதிக்க நமது ஹப்பில் தனி திரி தொடங்க வழி வகை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். அதன் மூலம் நமது நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் இயக்தத்தைப் பற்றிய பல புதுப்புது விஷயங்கள் கிடைக்கலாம்.
இது ஒரு புறம் இருக்கட்டும். முரளி சார் சொன்னதை வரிக்கு வரி நானும் வழிமொழிகிறேன். இத்திரியில் நீங்கள் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய தங்களுடைய சுவையான அனுபவங்களைக் கூற வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
I second this.Quote:
Originally Posted by Murali Srinivas
NT's fame, influence has spread it's wings beyond the TN shore, in fact, Malaysia's beloved actor, the late Tan Sri P. Ramlee himself have cited NT has one of his influences and if you had seen his performances you can easily spot the NTism.
I think as fans, our duty is to educate non-NT fans, younger generations who have missed out on seeing this magnificent actor strutting his stuff on films and (I missed out on this) on stage. He has generously poured out his heart on his craft, and was never stingy in giving his all in front of the camera.
I am one in the opinion that the screen performances in not only Tamizh films, but world all over has deteriorated in quality. Yes, Hollywood too. This is where films of Nadigar Thilagam can come in, and used as useful tool in teaching the younger generation of actors who are mostly deluded by "non-acting is best acting" mission statement.
These actors are cheered on by fans who has very little idea on gigantic impact created by NT on the first place during his time, and his influence on the current seniors of Tamizh film industry. These fans need to be educated about what acting is. How tough the job is. How it takes one to forgo the image issue and contribute tirelessly to the script, whether the writing is bad or not. How to work as a great team member, and if the responsibility lands on one's shoulder, a leader for that production team. These and much more qualities are inherent in the works produced by NT in his lifetime, a lifetime dedicated to the artistry called screen and stage performances.
I think I have slacked of late, in not discussing on his acting alone in this thread, I shall make ammend. But this is my call, also on behalf of Joe, of all of us to talk NT, his cinema, and how it has and should influence many lives, actors and fans alike. Our humble request, and sorry if I have offended anyone.
நீண்ட நாட்களுக்கு பின் இன்று கர்ணன் படம் பார்த்தேன், என்ன ஒரு நடிப்பு. எங்கு கற்றார் அந்த கலையை .... கர்ணன் என்ற கதா பாத்திரத்திற்கு ஏற்ப அவர் காட்டிய கம்பீர தொற்றமும் சிங்க நடையும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. அவர் பேசுகின்ற தமிழின் தரத்தில் எனக்கு தமிழ் மேலான பற்று மேலும் அதிகரிக்கிறது.அவர் நாவில் துள்ளி விளையாடுகிற பொது தமிழ் மேலும் அழகாகிறது. குறைந்தது நூறு முறையாவது அந்த படத்தை பார்த்திருப்பேன். ஒவ்வொரு முறை பார்க்கையிலும் திகட்டாத தேனமுதாகவே இருக்கிறது.
முக பாவத்தில் முன்னூறு வகையும் நடையில் நானூறு வகையும் காட்டிய அவரது திறமையை சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை .
Dear Rakesh,
Your words speak volumes of affection you have on NT. Politics is one field where NT could not meet the demand. I just want to put it very straight. NT fans need not be disappointed by his electorical failure. He was a straight forward and honest politician and one day his qualities would definitely speak of him. So let's not dwelve into them. As Rakesh said, it is our duty to show both the artists and fans of the current generation, what is acting and how NT defined it.
THE ONLY DEFINITION FOR ACTING IS SIVAJI GANESAN.
Our hubbers have contributed immensely in all the parts of Nadigar Thilagam thread, to bring out the glories of NT and his acting prowess. The analyses of Prabhu Ram, Murali Srinivas, Saradha, and other moderators-hubbers of various films of Nadigar Thilagam are ample proofs. We have lot more to come. This is the real contribution a fan of NT can make in his glory and our salutations to each one of them.
Let us continue our march towards the goal ... glorify NT.
நடிகர் திலகத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறி நடிப்பின் முழு பரிணாமத்தையும் அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துக் கூறுவதே நம் தலையாய கடமையாய்க் கொண்டு தொடர்வோம்.
அன்புடன்
ராகவேந்திரன்
இன்று பிறந்த நாள் காணும் நவ் அவர்களுக்கு நமது அனைவரின் சார்பிலும் உளமார்ந்த வாழ்த்துக்கள்
ராகவேந்திரன்
Thanks Mr.Jawahar for your appreciation. We all work together to spread the name and fame of Nadigarthilagam to the entire world.
Wish You A Very Very Happy Birthday, Mr. Nov!
Many More Happy Returns!
Warm Wishes,
Pammalar.
இன்று பிறந்த நாள் காணும் சந்திரசேகர் அவர்களுக்கு நமது அனைவரின் சார்பிலும் உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அன்புடன்
ராகவேந்திரன்
Happy Birthday Chandrasekaran sar :D
பிறந்த நாள் வாழ்த்துக்கள், சந்திரசேகரன் Sir :D
பிறந்த நாள் காணும் MR. சந்திரசேகரன் MR.NOV அவர்களுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி.
நாம் அனைவரும், நடிகர்திலகம் எனும் பள்ளியில், கல்லூரியில், பல்கலைக் கழகத்தில் படிக்காவிட்டாலும், படியை மிதித்திருக்கிறோம். இந்த வாய்ப்பை நமக்களித்த கலைக்கடவுளுக்கு நன்றி.
இந்த நட்பு வட்டம் வளர்ந்து, நடிகர்திலகத்தின் புகழ்குரலை உலகெங்கும் ஒலிக்கச் செய்வோம்.
மீண்டும் நன்றி!.
Piranth naal vazhthukkal Nanbare!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சந்திரசேகர்.
இரு திலகங்களும் சேர்ந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி வெளியான நாள் இது [26.08.1954]. இந்த நாளுக்கு வேறு ஒரு விசேஷமும் இருக்கிறது. அதே நாளில்தான் சிவாஜியின் குரலாகவே மாறிப் போன டி.எம்.எஸ். முதன் முறையாக சிவாஜிக்காக பாடிய தூக்கு தூக்கியும் ரிலீஸ் ஆனது.
ஒரு படம் - பிற்காலத்தில் எப்போதும் சேரவே முடியாத இருவர் சேர்ந்த முதல் படம்.
அடுத்த படம் - எப்போதும் பிரிக்கவே முடியாத இருவர் இணைந்த முதல் படம்.
அது மட்டுமா, இதே நாளில்தான் [1972-ல்] தவப்புதல்வன் ரிலீஸ்.
தவப்புதல்வனுக்கு உள்ள சிறப்பு என்னவென்றால் நடிகர் திலகம் நடித்து 100 நாட்கள் ஓடிய கடைசி கருப்பு வெள்ளை படம்.
இதற்கு பின் இரண்டே இரண்டு கருப்பு வெள்ளைப் படங்கள் மட்டுமே அவர் நடித்தார் [பொன்னுஞ்சல், தாய். அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்த படங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை].
தவப்புதல்வனின் வெற்றியைப் பற்றி சுட்டிக் காட்ட வேண்டிய சிறப்பு - அப்போது தூள் பரத்திக் கொண்டிருந்த பட்டிக்காடா பட்டணமாவின் வீச்சை தாண்டி, தர்மம் எங்கேயின் பிரம்மாண்டத்தை மீறி, பின்னால் வெளி வந்த உச்சமான வசந்த மாளிகைக்கும் ஈடு கொடுத்து அன்று தமிழகத்திலே நிலவிய அசாதாரண அரசியல் சூழலையும் சமாளித்து, தொடர்ந்து வந்த தீபாவளிக்கும் சரி தீபாவளி படங்களுக்கும் சரி அசந்து விடாமல் 100 நாட்கள் என்ற வெற்றிக் கோட்டை அதுவும் சென்னை பைலட் தியேட்டரில் இந்த இலக்கை எட்டும் முதல் தமிழ் படம்(?) என்ற பெருமையையும் அடைந்தது என்று சொன்னால் நிச்சயமாக முக்தா காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
அன்புடன்
நண்பர் திரு.சந்திரசேகரன் அவர்களுக்கு இதயங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
அன்புடன்,
பம்மலார்.
என் பிறந்த நாளில் - இப்படி ஒரு சிறப்பா? தகவலை வழங்கிய திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கும் வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
vaazhththu sonna anaivarukkum nandri :ty:
chandrasekarukkum en iniya pirandha naal vaazhththukkal. :D
சகோதரி சாரதா அவர்கள் கூறிப்பிட்ட சிவந்தமன் திரைப்படம் பற்றிய ஒரு சிறு நினவு. நம் நாடு மற்றும் சிவந்த மண் (1969௦) இரண்டும் தீவாளி ரிலீஸ் 7 nov மற்றும் 9 nov என்று நினவு நெல்லையில் பார்வதி திரை அரங்கில் நம் நாடு திரை படமும் சென்ட்ரல் திரை அரங்கில் சிவந்த மண் வெளியாயின MGR ரசிகர்கள் மற்றும் நம் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு. ரசிகர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை இட்டுகொண்டனர் இரண்டு படங்களும் வெற்றி பெற்றன என்று நினேகிறேன்
[color=blue]தவப்புதல்வனின் வெற்றியைப் பற்றி சுட்டிக் காட்ட வேண்டிய சிறப்பு - அப்போது தூள் பரத்திக் கொண்டிருந்த பட்டிக்காடா பட்டணமாவின் வீச்சை தாண்டி, தர்மம் எங்கேயின் பிரம்மாண்டத்தை மீறி, பின்னால் வெளி வந்த உச்சமான வசந்த மாளிகைக்கும் ஈடு கொடுத்து அன்று தமிழகத்திலே நிலவிய அசாதாரண அரசியல் சூழலையும் சமாளித்து, தொடர்ந்து வந்த தீபாவளிக்கும் சரி தீபாவளி படங்களுக்கும் சரி அசந்து விடாமல் 100 நாட்கள் என்ற வெற்றிக் கோட்டை அதுவும் சென்னை பைலட் தியேட்டரில் இந்த இலக்கை எட்டும் முதல் தமிழ் படம்(?) என்ற பெருமையையும் அடைந்தது என்று சொன்னால் நிச்சயமாக முக்தா காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
[/color
Dear Murali sir,
தர்மம் எங்கே பிரமாண்டம் பற்றி குறிப்பிட்டீர்கள், நானும் படம் பார்த்திருக்கிறேன். அந்த படம் NTஅவர்களின் 100 நாள் பட வரிசையில் இல்லையே ?
நடிகர் திலகத்தின் திரைப்பட வரலாற்றிலேயே ரசிகர்களிடத்திம் மிகவும் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படம் தர்மம் எங்கே என்றால் அது மிகையாகாது. குறிப்பாக பொம்மை மாத இதழில் அப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் மிகுந்த ஆவலை ஏற்படுத்தின. பொம்மை இதழில் இரு பக்கங்கள் எதிரெதிரே பார்த்தவாறு அமைந்த பக்கங்களில் நடிகர் திலகத்தின் வித்தியாசமான தோற்றம் அப்போது ரசிகர்களிடையே ஆவலை மிக அதிகமாக தூண்டி விட்டது. குதிரைப் போர், துப்பாக்கிப் போர் என காட்சிகளும் ஒரு பிரம்மாண்டமான படம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தின. தெய்வ மகன் படத்தைத் தொடர்ந்து சாந்தி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் என்றவுடன் அதுவும் பரபரப்புக்கு தன் பங்கை சேர்த்துக் கொண்டது. சொல்லப் போனால் வசந்த மாளிகை படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் திரையிடப் பட்டபின்னர் தான் அது பெருத்த வரவேற்பையும் ஆவலையும் ஏற்படுத்தியது. ஆனால் தர்மம் எங்கே முதலிலிருந்தே பிரம்மாண்டம் என்கிற எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே உண்டாக்கியது. சாந்தி திரையரங்கில் பட்டிக்காடா பட்டணமா படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்ததால் அரங்கு கிடைக்காமல் முதன் முதலில் ஓடியன் திரையரங்கம் புக் செய்யப் பட்டது. நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல் நடிகர் திலகத்தின் படங்களிலேயே அட்வான்ஸ் புக்கிங் துவங்கிய நாளிலேயே கிட்ட்த்தட்ட ஒரு மாதத்திற்கு மாலைக் காட்சிக்கான டிக்கெட்டுகளும், வெளியாகும் நாளிலிருந்த தொடர்ந்து அதாவது 13 நாட்களுக்கு 3 காட்சிகள் வீதம் டிக்கெட்டுகளும் விற்று விட்டன. அட்வான்ஸ் புக்கிங்க் போர்டில் இடம் இல்லாமல் இன்னொரு போர்டு கொண்டு வந்து வைக்க வேண்டியிருந்தது. இந்தப் படம் வெளி வந்து ஓடிக் கொண்டிருக்கும் போதே பக்கத்திலேயே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கூட இல்லாத பைலட் தியேட்டரில் தவப் புதல்வன் ரிலீஸ் என்று விளம்பரம் வந்து விட்டது. பைலட்டில் தவப் புதல்வன் ஓடிக் கொண்டிருக்கும் போது சாந்தியில் வசந்த மாளிகை, சித்ராவில் பட்டிக்காடா பட்டணமா, மற்றும் பிளாசாவில் பழைய படங்கள் என்று சுற்றிலும் நடிகர் திலகத்தின் படங்களே. மவுண்ட் ரோடில் இவ்வளவு படங்களையும் தாண்டி பைலட்டில் தவப்புதல்வன் பெற்ற வெற்றி மகத்தானது. இதைத் தான் முரளி சார் குறிப்பிட்டுள்ளார். எங்களுக்கு ஞாயிற்றுக் கிழமையானால் ஒரு ரவுண்டு எல்லா தியேட்டரையும் வலம் வருவோம். சித்ராவில் துவங்கி சாந்தி, பின்னர் பிளாசாவில் பழைய படம் போட்டால் அங்குள்ள நிலவரம், பின் பிளாசா வாசலில் இருந்த பஸ் ஸ்டாப்பில் 21 ஏறி பைலட்டில் இறங்கி தவப் புதல்வன் நிலவரம் பார்த்து விட்டு அங்கிருந்து பொடி நடையாக நண்பர்களுடன் திருவல்லிக்கேணி செல்வோம்.Quote:
Originally Posted by J.Radhakrishnan
பழைய நினைவுகளை அசைபோட வாய்ப்பளித்தமைக்கு நன்றி,
அன்புடன்
ராகவேந்திரன்
Looks like NT thread is going strong.
One of the best "method" actors Dilip Kumar mentions NT as one of his favorite actors in India. In fact, NT is the only actor from South India mentioned by Dilip Kumar. You can find his complete interview given to The Hindu here: http://www.thehindu.com/arts/magazin...?homepage=true
This is what he said about NT:
Your favourite actors and directors?
From Hollywood, with deep respect, I would like to mention Sir Charles Laughton, Paul Muni, Marlon Brando and Richard Burton. Greta Garbo, Ingrid Bergman and Katherine Hepburn are my all-time favourites.
From India, I consider Ashok Kumar, Motilal, Balraj Sahni, Chabi Biswas and Pahari Sanyal as icons of natural performances. Uttam Kumar and Shivaji Ganesan were very powerful actors and I must mention the polished performances of Sabitri Chatterjee and Arundhati Sinha. From the past four decades, Amitabh Bachhan, Aamir Khan and Tabu are gifted performers. Among the directors, Amiya Chakrabarty, Nitin Bose, Bimal Ray, Zia Sarhadi and K. Asif and Mehboob Khan were unforgettable.
Great Respect to our NT from one of the best in Bollywood!!