http://i40.tinypic.com/315n8yt.jpg
Printable View
மக்கள் திலகத்தின் 27வது திரைப்படம் "குமாரி" கதை சுருக்கம்
கோசல அரசர் மகள் குமாரி, வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது விபத்து ஒன்று நேரிடுகிறது. முரட்டுத்தனமான குதிரைகள் கட்டுக்கடங்காமல் ஓடின. "விஜயன்" என்ற ஒரு வாலிபன், இந்த விபத்திலிருந்து காப்பாற்ற, விரைந்தோடினான்.
குமாரியின் அழகில் மயங்கிய விஜயன், அவளைக் காப்பாற்றுகிறான். அழகியான இளவரசியோ, அவன் அழகுக்கு அடிமையாகின்றாள். காப்பாற்றி உதவியதற்காக, அன்புக் காணிக்கையாக விலையுயர்ந்த மோதிரத்தை பரிசாக அளிக்கிறான். அத்துடனில்லாமால், கோசலத்துக்கொரு முறை வர வேண்டுகின்றான். அரசரிடம், பணிபுரியவும் கோரி விடை பெற்றுச் சென்றாள்.
விஜயனும், குமாரியும் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்துக் கொண்டிருந்த வளர்ப்புத் தந்தையான வல்லபன், இவர்கள் தகுந்த ஜோடி எனவும், ஒருவருக்கொருவர் பிடித்தமாக இருப்பதையும் உணர்ந்து கொள்கிறான்.
கானகத்திலே வெண்ணிலவு பால் போலக் காய்ந்து, இளைஞனான விஜயனுக்கு பருவ தாகத்தை உண்டாக்கியது கோசல குமாரியின் நினைவு மேலிட்டவனாக, வாத்தியம் ஒன்றை எடுத்து காதல் கீதம் இசைக்கிறான். அரண்மனையிலே, அதே இரவு அரசிளங்குமரி, ஆனந்தமாக படகோட்டி பண்ணிசைக்கிறாள். இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் குமாரியின் தகப்பனாரான கோசல அரசர் மந்தாராவும், அவரது இரண்டாந்தாரமான இளம் மனைவி சந்திராவளியும். குமாரிக்கு ஏற்பட்ட மன மாறுதலைக் கண்ட மன்னர் மந்தாரா, சந்திராவளியிடம், "குமாரிக்கு தக்க கணவனை தேட வேண்டும்" என கூறுகிறார் ஆனால், சந்திராவளியோ, குமாரி தன் சகோதரன் சகாரனையே மணக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறாள். மன்னரோ மறுக்கிறார். கோபம் கொண்ட சந்திராவளி, எப்படியும் தன் சகோதரனுக்கே குமாரியை மணமுடித்து, அதிகாரத்தை தன்னிடமே வைத்துக் கொள்ள திட்டமிடுகிறாள்.
காதல் கொண்ட விஜயன், கோசலத்துக்கு சென்று, பணி புரிய விரும்பினான் மன்னர் மந்தாராவிடம் சேவை செய்து அவர் மகள் குமாரியின் காதலை அடைய எண்ணினான். வல்லபனும் சம்மதித்தான் இதற்கு. ! ஆனால், விஜயனிடம், வல்லபன், தன் பெயரை வெளியிடக் கூடாதென்றும், தான் மந்தாராவின் உறவினரான ஜெயச்சந்திர மன்னரிடம் பணி புரிந்ததையும், ஜெயச்சந்திரரை, அவரது சகோதரன் பிரதாபன் அநியாயமாக கொன்றதையும், பழியை தன் பேரில் சுமத்தி தன்னையும் கொல்ல முயற்சி செய்ததையும், தான் இறந்தால், ஜெயச்சந்திரர் கொலையுண்ட செய்தி உலகுக்கு பரவாது என்று அவன் கருதினான் எனவும், முதல் முறையாக விஜயனிடம் கூறினான். கொலையுடன் சம்மந்தப்பட்ட தால், தன் பெயரை எக்கரனத்தைக் கொண்டும் வெளியிடக்கூடாது என்றும் புத்திமதி கூறினான். விஜயன் மந்தாராவின் ஆதரவு பெற புறப்பட்டான்.
மந்தாரா அவனை மெய்க்காப்பாளனாக நியமித்தார். அரசிளங்குமாரிக்கும், அரசர் மெய்காப்பாளனுக்கும் உள்ள காதல் வளர்ந்தது. மந்தாராவும், குமாரிக்கு தகுந்த மணமகன் கிடைத்தது பற்றி சந்தோஷிக்கிறார். ஆனால், சந்திராவளியோ , விஜயன் தான் கருதிய பாதைக்கு இடையூறாக இருப்பதை எண்ணி விஜயனை ஒழிக்க தீர்மானிக்கிறாள்.
ஒரு நாள் இரவு, குமாரி மூலம் விஜயனுக்கு அனுப்பப்பட்ட நிருபத்தை மாற்றி, விஜயனிடம் அனுப்பி விடுகிறாள். அதன் பயன், குமாரியை சந்திக்க வேண்டிய விஜயன், சந்திராவளியின் அறைக்கு செல்கிறான். வயோதிக அரசனை மணந்திருந்ததால், சந்திராவளி, வாலிபனான விஜயன் மீது ஏற்கனவே காதல் கொண்டிருந்தாள். அவனிடம் காதல் மொழி பேசி, மயக்குகிறாள். ஆனால் விஜயனோ கோபங்கொண்டு, அவளை கீழே தள்ளி விடுகிறான். சந்திராவளி, கபட நாடகம் ஆடுகிறாள். பழியை அவன் பேரில் சுமத்துகிறாள். அநியாயம் செய்து விட்டதாக அலறி, அபயத்துக்கு அழைக்கிறாள் அரசர், இதைக் கேட்டு ஓடோடி வருகிறார். சந்திராவளியின் சாகஸம் வெற்றி பெறுகிறது. தன்னை வற்புறுத்தியதாக கூறுகிறாள் ! கோபம் கொண்ட அரசர் வீரர்களை அழைத்து விஜயனை ஒப்படைக்கும்படி பணிக்கிறார். விசாரணை மண்டபத்திலே, விஜயன், குற்ற்வாளி எனக் கருதப்படுகிறான். கசையடி தண்டனை கொடுக்கப்படுகிறது. குதிரை மீது கட்டப்பட்டு நாட்டை விட்டு விரட்டப் படுகிறான்.
விஜயனை விரட்டி விட்ட காரியத்தில் சந்திராவளி வெற்றி பெற்றாலும், பிடிவாத கிழவராக இருக்கும் அரசர் வேறு எவருக்கும் குமாரியை மணமுடிக்க என்று தெரிந்து, தன்னுடைய ஆட்களை , காட்டு மனிதர்களாக மாறு வேடம் அணியச் சொல்லி, அம்பு ஒன்றை , குமாரியின் அறையில் எறியச் செய்கிறாள். அங்கே விழுந்த அம்பில் கட்டப்பட்ட நிருபத்திலிருந்து, விஜயன் தான் எழுதியிருக்கிறான் என நினைத்து, காத்திருந்த ஆளுடன் புறப்படுகிறாள் குமாரி. ஆனால், கோட்டையிலே தந்திரமாக அடைக்கப்பட்டதை பின்னர் உணருகிறாள். சந்திராவளி தன் திட்டம் நிறைவேறி விட்டதாக கருதினாள். ஆனால், குமாரி பயப்படுவாள் என அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக அவளையே எதிர்த்தாள் ! அதன் பயன், கோபம் கொண்ட சந்திராவளி, அடித்து கீழே தள்ளி, சகாரனிடம் கூறி, கோட்டை பூட்டி வைக்கச் செய்கிறாள். தன் இஷ்டத்துக்கு இணங்கும்வரை அவள் அப்படியே கிடக்க வேண்டும் எனவும் உத்தரவிடுகிறாள்.
அரசரிடம், விஜயனைத் தேடித்தான் குமாரி ஓடி விட்டாள் என தோழி சந்திரிகா கொண்டு வந்த ஒரு கடிதத்தை காட்டி மன்னரை நம்பச் செய்து விட்டாள். கடித்ததிலிருந்ததைப் பார்த்த மன்னர் விஜயனை தேடித் தான் குமாரி போயிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். சந்திராவளியோ , தன் சகோதரன் சகாரனை, குமாரியை அவனுக்கு மணமுடித்து கொடுக்க வேண்டும் எனவும் கூறுகிறாள். கோட்டையிலிருந்து, ஜன்னல் வழியாக குமாரி தப்பித்து ஓடி விடுகிறாள்.
குமாரி ஓடுவதைக் கண்ட விகாரன், சகாரனுடன் அவளைப் பின்பற்றுகிறான். தப்புவதற்கு ஒரு வழியுமில்லாத குமாரி, கடைசியாக ஆற்றிலே குதித்து மறைந்து விடுகிறாள். சகாரனும் விகாரனும், அவளைத் தேடி தேடி அலைகிறார்கள்.
செம்படவன் ஒருவன் ஆற்றிலே மிதந்து வரும் குமாரியைக் காப்பாற்றுகிறான். மணமாகாத குமாரியைக் கண்டவுடன், செம்படவன் தான் மணந்து கொள்ள நினைத்து, அவளிடம் தன் எண்ணத்தை தெரிவிக்கிறான். ஒரு சமயம் செம்படவன் கடைக்கு சென்றிருந்த போது, குமாரி தப்பித்து ஓடுகிறாள். திரும்பி வந்த செம்படவன், குமாரி ஓடுவதைக் கண்டு பின் தொடர்ந்து பிடித்துக் கொள்ளுகிறான். ஏற்கனவே, குமாரியை வழி நெடுக தேடிக் கொண்டு வந்த சகாரனும், விகாரனும், அவனிடமிருந்து காப்பாற்றி, அவந்திக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கேதான் பிரதாபன் ஆட்சி புரிகிறான். அண்ணனைக் கொன்ற அக்கிரமக்காரன் !
குதிரை மீது கட்டப்பட்ட விஜயன், காடுகளில் அலைகிறான் குடிக்கக் கூட தண்ணீரில்லாமல் அவதிப்படுகிறான். காடுகளில் திரிந்துக் கொண்டிருந்த நாடோடிக் கும்பல் பெண்கள் விஜயனைக் கட்டவிழ்த்து காப்பாற்றி எடுத்து செல்லுகிறார்கள், தங்கள் கூடாரங்களுக்கு. அங்கே, விஜயன் குணமடைகிறான். நாடோடி பெண்ணின் தாயார் ஒருத்தி கைரேகை மூலம் அவன் அரச குமாரன் எனவும், அரசன் ஆவான் எனவும் உணர்கிறாள். ஜீவா என்கின்ற நாடோடி அழகி, விஜயனிடம் காதல் கொள்கிறாள். தன் தாய் கூறிய கைரேகை பலனையும் கூறுகிறாள். காதலினால் வந்த வினை என விஜயன் அவளிடம் கூறி, ஏற்கனவே தன் இதயத்தில் வேறொருத்திக்கு இடம் அளித்து விட்டதையும், சகோதரியாகத் தான் அவளைக் கருதுவதாகவும் கூறுகிறான்.
நாடோடிப் பெண்கள் ஆடிப்பாடி விஜயனுக்காக ஒரு கொண்டாட்டம் நிகழ்த்துகிறார்கள். மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அந்த நிகழ்ச்சியின் நடுவே, மாறு வேஷமடைந்த வல்லபன் வந்து விஜயனைப் பார்க்கிறான். விஜயன் தன தந்தையை கொலை காரன் என குற்றம் சாட்டுகிறான். ஆனால், வல்லபன் உண்மையைக் கூறி விடுகிறான். "விஜயன் வேறு யாருமல்ல. ஜெயச்சந்திரருடைய மகன் தான், காப்பாற்றி வளர்த்தது வல்லபன்" என்பது தான் அந்த உண்மை. தன் செயலைக் குறித்து வருந்தினான் விஜயன். பிரதாபனை, பழிக்கு பழி வாங்க தீர்மானிக்கிறார்கள். நாடகக் கூட்டமாக மாறி அவந்திக்கு சென்று அங்கே தங்கள் திட்டத்தை நிறைவேற்ற தீர்மானிக்கிறார்கள்.
பிரதாபனை எப்படி பழி வாங்குகிறார்கள் ? விஜயனும் - குமாரியும் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் ? விஜயனுக்காக வல்லபன் எப்படி தியாகம் செய்து பிரதாபன் மூலம் இறந்தான் என்பதை வெண்திரை விளக்கும்.
இப்படத்தின் பாடல்கள் தொடர்கிறது
குறிப்பு : ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தில் உள்ளபடி, பொருள் மாறாமல், அந்த தமிழ் நடையிலேயே, மேற்கூறப்பட்ட கதை சுருக்கம் விளக்கப்பட்டுள்ளது.
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம். ஜி.ஆர்
எங்கள் இறைவன்
குமாரி படத்தின் கதை சுருக்கம் - பதிவு அருமை .
நன்றி பேராசிரியர் செல்வகுமார் சார் .
சற்று இடைவெளிக்கு பின் திரியில் ''குமாரி'' படம் மூலம்
இனி தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்களின் தொகுப்பு
தொடரும் என்று எதிர்பார்க்கிறோம் .
Kumari 1952
RANDOR GUY
arts, culture and entertainment
M.G. Ramachandran, Madhuri Devi, Sriranjani Jr, Serukalathur Sama, T.S. Durairaj, K.S. Angamuthu, C.T. Rajakantham and ‘Pulimoottai' Ramaswami
An entertainer by R. Padmanabhan, this film based on folklore, had MGR playing the hero — it was one of his early films when he was not yet the iconic star he would soon become.
Padmanabhan made his mark even during the Silent Film era and was responsible for the entry of another sadly neglected Indian film pioneer, lawyer-turned-filmmaker K. Subramanyam. KS took his bow in one of Padmanabhan's silent films as a screenwriter. Padmanabhan was also responsible for bringing in Raja Sandow who created history in Bombay and later in Madras. Produced and directed by Padmanabhan, the film was written by the lyricist and Tamil scholar Ku. Sa. Krishnamurthi and S. M. Santhanam, while the lyrics were by Ku. Sa. Ki and T. K. Sundara Vathiyar. K. V. Mahadevan composed the music, while Padmanabhan had his usual cinematographer T. Marconi, an Italian in Madras, work with him.
Shot at Neptune Studio in Adyar (later Satya Studios), the assistant director was ‘A.C.T. Chandar M.A.' Soon after he would blossom as a writer-director and producer who made many hit movies with Sivaji Ganesan, M.G. Ramachandran and others under his full name, A.C. Thirulokachandar! Santhanam also worked with ACT in the directorial department.
(Santhanam was a noted film journalist and critic during the late 1940s and worked for the popular Tamil movie monthly, Gundoosi.)
A princess (Sriranjani), while travelling in a horse carriage, meets with an accident when the horses run wild, and is rescued by a handsome young man (MGR). The two fall in love and the princess gives him a signet and invites him to her palace. Problems arise when the king wishes to get the princess married and the queen (Madhuri Devi) wishes to have her married to her useless brother (Durairaj.)
After many thrilling incidents, the lovers are united and live happily as expected!
The film had many songs rendered by P. Leela, Jikki (P.G. Krishnaveni), A.M. Raja, A.P. Komala, and N.L. Ganasaraswathi. There were also gypsy dances choreographed by Sohanlal. One song rendered by Jikki off-screen, ‘Laalalee laallee…..' picturised on Madhuri Devi, became popular. It was a straight lift of the popular duet in Dastan (Hindi) rendered by Suraiya and Mohammed Rafi. This tune in turn was inspired by a popular Hispanic melody of that period and was used by Naushad!
In spite of the interesting onscreen narration, deft direction and excellent camerawork by Marconi and impressive performances by MGR, Serukalathur Sama and others, Kumari did not do well. One of the important roles was played by Vijayakumar, a handsome young man. After playing lead roles in some films during the 1940s and 1950s, he faded from public memory.
Comedy was provided by C. T. Rajakantham, ‘Pulimoottai' Ramaswami and others.
Padmanabhan also produced this film in Telugu under the title Rajeswari.
Remembered for being one of the early films of the future superstar and cult figure MGR, and some catchy tunes of Mahadevan.
மீண்டும் இந்த சிறந்த திரி தொடர்வது மகிழ்வூட்டுகிறது. இதுவே தங்கள் தலையாய கடமை என்று கருதி திரு எம்.ஜி.ஆர் அவர்களின் பட விவரங்களை முழுமைப் படுத்துமாறு நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அந்தந்தப் படம் வரும் போது என்னிடம் ஏதாவது தகவல் அல்லது ஆவணம் இருக்குமாயின் அதனைப் பகிர்ந்து கொள்கிறேன்.
அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் என் வாழ்த்துக்கள்.
திரு. வினோத் சார் மற்றும் திரு. ராகவேந்திரா சார் அவர்களுக்கு நன்றி !
எனது கல்லூரி அலுவலகப் பணிகள் (மானவர்கள் சேர்க்கை நடைபெற்ற சமயம்) காரணமாகவும், "ஒலிக்கிறது உரிமைக்குரல்" பத்திரிகையுடன், நான் சார்ந்திருக்கும் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம் இணைந்து நடத்திய சமீபத்திய "பொன் மனச் செம்மல் முப்பெரும் விழா" காரணமாகவும், வேறு பல அலுவல்கள் காரணமாகவும், இத்திரியின் வேகத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டது வருந்தத் தக்கதுதான்
மக்கள் திலகத்தின் 28வது படம் முதல் செய்திகள், அனைத்து பதிவாளர்களின் ஒத்துழைப்புடன் மீண்டும் இத்திரியில் தொடரும்.
ஓங்குக புரட்சித்தலைவரின் புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகத்தின் 27வது திரைப்படம் "குமாரி" திரைப்படத்தில் இடம் பெற்ற
பாடல்களின் முதலிரண்டு வரிகள் :
1. தனித்தகுரலில் பெண் பாடும் பாடல் : ஓ .... ஓ ..... அம்புலியே வா !
நீ அன்பாகவே, வா என் கூடவே !
2. ஆண்கள் கோரஸ் (குழுப்பாடல்) : வாழ்க சாந்தி சத்யமே வாழ்க
மாறாத நீடூழி
3. தனித்தகுரலில் ஆண் பாடும் பாடல் : ஆணுக்கொரு பெண் வேணுமே ... அவசியம்
பெண்ணுக்கொரு ஆண் வேணுமே ... கட்டாயம்
4. தனித்தகுரலில் ஆண் பாடும் பாடல் : அழியாத காதல் வாழ்வின் - அணையாத
ஜோதியாய் ஒளி வீசுவாள் - எந்நாளும்
5. ஜோடிப்பாடல் - படகோட்டிகளுடன் : அதைர்யம் கொள்வது அறிவீனம் - தைரியமே
பிரதானம் - நதிமீதில் படகு போவது போலே
6. தனித்தகுரலில் பெண் பாடும் பாடல் : அருகிலே அவர் வருவார்
இருளிலே நிலவொளி போல்
7. தனித்தகுரலில் ஆண் பாடும் பாடல் : காதலின் சோலை கனியை
இவ்வேளை காணவே
கண்கள் ரெண்டும்
8. தனித்தகுரலில் பெண் பாடும் பாடல் : ஹ ஹ ஹ அழகின் ராணி - யாரேனக்கே
இணையாவார் - ஆருயிர் வாலிபன் முன்னே
9. தனித்தகுரலில் பெண் பாடும் பாடல் : லாலலீ ! லாலலீ ! லாலலீ ! ஹா ஹா
அழகின் அற்புதமே ... பாரில் இருள் நீக்கும்
10. தனித்தகுரலில் பெண் பாடும் பாடல் : சொல்ல சொல்ல, உள்ளே வெக்கம் - எட்டி
எட்டி பாக்குதே - செல்ல பிள்ளை போலே ஆசை
11. குழுப்பாடல் (ஜிப்ஸி கூட்டம்) : ஆயோ .... ஷகி மாயோ .. அபு காயோ
துரு ஜூயிதோ, ரோமி ஹாரியோ
12. தனித்தகுரலில் பெண் பாடும் பாடல் : அலையாடும் போலே ... மன நிலையாடலானேன்
அனாதை நான் தனியே வாடலானேன்
13. கோஷ்டி கானம் : தெம்மாங்கு, டபுக்கு டப்பா - தில்லானாத்தா
திமி திமித்தா - தையா தையா, ஆட்டம் போட
14. தனித்தகுரலில் பெண் பாடும் பாடல் : நாட்டுக்கு நலம் நாடுவோம் .. நா தல்லி
நா தன்றி , சூடு நல்லோடு, விருந்து
================================================== ======================================
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம். ஜி.ஆர்
எங்கள் இறைவன்
மக்கள் திலகத்தின் 27வது திரைப்படம் "குமாரி" திரைப்படத்தில் இடம் பெற்ற 11வது பாடலாகிய "ஜிப்ஸி கூட்ட" பாடல் பின்னாளில் வெளிவந்த தமிழ் மற்றும் இந்தி படங்களில் இடம் பெற்ற ஜிப்ஸி கூட்ட" பாடல்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தது, குறிப்பிடத்தக்கது.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
நமது தெய்வத்தின் அனைத்து படங்களின் பாடல் புத்தகங்களையும், பல அரிய தகவல்களையும் தன்னகத்தே கொண்ட திரு. செல்வகுமார் அவர்கள் மீண்டும் திரிக்கு வந்து ஒளியூட்டி என்போன்றோருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டுமென கேட்டுகொள்கிறேன்...