http://i65.tinypic.com/2ywis9j.jpg
Printable View
From GG Island with Love!
Directors' Delight (DD) GG's Cameo Attendance in song sequences!!
Quote:
புகழின் உச்சியில் வீற்றிருக்கும் ஒரு கதாநாயகன் சில சமயங்களில் திரைக்கதையோட்டத்தில் பாடல் காட்சிகளிலோ உரையாடல் காட்சிகளிலோ வெறுமனே வந்துபோக வேண்டிய இக்கட்டான சூழலில் இமேஜ் கருதி சுணக்கம் காட்டும் நிகழ்வுகள், இயக்குனருடன் 'மனக்கசப்புகள்', ரசிகர்களின் 'கொந்தளிப்புக்கள்' சகஜமே! ஆனால் Second to None ஜெமினியோ எந்தக் காலத்திலும் ஈகோ சுணக்கங்களைத் தவிர்த்து இயக்குனர்களின் தேர்வலராகவே Directors' Delight DD GGயாகவே வலம்வந்து அந்த ஒரு உள்ளேன் ஐயா ரகக் காட்சியிலும் தனது முத்திரையைப் பதித்து ரசிக நெஞ்சங்களை ஈர்க்கத் தவறியதில்லை !
Attendance16 Avvai Shanmugi! rukku rukku rukku.
உள்ளேன் ஐயா ஜெமினிகணேசன் !
வருத்தப் படாத வயோதிகர் Vs வஞ்சிக்கோட்டை வாலிபன் !
வஞ்சிக்கோட்டை வயோதிகரின் காதல் லுக்கு ஷண்முகியை கவரும் கந்தர்வ சிரிப்பு டெக்னிக் ......காதல் மன்னரை அசைக்க முடியுமா?
நடிகர்திலகமே அசந்துபோய் காதல் மன்னன் ஒரே ஒருவர்தான் அது ஜெமினிதான் என்று அங்கீகரித்தாராமே !!
As usual scene stealer GG!
வருத்தப் படாத வயோதிகர் !
https://www.youtube.com/watch?v=DTRA_Ng6WEU
இதே வெற்றுடம்புடன் வஞ்சிக்கோட்டை வாலிபனாக ,,,,,! The one and only Emperor of Love!
வஞ்சிக்கோட்டை வாலிபன் !The crowned King of Love!
https://www.youtube.com/watch?v=zkHlWFI8sac
மதுரையில் உள்ள அல்மோஸ்ட் 90 சதவிகிதம் தியேட்டர்களில் படம் பார்த்திருக்கிறேன்..இருந்தாலும் ஒரு தியேட்டர் போகாமலேயே இருந்தேன்..
வில்லாபுரத்தில் மது தியேட்டர் தான் எல்லை..அதைத்தாண்டி சென்றதில்லை..அதை த் தாண்டியும் ஒரு தியேட்டர் கட்டியிருந்தார்கள்..பத்மா என நினைவு..இப்போதும் இருக்கிறதா தெரியவில்லை..
விகடனில் விமர்சனம் படித்து மார்க் பார்த்து போய்வந்துகொண்டிருந்த கால கட்டம் அது..ஆஹா ஓகோ..புதிய இளைஞர்களின் கூட்டணி என்று புகழ்ந்திருந்தாலும் அதில் விஜயகாந்த் க்ம்பீரமாக நடித்திருக்கிறார் என வந்த நினைவு..வி.கா. படங்கள் என்று இழுத்துக்கூட்டிப் போன து கிடையாது..அதுவும் இந்தப் படம் ரிலீஸ் ஆனது பத்மா மட்டும் வேறு லோகல் தியேட்டர் நினைவில்லை..
நைட் ஷோ வீட்டிலிருந்து மொபெட்டில் கிளம்பி ஜம் என்று போய் படம் முடிந்து வருகையில் கொஞ்சம் மனதிற்குள் உதறல் தான்.பட் பயம் எல்லாம் ஒன்றும் இல்லை..ஜிவ்வென்று வீட்டிற்கு வந்து விட்டேன்...
ஓ என்னபடம்.. அவ்ளோ தூரம்னு சொன்னேனில்லையா.. முதல் பாடல் ஆரம்பிக்கும் போது தான் போய்ச் ச்சேர்ந்தேன்.. ராத்திரி நேரத்துப்பூஜையில்.. யெஸ் படம் ஊமை விழிகள்.. த்ரில்லர் என்பது என்றைக்குமே பிடிக்கும் என்பதால் சுவாரஸ்யமாகத் தான் இருந்தது..திடுக் திடுக்கெனப் போய்க் கொண்டிருக்க திடீரென படத்தில் அதுவரை வராத ஒரு ஜோடி வந்து டபக்கென இளமை இன்னிசையுடன் இசைவாய்க் காதலித்த படி பாட.அந்தப் பாடலும் பிடித்து விட்டது..
மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா
கண்ணே புது நாடகம் விரைவில் அரங்கேறிடும்
கூந்தலில் பூச்சூடினேன் கூடலையே நாடினேன்
கூடிவிட மனது துடிக்குது...ஆ ஆ
கூடவந்த நாணம் தடுக்குது
கடலோடு பிறந்தாலும் இந்த அலைகள் ஏங்குது
உடலோடு பிறந்தாலும் இந்த மனமும் ஏங்குது
சித்திரப்பூவிழி பாரம்மா சிற்றிடை மெலிந்ததேனம்மா
பத்துவிரல் அணைக்கத்தானம்மா...ஓ ஓ
முத்து ரதம் எனக்குத்தானம்மா
உனக்காக உயிர் வாழ இந்த பிறவி எடுத்தது
உயிரோடு உயிரான இந்த உறவு நிலைத்தது
லிரிக்ஸ் ஆபாவாணன் என நினைக்கிறேன்..காட்சி கார்த்திக் சசிகலா..(கொஞ்சம் வித்யாசமான pair. இந்தப் படத்திற்குப் பிறகு
இணைந்து நடித்திருக்கிறார்களா தெரியாது..
https://youtu.be/jIdqIXOkFXs
எவ்வளவோ பூ இருக்க எப்படி மாமரத்துப் பூ பிடிச்சாருன்னு தெரியவில்லை..இன்னொருமாம்பூ பாட்டும் நினைவுக்கு வருது..
மாம்பூவே சிறு மைனாவே - மச்சானைப் பார்த்தீங்களான்னு படமாம்..பார்த்த நினைவில்லை..இப்பத் தான் பாட் பார்க்கறேன்..முன்னாடி சிலோன்ல கேட்ட நினைவு..சிவகுமார் கிருதா கொஞ்சம் தமாஷா இருக்கு..
https://youtu.be/td4dNSb0xwM
*
எஸ் வி சார் வாங்க வாங்க.. அமர்க்களமான விளம்பரங்கள் நன்றி.. கொஞ்சம் அடிக்கடி வாங்க :)
வாங்க சிவாஜி செந்தில்.. தீவு மன்னரே.. நீங்களும் இந்தத்தீவின் குடிமகன் என்பதை மறக்காமல் அடிக்கடி வருக வந்து ஆங்கிலப் படங்களைத்தருக!
MKTB ''SIVAKAVI''
http://i63.tinypic.com/2qd4ep1.jpg
சிவகவி வெளியான தியேட்டர்கள் ஜோர்.. எஸ் வி சார்..பட் இப்ப 10 பெர்சண்ட் தியேட்டராவது இருக்குமா..
சோகம் தான் எஸ்வி சார்..
ம்ம் நான் அங்கிட்டுப் போய் - பல நாளா கேட்க மட்டும் செஞ்ச பாட் பார்த்துக்கிட்டிருந்தேனாக்கும்.. உங்களுக்குத் தர்றதுக்காக..கேட்கறச்சே கொஞ்சம் சோகப் பாட்டோன்னு நினைக்கத்தோன்றியது.. யெஸ் சோகப் பாட்டுன்னே நினைச்சுருந்தேன்..இப்போ விஷூவல் பார்த்தா அது ரொமாண்டிக் பாட்..யாராக்கும்..ம.தி..லத்தூ .. சிம்ப்பிளான விஷூவல்..அதுவே நன்னாயிட்டு இருக்கு..
https://youtu.be/WR9LejeNzaY
http://i63.tinypic.com/30bkxnk.jpg
நடிகை லதா - நினைத்ததை முடிப்பவன் '' படபிடிப்பில் ....
http://i64.tinypic.com/acryh.jpg
தாய்லாந்து நடிகை மேத்தா ''உலகம் சுற்றும் வாலிபன் ''
Courtesy: Tamil Hindu
சூழல் ஒன்று பார்வை இரண்டு: கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம்
வாழ்க்கையின் கவலை மிகுந்த தருணங்களில் நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ளும் மனநிலையை முடிந்தவரை நாம் மேற்கொள்ள வேண்டும். இந்த மனப்பாங்கைக் குழந்தைகளுடன் இணைந்து ஆடிப் பாடும் பாடல் வரிகளில் காட்டுவது திரைக் கவிஞர்களது மரபு. அம்மரபில் அமைந்த தமிழ், இந்திப் பாடல்களைப் பார்ப்போம்.
இந்திப் பாடல்.
படம்: மிலி (நாயகியின் பெயர்)
பாடல்: யோகேஷ்
பாடியவர்: லதா மங்கேஷ்கர்
இசை: எஸ்.டி பர்மன்.
பாடல்:
மைனே கஹா பூலோன் ஸே
ஹஸோ தோ வோ கில்கிலாகே ஹஸ்தியே
அவுர் யே கஹா ஜீவன் ஹை பாயீ
மேரே பாயீ ஹஸ்னே கேலியே
பொருள்:
பூக்களிடம் நான் சொன்னேன்
புன்னகை செய்வதனால் அவை
பூத்துக் குலுங்கிப் புன்னகைக்கட்டும்.
அப்பொழுது இவர்கள் (குழந்தைகள்) சொன்னார்கள்
வாழ்க்கை என்பதே புன்னகைக்கவே என் சகோதரர்களே
சூரியன் சிரித்தால் (ஒளி) கிரணங்களாகச் சிதறும்
சிரித்தான் சூரியன் சிதறிய செந்நிறக் கிரணங்களால்
அழகாய் ஆகியது இப்பூமி.
அப்பொழுது சொன்னேன் கனவுகளிடம், செம்மையாக்கினால்
சிரித்துக்கொண்டு அதைச் செய் என
இவர்கள், வாழ்க்கையே அலங்கரிப்பதுதானே என்றார்கள்
மாலைப் பொழுது சிரித்தது ஒரு மணப்பெண் போல
நீல வானிற்குப் பொன்னிறம் போர்த்தியது போல
நிறைத்தது அச்சூழலை.
நிறங்களுடன் செல்வதாயின் இந்த உலகம் முழுதும்
நிறையட்டும் எழில் நிறங்களுடன் எனச் சொன்னேன்.
இவர்கள் வாழ்க்கை என்பதே எழில் வழங்கத்தானே என்றனர்
பருவ காலம் என்னைப் பார்த்தது ஒரு நாள்
நில் நில் விளையாடு நீ என்னோடு என்றேன்
நின்றது பருவ காலம் ஆனால் நிசப்தமாக
செல்வதாயின் என்னோடு செல்ல வேண்டும்
என்னைப் போல எனச் சொன்னேன்
இவர்கள் வாழ்க்கை என்பதே செல்லுவதுதானே சகோதரா
ஓ சகோதரா என்றார்கள்.
இந்தி மொழிக்கே உரிய சிறப்பாக விளங்கும் சிறு சிறு சொற்பதங்களால் அமைந்த இந்தப் பாடலுக்கு இணையாகச் சிறிய, எளிய அன்றாடத் தமிழ் வார்த்தைகளால் மனித மன இயல் தத்துவத்தை வெளிப்படுத்தும் கண்ணதாசனின் கவி வரிகளைப் பார்ப்போம்.
புகழ் பெற்ற ஆங்கிலப் படமான ‘sound of Music’ என்ற படத்தின் டைட்டில் மெட்டில் அமைந்ததாகக் கூறப்பட்ட இப்பாடல், அதன் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனின் சிகரத்தில் ஒரு முத்தாகத் திகழ்கிறது.
படம்: சாந்தி நிலயம்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: பி.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
கடவுள் ஒரு நாள் உலகைக் காணத் தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரையெல்லாம் நலமா என்றாராம்
ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்துவிட்டான்
கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது
காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்தது
எல்லை இல்லா நீரும் நிலமும் நான் தந்தது
எங்கும் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது
இறைவனுக்கே இது புரியவில்லை
மனிதனின் கொள்கை தெரியவில்லை
(ஒரு மனிதன்...)
பள்ளிக்கூடம் செல்லும் வழியில் இறைவன் நின்றானாம்
பச்சை குழந்தை மழலை மொழியில் தன்னைக் கண்டானாம்
உள்ளம் எங்கும் செல்லம் பொங்கும் அன்பைக் கண்டானாம்
உண்மை கண்டேன் போதும் என்று வானம் சென்றானாம்
(ஒரு மனிதன்...)
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
எஸ்.வி சார்.. நன்றி.. லத்து புகைப்படத்திற்கு :)
காலையில் நெய்வேலி வாசு நினைவு.. ஒரு வெகு அழகான பாடல் இ.ஸ்பெஷலில் போட்டிருந்தார் முன்பு.. லஷ்மி ஏ.வி.எம் ராஜன்..
லிரிக்ஸ்ம் எனக்குப் பிடிச்சுருந்தது..
அத்தைமகள் முத்துநகை ரத்தினத்தை
மெத்தையிட்டு மற்ற கதை சொல்லித் தரவோ
விட்டகுறை தொட்டகுறை
மிச்சமில்லை என்றபடி
அத்தனையும் அள்ளித் தரவோ
காலாலே நிலம் அளந்து
கண்ணாலே முகம் அளந்து
நூல் போலே இடை அசைத்து
நூறுமுறை ஜாடை செய்வேன்
https://youtu.be/E85hQ10aDGU
காலங்காலையில் இன்னொருபாட் பார்த்தேன்.. நான் பேச வந்தேன் சொல்லத் தான் ஓர் வார்த்தை இல்லை..
https://youtu.be/9ZNJncW2220?list=PL...5QsJ3M37XN7STO
ஆடறது பாரதியா என்ன..ம்ம் மறந்தே போச்சு..
https://youtu.be/tIVMAJA7Bpo?list=PL...5QsJ3M37XN7STO
Super melody from Kannil Therindha Kadhaigal
https://youtu.be/V7ZmRuw_0r0
Viji song from Parvaiyin Marupakkam.
https://youtu.be/4dAEbpp-3bE
“மோகமுள்”
இதற்கு முந்திய பதிவொன்றில், தி.ஜானகிராமனின் 'மோகமுள்' நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் பற்றிக்குறிப்பிட்டபோது, அதைப்பற்றிய குறிப்பொன்றை தனிப்பதிவாக இட்டால் என்ன என்று தோன்றியது. தி.ஜானகிராமனின் அவ்வளவு பெரிய நாவலைப்படித்து, அதன் உணர்வுகளை உள்வாங்கியவர்களுக்கு, படத்தைப் பாக்கும்போது ஏமாற்றம் தோன்றுமே தவிர, புதிதாக படத்தை மட்டும் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் படம் பிடித்துப்போகக்கூடும். நாவலில் சொல்லப்பட்டிருக்கும் பல உணர்ச்சிப் பூர்வமான இடங்களை காட்சியமைப்பில் கொண்டுவருவது என்பது சிரமமான காரியம் மட்டுமல்ல, பல சமயங்களில் இயலாத காரியமும் கூட. அதெப்படி மனதில் நினைப்பதையெல்லாம் காட்சியில் கொண்டுவர முடியும்?.
அதுவும் 686 பக்கங்களைக்கொண்ட ஒரு நாவலை வெறும் இரண்டரை மணி நேரத் திரைப்படமாக்குவது என்பது பகீரதப்பிரயத்தனம். அதனாலேயே பல விஷயங்களை அவசரப்பட்டு முடிக்க வேண்டிய நிலையும், இன்னும் சிலவற்றை தொங்கலில் விடவேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை வருடக்கணக்கில் அல்லது குறைந்தபட்சம் மாதக்கணக்கில் இழுக்கக்கூடிய தொலைக்காட்சித்தொடராக எடுக்கப்பட்டிருந்தால் சற்று முழுமையாக சொல்லப்பட்டிருக்க முடியுமோ என்னவோ. ஆனால் இவற்றையும் மீறி படத்தை ரசிக்க முடிகிறதென்றால், அதில் ஒட்டியிருக்கும் யதார்த்தம் எனும் மிகைப்படுத்தப்படாத நிலை, செயற்கைத்தனமில்லாத காட்சியமைப்புக்கள்.
இவ்வளவு பெரிய கதையை படமாக சுருக்க வேண்டியிருந்ததாலோ என்னவோ கதாபாத்திரங்களும், நிகழ்வுகளும் துண்டு துண்டாக நின்றன. யமுனாவைப்பார்க்க வரன்கள் வருகிறார்கள், போகிறார்கள்.. ஆனால் அவளுக்கு மட்டும் திருமணம் ஆகவேயில்லை. அதற்கான காரணங்கள் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை – படத்தில். இறுதியில் தஞ்சாவூரில் இருந்து ஒரு மைனர் வருகிறார், திருமணம் செய்துகொள்ளாமல் ‘வாழ்க்கை’ நடத்துகிறேன் என்று. பாபுவின் மனம் யமுனாவினால் ஈர்க்கப்படுவது தெரிகிறது.
படத்தின் முக்கிய பாத்திரமாக வரும் பாபுவின் கேரக்டரில் சற்று குழப்பம் அதிகம். அதைப்புரிந்துகொள்கிற நேரத்திலேயே ஒருபகுதி போய்விடுகிறது. கிழவரைத் திருமணம் செய்துகொண்டு எந்த சுகமும் காணாத தங்கம்மாவின் வலைவீச்சில் விழுந்து பலியாகிவிடும் பாபு, பின்னர் அவளுக்கு அட்வைஸ் பண்ணுவது பாபு கேரக்டரை கீழே சரித்து விடுகிறது. அத்தகைய நிகழ்வு நேராமல் சுதாரித்து கழன்றுகொண்டு, பின் அட்வைஸ் செய்தானென்றால் இன்னும் அந்த கேரக்டர் எடுபட்டிருக்கும். பாவம் இயக்குனர் என்ன செய்வார். கிடைத்த நேரத்துக்குள் எல்லாவற்றையும் சொல்லி முடிக்க வேண்டும்.
பாபு கேரக்டரில் நடித்திருப்பவர், இன்று சின்னத்திரை அபிஷேக். அப்போது சின்னப்பையன்.
கதையில் ரொம்ப சிலாகித்துச்சொல்லப்படுகிற நண்பன் ராஜம் கேரக்டர் ரொம்ப சின்னதாகக் குறைக்கப்பட்டுள்ளது. தங்கம்மாவின் சாவு சட்டென்று ஒரு வசனத்தில் சொல்லி முடிக்கப்படுகிறது. அவளுக்காக பாபு ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்துவதாகக்கூடக் காண்பிக்கப்படவில்லை. தங்கம்மா அலங்கார பூஷிதையாக அலங்கரித்துக் கொண்டு வந்து நிற்க, கிழட்டுக்கணவன் உறக்கத்தில் ஆழ்ந்துவிடும் காட்சியிலெல்லாம் நம் மனது ரொம்பவே வலிக்கிறது. இன்னொருபக்கம் யமுனாவுக்கு முப்பத்து நாலு வயது வரை திருமணம் ஆகாத நிலை
இவற்றைப்பார்க்கும்போது ‘மேட்டுக்குடிகளில்’ ரொம்பவே கொடுமைகள் நடந்திருப்பது தெரிகிறது.
அதனால் கதையில் அழுத்தமாகச்சொல்லப்பட்டிருக்கும் பாபுவின் தந்தை வைத்தி ரோல் எல்லாம், போகிறபோக்கில் வந்து போகிறது. ஆனால் பாபுவின் சங்கீதகுருவான ரெங்கண்ணா, கதாநாயகியான யமுனா மற்றும் அவள் அம்மா என்ற நான்கு கேரக்டர்கள் மட்டும் சற்று விலாவரியாக சொல்லப்படுகிறது, இடையில் வந்து மாண்டுபோகும் தங்கம்மாவை தவிர்த்து விட்டுப்பார்த்தால். தங்கம்மாவின் மரணத்தைப்பார்த்தபின், அவள் பாபுவை தன் ஆசைக்குப்ப்லி கொண்டது தவறு என்று தோன்றாது. மாறாக ஒரு அனுதாபமும் அக்கால சம்பிரதாயங்களின் மீது எரிச்சலும் ஏற்படும்.
படத்துக்கு செலவு என்றால், நடித்தவர்களுக்கு சம்பளமும், பிலிம்ரோல் வாங்கிய காசும் மட்டும்தான் ஆகியிருக்குமோ என்று சொல்லுமளவுக்கு, அப்படியே கேமரா கும்பகோணத்து தெருக்களில் புரண்டு எழுகிறது. அந்த அளவுக்கு யதார்த்தம், இயற்கைத்தன்மை எல்லாம் கொடிகட்டிப்பறக்கிறது. ‘ஸ்டுடியோ செட்’ என்பதெல்லாம் எப்படியிருக்கும் என்று கேட்டிருக்கிறார்கள் படத்தில். கும்பகோணம் வீடுகள் கோயில்கள், குளங்கள் என்று எல்லாம் அப்படியே கண்முன்னே.
படத்தை பெரும்பங்கு ஆக்கிரமித்துக்கொண்டு, ஒரு பெரிய இசை சாம்ராஜ்யமே நடத்தியிருப்பவர் 'இசைஞானி' இளைய்ராஜா. நம் உயிரோடு ஒன்றிப்போகும் இசை. அவருக்கு பக்க பலமாக நின்றிருப்பவர்கள் ஜேசுதாஸ், எஸ்.ஜானகி மற்றும் அருண்மொழி. கலக்கியெடுத்து விட்டார்கள் என்ற கடின வார்த்தைப் பிரயோகத்தை விட, மனதை மென்மையாக வருடி, மயக்கியிருக்கிறார்கள் என்பது பொருத்தமாக இருக்கும்.
அன்றைய நாட்களில் பிராமணப்பெண்களுக்கு திருமணம் நடப்பது என்பதை ஒரு எவரெஸ்ட்டில் ஏறுவது போன்ற கடினமாக்கிக் காட்டியிருப்பது ஏன்?. கடைசியில் கூட யமுனா, திருமணம் செய்துகொள்ளாமல்தான் பாபுவிடம் தன்னை இழக்கிறாள். அவனுள்ளிருக்கும் இசைக்கு உயிர்ப்பூட்டுவதற்காம். புரியவில்லை என்பதைவிட ஒப்பவில்லை என்பது கொஞ்சம் அதிகம் பொருந்தும். அதுமட்டுமல்ல, பாபுவிடம் தன்னை இழந்ததுமே, உடனே தம்பூராவை அவன் கையில் கொடுத்து இசைக்கச்சொல்கிறாள். படம் வெளிவந்த நேரத்தில் இது எப்படி ஆட்சேபிக்கப்படாமல் போனது?. இசையென்பது சுத்தமானது அல்லவோ?. அதை இசைப்பவர்களும் சுத்தமாக இருக்க வேண்டாமோ?.
படத்தை இயக்கியிருப்பவர் ஞான ராஜசேகரன். ரொம்பவே கவனமாக கத்திமேல் நடப்பதுபோல கதையைக் கையாண்டிருக்கிறார். கையாண்ட விதத்தில் வெற்றியடைந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். நேர்த்தியான இயக்கம்.
'மோகமுள்' படத்தைப் பார்க்க விரும்புபவர்கள், தி.ஜானகிராமன் எழுதிய நாவலைப்படிக்கும் முன் பார்த்து விடுங்கள். நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்.
கதையோடு இணைந்த, ஹாஸ்யத்தை மையப்படுத்திய தாலாட்டுப்பாடல் என்று தமிழ்சினிமாவில் தேடினால்அப்படிப்பட்ட
பாடல்களை தேடுவது சற்று சிரமமாகத்தானிருக்கிறது.
பெரும்பாலும் மகிழ்ச்சியாகவோ சோகத்தை கலந்தோதான் தாலாட்டுப்பாடல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
ஹாஸ்யம் கலந்த தாலாட்டுப்பாடல் என்றதும் இந்த பாடலை தவிர வேறேதுவும் நினைவுக்கு வருவதில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு டி.வி.யில் பார்த்த பாதிப்பால் இந்தப்பாடலை ஆய்வு செய்து எழுதலாம் என்றும் முடிவு செய்து மேற்கண்ட பாராவை எழுதி முடித்தபின் பாடல்வரிகளுக்காக, நெட்டில் தேடியபோது...
ஏற்கெனவே ஏராளமான பேர் இதை அனுபவித்து எழுதியதைப் பார்த்தபின் மேற்கண்ட பாராவோடு நிறுத்திவிட்டேன்.நமது வாசு சார்,சின்னக்கண்ணன்,கார்த்திக்அவர்களும் எழுதியுள்ளதைப் படித்து ரசித்தேன்.மீள்பதிவுகளாக இருந்தாலும் மறுபடியும் ரசிக்க...
வாசு சாரின் பார்வையில்:
கடன்காரன் வந்தால் நடுங்காத நெஞ்சம்
அடங்காத பிள்ளை அழுதாலே அஞ்சும்'
முடிந்ததும் முழங்கைகளை மடக்கி, இரு உள்ளங்கைகளையும் ஒன்றின் மேல் ஒன்று வைத்தாற்போன்று தலைக்கு பின் பக்கம் கோர்த்து, இடுப்பை ஒடித்தபடி தலையை வெட்டி, வெட்டி நடந்து வரும் அந்த 7 ஸ்டெப்ஸ்.
அது என்ன ஒயிலா
அது என்ன அழகா
அது என்ன அற்புதமா
அது என்ன நளினமா
அது என்ன வெறுப்பா
அது என்ன துன்பமா
அது என்ன ஸ்டைலா
அது என்ன நடையா
முடிந்தால் சொல்லுங்கள்.
சின்னக்கண்ணன் அவர்களின் எழுத்துகளில்:
கலாட்டா கல்யாணத்தில் ந.தி வெகு இளமையாய் இயல்பான நகைச்சுவை பாடிலேங்க்வேஜ் ரொமான்ஸ் எனப் பின்னியிருப்பார்..அதுவும் அப்பப்பா நான் அப்பனல்லடா விற்கு முகபாவங்கள்,
கார்த்திக் சாரின் பாணியில்:
பணக்காரன் வீட்டு பச்சைக்குழந்தையை கடத்தியாச்சு. ஆனால் அதை வைத்துக்கொண்டு எப்படி சமாளிப்பது?. அதுவும் இரண்டு ஆண்களால்?. படாத பாடு படுகிறார்கள் இருவரும். அந்த குழந்தையை சமாதானப்படுத்தும் சாக்கில் தங்கள் அவஸ்தையை சொல்லத்தான் இந்தப்பாட்டு. பாட்டு கதாநாயகனுக்கு மட்டும்தான். இந்த பாடல் முழுக்க கொஞ்சம் கூட சிரிக்காமல் முகத்தை சீரியசாக வைத்துக் கொள்வதுதான் நடிகர்திலகத்தின் அசாதாரண திறமை. உடன் இருக்கும் நாகேஷ் கூட இதில் சறுக்கி விடுவார்.
பாடகர் திலகத்தின் குரலில்...
லு...லு..லு...ஆரி ஆரி ஆரி ஆரிரரோ
அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஆரி ராரி ராரோ
கல்யாணம் இன்னும் ஆகாத வேளை
கைமீது பிள்ளை தீராத தொல்லை
தாலாட்ட சொன்னால் பாட்டொன்று சொல்வேன்
பாலூட்ட சொன்னால் நான் எங்கு போவேன்
அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஆரி ராரி ராரோ
கணக்காக பிள்ளை பெறுகின்ற திட்டம்
உனக்காகத்தானோ ஏற்பட்ட சட்டம்
கடன்காரன் வந்தால் கலங்காத நெஞ்சும்
அடங்காத பிள்ளை அழுதாலே அஞ்சும்
அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஆரி ராரி ராரோ
திராவிட மன்மதன் மெலிந்து அழகோவியமாக திகழ்ந்த காலகட்டத்தில் வந்த படம்தான் இது. இப்பாடலில் ஜஸ்ட் ஒரு வெள்ளை பேன்ட், வெள்ளை அரைக்கை சட்டை, சுருள் சுருளான சொந்த தலைமுடியில் சிம்பிளாக ஆனால் வெகு அழகாக இருப்பார். கையில் கைக்குழந்தை.
***************************************
அவஸ்தையை காட்டும் முகபாவங்கள்,
முழங்கால்களை விரித்து இணைத்து என்றாடும் ஆட்டம்,
புல்லாங்குழல் வாசித்துக்கொண்டே ஆடும் போது போடும் ஸ்டெப்ஸ்,
நாகேஷை உதைத்துக்கொண்டே ஆடுவதும் அதே சமயம் முகபாவனைகளில் படும் அவஸ்தையை இயல்பாக வெளிப்படுத்துவது,
நாகேஷ் தூங்குவதைப் பார்த்து காட்டும் ரியாக்சன்,
என்று எல்லாமே
எல்லோருக்குமே பிடிக்குமே.
வாவ்.. வாங்க சாரதா வாங்க.. அடியேனும் உங்கள் எழுத்துக்களின் பல தீவிர ரசிகர்களில் ஒரு தம்மாத்தூண்டு ரசிகன்.. இன்னும் இன்னும் எழுதுங்கள்..
செந்தில்வேல்,.. ம்ம் அப்பப்பா நான் அப்பனல்லடா.. மறக்க இயலாத பாடல்.. நினைவுட்டலுக்கு நன்றி..
From thigambara saamiyaar (1950)
kaakka veNdum kadavuLe........
http://www.youtube.com/watch?v=hiL3V6hUWV8
From GG Island with Love!
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் March 22 நினைவலைகள் !
Moon Raker Gemini Ganesan!
Part 1 : Missiamma....miss not kind of song and romance!Quote:
நிலவு....நிதர்சனமான வானவியல் அற்புதம்....சுதர்சனமான வாழ்வியல் தத்துவமும் கூட.....
பூமியின் துணைக்கோளாக பூமியிலிருந்து சூரியனின் ஒளியின் பிரதிபலிப்பைப் பெற்று ஒளிரும் நிலவால் காதல் நெஞ்சங்கள் குளிரும்!
நிலவு என்றதும் தமிழ் மக்களுக்கு நினைவு வருவது நமது பாட்டியம்மா நிலவு வட்டத்துக்குள் கால் நீட்டி அமர்ந்து வடை சுட்டுக்கொண்டு இருக்கிறார் என்பதே !
அதற்கப்புறம் நிலவொளியில் அந்தப் பாட்டியைக் காட்டி பால் சோறூட்டிய அம்மா......நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா....பள்ளிப் பாடல்.......நிலவில் ஆர்ம்ஸ்ட்ராங் கால் பதித்த மனித குல சாதனை....நிலவைச் சுற்றி மினுமினுக்கும் விண் தாரகைகள்......இரவில் மொட்டை மாடியில் மல்லாந்து வானை நோக்கி டார்ச் அடித்து விண் மீன்களை எண்ணிய சுவாரஸ்யமான வெட்டி வேலைகள்......நிலவு கூட வளர்ந்து தேய்ந்து மீண்டும் வளர்ந்து.... வளர்பிறை, தேய்பிறை , மூன்றாம் பிறை..... பௌர்ணமி... அமாவாசை ஜாலங்கள்......
இதெல்லாம் ஜெமினிகணேசன் என்னும் காதல் மன்னர் திரைக்காதல் சிம்மாசனத்தைக் கைப்பற்றி காதல் சாம்ராஜ்யத்தை உருவாக்கி இந்த நொடிவரை எவராலும் நெருங்கமுடியாத காதல் சக்கரவர்த்தியாக அரியாசனம் அமரும் வரையே .....அப்புறம்.....நிலவு என்பது காதலர்களின் கைப்பந்தாக மாறிவிட்ட அதிசய நிகழ்வு....நிலவோடு நம்மால் பேச முடியும்....நமக்கான காதல் தூதுவராக நிலவை பயன்படுத்தலாம் காதல் தோல்வியை பகிர்ந்து கொள்ளலாம் என்பது போன்ற வாழ்வியல் கண்டுபிடிப்புக்கள் உயிரோட்டம் பெற்று
இன்று காதல் வாழ்வின் வழிகாட்டும் ஒளிவிளக்காக காதல் ஜோதி ஏற்றி வைத்த பெருமை ஜெமினியையே சாரும்!! நிலவையே அசத்தி தனது கைப்பிடிக்குள் கொண்டுவந்த Moonraker ஜெமினியின் நெருங்கி வரும் நினைவுநாள் நினைவலைகள் மன வலைக்குள் ஆரம்பம்!
Moon as the Ambassador of Love Kingdom owned by the one and the only Emperor of Love Gemini Ganesan!
Quote:
தானொரு பண்பான காதலன் என்பதை தன்னைப் பற்றி தவறாகவே எண்ணிக் கொண்டு வறுத்தெடுக்கும் மிஸ்ஸியம்மா சாவித்திரிக்கு புரிய வைக்க நிலவோடு ஒப்பந்தம் செய்து கொண்டு நிலவொளிக்குள் காதலியைக் கொண்டுவந்து கிறங்க வைக்கும் காதலின் மாமன்னர் ஜெமினி!
அவர் நிலவோடு பேசக்கூடியவர் என்பது தெரிய வந்ததும் பிரமித்துப் போன அசட்டு சாவித்திரி தனது மனப்பூட்டை திறக்கும் சாவியை காதல் மன்னரிடம் ஒப்படைத்து ஜெமினி தனது அசடு வழியும் முக எண்ணையில் காதல் திரியை பற்ற வைக்கும் ஜாலம் ஹாலிவுட் வரை தெரியாமல் போனது அவர்களுக்குத்தானே இழப்பு !!
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையை ...பாடலும் பாடல் சூழலும் நிலவை காதல் தூதுவராக்கிட மையப்படுத்திய காட்சியமைப்பும்...காலத்தால் மறையாத காதலுணர்வுகளின் கண்ணியமான வெளிப்பாடுகளும்....Gemini The Greatest!
https://www.youtube.com/watch?v=f_rOnubYwTM
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் நினைவலைகள் !
Part 1/1.2
Addendum to Vaaraayo Vennilaave song : lyrics, color improvisation and karaoke!
https://www.youtube.com/watch?v=xABo0pPflR4
colour tried version!But cue did not glue properly!!
https://www.youtube.com/watch?v=K6fGw2kf6xY
A Karoake too!!
https://www.youtube.com/watch?v=mxRs8Uasa3Q
From GG Island with Love!
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் நினைவலைகள் !
Part 1/1.3
Addendum to Missiammaa!
வேலைதேடி வந்த இடத்தில் வீடு கிடைக்க வேண்டிய சங்கடமான சூழலில் ஒரே வீட்டில் ஜெமினிசாவித்திரி தம்பதிகளாக தங்கவேண்டிய நிலையில் ஏற்படும் குழப்பங்களும் சாவித்திரியின் பிளாஷ் பேக் மர்மங்களை விடுவிக்க தங்கவேலுவின் சரவெடி காமெடிகளும் ரங்கராவ் தம்பதியினரின் ஆதுரமான அன்பும் இரண்டுங் கெட்டான் ஜமுனாவின் காதல் அம்புகளும் சாவித்திரியின் கடுப்பிலி ருந்து தப்பிக்க காதல் மன்னரின் பிராண்ட் உத்திகளும் நம்பியாரின்கோணங்கித்தனமும் சாரங்கபாணியின் டைமிங் பஞ்சுகளும் தெளிந்த நீரோடையான ராஜேசுவரராவின் இசையில் நீந்தும் செவிக்கினிய பாடல்களும் கண்ணுக்கும் மனதுக்கும் இதமான இனிமை ததும்பும் பாடல் காட்சியமைப்பும் ஜெமினியின் ஆளுமை மிக்க நடிப்பும் நிறைந்த அற்புதக் காவியம் !Quote:
மிஸ்ஸியம்மா (1955) தமிழில் வெளிவந்த தலைசிறந்த என்றும் ரசித்து மகிழத் தக்க நகைச்சுவைத் திரைப்படங்களில் நம்பர் ஒன் காதலிக்க நேரமில்லை திரைக் காவியத்தை அடுத்து என்றும் இரண்டாமிடத்தில் வீற்றிருக்கிறது!
வண்ணக் கலவை இல்லையே என்ற காலம் தொழில்நுட்பம் சார்ந்த சிறு குறையைத்
தவிர்த்து நோக்கினால் ஸ்ரீதரின் வாழ்நாள் சாதனைத் திரைப்படமான இசையாலும் தொழில்நுட்பத்தாலும் பாடல்களாலும் நகைச்சுவைத் தெளிப்பினாலும்
நடிகர்களின் பங்கேற்பினாலும் முதலிடம் வகிக்கும் காதலிக்க நேரமில்லையை விட எந்த விதத்திலும் குறைவில்லாத இழுவையற்ற கச்சிதமான காட்சி
அமைப்புக்களால் விறுவிறுப்பாகச் செல்லும் மனமகிழ் காவியமே !
https://www.youtube.com/watch?v=MOKCZgis44w
பெண்களின் பாஷையில் வார்த்தைகளின் உள்ளர்த்தங்களே வேறுதான் என்பதைப் புரிந்து காதல் கனி கவரும் ஜெமினிக் கள்வர்!
முடியுமென்றால் படியாது படியுமென்றால் முடியாது வஞ்சியரின் வார்த்தையிலே அர்த்தமே வேறுதான் ...ஜெ(மினியி)ன் காதல்துறை வெற்றி ரகசியம் 1
Gemini Ganesan ILS (Indian Love Service)!
https://www.youtube.com/watch?v=gQL0B8l3WG0
From GG Island with Love!
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் நினைவலைகள் !
Part 1/1.4
Addendum to Missiammaa!
Jamuna sprinkling Nuts onto the Comedy Chachobar!!
In this hilarious comedy the then upcoming beauty queen Jamuna too made ripples by way of her innocence and a sort of infatuation over GG deriving the rivalry of Savithri....finally the knot of Savithri-Jamuna relationship unfolds! Joy and mirth floats in Jamuna scenes!
நிலை மாறிடும் ஆண்களுடன் நெருங்காமலே பழகிட தெரிந்து கொள்ளனும் பெண்ணே !
GG's responsive facial expressions are simply superb and lovely!!
https://www.youtube.com/watch?v=HK3wowwYT6s
ஹாய் ஆல்.. செளக்கியமா.. வந்ததுக்கு ஒரு சிலோன் ரேடியோவில் கேட்ட் பாட் கேட்கலாமா..
https://youtu.be/RxNJ-Qsj26U
வித்தூ வின்செண்ட்டாம் படம் உன்னைச் சுற்றும் உலகமாம்..கேள்விப் பட்டதில்லையே.. வின்சென் ட் ஒளிப்பதுவு செய்பவர் தானே..
தேன் மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும்மோகமென்ற தேன் கண்டேன்..ஓ..அதில் துளி மட்டும் துளிமட்டும் நான் குடித்தேன்.. நைஸாக் காதலைச் சொல்கிறாங்க தானே..ஆனால் பாடல் சிலோன் ரேடியோவில் கேட்ட போது ஏதோ சிங்களப்பாட்டுன்னு நினைச்சேன்..பாத்தாக்க மதனோற்சவத்தோட டப்பாமில்ல..ஹீரோயின் ஜரீனா வஹாப் பாமே உண்மையா..(எக்ஸ்பெக்டிங்க் பக்கெட்ஸ் :) )
https://youtu.be/z4K2ffSgRn8
சரி சரி கொஞ்சம் விளையாடலாம்..
செண்டுமல்லிப் பூப்போல் அழகிய பந்து.. கமல் சுஜாதா..படம் இதயமலராமில்ல.. ஹையா..சி.செ வந்து ஜெமினி டைரக்ட் பண்ண டீடெய்ல்ஸ் தருவாரே :)
https://youtu.be/PEl-Ydya2nw?list=PL...YDjuJSpFxQcNPl
200வது பக்கத்திற்கு 200வது படத்தில் இருந்து ஒரு பாடல். "Thirumaalin Thirumaarbil" | Thirisoolam | Sivaji…: http://youtu.be/caaEI93uIuM
kaNNa: Here is the original version of தேன் மலர் கன்னிகள்...
https://www.youtube.com/watch?v=a4NuR0c_5XA
thanks ragadevan..details vaenumE...:)
You asked for it, and you got it! :) Don't complain about the length of my posting!
Madanolsavam was a 1978 Malayalam masala movie which was a box-office super hit starring Kamal Hasan
and Zarina Wahab in lead roles. Salil Chowdhury’s music was one of the keys to the movie’s success.
The movie was dubbed into Tamil as Paruva Mazhai, Telugu as Amara Prema, and Hindi as Dil Ka Saathi Dil. All songs
were super hits in Malayalam, and were dubbed into the other versions too. Salilda also reused the tunes in Bengali
and other language movies. All Malayalam versions are available on YouTube, but only a few of the other versions
are available on video.
I will post the Malayalam videos and the Tamil audio versions of the songs here:
“maada praavE vaa…” (KJY)
https://www.youtube.com/watch?v=36-2G5arjg0
maadapuraavE vaa… (Tamil audio)
http://www.salilda.com/songs/film/ta...adappurave.mp3
“sandhyE kaNNeerethenthE sandhyE…” (S. Janaki)
https://www.youtube.com/watch?v=MwCI7lpUJ-k
angE sengathir saaynthaal ange… (Tamil audio)
http://www.salilda.com/songs/film/ta...azhai/ange.mp3
“ee malar kanyakaL…” (S. Janaki)
https://www.youtube.com/watch?v=EjGwLTpjZvE
thEnmalar kannigaL… (Tamil audio)
http://www.salilda.com/songs/film/ta.../thenmaler.mp3
“saagaramE saanthamaaka nee…” (KJY)
https://www.youtube.com/watch?v=PXTU9f3NH1o
kaalamagaL mEdai naadagam… (Tamil audio)
http://www.salilda.com/songs/film/ta.../kalamagal.mp3
“mElE poomala…” (KJY & Sabita Chowdury)
https://www.youtube.com/watch?v=dcldzUjwV-k
kaadal sangamE… (Tamil audio - KJY & S. Janaki)
http://www.salilda.com/songs/film/ta...al_sangame.mp3
“nee maayum nilaavO…” (KJY)
https://www.youtube.com/watch?v=x3tCwloFoS4
nee thEyum nilaavO en aathmaavin kaNNeerO… (Tamil audio)
http://www.salilda.com/songs/film/ta...ee_theeyum.mp3
குட்மார்னிங்க் ஆல்..
ராகதேவன்..வாவ்.. தாங்க்ஸ் ஃபார் ஆல் த பாட்டூஸ்..வீட் போய்க் கேக்கறேன்..படம் எப்படி இருக்கும் பார்த்திருக்கிறீர்களா..
ராகதேவன்..அனைத்துப்பாடல்களையும் பார்த்தேன் கேட்டேன்..வெகு அழகு..தாங்க்ஸ்..பருவமழை தமிழ்ப்படம் கிடைக்கவில்லை..