-
[பல முறை, காயப்படுத்திய, பத்திரிக்கையாளருக்காக ...
கண்கலங்கிய எம் ஜி ஆர்.!!.
அவர் முற்போக்கு கட்சியின் பத்திரிகையாளர். எம்ஜிஆரின் பல திட்டங்களை கிழித்து தொங்க விட்டுக்கொண்டிருந்தவர். அமைச்சர்களின் பல ஊழல்களை எழுதியவர். எப்போதும் எதிர் விமர்சனம்தான்.
செய்தியாளர் சந்திப்பின் போதும்கூட நேருக்கு நேராக, முதல்வர் என்றும் பாராமல் விமர்சனங்களை முன்வைப்பார்.
அப்படியானவருக்கு குடிப்பழக்கம் எப்படியோ தொற்றிக்கொண்டது. பணி நேரம் போக அதில் மூழ்கிவிடுவார்.
ஒரு நாள் ராமாவரம் தோட்டத்திலிலுந்து புறப்பட்ட எம்ஜிஆரின் கார், அடையாறு பாலம் தாண்டினதும் உள்ள சத்யா ஸ்டுடியோ அருகே வந்து கொண்டிருந்தபோது, சட்டென்று வாகனத்தை நிறத்தச் சொல்கிறார். உடனிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
ரோட்டோரமா ஒரு ஆள் சாய்ந்து கிடக்கிறார். நம் ------மாதிரி தெரிகிறது. போய் அவரா என்று பாருங்கள் என்கிறார். இறங்கி ஓடிச்சென்ற பாதுகாப்பு அதிகாரி, திரும்ப வந்து, ‘அது அவர்தான் ஐயா’ என்கிறார்.
அப்படியா, தூக்கி வண்டியில் போடுங்கள் என்கிறார்.
அதன்படி அவரைத் தூக்கி பின்னால் வந்த பாதுகாப்பு வாகனத்தில் கிடத்திக் கொள்கிறார்கள். அவர் மிதமீறிய குடியால் அவர் மயங்கி விழுந்து கிடந்துள்ளார்.
நிலையை புரிந்துகொண்ட எம்ஜிஆர், வாகனத்தை கல்யாணி மருத்துவமனைக்கு ஓட்டச் சொன்னார். சென்றதும் அவரை அட்மிட் செய்து சீனியர் மருத்துவர்களை அழைத்து, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. இவருக்கு கொடுக்க வேண்டிய மருத்துவத்தைக் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டு, கோட்டைக்கு கிளம்பிச் சென்றார்.
அடுத்த சில மணி நேரத்தில், எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி அவர்கள் மருத்துவமனைக்கு வந்து, வேண்டிய பணத்தைக் கட்டினார். சில நாட்களில் அவருக்கான அறுவைச் சிகிச்சையும் நடந்தேறியது. தினமும் மருத்துவமனைக்கு சென்றுவந்த எம்.ஜி.சக்ரபாணி, கடைசி நாளில் அவரை பொறுப்போடு வண்டியில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பியும் வைத்தார்.
ஓரிரு மாதங்கள் ஓடியது. அந்த பத்திரிகையாளரின் உடல்நிலை நன்றாக தேறி, மீண்டும் அந்த நாளேட்டில் எழுதத் தொடங்கினார். மக்களின் நலனுக்காக வேண்டி, எம்ஜிஆரின் சில செயல்களை, திட்டங்களை எல்லாம் முன்பைவிட கடுமையாகவே விமர்சித்து எழுதி வந்தார்.
கோட்டையில் எப்போதாவது நேரெதிர் பார்த்துக் கொண்டால், அவரை சிரித்தபடி நலன் விசாரிப்பார். எம்ஜிஆரும் பத்திரிகையாளருக்கு சிரித்தபடி பதிலளிப்பார். அவ்வளவுதான். மற்றபடி எந்த சமரசமும் இருக்காது.
தொடக்கத்தில் முழுக்கைச் சட்டையை நன்றாக சுருட்டி மேலேற்றி விட்டுக்கொண்டிருந்த பழக்கத்தில் இருந்த பத்திரிகையாளர், (அப்போது அது ஒரு பேஷன்) மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு முழுக்கை சட்டையோடவே இருப்பார். மடித்து சுருட்டிக் கொள்வதுமில்லை.
காலம் ஓடியது. ஒரு நாள் அந்த பத்திரிகையாளர் இறந்து போகிறார். இறுதி சடங்கிற்காக அவரது சட்டையை கழட்டும்போதுதான் அவரது இடக்கையை பார்க்கிறார்கள்.
‘இது எம்ஜிஆர் கொடுத்த உயிர்’ என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. பார்த்தவர்களுக்கு வார்த்தைகள் எழவில்லை.
எம்.ஜி.ஆருடன் இருந்த ‘தென்னகம்’ மு.கோ. வசந்தன் அண்ணன் இதை சொன்னபோது உடைந்து அழுதுவிட்டார் எம்ஜிஆர்.
மனிதர்கள் எப்படியெல்லாம் இருந்துள்ளார்கள்?
ஒத்த ரூபாய்க்கு உதவி செய்துவிட்டு, பத்து ரூபாய் கொடுத்து விளம்பரம் தேடிக் கொண்டிருந்த தலைவர்கள் மத்தியில்தான், தான் செய்த உதவிகளை சொல்லாமல் வாழ்ந்தார் எம்ஜிஆர்..........bpng
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தனது படங்கள் பிரமாண்டமாகவும், சிறந்த பொழுதுபோக்கு படமாகவும் இருக்க வேண்டும், தன்னை நம்பிய ரசிகர்களுக்கு நிறைவான படமாக இருக்கவேண்டும் என்று விரும்புவார். இதற்காக அவர் பிறமொழி படங்கள், ஹாலிவுட் படங்களை பார்த்து அதன் சாயலில் தனது படம் இருக்குமாறு பார்த்துக் கொள்வார். அப்படி அவருக்கு பிடித்த ஒரு ஹாலிவுட் படம். ஹிட்சாக் இயக்கிய நார்த் பை நார்த்வெஸ்ட். இது ஒரு ஆள்மாறாட்ட கதை. அதாவது ஒருவன் ஒரு கொலை செய்துவிட்டு அதன் மூலம் கிடைத்த பணம், சொத்துக்களை கொண்டு இன்னொருவன் பெயரில் வாழ்வான். அவனது நிஜ முகத்தை ஹீரோ எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது அந்த படத்தின் ஒன்லைன்.
அதேபோன்ற நம் நாட்டுக்கு ஏற்றமாதிரி ஒரு கதை பண்ணுமாறு பி.ஆர்.பந்துலுவிடம் கேட்டிருந்தார் எம்.ஜி.ஆர், அப்படி உருவான படம்தான் தேடிவந்த மாப்பிள்ளை. இந்த கதை தயாரானாதும் எம்.ஜி.ஆர் வேறொரு படத்தில் பிசியாக இருந்தார். இதனால் அவரது ஒப்புதலுடன் அந்த கதையை ராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில் பீடி பசவன்னா என்ற பெயரில் எடுத்தார். அங்கு அது பெரிய வெற்றி பெற்றது. பின்னர்தான் தேடி வந்த மாப்பிள்ளையாக தமிழில் தயாரானது.
இதில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா, ஜோதிலட்சுமி, விஜயஸ்ரீ, அசோகன், மேஜர் சுந்தர்ராஜன், சோ உள்பட பலர் நடித்திருந்தார்கள். இயக்குனர் பி.ஆர்.பந்துலு இதில் எம்.ஜி.ஆரின் அப்பாவாக நடித்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், வெற்றி மீது வெற்றி வந்த என்னை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும், இடமோ சுகமானது , தொட்டு காட்டவா, மாணிக்கத்தேரில் மரகத கவசம் மின்னுவதென்ன உள்பட தேனினும் இனிய பாடல்கள் இடம்பெற்ற படம். திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் 100 நாள் ஓடி வசூலை குவித்த படம்.......Devi Ravichandran
-
1961 ன் பிளாக்பஸ்டர் "திருடாதே"யும்
"தாய் சொல்லை தட்டாதே"யும் தான்.
அதைப்போல் 1962 ம் ஆண்டின் பிளாக்பஸ்டர் தேவரின் "தாயை காத்த தனயன்"தான். "தாய் சொல்லை தட்டாதே" படத்தைக் காட்டிலும் ஒருபடி
அதிகம் வெற்றியை பெற்ற படம்தான் "தாயை காத்த தனயன்".
அய்யனுக்கு 1962 ல் 9 படங்கள் வந்தாலும் அதில் தேறியது "பார்த்தால் பசி தீரும்" மற்றும் "படித்தால் மட்டும் போதுமா"? மட்டும்தான். இரண்டையும் ஒரிரு தியேட்டர்களில் 100 நாட்கள் ஓட்டி மகிழ்ந்தனர்.
"தாயை காத்த தனயன்" 1962 ல் மீண்டும் 8 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி பிரமிக்கத் தக்க வெற்றியை பெற்றது. 1959 லிருந்து 1962 வரை பீம்சிங் ஒருவரே மூழ்கும் படகை கரை சேர்த்தவர். 63, 64 ல் அய்யனுக்கு சொல்லி கொள்ளும்படி பெரிய வெற்றி ஒன்றும் இல்லை.
அதன்பின் ap நாகராஜனை பிடித்துக் கொண்டார்கள். அதன்பின் ஸ்ரீதர்,பாலாஜி என்று ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவர் வந்து அய்யனை கை கொடுத்து தூக்கி விட்டார்கள். யார் கைகொடுத்தாலும் தலைவரின் வெற்றியை நெருங்க முடியவில்லை என்ற மனக்குறைதான் அய்யனின் படங்களை ஓட்ட ஆரம்பித்த காரணம்.
அய்யனின் படத்தின் தரமறிந்துதான் தியேட்டருக்கு மக்கள் சென்றனர். ஆனால் எம்ஜிஆர் என்ற பெயரை கேட்டவுடனே தியேட்டருக்கு சென்று விடுவார்கள். இதற்கு சான்றாக ஒரு நிகழ்ச்சியை நான் சொல்லுகிறேன்.
சென்ற வாரம் தூத்துக்குடி சத்யாவில் "நாளை நமதே" என்ற விளம்பரம் பார்த்தவுடன் தியேட்டருக்கு சென்றேன். தியேட்டரை சுற்றிலும் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டிருந்தது. நடைபாதையை மட்டும் சற்று மண்மேடாக்கி அங்கு படத்தை திரையிட்டார்கள். ஒரு மாத வெள்ளநீர் பச்சை கலரில் இருந்தது.
உள்ளே சென்று பார்க்கலாம் என்று நினைத்து தியேட்டர் அருகில் சென்ற போது 'ஒரு பக்கம் பாக்குறா' என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது.
என்னப்பா "நாளை நமதே" என்று போஸ்டர் ஒட்டி விட்டு "மாட்டுக்கார வேலன்" ஓடுகிறதே என்று கேட்டேன்.
அதற்கு சைக்கிள் ஸ்டாண்டு பாதுகாவலர் "நாளை நமதே" பெட்டி வரவில்லை, அதனால் "மாட்டுக்கார வேலனை" திரையிட்டார்கள் என்றார். இதென்ன "நாளை நமதே" புதுப்படமா? பெட்டி வரவில்லை என்று சொல்கிறார்களே என்று நினைத்தேன். சுற்றிலும் எந்த விளம்பர போஸ்டர் ஏன் தியேட்டரில் கூட போஸ்டர் ஒட்டாமல் "மாட்டுக்கார வேலனை" ஒட்டுகிறார்கள்.
படத்திற்கு கூட்டம் எப்படி என்று கேட்டேன்.
டூ வீலர் மட்டும் மொத்தம் 100 ஐ தாண்டி வந்திருக்கிறது. மொத்தம் 150.பேர் பார்க்கிறார்கள் என்றவுடன் ஆச்சர்யமடைந்தேன். என்ன படம் என்ற கேள்வியில்லாமல் எம்ஜிஆர் படம் பார்க்க நிறைந்திருந்த கூட்டம் அது. தலைவரின் முகம் பார்த்து மலரும் தாமரை கூட்டம் அது. அதனால்தான் அந்த திரையரங்கில் தொடர்ந்து 2 ஆண்டுகள் எம்ஜிஆர் படம் மட்டுமே திரையிட்டு சாதனை செய்தார்கள்.
"தாயை காத்த தனயன்" சென்னையில் 112 நாட்களும் மற்ற ஊர்களில் 137 நாட்கள் வரை ஓடியது. மதுரை கல்பனாவில் 137 நாட்கள் ஓடி ரூ 239712.67 வசூலாக பெற்றது. பாடல்கள் kv மகாதேவன் இசையில் பிரமாதமாக அமைந்தது.
'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' பாடலுக்குமுன் சிறந்த காதல் பாடலாக 'காவேரி கரையிருக்கு' பாடலை சொல்லலாம்.
எம்ஜிஆருக்கு தேவர் படம் மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான படங்கள் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது எனலாம். எம்ஜிஆரால் பட அதிபர்கள் பலனடைந்தார்கள். ஆனால் மாற்று நடிகருக்கோ படஅதிபர்களால்தான் அவர் பலனடைந்தார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. தூத்துக்குடியிலும் 50 நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது..........ksr.........
-
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் மறு வெளியீடு தொடர்ச்சி.........
முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை
*முன்னிட்டு* *(19/02/21 முதல் )* * * * * * * * *
-----------------------------------------------------------------------------------------------------------------------------* * *
** * * *மதுரை சென்ட்ரல் - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்*
கோவை சண்முகா - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி* 4 காட்சிகள்*
தகவல் உதவி : திரு.எஸ். குமார், மதுரை ,
* * * * * * * * * * * * * * * திரு.சொக்கலிங்கம், திவ்யா பிலிம்ஸ் .
திருச்சி - பேலஸ் - நம் நாடு**- தினசரி 4 காட்சிகள்*
கரூர் -லட்சுமி ராம் - நம் நாடு - தினசரி 4 காட்சிகள்*
தகவல் உதவி : திரு. கிருஷ்ணன், திருச்சி .
கொழிஞ்சாம்பாறை (கேரளா )- ரவிராஜாவில் - எங்க வீட்டு பிள்ளை*
தினசரி 4 காட்சிகள்*
தகவல் உதவி : திரு.* வி.ராஜா ., நெல்லை .*
மேலும் சில அரங்குகளில் தலைவரின் படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது .
அவை நாளை தெரியவரும் .
* * * * * * **
-
#எம்ஜிஆர் கரங்களில்
ரத்தக் கீறல்கள் !
___________________________
"எம்ஜிஆர் என்ற மகா மனிதனைச் சந்தித்தேன்" எனும் தலைப்பில் வார இதழ் ஒன்றில், "சந்தித்தேன்- சிந்தித்தேன்" தொடரில் கவிஞர் கண்ணதாசன் எழுதினார். அந்த படைப்பு சமூக வெளியில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறது.
1980-ஆம் மே மாதத்தில் ஆற்காடு முதலி தெருவில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார்.
1977-ல் ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர், 3 ஆண்டுகளுக்குள்ளேயே மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அதன் பின்னர்1980 மே மாதவாக்கில் தமிழக சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலை சந்திப்பதில் எம்ஜிஆர் படு சுறுசுறுப்பாக இருந்த காலகட்டம் அது.
"ஆட்சி பறி போய்விட்டது. தேர்தலைச் சந்திக்கிறோம். ஆட்சியை மீட்போமா?" என்ற கவலை இல்லாமல் எம்ஜிஆர் மிகுந்த நம்பிக்கையோடு இருந்ததாக கண்ணதாசன் குறிப்பிட்டிருந்தார்.
அந்த காலகட்டத்தில் 'தினமலர்' செய்தியாளனாக நான் களமாடிக் கொண்டிருந்தேன்.தேர்தல் பிரச்சாரப் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் பொதுத் தேர்தல்.
லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆரை செய்தியாளர்களாகிய நாங்கள் சந்தித்துப் பேசினோம். அப்போது அவரிடம் நாங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிய போது அவர் தந்த பதில் இதோ:
"காரணத்தைச் சொல்லாமலேயே கலைத்து விட்டார்கள். எங்கள் ஆட்சியைக் குலைத்து விட்டார்கள். மக்கள் அளித்த ஆட்சியை மத்திய அரசு பறித்துக் கொண்டது. மீண்டும் பொதுத் தேர்தல். மக்களிடமே சென்று நான், "என்ன தவறு செய்தேன்? ஏன் டிஸ்மிஸ் செய்தார்கள்?" என்று வினா வைத்து இருக்கிறேன். இனி விடையளிக்க வேண்டியவர்கள் அவர்கள் தான்.
"என் கடமையை நான் நிறைவாக செய்து முடித்து இருக்கிறேன். தேர்தல் பிரச்சாரப் பணிகளைப் பொருத்தவரை முழுமையாக நடத்தி முடித்து விட்டேன். இனி மக்கள் என்ன தீர்ப்பு தந்தாலும் அதை ஏற்க நான் தயாராகிவிட்டேன்.
நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் திரண்டு வந்தார்கள். முண்டியடித்துக் கொண்டு நெருங்கினர்.என்னுடன் கை குலுக்கவும், பேசவும், முகத்துக்கு நேரே நின்று நோக்கவும் முனைந்தனர்.
ஒரே நேரத்தில் பலரும் என் கைகளைத் தொட முயன்றனர். கைகுலுக்கக் கரம் நீட்டினர். நானும் இருகரங்களையும் அவர்களுக்கு வழங்கினேன். அவர்கள் ஆர்வமிகுதியால் என் கைகளை வேகமாக தொட்டு இழுக்கும் பொழுது அவர்களின் கைவிரல் நகங்களால் கீறப்பட்டு என் கைகளில் எல்லாம் ரத்தக் கீறல்கள். கைகளைப் பாருங்கள்... " -இவ்வாறு பேசியபடியே அவர் தன் கரங்களை விரித்துக் காட்டினார். அவற்றில் சின்னக் குழந்தை சிலேட்டில் கிறுக்கியது போல ரத்தக் கீற்றுகள் தென்பட்டன.
எம்ஜிஆர் நா தழுதழுத்த குரலில் கூறினார், "என் ரத்தத்தையே மக்களுக்குத் தத்தம் அளித்து விட்டேன். இனி அவர்கள் என்ன தீர்ப்பு அளித்தாலும் ஏற்பேன்" என்று சுருக்கமாக, ஆனால் உருக்கமாகக் குறிப்பிட்டார்.
"நிச்சயம் வென்று விடுவோம்" என்ற நம்பிக்கை அவரின் பேச்சில் இல்லை. நாங்களோ, "வெற்றி உங்களுக்குத்தான்" என்று உற்சாகமூட்டி விட்டு வந்தோம்.
தேர்தல் முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டன*.
அவர் கோட்டைக்கு மீண்டு வந்தார் வெற்றியோடு மீண்டும் வந்தார்.
எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய பின் திருச்சியில் பிரம்மாண்ட பேரணி நடத்தினார். அப்போது ரசிகர்களின் கூட்டம், பொது மக்களின் திரள் என ஜன சமுத்திரத்தினுள் திறந்த ஜீப்பில் பயணம் மேற்கொண்டார்.
போலீஸ் பாதுகாப்பு போதிய அளவுக்கில்லை.
எம்ஜிஆரின் கைகுலுக்க அக்கூட்டம் கட்டுப்பாடின்றிப் பாய்ந்தது. ஏக காலத்தில் பல பேர் எம்ஜிஆரின் கரங்களைப் பற்றினர். அவர்களிடம் ஆர்வமிகு ஆவேசம் ஆட்கொண்ட நிலையில் எம்ஜிஆரின் கரங்கள் கீறப்பட்டன. இந்நிலையோ பல முறை.
அப்போது சென்னையில் தினமலர் பதிப்பு இல்லை. திருச்சி பதிப்பில்
ஞான பாண்டியன் எனும் சப் எடிட்டர், பணியில் இருந்தார். அவர் அப்போதே, "தொண்டர்களின் அன்புத் தொல்லை.
எம்ஜிஆர் கைகளில் ரத்தக்கறை"
என்று தலைப்பிட்டு அந்துமணியின் பாராட்டைப் பெற்றார்.
80 வயதையும் தாண்டி அவர் பெங்களூரில் வசிக்கிறார்.
கடந்த ஆண்டு அவரின் இல்லம் சென்று அவருடன் உரையாடி மகிழ்வித்தேன்.
அப்போது எடுத்த படம் இப்போது இங்கே...
நூருல்லா ஆர். ஊடகன் 05-09-2020
திருத்தப்பட்டது.
Ithayakkani S Vijayan...
-
ஒவ்வொரு ஏழை தாய்மார்களின் உள்ளத்தில் மகனாகவே வாழ்ந்தார் நம் #மக்கள்திலகம் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு..
திருவண்ணாமலை பக்கத்தில் உள்ள ஊர் சர்ச்சில் பாடல்கள் ஒலிபரப்புவார்கள். நாம் 25 பைசா கொடுத்தால் ஒரு ஜெபம் செய்துவிட்டு பாடல் ஒன்றை போடுவார்கள்.
ஒருநாள் மாலை நேரம், ஒரு 70 வயதான பாட்டி, ஈரமான புடவையுடன் வந்து 25 பைசா கொடுத்து,
"எனது மகனை உடல் நலம் இல்லாமல் ஆபத்தான நிலையில் அமெரிக்காவில் சேர்த்து இருக்கின்றனர். அவருக்குதான் நீ ஜெபம் செய்து பாட்டு போடவேண்டும்" என்றார்.
அங்கிருந்தவர்களுக்கு ஒரே வியப்பு..!
"பாட்டி, நீயோ ஏழை. எப்படி உன் மகனை அமெரிக்க ஆஸ்பத்திரியில் சேர்த்தாய்" என கேட்டதற்கு...
அந்தற்கு அவர்.. "என் மகன் என்று கூறியது எம்ஜியாரைத்தான்" என்றார்.
"எப்படி பாட்டி அவர் உன் மகன்" என்று கேட்டபோது...
"என் மகன் என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டான். இந்த மவராசன் தான் எனக்கு மாசம் 30 ரூபாய் பென்ஷன் தருகிறார்.
அதில் நான் 50 பைசாவிற்கு தினமும் 5 இட்லி வாங்கி சாப்பிடுவேன். மதியம் பால்வாடியில் சாப்பாடு. எம்ஜியார் குடுத்த 10 கிலோ அரிசியில் சோறு.
வருடத்திற்கு இரண்டு புடவை. இவ்வளவும் செய்த எம்ஜியாரு என் மகன் இல்லாமல் வேற யாரு..!?"
- என்று அந்த மூதாட்டி கூறினார்.
எப்படி ஏழைகளின் உள்ளத்தில் அந்த மனிதர் எல்வாரு குடியிருந்தார் என்பதை இப்போது நினைத்தாலும் வியப்பாகவே உள்ளது..! Baabaa
-
1984-ஆம் ஆண்டு, புரட்சித் தலைவரின் அன்பிற்குரிய ஜே.சி.டி.பிரபாகரனின்
உதவியாளர் கண்ணையாவின் திருமணம்.
அந்த எளிய தொண்டணின் திருமணத்திற்கு தலைமையே ஏழைகளின் ஏந்தல் நமது முதல்வர் புரட்சித்தலைவர்..
அந்தத் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசிய #மக்கள்திலகம்..
“எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதனால் எனக்கு வாழ்த்த வயதில்லை என்று பிரபாகரன் பேசினார்.
பிரபாகரனின் பெற்றோர் இந்தத் திருமணத்திற்கு வந்திருப்பார்கள் என்று கருதுகிறேன்.
அவர்களிடம் ஒரு வேண்டுகோள். பிரபாகரனுக்கு நீங்கள் பெண் பார்க்கப் போகிறீர்களா? அல்லது, இன்றே எனது மனைவி ஜானகியை அனுப்பிப் பெண் பார்க்க வைக்கவா?
எனக்கு மட்டும் ஒரு மகள் இருந்திருந்தால், அவளை நான் பிரபாகரனுக்குத் தான் கொடுப்பேன்!”
-என்று பேசி பிரபாகரனை மட்டுமல்ல, மணவிழாவுக்கு வந்திருந்த அனைவரையும் நெகிழ வைக்கிறார்.
மக்கள் திலகம் பேசி முடித்த மறு ஆண்டே பிரபாகரனுக்குத் திருமண ஏற்பாடு செய்கின்றனர் அவரது பெற்றோர்.
ஆனால் அந்த நேரத்தில் தான் மக்கள் திலகம் உடல் நலக் குறைவால், அமெரிக்காவுக்குச் சிகிச்சை பெறச் செல்ல நேரிடுகிறது.
திருமணம் முடிந்து 1985, ஆகஸ்டு 25-ஆம் தேதி சரியாகப் பேச முடியாத நிலையில் இருந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை -ஜே.சி.டி பிரபாகரன் தன் மனைவியுடன் சந்திக்கிறார்.
சிறிது நேரம் இருவரையும் இமை கொட்டாமல் கண் கலங்கப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் திலகம், பிரபாகரனைப் பார்த்து மழலைப் பேச்சில்
“திருமணப் பரிசாக உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்கிறார்.
பிரபாகரன் பொன் கேட்பார். பொருள் கேட்பார் என்று எதிர்பார்த்த மக்கள் திலகத்திடம்,
“நாடார்கள்-சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டார்கள்.
மீனவர்களும் சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டார்கள.
அதே போல் மதம் மாறிய வன்னிய (படையாச்சி) கிறிஸ்துவர்களையும், சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்!
இதுவே தாங்கள் எனக்குக் கொடுக்கும் திருமணப் பரிசு” என்று ஒரு பேப்பரில் எழுதித் தருகிறார் ஜே.சி.டி. பிரபாகரன்.
வாங்கிப் படித்த மக்கள் திலகம் மீண்டும் மழலை மொழியில்,
“அன்னிக்கு முதன்முதலாக, உனக்காக இல்லாம, மாணவர்கள் பசிக்காக உதவி கேட்டே..!
இன்னிக்குக் கூட திருமணப்பரிசாக உனக்காக இல்லாம, மக்களுக்காகத்தானே கேட்கறே!”
-என்று ஆனந்தக் கண்ணீருடன் ‘ஆவன செய்கிறேன்’ என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
ஆகஸ்டில் உறுதி அளித்த மக்கள்திலகம், சொல்லியபடி டிசம்பரில் பிரபாகரனின் கோரிக்கையை நிறைவேற்றி அமுலாக்குகிறார்.
இதுதான் மக்கள் திலகம். இதுதான் புரட்சித்தலைவரின் தொண்டர்கள்..
தலைவருடன் ஜெ.சி.டி.பிரபாகரன்...
தகவல் உதவி: பிரபாகரனின் அண்ணன் மகன் விஜய்.........
-
கவிஞர் கண்ணதானுக்கு உதவி ....
பிரபல சினிமா பாடல் ஆசிரியர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ...
ஒரு சமயத்தில் குடும்ப சூழ்நிலையில் மிகவும் சிரமப்பட்டார்.
யாரிடம் உதவிகேட்டால் கிடைக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது
அவருக்கு வேண்டிய ஒருவர்
நம்ம மாதிரி ஆள்களுக்கு
உதவி செய்ய கரங்கள் கொண்ட வள்ளல் ஒருவர் பரங்கிமலையில் இருக்கிறார்.
அவரிடம் உங்கள் குறைகளை சொல்லுங்கள் அவர் உதவி செய்வார்.
இதை கேட்ட கண்ணதாசன் அவர்கள்,
அய்யய்யோ வேண்டவே, வேண்டாம்
அவரை நான் மிகவும் ஏசி பேசியுள்ளேன்.
நான் அவரிடம் போகமாட்டேன் என்று அவர் சொல்ல,
இவர் சொல்கிறார்,
மக்கள் திலகம் அவர்கள் பெரிய வள்ளல் குணம் படைத்தவர்,
மறப்போம் மன்னிப்போம் என்ற குணம் உள்ளவர்
அவரை தவிர உங்களுக்கு வேறு ஆளும் இல்லை
எனவே எதையும் யோசிக்காமல்
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில்விழுவோம்
என்ற எண்ணத்தோடு போய் பாருங்கள் என்று அவர் சொல்லி முடித்துவிட்டார்.
இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த கவிஞர் கண்ணதாசன்
அவர்கள்
பலவிதமான யோசனைக்குப் பிறகு ஒரு நாள் மக்கள் திலகம் அவர்களை சந்தித்து தன்னுடைய நிலமைகளை சொன்னார்.
அதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் சரி,
உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார்.
இதை கேட்ட கவிஞருக்கு ஒன்றும் புரியாமல் சற்று நேரம் திகைத்து போய் மவுனமாக இருந்துவிட்டார்.
ஏன் யோசிக்கிறீங்க என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கேட்க
அவர் ரொம்பவும் தாழந்த குரலில்
எனக்கு தற்போது இவ்வளவு பணம் இருந்தால் என் சிரமங்களை ஓரளவுக்கு முடித்துகொள்வேன்
மன்னிக்க வேண்டும் என்று சொல்லி முடித்தார்.
இதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் எதையும் யோசிக்காமல்
சரி நீங்க போங்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அவரும் அரை குறை மனதோடு வீட்டிற்கு சென்று விட்டார்.
அடுத்த நாள் மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய மேனேஜர் குஞ்சப்பன் என்பவரை அழைத்து
இந்த பணத்தை கண்ணதாசன் அவர்களிடம் நேரில் கொடுத்து விட்டு வாருங்கள் என்று சொல்ல
அதன்படி அவரும் பணத்துடன் கண்ணதாசன் அவர்களை சந்தித்து
பையில் இருந்து ஒரு பணம் பொட்டலத்தை எடுத்து
இதை சின்னவர் உங்களிடத்தில் கொடுத்து வரசொன்னார்
என்று பணத்தை கொடுக்க அவர் திகைத்து போய் அந்த பணம் பொட்டலத்தை அதே இடத்தில் பிரித்து பார்க்கிறார்.
பார்த்த உடனே, எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று யோசித்த வண்ணத்தில்
பணத்தை பெற்று கொண்டு குஞ்சப்பன் அவர்களுக்கு நன்றியை சொல்லி அனுப்பி விட்டு
உடனடியாக மக்கள் திலகம் எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு அங்கு சென்று,
மக்கள் திலகம் அவர்களைப் பார்த்து இரு கரங்களையும் பிடித்து கண்ணில் வைத்து கொண்டு தேம்பி ஆழ ஆரம்பித்துவிட்டார்.
தான் கேட்ட தொகையைவிட 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக கொடுத்துள்ளதை சொல்லி கொண்டே ..
நான் இவ்வளவு தொகை தான் கேட்டேன்.
ஆனால் நீங்கள் மேற்கொண்டு அதிகமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து உள்ளீர்களே
நானும் என் குடும்பமும் என்றென்றும் கடமை பட்டவர்களாக இருப்போம்
நீங்கள் எப்போதும், எந்த குறையும் இல்லாமல் இது போன்ற விஷயத்தில் வள்ளலாக வாழ வேண்டும் என்று கடவுளை வணங்குகிறேன் என்று சொன்னார்....Mu
-
காசே கடவுள்!!
---------------------------
எம்.ஜி.ஆர் பற்றிய இந்த நிகழ்வை எவ்வளவு பேர்கள் அறிந்திருப்பீர்கள் என்பது நமக்குத் தெரியாது!
நம் கடன் பதிவு செய்து கிடப்பதே?
டைப்பிஸ்ட் கோபு!!
அந்த கால சினிமாக்களில் நகைச்சுவைக் காட்சிகளில் வலம் வந்தவர்!
அதே கண்கள்,,காசே தான் கடவுளடா போன்ற படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்!!
சிவாஜி,,ஜெய்சங்கர்,,முத்துராமன்--இப்படி அந்த கால நாயகர்களுடன் நூற்றுக்கும் மேலான படங்களில் நடித்த இவர்,,எனக்குத் தெரிந்து எம்.ஜி.ஆருடன் நடித்ததாகத் தெரியவில்லை!!
1978!!
வசந்த நாட்களாக தமிழக மக்களுக்கு புலர்ந்தது-
அசந்த நாட்களாக ஆகிறது டைப்பிஸ்ட் கோபுவுக்கு??
அவரது அன்பு மகனுக்கு ஹார்ட் ஆபரேஷன்?
இவர் ஒன்றும் பெரிய ஹீரோவாக ஜொலிக்கவில்லையே??
ஆபரேஷனுக்கு 15 ஆயிரம் பணம் கட்ட வேண்டும்?
வழக்கம் போல் தாம் சார்ந்த நடிகர்கள் அத்தனை பேர் வீட்டுக்கும் சென்று,,காலிங்-பெல்லை அழுத்தியும்-சாரி கோபு--
நீ ஒண்ணும் கவலைப்படாதே கோபு,, கடவுள் உன்னைக் கை விட மாட்டார்--
என்ன பண்ணறது கோபு? விதி வலியது??
இதில் சிவாஜி மட்டும்--
நீ எப்படியாவது பையன் ஆப்பரேஷனை முடிச்சுடு. நான் உனக்கு ரெண்டு படங்களுக்கு சிபாரிசு பண்ணறேன்??
ஆக தத்துவங்களும் ஆறுதல்களும் உபதேசங்களும் வந்ததே தவிர --
உதவி??--ம்ஹூம்!!
எவரிடத்திலும் கிடைக்காது இடிந்து போன கோபுவின் காதில் தேனை ஊற்றுகிறார் டாக்டர் ஹண்டே!
தோட்டத்துக்குப் போய் சின்னவரைப் பாரு!!
குத்தும் குற்ற உணர்ச்சியுடன் தோட்டத்துக்குப் போன கோபு,,காத்திருந்து--காத்திருந்து--
வள்ளல் முகம் காண்கிறார். விஷயத்தை சொல்கிறார்!
டைப்பிஸ்ட் கோபுவுக்கு எம்.ஜி.ஆர் தந்ததோ-
ஷார்ட் ஹாண்ட் தனமான பதில்??
நான் பாத்துக்கறேன்??
வேகமான,,அதே சமயம்-சுருக்கமான பதில்?
மறு நாளைக்கும் மறு நாள் ஆபரேஷன்?
அடுத்த நாளும் ஆவலோடு எதிர்பார்க்கும் கோபுவுக்கு ஏமாற்றமே பதில்?
மறு நாள் காலை ஆபரேஷன்?--
மருத்துவர்களால் மகனின் இதயத்துக்கு என்றால்-இன்றே ஆபரேஷன்?
கொந்தளிக்கும் கோபுவின் இதயத்துக்குக் காலம் செய்கிறது?
எல்லா நம்பிக்கையும் அற்று நைந்து போய் மருத்துவமனை சென்ற கோபுவுக்கு மாயாஜாலம் காத்திருக்கிறது?
ஆஸ்பத்திரி டீன்,,அதாவது தலைமை மருத்துவர் கோபுவை அழைக்கிறார்--
மகனுக்குப் பால் ஊற்ற வேண்டியது தானா என்று இடிந்து போன கோபுவின்--
இதயத்துக்குப் பால் வார்க்கிறார் மருத்துவர்?
ஆபரேஷனுக்கான மொத்த பணத்தையும் எம்.ஜி.ஆர் கட்டிட்டார்??
மறு நாள் அறுவை சிகிச்சை பதினோரு மணிக்கு!
ஒன்பது மணிக்கு டாக்டர் ஹண்டேயின் விஜயம்!
தேவையான அறிவுறுத்தல்களை டீனிடம் சொல்லி விட்டுத் திரும்பும் ஹண்டே,,
கோபுவின் கையில் ஒரு பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு சொல்கிறார்!
சின்னவர் உன்னிடம் கொடுக்கச் சொன்னார்!
உள்ளேப் பார்த்தால்--பதினைந்தாயிரம் பணம்?
பணம் கட்டிட்டாங்க சார் எம்.ஜி.ஆர் ஆஃபீஸிலிருந்து-சொன்ன கோபுவிற்கு பதில் சொல்கிறார் ஹண்டே--இது இதர மருத்துவ செலவுகளுக்கு???
சரி!!
எம்.ஜி.ஆர் உதவியதைக் கொஞ்சம் பார்ப்போமா?
முதல்வருக்கிருந்த பலதரப்பட்ட அலுவல்களில் பிஸியாக இருந்த எம்.ஜி.ஆர்,,வெளியே கிளம்ப ஆயத்தமாகி,,மனைவி ஜானகி அம்மையாரிடம் விடை பெறும்போது --
ஜானகி அம்மா டெக்கில் பார்த்துக் கொண்டிருந்த திரைப்படம்?
காசேதான் கடவுளடா??
உடனே எம்.ஜி.ஆருக்கு கோபு தான் நினைவுக்கு வருகிறார்--
மின் அதிர்ச்சியை மேனிக்குள் படர விட்ட வண்ணம் ஜானகியிடம் சொல்கிறார்--
ஜானு,,நாளைக்கு கோபுவோட மகனுக்கு ஆபரேஷன்!
தாம் கலந்து கொள்ள இருந்த அரசு விழாவையும் மறந்துவிட்டு அரை மணியில் அவர் செய்திருக்கிறார் அத்தனை ஏற்பாடுகளையும்!!
அழைப்பவர் குரலுக்கு வருவேன் என்றான்
கீதையிலே கண்ணன்!!
கீதையில் கண்ணன் சொன்னதைத் தன்
பாதை எங்கும் பரப்பியவன் ராமச்சந்திரன் என்பதில் என்ன ஐயம் இருக்க முடியும். இல்லையா அருமைகளே???...vtr
-
'நான் சினிமாவில் இயக்குநராவதற்கு முன் ஒரு தயாரிப்பாளர் அலுவலகத்தில் இருந்தேன்.
ஒருநாள் திபுதிபுவென பலர் அந்த தயாரிப்பு அலுவலகத்துக்கு வந்தனர்.
அப்போது, 'சின்னவர் வருகிறார்... சின்னவர் வருகிறார்... ' என்று பயங்கர பரபரப்பு.
அப்போது அலுவலக வளாகத்தில் படகுபோல ப்ளைமவுத் கார் வந்து நின்றது. காரிலிருந்து ஆயிரம் சூரியன் ஜொலிப்போடு குல்லா, கறுப்புக் கண்ணாடியுடன் மல்லிகைச் சிரிப்போடு எல்லோரையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி எம்ஜி.ஆர் வந்திறங்கினார்.
‘இவருக்கு யார் சந்திரன் என்று பேர் வைத்தது, சூரியன் என்றல்லவா பெயர் வைத்திருக்கவேண்டும்’ என்று நினைத்தபடி ஆச்சர்யம் அகலாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன். அருகில் வந்ததும என் கைகள் தன்னிச்சையாக அவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டது.
ரோஜா மலரின் வாசத்தோடு ராஜா மாதிரி எங்கள் அலுவலகத்துக்குள் வந்தார். பிற்காலத்தில் நான் அந்த ராஜகுமாரனின் பாசத்துக்கு ஆளாவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை.
அன்று அவரது அன்பில் வீழ்ந்த என்னையும் அவரையும் பின் 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதிவரையிலும் எந்தக் கொம்பனாலும் பிரிக்க இயலவில்லை.
தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் இருந்த ப்ரிவ்யூ தியேட்டரில் என் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தை எம்.ஜி.ஆருக்குத் திரையிட்டுக் காட்டினேன்.
அப்போது எம்.ஜி.ஆர் முதல்வர். எனது படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு என்ன விமர்சனம் சொல்லப்போகிறாரோ என்கிற பதைபதைப்போடு தியேட்டர் வாசலில் காத்திருந்தேன்.
படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தவர், நேராக என் அருகில் வந்து என் கைகளைப் பற்றிக்கொண்டார்.
"அஞ்சு பத்து 'அண்ணா'க்கள் செய்ய வேண்டிய பகுத்தறிவுப் பிரசாரத்தை ஒரே படத்தில் சாதித்துக் காட்டிட்ட. என் படத்துல நான் சொல்லத் தயங்குற பல விஷயங்களை தைரியமாப் படமாக்கியிருக்க. பாராட்டுக்கள்" என்று சொல்லியபடி என்னை கட்டியணைத்துக் கொண்டார்.
ஒருமுறை எம்.ஜி.ஆர் தலைமையில் சென்னை விஜயசேஷ மஹாலில் நடந்த கல்யாணத்துக்கு என்னையும் அழைத்து இருந்தனர்.
எம்.ஜி.ஆர் என்னைப் பார்த்துவிட்டு உதவியாளர் மூலம் மேடைக்கு அழைத்தார். திடீரெனப் பேசவும் சொல்லிவிட்டார்.
'எங்கள் கிராமத்தில் இருக்கும் சினிமா கொட்டகையில் 'நாடோடி மன்னன்' திரைப்படத்தைப் பலமுறை பார்த்துப் பிரமித்தவன் நான். ஒருமுறை எம்.ஜி.ஆர் எங்கள் கிராமத்துக்கு வந்தார். எப்படியாவது அவரது சில்க் ஜிப்பாவைத் தொட்டுவிடவேண்டும் என்பது எங்களுக்குள் போட்டி, கடைசியாக நான் தொட்டுவிட்டேன்' என்று நான் பேசியபோது பச்சைக்குழந்தை மாதிரி எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே இருந்தார்.
அதன்பிறகு அவருடைய கண்கள் கடைசியாகப் பார்த்த படம் 'வேதம் புதிது'. 'வேதம் புதிது' திரைப்படம் வெளிவந்துவிடக்கூடாது என்று சிலர் கச்சை கட்டிக்கொண்டு வேலை பார்த்தனர், என்னென்ன உள்ளடி வேலைகள் செய்யவேண்டுமோ, அனைத்தையும் செய்தனர்.
அப்போது ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமனிடம் போனில் பேசி, எனக்காக உரிமையுடன் சண்டை போட்டு அந்தப் படத்துக்கு சென்சார் சர்டிஃபிகேட் வாங்கிக் கொடுத்தவர், எம்.ஜி.ஆர்.
அடுத்து 'வேதம் புதிது' படத்தை அவருக்குத் திரையிட்டு காட்டியபோது தனது பக்கத்து இருக்கையில் என்னை அமரச்சொன்னார். ஒவ்வொரு காட்சியைப் பார்க்கும்போதும், என் கைகளை இறுகப்பற்றித் தன் உணர்வுகளை வெளிப்படுத்தினார்.
'வேதம் புதிது' ரிலீஸாகும்போது எம்.ஜி.ஆர் உயிரோடு இல்லை. அந்தப்படம் திரையிட்டபோது டைட்டிலில் ' புரட்சித் தலைவர் கண்கள் கடைசியாகப் பார்த்த திரைப்படம்' என்று எழுதியிருந்தேன்."
-பாரதிராஜா என்கிற அல்லிநகரம்
சின்னசாமி | சினிமா விகடன்
-
"#எம்ஜிஆர். படம் பார்த்த வண்ணாரப்பேட்டை நாட்கள்!”
''நான் பிறந்தது ராயபுரம் மன்னார்சாமி கோயில் தெருவில்தான்.
ஆனால், வண்ணாரப்பேட்டையில் வாழ்ந்த ஆரம்பப் பள்ளி நாட்கள்தான் என் வாழ்க்கையின் அழகான நாட்கள்.
சலவைத் தொழிலாளர்கள் அதிகம் வசிச்சதாலும், சலவைத் துறை இருந்ததாலும் இது வண்ணாரப்பேட்டை ஆச்சுங்கற கதை ஊருக்கேத் தெரியும். இன்னைக்கு இது கட்பீஸ் ஜங்ஷனா மாறிடுச்சு!.
வண்ணாரப்பேட்டையின் புழுதி பறக்கும் தெருக்களுக்கும் எனக்கும் அப்படி ஓர் அந்நியோன்யம் உண்டு.
ஆதம் சாகிப் தெருவுல ஆரம்பிச்சு ராமநாயக்கர் தெரு, ஆண்டியப்ப முதலித் தெரு, பேரம்பாலு செட்டித் தெரு, நாராயண நாயக்கர் தெரு, ராமானுஜர்கூடம் தெரு, சண்முகராயன் தெரு, கைலாயச்செட்டித் தெரு, பசவையர் தெருன்னு என் கால்படாத தெருக்கள் இங்கே இல்லை.
சஞ்சீவிராயர் கோயில் தெருவில் இருக்கிற கார்ப்பரேஷன் நடுநிலைப் பள்ளியில் படிச்சேன்.
படிப்பு, பாட்டு, பேச்சு எல்லாத்துலயும் முதல் இடம் எனக்குத்தான். பின்னாடி கே.சி.சங்கரலிங்க நாடார் பள்ளியிலும் சர் பி.டி.தியாகராயர் கல்லூரியிலும் படிச்சேன்.
அந்த காலேஜுக்கு டிரஸ்டியா இருந்த எம்.ஜி.ஆர்., பிரின்சி பாலுடன் மீட்டிங்குக்கு வருவார்.
அங்க இருந்த அரங்கத்துல 'இன்பக் கனவு’ நாடகம் நடக்கும். அப்போ ஸ்டேஜுக்குப் பின்னாடி இருந்து வந்து எம்.ஜி.ஆரைத் தொட்டுப் பார்த்திருக்கேன்.
நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். ராயபுரம் பிரைட்டன் தியேட்டர்ல 'மலைக் கள்ளன்’,
பாரத் தியேட்டர்ல 'தாய்ச்சொல்லைத் தட்டாதே’, 'குடும்பத் தலைவன்’, 'தாய்க்குப் பின் தாரம்’,
கிருஷ்ணா தியேட்டர்ல 'நாடோடி மன்னன்’,
கிரவுன் தியேட்டர்ல 'பணம் படைத்தவன்’னு ஓடி ஓடி எம்.ஜி.ஆர். படங்களைப்பார்த்து வளர்ந்தேன்.
அதே மாதிரி பிரபாத்தியேட்டர்ல பார்த்த 'வஞ்சிக்கோட்டை வாலிபன்’,
மகாராணி தியேட்டர்ல பார்த்த 'காட்டு ரோஜா’வும் மறக்க முடியாது. 'காட்டு ரோஜா’ படம் பார்க்க 35 பைசா டிக்கெட்டு எடுக்க எகிறிக் குதிச்சு, பல்லு ஒடைஞ்சு ரத்தம் வழியுது. ஆனாலும் படம் பார்த்துட்டுதான் திரும்பினேன்.
இன்னைக்கு கிருஷ்ணா, கிரவுன், பிரபாத் தியேட்டர்கள் இல்லை. பாரத், மகாராணி எல்லாம் இருக்கு. பிரைட்டன் தியேட்டர் ஹை-ட்ரீம்ஸா மாறிடுச்சு."
- கலைபுலி எஸ்.தாணு.........
-
நான் ஒரு துணை நடிகன்....என்னை போன்றவர்களுக்கு பட வாய்ப்புக்கள் வரும் வராமலும் இருக்கும்.
மக்கள் திலகத்துடன் நான் நவரத்தினம் போன்ற படங்களில் நடித்து உள்ளேன்...ஒரு முறை அவர் முதல்வர் ஆக இருந்த நேரம் எனக்கு பட வாய்ப்புக்கள் இல்லாமல் எனது குழந்தைகளுக்கு கல்வி செலவுகளுக்கு பணம் தேவை பட...
யாரிடம் போய் கேட்க என்று ஒரே குழப்பம்....
ஏன் எம்ஜிஆர் அண்ணன் இடம் கேட்க கூடாது...மற்றவர்கள் உதவினால் அது கடன். அவர் கொடுத்தால் அது கொடை என்று தொலைபேசியை எடுத்து தொடர்பு கொள்ள....
என் நல்ல நேரம் அவரே அதை எடுத்து பேச நான் விவரம் சொல்ல மறுநாள் காலை அவர் வீட்டுக்கு வர சொன்னார்......
எனது அன்றைய தேவை 250 ரூபாய்கள் மட்டுமே....நான் மறுநாள் போய் வீட்டில் காத்து இருக்க...அரசு அதிகாரிகள்...அமைச்சர்கள்....கட்சிக்காரர்கள் கூட்டம் அதிகம் இருந்தது.....
அனைவரும் அவரை பார்த்து பார்த்து சென்று கொண்டு இருக்க எனக்கு இன்று என்னை எங்கே அவர் பார்க்க இனி யாரிடம் போய் உதவி கேட்க என்ற எண்ணம் மேலோங்கி விட்டது.
அன்று தான் பள்ளியில் பரீட்சை பணம் செலுத்த கடைசி நாள்.
அப்போது நானே எதிர் பார்க்காமல் என்னை நோக்கி வந்த தலைவர் சார்ந்த மாணிக்கம் அண்ணன் என்னை தனியாக அழைத்து இந்த கவரை உங்களிடம் முதல்வர் கொடுக்க சொன்னார் என்று சொல்ல..
நான் நடப்பது நிஜமா அல்லது கனவா என்று நம்பாமல் வாங்கி கொண்டு ஒரு ஓரம் ஆக போய் அந்த கவரில் நான் கேட்ட தொகை இருக்குமா என்று பார்த்தேன்.
ஆமாம் இருந்தது பத்து மடங்கு அதிகம் ஆக..
என்னால் என்னையே நம்ப முடியவில்லை.
ஆன நேரம் ஆகட்டும் அதான் பணம் இருக்கே என்று நான் அவரை பார்க்க காத்து இருக்க.
கோட்டைக்கு கிளம்பி வந்த அவரை பார்த்த உடன் என் கண்கள் குளம் ஆக நான் இருகரம் கூப்பி வணங்க.....என்னை அருகில் அழைத்து நமக்கு துன்பங்கள் வரும் போகும் அதை பற்றி கவலை கொள்ளாமல் நாம் உழைத்து கொண்டே இருக்கும் எண்ணத்தில் நிலைத்து நிற்க வேண்டும்..... என்று என் காதில் மட்டும் சொல்லி சிரித்தார்....
எனக்கு அவர் அன்று செய்த உதவி அடுத்த சில மாதங்களுக்கு போதும் ஆனதாக இருக்க ....அந்த மாதம் முதல் அடுத்து அடுத்து பட வாய்ப்புகள் எனக்கு குவிந்தன.....
அடுத்த சில மாதங்களில் நலிந்த நடிகர் நடிகை திரைப்பட துறை சார்ந்த அனைவருக்கும் நடந்த ஒரு விழாவில் அதில் பங்கு கொண்ட அனைவருக்கும் ஆளுக்கு ஒரு தங்க மோதிரம் அரசு முத்திரை உடன் கொடுக்க பட்டு உடன் நிதியும் தனியாக வழங்க பட்டது...
உலகில் ஆயிரம் உதவி செய்பவர்கள் வரலாம் போகலாம் ஆனால் இனி ஒருவர் புரட்சிதலைவர் போல எண்ணம் அறிந்து உதவி செய்பவர் இனி பிறப்பது கடினம் என்கிறார் ஒரு விரல் கிருஷ்ணா ராவ்.
வாழ்க தலைவர் புகழ்.
நன்றி...தொடரும்.
உங்களில் ஒருவன்............
-
#பிறந்துகொண்டிருக்கும் #எம்ஜிஆர் #பக்தர்கள்
MY LAST YEAR FB MEMORY
Ram Manohar Bokkisa Digital Analytics, Movie Buff, Aspiring Entrepreneur ANDHRA PRADESH
#மேற்கண்ட #ஆந்திரஇளைஞரின் #எம்ஜிஆர் & #என்டிஆர் குறித்த கருத்துக்களின் தமிழாக்கத்தைப் பதிவு செய்துள்ளேன்.......
வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் மனதில் எந்த அளவு எம்ஜிஆர் ஆக்ரமித்துள்ளார் என்பதற்கு இது பெரும் சான்று. இத்தனைக்கும் அந்த இளைஞன் எம்ஜிஆரைப் பார்த்திருக்கக்கூட மாட்டார். இது என்டிஆர் அவர்களைக் குறைகூறும் பதிவல்ல. எம்ஜிஆர் எந்தளவு மக்களின் மனதில் இன்றளவும் தன்னிகரற்று விளங்குகிறார் என்பதற்கான மீச்சிறு உதாரணமே...
இதைப் பதிவு செய்யும் போது எனக்கு ஏற்பட்ட பரவசநிலையை வெறும் வார்த்தைகளினால் கூற இயலாது...
எம்ஜிஆர் பக்தனாக இருக்க நாம் எத்தனை ஆண்டுகாலம் தவம் செய்தோமோ? எம்ஜிஆர் பக்தி நமது அடுத்த பிறவியிலும் தொடரவேண்டும் என்பதே நான் இறைவனிடம் கேட்கும் வரம்...
இதோ அந்த சிறப்புமிக்க பதிவு
--------------------------------------------------------------------
என் தாய் மொழி தெலுங்கு. நான் ஆந்திராவில் இருந்து வருகிறேன்.
எம்ஜிஆர் மற்றும் என்டிஆர், இருவரும் நடிப்பு மற்றும் பிற அம்சங்களில் தங்கள் சொந்த முயற்சியில் உயர்ந்தவர்கள். ஆனால், எம்ஜிஆரைப் பொறுத்தவரை, தனது சொந்த கட்சியை துவக்கி தைரியமாக கோலோச்சியவர். முதன்முதலில் இந்தியாவில் ஒரு நட்சத்திர நடிகர், முதல்வரான பெருமையைப் பெற்றவர். என்.டி.ஆரும் முதல்வரானார். ஆனால் அவர் முதலாமிடம் இல்லை. எம்ஜிஆர் தான் முதல்வராக வேண்டுமென்று மக்கள் நியமித்தனர். ஆனால் என்.டி.ஆர் அப்படி அல்ல.
எம்ஜிஆர் பல பிரபலமான சமூகநலத் திட்டங்களைத் தொடங்கினார், இது இந்தியா முழுவதும் பல அரசியல்வாதிகளாலும், என்.டி.ஆராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின்பற்றப்பட்டது.
என் வாழ்நாளில் எந்த வீட்டிலும் என்டிஆரின் ஒரு புகைப்படத்தையும் நான் பார்த்ததில்லை...
ஆனால் எம்ஜிஆரின் புகைப்படங்கள், வீடுகள், கடைகள் மற்றும் பிற இடங்களில் நான் நிறையப் பார்த்து மெய்சிலிர்த்துள்ளேன். இன்றும் அவரது பிறப்பு அல்லது இறப்பு ஆண்டு விழாவில், பலர் அவரது புகைப்படங்களை தங்கள் வீடுகளுக்குள் வைத்து ஆராதிக்கின்றனர் என்பது உலகில் யாருக்குமே கிடைக்காத சிறப்பு.
என்.டி.ஆருக்காக இறக்கத் தயாராக இருக்கும் ஒரு நபரைக்கூட நான் இதுவரை பார்த்ததில்லை.
ஆனால் எம்ஜிஆருக்காக இன்றளவும் தங்களின் உயரையே கொடுக்கத்துணியும் மக்களை தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலும் பார்க்கிறேன்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் பெரும்பாலான இடங்களில் என்.டி.ஆர் முறைகேடுகள் செய்ததாக வழக்குகள் உள்ளன. ஆனால் அத்தகைய வழக்குகள் எம்.ஜி.ஆரிடம் இல்லை.
எம்ஜிஆர் மறையும் வரை முதல்வராக இருந்து சாதனை படைத்தவர். ஆனால் என்டிஆர் விஷயத்தில் அப்படியில்லை.
நான் ஒரு விவாதத்தை தொடங்க விரும்பவில்லை ஆனால் எம்.ஜி.ஆரின் நட்சத்திர அந்தஸ்து தான் என்.டி.ஆ ரிடம் பிரதிபலித்தது..........BSM...
-
மக்கள் திலகம் ரசிகர்களாக இருந்த போதிலும் ஒரு சிலருக்கு அவரின் திரையுலகப் பயணம் குறித்த சுவாரஸ்யமான சங்கதிகள் அனைத்தும் தெரிந்திருக்கும் என்று கருத முடியாது. அப்படிப்பட்டவர்கள் மட்டுமல்ல, எம் ஜி ஆர் என்ற தானை தலைவரின் சுவாரஸ்யமான திரைப்பயணம் குறித்து அறிந்து கொள்ள விரும்பும் இன்றைய தலைமுறைக்கும் பயனளிக்கும் விதமாக எம்ஜிஆரின் திரைப்பயணம் குறித்து மேலும் சில புள்ளி விவரங்கள்..
எம்ஜிஆர் கலையுலகில் இருந்து அரசியல் வானில் முதல்வாரன பிறகு ஒப்பந்தமான திரைக்காவியங்கள்...
உன்னைவிட மாட்டேன்
புரட்சிபித்தன்
உங்களுக்காக நான்
மக்கள் என் பக்கம்
நல்லதை நாடு கேட்கும்
சமூகமே நான் உனக்கே சொந்தம்
நானும் ஒரு தொழிலாளி
அண்ணா நீ என் தெய்வம்
தியாகத்தின் வெற்றி.
அண்ணா பிறந்த நாடு
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜ்
ஊரே என் உறவு
மீண்டும் வருவேன்
பைலட் ராஜ்
எல்லை காவலன்.
எம்ஜிஆர் நடித்த படங்களின் தயாரிப்பாளர்களும் - கம்பெனிகளும்...
1. சதிலீலாவதி - மனோரமா பிலிம்ஸ்
2. இருசகோதரர்கள் - பரமேஸ்வர் சவுண்டு பிக்சர்ஸ்
3. தட்ச யக்ஞம் - மெட்ரோபோலிசன் பிக்சர்ஸ்ட
4. வீரஜெகதீஷ் - வி.எஸ்.டாக்கிஸ்
5. மாயாமச்சேந்தரா – - மெட்ரோபோலிசன் பிக்சர்ஸ்
6. பிரகலாதா - சேலம் சங்கர் பிலிம்ஸ்
7. சீதாஜனனம் - சியாமளா பிக்சர்ஸ்
8. அசோக்குமார் - முருகன் பிக்சர்ஸ்
9. தமிழறியும் பெருமாள் - உமா பிக்சர்ஸ்
10. தாசிப்பெண் - புவனேஸ்வரி பிக்சர்ஸ்
11. ஹரிசந்திரா - ராஜராஜேஸ்வரி பிக்சர்ஸ்
12. சாலிவாகனன் - பாஸ்கர் - பிக்சர்ஸ்
13. மீரா - சந்திரபிரபா சினிடோரியன்
எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்கள்...
நாடோடி மன்னன்
ராஜா தேசிங்கு
அடிமைப்பெண்
நாளை நமதே
குடியிருந்த கோயில்
ஆசைமுகம்
மாட்டுக்கார வேலன்
நீரும் நெருப்பும்
சிரித்து வாழ வேண்டும்
எங்கவீட்டுப் பிள்ளை
பட்டிக்காட்டுப் பொன்னையா
உலகம் சுற்றும் வாலிபன்
நினைத்ததை முடிப்பவன்
கலையரசி
நேற்று இன்று நாளை
ஊருக்கு உழைப்பவன்
எம்.ஜி.ஆர் படத்தின் பாடல் ஆசிரியர்கள்...
திரு. தஞ்சை ராமையாதாஸ்
திரு.மாயவநாதன்
திரு. பாபநாசம் சிவன்
திரு. கா.மு.ஷெரீப்
திரு.மு.கருணாநிதி
திரு.கு.சா.கிருஷ்ணமுர்த்தி
திரு.ஆத்மநாதன்
திரு.கே.டி.சந்தானம்
திரு.ராண்டர்கை
திரு.உடுமலை நாராயணகவி
திரு.சுரதா
திரு.பட்டுக்கோடடை கல்யாணசுந்தரம்
திரு.லட்சுமணதாஸ்
திர.கு.மா. பாலசுப்பிரமணியன்
திரு.அ.மருதகாசி
திரு.முத்துக்கூத்தன்
திரு.கண்ணதாசன்
திரு.வாலி
திரு.ஆலங்குடி சோமு
திரு.அவினாசிமணி
திரு.புலமைபிததன்
திரு.விந்தன்
திரு.நா.காமராசன்
திரு.முத்துலிங்கம்
ரோஷனரி பேகம்
திரு.பஞ்சு அருணாசலம்;
எம்ஜிஆர் நடித்த வண்ணப் படங்கள் 40 (இதில் 100 நாட்கள் ஓடி சாதனை பெற்ற காவியங்கள் 35) இது தவிர மற்ற காவியங்கள் 10 வாரங்களுக்கு கீழ் கிடையாது.
108 அடி உயர கட் - அவுட்...
உலகிலேயே ஒரு புது திரைப்படத்திற்கு 108 அடியில் மிகப் பிரமாண்டமாக கட்அவுட் வைக்கப்பட்டது எம்ஜிஆரின் காவியத்திற்கு மட்டும் தான்.
திரைப்படம்: என் அண்ணன், அரங்கு சேலம் அலங்கார்.
தலைவர் இயக்கிய திரைப்படங்கள்...
1. நாடோடி மன்னன்,
2. உலகம் சுற்றும் வாலிபன்,
3. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
அதிகப் படங்களில் நாயகியாக நடித்தவர்...
செல்வி ஜெ.ஜெயலலிதா – 28 படங்கள்,
திருமதி சரோஜாதேவி – 26 படங்கள்,
எம் ஜி ஆரை அதிகப்படங்களில் இயக்கியவர்...
திரு.ப.நீலகண்டன் - 17 படங்கள்
திரு.எம்.ஏ.திருமுகம் - 16 படங்கள்
எம் ஜி ஆரை வைத்து அதிகப்படங்கள் தயாரித்த நிறுவனம்...
தேவர் பிலிம்ஸ் - 16 படங்கள்
எம் ஜி ஆர் திரைப்படங்களுக்கு அதிகம் இசை அமைத்தவர்...
திரு.எம்.எஸ்..விஸ்வநாதன் 49 படங்கள்
திரு.கே.வி.மகாதேவன் -37 படங்கள்
அதிக பாடல்கள் பாடியவர்கள்...
திரு.எ.எம்.சௌந்தரராஜன், திருமதி.பி.சுசிலா
வெற்றிவிழா கண்ட திரைப்படங்கள்...
100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டவை -86 படங்கள்
வெள்ளி விழா கண்டவை -12 படங்கள்
வண்ணப் படங்கள்(கலர்) -40 படங்கள்
300 நாட்களுக்கு மேல் ஓடியது -2 திரைப்படங்கள் (என் தங்கை, உலகம் சுற்றும் வாலிபன்)
தென்னிந்தியாவில் ஜனாதிபதி விருது பெற்ற முதல் தமிழ் படம் - மலைக்கள்ளன்
தமிழ் திரையுலகின் முதல் வண்ணப்படம் - அலிபாபாவும் 40 திருடர்களும்
தெலுங்கு மொழிக்கு மாற்றம் செய்யவப்பட்டவை - 60 படங்கள்
இந்தி மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டவை - 9 படங்கள்.
முதன்முதலில்...
முதன் முதலில் தணிக்கையில் a சான்றிதழ் பெற்ற தமிழ் படம் - மர்மயோகி
முதல் பாதி கருப்பு & பாதி வண்ணப்படம் - நாடோடி மன்னன்
முழுநீள வண்ணப்படம் - அலிபாபாவும் 40 திருடர்களும்
சிறந்த தமிழ் நடிகர் - ரிக்க்ஷாக்காரன்.........
-
ருசி கண்டறியாத பசி தீராத வயதில்...!
எழுத்தாளர் மாலனின் வலைப்பூவிலிருந்து....
தொப்பியும் இல்லாமல், கண்ணாடியும் அணியாமல் என் முன்னே உட்கார்ந்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒரு நாள் முழுக்க அவரோடு இருந்து அவரது அசைவுகளை எழுதுவதற்காக நான் அவர் அறையில் அமர்ந்திருந்தேன்.காலையில் எழுந்து பல்துலக்கியதுமே ராமாவரம தோட்டத்திற்குப் போய் அவரோடு அவருடைய காரிலேயே கோட்டைக்கும் போய்விட்டு மதியச் சாப்பாட்டிற்கு திநகர் ஆற்காடு (முதலியார்) வீதிக்குத் திரும்பியிருந்தோம். எம்ஜிஆர் சாப்பிடத் தனது அறைக்குப் போனார். எங்களுக்குக் கீழே சாப்பாடு ஏற்பாடாகியிருந்தது.
அவரது ஆற்காடு முதலி வீட்டில் (இப்போது நினைவகம் இருக்கிறது) அவர் இருந்த காலத்தில், தினம் மதியம் 100 பேராவது சாப்பிடுவார்கள்.அது சாப்பாடு இல்லை. விருந்து. ராமவரத்திலும் காலையில் ஒரு 50 60 பேராவது சாப்பிடுவார்கள்.பகல் 12 மணியிலிருந்து மதியம் இரண்டு இரண்டரை மணி வரைக்கும் யாரைப்பார்த்தாலும், அலுவலக உதவியாளர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சந்திக்க வருகிற பார்வையாளர்கள், லி·ப்ட் இயக்குநர். கார் டிரைவர், என யாரைப் பார்த்தாலும் 'சாப்பீட்டீங்களா?' என்பதுதான் அவரது முதல் கேள்வியாக இருக்கும்.
சாப்பிட்டுவிட்டு மேல அவரது அறைக்கு வந்த என்னைப் பார்த்து "சாப்டீங்களா?" என்றார். "ஆச்சு" " என்ன சாப்டீங்க? சைவமா அசைவமா?" என்று கேட்டு "ஓ! நீங்க அசைவம் சாப்பிட மாட்டீங்கல்ல?" என்று அவரே பதிலும் சொல்லிக் கொண்டார். என்ன மெனு என்று சொல்லச் சொன்னார். ஏதாவது ஒன்றிரண்டை விட்டு விட்டேனோ என்னவோ, வெடுக் என்று கையைப் பறித்து உள்ளங்கையை முகர்ந்து பார்த்தார். "ஸ்வீட் சாப்டீங்களா? என்ன ஸ்வீட்?" என்றார். எங்களுக்கு அன்று ஸ்வீட் பரிமாறப்படவில்லை. நாங்களும் அதைப் பொருட்படுத்தவில்லை. சாப்பிடுவதற்கா போயிருக்கிறோம்? கோட்டையிலிருந்து திரும்பும் போதே இரண்டு மணி இருக்கும். அதற்குள் பல பந்திகள் முடிந்திருந்தன. ஸ்வீட் தீர்ந்து போயிருக்கலாம். எங்கள் மெளனத்தைப் பார்த்துவிட்டு காலின் கீழ் இருந்த அழைப்பு மணியை அழுத்தினார். அவர் அதற்கான விசையை அங்கேதான் வைத்திருந்தார். உதவியாளர் வந்தார்." "இவங்களுக்கு சாப்பாட்ல ஸ்வீட் போட்டீங்களா?" என்றார். உதவியாளர் எங்கள் முகத்தைப் பார்த்தார். 'போட்டுக் கொடுத்திட்டீங்களா? பாவிகளா?" என்பது போல இருந்தது அவர் பார்வை. மெளனமாக இருந்தார். ஒரு நிமிடத்தில் எம்.ஜி.ஆரின் முகம் சிவந்து விட்டது,
"இப்படித்தான் தினமும் இங்கே நடக்குதா?" என்று இறைந்தார். "எத்தனை நாளா இப்படி நடக்குது/" என்றார் மறுபடியும். உதவியாளர் ஸ்வீட் தீர்ந்து போன நிலையை விளக்க முயன்றார்." அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்ப இவங்களுக்கு ஸ்வீட் வரணும் என்றார். சிறிது நேரத்தில் ஒரு பெரிய தூக்குவாளி நிறைய ஒரு லிட்டர் பாசந்தி வந்தது. அதை அப்போதே நாங்கள் சாப்பிட்டாக வேண்டும் என வற்புறுத்தினார்.
ஏன் சாப்பாடு சாப்பாடு என வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார் என்று எனக்குள் ஒரு கேள்வி. அவருடைய சத்துணவுத் திட்டத்தைப் பற்றிப் பேச இதுதான் சந்தர்ப்பம் என்று எனக்குத் தோன்றியது. அந்த திட்டம் பற்றிய விமர்சனங்களை வீச ஆரம்பித்தேன்." மக்களுடைய வரிப்பணத்தை எடுத்து இப்படிச் சோறு போட செலவழிக்க வேண்டுமா? தொழிற்சாலைகள் நிறுவி, மக்களுக்கு வேலை கொடுத்தால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சோறு போட மாட்
டார்களா?" என்று என் கேள்வியை ஆரம்பித்தேன்.
அதற்கு பதிலாக அவர் தனது இளமைக்கால சம்பவம் ஒன்றை விவரிக்க ஆரம்பித்தார்." அப்போது நான் பாய்ஸ் கம்பெனியில் நடிச்சிக்கிட்டு இருக்கேன். பாய்ஸ் கம்பனின்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு? (பாய்ஸ் கம்பெனி என்பது ஒரு குழுவாகத் தொழில் முறை நடிகர்களை வைத்து நாடகம் போடும் நிறுவனம். அதில் சிறுவர்கள் நிறைய இருப்பார்கள். வறுமையின் காரணமாகவும், கலை ஆர்வம் காரணமாகவும் வந்து சேரும் சிறுவர்கள். எல்லோரும் ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உண்டு, ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவார்கள். சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாத்தியார்களும் இருப்பார்கள்) குரல் உடையற வயசு. அந்த வயசில இருக்கிறவனுக்குப் பாடம் கொடுக்க மாட்டாங்க. பாட முடியாதில்ல?. வேஷம் இல்லாதவனுக்கு கம்பெனியில மரியாதை கிடையாது. ஆசிரியர்கள் வேண்டாத மாணவர்களைப் பழி தீர்த்துக் கொள்ள்வதும் அப்போதுதான். வாழ்க்கை பெரிய நரகமாக ஆகிவிடும்.
lஒரு நாளைக்கு சாப்பிட உட்கார்ந்திருக்கோம். நல்ல பசி. இலை போட்டாச்சு. காயும் ஊறுகாயும் வைச்சுட்டுப் போயிருக்காங்க. சோறு வந்துகிட்டே இருக்கு. என்னை பிடிக்காத வாத்தியார் ஒருத்தர் நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு. வேகமாக கிட்ட வந்தாரு. ' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதப் பந்தி கேட்குதா?'னு கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார். கையில சோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்? ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட அவமானம்தான் அதிகமாக இருந்தது. 'அவரை எதிர்த்து யாரும் சண்டை போட முடியாது, கேள்வி கேட்க முடியாது, தன் கிட்ட அதிகாரம் இருக்குனு தானே எழுப்பிவிடறாரு?எனக்கு என்னிக்காவது அதிகாரம் வந்தா நாலு பேருக்குச் சோறு போடுவேன், எவன் சோத்தையும் பறிக்க மாட்டேன்'னு அன்னிக்கு நினைச்சேன். இன்னிக்கு எல்லோரும் என்னை வாத்தியார் வாத்தியார்னு கூப்பிடும் போது எனக்கு அவங்களுக்கு சோறு போடற கடமை இருக்குகிற நினைப்பு வருது. அடுத்த வேளைச் சோற்றுக்கு உத்திரவாதம் இருக்கிறவங்க ஏழைகள் சோற்றைப் பற்றி என்ன வேணா கேள்வி கேட்கலாம். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லீங்க."
இதைச் சொல்லும் போது அவர் குரல் கனமேறிக் கரகரத்தது.
புத்தகங்களில் உள்ள பொருளாதாரத் தத்துவங்களால் விளக்க முடியாததாக இருந்தது அவரது சத்துணவுத் திட்டம். ஆனால் இன்று பின்னோக்கிப் பார்க்கும் போது ஆரம்பக் கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்கள் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு விலகும் விகிதம் (dropout rate) இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைவு. The National University of Educational Planning and Administration (NUEPA) என்ற நிறுவனம் பள்ளிகளைப் பற்றித் தயாரித்த ரிப்போர்ட் கார்டின் படி தமிழ்நாட்டில் Retention rate 100%.
Common Man's logic என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அது தத்துவங்களுக்கு அப்பாற்பட்டது !
Ithayakkani S Vijayan...
-
1983 டிசம்பர் மாதம்.. இன்று போல் கடும் மழையால் பாதிக்கப்பட்டது தஞ்சை,
நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம்.
வெள்ளம் பாதித்த பகுதிகளை காண தமிழக முதல்வர் #எம்ஜிஆர் வருகிறார்..
காட்டு மன்னார் கோவில், கோட்டைப் பட்டினம் போன்ற பகுதிகளை பார்வையிட்ட முதல்வர், பின் மதிய உணவுக்காக அறந்தாங்கி நெடும்சாலைத்துறை பயணியர் விடுதிக்கு வருகிறார்.
அவருடன் அன்றைய அமைச்சர்கள் திருநாவுக்கரசு, திருச்சி சௌந்திரராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் வருகிறார்கள்.
முதல்வர் கூட வந்தவர்கள் சாப்பிட பின் மற்ற அரசு அதிகாரிகள், ஓட்டுனர்கள் இரண்டாம் பந்தியில் சாப்பிட உக்கார்ந்தனர்.
அப்போது திடீரென முதல்வர் தன் அறையை விட்டு வெளியே வந்து அடுத்த பகுதிகளை பார்க்க புறப்படுகிறார்.
மற்றவர்கள் சாப்பிட்டுக்கொண்டு இருப்பதை அன்றைய கற்பூர சுந்தர பாண்டியன் ias அவர்கள் விவரத்தை தயங்கியபடி முதல்வரிடம் சொல்கிறார்.
வாத்தியாரும் சிரித்துக்கொண்டே தன் அறைக்கு திரும்புகிறார். சாப்பிட்டு கொண்டு இருந்தவர்களிடம் 'அவசரம் வேண்டாம் முதல்வர் தன் அறைக்கு திரும்பி விட்டார். பொறுமையாக சாப்பிட்டு வாருங்கள்' என்ற விவரம் சொல்லபட்டு அனைவரும் சாப்பிட்டு வருகின்றனர்.
முதல்வர் தன் அறையை விட்டு வெளியே வந்து தன் காரில் ஏறாமல் அடுத்து இருந்த ஒரு காவல்துறை அதிகாரி காரின் முன் போய் நின்று கொண்டு அந்த காரின் ஓட்டுனரை அழைத்து
'சாப்பிடீர்களா?' என்று கேட்க
அவரும் 'ஆமாம்' என்று சொல்ல
'இங்கே வாருங்கள்' என்று அவரை அழைக்கிறார்.
அவர் பதறி நம்மவர் முன் வந்து நிற்க, யாரும் எதிர்பாராவண்ணம் அவர் கையை எடுத்து தன் மூக்கின் அருகில் கொண்டு சென்று முகர்ந்து பார்த்து அவர் சாப்பிடத்தை உறுதி செய்து கொள்கிறார் ஏழைகளின் ஏந்தல், எம்ஜியார்.
ஒரு மாநிலத்தின் முதல்வர் ஆன பின்னும் கூட அடுத்தவர் பசிக்கு முக்கியத்துவம் கொடுத்து 'நாம் தான் சாப்பிட்டு விட்டோமே எவன் எப்படி போனால் என்ன' என்று நினைக்காத அவரின் இந்த குணம்தான் இன்று வரை அவர் புகழ் நிலைத்து நிற்க காரணம் ஆகிறது.
ஒரு முதல்வர் தனக்கு கீழே உள்ளவர்களின் உணர்வுகளுக்கும் மரியாதை கொடுத்த விதம் அலாதியானது.
இன்றும் புயல் பாதித்த பகுதிகளில் பல நாட்களாக தன் குடும்பம் பிள்ளை குட்டிகள் அனைவரையும் விட்டு விட்டு அல்லும் பகலும் உழைத்து கொண்டு இருக்கும் நல்ல மனம் கொண்ட மின் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொது நல ஆர்வலர்கள் அனைவருக்கும் #புரட்சித்தலைவர் மற்றும் இதயதெய்வம்
#அம்மா அவர்களின் சார்பாக
நன்றிகள்...
நன்றி: நெல்லை மணி
படம்: 13.12.1978 அன்று சேதமடைந்த படகுகளையும் மண்டபம் பகுதியில் பார்வையிடும் முதல்வர்...மக்கள் திலகம்.........
-
"சகல கலா வல்லவர்", நமது எம்.ஜி.ஆர். !
சொல்கிறார் 1958 காலகட்டத்தில் மக்கள்திலகத்திற்கு உடையலங்காரம் செய்தவர் !!
நாடோடிமன்னன்,மர்மயோகி,தாய்க்குப்பின்தாரம்,கலை அரசி போன்ற படங்களுக்கு நமது தலைவருக்கு உடை அலங்காரம் செய்தவர் பி.சி.பிரான்சிஸ் என்பவர்.அவர் அப்போதே சொன்னாராம்,சினிமா பற்றிய அனைத்து விஷயங்களும் எம்.ஜி.ஆருக்கு தெரியும் என்பதோடலல்லாமல் ஒப்பனை,உடை போன்றவற்றிலும் ஞானம் உள்ள அவர் ஒரு சகலகலா வல்லவர் என்று.
உடைகள் பற்றிய டிசைனை அவரே பென்சிலில் போட்டுக்காட்டுவாராம்.என்ன துணி வாங்கினால் உடை சிறப்பாக இருக்கும் என்று ஆலோசனை சொல்வாராம்.அதே போல் ஒப்பனையிலும் புதுப்புது ஆலோசனைகள் சொல்வாராம்.
அருமை பக்தர்களே,நமது தலைவர் இன்றைய சூழல் சினிமா வரை அவரே சகலகலா வல்லவர்.அவர் அரசியலில் கோலோச்சிய காலத்தில் ஒரு சொத்து கூட வாங்காத ,ஓர் ஊழல் வழக்கும் இல்லாத சகல கலா வல்லவர், வித்தகர்.........nssm
-
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் மறு வெளியீடு தொடர்ச்சி ..............
(19/02/21 முதல் )
----------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை மூலக்கடை ஐயப்பாவில்* நேற்று இன்று நாளை தினசரி 3 காட்சிகள்*
தகவல் உதவி : திரு.ராமு, மின்ட்.
ஏரல்* சந்திராவில் ( நெல்லை மாவட்டம் ) நம் நாடு - தினசரி 3காட்சிகள் .
தகவல் உதவி : திரு.வி.ராஜா, நெல்லை .
-
புரட்சித்தலைவர்
மன்னாதி மன்னன்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#ஆசியோடு_நண்பர்கள்
#அனைவருக்கும் #இனிய_வெள்ளிக்கிழமை_காலை #வணக்கம்...
புரட்சி தலைவர் படங்களின் வரிசையில் இன்று அவரின் நடிப்பில் வெளிவந்த அந்தமான் கைதி திரைப்படம் பற்றி காண்போம்...
ராதாகிருஷ்ணா பிலிம்ஸ் தயாரித்தார்
கு. சா. கிருஷ்ணமூர்த்தி திரைக்கதை
எம்.ஜி.ராமச்சந்திரன்
திக்குரிசி சுகுமாரன் நாயர்
பி.கே.சரஸ்வதி
எம்.எஸ். திரௌபதி
கே.சரங்கப்பணி
டி.எஸ். பாலையா
இசை g. கோவிந்தராஜுலு நாயுடு சினிமாடோகிராபி வி.கிருஷ்ணன்
எடிட்டிங் மாணிக்கம்
அந்தமான் கைதி என்பது இந்திய சுதந்திரம் மற்றும் பிரிவினையை கையாளும் கதை. இந்த கதையை டி.கே.சண்முகம் மேடையில் இருந்து தழுவி சினிமாவாக எடுத்தனர் மேலும் அந்தமான் கைதி மிகவும் வெற்றிகரமான நாடகம்.
#சகோதரியின்_வாழ்க்கையை #சொர்க்கமாக #தன்னுடைய_வாழ்க்கையை #நரகமாக்கி_கொண்ட_ஒரு
#சகோதரனின் #கதை_தான்_இந்த_அந்தமான்_கைதி..
சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் தொழிலாளர் தலைவர் நடராஜ்
(எம். ஜி. ராமச்சந்திரன்) மாமா பொன்னம்பலம்
(கே. பொன்னம்பலம் தனது தந்தையை எவ்வாறு கொலை செய்தார், தனது தாயின் சொத்துக்களை எவ்வாறு மோசடி செய்தார் மற்றும் அவரது சகோதரி லீலாவை (பி. கே. சரஸ்வதி) திருமணத்திற்கு கட்டாயப்படுத்தினார் என்று நடராஜ் கூறுகிறார். நடராஜ் வேட்டையாடி மாமாவைக் கொன்றுவிடுகிறார், இது அவரது கதையைச் சொல்ல சிறையில் இறங்குகிறது.
1947. தொலைதூர கராச்சியில் குடியேறிய தனது மைத்துனர் சிதம்பரம் பிள்ளையின் சொத்துக்கள் மற்றும் செல்வங்களுக்கு பொன்னம்பலம் பிள்ளை தன்னை உதவுகிறார். பொன்னம்பலம் அவரது கையால் ஜம்பு மற்றும் நீதிமன்ற எழுத்தர் முனியாண்டி ஆகியோரால் உதவுகிறார். சிதம்பரம் பிள்ளை வீடு திரும்பி பொன்னம்பலத்தை கேள்வி கேட்கத் தொடங்கும் போது, அவர் கொல்லப்படுகிறார்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர், சிதம்பரம் பிள்ளை குடும்பம் கராச்சியில் இருந்து தப்பிக்க முடிகிறது. அவரது மனைவி, மகன் நடராஜன் மற்றும் மகள் லீலா ஆகியோர் தங்கள் சொந்த ஊரை அடைகிறார்கள், சிதம்பரம் பிள்ளை இறந்து கிடப்பதைக் காண மட்டுமே. அவர்கள் இதயமற்ற பொன்னம்பலத்தால் விரட்டப்படுகிறார்கள். ஒரு நேர்மையான இளைஞர் பாலு, அவர்களின் அவலத்தால் தூண்டப்பட்டு, அவர்களுக்கு தனது வீட்டில் தங்குமிடம் அளித்து, லீலாவைக் காதலிக்கிறார். பொன்னம்பலத்தின் காமத்திற்கு பலியாகிய வள்ளிகண்ணுவிடம் பரிதாபப்பட்ட நடராஜன் விரைவில் காதலுக்கு மாறுகிறார்.
ஜம்பூ நடராஜனை மோசமான குற்றச்சாட்டில் கைது செய்து, லீலாவை பொன்னம்பலத்துடன் திருமணம் செய்து கொள்வதில் வெற்றி பெறுகிறார். லீலா ஒரு பேயால் வேட்டையாடப்படுவதாக நடித்து, கட்டாய திருமணத்தை முடிப்பதை ஒத்திவைக்கிறார். ஆனால் ஜம்பு தனது பாசாங்குகளைப் பார்த்து, அவளைத் துன்புறுத்துவதற்கு தைரியமாக இருக்கிறான். லீலாவை அவளது சோதனையிலிருந்து காப்பாற்ற பாலு விரைகிறான், ஆனால் அவன் அவள் வீட்டை அடைந்ததும் லீலா கிழிந்து காயமடைவதைக் காண்கிறான், பொன்னம்பலம் இறந்து கிடந்தான். பாலு மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்படுகிறது
விறுவிறுப்பாக போகும் இந்த திரைப்படம் வெற்றி பெற்ற ஒரு அருமையான திரை காவியம் ஆகும்
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு...
-
ஒரு சமயம் 1978 ஆம் வருடம் இயக்குனர் ஐ.வி.சசி இயக்கத்தில் உருவான ஒரேவானம் ஒரே பூமி படப்பிடிப்பு ஜப்பான் நாட்டில் நடைபெற அங்கு ஒரு பாடல் காட்சி எடுக்கும் போது இடைவேளையில் நடிகர் ஜெய்சங்கர், மற்றும் கே.ஆர். விஜயா ஓய்வாக அமர்ந்து கொண்டு இருக்க.
பக்கத்தில் இருந்து ஒரு ஜப்பானியர் தலைமையில் ஒரு 6 பேர் கொண்ட குழுவினர் வந்து இருவருக்கும் வணக்கம் சொல்லி நீங்கள் இந்தியாவில் தமிழக நடிகர்களா என்று கேட்க.
ஜெய்சங்கர் ஆமாம் சொல்லுங்கள் என்ன விஷயம் என்று கேட்க அவர் நாங்கள் சீன ஸ்டண்ட் நடிகர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டு...
எப்படி இருக்கிறார் உங்கள் எம்ஜிஆர் என்று கேட்க ஜெய்யும் கே.ஆர்.விஜயாவும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொள்ள.
அந்த ஜப்பானியர் அவர் உங்கள் மாகாண முதல்வர் ஆகிவிட்டாராமே... நல்ல செயல் உங்கள் மக்களுக்கு நன்றி சொல்லுங்கள் நாங்கள் சொன்னதாக என்று சொல்ல.
அதுசரி உங்களுக்கு இவை எல்லாம் எப்படி தெரியும்...அதற்கு அவர் இதே இடத்துக்கு அருகில் இருந்த எக்ஸ்போ அரங்கில் அன்று ஒரு சண்டை காட்சியில் எங்கள் குழுவினர் ஒரு ஹெலிகாப்டரில் தொங்கி கொண்டு சண்டை போடும் காட்சிகள் எடுக்க பட்டு கொண்டு இருந்த போது அதில் மேலே தொங்கி கொண்டு நடித்தவர் பேலன்ஸ் தவறி...
500 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து மண்டை உடைந்து அங்கேயே துடிதுடித்து இறந்து போனார்...அங்கே முழுவதும் ஒரே கூச்சல் அலறல்....
பக்கத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்து கொண்டு இருந்த உங்கள் எம்ஜிஆர் உடனே தன் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு ஓடி வந்து தன் மேக்கப் உடன் கீழே இறந்து கிடந்த அந்த ஸ்டண்ட் நடிகரை தூக்கி உயிர் பிழைக்க முயற்சி செய்தார்.
அந்த நடிகரின் உடல் அருகே சென்ற 7 பேரில் அவர் ஒருவர்...அவரை அறியாமல் அவர் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்ததை நாங்கள் பார்த்தோம்.
அந்த நடிகரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் வரை வந்து மலர் சூடி மரியாதை செய்தார் அவர்...எங்கள் பட நிறுவனம் கிட்டே கூட வரவில்லை..அவர்களை பொறுத்த வரை அது ஒரு விபத்து..
ஆனால் உங்கள் எம்ஜிஆர் அவர்களின் மனிதாபிமானம் எங்கள் நெஞ்சை பிழிந்தது... எங்கோ பிறந்த ஒரு பெரிய நடிகர் எங்கள் நாட்டு துணை நடிகருக்கு வருந்தியது இந்த உலகில் வேறு எங்கு நடக்கும்.
அன்று முதல் அவரை பற்றிய செய்திகளை நான் சேகரித்து வைத்து உள்ளேன்...அவரது அந்த உலகம் சுற்றும் வாலிபன் படம் பெரு வெற்றி பெற நாங்கள் வேண்டாத நாட்கள் இல்லை....எங்கள் குழு உங்கள் முதல்வருக்கு வாழ்த்துக்கள் சொன்னதை மறக்காமல் அவரிடம் சொல்லுங்கள் என்று சொல்லி கண்கள் பனிக்க விடை பெற.
உறைந்து போனார்கள்..நடிகர் ஜெய்யும் , நடிகை கே.ஆர்.விஜயாவும் மற்றும் அந்த பட குழுவினரும்..
அவர்கள் மட்டுமா எங்கு சென்றாலும் தன் தனி முத்திரை பதித்து மக்கள் நெஞ்சங்களில் குடி இருக்கும் உண்மையான உலகம் சுற்றிய வாலிபர் ரசிகர்களும் இந்த நிகழ்வை படித்து உறைந்து போவது திண்ணம்.
அந்த ஒரேவானம் ஒரே பூமி படம் 1979 இல் வெளிவந்தது....bpn
-
#அதிசயங்களின் #பிறப்பிடம்.........
திரைப்பட வரலாற்றில் ஒரு சில நிகழ்வுகள் அதிசயமாகத் தான் நிகழ்கின்றனவோ...!!!
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’.
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் முதன்முதலில் பகுதி கலரில் தயாரிக்கப்பட்ட படம் ‘நாடோடி மன்னன்.’
சரவணா ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘படகோட்டி.
விஜயா கம்பைன்ஸ் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை.’
ஏவி.எம் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘அன்பே வா’ படம்தான் அந்நிறுவனத்தின் முதல் வண்ணப்படம்.
ஜெமினி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் வண்ணப்படம் ‘ஒளிவிளக்கு’.
சத்யா மூவிஸ் பேனரில் தயாரான முதல் வண்ணப்படம் ‘ரிக்ஷாக்காரன்’.
தேவர் ஃபிலிம்ஸ் முதல் வண்ணப்படம் ‘நல்ல நேரம்’.
இதில் என்ன ஒரு விசேஷம் எனில், எல்லா படங்களிலும் #ஹீரோ #நம்ம #வாத்தியாரு #தாங்க.........bsm...
-
சூப்பர், இதில் RR பிக்சர்ஸ் "பறக்கும் பாவை", ஜெயந்தி பிலிம்ஸ் முதல் வண்ணப்படம் "மாட்டுக்கார வேலன்", மேகலா பிக்சர்ஸ் "எங்கள் தங்கம்", நியோமணிஜெ புரொடக்ஷன்ஸ் "நீரும் நெருப்பும்", வள்ளி பிலிம்ஸ் "சங்கே முழங்கு", காமாட்சி ஏஜென்ஸிஸ் "நான் ஏன் பிறந்தேன்", உதயம் பிலிம்ஸ் "இதய வீணை", வசந்த் Creations "பட்டிக்காட்டு பொன்னையா", அமல்ராஜ் பிக்சர்ஸ் "நேற்று இன்று நாளை", கஜேந்திரா பிலிம்ஸ் " நாளை நமதே", ஒரியண்டல் பிக்சர்ஸ் "நினைத்ததை முடிப்பவன்", உமையம்பிக்கை பிலிம்ஸ் "நீதிக்கு தலை வணங்கு", சுப்புவின் "இன்று போல் என்றும் வாழ்க", முத்துவின் "மீனவ நண்பன்", லிஸ்ட்டில் இணைத்து கொள்ள வேண்டும்............Rmh
-
1977 ஜூன் 30 #மக்கள்திலகம் முதன் முதலாக தமிழகத்தின் 6-ஆவது முதல்வராக பதவியேற்ற நாள் இன்று..
பதவியேற்ற பின் முதன் முதலாக அலுவலகம் செல்கிறார். அங்கு அரசு உயர் அலுவலர்களின் ஆலோசனை கூட்டதிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை பத்து மணி, கோட், சூட் சகிதமாய் அரசு உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள் அலோசனை அரங்கத்துக்குள் குழுமியிருந்தனர்.
சிறிது நேரத்தில் tmx 4777 பதிவு எண் கொண்ட அவரின் பச்சை நிற அம்பாசடர் கார் விரென்று அங்கு நுழைகிறது.
காலத்தை வென்ற காவிய நாயகன் கார் கதவை திறந்து முதன் முறையாக அலுவல வாசலில் கால் பதிக்கிறார்.
காத்திருந்த காவல் உயர் அலுவலர்கள் விரைப்புடன் சல்யூட் வைக்க... அரசு உயர் அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்க..
பாதுகாவலர்கள் புடைசூழ அலுவலகத்திற்குள் விடுவிடு என ஆலோசனை அரங்கத்திற்குள் நுழைகிறார்.
"ஆட்சியை மக்கள் என்னிடம் நம்பி ஒப்படைத்து இருக்கிறார்கள். உடனடியாக அவர்களுக்கு செய்ய வேண்டிய நல்ல திட்டங்களை சொல்லுங்கள். ஆக வேண்டியதை நான் பார்த்து கொள்கிறேன்"
-என்று மாவட்ட ஆட்சியர்களிடமும், உயர் அலுவலர்களிடமும் , ஆலோசனை கேட்கிறார்.
அப்பொழுது அந்த நேரத்தில், அந்த அந்த அரங்கு ஓரத்தில் வண்ணம் பூசிக் கொண்டிருந்த ஒரு இளைஞர், எவரையும் அனுமதிக்காத அந்த கூட்ட வளாகத்துக்குள் தடையை மீறி நுழைந்து விடுகிறார்.
காவலர்களின் கட்டுப்பாட்டை மீறினாலும் அந்த மக்கள் தலைவர், அந்த மனிதரை அருகில் அழைத்து, வந்த நோக்கத்தை சொல்ல சொல்கிறார்..
"எனக்கென்று எதுவும் கேட்க வரவில்லை. தலைவா! கிராமங்களில் இன்னமும் பாமர மக்கள் மக்கி போன சோளக் கூழைத்தான் சாப்பிட்டு வருகிறார்கள்.
நெல்லுச்சோறு என்பது மாசத்துல ஒருநாள் அல்லது வாரத்துல ஒருநாள், இல்லாட்டி நல்ல நாள் பெரிய நாளைக்குத்தான் நெல்லு சோற்றை பார்க்க முடியுது.
இது நமக்கு ஆண்டவன் விதித்த விதி என்றே மக்கள் நம்பி கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு வறுமையை பழகிக்கொண்டு, சகித்துவாழ முன்பிருந்த ஆட்சியாளர்களால் பழக்கப்படுத்த விடப்பட்டிருக்கிறார்கள்.
அதை மட்டும் போக்கி காட்டுங்கள். உங்கள் ஆட்சியை பொற்கால ஆட்சி என்று போற்றப்படும்." என்கிறார்.
கூறியவன் ஒரு எளியவன்தானே என்று நினைக்காமல், அந்த குடிமகனின் கோரிக்கையை குறித்து கொள்ளுங்கள் என்று அங்கிருந்த அலுவலகளிடம் ஆணையிடுகிறார்.
கொடுமையிலும் கொடுமையான பசியை போக்க வேண்டும். உங்களுக்கு தெரியமோ? தெரியாதோ? ஆனால், எனக்கு தெரியும் பசியின் கொடுமை.
என் ஆட்சியில் 'பாலாறு தேனாறு ஓடும்' என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால் மக்கள் பசிக் கொடுமையை அனுபவிக்க ஒருக்காலும் விட மாட்டேன்.
என் மக்கள், தினமும் அரிசி சோறு சாப்பிடுவதற்கான திட்டத்தை சொல்லுங்கள். அதற்கு ஆகும் செலவை சொல்லுங்கள். நிதி ஒதுக்கி தருகிறேன்.
என் மக்கள் பசி போக்க அரிசி எங்கிருந்து கிடைத்தாலும் எப்பாடு பட்டாவது,வாங்கி வருகிறேன்.
உங்களுக்கு அரைமணி நேரம் அவகாசம் தருகிறேன். திட்டமிட்டு சொல்லுங்கள்"
-என்று மேசை மீது கிடந்த நாளிதழை எடுத்து புரட்ட ஆரம்பிக்கிறார் புரட்சித்தலைவர்.
அரைமணி நேரத்திற்கு பிறகு 'அந்த திட்டத்திற்கு ஆகும் செலவு' என்று ஒரு தொகையை சொல்கின்றார்கள் அலுவலர்கள்.
உடனே புரட்சித்தலைவர் அவர்கள் "இரண்டு மடங்காக்கி தருகிறேன்" என்று அந்த இடத்திலேயே ஆணையிட்டார்..
ஒரு எளிய குடிமகன் வைத்த கோரிக்கையை வேதமாக எடுத்து செயல்பட்டிருக்கிறார் மக்கள் திலகம்!
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் கிராமங்களில் இதுவரை சோளக்கூழை சாப்பிட்டு வந்த மக்களுக்கு மூன்று வேலையும் அரிசி சோறு சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.........gdr
-
புரட்சித்தலைவர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்இனிய_சனிக்கிழமை #காலை_வணக்கம்..
புரட்சி தலைவர் எம்ஜியார் நடித்த திரைப்படங்கள் பற்றிய தகவல்களை
அவர் நடித்த ஓவ்வொரு திரைப்படங்களையும் வரிசையாக பதிவிட்டு வரும் எனது இந்த புதிய தொடர் பதிவில் இன்று அவரது 26 வது படமான #குமாரி பற்றிய தகவல்கள் பற்றி காண்போம். ..
இயக்கியவர் ஆர்.பத்மநாபன்
தயாரித்தவர் ஆர்.பத்மநாபன்
கதை சா.கிருஷ்ணமூர்த்தி
இசை கே.வி.மகாதேவன்
ஒளிப்பதிவு டி.மார்கோனி
எடிட்டிங் வி.பி.நடராஜா முதலியார்
வெளிவந்த தேதி
11 ஏப்ரல் 1952
இளவரசி குமாரி, குதிரை சவாரி செய்வது பிடிக்கும் அவ்வாறு ஒருநாள் குதிரையேற்றம் செய்ய குதிரை வண்டியில் பயணம் செய்யும் போது, குதிரைகள் காட்டுக்குள் ஓடும்போது விபத்தை சந்திக்க நேர்கிறது.. விஜயன் என்ற மனிதனால் விபத்தில் இருந்து மீட்கப்படுகிறாள். இருவரும் காதலிக்கிறார்கள் மற்றும் இளவரசி அவருக்கு ஒரு பரிசு கொடுத்து, அவளுடைய அரண்மனைக்கு அழைக்கிறார்... ராஜா இளவரசியை திருமணம் செய்து கொள்ள விரும்பும்போது, ராணி சந்திரவலி தனது பயனற்ற சகோதரர் சஹாரானை திருமணம் செய்து கொள்ள சொல்லி விரும்பும்போது பிரச்சினைகள் எழுகின்றன. பல பரபரப்பான சம்பவங்களுக்குப் பிறகு, காதலர்கள் ஒன்றுபட்டு மகிழ்ச்சியுடன இணைவதே கதை..
விஜயனாக புரட்சி தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன்
மந்தாராவாக சேருகலத்தூர் சாமா
பிரதாப்பாக விஜயகுமார்
வல்லபனாக சோமு ஸ்டண்ட்
சஹாரனாக டி.எஸ். துரைராஜ்
புலிமூட்டை புலிமூட்டை ராமசாமி
விஹாரனாக சயிராம்
அமைச்சராக கோட்டாபுலி ஜெயரம்
அமைச்சராக ராஜமணி
அமைச்சராக ராமராஜ்
மணி சிங்காக கே.கே.மணி
சந்திரவலியாக மாதுரி தேவி
குமரியாக ஸ்ரீ ரஞ்சனி (ஜூனியர்)
ஜீலாவாக காந்தா சோஹன்லால்
கே.எஸ்.அங்கமுத்து
தாயாக
சந்திரிகாவாக சி. ராஜகாந்தம்
மங்களாவாக பத்மாவதி அம்மாள்
இப்படத்தை ஆர்.பத்மநாபன் தயாரித்து இயக்கியுள்ளார். கு. சா. கிருஷ்ணமூர்த்தி மற்றும் எஸ்.எம்.சந்தனம் ஆகியோர் கதை மற்றும் வசனங்களை எழுதினர். ஒளிப்பதிவை டி.மர்கோனி செய்ததும், வி. பி. நடராஜா முதலியார் எடிட்டிங் கையாண்டார். நடனத்தை சோஹன்லால் செய்தார்,
ஸ்டில் புகைப்படம் எடுத்தல்
ஆர்.என். நாகராஜ ராவ்.
இந்த படம் தெலுங்கிலும் ராஜேஸ்வரி என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டது.
கே. வி. மகாதேவன் இசையமைத்துள்ளார், பாடல் வரிகள்
எம். பி. சிவம், டி.கே.சுந்தர வதியார் மற்றும் கு. சா. கிருஷ்ணமூர்த்தி.
பின்னணி பாடகர்கள்
கே.வி.மகாதேவன், ஏ.எம். ராஜா, ஜிக்கி, பி.லீலா, ஏ.பி.கோமலா மற்றும்
என்.எல்.கணசரஸ்வதி.
சோஹன்லால் நடனம் அமைத்தார்
ஜிப்சி நடனங்களும் இருந்தன.
ஜிக்கி ஆஃப்-ஸ்கிரீன் வழங்கிய ஒரு பாடல், ‘லாலாலி லாலீ… .. பிரபலமானது.
சுவாரஸ்யமான திரை கதை, புத்திசாலித்தனமான இசை மற்றும் மார்கோனியின் சிறந்த ஒளிப்பதிவு மற்றும் எம்.ஜி.ஆர், செருகலாதர் சாமா மற்றும் பிறரின் அற்புதமான நடிப்பு இருந்தபோதிலும், குமாரி சிறப்பாக செயல்படவில்லை...
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு...
-
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்
*****************************
எம் ஜி ஆர் எடுத்தவுடன்கதாநாயகனாக உயரவில்லை
எம் ஜி. ஆர் !
எத்தனையோ
அவமரியாதைகளையும்,
அவமானங்களையும்
தாண்டியே அவரது
வெற்றிப் பயணம்
ஆரம்பமானது....
அன்றும், இன்றும்
கொண்டாடப்படும்
அவரின் ஆரம்ப கால
திரை வாழ்வினைப் பற்றிப்
பார்ப்போமா!......
********************************
எம்.ஜி.ஆர், தன் கையில் காசு புழக்கத்தில் இல்லாத காலத்திலிருந்தே, கண் உறக்கமின்றி கடமையை கண்ணாகக் கொண்டு தன்னை உரமாக்கி உயர்ந்தவர்.
அடைப்பக்காரனாய், அடியாளாய், வெஞ்சாமரம் வீசும் சேவகனாய், கூட்டத்தில் காணாமல் போன குழந்தையாய் மெல்ல சினிமாவில் தலைகாட்டி வந்த நேரம்
நாராயணன் கம்பெனி என்ற நிறுவனம் தான் எடுக்கவிருந்த 'சாயா ' என்ற படத்தில், அவரை ராணா வீர்சிங் என்ற கதாநாயகன் கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தது. திரையுலகில் விரக்தியில் இருந்த எம்.ஜி.ஆருக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
கதாநாயகி அந்நாளில் பிரபல நடிகையான டி.வி.குமுதினி. படத்தின் ஒரு காட்சியில் கதாநாயகன் எதிரிகளுடன் போரிட்டு காயங்களுடன் தப்பி வந்து நந்தவனத்தில் தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருக்கும் கதாநாயகியின் மடியில் மயங்கிவிழுவார்.
கதாநாயகி அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து தெளியச்செய்வார். இக்காட்சி எடுக்கவிருந்த அன்றைய தினம் எம்.ஜி.ஆர் ஏதோ மனக்குழப்பத்தில் இருந்ததால் சரியாக நடிக்கமுடியவில்லை. பல டேக்குகள் வீணாகின.
அப்போது படப்பிடிப்பை பார்த்துக்கொண்டிருந்த கதாநாயகி குமுதினியின் கணவர் கோபமடைந்து,
'ஒரு புதுமுக நடிகரை நீங்கள் கதாநாயகனாக போட்டதோடு எத்தனை முறைதான் என் மனைவியின் மடியில் அவர் விழுவதுபோல் காட்சி எடுப்பீர்கள். என் மனைவியை அவமானப்படுத்துகிறீர்களா” என்று சத்தம் போட,
எம்.ஜி.ஆர் பெருத்த அவமானமும் வேதனையும் அடைந்தார்.
இதை தன்மானப் பிரச்சினையாக எடுத்துக் கொண்ட தயாரிப்பாளர்,
எம்.ஜிஆரைத் தட்டிக் கொடுத்து, “கவலைப்படாதே! இவர்களே உன் வீடு தேடி வரும் காலம் வரும்” என்று கூறி எடுத்த பிலிம் சுருளையும் அதே இடத்தில் தீயிட்டுக் கொளுத்தினார்.
இதே குமுதினி, எம்.ஜி.ஆரின் வாசல் தேடி வந்து, ஏலம் போக இருந்த தன் வீட்டைப் பெற்ற கதையை அந்நாட்களில் யாவரும் அறிவர்.
அதேபோல், அமெரிக்க இயக்குனர் #எல்லீஸ் #டங்கன், தான் இயக்கிய சில படங்களில் துணை நடிகராக வந்து போன எம்.ஜி.ஆரை, ஜூபிடர் பிக்சர்ஸ் சோமு ”மந்திரி குமாரி” படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தது டங்கனுக்கு கௌரவ குறைச்சலாகப் பட்டது.
எனவே, படப்பிடிப்பை வேண்டா வெறுப்பாகவே தொடங்கி, எம்.ஜி.ஆரை எந்த அளவுக்கு #புண்படுத்த முடியுமோ அந்த அளவுக்குப் புண்படுத்தி நடிக்கச் செய்தார்.
அன்று, சேர்வராயன்மலை, சுடு பாறையில் சூட்டிங், எ.ஏஸ், நடராஜனுடன் எம்.ஜி.ஆர் கத்திச் சண்டை போடும் காட்சி. எம்.ஜி.ஆர் உடல் பளிச்சென்று தெரியும் அளவுக்கு மெல்லிய #டாக்கா #மஸ்லீன் துணியில் சட்டை அணிந்திருந்தார்.
அந்த அனல் கொதிக்கும் சுடு பாறையில் டியூப்லைட் வெளிச்சத்தில் எம்.ஜி.ஆரை மல்லாக்கப் படுக்கச் சொல்லி, கேடயத்தைக் கொண்டு எஸ்.ஏ.நடராஜனின் தாக்குதலை தடுக்கும் படி சொல்கிறார் டங்கன்.
எம்.ஜி.ஆர் உடல் புண்ணாவதைக் கூட பொருட்படுத்தாமல், டங்கன் சொன்னபடி செய்கிறார். காட்சி சரியாக வரவில்லை என்று சொல்லியும், மானிட்டர் என்று சொல்லியும் அந்தச் சுடுபாறையில் பொன்மனச் செம்மலை புரட்டி எடுக்கிறார்.
வேண்டுமென்றே எம்.ஜி.ஆரை வதைக்கிற செயலை யூனிட்டே வேதனையுடன் பார்க்கிறது, முடிந்த வரை அந்தச் சுடுபாறையில் எம்.ஜி.ஆரை வாட்டியெடுத்த பிறகு, டங்கன் படப்பிடிப்பை முடிக்கிறார்.
டங்கன் காட்சி முடிந்தவுடன் எம்.ஜி.ஆர் எழுந்திருக்க முயற்சி செய்கிறார். காரணம் உடலோடு ஒட்டிக் கொண்ட அந்த மஸ்லீன் துணி இளகி சுடு பாறையில் ஒட்டிக் கொள்கிறது.
உடனே, பதறியடித்துக் கொண்டு ஜூபிடர் சோமு அவர்கள் “தேங்காய் எண்ணெய் தடவி பாறையிலிருந்து பிரித்து எடுக்கிறார்.
எம்.ஜி.ஆரை தட்டிக் கொடுத்து, இன்று காயப்படுத்தியவர்களெல்லாம், உனக்கு கைகட்டி நிற்கிற காலம் வெகு விரைவில் வரும்... வரும் என்று ஆறுதல் சொல்கிறார்.
1951-இல் ஜூபிடர் சோமு சொன்ன வார்த்தகள் 1981-இல் பலித்து விடுகிறது.
அன்று எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக கோட்டை அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறார். உள்ளே உதவியாளர் வருகிறார்.
உங்களைக் காண டைரக்டர் எல்லீஸ் டங்கன் வந்திருக்கிறார் என்ற செய்தியை சொல்கிறார்.
எம்.ஜி.ஆரோ... வந்திருப்பவர் முன்னொரு நாளில் தன்னை வதைத்தவர் என்பதையே மறந்துவிட்டு வானளாவிய புகழுடன் வாழ்வாங்கு வாழ்ந்த மேதை, நம் வாசல் தேடி வந்துவிட்டாரே, உள்ளே வரச் சொல்லுங்கள் என உத்திரவிட, “கலங்கிய கண்களுடன், கசங்கிய கோட்டுடன் வந்த டங்கனை அறையை விட்டு வெளியே வந்து, டங்கனை கட்டித் தழுவி உள்ளே அழைத்துச் செல்கிறார்.
“என்ன வேண்டும்? என்னால் உங்களுக்கு ஏதாவது ஆக வேண்டுமா” என்ற எம்.ஜி.ஆரின் வார்த்தைகள் பழுக்க காய்ச்சிய கம்பி போல் நுழைகிறது.
“தங்களுக்கு நான் செய்த கொடுமைகளை எல்லாம் மறந்து, எனக்கு நீங்கள் இவ்வளவு உபச்சாரம் செய்வது எனக்கு வெட்கமாக இருக்கிறது இருந்தும், வேறு வழியில்லாமல் தான், தங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன்’ என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.
“இப்பொழுது நான் உங்களுக்கு எப்ப செய்ய வேண்டும்? அதை மட்டும் சொல்லுங்கள் “ என்று எம்.ஜி.ஆர் கேட்கிறார்.
“லண்டனில் வசதியாய் வாழ்ந்த நான், இப்பொழுது வறுமை நிலைக்கு வந்துவிட்டேன், எஞ்சியிருப்பது ஊட்டியிலிருக்கும் ஒரு எஸ்டேட் தான், அதை விற்கலாம் என்றால், அதில் சில சட்டச் சிக்கல் இருக்கிறது’ என்றார்.
“அரை மணி நேரம் பொறுத்திருங்கள் ஆவன செய்கிறேன்” என்று எம்.ஜி.ஆர் அவரை அருகில் இருந்த அறையில் அமர வைக்கிறார். அரை மணி நேரம் கழித்து டங்கன் அழைத்து வரப்படுகிறார்.
“இந்த சூட்கேஸில் உங்களுக்கு தேவையான பணம் இருக்கிரது. அதோடு உங்கள் எஸ்டேட்டையும் விற்பதற்கு ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்லி வாசல் வரை வந்து வழி அனுப்புகிறார்.
நாம் செய்த தீமைகளுக்கு எம்.ஜி.ஆர், நம்மோடு பேசுவாரா? மதிப்பாரா? என்றெல்லாம் பயந்து வந்த டங்கனுக்கு எம்.ஜி.ஆர் வாரிக்கொடுத்து, இன்னா செய்தவருக்கு இனியவை செய்து, தம்மை வெட்கப்பட வைத்துவிட்டாரே என்று எம்.ஜி.ஆர் அறையை திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார்” டங்கன்.........Rosaiya
-
"நீதிக்கு தலை வணங்கு" புரட்சி தலைவரின் 128 வது படம். தவறு செய்தவன் யாராயினும் சட்டம் தண்டிக்க தவறினாலும் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்ற நியாயத்தை உணர்த்தும் சிறந்த படம். முதலில் "யாரையும் அழ வைக்காதே" என்ற வித்தியாசமான டைட்டிலை வைத்திருக்கிறார்கள். பின் தலைப்பில் அமங்கலம் வேண்டாம் என்று கருதி "நீதிக்கு தலை வணங்கு" என்று மக்களுக்கு
தர்மநீதியை அறிவுருத்தி நல்ல டைட்டிலாக மாற்றினார்கள்.
சுறுசுறுப்பாக வேகமாக செயல்படும் கல்லூரி மாணவனாக தோன்றி. ஆரம்பக்காட்சிகளில் படத்தின் விறுவிறுப்பை கூட்டுவார். பணக்கார கல்லூரி மாணவன் வேடம் தலைவருக்கு கனகச்சிதமாக பொருந்தியிருந்நது. பாடல்களும் மிக அருமையாக அமைந்தது. ஜாதி பிரிவினை வேண்டாம் என்று காய்கறி மூலமாக பாடியிருப்பது நல்லதொரு விளக்கம். 'இந்த பச்சைக்கிளிக்கொரு' பாடல் வரலட்சுமியின் குரலில் 'வெள்ளிமலை மன்னவா' பாடலுக்கு பிறகு எவர்கிரீன் பாடலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 'கனவுகளே' பாடல் தலைவரின் இளமைக்கு அதிஅற்புதமாக துள்ளல் நடையுடன் அமைந்த பாடல். அந்தப் பாடலுக்காகவே பலமுறை ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தார்கள்.
'எத்தனை மனிதர்கள் உலகத்திலே' பாடல் சோகமாக இருந்தாலும் கருத்துசெறிவுடன் அனைவரையும் சிந்திக்க வைத்தது. ஆனால் க்ளைமாக்ஸில் எம்ஜிஆர் ரசிகர்கள் அவர் தண்டனை பெறும் காட்சியை அவ்வளவாக ரசிக்கவில்லை என்பதே உண்மை. ரசிகர்களுக்கு சோகக் காட்சிகள் அவ்வளவாக பிடிக்காது. இந்தப்படத்தில் கொஞ்சம் அதிகமான சோகக் காட்சிகள் நிரம்பி இருந்ததால் திரும்ப திரும்ப பார்ப்பவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்தாலும் படம் வெற்றிகரமாக ஓடியது. பொதுமக்களின் பார்வைக்கு படம் சிறந்து விளங்கியது குறிப்பிடத்தக்கது.
1976 ன் பிளாக்பஸ்டர் படம்தான் "நீதிக்கு தலை வணங்கு." அய்யனுக்கு 1972 க்கு பின்னர் எந்த படமும் கைகொடுக்கவில்லை. 1976 ல் 6 படங்கள் வந்தும் அனைத்தும் குப்பைக்குள் போய் விட்டன. "உத்தமனை" மட்டும் வடக்கயிறு கட்டி மதுரையில் மட்டும் ஆஸ்தான தியேட்டரான நியூசினிமாவில் 100 நாட்கள் ஓட்டி களைத்தனர். ஆனால் புரட்சி தலைவருக்கோ ஆண்டுக்கு ஆண்டு பிளாக் பஸ்டர் படங்களாக
வந்து கொண்டிருந்தன. 1973 ல் "உலகம் சுற்றும் வாலிபன்",1974 ல்
"உரிமைக்குரல்" 1975 ல் "இதயக்கனி",1976 ல் "நீதிக்கு தலை வணங்கு" 1977ல் "மீனவ நண்பன்" என்று ஜெயக்கொடி இறுதிவரை பறந்து கொண்டே இருந்தது.
சென்னையில் 5 திரையரங்கில் வெளியாகி மொத்தம் 369 நாட்களில் ரூ13,10,697.30 வசூலாக பெற்று அரிய சாதனை படைத்தது. சென்னையில் நான்கே வாரத்தில் ரூ 651325.50 சாதனை வசூலாக பெற்று தமிழ் திரையுலகத்தை கலக்கியது. மதுரை சென்ட்ரலில் 100 நாட்கள் ஓடாமலே 86 நாட்களில் ரூ 409751.10 வசூலாக பெற்றது. மூக்கையனின் "பட்டிக்காடா பட்டணமா" 84 நாட்களில் அதே சென்ட்ரலில் பெற்ற வசூல் ரூ 371310.25 . ஆனால் படத்தை 182 நாட்கள் ஓட்டி விட்டனர்.
திருச்சியில் "நீதிக்கு தலை வணங்கு" 61 நாட்களில் பெற்ற வசூலை அகில இந்தியாவிலும் அசுர வெற்றி பெற்ற
"ஷோலே" ஹிந்தி திரைப்படத்தால் 70 நாட்களில் கூட நெருங்க முடியாமல் அடிபணிந்த கதை ஆச்சர்யத்தை தருகிறது. திருச்சி தஞ்சை மாவட்டங்களில் அய்யனின் 175 படமான "அவன்தான் மனிதனை" அலறவிட்ட கதை
மிகவும் அற்புதமானது.
அய்யன் படங்கள் 100 நாட்கள் ஓட்டியும் 2 லட்சம் கூட பெறாத படங்கள் அநேகமிருக்க "நீதிக்கு தலை வணங்கு" வின் சாதனை மகத்தானது. தமிழ்நாட்டில் சுமார் 30 அரங்குகளில் 50 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. ஆண்டுக்கு ஆண்டு சாதனையை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வந்தவர் புரட்சித் தலைவர். சென்னை தேவிகலா மகாராணி, சேலம் சங்கம், திருச்சி ஜீபிடர் என்று நான்கு திரையரங்குகளில் 100 நாட்களை தாண்டியது. மேலும் பல ஊர்களில் வியத்தகு வசூலை பெற்று முன்னணி பெற்றது தனி சிறப்பாகும்..........ksr.........
-
"நான் பார்த்தா பைத்தியக்காரன்", பாட்டு கருத்துள்ள பாட்டு. நடிகர் கணேசனின் மூத்த பையன் ராம்குமார் பிஜேபில சேந்துட்டார். கணேசன் ரசிகர்களிடம் பலரிடம் அதுக்கு எதிர்ப்பு. இதுல உத்து பார்த்தா எதிர்ப்பு தெரிவிக்கிறவங்க பிஜேபிய பிடிக்காத வேற மதத்தை சேர்ந்தவங்களா இருப்பாங்க. இல்ல திமுககாரனா இருப்பான். ராமக்குமார ஆதரிக்கிறவங்க திருட்டு திராவிடம்னு சொல்ற கோஸ்டியா இருப்பாங்க. கணேசன் இருந்த காலத்திலேயே கணேசனுக்கே ஓட்டுபோடாம திமுகவுக்கு ஓட்டுபோட்ட ரசிகர்கள் நிறைய. கேட்டா கட்சி வேற. அரசியல் வேறன்னு அறிவு விளக்கம் சொல்லி கணேசனை காலி பண்ணாங்க. ஏற்கனவே அவங்களுக்குள்ளே ஒத்துமை இல்ல. இப்ப இன்னும் சிதற்றாங்க. சாதியாலயும் மதத்தாலயும் பிரிஞ்சுருக்காங்க. சரி. அதெல்லாம் இங்க எதுக்குய்யா சொல்றன்னு நீங்க கேக்கலாம். அதுக்குதான் இந்த தலைவர் பாட்டு. "பாதுகாவல் போர்வையிலெ ஜாதி இன பேதம் சொல்லி ஊர் பகையை வளர்ப்பவன் நீ, ஊரில் உள்ளவரை மோதவிட்டு குள்ள நரி போலிருந்து ரத்தமெல்லாம் குடிப்பவன் நீ"... என்ன கருத்து பாருங்க. அன்னிக்கி தீயசக்திக்கு எதிரா தலைவன் பாடின பாட்டு இன்னிக்கும் பொருத்தமா இருக்குய்யா. இதெல்லாம் கேட்டு வளந்ததாலதான் நாம்ப ஒண்ணா ஒத்துமையா இருக்கோம். உலக்த்துல எம்ஜிஆர் ரசிகர் யாரா இருந்தாலும் சரி. நம்ம மதம் எம்ஜிஆர் மதம். நம்ம ஜாதி எம்ஜிஆர் ஜாதி..........rrn...
-
ராமபுரம் தோட்டம் இல்லத்தில் எந்த நேரமும் அணையா விளக்கு போல் அடுப்பு எரியும் எப்போது யார் சென்றாலும் உணவு உண்ணாமல் திரும்புவதில்லை ....
யாராவது வரும் போது சாப்பிட்டு வந்திருந்தாலும் பால் பாயசம் அல்லது பழம் ஜூஸ் எதாவது ஒன்று சாப்பிட்டுத்தான் வர வேண்டும் ..இதுதான் வாத்தியார் கொள்கை ... லட்சியம்..ஆகும் ...#புரட்சித்தலைவர் காண வந்த #N.T.ராமராவ் அவர்கள் அங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களுடன் தானும் அமர்ந்து சாப்பிடுவதாக கூறினார் . அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார் .புரட்சித்தலைவரேஅவர்க்கு உணவு பறிமாறினார். அறுச்சுவை உணவு என்றால் என்ன என்று புரட்சித்தலைவர் வீட்டில் சாப்பிட்டாத்தான் தெரியும் ...வாத்தியார் வீட்டில் சாப்பிட்டவர்கள், வேறு இடத்தில் சாப்பிட்டா அந்த உணவு நன்றாக இல்லை என்றுத்தான் நினைப்பார்கள்.
அதனால்தான் கர்ம வீரர் காமராஜர் அவர்கள் எம். ஜி. ஆர் எத்தனையோ முறை சாப்பிட கூப்பிட்டும் போகவில்லை ..அதற்கு காரணம் ஒரு முறை எம். ஜி. ஆர் வீட்டில் சாப்பிட்டா மீண்டும் மீண்டும் அவர் வீட்டு சாப்பாடு சாப்பிட தோண்றும். என்பதால் நாவின் சுவை அடக்கி வைத்திருந்தார் ..இப்போது அதே நிலைத்தான் புரட்சித்தலைவர் விருந்து உண்டவுடன். விருந்தோம்பல் என்றால் என்ன என்று..
எம். ஜி. ஆரிடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்றார் .N. T. ராமராவ் அவர்கள் ...
புரட்சித்தலைவர் ஆசிர்வாதத்துடன் ஆந்திராவின் முதல்வர் ஆனார் ...N. T. ராமராவ் அவர்கள்.
ஆந்திராவில் முதல் முதலாக சட்டசபையில் அறிவித்த திட்டங்களில் அறிவித்த ஒர் அறிவிப்பு இனி திருப்பதி திருமலையில் தினமும் அன்னதானம் வழங்கப்படும்..என்றார் ...இது எப்படி சாத்தியம் ஆகும் .என்று கேள்வி எமுப்பினார்கள் எதிர் கட்சி காரர்கள் ..அதற்கு N. T. ராமராவ் தந்த விளக்கம் ..
தமிழ்நாடு முதல்வர் திரு..எம் ஜி. ராமச்சந்திரன் அவர்கள் வீட்டில் எந்த நேரம் சென்றாலும் உணவு கிடைக்கும். எப்பொழுதும் அவர்வீட்டு அடுப்பு எரிந்துக்கொண்டே இருக்கும். தனி ஒரு மனிதர் வீட்டில் இது சாத்தியம் ஆகும் போது...
ஊர் உலகத்துக்கே படி அளக்கர திருப்பதி திருமலை ஏமுமலையான் ஆலயத்தில் ஏன் சாத்தியம் ஆகாது. என்று விளக்கம் தந்து திட்டத்தை நிறைவேற்றினார்...
பின் குறிப்பு .....N. T. ராமராவ் அவர்கள் முதல்வர் ஆவதற்கு முன் திருப்பதி திருமலையில் தினமும் அன்னதானம் கிடையாது. விஷேச நாட்கள் திருவிழா நாட்கள் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட்து.. .மற்ற நாட்களில் பிரசாதம் வழங்கப்பட்டது..N. T. ராமராவ் அவர்கள் வந்த பிறகு தான் சாமி தரிசனம் பார்த்து விட்டு வருபவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் பிறகு வந்த சந்திர பாபு நாயுடு அவர்கள் திருப்பதி திருமலைக்கு வரும் அனைவருக்கும் எப்போதும் உணவு.உண்டு திட்டம் நிறைவேற்றினார் .....
ஆக திருப்பதி திருமலையில் தினமும் அன்னதானம் உருவானதுக்கு காரணம்...
நமது தெய்வம் #பொன்மனச்செம்மல்.........Png
-
எம் ஜி ஆர் , முகமது அலி மற்றும் மீன் குழம்பு
1980-ம் ஆண்டு !
அண்மையில் மறைந்த குத்துச் சண்டை வீரர் முகமது அலி., எம் ஜி ஆர் அழைப்பின் பேரில் சென்னைக்கு வந்திருந்தார்
ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் குத்துச் சண்டை போட்டி
20 ஆயிரம் பேர்களுக்கு மேல் மக்கள் கூட்டம் ! போட்டி நடந்துமுடிந்தது .
முகமது அலிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர் கேட்டார் :
“எங்கள் தமிழ் நாட்டுக்கு வந்திருக்கிறீர்கள்.ரொம்ப சந்தோஷம்... உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் ..
அதைத் தருவதில்தான் எங்களுக்கு முழுமையான சந்தோஷம்..”
ஒரு முடிவுக்கு வந்த முகமது அலி ஒரு முதல் அமைச்சரிடம் போய் இதை எப்படிக் கேட்பது என்று கொஞ்சம் தயங்க ...
“ பரவாயில்லை .. எதுவானாலும் தயங்காமல் கேளுங்க..” என்றாராம் எம்.ஜி.ஆர்.
முகமது அலி கேட்டு விட்டார் : “சென்னையில் மீன் உணவு ரொம்ப டேஸ்ட்டா இருக்கும் என்கிறார்களே... அது எங்கே கிடைக்கும்? "
சிரித்த எம்ஜிஆர் தகவல் அனுப்பினார் .
வஞ்சிரம் மீன் வறுவல், மீன் குழம்பு, வேகவைத்த முட்டை குழம்பு ,
இறால் ஃப்ரை , சிக்கன் வறுவல், வெள்ளை சாதம் , பாயாசம் .... எல்லாம் வந்து சேர்ந்தது...!
அத்தனை வகைகளையும் மொத்தமாக ஒரு பிடி பிடித்த முகமது அலியிடம் , எம்.ஜி.ஆர்.
“நன்றாக சாப்பிட்டீர்களா..? திருப்தியாக இருந்ததா..?”" என்று கேட்க ,
முகமது அலி முழு திருப்தியுடன் தலையாட்டியபடி சொன்னாராம் : “ஓ...ரொம்ப ரசித்து சாப்பிட்டேன்..எந்த ஹோட்டல் சாப்பாடு இது..?”
எம்ஜிஆர் ஒரு புன்னகையோடு “என்னைக் கவர்ந்த குத்துச் சண்டை வீரர் நீங்கள் ..உங்களுக்கு ஹோட்டல் சாப்பாடா..?”
முகமது அலி எதுவும் புரியாமல் எம்.ஜி.ஆரைப் பார்க்க,
தொடர்ந்த எம்ஜிஆர் : “எல்லாமே என் ராமாவரம் வீட்டில் வைத்து , என் மனைவி ஜானகியின் மேற்பார்வையில் ,
மணி என்பவர் உங்களுக்காகவே ஸ்பெஷலாகத் தயார் செய்தது..!”
நெகிழ்ந்து போய் எம்.ஜி.ஆரின் கைகளைப் பிடித்துக் கொண்ட முகமது அலி , : “ நான் இந்த உலகத்தில் எங்கே போனாலும் விதம் விதமான உணவைத் தர ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள் ..
அவை எல்லாமே சுவையானதுதான்...!
ஆனால் , நீங்கள் அளித்த உணவில் மட்டும் , சுவையை விட கூடுதலாக இருந்தது உங்கள் அன்புதான்..
இதை என்னால் மறக்கவே முடியாது .. ”
முகமது அலி இப்படிச் சொன்னதும் , எம்.ஜி.ஆரும் நெகிழ்ந்துதான் போனார்
பின் குறிப்பு : இருவரின் பிறந்த தேதியும் ஜனவரி 17.........Bpng
-
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் முதன்மைகள்:-
தமிழ் சினிமாவில் பல முதன்மைகளை, புதுமைகளை நிகழ்த்தியவை எம்ஜிஆர் படங்கள்.
* எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் ஆங்கிலத்தில் டைட்டில் கார்டு காட்டப்பபட்ட முதல் திரைப்படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்'.
*
* எம்.ஜி.ஆர். நடித்து தரக்குறைவான பத்திகைகளின் போக்குக்கு எதிர்த்து எடுக்கப்பட்டு வெளி வந்தப் படம் சரவணா பிலிம்ஸ் 'சந்திரோதயம்'. அன்றைய சூழலில் ஒரு முன்னணிப் பத்திரிகையை முற்றாக எதிர்த்து நடித்தார் எம்ஜிஆர்.
* எம்.ஜி.ஆர். நடித்து காளைமாட்டுடன் மோதும் (ஜல்லிக்கட்டு) காட்சியை முதன்முதலாக தமிழ் சினிமாவில் காட்டிய படம் 'தாய்க்குப்பின் தாரம்'.
* எம்.ஜி.ஆர். நடித்து தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெருமையை திரைப்படம் மூலம் உலகுக்கு தெரிவித்த படம் கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த 'மதுரை வீரன்'.
* எம்.ஜி.ஆர். நடித்து புலியுடன் மோதும் சண்டைக் காட்சியை முதன்முதலாக திரைப்படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி'.
* எம்.ஜி.ஆர். நடித்து சண்டைக் காட்சியின்போது 350 பவுண்ட் எடைக்கொண்ட சண்டை நடிகரை அலக்காக தூக்கி நிறுத்தி சண்டை காட்சியில் சாதனைப் புரிந்த படம் ஏவிஎம்மின் 'அன்பேவா'.
* எம்.ஜி.ஆர். நடித்து கிராமங்களில் நடக்கும் மாட்டு வண்டிபோட்டியை முதன் முதலில் திரைப்படத்தில் காட்டிய படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ தயாரித்த 'பெரிய இடத்துப் பெண்'.
* எம்.ஜி.ஆர். நடித்து முதன்முறையாக யோகா பயிற்சியை படத்தின் மூலம் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சி இடம்பெற்ற படம், தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'தலைவன்'.
* எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராக நடித்து உடல் வளர்ச்சிக்கு தேவையான அனுகு முறையை மாணவர்களுக்கு சொல்லித் தரும் காட்சியை முதன் முதலாக படமாக்கப்பப்பட்ட படம் 'ஆனந்தஜோதி', 'பணம் படைத்தவன்'.
எம்.ஜி.ஆர். நடித்து முதன்முதலாக கிராமத்து காட்சியும், நகரத்து காட்சியையும் இணைத்து கதை அமைத்து திரைப்படமாக வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் 'பெரிய இடத்துப் பெண்'.
எம்.ஜி.ஆர். நடித்து பேருந்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம் தேவர் பிலிம்ஸ் 'தொழிலாளி'.
எம்.ஜி.ஆர். நடித்து மீனவ மக்களின் போராட்ட வாழ்க்கையை முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்து வெற்றிப்பெற்ற படம் சரவணா பிலிம்ஸ் 'படகோட்டி'.
எம்.ஜி.ஆர். நடித்து ஓய்வில்லாத ஒரு பிரபலமான தொழிலதிபரின் காதல் கதையை முழுமையாக முதன்முறையாக படமாக்கப்பட்ட படம் ஏவிஎமின் 'அன்பே வா'.
எம்.ஜி.ஆர். நடித்து பம்பாய் நகரில் முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ராகவன் புரொடக்ஷன்ஸ் 'சபாஷ் மாப்பிள்ளே'.
எம்.ஜி.ஆர். நடித்து ரிக்ஷாவில் அமர்ந்தபடியே சிலம்பு சண்டை போடும் காட்சியை தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக எடுக்கப்பட்ட படம் 'ரிக்ஷாக்காரன்'. இந்தப் படத்துக்காக இந்திய அரசங்கத்திடமிருந்து பாரத பட்டத்தைப் பெற்றார்.
எம்.ஜி.ஆர். படத்தில்தான் நடிகர் முத்துராமன் அறிமுகமானார். படம் 'அரசிளங்குமரி'.
எம்.ஜி.ஆர். படத்தில் அறிமுகமான இன்னொரு முக்கிய நடிகர் அசோகன். படம் 'பாக்தாத் திருடன்'.
எம்.ஜி.ஆர். நடித்து அண்ணன், தங்கை பாசத்தை முழுமையாக சினிமாவில் காட்டப்பட்டப்படம் முதல்படம் 'என் தங்கை'. எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக நாட்கள் (352) ஒடிய படமும் 'என் தங்கை' தான்.
எம்.ஜி.ஆர். நடித்து நல்ல கருத்துகளை வலியுறுத்தும் தலைப்பில் வெளிவந்த படங்கள்: 'நல்லவன் வாழ்வான்', 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தர்மம் தலைக்காக்கும்', 'பெற்றால் தான் பிள்ளையா', 'சிரித்து வாழ வேண்டும்', 'நீதிக்குத் தலைவணங்கு'.
எம்.ஜி.ஆருடன் இணைந்து 9 கதாநாயகிகள் நடித்த படம் 'நவரத்னம்'. தமிழில் இதுவும் ஒரு 'முதல்முதலாக'தான்.
எம்.ஜி.ஆர். நடித்து கிழக்கு ஜெர்மன், எகிப்து, துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகளில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் 'நாடோடி மன்னன்' (1958). இந்தப் படம் வெளிவந்த போது ரிசர்வேஷனிலும் சாதனைப் புரிந்தது.
எம்.ஜி.ஆர். நடித்து, ஈரான் நாட்டு படவிழா, மாஸ்கோ படவிழா, சர்வதேச படவிழா தாஷ்கண்ட் படவிழா, கோவா படவிழா என்று பல விழாக்களில் கலந்துக் கொண்ட முதல் தமிழ்ப்படம் சத்யா மூவிஸ் 'இதயக்கனி'. இந்தப் படத்தின் 100 நாள் வெற்றி விழா ஆந்திரா முதல்வர் என்.டி.ராமாராவ் தலைமையில் நடந்தது (அப்போது அவர் முதல்வராகவில்லை. எம்ஜிஆருக்குப் பிறகுதான் அவர் அரசியலுக்கு வந்தார்).
எம்.ஜி.ஆர். நடித்து சென்னை சத்யம் திரையரங்கில் ஓடி வெள்ளி விழா கொண்டாடிய முதல் தமிழ்ப் படம் 'இதயக்கனி'.
எம்.ஜி.ஆர். நடித்த 'நீரும் நெருப்பும்' படத்திற்காக நடந்த ரிசர்வேஷன் கூட்டத்தை கட்டுப்படுத்துவற்காக குதிரைப்படை வரவழைக்கப்பட்டது, தமிழ் சினிமாவில் முதல்முறை நடந்த அதிசயம்.
எம்.ஜி.ஆர். அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு வயோதிகர் வேடத்தில் ஒருசில காட்சிகளில் நடித்த படங்கள் 'மலைக்கள்ளன்', 'குலேபகாவலி', 'பாக்தாத் திருடன்', 'படகோட்டி'.
அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். நடித்து விஞ்ஞான அடிப்படையில் உருவான கதையை படமாக்கப்பட்ட படங்கள் 'கலையரசி', 'உலகம் சுற்றும் வாலிபன்'. இந்த ஜானரில் வெளிவந்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை கலையரசிக்கே.
எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளி வந்த முதல் சமூகப்படம் 'திருடாதே'.
எம்.ஜி.ஆர். நடித்து தனது தாயாரின் பெயரில் சத்யா ராஜா பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியை இயக்குநராகப் பணியாற்ற வைத்த படம் 'அரசக் கட்டளை'.
எம்.ஜி.ஆர். நடித்து பொங்கல் திருநாளன்று வெளிவந்து வெற்றிப்பெற்றப் படங்கள் 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'சக்கரவத்தி திருமகள்', 'அரசிளங்குமரி', 'ராணி சம்யுக்தா', 'பணத்தோட்டம்', 'வேட்டைக்காரன்', 'எங்க வீட்டுப் பிள்ளை', 'அன்பேவா', 'தாய்க்குத் தலைமகன்', 'ரகசிய போலீஸ் 115, 'மாட்டுக்காரவேலன்', 'மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன்'.
எம்.ஜி.ஆர். நடித்த திகில், மர்மம், கொலை, போன்ற காட்சிகளை சித்தரித்து எடுக்கப்பட்ட படங்கள் 'தர்மம் தலைகாக்கும்', 'என் கடமை', 'தாழம்பூ.
எம்.ஜி.ஆர். நடித்து காட்டின் பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள் 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தாயைக்காத்ததனயன்', 'வேட்டைக்காரன்'.
எம்.ஜி.ஆர். சீர்காழியில் நடந்த 'அட்வகேட் அமரன்' நாடகத்தில் நடித்த போது கால் முறிந்து பின் குணமாகி மீண்டும் வந்து நடித்து கொடுத்தப் படம் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி'.
எம்.ஜி.ஆர். நடித்து கோவா கடற்கரையில் படமாக்கப்பட்ட படங்கள் 'நாடோடி மன்னன்', 'ஆயிரத்தில் ஒருவன்', கேரளா கடற்கரையில் முழுமையாக படமாக்கப்பட்ட படம் 'படகோட்டி'.
எம்.ஜி.ஆர். முதன்முதலில் வண்ணத்தில் நடித்து கொடுத்த படங்களும், நிறுவனங்களும் : 'அலிபாபாவும் 40 திருடர்களும்' - மாடர்ன் தியேட்டர்ஸ், 'படகோட்டி' - சரவணா பிலிம்ஸ், 'எங்கவீட்டுப் பிள்ளை' - விஜயா வாஹினி, 'ஆயிரத்தில் ஒருவன்' - பத்மினி பிக்சர்ஸ், 'அன்பேவா' - ஏவிஎம், 'பறக்கும் பாவை' - ஆர்.ஆர்.பிக்சர்ஸ் (டிஆர் ராமண்ணா), 'ஒளிவிளக்கு' - ஜெமினி பிக்சர்ஸ், 'நல்ல நேரம்' - தேவர் பிலிம்ஸ்.
எம்.ஜி.ஆர். வில்லனாக நடித்த படங்கள் : 'சாலிவாகனன்', 'பணக்காரி', 'மாயா மச்சீந்திரா'. 'சாலிவாகனன் படத்தில் ரஞ்சன் கதாநாயகனாக நடித்தார். 'பணக்காரி' படத்தில் வி.நாகையா கதாநாயகனாக நடித்தார்.
எம்.ஜி.ஆர். நடித்து விளம்பரப்படுத்தப்பட்டும், பூஜைபோடப்பட்டும் நின்று போன படங்களின் பட்டியலும் கொஞ்சம் பெரிதுதான்.
'சாயா', 'குமாரதேவன்', 'வாழப் பிறந்தவன்', 'பாகன் மகன்', 'மக்கள் என் பக்கம்', 'மறுபிறவி', 'தந்தையும் மகனும்', 'வெள்ளிக்கிழமை', 'தேனாற்றங்கரை', 'அன்று சிந்திய ரத்தம்', ' இன்ப நிலா', 'பரமபிதா', 'ஏசுநாதர்', 'நாடோடியின் மகன்', 'கேரளக் கன்னி', 'கேப்டன் ராஜா', 'வேலு தேவன்', 'உன்னை விடமாட்டேன்', 'புரட்சிப் பித்தன்', 'சமூகமே நான் உனக்கே சொந்தம்', 'தியாகத்தின் வெற்றி', 'எல்லைக் காவலன்', 'சிலம்புக்குகை', 'மலைநாட்டு இளரவசன்', 'சிரிக்கும் சிலை, 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு, இன்பக் கனவு', 'நானும் ஒரு தொழிலாளி'.
நாடோடி மன்னன் சாதனை.
அப்போதைய காலகட்டத்திற்கு மிகப்பெரிய தொகையான ரூபாய் 1 கோடியே 80 லட்சம் பட்ஜெட்டில், எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பன் இணைந்து எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் நாடோடி மன்னன் தயாரித்தார்கள். 1 கோடியே 80 லட்சத்தில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபீசில் 11 கோடி வசூலைக் குவித்தது சம்பவத்தை நிகழ்த்தியது. இந்த வசூல் எம்.ஜி.ஆரின் அரசியல் எழுச்சிக்கும் மாபெரும் துணையாக இருந்தது.
நாடோடி மன்னன் படம் வெளியாகி 60 ஆண்டுகளாகிற நிலையிலும் அந்தப் படத்தின் வெற்றிச் சப்தம் மட்டும் இன்னும் ஓயவே இல்லை என்று தான் சொல்லணும், இப்போதும் சமீபத்தில் தொழில்நுட்பத்தில் நாடோடி மன்னன் தமிழகம் முழுவதும் பல தியேட்டர்களில் மீண்டும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. வெளியான முதல் நாளே ஹவுஸ் புஃல்லாகி பலர் பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்துள்ளனர். பாக்ஸ் ஆபீஸிலும் புதிய படங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த படங்களிலேயே வசூலில் முதல் இடத்தைப் பிடித்ததும் கோடி ரூபாய் வசூலை ஈட்டிய முதல் தமிழ் படமும் இதுதான்...........bpng
-
நம் தலைவர் எம்.ஜி.ஆர் ஒரு அழகின் அம்சமா! இல்லை அழகின் உச்சமே அவர் !!
அவர் 1958ல் நாடோடிமன்னனில் துவங்கினார் தனது அழகை தான் தரித்திரிந்த ஆடைகள் மூலமா? அல்லது மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை அணிந்திருந்த ஆடைகள் மூலமாகவா ?
இத்துடன் சில படங்கள் பதிவு செய்துள்ளேன்.அதில் நமது தலைவர் அந்த ஆடைகளில் எவ்வளவு வசீகரமாக கனக்கச்சிதமாக எவ்வளவு அழகை கொடுக்கிறார் பாருங்கள்.
இதில் ஒரு வினா எழுந்தது.தலைவருக்கு எந்த ஆடைகள் போட்டாலும் கனக் கச்சிதமாக பொருந்தும்.மற்ற நடிகர்களுக்கு சொதப்பும் என்ற வழக்கமும் உண்டு.
ஆனால் உண்மை என்ன ?
தலைவருக்கு எந்த ஆடை அணிந்தாலும் அவருக்கு பொருந்தும்.ஆனால் இதில் பெருமை என்னவெனில் தலைவர் அணியும் ஆடைகளால் அந்த ஆடைகள் தான் பெருமை பெறுகிறது .எப்படி. இந்த அழகன் அணியும் ஆடைகள் தான் பெற்ற பேறை அடைகிறது.
தலைவரால் யாருக்கெல்லாம் பெருமை கிடைக்கிறது பாருங்கள்.இதே கருத்தை அமீரகம் சைலேஷ் பாசு அவர்கள் ஒரு பதிவில் சொன்னார்கள்.அது நூற்றுக்கு நூறு உண்மை...nssm
-
#புரட்சிதலைவர்MGRபுகழ்ஓங்குக!!!!!! உலகில் எத்தனையோ மனிதர்கள் தோன்றி சாதனைகள் புரிந்து புகழ் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஏதேனும் ஒன்றிரண்டு துறைகளில் மட்டும் ஈடுபட்டு அதில் சிறப்பாக சோபிப்பார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் மாதிரி தான் ஈடுபட்ட அனைத்திலும் வெற்றிகண்டு முதன்மையாக விளங்கியவர்கள் யாரேனும் உண்டா- அவர் அனைத்திலும் புரட்சி கண்டவர். புரட்சி நடிகர், புரட்சித் தலைவர், புரட்சியான முயற்சிகள், எல்லாவற்றிலும் வெற்றிக்கு மேல் வெற்றி. இதெல்லாம் தெய்வ சங்கல்பம்.
என் தந்தை டைரக்டர் சுப்பிரமணியம் அவர்களுக்கும் திரு. எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இருந்த பண்புமிக்க நட்புறவை நாடே அறியும். என்தந்தையைப் பற்றி அவரே பேசியும் எழுதியும் இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அவர் எனக்கொரு சிறிய தந்தை போல விளங்கினார்.
அண்ணன் என்று அவரை ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பேசிவிட்டேன். மேடைக்குப் பின்னால் வந்து என் காதை திருகி. நான் அண்ணனா? சித்தப்பா மரியாதை எங்கே போச்சு என்று சிரித்த வண்ணம் என் தலையில் குட்டிவிட்டுச் சென்றார்.
அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் என்ற ஈடற்ற இலக்கியப் படைப்பை சினிமாஸ்கோப் படமாக எடுக்க எம்.ஜி.ஆர் அவர்கள் கல்கி குடும்பத்திடம் உரிமை பெற்றிருந்தார். சிவகாமியாக நீதான் நடிக்க வேண்டும். கல்கி வர்ணித்த சிவகாமி பாத்திரத்திற்கு நீ நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று பல வாரங்கள் வற்புறுத்தினார்.
அவர் மனம் புண்படாமல், ஆனால் சினிமாவில் நடிப்பதில்லை என்ற என் கொள்கையையும் விடாமல் நான் உறுதியாக ஆனால் நன்றியுடன் மறுத்துவிட்டேன். நீ நடிக்கவில்லை என்றால் நான் சிவகாமியின் சபதம் படமே எடுக்கப் போவதில்லை என்று கூறினார். அப்படியே செய்துவிட்டார். இவ்வளவு வற்புறுத்தியவர் இதற்காக என்னிடம் கோபம் கொள்ளவில்லை. புகழுக்காகவோ பணத்திற்காகவோ கொள்கையிலிருந்து வழுவாமல் இருப்பதைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டார் என்பதை திருமதி ஜானகி அவர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
எம்.ஜி.ஆர் அவர்கள் கர்நாடக இசை ரசிகர் மட்டுமல்ல. நன்றாகப் பாடுவார். அந்தக் காலத்து மேடை நடிகராயிற்றே. மிக லாவகமாக ஆடவும் செய்வார். இலக்கியத்திலும் மிக ஈடுபாடு கொண்டவர். அவர் வீட்டில் ஓர் அருமையாக நூலகம் உள்ளது.
சில மாதங்கள் அவர் முதலமைச்சராக இல்லாத போது என் ஜயஜய சங்கர நடன நிகழ்ச்சிக்கு அவரை அழைத்தோம். அன்று தத்துவ பேராசிரியர் டாக்டர். டி.எம்.பி. மஹாதேவன் அவர்கள் சிறப்பு விருந்தினர். அன்று எதிர்பாராமல் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆதி சங்கரரைப்பற்றியும் அத்வைத வேதாந்தத்தைப் பற்றியும் மிக உருக்கமாகவும் தெளிவாகவும் பேசி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதே பார்த்தசாரதி சபையில், அவர் முதலமைச்சரான பிறகு மற்றொருநாள் என் சிலப்பதிகார நடின நாடகத்திற்கு, எங்களுக்கும் சபாக்காரர்களுக்கம் தெரியாமல் பனிரண்டு டிக்கட்டுகளை முதல்வரிசையில் வாங்கிக் கொண்டு குடும்பத்தினரும் சில அமைச்சர்களும் சூழ திடீரென்று வந்துவிட்டார். கடைசி வரை இருந்துவிட்டு பிறகு உள்ளே வந்து வாழ்த்திவிட்டுச் சென்றார். டிக்கட்டு வாங்கி வரும் முதலமைச்சரைப் பார்ப்பது அரிது அல்லவா? அன்று எல்லோரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிவிட்டோம்.
திருமதி வி.என் ஜானகி அவர்கள் என் பெற்றோர்களின் வளர்ப்பு மகள் என்றே சொல்லலாம். என் தந்தை தயாரித்த அனந்த சயனம் படத்தில் அவர் நடித்துள்ளார். 1942ஆம் ஆண்டு என் தந்தை துவக்கிய நாங்கள் இப்போது நடத்திவரும் நிருத்யோதயா நடனடிப்பள்ளியின் நடனகலாசேவா குழுவில் நடனக்கலைஞராக விளங்கியவர் திருமதி ஜானகி அவர்கள்.
1962ஆம் ஆண்டு திரு. எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் திருமதி ஜானகி அவர்களுக்கும் பதிவு திருமணத்திற்கு ஏற்பாடு செய்து சாட்சிக் கையெழுத்திட்டவர் என் தந்தை டைரக்டர் கே.சுப்பிரமணியம் அவர்கள். நாள் குறித்தவர் என் தாயார். மணமக்களை அழைத்து வந்தவர் என் அண்ணன் பாலகிருஷ்ணன். அன்று விருந்துகூட எங்கள் இல்லத்தில் தான் நடந்தது.
திரு எம்.ஜி.ஆர் அவர்கள் எங்கள் வீட்டைச் சேர்ந்தவர்களில் ஒருவர் என்றே நாங்கள் பழகினோம். அவர் முதலமைச்சராவதற்கு முன்னால் வரை நாங்கள் அடிக்கடி சந்தித்ததுண்டு. சற்றும் எதிர்பாராமல் அடையாறிலுள்ள சத்யா ஸ்டூடியோவிலிருந்து போன் வரும். மதியம் சாப்பாட்டிற்கு கறிவேப்பிலை குழம்பு வேண்டும். அங்கு வருகிறேன் என்பார். அல்லது கொடுத்தனுப்பச் சொல்வார்.
கடநத் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அவரது பூவுலக வாழ்க்கை முடிவதற்கு 9 நாட்கள் முன்னால் ரஷ்ய கலைஞர்களின் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மியூசிக் அகாடமிக்கு வந்திருந்தார். அவருக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த என்னை திடீரென அழைத்து இன்று நான் இந்த ரஷ்யக் குழுத்தலைவர் மொய்ஸேவ் அவர்களுக்கு மலர்ச்செண்டும் பரிசும் கொடுத்தவுடன் நீ என் சார்பில் அவர்களுக்கு ரஷ்ய மொழியில் வாழ்ததுத் தெரிவித்துப் பேசு என்று அன்புக் கட்டளையிட்டார். நான் அவசரமாக ரஷ்ய மொழியில் சில வாக்கியங்களை எழுதித் தயார் செய்து கொண்டேன். அவர் கூறியது போல வாழ்த்துத் தெரிவித்துவிட்டு அவரைப்பற்றியும் ரஷ்ய மொழியில் எங்கள் முதலமைச்சர் சிறந்த அரசியல் தலைவர் மட்டுமல்ல ஒரு மாபெரும் மக்கள் தலைவர் (Peoples Artiste) பொன்மனச்செம்மல் என்று சொன்னேன். பலத்த கரகோஷம் எழுந்தது.
24/12/87அன்று மாபெரும் தவிர்க்க முடியாத இழப்பு கண்மூடித்திறக்குமுன் ஏற்பட்டுவிட்டதே. ராமாவரம் தோட்டத்திற்கு அதிகாலையில் சென்றுவிட்டோம்.
புகழுடம்பு பெற்று கொண்டு விட்ட எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். முடிவாக ஒரு வார்த்தை.
திறமையுள்ள எத்தனையோபேர் இருக்கலாம். ஆனால் அவர்களுள் நல்லவர்களைக் காண்பது அரிது. நடமாடும் தெய்வமான காஞ்சி பரமாச்சாரியார் அவர்கள் (திரு.சந்திரசேகரசரஸ்வதிசுவாமிகள்) வாயால் எம்.ஜி.ஆர். அவர்கள் நல்லவர் என்று சொன்னதை நானே என் காதால் கேட்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இதைவிடப் பெரிய விருது உலகில் ஒன்றும் இருக்க முடியாது.
1988 ஜனவரி மாத மங்கை மாதஇதழில் பத்மாசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய கட்டுரை...
-
புரட்சித்தலைவர்
மன்னாதி மன்னன்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய #ஞாயிற்றுக்கிழமை_காலை_வணக்கம்..
புரட்சி தலைவர் எம்ஜியாரின் திரைப்படங்கள் பற்றிய அலசல் தொடரில் இன்று புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 27 வது
படமான என் தங்கை பற்றி பார்ப்போம்..
என் தங்கை 1952 ஆம் ஆண்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்தார். இந்த படம் அதே பெயரில் டி.எஸ். நடராஜனின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது.
சிவாஜி கணேசன் நடிப்பில் இந்த கதை நாடகமாக நடைபெற்று கொண்டிருக்கும் போது திரையில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடித்து முடித்தார்...
சி.எச். நாராயண மூர்த்தி தயாரித்தவர் அசோகா பிக்சர்ஸ் எழுதியது
டி.எஸ்.நடராஜன்
கே.எம். கோவிந்தராஜன்
திரைக்கதை
நாராயண மூர்த்தி
எம்.ஜி.ராமச்சந்திரன்
பி.எஸ்.கோவிந்தன்
பி.வி.நரசிம்ம பாரதி
இ.வி.சரோஜா
மாதுரி தேவி
வி. சுஷீலா
சி.என். பாண்டுரங்கன் அவர்களின் இசையில், ஒளிப்பதிவு ஜிதன் பானர்ஜி எடிட்டிங் சி.எச். நாராயண மூர்த்தி
அசோகா பிக்சர்ஸ் தயாரித்து
விநியோகித்தது வெளிவந்த தேதி
மே 31, 1952
மூத்த சகோதரர் ராஜேந்திரன் (எம்.ஜி.ராமச்சந்திரன், குடும்பத்தின் மீது பாசம் கொண்டவர் நல்ல மனம் படைத்தவர், அவரது இளைய சகோதரர் செல்வம் (பி.வி. நரசிம்ம பாரதி), ஒரு மாணவர், அவரது தங்கை மீனா (ஈ.வி.சரோஜா) மற்றும் அவர்களது உடல்நிலை சரியில்லாத தாய் குணவதி (எஸ்.ஆர்.ஜனகி) ). அவர்களின் தந்தைவழி மாமா கருணாகரன் பிள்ளை (எம்.ஜி. சக்ரபாணி), தேசபக்தர் காணாமல் போன பின்னர் அவர்களின் செல்வத்தை கொள்ளையடித்து, ராஜேந்திரனின் எம்ஜிஆர் அவர்களின் குடும்ப நிதி உதவிக்கான அனைத்து கோரிக்கைகளையும் மறுக்கிறார். மறுபுறம், கருணாகரனின் மகன் சூரியமூர்த்தி (பி.எஸ். கோவிந்தன்) தனது உறவினர் ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறார்...
ஒரு மாலை, ஒரு இடியுடன் கூடிய
விபத்தில், மீனா தனது பார்வையை இழக்கிறாள்.அப்போது அவள் செல்வத்தின் செல்வந்த மனைவி ராஜம் (மாதுரி தேவி), அவளுடைய மைத்துனரின் பலிகடாவாக மாறுகிறாள். .. அதிலிருந்து
மீனாவை வெறுக்கத் தொடங்குகிறார். முன்னர் நிலைமையை அறியாத ராஜேந்திரன், இறுதியாக தனது தங்கையின் குடும்பத்தில் படும் கஷ்டங்களை கண்டுபிடிப்பார்... கடுமையான சண்டையைத் தொடர்ந்து, செல்வமும் ராஜமும் குடும்பத்தை விட்டு வெளியேறுகிறார்கள், ராஜேந்திரனை முற்றிலும் கலக்கமடையச் செய்கிறார்கள்.
இதனால் நோயுற்ற அவர்களின் தாய் இறந்துவிடுகிறார், இதன் பிறகு அவரின் மாமாவால், ராஜேந்திரன் மற்றும் மீனா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள்.
அவர்களது உறவினர் ஒருவர் சூரியமூர்த்தி, தனது தந்தையிடமிருந்து தலைநகருக்கு வேலை தேடி ஓடிவருகிறார், அங்கு அவர் ஒரு ரிக்*ஷா டிரைவராக வேலை செய்து கொண்டு இருக்கிறார்..
ராஜேந்திரன் மற்றும் மீனா ஆகியோருக்கு தற்காலிக தங்குமிடங்களை வழங்குகிறார். இதற்கிடையில், இளைய சகோதரர் செல்வம் தனது மாமியார் (ஆர். பி. ராவ்) போலவே குதிரை பந்தயத்திற்கு அடிமையாகி, தனது குடும்பத்தை நிதி அழிவுக்குள்ளாக்கி, ராஜமை புறக்கணிக்கிறார். ராஜேந்திரன் தம்பதியரை சமரசம் செய்த பிறகு, ராஜம் சாலை விபத்தில் இறந்து விடுகிறாள் கருணாகரன் தன் மகனைத் தேடி வருகிறான், அவனும் ஒரு வாகனத்தால் தட்டப்படுகிறான். இறக்கும் தருவாயில் அவர்,தன் மகன் சூரியமூர்த்திக்கு ஒரு கிறிஸ்தவரான மேரி (வி. சுஷீலா) என்பவரை திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்கிறார். ராஜேந்திரனைப் பொறுத்தவரை, அவர் இறுதியாக, தனது எல்லைக்குத் தள்ளப்பட்டு, தனது சகோதரியைக் கடலுக்குள் கொண்டு செல்கிறார், அவர்கள் இருவரும் அலைகளின் கீழ் மறைந்து விடுகிறார்கள்.
ராஜேந்திரனாக எம்.ஜி.ஆர்
சூர்யமூர்த்தியாக பி.எஸ்.கோவிந்தன்
செல்வமாக பி.வி.நரசிம்மபாரதி
கருணாகரம் பிள்ளையாக எம்.ஜி.சக்ரபணி
வீரசாமி பிள்ளையாக டி. ஆர். பி. ராவ்
அசாகனாக சி.எஸ். பாண்டியன்
வீரையன் ஆக எஸ்.என்.நாராயணசாமி
சித்ரகுப்தனாக கோட்டாபுலி ஜெயராமன்
இடியட் பாயாக மாஸ்டர் கிருஷ்ணன்
குண்டு செட்டியாக என்.ஜஸ்வர்
ராஜமாக மாதுரி தேவி
மேரியாக வி.சுஷீலா
குணவதியாக எஸ்.ஆர்.ஜானகி
மீனாவாக ஈ.வி.சரோஜா
அசாகியாக எம். என். ராஜம்
இப்படத்தை தெலுங்கில்
சி.எம். நாராயண மூர்த்தி
நா செல்லெல்லு மற்றும் அதே அணியுடன். இது 1953 இல் வெளியிடப்பட்டது. இந்த படத்தை
எல்.வி.பிரசாத் இந்தி மொழியில் சோதி பஹேன் என்ற தலைப்பில் ரீமேக் செய்து 1959 இல் வெளியிடப்பட்டது.
சி.என். பாண்டுரங்கன் இசையமைத்தார்.
பாடல்களை பாரதிதாசன், ஏ.மருதகாசி, சரவனபவனந்தர், சூரதா,
கி.ராஜகோபால் மற்றும் நரசிம்மன்.
ஆகியோர் எழுதினார்
பாடகர்கள் பி.எஸ். கோவிந்தன் மற்றும் சி.எஸ். பாண்டியன்.
பின்னணி பாடகர்கள்
எம்.எல். வசந்தகுமாரி,
பி.லீலா, என்.லலிதா, ஏ.பி.கோமலா, கே.வி.ஜானகி, ஏ.ஜி.ரத்னமாலா,
டி.ஏ.மோதி, மற்றும் ஏ.எம்.ராஜா.
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு...Skt...
-
எச்சூழ்நிலையிலும் மனிதநேயத்தில் முதன்மையாக இருப்பார் எம்.ஜி.ஆர் !
1972ல் நமது தலைவர் இயக்கம் ஆரம்பித்து ஒவ்வொரு இடங்களுக்கும் மக்களை சந்திக்க செல்வது வழக்கம்.அப்படி 1973ல் திண்டிவனம் வழியாக கழக கூட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தார்.அப்போது திண்டிவனத்திற்கு முன்பே ஒரு தரப்பினர் தலைவர் வருவதை அறிந்து அவரை ரோட்டில் வரவேற்று வேனில் இருந்தபடியே பேசச்சொன்னார்கள்.கூட்டம் கூடிவிட்டது.பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு மூதாட்டி முண்டியடித்து முன்வர முயற்சித்தும் வர முடியவில்லை.இந்தக்காட்சியை கண்டார் தலைவர்.உடனே அந்த மூதாட்டியை காரின் அருகே அழைத்து என்னவென்று கேட்டார்.உடன் அந்த மூதாட்டி அகமகிழ்ந்து முகமகிழ்ந்து ராசா என்வீட்டில் உனது பாதம் படவேண்டும் அது தான் என் ஆசை.வேற எதுவும் வேண்டாம் என்று சொல்லியதைக் கேட்டதும் தலைவர் கண் கலங்கிவிட்டார்.சரி என்று சொல்லிவிட்டு அந்த மூதாட்டியை கூட்டம் முடிந்தவுடன் தன் காரில் ஏற்றிக்கொண்டு அந்த மூதாட்டியின் இல்லத்திற்கு சென்றார்.அது ஒரு அநேக ஓட்டைகள் நிறைந்த குடிசை.தலைவர் உள்ளே சென்று அமர்ந்து ஏதாவது குடிக்க கொடுங்கள் என்று கேட்டார்.அந்த மூதாட்டியோ ராசா இங்கு என்னிடம் கூழ் மட்டும் தான் உள்ளது.அது குடிக்கிற மாதிரி இருக்காது என்றாள். தலைவரோ அம்மா கொடுக்கும் கூழ்தானே கொடுங்கள் என்றார்.உடன் அதை பருகிக்கொண்டிருக்கும் போதே தலைவர் மூதாட்டியை பார்த்தார்.அந்த மூதாட்டி மகிழ்ச்சி ஆனந்தத்தில் கண்ணீர் விட்டு கேவிக்கேவி அழ ஆரம்பித்துவிட்டார்.பின்னர் அந்த மூதாட்டியின் மகிழ்ச்சியில் திளைத்து அவருக்கு வேண்டியதை செய்து விட்டு விடைபெற்றார்.அந்த மூதாட்டி ஒரு இஸ்லாமியப்பெண். தலைவர் எங்கு சென்றாலும் முதலில் மனிதநேயத்தில் தான் கவனம் செலுத்துவார்.இந்த நிகழ்வின் கார்ட்டூன் படம் தான் இத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த படத்தை செய்தியுடன் வெளியிட்டது குமுதம் இதழ்..........nssm.........
-
#பொக்கிஷம்
மக்கள் திலகம் 1967 ம் வருட இடைத்தேர்தலில் பரங்கி மலை தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டபோது எடுக்கப்பட்ட படம்...
இந்த பதவிலியிருந்து சரியாக பத்து வருடங்கள் கழித்து 1977 ம் வருடத்தில் அஇஅதிமுக எனும் தனி இயக்கம் கண்டு தமிழக முதலமைச்சரானார் மக்கள் திலகம்.
இன்று புதிய கட்சியை துவங்குபவர்கள், களத்தில் படு தோல்வி அடைந்தாலும் குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை பெற்றாலே வெற்றி பெற்றதாக கொண்டாடுகிறார்கள். மக்கள் திலகமோ கட்சி துவங்கிய சில வருடத்திலேயே தமிழக முதல்வராகி சாதனை படைத்தார் , அஇஅதிமுக என்னும் இயக்கத்தை தமிழகத்தின் அதிக நாட்கள் ஆண்ட கட்சி என்ற சாதனையை படைக்க வைத்தார்.... Sr.Bu..
-
மதுரையும்-மக்கள் திலகமும்.... சுவாரசியமான #எம்ஜிஆர் நினைவுகள்...
இனிஷியலே பெயராக மாறிய பெருமை #மக்கள்_திலகம் எம்ஜியாருக்கு மட்டுமே உண்டு. எம்ஜிஆர் என்பதன் விரிவாக்கம் Maruthur Gopalan Ramachandran என்பதே. இதில் மருதூர்-ஐ எடுத்துவிட்டு மதுரை என்பதை சேர்த்துக்கொள்ளலாம்.
அந்த அளவிற்கு மதுரைக்கும், மக்கள்திலகம் எம்ஜியாருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. எம்ஜியார் நினைவுகளோடு கொஞ்சம் பின்னோக்கி பயணிக்கலாம்.
01. திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய எம்ஜியாரின் நடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டது நாடக உலகம்தான். மதுரையைச் சேர்ந்த ` ஒரிஜினல் பாய்ஸ்` கம்பெனியில் அண்ணன் சக்ரபாணியின் விரல் பற்றி 6 வயதில் இணைந்தார் எம்ஜியார்.
02. திரையுலகில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்த எம்ஜியாருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம்…மதுரைவீரன். இந்த படம் மதுரை சிந்தாமணி திரையரங்கில் 200 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சிந்தாமணி திரையரங்கில்
20-க்கும் மேற்பட்ட எம்ஜியார் படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கின்றன.
03.1958 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில்
`#நாடோடி_மன்னன்` வெற்றிவிழாவில்தான் எம்ஜியார் ரசிகர் மன்றம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது
04. 1986 ஆம் ஆண்டு இதே மதுரையில்தான் எம்ஜியார் தனது ரசிகர் மன்ற மாநாட்டை மிக பிரம்மாண்டமாக நடத்தினார். இந்த மாநாட்டில் எம்ஜியாருக்கு ஜெயலலிதா Amma ஆளுயர செங்கோல் வழங்கினார்.
05. எம்ஜியார் அதிமுகவை தொடங்குவதற்கு விதை போட்டது மதுரைதான். 1972 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற திமுக மாநாட்டில் நாட்டிய நாடகம் நடத்த ஜெயலலிதாAmma அனுமதி மறுக்கப்பட்டது. ஆத்திரமடைந்த எம்ஜியார் Amma ஜெயலலிதாவுடன் திறந்த வாகனத்தில் மதுரையை வலம் வந்தார். மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அதே மாநாட்டில் எம்ஜியார் பேசி முடித்தவுடன் பெருவாரியான கூட்டம் கலைந்தது. இது அடுத்து பேசவிருந்த முதல்வர் கருணாநிதியை எரிச்சலூட்டியது. இருவருக்கும் இடையிலான தொடர் மோதல்களின் உச்சமாக பின்னர் எம்ஜியார் தனிக்கட்சி தொடங்கினார்.
06. திமுகவிலிருந்து எம்ஜியார் நீக்கப்பட்டபோது அதிகம் கொந்தளித்தது மதுரை மாவட்டம்தான். பதற்றமான சூழ்நிலையால் அங்குள்ள சில கல்வி நிறுவனங்கள் வாரக்கணக்கில் மூடிக்கிடந்தன.
07. அதிமுகவை தொடங்கிய பிறகு அந்தக் கட்சிக் கொடியை எம்ஜியார் முதன் முதலாக ஏற்றியது மதுரையில்தான். அண்ணா படம் பொறித்த அந்தக் கொடியை மதுரை ஜான்சிராணி பூங்காவில் எம்ஜியார் ஏற்றிவைத்தார்.
08. அதிமுகவின் முதல் தேர்தல் வெற்றிக்கான சான்றிதழை மதுரை கலெக்டர் அலுவலகம்தான் வழங்கியது. திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவரின் வெற்றிக்காக இந்த சான்றிதழ் அளிக்கப்பட்டது.
09. 1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில்தான் ` உலகத் தமிழ்ச் சங்கம்` மீண்டும் தொடங்கப்படுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார் எம்ஜியார்.
10. 1980 ஆம் ஆண்டு மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெற்றார் எம்ஜியார்.
11. சினிமாவிலும், அரசியலிலும் முத்திரை பதித்த எம்.ஜி.ஆர். கடைசியாக நடித்த திரைப்படத்தின் பெயர்…."மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்".......BPNG
-
புரட்சித்தலைவர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
அவர்களின் ஆசியோடு நண்பர்கள்
அனைவருக்கும் இனிய திங்கட்கிழமை
காலை வணக்கம்...
புரட்சி தலைவர் எம்ஜியார் நடித்த ஓவ்வொரு காவியங்களை பற்றிய தகவல்கள் மற்றும் அந்த படத்தின் விமர்சனம் பற்றிய என்னுடைய இந்த தொடர் பதிவில் இன்று அவருடைய 28-வது படமான #"நாம்", திரைப்படம் பற்றி பார்ப்போம்...
நாம் திரைப்படம் ஏ.காசிலிங்கம் இயக்கத்தில்
ஜூபிட்டர் பிக்சர்ஸ்
மேகலா பிக்சர்ஸ் கூட்டு தயாரிப்பில் உருவானது பி.எஸ்.வீரப்பா மற்றும் கருணாநிதி அவர்கள் இருவரும் இணைந்து தயாரித்த திரைப்படம் வசனம் எழுதியவர்
மற்றும் திரைக்கதை எழுதியவர்
மு.கருணாநி
இசை சி.எஸ்.ஜெயராமன்
ஒளிப்பதிவு ஜி.கே.ராமு
எடிட்டிங் ஏ.காசிலிங்கம்
வெளியிட்ட தேதி
5 மார்ச் 1953
குமரன் (எம்.ஜி.ஆர்) ஒரு ஜமீன்தார் குடும்பத்தின் வாரிசு, அவர் இறக்கும் தனது தாயிடமிருந்து அனைத்தையும் கற்றுக்கொள்கிறார். இருப்பினும், விருப்பமும் சொத்து தொடர்பான சாட்சியமும் மலையப்பன் (வீரப்பா) அவர்களால் மறைக்கப்படுகின்றது.
ஒரு மருத்துவர் சஞ்சீவி
(எம்.ஜி.சக்ரபாணி) அவர்களும் எம்ஜியாரின் சொத்தின் மீது ஆர்வம் கொண்டு இவரும் ஒரு புறம் சூழ்ச்சி செய்து வருகின்றார் மேலும் அவரது மகள் (சரஸ்வதி) எம்ஜிஆரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். ஆனால் அவரது விருப்பத்திற்கு எதிராக, குமாரன் மலையப்பனின் சகோதரி மீனாவை (ஜானகி அம்மையார்) காதலிக்கிறார். மீனாவும் விருப்பம் கொள்ளும் போது, குமரன் தனது நோக்கங்களை சந்தேகித்து, அந்த கிராமத்தை விட்டு வெளியேறுகிறார். பின்பு நகரத்திற்கு சென்று நகரில், அவர் ஒரு குத்துச்சண்டை வீரர் ஆகிறார். இதற்கிடையில், மலையப்பன் குமாரனின் வீட்டிற்கு தீ வைத்து விட்டு, குமரன் இறந்துவிட்டதாக மக்களை நம்ப வைக்கின்றார்... இருப்பினும், அவர் மீனாவால் காப்பாற்றப்படுகிறார். காணாமல் போனவர் பற்றி மேலும் சிக்கல்கள் எழுகின்றன, அதே நேரத்தில், ஒரு சிதைக்கப்பட்ட குத்துச்சண்டை வீரர் இரவில் சுற்றி வருகிறார், இது கிராமத்தில் ஒரு பேய் பற்றிய வதந்திகளுக்கு வழிவகுக்கிறது. இருப்பினும், உண்மை இறுதியில் வெளிப்படுகிறது, மேலும் காதலர்கள் எவ்வாறு ஒன்றுபடுகிறார்கள் என்பதே கதைக்களம்.
குமாரனாக எம்.ஜி.ராமச்சந்திரன்
மீனாவாக வி.என்.ஜானகி
மலையப்பனாக பி.எஸ்.வீரப்பா
எம்.என்.நம்பியார்
சஞ்சீவியாக எம். ஜி. சக்ரபாணி
சஞ்சீவியின் மகளாக பி.கே.சரஸ்வதி
எஸ். ஆர். ஜானகி
ஆர்.எம்.செதுபதி
எஸ்.எம்.திருபதிசாமி
டி.எம். கோபால்
எம்.ஜெயஸ்ரீ
ஏ. சி. இருசப்பன்
சாண்டோ எம்.எம். ஏ. சின்னப்பா தேவர்
ஆகியோர் நடித்து உள்ளனர்..
திரைக்கதை எழுத்தாளர் காசியின் கதையான கதல் கண்ணீரை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை,
படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், என்று பெயர் இடம் பெறாது அவர் அப்போது பிரபலமான ஐகான் அல்ல, அவரது பெயரை "ராமச்சந்தர்" என்று திரையில் உச்சரித்தார், ஏனெனில் அது "ஸ்டைலானது" என்று நினைத்ததாலும் ஏற்கனவே பிரபலமான நடிகர்
டி. ஆர். ராமச்சந்திரனிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ள விரும்பினார்.
சி.எஸ். ஜெயராமன் இசையமைத்துள்ளார்,
எம்.கருணாநிதி எழுதிய பாடல். ஜெயராமன், நாகூர் ஈ.எம்.ஹனிஃபா, ஏ.எம்.ராஜா, ஜிக்கி,
எம்.எல்.வசந்தகுமாரி, ஏ.பி.கோமலா, கே.ஆர்.செல்லமுத்து மற்றும்
டி. ஆர்.கஜலட்சுமி ஆகியோர் பாடியுள்ளனர்...
5 மார்ச் 1953 அன்று வெளியிடப்பட்டது. படம் வெற்றிகரமாக இல்லை, ஆனால் அவர் "சுவாரஸ்யமான கதைக்களம், அர்த்தமுள்ள உரையாடல், பயனுள்ள இயக்கம், எம்.ஜி.ஆர், சக்ரபாணி, வீரப்பா, ஜானகி மற்றும் சரஸ்வதி ஆகியோரின் நல்ல நடிப்பைப் பாராட்டினார். ".
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு.........
-
எம்ஜிஆர் நன்றாக ரசித்து சாப்பிடுவார். அவருக்கு உள்ள சிறப்பு, மற்றவர்களும் வயிறார சாப்பிட வேண்டும் என்று விரும்புவார். தான் என்ன சாப்பிடுகிறாரோ அதே உணவு அதே தரத்தில் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார். அவர் தனித்து சாப்பிட்ட நேரங்கள் மிக அபூர்வம். எப்போதும் குறைந்தது 10 பேராவது தன்னுடன் சேர்ந்து சாப்பிட்டால்தான் எம்.ஜி.ஆருக்கு திருப்தி.
எம்.ஜி.ஆர். என்றாலே எல்லாவற்றிலும் முதலா வதுதானே. சமீபத்தில் கூட அவர் படித்த கும்பகோணம் ஆனையடி பள்ளி தமிழ்நாட்டி லேயே முதலாவதாக ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற பள்ளி என்ற சிறப்பை பெற்றுள்ளது.
கும்பகோணம் ஆனையடி பள்ளியில் 3-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் வறுமை அவரை நாடகத்தில் தள்ளியது. பிள்ளைகளை பிரிய நேர்ந்தாலும் அங்கே போனாலாவது தன் இரண்டு பிள்ளைகளும் (எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் சக்ரபாணியும்) வயிறார சாப்பிடுவார் களே என்ற எண்ணத்தில் இருவரையும் நாடக கம்பெனியில் சேர்க்க கனத்த இதயத்துடன் அனுமதி அளித்தார் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யா அம்மையார்.
அங்கும் சில நேரங்களில் மூன்று வேளைகள் சாப்பாடு கிடைக்காது. நாடக கம்பெனிகளை சொல்லியும் குற்றம் இல்லை. கிடைக்கும் வருமானத்தை வைத்து அனைவருக்கும் சோறுபோட வேண்டிய நிலை. எனவே, குறிப்பிட்ட நாளில் நாடகத்தில் நடிப்பவர்களுக்கு மட்டுமே சாப்பாடு என்ற விதிமுறை. இப்படியே சுழற்சி முறையில் நடிகர்களுக்கு சாப்பாடு.
இது தெரியாத சிறுவன் எம்.ஜி.ஆர்., ஒரு நாள் மதிய சாப்பாட்டுக்காக பசியோடு மற்ற நடிகர்களுடன் பந்தியில் அமர்ந்தார். நாடக கம்பெனி மேலாளர் இதை கவனித்துவிட்டு ‘‘இன்றைய நாடகத்தில் நீ இல்லை. உனக்கு சாப்பாடு கிடையாது’’ என்று சிறுவனாக இருந்த எம்.ஜி.ஆரை எழுப்பி கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்று சாப்பாட்டு கூடத்துக்கு வெளியே விட்டு வந்தார்.
அன்று பசியுடன் அழுத கொடுமையான அனுபவங்கள்தான் சிறுவர், சிறுமிகள், பள்ளிப் பிள்ளைகள் வயிறார சத்தான உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி சத்துணவுத் திட்டம் என்ற ஐ.நா.சபை பாராட்டும் திட்டத்தை கொண்டுவர எம்.ஜி.ஆருக்கு உந்து சக்தியாக விளங்கியது.
இளம் வயதில் கிடைத்த அனுபவங்களால், சாப்பாடு விஷயத்தில் யாராவது பாரபட்சம் காட்டினால் எம்.ஜி.ஆருக்கு கடும் கோபம் வரும். படப்பிடிப்புகளின்போது படத்தை தயாரிக்கும் கம்பெனி சார்பில் யூனிட்டில் உள்ள எல்லாருக்கும் சாப்பாடு வழங்கப்படும். சில பட கம்பெனிகளில் பட்ஜெட் கருதி, படத்தின் கதாநாயகன், நாயகி, டைரக்டர் போன்றவர்களுக்கு உயர்தரமான சாப்பாடும் தொழிலாளர்களுக்கு சுமாரான சாப்பாடும் போடப்படும். தான் நடிக்கும் படங்களில் தொழிலாளர்களுக்கும் தரமான சாப்பாடு போடப்படுவதை எம்.ஜி.ஆர். உறுதி செய்து கொள்வார்.
‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு தினமும் வகை வகையான அசைவ சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டது. படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சுமாரான சாப்பாடு போடப் பட்டது. அவர்களுக்கு சாப்பாட்டில் முட்டை மட் டுமே வழங்கப்பட்டது. பொறுத்துப் பார்த்த தொழி லாளர்கள் ஒருநாள் படப்பிடிப்பு இடைவேளை யில் ஓய்வாக அமர்ந்திருந்த எம்.ஜி.ஆரிடமே தயங்கித் தயங்கி தங்கள் குறையை தெரி வித்தனர். விஷயத்தை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆரின் சிவந்த முகம், கோபத்தில் மேலும் குங்கும நிறமானது. ‘‘நீங்கள் போய் வேலையை பாருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று கூறி தொழிலாளர்களை அனுப்பி விட்டார்.
மறுநாள் மதிய உணவு இடைவேளையின் போது தொழிலாளர்கள் வரிசையில் எம்.ஜி.ஆர். சாப்பிட அமர்ந்து விட்டார். சாப்பாடு பரிமாறு பவர்கள் கதிகலங்கிப் போய்விட்டார்கள். ‘‘அண்ணே, உங்களுக்கு சாப்பாடு உள்ளே இருக்கு..’’ என்று மென்று முழுங்கி தெரிவித்தனர்.
‘‘பரவாயில்லை, இருக்கட்டும். எங்கே உட் கார்ந்து சாப்பிட்டால் என்ன? எல்லாம் ஒன்றுதானே? பசிக்கிறது. சீக்கிரம் சாப்பாடு கொண்டு வாங்க’’ என்று எம்.ஜி.ஆர். பதிலளித்தார்.
வேறு வழியில்லாமல் அவருக்கும் அங்கேயே சாப்பாடு பரிமாறப்பட்டது. முட்டையைத் தவிர வேறு அசைவ வகைகள் எதுவும் வரவில்லை. ‘‘ஏன் அசைவ உணவுகள் வரவில்லை. எடுத்து வந்து பரிமாறுங்கள்’’ என்றார் எம்.ஜி.ஆர்.
‘‘உங்கள் அறைக்கு போய் எடுத்து வரு கிறோம்’’… பரிமாறியவர்களின் பவ்யமான பதில்.
‘‘ஏன்? தொழிலாளர்களுக்கு உள்ளது என்ன ஆச்சு?’’… எம்.ஜி.ஆரின் கேள்வியில் கூர்மை ஏறியது.
‘‘இவங்களுக்கு வெறும் முட்டை மட்டும்தான் போடச் சொல்லியிருக்காங்க’’… இந்த பதிலுக் காக காத்திருந்த எம்.ஜி.ஆர். கோபத்தின் உச்சிக்கே சென்றார்.
‘‘தயாரிப்பு நிர்வாகி எங்கே? ஏன் இப்படி சாப்பாட்டிலே பாகுபாடு செய்யறீங்க? தொழி லாளர்கள்தான் அதிகம் உழைக்கிறார்கள். அவங்க தான் நல்லா சாப்பிடணும். அவங்களுக்கு வெறும் முட்டை; எனக்கு மட்டும் காடை, கவுதாரியா? அவங்களுக்கும் தினமும் அசைவ சாப்பாடு கொடுங்க. கம்பெனியால முடியலைன்னா அதுக்கான செலவை என் கணக்கிலே வச்சுக்குங்க. சம்பளத்திலே கழிச்சுக்கிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். பொரிந்து தள்ளிவிட்டார்.
மறுநாள் முதல் தொழிலாளர்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர். சாப்பிடும் அதே வகை வகையான அசைவ சாப்பாடுகள்தான்..........bpg
-
வரி பாக்கிகளுக்காக எம்.ஜி.ஆரின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட லாம் என்று வதந்திகள் பரவிய நேரம். திண்டிவனத்தில் ஆசிரியராக பணி யாற்றி வந்த இரா.ஷெரீப் என்பவர், எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதினார். ‘‘தங்கள் சொத்துக்கள் ஜப்தி செய்யப் படலாம் என்று வரும் செய்திகள் அறிந்து என்னைப் போலவே தங்களையும் தனது மகனாகக் கருதும் எனது தாய் மிகுந்த வருத்தமடைந்திருக்கிறார். குடும்பச் சொத்துக்களை விற்று தங்களுக்கு உதவச் சொன்னார். என் வீடு, மனை ரூ.40 ஆயிரம் விலைபோகும். அதை தங் களுக்கு அளிக்கிறேன். என் தாய் தங் களுக்காக உயிரைக்கூட தர சித்தமாக இருக்கிறார்’’ என்று கடிதத்தில் ஷெரீப் கூறியிருந்தார்.
எம்.ஜி.ஆர். தனது தாய் சத்யா அம்மையாரை தெய்வமாக மதிப்பவர். ராமாவரம் தோட்டத்து வீட்டில் தாய்க்கு சிறிய கோயிலே கட்டியிருந்தார். வெளியே புறப்படும் முன் தாயை வணங்கி விட்டுத்தான் புறப்படுவார். மற்ற தாய்மார் களையும் சொந்தத் தாய் போலவே கருதினார். ஷெரீப் எழுதிய கடித விவரங் களைப் பற்றியும் அந்தத் தாயைப் பற்றியும் ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளிவந்த தனது சுயசரிதையான ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
‘‘வயதான காலத்தில் அந்தத் தாய் தன் மக்களுடைய எதிர்காலத்துக்கு என் பதைப் பற்றி சிறிதேனும் கவலைப்படா மல் என்னுடைய கடனைத் தீர்க்க, தங் களின் சொத்துக்களை விற்க முடிவெடுத் தார்களே, அந்த மனித தெய்வத்தை நான் வணங்காதிருப்பது எப்படி? அந்தத் தாய் எனக்காக உயிரைத் தரவும் துணிந்து விட்ட நிலையில், நான் அவர்களுக்காக என் உயிரைத் தராவிடினும் உழைப்பை யாவது தரவேண்டாமா?’’ என்று எம்.ஜி.ஆர். எழுதியுள்ளார்.
தனக்காக அவர்கள் சொத்துக் களை விற்பதை ஏற்க எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார். பின்னர், அந்தத் தாயார் உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ளார் என்பதை கடிதம் மூலம் அறிந்து, திண்டிவனம் சென்றார். ஷெரீப்பின் வீட்டுக்குச் செல்வதற்காக சிறிய சந்துகளின் வழியே எம்.ஜி.ஆர். நடந்து சென்றார். தங்கள் சந்தில் எம்.ஜி.ஆர். நடந்து வருவதை நம்பமுடி யாத மக்கள் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று, ஓட்டமும் நடையுமாய் கூடவே சென்றனர். ஷெரீப்பின் வீட்டை அடைந்த எம்.ஜி.ஆரை, மூத்த மகனை கண்ட மகிழ்ச்சியுடன் படுக்கையில் இருந்தவாறே கண்ணீருடன் வரவேற் றார் அந்தத் தாய். அவரது கரங்களை ஆதரவாகப் பிடித்தபடி நலம் விசாரித்தார் எம்.ஜி.ஆர்.!
‘‘எங்கே உன்னைப் பார்க்காமலே செத்துப் போயிடுவேனோன்னு பயந் தேன். லெட்டர் போட்டவுடனே வந்துட் டியே. நல்லா இருப்பா…’’ என்று கண் கலங்கியபடி நெஞ்சு குளிர வாழ்த் தினார் ஷெரீப்பின் தாய். ‘‘அழாதீங் கம்மா. உங்களுக்கு ஒன்றும் இல்லை. சீக்கிரமே உடம்பு சரியாகி விடும்’’ என்று கண்ணீரைத் துடைத்தபடியே தேற்றிய எம்.ஜி.ஆர்., ஒரு கவரை அவரிடம் அளித்தார். அதில் பணம் இருப்பதைப் பார்த்துவிட்டு அதை ஷெரீப்பின் தாய் ஏற்க மறுத்தார்.
‘‘அம்மா. உங்களுக்கு கொடுக்க வேண்டியது என் கடமை. நீங்க என்னை மகனா நினைக்கிறது உண்மையா இருந்தா, மூத்த மகன் செய்யற இந்த சிறிய உதவியை ஏத்துக்கணும்’’ என்ற எம்.ஜி.ஆரின் வார்த்தையைத் தட்ட முடியாமல் மகிழ்ச்சியோடு பணத்தை வாங்கிக் கொண்டார் ஷெரீப்பின் தாயார். இது நடந்தது 1979-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம். பின்னர், ஓரளவு உடல் நலம் தேறிய அந்தத் தாயின் உடல் நிலை 1980-ம் ஆண்டு ஜனவரி மாதம் மோசமடைந்தது. எம்.ஜி.ஆருக்கு தந்தி அடித்தார் ஷெரீப். அப்போதும், திண்டிவனம் சென்று பார்த்தார் எம்.ஜி.ஆர்.! அந்த மகிழ்ச்சியிலேயே கண்ணை மூடினார் அந்தத் தாய் !
- தி இந்து............
-
தெய்வம் "எம்.ஜி.ஆர்."
பட்ட அவமானங்கள்....!!
********************************
எம்.ஜி.ஆர், தன் கையில் காசு புழக்கத்தில் இல்லாத காலத்திலிருந்தே, கண் உறக்கமின்றி கடமையை கண்ணாகக் கொண்டு தன்னை உரமாக்கி உயர்ந்தவர்.
அடைப்பக் காரனாய், அடியாளாய், வெஞ்சாமரம் வீசும் சேவகனாய்,
கூட்டத்தில் காணாமல் போன குழந்தையாய் மெல்ல சினிமாவில் தலைகாட்டி வந்த நேரம்
நாராயணன் கம்பெனி என்ற நிறுவனம்... தான் , எடுக்கவிருந்த 'சாயா ' என்ற படத்தில், அவரை ராணா வீர்சிங் என்ற கதாநாயகன் பாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தது.
திரையுலகில் விரக்தியில் இருந்த
எம்.ஜி.ஆருக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
கதாநாயகி அந்நாளில் பிரபல நடிகையான
டி.வி.குமுதினி. படத்தின் ஒரு காட்சியில் கதாநாயகன் எதிரிகளுடன் போரிட்டு காயங்களுடன் தப்பி வந்து நந்தவனத்தில் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் கதாநாயகியின் மடியில் மயங்கிவிழுவார்.
கதாநாயகி அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து தெளியச் செய்வார்.
இக்காட்சி எடுக்கவிருந்த அன்றைய தினம்
எம்.ஜி.ஆர் ஏதோ மனக் குழப்பத்தில் இருந்ததால் சரியாக நடிக்க முடியவில்லை , பல டேக்குகள் வீணாகின.
அப்போது படப்பிடிப்பை பார்த்துக்
கொண்டிருந்த கதாநாயகி குமுதினியின் கணவர் கோபமடைந்து,
'ஒரு புதுமுக நடிகரை நீங்கள் கதாநாயகனாக போட்டதோடு எத்தனை முறைதான் என் மனைவியின் மடியில் அவர் விழுவதுபோல் காட்சி எடுப்பீர்கள்.
என் மனைவியை அவமானப் படுத்துகிறீர்களா” என்று சத்தம் போட,
எம்.ஜி.ஆர் பெருத்த அவமானமும் வேதனையும் அடைந்தார்.
இதை தன்மானப் பிரச்சனையாக எடுத்துக் கொண்ட தயாரிப்பாளர்,
எம்.ஜிஆரைத் தட்டிக் கொடுத்து, “கவலைப்படாதே! இவர்களே உன் வீடு தேடி வரும் காலம் வரும்” என்று கூறி எடுத்த பிலிம் சுருளையும் அதே இடத்தில் தீயிட்டுக் கொளுத்தினார்.
இதே குமுதினி,
எம்.ஜி.ஆரின் வாசல் தேடி வந்து, ஏலம் போக இருந்த தன் வீட்டைப் பெற்ற கதையை அந் நாட்களில் யாவரும் அறிவர்.
அதேபோல், அமெரிக்க இயக்குனர் எல்லீஸ் ஆர். டங்கன், தான் இயக்கிய சில படங்களில் துணை நடிகராக வந்து போன எம்.ஜி.ஆரை, ஜூபிடர் பிக்சர்ஸ் சோமு
”மந்திரி குமாரி” படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தது டங்கனுக்கு கௌரவ குறைச்சலாகப் பட்டது.
எனவே, படப்பிடிப்பை வேண்டா வெறுப்பாகவே தொடங்கி, எம்.ஜி.ஆரை எந்த அளவுக்கு புண்படுத்த முடியுமோ அந்த அளவுக்குப் புண்படுத்தி நடிக்கச் செய்தார்.
அன்று, சேர்வராயன்மலை,
சுடு பாறையில் சூட்டிங், ஏ.எஸ், நடராஜனுடன் எம்.ஜி.ஆர் கத்திச் சண்டை போடும் காட்சி. எம்.ஜி.ஆர் உடல் பளிச்சென்று தெரியும் அளவுக்கு மெல்லிய டாக்கா மஸ்லீன் துணியில் சட்டை அணிந்திருந்தார். அந்த அனல் கொதிக்கும் சுடு பாறையில் டியூப்லைட் வெளிச்சத்தில்
எம்.ஜி.ஆரை மல்லாக்கப் படுக்கச் சொல்லி, கேடயத்தைக் கொண்டு எஸ்.ஏ.நடராஜனின் தாக்குதலை தடுக்கும் படி சொல்கிறார் டங்கன்.
எம்.ஜி.ஆர் உடல் புண்ணாவதைக் கூட பொருட்படுத்தாமல், டங்கன் சொன்னபடி செய்கிறார். காட்சி சரியாக வரவில்லை என்று சொல்லியும், மானிட்டர் என்று சொல்லியும் அந்தச் சுடுபாறையில் பொன்மனச் செம்மலை புரட்டி எடுக்கிறார்.
வேண்டுமென்றே
எம்.ஜி.ஆரை வதைக்கிற செயலை யூனிட்டே வேதனையுடன் பார்க்கிறது, முடிந்த வரை அந்தச் சுடுபாறையில்
எம்.ஜி.ஆரை வாட்டியெடுத்த பிறகு, டங்கன் படப்பிடிப்பை முடிகிறார். டங்கன் காட்சி முடிந்தவுடன்
எம்.ஜி.ஆர் எழுந்திருக்க முயற்சி செய்கிறார். காரணம் உடலோடு ஒட்டிக் கொண்ட அந்த மஸ்லீன் துணி இளகி சுடு பாறையில் ஒட்டிக் கொள்கிறது.
உடனே, பதறியடித்துக் கொண்டு ஜூபிடர் சோமு அவர்கள் “தேங்காய் எண்ணெய் தடவி பாறையிலிருந்து பிரித்து எடுக்கிறார்.
எம்.ஜி.ஆரை தட்டிக் கொடுத்து, இன்று காயப் படுத்தியவர்களெல்லாம், உனக்கு கைகட்டி நிற்கிற காலம் வெகு விரைவில் வரும்... வரும் என்று ஆறுதல் சொல்கிறார்.
1951-இல் ஜூபிடர் சோமு சொன்ன வார்த்தைகள் 1981-இல் பலித்து விடுகிறது.
அன்று எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக கோட்டை அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறார். உள்ளே உதவியாளர் வருகிறார்.
உங்களைக் காண டைரக்டர் எல்லீஸ் ஆர். டங்கன் வந்திருக்கிறார் என்ற செய்தியை சொல்கிறார்.
எம்.ஜி.ஆரோ... வந்திருப்பவர் முன்னொரு நாளில் தன்னை வதைத்தவர் என்பதையே மறந்துவிட்டு வானளாவிய புகழுடன் வாழ்வாங்கு வாழ்ந்த மேதை, நம் வாசல் தேடி வந்து விட்டாரே,
உள்ளே வரச் சொல்லுங்கள் என உத்திரவிட, “கலங்கிய கண்களுடன், கசங்கிய கோட்டுடன் வந்த டங்கனை கட்டித் தழுவி உள்ளே அழைத்துச் செல்கிறார்.
“என்ன வேண்டும்? என்னால் உங்களுக்கு ஏதாவது ஆக வேண்டுமா” என்ற
எம்.ஜி.ஆரின் வார்த்தைகள் பழுக்க காய்ச்சிய கம்பி போல் நுழைகிறது.
“தங்களுக்கு நான் செய்த கொடுமைகளை எல்லாம் மறந்து, எனக்கு நீங்கள் இவ்வளவு உபச்சாரம் செய்வது எனக்கு வெட்கமாக இருக்கிறது இருந்தும், வேறு வழியில்லாமல் தான், தங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன்’ என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.
“இப்பொழுது நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? அதை மட்டும் சொல்லுங்கள் “ என்று எம்.ஜி.ஆர் கேட்கிறார்.
“லண்டனில் வசதியாய் வாழ்ந்த நான், இப்பொழுது வறுமை நிலைக்கு வந்துவிட்டேன், எஞ்சியிருப்பது ஊட்டியிலிருக்கும் ஒரு எஸ்டேட் தான், அதை விற்கலாம் என்றால், அதில் சில சட்டச் சிக்கல் இருக்கிறது’ என்றார்.
“அரை மணி நேரம் பொறுத்திருங்கள் ஆவன செய்கிறேன்” என்று எம்.ஜி.ஆர் அவரை அருகில் இருந்த அறையில் அமர வைக்கிறார். அரை மணி நேரம் கழித்து டங்கன் அழைத்து வரப்படுகிறார்.
“இந்த சூட்கேஸில் உங்களுக்கு தேவையான பணம் இருக்கிரது. அதோடு உங்கள் எஸ்டேட்டையும் விற்பதற்கு ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்லி வாசல் வரை வந்து வழி அனுப்புகிறார்.
நாம் செய்த தீமைகளுக்கு
எம்.ஜி.ஆர், நம்மோடு பேசுவாரா? மதிப்பாரா? என்றெல்லாம் பயந்து வந்த டங்கனுக்கு
எம்.ஜி.ஆர் வாரிக்கொடுத்து, இன்னா செய்தவருக்கு இனியவை செய்து, தம்மை வெட்கப்பட வைத்து விட்டாரே என்று எம்.ஜி.ஆர் அறையை திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார்” டங்கன்.
---- நன்றி...bpg