யப்பா! நல்ல வேலை பார்த்து தொலச்சியே! இல்லேன்னா திரியை இழுத்து மூடி இருப்பாங்க இந்நேரம்.
Thanks God
நிஜம்மாவே ஆடிப் போயிட்டேன்பா ஒரு செகண்ட்.
Printable View
சரி! ஜெயந்தி ரசிகர்கள் கோபித்துக் கொள்ளப் போகிறார்கள்! 'லதா படத்தைப் போட்டியே... ஜெயந்தி போட்டோ போடலியே' என்று.
அவர்களுக்காக.
http://chitraloka.tatwaa.in/images/g...jayanthi_l.jpg
http://www.chitraloka.com/images/gal...ayanthi1_l.jpg
http://www.chitraloka.com/images/gal...jayanthi_l.jpg
http://www.chitraloka.com/images/gal...jayanthi_l.jpg
http://actressin.com/photos/jayanthi...ess-photos.jpg
http://chitraloka.com/images/gallery...20image1_l.jpg
http://1.bp.blogspot.com/_BbJAArGDIE.../JAYANTHI3.jpg
http://3.bp.blogspot.com/_BbJAArGDIE...JAYANTHI90.jpg
http://4.bp.blogspot.com/_BbJAArGDIE...JAYANTHI35.jpg
மணிப்பயலில் 'நமது' ஆலத்துக்காக எஸ்.ஜானகி பாடிய 'நான் ஆடினால் ஒருவகை போதையில் பலவகை மனிதரும் கூடவே ஆடுவார்' என்ற பாடலும் உண்டு.
கொஞ்சம் கட்சி சாயல் வீசிய படம். தனிக்கட்சி துவங்கிய புதிது.
மாஸ்டர் சேகர் பாடும் 'நான் உள்ளேயிருந்து வெளியே வந்தேன் உலகம் தெரிந்ததடா' நம்ம ராட்சசி பாடியதுதான். பழைய கட்சியிலிருந்து வெளியே வந்த நேரம். தயாரிப்பு ஆ.எம்.வீரப்பன். கேட்கணுமா?.
பேபி இந்திராவின் பள்ளிக்கூட விழாப்பாட்டு ரொம்ப அதிகப் பிரசங்கித்தனமாக தெரிந்தது. டைட் உடையில் ஜெயந்தி கொஞ்சம் ஆறுதல்.
'காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்' பக்கா கட்சிப்பிரச்சாரம்.
வாசு ,
ஆணையிட்டு விட்டீர்கள். இந்த படம் 1971 இல் நெய்வேலி அமராவதியில் பார்த்தது.இந்த படம் பார்த்து விட்டு வரும் போது என் நண்பன் (அவனுக்கு சிறிது உடல் உபாதையில் வாய் கோணலாக இருப்பதால் கோண வாயன் என்று கூப்பிடுவோம்). அப்போதெல்லாம் எல்லோருக்கும் பட்ட பெயர்தான்.(இப்போது அதெல்லாம் வழக்கிலில்லை என்று கேள்வி)
படம் பார்த்து விட்டு நடந்து வரும் போது எங்கள் பள்ளி வழியாக வந்தோம். கழிப்பறைக்கு சென்றால் அங்கு எழுதியிருந்த " புண்" என்று ஆரம்பித்த வார்த்தையை விவரம் தெரியாமல் கோண வாயன் புன்னகை என்று படித்து விட நாங்கள் சிரித்து கலாய்த்து அடித்த லூட்டி.
அப்போதே எனக்கு விமர்சகர்களை கண்டால் கொதிக்கும். எந்த சோதனை முயற்சிகளையும் முளையிலேயே கிள்ளி எரிந்து வெந்நீர் ஊற்றி விடுவார்கள். அப்போதே நான் கொஞ்சம் ரசனையில் வேறு பட்டவன். (ரவி சொல்வது மாதிரி படி படியாக எழுதி பழகி உயரவில்லை. வயதின் முதிர்ச்சிக்கும் அறிவின் எழுச்சிக்கும் தொடர்பேயில்லை) அப்போது எனக்கு neo noir அபத்த படங்களை தெரியாவிட்டாலும் ,சும்மா கற்பழிப்பு என்றால் ஜாக்கெட் கிழிப்பதை காட்டாமல் , சினிமா லைசென்ஸ் உபயோக படுத்தி பாலச்சந்தர் பண்ணிய புதுமை எனக்கு மிக பிடித்தே இருந்தது.(கற்பழிப்பு பற்றியெல்லாம் 8 வயதிலேயே எனக்கு வயதை மீறிய நண்பர்கள் மது,மாணி என்ற சென்னை நண்பர்கள் சுமாராக போதித்து விட்டார்கள்.11 வயதில் map drawing ஆரம்பித்தாகி விட்டது).பாடல்களே ரியலிசம் இல்லாதது என்று வரும் போது ,அதை சுவாரஸ்ய படுத்த எங்கு உபயோகித்தால் என்ன?
காமத்தில் கண்கள் கெட்டால் ,ஞானி யின் பேரும் முட்டாள்.(அம் ஆத்மியில் சேர்ந்து election நின்றாலும்)மோகத்தில் பிறரை தொட்டால் உன் தாயே நேர்மை கெட்டாள் . என்று வரிகளும், பரபரப்பான இசை கோர்ப்பும் அமர்களமான பாலச்சந்தரின் low key mood lighting எல்லாம் காட்சியை தூக்கும்.(என்ன பாலச்சதருக்கு பிரியமான ஜெயந்தியின் மேலானதை இன்னும் கொஞ்சம் கூடுதல் focus பண்ணியிருக்கலாம்).ராமதாசின் கோமாளி minor சுரிதார் (ஜமிந்தார்?),ஜெயந்தியின் கருப்பில் பார்டர் போட்டு நீள செயின் என்று ஞாபகம்.(43 வருஷம் ஆயிடிச்சு பாஸ்).close up சீற்ற கண்கள்,ராமதாசின் வேர்க்கும் மோகம், புலி தலை ,ஒரு மர்ம பட பாணி காட்சியமைப்பு (ராகவன் VAT என்று ஒன்று குடித்து கொண்டிருப்பார்.இதை நான் பார்த்ததே இல்லை.)கொஞ்சமாய் போராட்டம். நிறைய பாட்டு.
பாலச்சந்தரின் துணிச்சல்,புதுமை எண்ணத்தின் எழுச்சிக்கு கோட்டி சலாமுங்கோ.(கோட்டி தண்டாலு )
இதனுடைய (மணிப்பயல்') பாதிப்பிலேயே 'தங்கதுரை' அதே 'மாஸ்டர்' சேகர் நடிக்க வெளிவந்தது. ஆனால் அது வண்ணப்படம் என்று நினைக்கிறேன்.
இதிலும் 'வாடா கண்ணே வெள்ளாடு... வாயிருந்தா சொல்லிவிடு (சூப்பர் பாட்டு)
அண்ணா புகழ் பாடும் பாடல் சௌகார் ஜானகி ( சுசீலாவின் குரலில்) பாடுவது போல வரும்
'காலமகள் பாதையிலே போடா கண்ணே போ'
இதில் 'அண்ணா' வைப் புகழ்ந்து இரண்டு வரிகள் வரும்.
அறிவுக் கண்ணைத் திறந்து வைத்தான் அழகு மொழியிலே
அவன் அறிஞனாகி உயர்ந்து நின்றான் இமயம் வரையிலே
ம்ம். எப்படியெல்லாம் கட்சியையும், தலைவர்களையும் வளர்த்தார்கள்?!
டியர் வாசு சார்,
'மெகா' ஜெயந்தியின் நிழற்பட வரிசை தூள்.
படம் ஒவ்வொன்றிலும்....
தாமரைக்கன்னங்கள்
தேன்மலர்க்கின்னங்கள்..
இதனுடைய (மணிப்பயல்') பாதிப்பிலேயே 'தங்கதுரை' அதே 'மாஸ்டர்' சேகர் நடிக்க வெளிவந்தது. ஆனால் அது வண்ணப்படம் என்று நினைக்கிறேன்.
இதிலும் 'வாடா கண்ணே வெள்ளாடு... வாயிருந்தா சொல்லிவிடு (சூப்பர் பாட்டு)
அண்ணா புகழ் பாடும் பாடல் சௌகார் ஜானகி (சுசீலாவின் குரலில்) பாடுவது போல வரும்.
'காலமகள் பாதையிலே போடா கண்ணே போ'
இதில் 'அண்ணா' வைப் புகழ்ந்து இரண்டு வரிகள் வரும்.
அறிவுக் கண்ணைத் திறந்து வைத்தான் அழகு மொழியிலே
அவன் அறிஞனாகி உயர்ந்து நின்றான் இமயம் வரையிலே
ம்ம். எப்படியெல்லாம் கட்சியையும், தலைவர்களையும் வளர்த்தார்கள்?!